Thottal Thodarum

Jan 30, 2010

கோவா – திரை விமர்சனம்

Goafilm சென்னை 28, சரோஜாவின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு டீமிலிருந்து வந்திருக்கும் படம். ஊர்பட்ட கடன் பிரச்சனையில் பஞ்சாயத்துக்களை பார்த்து வெளிவந்திருக்கும் படம். சாதாரணமாகவே ஹாலிடே மூடில் இருக்கும் இவரின் படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஹாலிடே என்றதும் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்தியிருந்த படம்.

இவர்களும் வழக்கம் போல பழைய தமிழ் சினிமாக்களை கிண்டலடித்தே ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தில் யாருக்கும் அடங்காமல் ஊர் சுற்றி திரியும் ஜெய், பிரேம்ஜி,வைபவ் மூவரும் பஞ்சாயத்தில் நிற்கும் காட்சியில் தொடங்குகிறது படம். ஏற்கனவே பலராலும் கிழித்து தொங்கவிடப்பட்ட கிராமத்து பஞ்சாயத்து காட்சிகள். பிரேம்ஜி கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சாமி பையன் என்பதற்கான ப்ளாஷ்பேக் சீன் அட்டகாசம். முக்கியமாய் ஷண்முகசுந்திரத்தின் படு காமெடியான் சீனில் அவரின் சீரியஸ் நடிப்பும், ஒரே நேரத்தில் வாந்தியெடுத்து,குழந்தை பிறப்பது வரை வரும் காட்சி நிஜமாகவே ஒரு எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்ய வைக்கிறது.

Goa Photos01 அதன் பிறகு வரும் காட்சிகளில் ஏதும் பெரிய ப்ளஸ் இருப்பதாய் தெரியவில்லை. பிரேம்ஜியை சாமி கண்ணை குத்துவதாய் வரும் காட்சியும், அதை ஜெய் சொல்லுமிடமும் சிரிப்பு. அதுக்கப்புறம் மூவரும் கோவா போய் சேர்ந்து தாடி, மீசையை மழித்ததை தவிர பெரிதாய் எதுவும் நடக்காத முதல் பாதிக்கு இண்டர்வெல் விடுகிறார்கள்.

இவர்களை தங்கள் காட்டேஜில் தங்க வைக்கும் ஆகாஷ், அவனின் ஹோமோ ஜோடி சம்பத், ஜோடி தமிழ் படங்களுக்கு புதுசு. ஆகாஷின் ஸிக்ஸ் பேக்கை நம்பர் போட்டு காட்டுவதும், சம்பத், பிரேம்ஜி ரூமுக்குள் “உங்களுக்கு இவ்வளவு பெரிசா” என்று போட்டோவை காட்டி கேட்பதை வெளியே தவறாய் புரிந்து கொண்டு குமையும் ஆகாஷ் நடிப்பு. அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறது. நிஜமாகவே சம்பத்தின் பாடிலேங்குவேஜும் டயலாக் டெலிவரியும் அருமை.
goa_tamil_movie_20091019_1995007725 ஆரம்ப காட்சியில் பிரேம்ஜியை காதலிக்கும் வெள்ளைக்கார பெண்ணை கரெக்ட் செய்ய பிண்ணனியில் கண்கள் இரண்டால் பாட்டை போட்டு அதில் ஜெய்யின் முன்னாலேயே தலையாட்டி பாடுவதும், சிரிப்பதும் அருமை ஆனால் அதையே படம் முழுவதும் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள்.

ஜெய் பியா ஜோடிக்கு பெரிதாய் வேலையில்லை. அவர்களின் காதல் காட்சிகளிலும் அழுத்தம் இல்லாததால் பெரிதாய் ஏதும் தோன்றவில்லை. பியா அழகாய் இருகிறார். வைபவ் ஸ்நேகா காட்சிகள் படு சொதப்பல். க்ளைமாக்ஸ் காட்சிகள் முற்றிலும் பொலிவிழந்ததாகவே இருக்கிறது.

படத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரியான நடிப்பு, பிரேம்ஜியும், சம்பத்தும், பரவாயில்லை. மற்றவரக்ளுக்கு பெரிதாய் ஏதுமில்லை. படம் முழுக்க பிரேம்ஜியை நம்பியே இருந்திருப்பது தெரிகிறது.
Goa Photos01 (1) சக்தி சரவணனின் ஒளிப்பதிவு துல்லியம், யுவனின் இசையில் இரண்டு பாடல்களை தவிர பெரிதாய் ஏது சொல்வதற்கில்லை. ஆண்ட்ரியாவின் இதுவரை அட்டகாசம், டைட்டில் பாடலும் நச்சென்று நிற்கிறது.

வழக்கமாய் வெங்கட்பிரபுவின் படங்களில் ஒரு சின்ன மேட்டரை எடுத்துக் கொண்டு அதை நோக்கி போகும் போது மிக இயல்பான நகைச்சுவையோடு திரைக்கதை நகரும். இதில் அது மிஸ்ஸிங். இங்கிலீஷ் காரி தமிழ் பேசும் காட்சி படுத்தல் மிக அருமை. முழுக்க, முழுக்க, பிரேம்ஜியை நம்பி களமிறங்கியது பெரிய லெட்டவுன். ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் இருக்கிறதே திரைக்கதையின் தொடர் தொய்வினால் இளமை கொப்பளிப்பாக வந்திருக்க வேண்டிய படம் நம்முள் ஏற மாட்டேன் என்பது சோகமே. என்னை பொருத்தவரை வெங்கட்பிரபு ஹாட்ரிக் மிஸ் செய்துவிட்டார்.

கோவா – A Dull & Boring Holiday.



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..

தமிழ் படம் - திரை விமர்சனம்

மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளை வழங்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி


tamil-padam-movie-posters கவுண்டர் காலத்திலிருந்தே நிறைய பழைய படங்களை கிண்டலடித்து காட்சிகள் வ்ந்து பார்த்திருப்பீர்கள், அதன் பிறகு விவேக், வடிவேலு கூட அவ்வப்போது காமெடி காட்சிகளாய் பழைய படங்களிலிருந்து காட்சிகளை உல்டா பண்ணி ரசித்திருப்போம். ஒரு படம் முழுக்க முழுக்க தமிழ்படங்களை கிண்டலும், கேலியும் செய்து வந்ததில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் ஒரு பெரிய படம் ஹிட்டானால் அதை வைத்து உடனேயே ஒரு ஸ்பூப் படம் வெளிவந்துவிடும்.

சினிமாக்காரன்பட்டி என்னும் கிராமத்தில் ஆண்பிள்ளைகள் பிறந்தவுடனேயே கள்ளிபால் அதுவும் டெட்ரா பேக்கில் வரும் பாலை கொடுத்து கொலை செய்யும்படி நாட்டாமை உத்தரவால், மீண்டும் பிள்ளையாய் பிறந்த சிவாவை கொல்ல ஆயா டெட்ரா பேக்கை திறக்க, அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது படம்.  அதன் பிறகு சிவா, வெ.ஆடை.மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா அடிக்கும் கூத்துகள் உங்கள் வயிற்றை பதம் பார்க்காமல் போகாது.

படத்தில் வரும் ஆரம்ப காட்சியாகட்டும், நீங்கள் பார்த்து ரசித்த பல படங்களின் ஹிட் காட்சியை இவர்கள் ஸ்பூப் செய்திருக்கும் முறையை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. படத்துக்கு ஒரு சின்ன லைனை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்திருக்கிறார்கள்.
tamil-padam-03 முக்கியமாய் அபூர்வ சகோதரர்கள் டெல்லிகணேஷ் காட்சி, சிவா பெரியவனாகும் சைக்கிள் காட்சி, ரன் படத்துக் காட்சியை பற்றியெல்லாம் சொன்னால் நிச்சயம் உங்களால் தியேட்டரில் போய் ரசிக்க முடியாமல் போய்விடும். இந்த காட்சியில் எல்லாம் வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிப்பு பின்னி எடுக்கிறது.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அளவு இருக்கிறது. ரெட் ஒன்ல் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படம். கண்ணனின் பாடல்கள் இண்ட்ரஸ்டிங்.. அதிலும் அந்த ஓ..மகசீயா பாடல் அட்ட்காசம்.முக்கியமாய் லாலாக்கு டோல் டப்பிமா என்ற வரி வரும் போது தியேட்டரே அதிர்கிறது
Thamizh-Padam-Stills-035.jpg_940

சிவா மிக அழகாய் செட் ஆகிறார் இந்த படத்திற்கு. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடித்திருப்பார் போலிருக்கிறது. ஹீரோயினுக்கு தமிழ்பட வழக்கம் போல் டூயட் பாடுவதற்கு பிறகு வேறு வேலையில்லை. படத்தில் வரும் சின்ன, சின்ன கேரக்டர்கள் கூட நச் என்று செய்திருக்கிறார்கள். குறிப்பாய் தேவாவாக வரும் மம்மூட்டி சாயல் ஆளும், அவர் தவறுதலாய் போய் மன்னிப்பு கேட்கும் ரமணாவும், கூடவே வரும் நடிகர் பரத்வாஜும் படத்தை பாருங்கள் அட்டகாசம்.

இயக்குனர் சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் க்ளைமாக்ஸ் வரும் போது ஒரு பத்து நிமிஷம் மொக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகி சோதிக்கிறாரே தவிர. மற்ற இடங்களில் அட்டகாசம் அதிலும் என்னதான் ஸ்பூப் பண்ணினாலும், சில இடங்களில் காட்சிகளை முடிக்கும் வகையில் நச். முக்கியமாய் அந்த குடும்ப பாட்டு மேட்டர் அடி தூள், இப்படி பல விஷயஙக்ளை சொல்லிக் கொண்டே போகலாம். இனிமேல் ஏதாவது பெரிய ஹீரோ ஓப்பனிஞ் சாங் வைக்கவே யோசிப்பார்கள். அப்படி கலாய்த்திருக்கிறார்கள். குறிப்பாய் ஹீரோயின் எஸ்.ஜெ.சூர்யா, டி.ராஜேந்தர் ரசிகை என்பதும், பரதநாடிட்யதை கற்றுக் கொள்ள பாக்கியராஜின் நடன டிவிடியை ஓட விடுவதும்.. ஒரே பாட்டில் ஒரு காபி எடுத்து வருவதற்குள் பணக்காரனாவது, சிவாஜி ரஜினி சீன், அப்பப்பா. ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு.சீன்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்ட் குறையும் என்பதால் நிச்சயம் வெள்ளித்திரையில் காண்க

தமிழ்படம் – நிச்சயம் ஒரு நான் ஸ்டாப் எண்டர்டெயினர்.. டோண்ட் மிஸ்.




தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 27, 2010

எண்டர் கவிதைகள் –7

மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி

Zombie_Beach_Party_Massacre_1_by_cvilaire

வழக்கம் போல்

முயக்கம் முடிந்து

நொடியில் குறட்டை

ஒலியெழுப்புபவனுக்கு தெரியுமா?

என்னுள் இன்னும் சுரந்து

கொண்டிருக்கும் வலியை?

வலி பொங்கி காமம் வழிந்தோடும் நேரம்

புதிதாய் வந்து அணை கட்டி ஒத்தடம்

கொடுத்தவனுக்கும்

பழக்கம் ஆனதும்

வழக்கம் போல்

முயக்கம் முடித்து

நொடியில் குறட்டை

ஒலியெழுப்பினான்

இன்னமும் என்னுள் சுரந்து

கொண்டுதானிருக்கிறது.

வேறொரு ஒத்தடம் தேட பிடிக்காமல்

வலி தாங்க பழகிக் கொள்கிறேன்.



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 25, 2010

கொத்து பரோட்டா –25/01/10

omkar omkar1
போன வாரம் சுவாமி ஓம்கார் வந்திருந்தார். நிறைய முறை தொலைபேசியிலும், சாட்டிலிலும் பேசியிருந்தாலும், முதல் முறையாய் நேரில் சந்திக்கிறேன். .மதியமே அப்துல்லாவின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு சாமியாரிடம் பேசும் சங்கடங்கள் ஏதுமின்றி ஒரு நண்பனிடம் பேசுவது போலவே பேசினார். சாயங்காலம் பீச்சில் குழுமியிருந்த “பெரும்” கூட்டத்தில் ஒவ்வொருவரை பற்றியும் கேட்டறிந்து கொண்டு மிக இயல்பாய் பேசினார். அவர் ப்ளாகராவதற்கு ஜெயமோகந்தான் காரணம் என்றார். இயல்பாய் ஜோக்கடித்தார், பாவனாவை பற்றி பேசினார்.. என்ன பேசினார் என்பதை வந்திருந்தவர்களிடம் கேட்டோ, அல்லது அவரது பதிவை படித்தோ தெரிந்து கொள்ளவும். ஒரு முக்கிய விஷயம் வலிக்காமல் ஆன்மீகம் பேசுகிறார் என்பது குறிப்பிடதக்கது. அதற்காகவே அவரிடம் ஆன்மீகம் கேட்கலாம் போலிருக்கிறது. அப்துல்லா என்னை பற்றி அவரிடம் சொல்லும் போது ஒரு ஆன்மீக நாத்திகவாதி என்றாராம்.
*************************************************************************************
தவிச்ச வாய்க்கு தண்ணி
சிக்கிங், கே.எப்.சி. போன்ற இடங்களில் எல்லாம் சாப்பிட வேண்டும் என்று நுழைந்தால் குறைந்தது 100 ரூபாய் இல்லாமல் போக முடியாது. சரின்னு போய் உட்கார்ந்தா, தவிச்ச வாய்க்கு தண்ணி கிடையாது. காசு கொடுத்துதான் வாங்கணும். வெளியேர்ந்தும் தண்ணி வாங்கி குடிக்க முடியாது. இவனுங்க கொடுக்கிற தண்ணியத்தான் விலை கொடுத்து வாங்கணும், இல்லைன்னா பெப்ஸி,கோலா என்பது போன்ற பூச்சி மருந்துகளை பேக்கேஜா வாங்கி வயித்தை க்ளீன் பண்ணிக்க வேண்டியதுதான். நம்ம மாநகராட்சி சட்டபடி ஒரு உணவகத்தில் பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரமான உணவு, சாப்பிடும் இடங்கள், சுத்தமான தண்ணீர், சுத்தமான சுற்றுப்புறம் போன்ற பல விஷயங்கள் இருந்தால் தான் லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் இவர்களுக்கு கிடையாது போலிருக்கிறது. ஒரு சாதாரண சின்ன ஹோட்டலிலேயே குடிப்பதற்கு கேன் வாட்டரை கொடுக்கும் ஹோட்டல்கள் நிறைய உள்ளன. அப்படியிருக்க சாப்பிட வரும் மக்களை கட்டாயப்படுத்தி பாட்டில் தண்ணீரையோ, குளிர்பானங்களையோ வாங்க வைப்பது எந்த விதத்தில் ஞாயம்.? போகிற போக்கில் தவிச்ச வாய்க்கு தண்ணி வேண்டுமென்றால் காசு கொடு தண்ணீர் தருகிறேன் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே. இதில் எனக்கு தெரிந்து மேரிப்ரவுன் பரவாயில்லை டேபிளில் வைக்காவிட்டாலும், கேட்டால் தருவார்கள். அரசு இதை கவனத்தில் கொண்டு கட்டாயம் நல்ல குடிநீரை ஒவ்வொரு ரெஸ்டாரண்டு வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வருமா..?
**************************************************************************************
சாப்பாட்டுக்கடை
சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் ஹோட்டல் ரேணுகா என்று ஒரு செட்டிநாடு மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு,பிரியாணி கிடைக்கும். சைட் டிஷ் வாங்காவிட்டாலும் உங்களுக்கு சிறந்த கவனிப்பு நிச்சயம் உண்டு. மதிய சாப்பாட்டுக்கு, அவர்கள் கொடுக்கும் ஸ்பெஷல் கிரேவிகள் இருக்கிறது பாருங்கள் அதுக்கே சாப்பிட போகலாம். மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, நண்டு கிரேவி, மீன் குழம்பு, இதை தவிர ரசம், மோர் என்று ஒரு விருந்தே படைக்கிறார்கள். ஞாயமான விலையில். முக்கியமாய் போடும் போதே ஒரு கப்பில் சாதத்தை வைக்காமல், ஒவ்வொரு முறையும் இலையில் வந்து கேட்டு பரிமாறுவது ஹோம்லி டச். தண்ணீர் கேன் வாட்டர் குறையாமல் தருகிறார்கள். நிச்சயம் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், நிச்சயம் மறு முறை போவீர்கள்.
************************************************************************************
அரசியல்
போன வாரம் மொக்கை மெயிலில் எனக்கு வாழ்த்து சொல்லி மெயில்கள் வந்தது. என்னடான்னு பார்த்தால் வருண் என்பவர் சாருவை ஓவர் டேக் செய்த கேபிள்சங்கர் என்று அலெக்ஸா ரேங்கிங்கில் சாருவை விட முன்னிலையில் இருப்பதை பற்றி எழுதியிருந்தார். அவரை எனக்கு முன் பின் பழக்கம் கிடையாது. அவ்வப்போது அவரின் குட்டி, குட்டி பதிவுகளை படித்திருப்பதை தவிர. என்னையும் ஒரு பொருட்டாய்  மதித்து  உற்சாகப்படுத்திய அவருக்கு என் மனம் கனிந்த நன்றிகள். பின்னூட்டத்தில் நான் ஏதோ நைஜிரியாவிலிருந்து வரும் டிராபிக்  எல்லாம் சாப்ட்வேர் வைத்து கொண்டுவருவது என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள். இப்படி ஒரு சாப்ட்வேர் இருக்கிறது என்று தெரிய வைத்தமைக்கு. எனக்கு தெரிந்து நைஜிரியாவில் இருக்கும் ஒரே சாப்ட்வேர் அண்ணன் நைஜீரியா ராகவன் மட்டும் தான். பார்ப்போம் சீக்கிரம் கூகுளை தாண்டுவோம் சாப்ட்வேரை வைத்து. :)
************************************************************************************ 
இந்த வார பதிவர்
சமீபத்தில் நண்பர் வண்ணத்துப்பூச்சியார் ரெபரன்ஸில் படித்த பதிவு. மரபணு மாற்றம் செய்யப்பட்ட B.T கத்திரிக்காயை பற்றியும் அதனால் நம்க்கு ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றியும், தமிழக அரசு காட்டும் மெத்தனத்தை பற்றியும் எழுதியிருந்தார். ஜெயமார்த்தாண்டன் என்பவருடய இந்த பதிவு நிச்சயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவாகும்.
**************************************************************************************
இந்த வார குறும்படம்
மறைபொருள் என்னுடய நண்பர் பொன்.சுதா இயக்கிய முதல் படம். சர்ச்சைக்குரிய விஷயத்தை கையிலெடுத்து, அதை தைரியமாய் சொல்லியிருப்பார். நிறைய விருதுகளை பெற்ற படம். இந்த படததை எடுக்க தூண்டியவன்  என்கிற முறையில் எனக்கும் மிக சந்தோஷமே..(எந்த முறையில் என்று சுதாவை கேட்டால் தெரியும்:)))

*************************************************************************************
ஏ ஜோக்
கணவன் ஒரு நாள் மனைவியிடம் “நாம் இன்று புதிய உறவு முறையான 68 செய்வோம்”என்று சொல்ல, மனைவி “அதென்ன 68 நான் 69 கேள்விபட்டிருக்கிறேன்” என்றவுடன். கணவன் “ இது லேட்டஸ்ட். முதலில் நீ எனக்கு செய்ய வேண்டும். பின்பு நான் உனக்கு செய்ய வேண்டும் என்பதை கணக்கில் வைத்து கொள்ள வேண்டும்” என்றான்
*************************************************************************************
இந்த வார தத்துவம்
வாழ்வின் மோசமான நிலைகளில் உன்னோடு இல்லாதவனுக்கு, உன்னுடய சந்தோஷ காலங்களில் சிறிது நேரம் கூட இருக்க தகுதியற்றவன்.
*************************************************************************************



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 23, 2010

Wasabi – 2002

wasabi3 தமிழ் திரையுலகில் சமீப காலமாய் பரபரப்பாய் பேசப்பட்டுவரும் வரும் படம் வசாபி. ரொம்ப சிம்பிளான நிச்சயம் தமிழிலிலோ, அல்லது இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் எடுத்தாளக்கூடிய கதைகளம்.

பிரான்ஸில்  அரக்கத்தனமாய் வேலை பார்க்கும் கமிஷனர் ரீனோ. ஒரு முக்கிய வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிக்க, போகும் இடத்தில் ஒரு பெண்ணை நேருக்கு நேராய் முக்கில் குத்தி கைது செய்து வரும் வேளையில் அவனின் மேலதிகாரியின் மகனையும் யார் என்று தெரியாமல் ஒரு குத்து குத்திவிட்டு வர,  இம்மாதிரியான அரகண்டான வழியில் அவன் நடந்து வருவதை, கண்டித்து வேறு வழியில்லாமல் இரண்டு மாதம் சம்பளத்துடன் சஸ்பென்ஷன் செய்யப்படுகிறான்.
wasabi4 தனிக்கட்டையான அவனை விரும்பும் பெண்ணிடம் கூட 19 வருடங்களுக்கு முன் தன்னை விட்டு பிரிந்து போன காதலியை நினைவுகூற்கிறான். அவளை மறந்துவிட்டு வா.. அப்போது மீண்டும் சந்திப்போம் என்று பிரியும் அவளை பற்றி பெரிதாய் கவலைபடாதவனுக்கு ஒரு செய்தி வருகிறது. அவனது காதலி இறந்து விட்டாள் என்றும், அவன் பெயரில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிருப்பதாகவும் தெரிய வர, ஜப்பானுக்கு கிளம்புகிறான். அங்கே போனால் அவனுக்கும் அவன் காதலிக்கு பிறந்த பெண்ணையும், 200 மில்லியன் டாலர் பணத்தையும் அவள் மேஜராகும் வரை கார்டியனாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்று உயிலில் எழுதியிருக்க, ரினோவுக்கு காதலியின் சாவில் மர்மம் இருப்பதாய் தெரிய, விசாரிக்க ஆரம்பிக்கிறான். இன்னும் இரண்டே நாட்களில் மேஜராகப் போகும் பெண் தன் தகப்பன் தன் தாயை ரேப் செய்துவிட்டு எமாற்றி விட்டு போய்விட்டான், அவனை பார்த்தால் கொலை செய்வேன் என்று புலம்பும் பெண்ணிடம் தான் தான் அவள் தகப்பன் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறான். இன்னொரு பக்கம் அவளை கொலை செய்ய ஒரு கும்பல் அலைகிறது. அவன் காதலியின் சாவின் பிண்ணனி என்ன? ஏன் அவள் மகளை கொலை செய்ய துரத்தப்படுகிறாள்? அவளிடம் ரீனோ தன்னை வெளிப்படுத்தி கொண்டானா.? என்பதை ஜக்குபாய் வந்ததுமோ.. இல்லை வசாபி டிவிடியை பார்த்தோ தெரிந்து கொள்க.
wasabi2 இறுக்கமான, ஸ்டைலான, அரகண்டான இம்மாதிரியான கேரக்டர்கள் ரினோவுக்கு அல்வா சாப்பிடுவது போல. மனுஷன் பாடி லேங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும், அவரது ஸ்பாண்டெயினிடியிலும் கொள்ளை கொள்கிறார்.

அவரின் உதவியாளர் ஒருவர் நிச்சயம் நல்ல காமெடியன்களுக்கான ரோல். தமிழில் கவுண்டர் ரீ எண்ட்ரி.  ரினோவின் மகளாக வரும் எக்ஸெண்ட்ரிக் யூத் சமங்களில் அவரது நடிப்பு ரொம்பவும் குழந்தைதனமாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் நெஞ்சில் நிற்கிறார். ஸ்ரேயா இந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். என்ன அவரது காஸ்ட்யூம் மற்றும் ஹேர் ஸ்டைல் அதே போல இருப்பதாய் படுகிறது.
Wasabi-resized200 ஒரு பெரிய வில்லன் கோஷ்டி என்றும் டான் என்றும் சொல்லப்படுகிற ஆள் படு மொக்கையாய் இருப்பது பெரிய காமெடி.வெளிநாடுகளில் இப்படத்தை ஆக்‌ஷன் காமெடி படம் என்றுதான் சொல்கிறார்கள். நாம் சீரியஸாய் எடுக்கும் ஆக்‌ஷன் படங்களை விட இது எந்தவிதத்திலும் குறைவில்லை.

நிச்சயம் வசாபி  ஒரு நல்ல இண்ட்ரஸ்டிங்கான தமிழ்படத்துக்கான கதை களனை கொண்ட படம் என்றே சொல்ல வேண்டும். கே.எஸ்.ரவிகுமார் போன்ற திறமையான இயக்குனர் கைகளில் கிடைக்கும் போது இன்னும் நமக்கேற்ற மசாலாவை சேர்த்து கமகமக்க வைப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

Wasabi – French Masala 



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 22, 2010

Adhurs – Telugu Film Review

adhursreveiw ஜூனியர் என்.டி.ஆரின் இரட்டை வேடம், நயந்தாரா, என்.டி.ஆரின் ஆதர்ச இயக்குனர் வி.வி.விநாயக், தேவி ஸ்ரீபிரசாத், என்று எல்லோரும் சேர்ந்து மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியிருந்தபடம்.

தெலுங்கு சினிமா உலகத்தை திருப்பியெல்லாம் போடவில்லை. வழக்கமான மசாலாதான். இரட்டையர்களாய் பிறநது, பிரிந்து போய். சாரி என்று கோவிலில் பிரம்மானந்தத்திடம் அஸிட்டெண்ட் பூசாரியாய் ஒருவன். கேங்ஸ்டரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து போலீஸ் ஆபீசர் சாயாஜி ஷிண்டேவிடம் கொடுக்கும் நர்சிம்மனாக ஒருவன். அவனுக்கு ஒரே எய்ம் போலீஸில் சேருவது. இன்னொரு பக்கம் நரசிம்மனை தேடியலையும் கல்கத்தா டான் மகேஷ் மஞ்ச்ரேக்கர். அவன் எதற்காக தேடியலைக்கிறான் நரசிம்மனை? நரசிம்மனும், சாரியும் சேர்ந்தார்களா? என்பதை வெள்ளி திரையில் காண்க.

இரட்டை வேடங்களில் சாரியாகவும், நரசிம்மனாகவும் ஜூனியர் என்.டி.ஆர். நரசிம்மனாக வரும் என்.டி.ஆரைவிட, சாரியாக வரும் என்.டி.ஆர் மனதில் நிற்கிறார் அவரும் பிரம்மானந்தமும் அடிக்கும் காமெடி கூத்தினால். பிரம்மானந்தம் நயந்தாராவை காதலிக்க, நயன் தாரா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நரசிம்மனை பார்த்துவிட்டு சாரியை காதலிக்க, ஒரு கட்டத்தில் நயனுக்கும், சாரிக்கும் நிச்ச்யதார்த்தம் நடந்துவிட அவர்களுக்கு வில்லனாய் மாறி குடைச்சல் கொடுக்கும் பிரம்மானந்தம் அட்டகாசம். நிச்சயம் விழுந்து, விழுந்து சிரிப்பீர்கள். இன்னொரு என்.டி.ஆருக்கு ஜோடி போலீஸ் ஆபிஸர் சாயாஜியின் மகள் ஷீலா.
adurs நயன் முகத்தில் இன்னும் முத்தல் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஷீலா ஓகே. வில்லன் மகேஷ் மஞ்ச்ரேக்கர் பற்றி பெரிதாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. பல சமயங்களில் அவரும் ஆஷிஷ் வித்யார்த்தியும் காமெடி பீஸ்களாய் வலம் வருகிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் சந்திரகலா..சந்திரகலா பாடலை தவிர வேறேதும் நினைவில் இல்லை. சோட்டா கே நாயுடுவின்  ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்வதற்கில்லை.

இயக்குனர் வி.வி. விநாயக் வழக்கம் போல அரைத்த மாவை அரைத்திருந்தாலும் சாரி என்.டி.ஆரையும் பிரம்மானந்தத்தையும் வைத்தே படத்தை ஓட்டிவிடுகிறார். பெரும்பாலும் பல படங்களில் பார்த்த காட்சிகளே திரும்ப திரும்ப வருவது அலுப்பூட்டவே செய்கிறது.

Adhurs – மொக்கை மசாலா பிரியர்களுக்கு

Technorati Tags: ,



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 19, 2010

போர்களம் – திரை விமர்சனம்

Porkkalam பொங்கல் ரிலீஸில் படத்தின் ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். பொல்லாதவன் கிஷோர் குமார் கதாநாயகனாய் நடித்து வெளிவந்திருக்கும் முதல் தமிழ் பட்ம். என்று எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம்.

கிஷோர் மிக அமைதியாய், தனக்கென ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, தன் ஒரே கம்பெனியான சமையக்காரன், நண்பனாகிய சத்யனுடன் வாழ்பவன். அரசியல் ஆதரவு தாதாவை தற்கொலை முயற்சி செய்து மிரட்டியே கைது செய்ய வைப்பவன், வீரன், தீரன், சூராதி சூரன், ஒரே குத்தில் பழைய ப்ளைமெள்த காரை நகர்த்தி எறிபவன் என்று ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வருகிறார். இவரின் வாழ்க்கையில் அகஸ்மாத்தாய் நுழையும் பெண்ணினால் ஏற்படும், காதல், மோதல், வீழ்ச்சி, எழுச்சி என்றெல்லாம் போகிறது கதை.

கிஷோர் என்ன செய்கிறார், ஏது செய்கிறார் என்று தெரியவில்லை. மிரட்டலான பாடி லேங்குவேஜால் அந்த் கேரக்டர் மேல் ஒரு எதிர்பார்ப்பை வரவழைத்துவிடுகிறார். அதை ஓரளவுக்கு பூர்த்தியும் செய்திருக்கிறார்.
porkkalam-ap4-2009_005 copy படம் பூராவும் சத்யன் கேரக்டர் பேசிக் கொண்டேயிருக்கிறது. அவரின் பேச்சை விட அதை இடை மறித்து கிஷோர் பேசும் வசனங்கள் நச். ஓடிவரும் பெண் நல்ல குண்டு பப்பாளிப்போல் இருக்கிறார்.

படத்துக்கு மிக முக்கியமான திருப்பத்தை பற்றி சொல்லும் போது கொஞ்சம் நிமிர்ந்து நிற்கத்தான் வைக்கிறது. காரின் பெரிய ஹாரன், சத்தத்தை வைத்து உணர்தல், பைக் வாங்கும் கடையில் பைக்கின் கலரை பற்றி கேட்பது, ராஜேஷின் கேரக்டர், தாய்லாந்து ப்ளாஷ்பேக், எப்பவும் ஓடிக் கொண்டிருக்கும் பைத்தியக்காரன், குரலையும், போகும் திசையையும் வைத்தே இடஙக்ளை குறிக்கும் காட்சிகள் என்று ஆங்காங்கே சின்ன சின்னதாய் நிறைய விஷயங்கள் நுணுக்கமாய் செய்திருந்தாலும் படம் பூராவும் ஒரு வெறுமை ஒடிக் கொண்டிருக்கத்தான் செய்கிறது.
porkkalam-ap4-2009_014 copy பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் பண்டி சரோஜ்குமார்,மற்றும் பிண்ணனி இசையமைப்பாளரும் தான். படும் நெடுக தெரியும் ஒரு செபியா மற்றும் கருமை கலந்த டோனும், சில ஷாட்களும் மிரட்டலாக இருக்கிறது. பிண்ணனி இசை ஆப்டாக இருப்பதும் சந்தோஷம்.
por2 டெக்னிகலாய் சொன்னால் ஆரம்பக் காட்சிகளில் எந்த அளவிற்கு மிரட்டலாய் இருந்ததோ, அதே அளவுக்கு ஒரே மாதிரியான ஷாட்களால் எரிச்சலை ஏற்படுத்துகிறது.. எல்லா ஷாட்களீலும், ரைட் லெப்ட் மூவ்மெண்ட், கால், கை இன்சர்ட்ஸ், ஒரே மாதிரியான வைட் ஆங்கிள் ஷாட்டுகள், மிக மெதுவாய் வரும் டயலாக் டெலிவரி, மைண்ட்லெஸ் வயலன்ஸ், எப்போது வீட்டின் முன் எரிந்து கொண்டிருக்கும் புகை மண்டல வில்லன் இடம், சூனியக் கார கிழவி போன்ற வில்லன். என்று மிக பாஸ்டாய் போகவேண்டிய ஆக்‌ஷன் காட்சிகள் கூட ஸ்லோமோஷனில் போய் கொட்டாவி, கொட்டாவியாய் வரவழைத்திருக்கிறார் கதை திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கு இந்த 24 வயது பண்டி சரோஜ்குமார். நிச்சயம் இவரால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்.

போர்களம் – டாய் ஸ்டோரி



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 18, 2010

கொத்து பரோட்டா –18/01/10

கெவின் காஸ்ட்னர் என்று ஒரு நடிகர், 1995 என்று நினைக்கிறேன் அன்றைய காலகட்டத்திலேயே ஹாலிவுட்டில் சுமார் 600 மில்லியனுக்கு மேல் செலவு செய்து, கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் கடலின் நடுவிலேயே செட் போட்டு, புயல் மழையில் அதெல்லாம் அழிந்து போய், மீண்டும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போய் ஒரு வழியாய் முடிக்கபட்ட “வாட்டர் வேர்ல்ட்” எனப்படும் அன்றைய ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படம். ஒரு சூப்பர் டூப்பர் ப்ளாப். இத்தனைக்கு அவர்கள் கையில் ஸ்கிரிப்டோடு எல்லாவற்றையும் பேப்பரில் இல்லாமல் போகாதவர்கள். இவர்களின் உழைப்பு ஒன்றும் யாருடைய உழைப்புக்கும் கீழ் இல்லை. ஒரு திரைப்படம் என்பது எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வைத்து இல்லை. சொல்ல வந்ததை எப்படி மக்களிடம் கன்வே செய்திருக்கிறார்கள் என்பதை வைத்துதான். இவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்.. அப்படி உழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சிம்பதி காட்டக்கூடாது. அப்படியானால் யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்.
*************************************************************************************
சென்னை சங்கமம்
இத்தனை வருடங்களாய் சென்னை சங்கமத்தில் சங்கமித்தில்லை. ஆனால் இந்த வருடம் சங்கமித்து கொண்ட்டாடிய வருடம். ஆரமபித்த இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து போய் வந்ததில் மெல்ல இது ஒரு நல்ல டூரிஸ்ட் அட்ராக்‌ஷனாகிவிடக்கூடிய ஒரு கலாசசாரமாக மாறிவிடக்கூடும் என்று தெரிகிறது. சரி அதை விடுங்கள். போகி அன்று வெங்கட்நாராயணா ரோடை முழுவது அடைத்து கிராமிய கலைஞர்களின், தேவராட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், என்று ஊர் பட்ட ஆட்டங்களை ஆடினார்கள். சுற்றி பெருங்கூட்டமாய் நின்றிருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும், போட்டோ எடுத்து கொண்டும் இருக்க, ஒவ்வொரு குழுவாய் மெல்ல நகர்ந்து கொண்டே ஆடிக் கொண்டு போய் கொண்டிருக்க, லேசான கைதட்டல் மட்டும் அங்கே கேட்க, ”என்னணே.. எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடுறாங்க.. கொஞ்சமாச்சு அவங்களை பாராட்ட வேண்டாம்? என்று கேட்டுவிட்டு உள்ளே களத்தில் குதித்து ஆட்டமாட ஆரம்பிக்க, உடன் நானும் குதிக்க, மெல்ல மெல்ல ஆட்டத்தின் காரணமாய் வாசிப்பாளர்களின் உத்வேகமும் ஏறி அவர்களின்

ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்க.. அப்துல்லா ஆடிய ஆட்டம் மற்றவர்களுக்கும் ஜுரம் போல பரவி மேலும் பல ஆண்களும், பெண்கள் ஆட்டத்தில் இறங்க, கலைஞர்கள் மேள தாளங்கள் மேலும் ஓங்காரத்துடன் ஏற.. நிச்சயம் ஒரு பெரிய எக்ஸ்டஸியை கொடுத்தது என்றால் அது மிகையில்லை என்பதை சுற்றி ஆடிய ஆண்களும் பெண்களும் அப்துல்லாவிற்கும், ஆடிய கலைஞர்களுக்கும், எங்கள் எல்லோரும் கை கொடுத்து வாழ்த்தியதிலிருந்தே தெரிந்தது. அவர்களுடய தாளத்துக்கு ஏற்றவாறு ஆடியது, மக்கள் கூட ஆட இறங்கியதும், கலைஞர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இருக்கிறதே. அடடா.. இந்த அங்கீகாரத்துக்கு அவன் இன்னும் ஒரு வருஷம் சந்தோஷமா உயிர் வாழ்வாண்ணே என்றார். அதன் பிறகு ஒவ்வொரு ஆட்ட க்ரூப்பிலும் போய் ஆடிய ஆட்டம் என்ன..? அடடா சூப்பர்.. இரவு ஒரு மணி வரை… வீடியோவை பார்த்தாலே தெரியும்.
***********************************************************************************
சாப்பாட்டுக்கடை
சென்னை சைதாப்பேட்டையில் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவின் முனையில் பாத்திமா ஆற்காடு பிரியாணி என்றொரு கடை இருக்கிறது. காலை மற்றும் மாலையில் பிரியாணி கடை திறந்திருக்கும். வழக்கமாய் திகட்டும் மசாலா இல்லாமல், சரியான கலவையில், அருமையான பாஸ்மதி அரிசியில் சுடச்சுட த்ருகிறார்கள். அவர்கள் கடை திறந்து காலியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. வெங்காயம், கத்திரிக்காய் இல்லாமலேயே பிரியாணியை சாப்பிட முடியும் அவ்வளவு ருசியாக இருக்கும். ஹேவ் எ ட்ரை..
**********************************************************************************
குறும்படம்
பிக்ஸாரின் அனிமேட்டட் குறும்படங்கள் புகழ் பெற்றவை. அதிலிருந்து ஒன்று.

************************************************************************************
பின்நவீனத்துவம்னா என்ன?
பரிசல் என்கிட்ட கேட்டிருந்தாரு.. இன்னொருத்தரும் கேட்டிருந்தாரு.. பின்நவினத்துவம்னா என்னன்னு? ரொம்ப கஷ்டப்பட்டு உட்காந்து யோசிச்சதிலே.. ஒன்று புரிஞ்சிச்சி பின்நவீனத்துவம்னா எனக்கு ஒரு மாதிரி புரியுது. அதை நீ பாக்கும் போது உனக்கு வேற மாதிரி புரியுது. இன்னொருத்தன் பாக்கும் போது அவன் வேற ஒண்ணை சொல்றான். இதையெல்லாம் பாக்குறவன் ஒரு வேளை நாமும் ஒரு கருத்தை சொல்லைன்னா நம்மளை ஆட்டத்தில சேர்த்துக்க மாட்டாங்களோன்னு அவனும் மூணு பேர் சொல்றதுல ஏதோ ஒண்ணுக்கு தலை ஆட்டுவான். இப்படி யாருக்குமே புரியாம ஆளாளுக்கு ஒண்ணை புரிஞ்சிக்கிறதுக்கு பெயர்தான் பின்நவினத்துவம். என்ன புரிஞ்சுதா..? இல்லாட்டியும் புரிஞ்ச மாதிரி தலையாட்டுங்க.. இல்லாட்டி உங்களையும் ஆட்டத்தில சேத்துக்காம போயிருவாங்க..:)
*************************************************************************************
ஏ ஜோக்
ஒரு இத்தாலிய வர்ஜின் பெண் தன் முதல் இரவுக்கு போகும் முன் தன் தாயிடம் “அம்மா பயமாயிருக்கு என்று சொல்ல, கவ்லை படாதே மகளே ஜான் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்றாள். உள்ளே சென்ற பெண்ணை பார்த்ததும் ஜான் சட்டையை கழற்ற, மார்பு நிறைய முடியுடன் நின்றான். உடனே கீழே வந்த பெண் “அம்மா ஜான் மார்பு பூராவும் முடி” என்றாள். அம்மா” நல்ல திடமான ஆண்களுக்கு நிசசயமாய் முடி இருக்கும் ஜான் பார்த்து கொள்வான்” என்றாள். திரும்பவும் மேலே போன பெண் இப்போது ஜான் பேண்டை கழட்டியதும் கால்களில் கூட முடியிருப்பதை பார்த்து “அம்மா.. கால்களிலும் முடி இருக்கிறது” என்றாள். அம்மா.. “ நல்ல ஆண்களுக்கு அப்படித்தான் இருக்கும் ஜான் பார்த்துப்பான்” என்று அனுப்பி வைத்தாள். இப்போது ஜான் தன் சாக்ஸை கழட்ட, அவனின் இரண்டு கால் பாதங்களில் ஒருகாலில் மூன்று விரல்கள் இல்லாமல் இருக்க, கீழே வந்த பெண்” Mom. John has got One and half foot” என்றதும், அம்மா கண்கள் விரிய.. நீ இங்கே சமையல் வேலை செய்.. இது அம்மாவுக்கானது என்று ஆசையாய் ஓடினாள்.
*************************************************************************************
இந்த வார தத்துவம்
வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை.. சொன்னது யார் - யாருக்கு தெரியும்??
**************************************************************************************



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 17, 2010

குட்டி – திரை விமர்சனம்

kutty தெலுங்கு சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய படம் ஆர்யா. அல்லு அர்ஜூனில் மார்கெட்டையே மாற்றியமைத்த படம், தமிழ் இயக்குனர் சுகுமார் என்பவர் இயக்கிய படம். இதன் பிறகு அதே இயக்குனர் ஆர்யா-2 என்று படமெடுத்து அதுவும் ஹிட். இப்படி பல பாஸிட்டிவ் விஷயஙகளை கொண்ட படத்தை இவ்வளவு லேட்டாய் தமிழில் ரிமேக்கியிருக்கிறார்கள்.

ஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்திருக்கும் காதலன், அவனை தான் நிஜமாகவே காதலிக்கிறோமா என்று கேள்வியோடு இருக்கும் ஸ்ரேயா, ஸ்ரேயாவும், எம்பி பையனும், காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் ஸ்ரேயாவை காதலிக்கும் தனுஷ். இதில் யார் காதல் ஜெயிக்கிறது என்பதை மிக இண்ட்ரஸ்டான ட்விஸ்ட் அண்ட் டர்ன்களுடன் அளித்திருக்கிறார்கள்.
kutty-movie-first-look-poster-stillskutty-movie-first-look-poster-imageskutty-movie-first-look-poster-photo-gallery-2 ஸ்ரேயாவின் கொலுசை கன்யாகுமரி கடலில் குதித்தெடுக்க போனவன் யார் என்று தெரியாமல், ராத்திரிகளில் திடுக், திடுக் என எழுத்திருக்கும் காட்சியிலேயே ஸ்ரேயாவின் குழப்பமான சாப்ட் நேச்சர் பெண் என்பதை விளக்கிவிடுவதால் அதன் பின்பு வரும் காட்சிகளில் எம்பி பையன் தற்கொலை செய்யப் போகிறேன் என்று மிரட்டி காதலை பெறும் காட்சியில் அவருக்கு இருக்கும் காதலின் மேல் உள்ள சந்தேகம் நமக்கும் ஓட, அந்நேரத்தில் தனுஷ் உள்ளே புகுந்து அடாவடியாய் “ஐ லவ் யூ” சொன்னதும் சும்மா ஜிவ் என்று ஏறுகிறது. அதன் பிறகு காதலர்களூக்குள் நடக்கும் “நம்பிக்கை” விளையாட்டும், அதற்கான லாஜிக்கான காட்சிகளும், இம்ப்ரசிவான டயலாக்குள் நிச்சயம் இளைஞர்களை கவரத்தான் செய்கிறது என்பதற்கான சாட்சி தியேட்டரில் வரும் கைதட்டல்கள் தான்.
Kutty2 எம்பி பையனுக்கும், தனுஷுக்கும் நடக்கும் ஸ்ரேயாவுக்கான ஆட்டங்கள் வெரி இண்ட்ரஸ்டிஙான ஒன்று. காமெடி என்கிற பெயரில் ஸ்ரீநாத் விவேக், சந்தானம் எல்லாரையும் இமிடேட் செய்கிறார். இவரை காலேஜ் ஸ்டூடண்ட்லேர்ந்து யாராவது ப்ரோமோஷன் கொடுங்களேன் முடியல.

தனுஷின் நடிப்பை தெலுங்கு அல்லு அர்ஜுனுடன் கம்பேர் செய்தால் ஆரம்ப காட்சிகளில் இருக்கும் அவரின் துள்ளல் கொஞ்சம் தனுஷிடம் குறைவுதான் என்றாலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் கலங்க வைக்கிறார்.
Kutty-29 ஸ்ரேயாவை தனுஷுடன் பார்த்தால் கொஞ்சம் வயசு தெரிகிறது. தனியே பார்த்தால் ம்ஹும்… அவரும் அவருடய இடுப்பும், அந்த இறுக்கமான டீ சர்ட்களும், அந்த உடுக்கை இடுப்பும், அடடா.. நடிக்க பெரிய வேலையில்லாவிட்டாலும் கொடுத்த வேலையை பூர்த்தி செய்திருக்கிறார்.

எம்பி பையனாக வரும் நடிகருக்கு ஏற்கனவே அவர் காமெடி பீஸ் கேரக்டராக இருப்பதால் பெரிதாய் சொல்வதற்கில்லை. ராதாரவி, சங்கராபரணம் ராஜலஷ்மி, என்று எல்லோரும் பாத்திரத்திக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு துல்லியம். அதிலும் ஸ்ரேயாவின் க்ளோசப் காட்சிகளிலும், கிராமத்தில்  தனுஷுடன் அவர் கழிக்கும் நாட்களுகளில் வரும் “யாரோ என் நெஞ்சில்” பாடல்களில் லொகேஷனும், மாண்டேஜ் காட்சிகளிலும் தெரியும் ஒரு குதூகலமும், நிறைவும், குளுமையும், சூப்பர்ப்..
kutty_010

தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் நிச்சயம் ரெண்டு பாடல்கள் ஹிட். ”யாரோ என் நெஞ்சில்” பாடலும், பீல் மை லவ் பாடலும் ஹிட் ரகம். மற்றபடி ஆர்.ஆர். கூட தெலுங்கில் செய்த ட்ராக்கையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

கதை திரைக்கதை சுகுமார். இண்டெலிஜெண்டான திரைக்கதையினால் தெலுங்கு சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் பெர்பக்‌ஷனிஷ்ட். வழக்கமாய் ரீமேகிடும் போது அப்படியே அச்சு அசலாய் எடுத்துவிட்டு திரைக்கதை என்று தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும் டைரக்டர்கள் மத்தியில் சுகுமாரின் உழைப்பிற்கு மதிப்பளித்த ஜவஹர் கே.மித்ரனுக்கு பாராட்டுக்கள். ஏற்கனவே சக்தி சிதம்பரம் இந்த படத்தின் திரைக்கதையில் வரும் முக்கிய காட்சிகளை இங்கிலீஷ்காரன் படத்தில் யாரையும் கேட்காமல் உல்டா பண்ணிவிட்டார். அதனால் அதை பார்த்தவர்கள் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்றோ, டைரக்டர் சக்தி சிதம்பரத்திடமிருந்து காட்சிகளை திருடிவிட்டார் என்றோ காமெடி செய்ய வேண்டாம்.
Kutty_Dhanush_Posters_05 படத்தில் மைனஸே இரண்டாவது பாதியில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கும் தொய்வே.. அதன் பிறகு நீடிக்கும் க்ளைமாக்ஸ் ஜவ்வும் தான் தெலுங்கில் இருந்த அதே குறையை கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சரி செய்திருக்கலாம் இதிலும் அதே ஜவ்வு கொஞ்சம் எரிச்சலையத்தான் செய்கிறது. மற்றபடி ஒரிஜினலில் இருக்கும் வசனங்களை கிட்டத்தட்ட டிரான்ஸுலேட் செய்திருக்கிறார் இயக்குனர் அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜவஹர் இன்னொரு ராஜாவாக  உருவாகிறார். வாழ்த்துக்கள்.

குட்டி -  A Feel Good Entertainer



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 16, 2010

நாணயம் – திரை விமர்சனம்

naanayam_box1 கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளை எடுக்கும் போது ஆங்கில படங்களின் பாதிப்பில்லாமல் எடுக்க முடியாது. அதையும் மீறி விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

பிரசன்னா ட்ரஸ்ட் பேங்கின் முக்கிய பொறுப்பில் உள்ளவர், அவர் கனவெல்லாம் தனியே சொந்த தொழில் செய்வதுதான். அப்படியிருக்க பேங்கில் வேலை செய்து கொண்டே லோன் போட்டு, அதில் வரும் பணத்தை கொண்டு தொழில் ஆரம்பிக்கிறதாய் கனவு. பிரசன்னாவின் காதலி ஏற்கனவே ஒருவனை திருமணம் செய்து டைவர்ஸ் ஆனவள். ஏகாந்தமாய் கடற்கரையில் இருக்கும்போது அவளின் முன்னால் கணவன் வ்ந்து தகராறு செய்ய, அதில் ரவி, அவன் காதலி இருவரும் மயக்கமாக, கண் முழித்து வீடு வந்தால் வீட்டினுள் சிபி உட்கார்ந்திருக்கிறார். காதலியின் கணவனை அவன் கொன்று விட்டதாகவும, பிரசன்னா அவனுடன் சண்டையிட்ட காட்சிகளை படமெடுத்து வைத்திருப்பதாகவும், பிரசன்னா பேங்கை கொள்ளையடிக்க உடன்படாவிட்டால் அந்த போட்டோக்களை போலீஸுக்கு கொடுத்து மாட்டிவிட்டு விடுவோம் என்று சொல்லி மிரட்ட, ப்ரசன்னாவை வைத்தே காதலியின் கணவன் உடலை புதைக்க சொல்லி அதையும் போட்டோ எடுத்து மிரட்ட, வேறு வழியில்லாமல் தான் வடிவமைத்த பாங்கின் லாக்கரையே கொள்ளையடிக்க ஒத்துக் கொள்கிறார் பிரசன்னா. இதன் நடுவில் அவர்கள் கூட இருந்து கொண்டே, அதிலிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்கிறார். பாங்கை கொள்ளையடித்தார்களா..? ப்ரசன்னா அவரின் காதலியை காப்பாற்றினாரா? இல்லையா..? என்பது போன்ற கேள்விகளுக்கு சுறுசுறு, பரபரவென திரைப்படுத்தியிருக்கிறார்கள்.
nanayam340 அலட்டலில்லாத, அமைதியான நடித்திருக்கிறார் பிரசன்னா. எங்கெங்கு என்ன தேவையோ அதை சிற்சில பாடி லேங்குவேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் மிக இயல்பாய் வெளிபடுத்தியிருக்கிறார். கொள்ளையடிக்க மிரட்டும் வில்லனாக சிபி. பெரியதாய் நடிக்க வராவிட்டாலும், டயலாக்கில் தந்தையை பாலோ பண்ண முயற்சித்து அதில் சில இடங்களில் வென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.பி.பி, கொள்ளைக்கு உடன் வரும் அஞ்சாதே தடியாள், போலீஸ்காரன், கதாநாயகி என்று எல்லோருமே அவரவர் பாத்திரதை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல பிகராய் இருக்கிறார்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ப்ரசன்னாவின் இரண்டு மூன்று நாள் காதலிக்காக, இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பதும், ஜேம்ஸ்வசந்தனின் பாடல்களில் எஸ்.பி.பியின் நான் போகிறேன் மேலே மேலே பாடலை தவிர மற்றதெல்லாம் பல இடங்களில் படத்தின் போக்கை மட்டுபடுத்துகிறது. அதே நேரத்தில் எஸ்.தமனின் பிண்ணனி இசை ஆப்ட்.
naanayam-prasanna-sibiraj

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக வெளிப்படுத்தியிருக்கிறது. எடிட்டிங்கும் கச்சிதம். படத்தை பார்க்கும் போது ஆங்கிலத்தில் பார்த்த பல பேங்க் ராபரி படங்களான, Bank Job, Entrapment, ocean series , italian job போன்ற படங்களை ஞாபகபடுத்தினாலும் படம் நெடுக வரும் திடுக், திடுக் திருப்பங்களில் சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகிவிடுவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இம்மாதிரியான படங்களுக்கு இன்னும் கொஞ்சம் டெக்னிகலாய் விஷயங்களை சொல்லி முடுக்கி இருக்கலாம். ஆரம்ப காட்சிகளில் ப்ரசன்னா அறிமுகம் கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் பின்னே போக போக சரியாகிவிடுகிறது. வசனங்களே படத்தின் பிரதான விஷயமாய் இருப்பதால் அதை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர். டிகைரேகை வாங்குவதற்காக ஹீரோயின் மேடையில் டான்ஸ் ஆடி மயக்கி எடுப்பதெல்லாம் அரத பழசு. க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதே போல ஹீரோயின் கேரக்டருக்கு இன்னும் நல்ல ஆர்டிஸ்டை செலக்ட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை சரியாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சக்தி கே.ராஜன்.

டிஸ்கி:
நல்ல முறையில் பப்ளிசிட்டி செய்தால் நிச்சயம் ஒரு ஆவரேஜ் ஹிட் கொடுக்கக்கூடிய படம். கொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று பதிவர்கள் மனதில் வரும் என்பதால் அவஙக் பேரை எழுதல..:))

நாணயம் – செல்லும்



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

ayirathil oruvan

35 கோடி பட்ஜெட் படம், நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்த படம், கிட்டத்தட்ட மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த படம். ஆண்ட்ரியாவின் மாலை நேரம் பாடல் முதல் கொண்டு ஹிட் பாடல்களை கொண்ட படம், செல்வராகவனின் ஃபாண்டஸி படம், கிட்டத்தட்ட மூன்று வருடஙக்ளுக்கு பிறகு கார்த்தி நடித்து வெளிவரும் படம் என்று பல சர்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்த படம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் சோழ மன்னன் தன் மகனை வேறொருவனிடம் கொடுத்து பாதுகாக்க சொல்லி அனுப்பும் தெருக்கூத்தோடு ஆரம்பிக்கிறது.அதன் பிறகு அப்படியே ஒரு பாழடைந்த இடத்தில் பிரதாப்போத்தன் உள்ளே செல்ல பின்னால் தொடரும் நிழல் அவரை விழுங்க.. அவரை தேடி அவரது பெண்ணும், அவர் செய்த சோழர் கால ஆராய்ச்சியை தொடர அமர்த்தப்படும் பெண் ரீமா, அவர்களுக்கு அடி பொடி வேலை செய்ய அழைக்கப்படும் கார்த்தி. இவர்களுடன் நம்முடய சோழர்களை தேடும் படலமும் ஆரம்பிக்கிறது.
aayirathil-oruvan-001 கப்பலில் ஏறும் காட்சியிலிருந்து சல,சலவென ஓடும் ஆறு போல ஓடுகிறது படம். பெரியதாய் கதை ஏதும் நகராவிட்டாலும், ரீமாவின் அதிரடி கேரக்டரும், ஆண்ட்ரியாவின் அமைதியான கேரக்டரும், கார்த்தியின் அடாவடி, தடாலடி வெட்டி பேச்சு கேரக்டரும் நம்மை ஈர்த்து உட்கார வைக்கிறது. இரண்டு பேரிடமும் கார்த்தி முதல் காட்சியிலேயே அவர்களை படுக்க அழைப்பதும், மாறி மாறி பார்த்ததுமே கல்யாணம் செய்யனூமின்ன உங்களை தான் பண்ணிக்குவேன் என்று சொல்வது ஓவராக இருந்தாலும், செல்வாவின் பலம் அந்த கேரக்டர்களும் அதன் பலவீனங்களும் ஆதலால் ரசிக்க முடிகிறது. காண்டமிருக்கிறது வரியா என்று கேட்டதற்கு அருகில் அழைத்து மெல்ல அணைத்து காதில் “கீழேபார்” என்று சொல்ல துப்பாக்கி வைத்து கார்த்தியினுடய லுல்லாவை குறிபார்பதாகட்டும், அதன்பிறகு ரீமாவிடம் சற்று எட்டவே நின்று, ஆண்ட்ரியாவிடம் ஒட்டுவதாகட்டும், சாப்பாட்டில் எக்ஸ்ட்ராவாய் சிக்கன் பீஸை போட்டு கவர் செய்வதாகட்டும், புட்டத்தில் ஊசி போட அலம்பல் செய்யுமிடமாகட்டும்.. செல்வா தெரிந்து கொண்டேயிருக்கிறார்.
Aayirathil-oruvan-Stills-040 அதன் பிறகு அவர்கள் தேடிப் போகும் இடம் வந்து ஒரு மாதிரி பித்து பிடித்த நிலைக்கு வரும் போது நமக்கும் கொஞ்சம், கொஞ்சமாய் அதே நிலை வர ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இடைவேளை விடுவதால் கொஞ்சம் ரிலாக்ஸாகி தெளிவடைகிறோம். அதன் பின்பு வரும் சோழன், அவனின் மக்கள் இளவரசி, பசி வறுமையோடு கூடிய ராஜாங்கம். பாண்டிய பெண்ணான ரீமா, சோழனுடம் புணர்தல், பழிக்கு பழி, போர்,என்று ஒரே பேண்டஸி மயம். ஆனால் அங்குதான் செல்வா சறுக்கியிருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதும் ஒரே குழப்பத்தின் உச்சகட்டம், பேண்டஸி என்று முடிவெடுத்துவிட்டால் அதனுடய உச்சத்திற்கு போய் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையே அதை தொடக்கூடாது. இப்படி ஒரு குழப்பமான திரைக்கதை படத்தின் போக்கை குழப்புவதோடு மட்டுமல்லாமல்.. ஒரு கட்டத்தில் யார் மேல் கதை ட்ரவலாகிறது என்ற விஷய்ம் மாறி கொண்டேயிருக்க, ரீமா மீதே போய் கொண்டிருக்கும் கதை திடீரென்று கார்த்தியின் மேல் வர, பார்திபனுடன் சேர்ந்து போரிடும் போது ஏதோ பெரிதாய் நடக்கப் போகிறது என்று என்னும் போது ஏதும் நடக்காததால் சொதப்பிவிடுகிறது.
Aayirathil-Oruvan-trailer படத்தில் பாராட்ட படவேண்டிய ஒரு நபர் யார் என்று கேட்டால் நிச்சயமாய் அது ரீமா சென் தான். அதகள படுத்துகிறார். ஆண்ட்ரியாவின் வீட்டிற்குள் நுழைந்து பேச ஆரம்பிக்கும் போது ஒரு ஹைஃபை பாடி லேங்குவேஜுடன் அறிமுகமாகிற இடத்திலேயே நம் நெஞ்சத்தில் நிற்கிறார். இரண்டு கைகளிலும் ரிவால்வரை மாற்றி, மாற்றி சுடுகிற ஸ்டைலில் நிற்கிறவர் கொஞ்சம் செட்டிலாகிறார். பாண்டிய பெண்ணாய் மாறி பார்த்திபனுடன் அவனை புணர்ந்து இரத்தம் கலக்க, ஆவல் கொள்ளும் காட்சிகளில் அப்படியே சம்மணமிட்டு உட்காருகிறார். அதன் பிறகு அவரின் அட்டகாசம் அடி தூள் தான். பார்த்திபனும்,ரீமாவும் மாற்றி மாற்றி கொடுந்தமிழில் வசனம் பேசி, வாள் சண்டையிட்டு, சண்டையின் வீரியம் மூலம், அவளின் காமமும், பழிவாங்கும் உணர்ச்சியையும் ஒரு சேர வெளிப்படுத்தும் போது ருத்ர தாண்டவே ஆடுகிறார். ஹாட்ஸ் ஆப் ரீமா.

ஆண்ட்ரியாவுக்கு பெரிதாய் வேலையில்லை, பாதி படத்துக்கு பிறகு அவர் எதற்கு இருக்கிறார். ஏன் இருகிறார் என்று கேள்வி கேட்கக்கூட காட்சிகள் இல்லை. கார்த்தியின் ஆரம்பக் காட்சிகள் ஆர்ப்பாட்டமாய் இருந்தாலும் கதையில் அவருக்கென ஏதும் ஸ்பெஷாலிட்டியான விசயங்களோ, அல்லது அவரை சுற்றி கதையோ செல்லாததால் பெரிதாய் சொல்வதற்கில்லை. பார்த்திபன் சோழ அரசனாக கரு கருவென வித்யாசமாக இருந்தாலும், சில சமயங்களில் நடிக்கிறேன் பேர்வழி என்று ஆவென வாயை பொளந்து கத்தும் காட்சிகளில் சோழனை நாமே கொல்லலாம் என்று தோன்றுகிறது
Aayirathil-oruvan-Stills-039 ஒளிப்பதிவு ராம்ஜி, படம் முழுக்க இவரின் உழைப்பு தெரிகிறது. முக்கால் வாசி காட்சிகள் சி.ஜியாகவே வருவதால், சி.ஜி பல இடங்களில் பல் இளிக்கிற காட்சிகளில் எல்லாம் ஒளிப்பதிவாளருக்கு பெயர் சொல்லவில்லை. சில இடங்களில் அட பொட வைக்கவும். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். படத்தில் இரண்டு பாட்டு தான் வருகிறது. நெல்லாடிய பாடலும், உன் மேல ஆசை தான் பாடலும் ஏற்கனவே ஹிட். பின்னணி இசையில் அவர் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது.

படம் முழுவதுமே ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. அந்த பழங்கால கட்டிடங்கள் ஆகட்டும், சோழர் காலத்திய அணிகலங்கள் ஆகட்டும் ஒவ்வொரு சீனிலும் பளிச்சென்று தெரிகிறார். அதே போல் காஸ்டியூமர் இரும் அலி அவர்களின் கைவண்ணமும் அருமை.

ஒவ்வொரு இக்கட்டிலிருந்து அவர்கள் தப்பிப்பதில் மிகவும் கற்பனை வறட்சியே இருக்கிறது. நடராஜர் சிலை நிழலில் ஓடும் காட்சிகள், மெக்கனாஸ்கோல்ட், போன்ற பழைய ஆங்கில படங்களை ஞாபகப்படுத்தினாலும், நன்றாக இருக்கிறது. அது போல இரண்டாம் பாதியில் வரும் கிளேடியேட்டர் சீன் செம இழுவை. படம் நெடுகிலும் ரத்தமும் கோரமும் அதிகம்.

முதலில் செல்வாவை பாராட்டி ஆக வேண்டும் இம்மாதிரியான கதை களத்தை தெரிந்தெடுத்தற்காக, அதே நேரத்தில் அவரை குறை சொல்லியும் ஆகவேண்டும் இவ்வளவு குழப்பமான திரைக்கதை அமைத்ததினால். பல காட்சிகள் செல்வா டச் இருக்கவே செய்கிறது. ஆரம்ப காட்சிளிலும், சோழ மன்னனின் அரசாட்சியில் பஞ்சத்தில் மக்கள் அலைய, ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் வந்து அரசனின் முன் தன் முலையை காட்டி அதை அழுத்தி பீச்சி தன்னிடம் தன் குழந்தைக்கு பால் இல்லை ரத்தம் தான் வருகிறது என்று வெளிப்படுத்தும் காட்சியிலும், தான் ஒரு வெர்ஜின்தான் என்பதை நிருபிக்க நின்ற வாக்கில் ரீமா நம்பர் ஒன் போக அதை பிடித்து யூரினல் டெஸ்ட் செய்வதும், இடுப்பை அழுத்தி அவள் ஏற்கனவே சூலுற்றவளா என்று செக் செய்யும் காட்சியாகட்டும், பார்த்திபனும் ரீமாவும் போடும் சண்டையில் பார்திபனிடம் கோபமும், ரீமாவிடம் கோபமும், தாபமும், காமமுமாய் போடு சண்டைக் காட்சியும், போர் காட்சிகளும் என்று ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்.
Aayirathil-Oruvan-61 ஆனால் இவை எல்லாம் தெளிவான திரைகதையில்லாத்தால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ரியாலிட்டியையும், பேண்டஸியையும் ஒரே களத்தில் வைத்து சோழனையும், ரீமாவையும் ஒரு காலத்தில் வாழ விட்டு பல சமயங்களில் இது ரிஜமா கற்பனையா என்ற குழப்பத்தை காட்சிக்கு காட்சி ஏற்றிவிட்டு விடுவதால் படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது பங்கி அடித்தார் போல் இருந்தாலோ, பக்கத்தில் உள்ளவரிடம் அது சரி படத்தோட கதை என்ன என்ற கேள்வி கேட்பதையோ நிச்சயம் தவிர்க்க முடியாது. பல இடஙக்ளில் இது ஒரு பின்நவீனத்துவ படமோ என்று தோன்றுகிறது பெரும்பாலான வெகுஜன ரசிகர்களுக்கு படத்தில என்ன சொல்ல வருகிறார்கள் என்கிற கேள்வியுடன் தான் வெளிவருகிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன்



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 13, 2010

சென்னை சங்கமம்

பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றியும்..பொங்கல் வாழ்த்துக்களும்..

சென்னை சங்கமத்தில் எங்களுடய குறும்படஙக்ளை திரையிடும் முகிலன் எங்களை நேற்று மாலை அழைத்திருக்க, போனோம். வாசுவும் தண்டோராவும் ஏற்கனவே அந்த ஏரியாவில் வேலையிருந்ததால் முன்பே வ்ந்திருக்க, நான் ஆறு மணிக்கு மேல் கிளம்பி போனேன். பீச்சுக்கு எதிரே லேடி வெலிங்டன் மைதானமே ஜெகஜோதியாய் இருக்க நல்ல கூட்டம். நடுவே உயராமாய் தனியே வெள்ளை உடையில் ஒருவர் தெரிய அப்துல்லா.
Image0403 ஒரு பக்கம் லோக்கல் ஜிம்னாஸ்டிக்கை சின்னஞ்சிறு சிறார்கள் அனாயசமாக செய்து கொண்டிருக்க, அதை பார்த்த ஒரு குட்டி பெண் இரண்டு வயதிருக்கும், நானும் ஏறுவேன் என்று அடம்பிடித்து அழ, வேறு வழியில்லாமல் ஆட்கள் துணையோடு குட்டி ஆர்வக்குட்டியாய் ஏறியது எட்டடி கழியின்மேல் பயமில்லாமல். இன்னொரு நாலு வயது பெண் குழந்தையொருத்தி, அவர்கள் கால்களை பின்னி பிணைவதை பார்த்து, தடுப்புக்கு போட்டிருந்த இரட்டை கட்டைகளுக்கு இடையே ஒரு காலையும், இன்னொரு காலை அப்படியே தூக்கி மேல் கட்டையிலும் விட்டபடி, இரண்டுக்கு நடுவில் உடலை நுழைத்து உள்புக முனைந்து ஒரு மாதிரி இக்கிலிபிக்கிலியாய் மாட்டிக் கொண்டு அப்பா..அப்பா என்று கத்த, அவளின் அம்மா தெலுங்கில் திட்டினாள்.
Image0402இன்னொரு பக்கம் சிறுவர்கள் நெருப்பு வளையத்தை ஏதோ ராட்டினம் சுற்றுவது போல சுற்றியபடி கீழே படுத்து உருண்டு, குதித்தெல்லாம் சாகசம் செய்ய, இன்னொரு பக்கம் வந்திருக்கும் பார்வையாளர்கள் பங்கெடுக்கும் வண்ணம் உறியடி திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவர்கள் எல்லாம் பானையில் அடிக்கிறேன் என்று கயிறு இழுத்த ஆள் மேல் கம்பை வீச, லாவகமாய் நகர்ந்தபடி உறியை இழுத்துக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் வரிசை கட்டி ஒரு மிக்ஸ்டு வாசனை நம்மை அழைக்க, கொங்கு சமையல், செட்டிநாட்டு, மலபார், என்று கலந்து கட்டி அடிக்க, எண்ணை பரோட்டா சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்தோம். நம் பதிவர் அமுதா கிருஷ்ணன் ஒரு காண்டீன் போட்டிருக்கிறார். எல்லா கடைகளிலும் விலைதான் கொஞ்சம் அதிகம் என்று தோன்றியது.
Image0404 பின்னால் மிகப் பெரிய மேடை அமைத்து நன்றாக ஒளி,ஒலி அமைத்திருந்தார்கள், கரகாட்டமு, ஒயிலாட்டமும், தேவராட்டமும், ஆந்திர மாநிலத்து தெலுங்காட்டமும், நாக்க மூக்க புகழ் பாடகி சின்னபொண்ணுவின் குழுவும் வந்து அவரவர் பங்குக்கு ஒரு குத்தை போட்டு விட்டு சபையை கலகலத்து போக வைத்தார்கள். பெரும்பால கலை நிகழ்ச்சிகளின் பின்னணி பாடல்கள் ரஹ்மானுடயதாக இருந்த்து அவரின் ஆளுமையை காட்டியது. கும்மி அடி கும்மி அடி பாடல் அங்கிருந்த ஒலிபரப்பில் பின்னி பெடலெடுத்தது.

வலது பக்கத்தில் ஒரு இருண்ட சிறிய அரங்கமைத்து நாற்பது சேர்களை போட்டு இலவசமாய் குறும்படங்களையும், ஆவணப் படங்களையும் திரையிட்டு கொண்டிருந்தனர். என் குறும்படம் இன்று மாலை நாலிலிருந்து முக்கிய விருந்தினர்கள் வரும் நேரத்தில் திரையிடப்படும் என்று சொன்னார்கள். நண்பர் பொன்.சுதாவின் குறும்படம் திரையிடப்பட்டது. குறும்படங்களை அளித்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கு நன்றி. அவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வரும் போது வாசுவும், தண்டோராவும் வேலையிருப்பதாய் கிளம்பிவிட, அப்துல்லா இருங்க நாம இருந்து சாப்ட்டு போலாம் என்று சொல்ல அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, பின்னால் நடக்கப்போகும் நிகழ்வை பற்றி தெரியாமல் கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
Image0406சின்ன்ச் சின்னதாய் ஒரு நாலைந்து ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். ஸ்டால்களில் பெரிதாய் ஒன்றும் இல்லை, கிழக்கின் ஸ்டாலும், வ.உ.சி பதிப்பகமும் கடை விரித்திருந்தார்கள். கிழக்கின் மார்கெட்டிங்கை பாராட்ட வேண்டும் கூட்டம் சேரும் இடத்தில் எல்லாம் தங்கள் புத்தகங்களை மக்களிடையே சென்றடைய வைக்க எல்லா முயற்சியையும் செய்து கொண்டேயிருக்கிறது.

வழக்கம போல அழகு பெண்கள், துள்ளும் குழந்தைகள், என்று பராக்கு பார்த்துவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, லேசாய் வயிற்றுக்குள் அங்கிருந்த மசாலா வாசனைகள் பசியை கிளப்ப, ஆளுக்கு நாலு எண்ணெய் பரோட்டாவை சாப்பிட ஆரம்பிக்க, சென்னை சங்கமத்தின் பாடலை ஓளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்துல்லா அதில் வரும் ”தஞ்சம் கொடுத்திடும் சென்னை, இது நெஞ்சம் சுரந்திடும் அன்னை” என்கிற வரிகளை மிகவும் ரசித்து கேட்டார். இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாமல், முக்க்கி உள்ளே தள்ளிவிட்டு, மூச்சு திணறி.. நடக்க முடியாமல் போக, “அண்ணே. வாங்க ஒரு நடை பீச் மணல்ல நடந்தா செரிமாணமாயிரும்” என்றதும். எதிர்பக்கம் பீச்க்குள் போய் வேக, வேகமாய் நடக்க ஆரம்பித்தோம். வெறும் தரையில் நடப்பதை விட மணலில் நடப்பது பெரிய லெவலில் எனர்ஜி வெளியேற்றும். அப்போது ஒரு ஜோடி சுமார் நாற்பது இருக்கும், ஆணுக்கு தலை வழுக்கை, ஒரு கைனடிக் ஸ்கூட்டரில் ஸ்டைலாய் உட்கார்ந்திருக்க, அவருக்கு கீழே அதே வயதில் ஒர் பெண் ப்ளாட்பாரமில் உட்கார்ந்திருக்க, கிட்டத்தட்ட பெண் அவரின் கால்களின் மேல் தலைவைத்து, மேலே பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க, இவரும் குனிந்தபடி பேச, அந்த இருட்டிலும் இருவர் முகத்தில் ரொமாண்ஸ் பொங்கி வழிய, “அண்ணே.. பாருங்கண்ணே.. இத்தனை வ்ருஷம் கழிச்சு கூட வீட்டுல புள்ளைங்களை தனியா விட்டுட்டு இங்க வந்து ரொமான்ஸ் பண்றாங்க” என்றார் அப்துல்லா.”ஆமா ரொமான்ஸ்தான் ஆனா வெயிட் பண்ணுங்க” என்றேன். “எதுக்கு?’ “அதை சொல்லத்தானே வெயிட் பண்ணுங்கங்குறேன்.”என்றபடி ஒரு நடை மணலில் நடந்து விட்டு திரும்ப வருகையில், ரொமான்ஸ் ஜோடி கிளம்பி, ஆளாளுக்கு ஒரு திசையில் தம்தம் வண்டிகளை கிளப்பி போக, “இதைத்தான் சொல்றேன்னு சொன்னேன்” என்றதும். தலையிலடித்து கொண்டு என்னை அம்போவென விட்டுவிட்டு காரெடுத்து போய்விட்டார். நான் வேறு வழியில்லாமல் ஆட்டோ பிடித்து வந்தேன். சென்னை சங்கமம்.



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

Jan 12, 2010

எண்டர் கவிதைகள்-6

பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி


walking girls

அன்ன நடை

விசுக், விசுக்கென துரித நடை

குதித்தோடும் அவசர நடை

அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை

முலை குலுங்கும் ஓட்ட நடை

தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை

செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை

ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை

கொட்டாவி விடும் பேரிளம் நடை

வாயால் மூச்சு விடும் பெருத்த நடை

நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை

பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்திதான்

இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது.



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Jan 11, 2010

கொத்து பரோட்டா –11/01/10

பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி

புத்தக சந்தை இனிதே முடிந்தது. இனி அடுத்த வருஷம் தான் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. அட்லீஸ்ட் ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சென்ற வருட சந்தையில் நிறைய எழுத்தாளர்களை சந்தித்து என்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்திருந்த நேரம். இந்த வருடம் அடுத்த கட்ட வளர்ச்சியாய் நிறைய பேர் என் பேரை சொன்னதுமோ, அல்லது பர்த்தவுடனேயே “என்ன கேபிள்.. எப்படி இருக்கீங்க..?” என்று குசலம் விசாரிக்கும் அளவுக்கு ஒரு நெருக்கத்தையும், எங்கு பார்த்தாலும், பதிவர்களை குழு குழுவாய் சந்தித்ததும், போனிலோ, மெயிலிலோ மட்டுமே அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்தித்ததும், நிறைய வாசகர்கள் மெல்ல அருகில வந்து “நீங்க கேபிள்தானே?” என்று கேட்டுவிட்டு அளவளாவியதும், தினம், தினம் பதிவுலக நண்பர்களை சந்தித்ததும் இந்த வருட புத்தக சந்தை கொடுத்த சந்தோஷம் எல்லாம் இந்த பதிவுலகுக்கே சமர்பணம்.
*************************************************************************************
செவிக்கினிமை
goa “கோவா” படப்பாடல்கள் வெளியாகிவிட்டது. கோவா டைட்டில் பாடல் நிச்சயம் ஹிட். அருமையான பெர்கூயூஷன்.”ஏழேழு தலைமுறைக்கும்” பாடல் பழைய இளையராஜாவின் கார்பன். கார்த்திக்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் குரலகளில் என்பதுகளின் இளமையான குரல் பழைய இளையராஜா, கங்கை அமரன் குரலில் கேட்ட சுகம். “வாலிபா வா..வா.. “ என்கிற பாடலை இளையராஜா, எஸ்.பி.பி, சித்ரா பாடியிருப்பது வெங்கட்பிரபுவின் கிண்டல் கலாட்டாவாக இருக்கும் உள்குத்து தெரிகிறது இதுவும் பழைய ராஜாவின் ரிமிக்ஸ்தான். பாடல் முழுவதும் கேட்ட போது பழைய இளையராஜாதான் தெரிகிறாரே தவிர யுவன் ஷங்கர் ராஜா தெரியவிலலை என்பது வருத்தமே.மற்ற பாடல்களும் பெரிதாக இம்பரஸ் செய்யவில்லை. முழுசாய் கேட்டு முடிக்கும் போது டைட்டில் பாடலான கோவாவும், ஆண்டிரியாவின் “இதுவரை” மட்டும் மனசில் நிற்கிறது.


*************************************************************************************
மீண்டும் ஒரு வருத்தம்
சமீபத்தில் ஒரு மொக்கை, கும்மி பதிவர் ஒருவர்,பதிவுலகிலிருந்து சில பேருடய கவிதைகள், கதைகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தக கண்காட்சிக்கு வெளியிடப்பட்டிருக்கும் புத்தகங்களை பற்றி, மொக்கை பதிவர்கள் எழுதி வெளியாகியிருக்கும் நூல் என்று பாராட்டியிருக்கிறார் இந்த சாகித்ய அகாதமி, புலிட்சர், புக்கர் விருது பெற்ற பதிவுலக எழுத்தாளர், அவருக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். புத்தகம் கண்காட்சியில் கிடைக்கிறது. எழுதி பேர் வாங்கி அடுத்த கட்டத்திற்கு நகரும் பதிவுலக ஆட்கள் இருக்குமிடத்தில் சர்ச்சை ஏற்படுத்தி பெயரை நிறுத்தி கொள்ள விரும்பும், பதிவுலகிலிருந்து இன்னமும் எழுதி பழகிக் கொண்டு, இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கும் இவர் மொக்கை பதிவுலகத்திலிருந்து வெளியேறி இலக்கியவியாதியாக சாரி வாதியாக எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்.
*************************************************************************************
குறும்படம்
மிடில் ஈஸ்ட் பார்டரில் இருக்கும் பிரச்சனையை மிக குறுகிய நேரத்தில்,ஒரு டிரான்ஸிஸ்டரையும், அதில் வரும் புட்பால் கமெண்டரியையும் வைத்து மிக அழகாக திரைக்கதை அமைத்து வந்திருக்கும் படம்.

************************************************************************************

ஏஜோக்
ஜாக்கும் ஜேனும் ஒருவரை ஒரு வெறி கொண்டு காதலிக்க, ஒரு நாள் ஆபீஸ் வேர் ஹவுசில் தனியாய் நேரம் கிடைக்க, காஞ்ச மாடு கம்பில் பாய்ந்தார் போல் அவள் மீது பாய்ந்தான் ஜாக். அவளுள் நுழைவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட ஜாக் ஒரு வழியா வேலைய முடித்துவிட்டு “ நீ ஒரு கன்னிகழியாத பெண் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துருப்பேன்” என்றான். “உனக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் என் பேண்டீசை அவிழ்த்திருப்பேன்” என்றாள் ஜேன்

***************************************************************************************

சந்தோஷ செய்தி
வருகிற 11.01.2010 முதல் 16.01.2010 வரை தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை சென்னை சங்கமம் விழாவின் ஒரு அங்கமாய் குறும்படம் மற்றும் ஆவணப்பட விழாவை மெரினாவில் அண்ணா சமாதிக்கு எதிரே லேடி வெலிங்டன் என்கிற இடத்தில் தொடர்ந்து திரையிடுகிறார்கள். திரையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம். குறும்பட, ஆவணப்பட ரசிகர்கள் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள். இதில் என்னுடய குறும்படமான “விபத்து” திரையிட தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
**************************************************************************************
சாப்பாட்டுக்கடை
Image0400 Image0401
பூந்தமல்லி ஹைரோடில் முரளிகிருஷணா திருப்பத்தை தாண்டியவுடன், இடதுபக்கமாய் நடந்தால் குட்டியாய் ஒரு நுழைவாயில் இருக்கும். உள்ளே போனால் ஒரு பழங்கால வீட்டை உணவகமாய் மாற்றியிருப்பார்கள். அதுதான் ஆற்காடு மெஸ். மிக சுவையான இட்லி, தோசை, சிக்கன், பரோட்டா, என்று அதிர வைக்கும் சுவையோடு ஞாயமான விலையில் அளிக்கிறார்கள். இவர்களின் ஸ்பெஷாலிடி ஞாயிறு மதிய சாப்பாட்டுடனான கருவாட்டு குழம்பாம். மதிய சாப்பாடு மிக அருமையாய் இருக்கும் என்று சாப்பிட்டவர்கள் சொல்கிறார்கள். நேற்று இரவு இட்லி, ஆனியன் தோசை, பரோட்டா, எரா, சிக்கன் மசாலா, என்று எல்லாமே சும்மா அதிராடிக்கும் சுவை. அவர்கள் கொடுக்கும் கிரேவியும், வெஜிட்டேரியனுக்கு கொடுக்கும் காரக் குழம்பும் ம்ம்ம்ம்ம்ம்.. வெகு காலமாய் இந்த ஏரியாவில் சுவைபட தந்துக கொண்டிருக்கிறார் இந்த கதர் சட்டைக்காரர். இந்த கடையில் சிறப்பே முதலாளியே ஒவ்வொரு டேபிளிலும், வந்து கஸ்டமர்களை கவனித்து பரமாரச் சொல்வதுதான். நிச்சயம் நல்ல சுவையான இரவு டிபன், மற்றும் மதிய சாப்பாட்டிற்கு.. நம்பி போகலாம். ஆற்காடு மெஸ்.
**************************************************************************************
என்ன கொடுமை இது?


திருநெல்வேலியில் ரவுடிகளால் வெடி குண்டு வீசப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கிடந்த சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் உதவிக் குரலுக்கு செவி சாய்க்காமல், வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கும் நம் மக்கள், அவங்களை விடுங்க.. அந்த சமயத்தில் அங்கு வந்து இரண்டு அமைச்சர்கள், கலக்டரின் கார்கள் இருந்து உயிருக்கும் போராடும் அவரை காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கும் காட்சி காட்சி மிக கொடுமை. அதிக ரத்த வெளியீட்டால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நின்று பார்க்கும் நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து போயிருந்தால், இன்று அவரின் குடும்பம் அநாதரவாய் நிற்காது.
*************************************************************************************




தமிலிஷிலேயும், தமிழ் மணத்திலேயும் குத்துங்க எசமான்..குத்துங்க

Jan 10, 2010

பதிவர் சந்திப்பு படங்கள்

பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி

Image0389 காவல் கோட்டம் நாவல் பிளக்ஸ் விளம்பரம்

Image0390புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலின் வெளிப்புறம்

Image0391

பப்ளிஷர் வாசுதேவன் வெளிநாட்டு அழகிகளுடன்

Image0395கோவை பதிவர் சர்ப்பூதீன், அவிங்க ராஜா, சங்கர்

Image0394பதிவர் அ.மு.செய்யதும் நானும்

Image0397பப்ளிஷர் வாசுதேவனும், பப்ளிஷர் குகனும்

Image0398

ரோமிபாய், பப்ளிஷர் வாசு, காவேரி கணேஷ், பப்ளிஷர் குகன், கார்க்கி
Image0399காவேரி கணேஷ், பப்ளீஷர் குகன், தண்டோரா



தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க