Thottal Thodarum

Dec 30, 2008

எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire


படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..?


படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான்.

முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவர்களை அங்கஹீனபடுத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலின் தலைவனிடம் மாட்டி கொள்கிறார்கள்.. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் ஜமாலின் அண்ணன் மாலிக் முக்கிய ஆளாய் ஆகிறான். தன் தம்பிக்கு அங்கே பிரச்சனை வரும் போது அங்கிருந்து தப்பி, ஓடும் ரயிலில் தப்பி ஆக்ராவுக்கு சென்று கைட், திருட்டு என்று பல பட்டறையாகிறாகள். பின்பு தன் பழைய நண்பியான லதிகாவை தேடி மும்பைக்கு வருகிறார்கள், அவளை ஒரு விபசார விடுதியிலிருந்து காப்பாறுகிறான் ஜமாலின் அண்ணன் மாலிக், ஜமாலுக்கும், லதிகாவுக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், அவனின் அண்ணன் லதிகாவை நான் தான் காப்பாற்றினேன் என்று சொல்லி அவளை அடைகிறான்.

படம் முழுக்க போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி அவனுக்கு பதில் தெரிந்தது என்று ஜமாலின் வாழ்க்கை நடந்த சம்பவஙக்ளின் மூலம் காட்டியிருப்பது. சூப்பர். அதிலும் அனில் கபூர் அவனை போட்டியிலிருந்து விலக்க தவறான ஒரு பதிலை பிரேக்கின் போது சொல்லி, அவனை குழப்ப, அவன் தெளீவாக, ஆப்ஷனில் வேறு பதிலை தேர்ந்தெடுப்பது, வாழ்க்கை அவனுக்கு கற்று தந்த பாடம்தான் அவனை வழிநடத்தி செல்கிறது.

அவன் மேல் எந்த குற்றமும் இல்லை என்று போலீஸ் அவனை விடுதலை செய்கிறது, அடுத்த நாள் போட்டியில் அவனுக்கு கேட்கப்படும் கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை,அதனால் தன்னுடய கடைசி ஆயுதமான போன் எ ப்ரண்ட் என்று தனக்கு தெரிந்த ஒரே நம்பரான தன் அண்ணனுக்கு போட, அந்த போனை அவனுடய காதலி லதிகாவிடம் தன் தம்பியுடன் சேர்த்து வைப்பதற்காக தன் முதலாளியின் பிடியிலிருந்து தப்பியோட வைத்து இறக்கிறான்.

இப்போது போன் லதிகாவிடம், ஜாமாலுக்கோ பதில் தெரியாது, அவளுக்காவது தெரிந்ததா..? லதிகாவும், ஜமாலும் ஒன்று சேர்ந்தார்களா..? என்று நம் மனதை உருக்குகிறார்கள்.

ஆங்கில படம் தான் என்றாலும் படம் முழுவதும் விரவிகிடக்கும் ஹிந்தி வசனங்கள், அந்த அந்த காலகட்டங்களில் கேரக்டர்களுக்கும் அவர்கள் நடிகர்களை தேர்தெடுத்த பாங்கும் அசத்தலாயிருக்கிறது. ஜமால், அவன் அண்ணன், லதிகா என்ற மூன்று கேரக்டர்களும் 4 வயது முதல் 18 வயது வரையான நிலைகளில் வருவதால் அதற்கு ஏற்றார் போல சிறுவர்களை தெரிவு செய்திருப்பது அருமை.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாரும் மிக இயல்பான நடிப்பில் நம்மை கட்டி போடுகிறார்கள், தேவ் படேல், கதாநாயகி, இர்பான்கான், சுரப் சுக்லா.

இசை நம்ம ஏ.ஆர்.ரஹ்மான். மனுசன் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும் என்ன ஒரு காம்போஸிஷன். இந்த வருட கோல்டன் க்ளோப் அவார்ட்டுக்கு சிறந்த இசையமைப்பாளராய் இவரை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா..? என்று கேள்வி எழுப்பினால் மிகவும் யோசிக்க வேண்டியிருக்கு, இல்லாமல் இல்லை ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டாயில்லை என்பதே உண்மை.

Q&A என்கிற பெயரில் விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலுக்கு, அவரும் சைமன் பிஃபாய் என்பவரும் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இயக்கம் டானி போயலே.. இவரை பாராட்ட வார்தைகளே இலலை. ஏற்கனவே இந்த படம் டொரண்டோ பீப்பிள் சாய்ஸ் அவார்ட்டை வென்றிருக்கிறது. கண்டிப்பாய் இந்த படம் பல உலக பட விருதுகளையும், ஆஸ்கர்களையும் வெல்லும் என்பது நிச்சயம்

Don't Miss it.....

ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை/ பேட்டி
http://moviesblog.mtv.com/2008/12/29/dont-sleep-on-slumdog-millionaire-composer-mia-collaborator-ar-rahman/

Song 1

Song 2

Song 3

Song 4


படத்தின் டிரைலரை பார்க்க..





Blogger Tips -கிங் தெலுங்கு திரை விமர்சனத்துக்கு இங்கே அழுத்தவும்


உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

King - Telugu Cinema Review



ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார்.

இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப் பெரிய பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஷரவணியின் (திரிஷா)மேல் காதல் கொள்கிறார். திரிஷாவிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்லாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று உட்டாலக்கடி அடித்து மடிக்கிறார். ஒரு கட்டத்தில் கிங்கின் இடத்தில் பொட்டு சீனு இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. கிங்கை கொலை செய்தது யார்..? அதன் பிண்ணனி என்ன? என்று படம் முடிகிறது.

நாகார்ஜூனுக்கு ஏற்கனவே பல படங்களில் செய்த கேரக்டர்தான். மனுசன் இன்னும் கூட இவ்வளவு யங்கா இருக்காறே..? அதிலும் பாடல்கள் காட்சிகளில் சும்மா சூப்பர். திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார். படத்தில் வருகிறார், சிரிக்கிறார், போகிறார்.

பொட்டு சீனுவாகவும், திரிஷாவிடம் சாப்ட்வேர் இன்ஜினியர் சரத்தாகவும் அவரின் அண்ணன் ஸ்ரீஹரியிடமும், த்ரிஷாவிடம் ஆட்டம் காட்டுவது பல படங்களில் பார்த்தாலும் பரவாயில்லை. அதிலும் ஸ்ரீஹரி தப்பு தப்பாய் எதையாவது படம் வரைந்து எப்படி தன் கிரியேட்டிவிட்டி என்று சல்ப்புவது மெம காமெடி ரவுடி.அதே போல் ஒரிஜினல் சரத்தாக வரும் சுனிலின் காமெடியும் சூப்பர்.

இசை தேவிஸ்ரீபிரசாத் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஓம் சாந்தி ஓம் பாணியில் இருக்கிற அழகு தெலுங்கு ஹீரோயின்களை வைத்து பாடும் பாடல் ஒன்றும் பிரமாதமில்லை. என்ன அனுஷ்கா வருவதால் ம்ஹூம்..

இந்த படத்திலும் இயக்குனர் ஸ்ரீனிவைட்லாவுக்கு மிகப் பெரிய பலம் பிரம்மானந்தம்.. படம் பூராவும் மனுசன் இசையமைப்பாளர் ஜெயசூரியாவாக வந்து பின்னி எடுக்கிறார். அதே போல் பல படங்களின் காட்சிகள் பயன்படுத்த பட்டிருக்கிறது.. உதாரணமாய் ரேஸ், கோல்மால், சந்திரமுகி, என்று கலந்துகட்டி விட்டிருக்கிறார். செகண்ட் ஆப்பில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள், டர்ன்கள், அதுவே படத்துக்கும் பலவீனமாகவும் இருக்கிறது. என்ன ஒரு ஆறுதல் என்றால் வழக்கமாய் க்ளைமாக்ஸில் சண்டையில் முடிப்பார்கள், அப்படியில்லாமல் சட்டென்று முடிந்தது ஒரு ஆறுதல்.


மொத்ததில் கிங் ஒரு பக்கா மசாலா..

Dec 29, 2008

ஸ்டேட் ஃபர்ஸ்ட்...


D.சரண்யா. புவியியல் பாடத்தில் 200/195 2006ல் எடுத்தவர்.


எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பத்தாவது, மற்றும் +2 தேர்வுகளில் ஸ்டேட் பர்ஸ்டாக வரும் மாணவ, மாணவிகள் பலரும் தாங்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற்றார்கள், தங்களுடய பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அவர்களுக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் சொல்வார்கள். அதிலும் மாணவிகள், தங்கள் எதிர்காலத்தில் டாக்டர் ஆகப் போறேன்.. இன்ஜினியர் ஆக போறேன்னு தங்கள் கனவுகளை சொல்வார்கள்.


அவங்க அப்படி சொல்லும் போது அவங்க கண்ல தெரியில கனவுகளும், அவர்களின் உழைப்புக்கான வெற்றி கிடைச்ச சந்தோசம் நிஜம். ஆனா வாழ்க்கை எல்லாருடய கனவுகளை நிஜப்படுத்துவதில்லை..


சென்ற வருடம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவிகள் ரம்யா, ரூபிகா
சில வருடங்களூக்கு முன் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவ, மாணவிகளின் கனவுகள் நிறைவேறிச்சா.. பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல.. அட்லீஸ்ட் ஸ்கூல் பர்ஸ்டாவது வந்தாங்களா..? +2வில ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. இப்ப என்ன பண்ணுறாங்க?

கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யாராவது ஸ்டேட் பர்ஸ்ட் மாணவ, மாணவிகள் இருந்தா.. விசாரிச்சு சொல்லுங்களேன். அவர்களின் கனவு கண்டிப்பாய் நிறைவேறியிருக்க பிரார்த்திக்கும்......

உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Dec 28, 2008

கடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு

கடேசி..கடேசி பதிவர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு பாத்தா.. அதுக்குள்ள பல பேர் எழுதிட்டாங்க.. அந்த காண்டுல, யார்.. யார் வந்தாங்கன்னு கண்டுபிடிக்க, போட்டோ பிடிச்சு வச்சிருக்கேன்.. கண்டுபிடிச்சுக்க திறமையிருக்கிறவங்க.. கண்டுபிடிச்சுக்கங்க.. நம்ம போன்ல இவ்வளவுதான் வந்திச்சு..இதவிட கேவலமா படமெடுக்க முடியாதுன்னு படத்தை பத்தி திட்டணும்னா பின்னூட்டமிட்டு திட்டவும். இல்லாட்டா ஓட்ட குத்திட்டு போகவும்..


தராசு, லக்கிலுக்



கார்க்கி, ஜ்யோவரம்சுந்தர், லக்கிலுக்



லக்கிலுக், கார்க்கி,பாலா,குகன்,..


குகன், காவேரிகணேஷ், அன்பு,(மதுரையிலிருந்து வந்த பதிவர்கள்) வாசகர்கள்,ஸ்ரீவத்சன்



டோண்டு, தாமிரா, அதிஷா, இரண்டுபேர் இடுக்கில் அத்திரி, மற்றும் பலர்...(பேர் தெரியலைன்னா..அப்படித்தான்.)


அக்னிபார்வை, நர்சிம், முரளிகண்ணன்.




பதிவர் சந்திப்பு பதிவுகள்..

அக்னிபார்வை

டோண்டு

குகன்

அத்திரி

உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Dec 27, 2008

கடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008

’லக்கிலுக்கின் புத்தக வெளியீட்டு விழா பார்ட்டி.ஸ்பான்சர்டு பை அதிஷா.. அனைவரும் வரவும்
27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்

பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்

நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்

மாலை 5 மணி

கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர கும்மாங்குத்துகள்

மாலை 5.15மணி

மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா தன் தங்கமணியின் துணையுடன் தைரியமாய் துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே துக்கயுரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன்,முரளிகண்ணன், கேபிள் சங்கர்,(யாருய்யா என்னை கேட்கமா பேரெல்லாம் போட்டது) அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். திருமணமாகாமல் இருக்கும் அனுபவசாலிகளும் கலந்து கொள்ளலாம்.

மாலை 5.45மணி

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அதனால் நடுவே தம் அடிக்க போகிறவர்கள் போகலாம்
இரவு 7.00 மணி

ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தையும், சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நாம எதாவது செய்யணும் என்று நர்சிம் தொடங்கி வைத்து எதையாவத் செய்ய ஸ்பான்சர் செய்வார்.

இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.

இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் நியூ இயர் “where is the party" கொலைவெறியுடன் ஆரம்பிக்க படும்


இரவு 8.30 மணி
முக்கியமான நிகழ்வுகள்
லக்கிலுக் தன்னுடய புத்தக வெளீயீட்டினையொட்டி மிகப்பெரிய பார்ட்டி கொடுப்பதாய் உள்ளார்.. அவரின் புத்தகத்தை வாங்குபவர்களுக்கே முன்னுரிமை வழங்கபடும்..


க்டோசி பதிவர் சந்திப்புக்கு எல்லாரும் வாங்க.. வந்து கும்மியடிச்சிட்டு போங்க..

இது முழுவதும் முரளிகண்ணனின் பதிவிலிருந்து சுட்டு எடிட் செய்யபட்டது.. ஒரிஜினல் முரளிகண்ணனின் பதிவை படிக்க.. இங்கே அமுக்கவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Dec 26, 2008

Gajini - Hindi film Review


நாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..

மும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்..? எதற்காக..? என்று இண்டரஸ்டாக கதை சொல்லியிருக்கிறார்கள்.

அமீர்கானின் உழைப்பு, அவரின் உடலில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெரிகிறது. அதிலும் அவரின் குள்ளமான உருவத்தை வைத்து கொண்டு, திரையில் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர்களையெல்லாம் தூக்கி பந்தாடுவதை பார்க்கும் போது, நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அந்த அளவிற்கு அவரின் பாடி லேங்குவேஜ். அதே போல் அவருக்கு மெமரி லாஸின் போது நடக்கும் நடை, பார்வைகள், அடிபட்ட புலியாய் சீறும் சீற்றம், படத்தில் அவருக்கு வசனங்கள் மிக குறைச்சல்.. ஆனால் அவர் பேசும் விஷயங்கள் நிறைய..

அசின் இனிமே இந்தி மார்கெட்டில் பிசின் போல் ஒட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் தமிழ் கஜினி போலவே இம்ப்ரஸிவான நடிப்பு.. அம்மணி சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

ரியாஸ்கான் கூட தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்து, இறக்கிறார்.

ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குறுகிய சந்துக்குள் நடக்கும் சேஸிங், சண்டைகாட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறார்.

இசை ஏ.ஆர். ரஹ்மான். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட். அதிலும் “பெஹக்கா..” ‘குஜாரிஷ்’ பாடல்கள் படமெடுத்திருக்கும், விதம் அருமை.

இயக்குனர் முருகதாஸ், திரைக்கதையில் பெரிதாக எதையும் மாற்றியமைக்கவில்லை, க்ளைமாக்ஸை தவிர, தமிழ் கஜினி க்ளைமாக்ஸை விட இது ஒகே.

மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.


Blogger Tips - "Neninthe" Telugu Film Review



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

பட வரிசை “பத்து”

10- எல்லாம் அவன் செயல்



தெரிஞ்சோ தெரியாமையோ.. பி..சி.. சென்டர்களில் தப்பி தவறி தத்தளித்து தலை தெரிகிறது.

9.சூர்யா


இது எல்லாம் இந்த ஒரு வாரத்துக்குதான் லிஸ்டுல இருக்கும். வேற வ்ழி ரிலீஸ் ஆகியிருச்சு இல்ல..

8.தெனாவட்டு


சன் டிவி மட்டும்தான் ஹிட்.. ஹிட்டுன்னு கூவிட்டிருக்காஙக்.. இது ஒரு சூப்பர் ப்ளாப் படம்..

7.பூ



படம் என்னவோ நல்லாயிருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாலும்.. வருமானம் ஒன்ணும் சொல்லிகிறபடியா இல்ல்.. பல இடங்களில் தியேட்டர்களிலிருந்து படத்த எடுத்துட்டாங்க..

6.பொம்மலாட்டம்


படத்தை ஒரு விதமான நல்ல ஒப்பீனியன் இருந்தாலும், இந்தி டப்பிங் படம் பாக்கிறா மாதிரி இருக்கிறதுனால சென்னை தவிர மற்ற இடங்களில் வருமானம் ஒன்ணுமே இல்லையாம்

5 வாரணம் ஆயிரம்


ரிலீஸான டயத்துல பெரிய ரிப்போர்ட் இல்லாட்டியும் பெரும்பாலான ஏ செண்டர் ஏரியாக்களில் நல்ல வருமானம்.. தப்பிச்சிரும்னு சொல்லிகிட்டிருக்காங்க.. படத்தோட வருமானத்துக்கு முக்கிய காரணம் ஹாரிஸ்..

4 திண்டுக்கல் சாரதி


சன் டிவி உபயத்தால் சுமாரான ஓப்பனிங்.. ஆனால் படத்தை பற்றி அவ்வளவாக நல்ல ரிப்போர்ட் இல்லை.

3 அபியும் நானும்


படத்தை பத்தி நல்ல அபிப்ராயம் இருந்தாலும், மல்டிப்ளக்ஸ், மற்றும் ஏ செண்டர்களில் மட்டுமே போகக்கூடிய சான்ஸ் அதிகம் ... பார்க்கலாம்..

2திருவண்ணாமலை


பேரரசு, அர்ஜுன் இரண்டு பேருக்கும் இது டெஸ்டிங் படம். பி அண்ட் சி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

1 சிலம்பாட்டம்


யுவனின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வியாழன் அன்றே சென்னையின் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி அபவ் ஆவரேஜ் ஓப்பனிங் பெற்றிருக்கிறது. ஆனால் மக்களிடம் அவ்வளவாய் பெரிய ரியாக்‌ஷன் இல்லை. பாடல் இருந்த அளவிற்கு படம் இல்லை என்கிறார்கள்.. பார்போம்.


Blogger Tips -திண்டுக்கல் சாரதி விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..