Thottal Thodarum

Jun 29, 2011

பதிவாயிரம் -1000

பாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்)  ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.

ரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.

  Double Sheet 1 ”அரும்பு மீசை குறும்பு பார்வை”. தயாரிப்பாளர் முதற் கொண்டு இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் நடிக, நடிகைகள் அனைவருமே புதிய்வர்கள் தாம். ஏற்கனவே சென்னை முழுவதும் வித்யாசமான விளம்பர யுக்தியால் மக்களை பேச வைத்தவர்கள். இப்போது வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் உங்களின் அபிமான திரையரங்குகளில் வெளிவருகிறார்கள். பிரத்யோக காட்சி பார்வையிட்டவர்கள் படத்தை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குறிப்பாக ஒருவரை பாராட்டுகிறார்கள். அது வேறு யாரையும் இல்லை. படத்தில் வார்டன் கேரக்டரில் முதல் முதலாக அறிமுகமாகியிருக்கும் திரு. மோகன் பாலுவைத்தான். ஐம்பது வயதான இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமவில் ஒரு இடமுண்டு என்றும் சொல்கிறார்கள். வாழ்த்துக்கள் 
எஸ்.கே

Jun 27, 2011

கொத்து பரோட்டா-27/06/11

டீசல், கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டது மத்திய அரசு. அந்த அறிவிப்பு எப்போது வந்ததோ அப்போதிலிருந்து, திமுக தலைவர் வரியை குறையுங்கள், இந்த வரியை குறையுங்கள், நான் என் ஆட்சியில் அப்படித்தான் செய்தேன். என்று அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது சரிதான் என்றாலும், அய்யா போட்ட எந்த சட்டத்தையும், அய்யா ஆட்சியில் செய்த எதையும் தான் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கும் அம்மா இதைக் கேட்பார்களா?. தலைவர் தெரிஞ்சுதான் சொல்றாரோ..?
##################################################
இனி தமிழ் சினிமாவின் பெயர்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பிக்கலாம். ஏனென்றால் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற சட்டத்தை அமல் படுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் கமிட்டி சமீப காலமாய் கூடுவதேயில்லை. அதனால் வரி விலக்கு லெட்டர் இல்லாத தமிழ் படங்களுக்கு, வரி வசூலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இனி தமிழிலேயே அர்த்தம் சொல்லி புரிய வைக்கக்கூடிய பெயர்கள் இல்லாமல் தமிழ் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். வாழ்க மம்மி.
#############################
பிரபல எழுத்தாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய கட்டுரைகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன்னை ஒரு ப்ளேபாய் என்று சொல்லிக் கொள்வதில் ஆர்வமிருப்பவருக்கு இது அல்வா என்று தோன்றுகிறது. ஆனால் அந்த சேட்டிங் கண்டெண்ட்டை படித்து பார்த்தால் யாரோ வேண்டுமென்றே.. தூண்டிவிட்டு பேச வைத்தது போல் இருக்கிறது. அவர் அப்படி பட்டவரா? இல்லையா? என்று சப்போர்ட் செய்யவதற்காக சொல்லவில்லை. எந்த ஒரு ஆணாவது இப்படி தங்களுக்கு பிடிக்காத முறையில் பேசினால் அடுத்த நாளிலிருந்து  பேசாமல் இக்னோர் செய்வதை விட்டுவிட்டு, இப்படி தொடர்ந்து  பேசினால் என்ன நினைப்பான் அந்தப் பக்கம் இருக்கும் ஆண்? இந்த விஷயத்தில் இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது. ஸோ.. கட்டுரை எழுதினால் அப்பெண்ணைப் பற்றியும் தான் எழுத வேண்டும். ஆம்பளைக்கு பொம்பளையும், பொம்பளைக்கு ஆம்பளையும் இடம் கொடுக்காம தப்பு நடக்கவே நடக்காது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வருகிற ஜூலை 1ஆம் தேதி நான் நிர்வாகத் தயாரிப்பாளராய் பணியாற்றி வரும் “அரும்பு மீசை குறும்பு பார்வை” படம் வெளி வருகிறது.  முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சீரியஸ் சப்ஜெக்ட்டை ஜாலியாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். விரைவில் நம் பதிவர்களுக்கான அழைப்பு அறிவிக்கப்படும்.
###############################
சென்ற வாரம் டிசி மேனர் கரோக்கேவில் “எங்கேயும் காதல்” பாடலை பாடிக் கொண்டிருந்தேன். கடைசி பாடல். மேடையின் ஓரத்தின் இருளில் நின்றபடி, கண் மூடி பாடிக் கொண்டிருக்க, கண் திறந்து பார்த்தால் நிறைய இளைஞர், இளைஞிகள். பாட்டு முடியவும், கரோக்கேவின் டைம் முடிந்து லைட் போடவும் சரியாக இருக்க, என்னை பார்த்த இளைஞர்களின் முகத்தில் ஆச்சர்யம்.  “நான் யாரோ எங்கள் வயது ஆள் பாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். அமேசிங் என்று பாராட்டினார்கள். பெயர் கேட்டார்கள். ”யூத்” என்றேன் நான்.:))
##################################
படித்ததில் பிடித்தது.
பட வேலைகள் காரணமாய் படிக்க நேரம் கிடைக்கவில்லை. இருந்தும் தூங்குவதற்கு முன் கிடைத்த இடைவெளியில் படிக்க ஆரம்பித்திருக்கும் புத்தகம் “சீனா விலகும் திரை” பல்லவி ஐயர் எழுதிய புத்தகத்தின் தமிழ் பதிப்பு. ஆங்கிலத்தில் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. தமிழில் அட்டகாசம். நன்றி ராமன் ராஜா. படு சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன்.
################################
இனி வரும் காலங்களில் சன், ரெட்ஜெயண்ட், க்ளவுட் நைன் பெயர்கள் தயாரிப்பில் இருக்கும் படங்களைத் தவிர அவர்கள் பெயரில் ப்டங்கள் வராது என்று தெரிகிறது. ஆட்டம் தேவையேயில்லை என்று தலைவர் கூப்பிட்டு சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள். சொன்னதின் இம்பாக்ட் தான் வேங்கையிலிருந்து சன்னின் விலகல் என்கிறார்கள்.
################################
தத்துவம்
மாற்றம் தான் வாழ்கையின் நிதர்சனம். சவால் வாழ்க்கையின் குறிக்கோள். எனவே மாற்றத்தை சவலோடு எதிர் கொள்ளூங்கள்.

நாம் எப்போது என்ன நடந்தது என்று யோசிப்பதை விட, இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே வெற்றிக்கான வழி.
###################################
ப்ளாஷ்பேக்
உத்தமப்புத்திரன். புதிய படமில்லை, சிவாஜி நடித்த பழைய படம். இப்படமும், பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.  மேன் வித் எ அயர்ன் மாஸ்க் என்ற அந்த ஆங்கில படத்தின் மூலத்திலிருந்து,முதலில் பி.யு.சின்னப்பா என்று நினைக்கிறேன். அவர் நடித்து வெளிவந்தது. அடுத்து அதே ப்டத்திற்கு இயக்குனர் ஸ்ரீதரின் திரைக்கதையில் , நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம். அதில் வரும் ‘யாரடி நீ மோகினி” அந்நாளைய ராக் அண்ட் ரோல். பாடலும் அதை பாடிய டி.எம்.எஸும், துள்ளாட்டம் போட்டிருப்பார்கள். பாடலுக்கு நடனம் அமைத்திருக்கும் விதமும் அட்டகாசமாய் இருக்கும்.
####################################
மை கார்னர்
கோலங்கள் சீரியலில் நடித்த காட்சி. தமிழ் சினிமாவில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையோடு வருபவர்களை, ஏ.வி.எம் எட்டாவது ப்ளோரில் இருக்கும் இந்த கோர்ட்டு செட்டுக்குள், நல்ல ஏப்ரல் மாத வெய்யிலில் கோட்டைக் கழட்டக்கூடாது என்று சொல்லி, உள்ளேயே இருக்க வேண்டும் வெளியே போகக்கூடாது என்று சொல்லிவிட்டால் போதும். ஜென்மத்திற்கும் திருமப் மாட்டார்.:)
#####################################
அடல்ட் கார்னர்
கோபமாய் வீட்டிற்குள் வந்த புருஷனை பார்த்து 'ஏன் ரொம்ப கோபமா இருக்கீங்க?' என்று கேட்டாள்.

புருஷன்: 'நம்ம அப்பார்ட்மென்ட் வாட்ச்மேன் சொல்றான், இந்த அப்பார்ட்மென்ட்டுல இருக்கிற எல்லாருடய பொண்டாட்டியையும் மேட்டர் பண்ணிட்டானாம். ஒரே ஒருத்தியை தவிர..கேட்டதும் செம கோபம் வந்துடுச்சி.. என்ன ஜென்மம் அவன்?' என்றான்.

பொண்டாட்டி, 'எனக்கு அது யாருன்னு தெரியும்ங்க, நம்ம எதிர் வீட்டு பேங்க் மேனேஜர் பொண்டாட்டியா தான் இருக்கும்..'
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Jun 26, 2011

180 -நூற்றென்பது

180-film-028 விளம்பர உலகில் பிரபலமான ஜெயேந்திரா இயக்கியுள்ள முதல் படம். அருமையான பாடல்களும், ட்ரைலர்களும் கிளப்ப வேண்டிய ஆர்வத்தை சினிமா ஆர்வலர்களிடம் ஏற்றிவிட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இலலையா? என்று பார்ப்போம்.

Jun 25, 2011

கள்ளக்காதல்.

ஒவ்வொரு நாளும் தமிழ் தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்த்தால் வயிறு கலங்கித்தான் போகிறது. முக்கியமாய் கொலைகள் பற்றிய செய்திகளை படித்தால் இன்னும் கலங்கித்தான் போகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல். ஏதோ நாடு முழுக்கவும் கள்ளக் காதல் ப்ரச்சனைதான் முதலில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதிலும் தமிழ் தினசரிகளில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றால் உடனே கள்ளக்காதல் ப்ரச்சனையாக இருக்குமோ என்று ஒரு கேள்வி எழுப்பிவிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு மேற்கு மாம்பலத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். போலீஸார் பல விதங்களில் துருவித் துருவி விசாரணை செய்தும் கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினத்தந்தியோ.. கொலை நடந்த நாள் முதல் கள்ளக்காதல் ப்ரச்சனை, போனில் பேசினார்கள். தொடர்ந்து தொடர்பிலிருந்தார்கள். என்று மக்களுக்கு பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

Jun 24, 2011

சாப்பாட்டுக்கடை- திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்

பிரியாணி பிரியர்களுக்கு,மொஹல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, தம் பிரியாணி என்று  பலவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும், சமீப காலமாய் சென்னையில் சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தலப்பாக்கட்டு பிரியாணி பிரபலமாகிக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். தலைப்பாக்கட்டு பிரியாணியை போலவே ஏன் அதைவிட கொஞ்சம் நன்றாகவே இருக்கும் பிரியாணி சென்னையில் கிடைக்கிறது. அது நார்த் உஸ்மான் ரோடில் உள்ள திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்ல் தான்.

Jun 23, 2011

வேங்கையிலிருந்து சன் விலகியதா?

வருகிற ஏழாம் தேதி தனுஷ் நடித்து, ஹரி இயக்கத்தில் வெளிவர இருந்த வேங்கை திரைப்பட வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, வெளியிடப்படப் போவதாய் விளம்பரம் வந்தது. ஆனால் கடந்த ரெண்டு நாட்களாய் சன் பிக்சர்ஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றார் போல பதினைந்து நாளுக்கு முன்பே தொடர் விளம்பரங்களை ஆரம்பித்துவிடும் சன் டிவி. இன்னும் விளம்பரங்களை ஆரம்பிக்காத போது செய்தி உண்மையோ என்றும் தோன்றுகிறது.
எஸ்.கே

Jun 22, 2011

தமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா?- சினிமா வியாபாரம்.

தமிழ் சினிமா செத்துக் கொண்டிருக்கிறது என்று சினிமாவில் உள்ள பல பெரிய தலைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான புலம்பல்கள் ஒவ்வொரு ஆட்சியின் ஆரம்பத்திலும் எழுவதுதான் என்றாலும் இம்முறை கொஞ்சம் கூக்குரல் அதிகமாகவே இருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர், தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கே.ஆர், கே.ஆர்.ஜி, தனஞ்செயன், ஆர்.கே.செல்வமணி,  ராஜேந்தர் ஆகியோர் பேசினார்கள். கே.ஆர். தமிழ் சினிமாவிற்கான வரி விலக்கு எடுக்கப்படக்கூடாது என்றும், இரண்டு க்ரவுண்டில் இருநூறு இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அமைப்பதற்கு சட்ட திட்டங்களை இலகுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். யுடிவி தனஞ்செயனோ.. சிறு முதலீட்டுப் படங்களை தயாரிப்பது ஒன்றும் பெரியதல்ல, ஆனால் அதை சந்தைப்படுத்துவதில் தான் சிக்கலே. குறைந்த பட்சம் ஒன்னரை கோடி விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்குக்கு இல்லாமல் படம் தயாரிக்கவே வரக்கூடாது என்றும் கூறினார். அவர் கூறியதும் முக்கியமான விஷயம்தான். டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியால் படம் தயாரிப்பது கூட சுலபம். ஆனால் அதை சந்தைப்படுத்துதல் அவ்வள்வு எளிதல்ல. (விரிவாக தெரிய சினிமா வியாபாரம் படிக்கவும் :)) விளம்பரம்)

Jun 21, 2011

நான்.. ஷர்மி.. வைரம்-4

Alone_in_illusion__by_Eyliphca
ஷர்மி
காரும், ஏஸியும் பழகிப் போய் தனிமை உறைக்க ஆரம்பித்து, கார் ஜன்னல் திறந்து வெற்றுப் பார்வையாய் நிலைத்தது ஏன் என்று புரியாமல் போனது. அப்பா என்னிடமிருந்து தூரமாய் போய்க் கொண்டேயிருந்தார். டிவிஎஸ் 50யில் ராத்திரி எனக்காக சீக்கிரம் வந்து வண்டியோட்டும் அப்பாவை காணமுடிவதில்லை. அம்மாவும் பிஸியாக இருந்தாள். நிதம் ராத்திரி வாடையோடு தூக்கக் கலக்கத்தில் கிடைக்கும் இருவரது முத்தம் மட்டுமே நிரந்தரமாயிருந்த நேரத்தில், ஆயாவும், கார் டிரைவரும் துணையாகி போனது கொஞ்சம் கொடுமையாகவே இருந்தது.

Jun 20, 2011

கொத்து பரோட்டா-20/06/11

நம் வாசகர்கள் மிக மென்மையானவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். என் கருத்து என்று ஒரு விஷயத்தை சொன்னால் உடனே உன்னால் செய்ய முடியுமா? என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு பாவமாகத்தான் உள்ளது. எல்லாவற்றையும் ஒருவர் விமர்சிக்க வேண்டுமென்றால் அதை அவர்கள் செய்து காட்டினால் தான் ஒத்துக் கொள்வேன் என்பது எவ்வளவு பெரிய  காமெடியான விஷயம் என்று கூட அவர்களுக்கு புரியவதில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தோஷம் இவ்வளவு பேரும் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று பார்க்க தினம் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. என் வேலையை நான் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று இதை உணர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இன்னொருவர் அங்கேயே வெட்டுவோம் என்று பின்னூட்டம் போடுகிறார். தன் சொந்த பெயரையே போட தைரியமில்லாதவர். நடுவில் ஒருவர் யோவான் சொல்கிறார் என்கிற ரீதியில் கிறிஸ்துவ போதனைகளை வேறு விட்டுச் செல்கிறார். சில பேர் நீ என்ன அப்பா டக்கரா ? என்று கேட்பார்கள். அப்பா டக்கர் யார் என்று தெரியாமலேயே..
############################

Jun 19, 2011

குறும்படம் - துரு

நாளைய இயக்குனர் முதலாவது சீசனில் வெற்றிப் பெற்றவர்களுள் ஒருவரான கார்த்திக் சுப்பாராஜின் குறும்படம். இவரது கதைகளில் இருக்கும் இயல்பான நகைச்சுவையும், மேக்கிங்கும் எனக்கு மிகவும் பிடிக்கும். இக்கதையின் முடிவு இயல்புத்தன்மையை மீறிய கொஞ்சம் பேண்டஸியான ட்விஸ்ட் என்றாலும் நடக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கிற காரணத்தை ஒத்தி வைக்க முடியாது. அருமையான நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கத்தில் வந்த படம். உங்கள் பார்வைக்கு.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Jun 17, 2011

சாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.

12 சில சாப்பாட்டுக்கடைகள் பெரியதாய் இருக்கும். ஏசி, சோபா செட்டுகள் என்று அட்டகாசமாய் தூள் பரத்தியிருப்பார்கள். ஆனால் உணவு வாயில் வைக்க வழங்காது. ஆனால் அதே சின்னக் கடையில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருக்கும். ஆனால் உணவின் சுவையோ அட்டகாசமாய் இருக்கும். அப்படியொரு உணவகம்தான் இந்த பூர்ணா உணவகம்.

Jun 16, 2011

அன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி

nigama_061511-1 நாம் தனி மனிதனாய் எதாவது ஒரு விஷயத்தை செய்தியாக்கவோ, அல்லது அதை பூதாகாரமாய் ஊதி ப்ரச்சனையாக்கவோ முடியுமா? நிச்சயம் முடியாது. இன்றைய கட்டத்தில் அதற்கு செய்தி ஊடகங்களின் ஆதரவில்லாமல் எதுவும் செய்ய முடியாது. சரி செய்தி ஊடகங்கள்தான் அதைச் சரியாக செய்கிறதா? என்றால் அதுவும் பெரிய கேள்விக்குறிதான்.  மற்ற மாநிலங்களில் எல்லாம் கூட பரவாயில்லை. நம் தமிழ் நாட்டு ஊடகங்களில் இரண்டே வகைதான். ஒன்று ஆளும்கட்சி ஆதரவு இன்னொன்று எதிர்ப்பு. இதிலே எதிலும் சேர்த்தியில்லாமல் நடுநிலை என்று முழங்கிக் கொண்டிருக்கும் சில ஊடகங்களை லிஸ்டில் வைத்துக் கொள்ள முடியாது. மீடியா நினைத்தால் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களின் மனதில் பிரளையங்களை ஏற்படுத்த முடியும். உதாரணம் சன் டிவியில் வளர்ப்பு மகன் திருமணத்தைக் காட்டியே ஆட்சியை பிடித்ததும், அவர்கள் கொடுத்த டிவியிலேயே 2ஜி மேட்டர் நாறிப் போய் தோற்றதையுமே சொல்லலாம். ஆனாலும் தமிழில் சொல்லிக் கொள்கிறார்ப் போல டெம்ப்ளேட் செய்திகளைத் அளிக்காமல், நிஜமான தமிழனின் ப்ரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் சேனல்களோ, பத்திரிக்கைகளோ வெகுவாக இலலை என்பது வருத்தத்துகுரிய விஷயமே. ஆனால் இக்கட்டுரை தமிழக செய்தி ஊடகங்களை பற்றியதல்ல. இந்திய அளவிலான ஊடகங்களைப் பற்றி.

Jun 15, 2011

ரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு

DSC_0761"மல்லுக்கட்டு" த பிலிம் கம்பெனி வழங்கும் புதிய படம். இப்படத்தின் மூலம் புதிய இயக்குனராக  விக்ரமன் அவர்களின் உதவியாளராய் பணியாற்றிய முருகானந்தம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகின் புதிய நாயகனாய் அறிமுகமாகிறார் வருண்.  கதாநாயகி ஹனிரோஸ். இவர் ஏற்கனவே சிங்கம்புலி படத்தில் நடித்துள்ளார். பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ்நூர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகிறது.  பி.கு வருண் தனுஷின் தம்பியாவார். 
எஸ்.கே

Jun 14, 2011

Shaitan -மனித மனங்களின் சைத்தான்.

shaitan-wallpaper-02 இந்த வாரம் என்னவென்றே தெரியவில்லை. மிக அருமையான படங்கள் வெளியாகி அசத்துகிறது. ஒரு பக்கம் தமிழில் ஆரண்ய காண்டம் என்றால் இந்தியில் இந்த ஷைத்தான். மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களும் கொஞ்சம் டார்க் வகைகளாக இருந்தாலும் இரண்டுமே அதனதன் தகுதிகளில் மைண்ட் ப்ளோயிங் என்று தான் சொலல் வேண்டும்.

Jun 13, 2011

கொத்து பரோட்டா-13/06/11

வைகோவின் தயாரிப்பில் நடந்த வீரத்தாய் வேலு நாச்சியார் வரலாற்று நடன நாடகம் பார்க்க அழைத்திருந்தார் அதன் இயக்குனர் ஸ்ரீராம் சர்மா. எனக்கு நடனம் பற்றி, அதிலும் பாரம்பரிய பரதநாட்டியம் பற்றி எதுவும் தெரியாது. பெரிய ஆர்வமில்லாமல் தான் போனேன். வெள்ளையனை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி யார்? என்ற கேள்வியை கேட்டால், பெருவாரியான மக்கள் ஜான்ஸி ராணியைத் தான் சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1835ல் தான் ஜான்ஸி ராணி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்னமே சிவகங்கையின் வேலு நாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போராடி அவர்களை ஓட, ஓட விரட்டினார். ஆனால் இது மறைக்கப்பட்ட வரலாறு. அதை எடுத்துச் சொல்லும் விதமாய், மிக சுவாரஸ்யமாய் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை நம் கண் முன் ஓடியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினார்கள் இக்குழுவினர். முக்கியமாய் இந்நாடகத்தின் இசை. முழுக்க, முழுக்க கர்நாடக இசையை மட்டுமே வைத்து பாடப்பட்ட, நாட்டிய நாடகமாய் இல்லாமல், பாமரர்களுக்கும் போய் சேரும் விதமாய், எளிமையாய் இசையமைத்து, பாடல்களின் மூலம் கதை சொன்ன விதம் அட்டகாசம். வேலு நாச்சியாராக பாத்திரமேற்று நடனமாடிய செளம்ய குரு  மணிமேகலை சர்மா தன் நடனத்தினாலும், பாடிலேங்குவேஜுனாலும் நம் கண் முன் வேலு நாச்சியாரை நிறுத்தினார். வேலு நாச்சியார் என்றொரு கேரக்டரை இந்த நடன நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு, நாச்சியாரின் நிஜ படத்தை காட்டினால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தின் முதல் கொரில்லா படை, முதல் பெண்கள் போர்படை, முதல் தற்கொலைப் படை போன்றவற்றை அமைத்தவர் வேலு நாச்சியார் என்பது போன்ற பல நுணுக்கமான விஷயங்களை ஆய்ந்து சொல்லியிருக்கிறார். முக்கியமாய் அந்த தற்கொலைப் படைப் பெண் தன் கடமைக்கு  செல்லும் முன் நடக்கும் நிகழ்வுகளை தன் நடனத்தின் மூலம் கொடுத்த இம்பாக்ட் அட..அட.. அட.. அருமை. ஆடிய 60 நடன கலைஞர்களுக்கு பாராட்ட வேண்டும். மேடை நிகழ்வு என்பது எவ்வளவு பெரிய விஷயம், எவ்வளவு மெனக்கெடல், உழைப்பு என்பதை தெரிந்தவர்களுக்கு இந்நிகழ்வில் இருக்கும் சிறுசிறு குறைகள் தெரியாது. வாழ்த்துக்கள் வைகோ, ஸ்ரீராம் சர்மா ஒரு அருமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியை அளித்தற்க்காக..
###############################

Jun 12, 2011

குறும்படம் - Error

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குறும்படம். சமீபத்திய ஐந்து நிமிட பரபரப்பு குறும்படங்களை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் மெதுவாக போவதாய் இருக்கும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் நல்ல மேக்கிங்கில் வந்த படம். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கியவர் ஆர்.பிரகாஷ்.  கொஞ்சம் ப்ளாக் வகையை சேர்ந்தது என்றாலும், இன்று பார்க்கும் போதும், எடிட்டிங்கில் கொஞ்சம் செதுக்கினால் இன்றும் சுவாரஸ்யமான படமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Jun 11, 2011

ஆரண்ய காண்டம்.

 aranya- kandam- Movie- Stills-005
”தர்மம் எது?”

”எது தேவையோ அதுவே தர்மம்.”

இந்த இரண்டு வரிகள்தான் இப்படத்தின் கதை. ஆங்கிலத்தில் வேண்டுமானால் சர்வைவல் த பிட்டஸ்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆங்கில ஹாலிவுட் படங்களை பார்த்து அரைகுறையாய் சூடுப் போட்டுக் கொள்பவர்கள் நிறைய பேர். ஆனால் அதே குவாலிட்டியில் ஒரு படத்தை. அதுவும் குவாண்டின் டொரண்டினோவின் பாணியில் அச்சு அசலாய் ஒரு ப்ளாக் படத்தை கொடுக்க முடியுமா? அதுவும் தமிழில். இதோ.. உங்களுக்காக ஆரண்ய காண்டம்.
aranya- kandam- Movie- Stills-006 கதை என்று பார்த்தால் வழக்கமான கேங்ஸ்டர்களுக்குள்ளான ப்ரச்சனைதான். ஆனால் ஒரு நாளில் இம்மாதிரி மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் தான் சுவாரஸ்யம். லோக்கல் தாதாவான அய்யா ஜாக்கி ஷாராப்பிடம் வேலைப் பார்க்கும் பசுபதி, எதிர்க் கோஷ்டியான கஜேந்திரனிடமிருந்து டபுள் க்ராஸ் செய்து சரக்கை அடிக்க நினைக்க, அதில் மிகச் சாதாரண மனிதர்கள் எல்லாம் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதில் வரும் சிக்கல்களும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதான தாதா, சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று கூட்டி வந்து கூத்தியாளாக வைத்துக் கொண்டிருக்கும் சுப்புவிடம் உடலுறவில் முடியாமல் போகும் காட்சியும், தன் இயலாமையை மறைக்க, அவளை அடிக்க.. சுப்பு “உன்னால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கிறே?” என்று அழும் காட்சியில் ஆரம்பிக்கும் ஆச்சர்யங்கள் படம் நெடுக தொடர்கிறது.
aranya- kandam- Movie- Stills-007 பசுபதியாய் சம்பத். மனிதர் வரவர கலக்கிக் கொண்டிருக்கிறார். மிக இயல்பான பாடிலேங்வேஜ். பல இடங்களில் கண்களில் தெரியும் சிறு சிறு மாற்றங்களில் பல உணர்வுகளை கொண்டு வருகிறார்.

சுப்புவாக யாசின் பொன்னப்பா.. ஆரம்பத்தில் பார்க்கும் போது பரிதாபப்பட வைக்கிறார். சுப்புவுக்கும் சப்பைக்குமான திடீர் காதலும், காமமும் அதிர்ச்சியென்றால் பின்னால் நடக்கும் காட்சிகள் அட போட வைக்கின்றன.
சப்பையாக ரவிக்கிருஷ்ணா. மிகச் சரியான கேரக்டர் அவருக்கு. இவரின் கேரக்டரை பற்றிச் சொன்னால்.. சுவாரஸ்யம் போய்விடும். கிராமத்திலிருந்து கடனுக்கு பயந்து சேவல் சண்டையில் ஜெயிக்க வரும் வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரும், அவரது ஸ்மார்ட் பையனும் சரியான கேரக்டர்கள். எதிர்பார்ட்டியான கஜேந்திரன், அவனின் தம்பி, அய்யா டீமில் வரும் ஆண்டிகளைப் மேட்டர் செய்யும் இளைஞன். என்று பார்த்து பார்த்து ஆட்களை பொறுக்கியிருக்கிறார்கள். கேஸ்டிங் என்றால் மிக சரியான கேஸ்டிங்.
aranya- kandam- Movie- Stills-008
படம் நெடுக படு சுவாரஸ்யமான ஆனால் பல இடங்களில் நெத்தியிலடிக்கும் வசனங்கள். “உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?” என்று சம்பத் கேட்க, “இல்ல. ஆனா அவரு என் அப்பா”, “என்னைப் பொறுத்தவரைக்கு ஆம்பளங்க எல்லாருமே சப்பைதான்”.  ஏற்கனவே செத்து போனவனைப் பார்த்து “நீ மட்டும் என்கிட்ட உயிரோட மாட்டியிருந்த உன்னை கொன்னுருப்பேன்” படம் நெடுக சட்டிலான ஒரு ஹூயூமர் படு சீரியஸாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்திற்கு மிகப் பெரிய பலம் யுவனின் பின்னணியிசையும்,  வினோத்தின்
ஒளிப்பதிவும். இரண்டு பேரும் இயக்குனருக்கு இரு கண்களாய் அமைந்திருக்கிறார்கள். படத்தின் டைட்டில் காட்சியிலிருந்து பெரும்பாலான காட்சிகள் அமைதியாகவேயிருக்க, அதை மீறி பின்னணியிசை வரும் காட்சிகளில் எல்லாம் இதுநாள் வரை அம்மாதிரி காட்சிகளுக்கு கேட்டு பழக்கமான இசையில்லாமல், வருடும், வயலின் கிடார், போன்ற ஸ்டிரிங் இன்ஸ்ட்ரூமெண்டுகளை வைத்து கலக்கியிருக்கிறார் யுவன். வினோத்தின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான அத்துனை இம்பாக்டையும் ஒரு சேர கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் ஷாட்டிலிருந்து. ஒரு சில ஆங்கிள்கள் ரசிக்க வைக்கிறது. P.L. ஸ்ரீகாந்தின் எடிட்டிங் அருமை. அதே போல் ஆக்‌ஷன் கொரியோகிராபி. கவிதையாய் ரசித்து செய்திருக்கிறார்கள்.
aranya- kandam- Movie- Stills-009 எழுதி இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படமாம் இவருக்கு. யார் சொன்னாலும் நம்ப முடியாது. அத்துனை டீடெயிலிங், பர்பெக்‌ஷன் படம் முழுவதும். ஆரம்பக் காட்சிகளில் கேரக்டர்களை அறிமுகப் படுத்தும் போது செட்டிலாவதற்கு கொஞ்சமே கொஞ்சம் டைம் எடுத்துக் கொள்கிறார். அதன் பின்னால் சும்மா அடி தூள்தான். அருமைனான திரைக்கதை, ஆப்டான இண்டெலிஜெண்டான வசனங்கள். வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளிடையே பேசும் நகைச்சுவைகள். என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறார்.  புழுவை மீன் சாப்புடுது, மீனை மனுஷன் சாப்புடுறான் என்பது போன்ற வாழ்க்கையின் ஆதாரத்தை மிகச் சுலபாய் சொல்கிறார். கஜேந்திரன் கேரக்டரைப் பற்றி பசுபதி பில்டப் செய்கிறான். கஜேந்திரன் கோபம் வந்தால் கட்டை விரலை கடித்து துப்பிவிடுவான் என்று சொல்லிவிட்டு போகும் காட்சியில் ஒரு பெண்மணியின் கட்டைவிரல் இல்லாத கை சில்ஹவுட்டில் வருவது. க்ளைமாக்ஸ் பின்னி மில் சண்டைக் காட்சியும், அதை படமாக்கியிருக்கும் விதமும் அட..அட.. அட்டகாசம்.  இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சொல்லலாம். நீங்கள் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாம போய்விடும்.  படத்தில் குறைகளேயில்லையா என்று கேட்டால் பெரிதாய் தெரியவிலலை என்றுதான் சொல்ல வேண்டும். அதையும் மீறி குறை என்று சொன்னால் இம்மாதிரியான வித்யாசமான மேக்கிங் சாதாரண திரைப்பட ரசிகனுக்கு கொஞ்சமே கொஞ்ச நேரம் மெதுவாக செல்வது போல் தோன்றலாம். கிராண்ட் ப்ரிக்ஸ் அவார்ட் வாங்கியதில் ஆச்சர்யமேயில்லை.
ஆரண்ய காண்டம் -  A Must Watch.. Intelligent  Gangster Flick.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Jun 10, 2011

என்ன பாட்டு பாட?


பாடுவது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அது கேட்பவர்களுக்கு எப்படி என்று நான் பாடிக் கேட்டவர்கள் தான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் கீதம் வரை  கொஞ்சமே கொஞ்சம் கர்நாடக சங்கீதம் கற்று கொண்டதைத் தவிர பெரிய சங்கீத புலமை கிடையாது. ஆனாலும் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்றைக்கு நான் பாடி என் குரலை நானே கேட்பேன் என்று ஒரு ஆசை மனதினுள் அரித்துக் கொண்டிருதானிந்தது.

உங்கள் பக்கம்.

vijai v vijai_vr79@yahoo.com
I just start read your blog 2 months ago.i got intrest and start read almost all your old entries in your blog.i brought your Cinema viyabaram in recent book festival.
Hope you reside in saidapet.Glad that i too reside in saidapet,near subramania koil.
I read once in your blog about MARI HOTEL VADI KARI.  I tried many times,but iam dont find anything tasty.
Have you notice in the film Nandalala,Mari hotel is shown????
Couple of days ago,i have seen you in the film prasanth stars,JAMBAVAN. Is it you or somebody?.
which theater you regularly watch films?Do You like watch films in our Saidai RAJ Theater?
Regards,
Vijai

Jun 9, 2011

வைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” நடன நாடகம்

ஆம் வைகோவின் தயாரிப்பில், அவரின் ஊக்கத்தில் ப்ரம்மாண்டமான தமிழ் வரலாற்று நடன நாடகமான “வீரத்தாய் வேலுநாச்சியார்”  நாளை மாலை 6 மணிக்கு நாரதகானசபாவில், நடைபெறுகிறது. ஒரே மேடையில் 60 நடனமணிகள் நடனமாடவிருக்கும் இந்நிகழ்ச்சியில், நித்யஸ்ரீ மகாதேவன், திரைப்பட இயக்குனர் பத்ரி, மற்றும் பலர் பின்னணி குரல் கொடுக்கவிருக்கிறார்கள். இதற்கான ஆய்வு மேற்கொண்டு எழுதி இயக்கியவர் வே. ஸ்ரீராம் சர்மா. அனைவரும் வருக.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

நிதர்சன கதைகள்-27-அழுக்கன்.

Inverted_darkness_by_prathikthepopist
தமிழகத்தின் பிரபலமான தொடர் ஓட்டலின் ஃபாஸ்ட் புட்டில் பதினான்கு இட்லியும், ஒரு செட் பூரியும் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வெளியே ஆக்ரோஷமாய் மழை பெய்து கொண்டிருந்த்து. மழைக்கு சூடான இட்லியை சாம்பாரில் முக்கி அதில் இரண்டு கரண்டி நெய் மிதக்க, இட்லியை ஸ்பூனால் உதிர்த்து, சாமபாரும் நெய்யும் கலந்து பேஸ்டாக ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டது மழைக்கு தேவாமிர்தமாய் இருந்தது. கடை மூடும் ராத்திரி நேரத்திலும் ஐம்பது பேர் நின்றிருந்தார்கள். சுவாரஸ்யமாய் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்த போது, ஷேவ் செய்யாத தாடியுடன், கொஞ்சம் அலங்கோலமாய், லுங்கி சட்டையுடன் அழுக்காய் ஒருவன் நின்றிருந்தான். அருகிலும் இல்லாமல் தூரமாகவும் இல்லாமல் அவன் நின்றிருந்த்தில் ஒரு ஜாக்கிரதைத்தனம் இருந்தது.

Jun 8, 2011

மயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம்”

n
முன்னூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் மயில்சாமி. இவரது மகன் அருமைநாயகம் (எ) அன்பு, ராசு மதுரவனின் இயக்கத்தில் ”பார்த்தோம்… பழகினோம்” என்கிற புதிய படத்தில் கதாநாயகனாய் நடிக்கவிருக்கிறார். பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களை இயக்கியவர் ராசு மதுரவன். நேசிகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அருமைநாயகம் என்று கமல் சூட்டிய பெயரை இயக்குனர் சிகரம் சினிமாவுக்காக அன்பு என்று பெயர் சூட்டி வாழ்த்தியுள்ளார்.
எஸ்.கே

சாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை


தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்பார்கள். ஆம் வருபவர்கள் எல்லாருக்கும் ஏற்ற நகரம் சென்னை. பணக்காரர்கள் முதல் அடிதட்டு மக்கள் வரை அனைவருக்குமான நகரம். அது போலத்தான் சாப்பாடும்.பத்து ரூபாய்க்கு   கலந்த சோறும், பதினைந்து ரூபாய்க்கு மீன் குழம்புடன் சாப்பாடு கிடைக்கிற ஊரில்தான் ஒரு வேளை சாப்பாடு ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.

Jun 7, 2011

ரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்

aranya- kandam- Movie- Stills-0000 தமிழ் சினிமாவில் சிறிய படங்கள் ரிலீஸானவுடன் மக்களிடையே மவுத் பப்ளிசிட்டியில் ரீச்சாவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாலேயே சினிமா பார்க்கும் மக்களிடையே ஒர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ஆரண்யகாண்டம் திரைப்படம்.  சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஜூரி அவார்ட் வேறு வாங்கி உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Imdb யில் 7.1/10 ரேட்டிங்கை பெற்றிருக்கும் படம். அதுவும் ரிலிஸாகாமலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  மூன்று வருடங்களாய் தயாரிப்பில் இருந்த இந்த படம் வருகிற பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. எஸ்.பி.பி சரணின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணியிசையில், தியாகராஜ குமாரராஜாவின் இயக்கியிருக்கிறார். இந்த படம் வெற்றியடைந்தால் தனக்கு ஒரு பிரேக் கிடைக்குமென நம்பியிருக்கிறார் ரவிகிருஷ்ணா
எஸ்.கே

Jun 6, 2011

கொத்து பரோட்டா-06/06/11

முப்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி மேலும் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசக, வாசகியர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் என் நன்றிகள் பல.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

ஜஸ்டின் பைபர். உலகையே தன் துள்ளலான இசையால் மயக்கி வரும் டீனேஜர். அதிலும் இவனது பேபி பாட்டை கேட்டு ஜுரம் வந்து அலையும் இளைஞர்கள் கோடி. சமீபத்தில் தான் யூடுயூபில் அந்த பாடலைப் பார்த்தேன். பாடலில் இருக்கும் இளமை, விஷுவலாகவும் இருக்க, பின்னென்ன அடி தூள் தான். இவரைப் பற்றி ஏதாவது கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இணையத்தில் கிடைத்தது அஜயன் பாலாவின் கட்டுரை. அவரின் கருத்தும் என் கருத்தும் ஒரே..ஒரே..  என்னா அழகுடா அந்த பொண்ணுங்களும் அவனின் கொஞ்சம் பெமினைனான குரலும்... ம்ஹும்.

Jun 5, 2011

குறும்படம்- அமுதா


முப்பது லட்சம் ஹிட்ஸுகளை அளித்து மேலும் என்னை ஆதரிக்கும் வாசக, வாசகியர்களுக்கும், சக பதிவர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றிகள் பல..சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


நாளைய இயக்குனர் இரண்டாவது சீசனில் ஹாரர் எபிசோடில் வந்த படம். ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இதே கான்செப்டில் நிறைய ஆங்கில படங்கள் வந்திருந்தாலும் நன்றாகவே எடுத்திருந்தார்கள்.



சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Jun 4, 2011

பாடும் நிலா பாலு.

முப்பது லட்சம் ஹிட்ஸுகளை அளித்து மேலும் என்னை ஆதரிக்கும் வாசக, வாசகியர்களுக்கும், சக பதிவர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றிகள் பல..சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

spb தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், சந்திரபாபு, ஏம்.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று வரிசைக் கட்டிக் கொண்டு தமிழ் சினிமாவையே தங்கள் குரலினால் கட்டிப் போட்டிருந்த பாடகர்கள் எல்லாம் இருந்தாலும் டி.எம்.எஸ் என்ற ஒரு குரல் தான் அரசாட்சி செய்து கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் புதிய தென்றலாய் ஒரு குரல் மெல்ல தமிழ் சினிமாவில் மையம் கொண்டு புயலாய் மாறி நம்மை எல்லாம் இசையெனும் சூறாவளிக் காற்றில் அலைக்கழித்துக் கொண்டிருப்பவர் நம் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

ஆண்மைதவறேல்

Aanmai Thavarael Tamil Movie Stills சமீபகாலமாய் தொடர்ந்து பல இயக்குனர்கள் எடுத்துக் கொண்டுள்ள களம் தான். பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தல். அதை விரிவாக சொல்ல் முயற்சித்திருக்கிறது. இந்த டீம்.

குறும்படம் - நிதர்சனம்


இது என்னுடய இரண்டாவது படம் நான் நிறைய கற்றுக் கொண்ட படம். எனக்கு அவ்வளவாக திருப்தியில்லாத படம். எது எதையெல்லாம் ஒத்துக் கொண்டு செய்யக்கூடாது என்று புரிந்து கொண்ட படம்.

Jun 3, 2011

உலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.

mani மணி சார்.. இப்படித்தான் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகத்தினர் அனைவரும் அன்புடன் அழைக்கிறார்கள் மணிரத்தினம் அவர்களை. தமிழ் சினிமாவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களின் முக்கியமானவர் மணிசார். இவரின் படத்தில் நடிப்பதென்றால் இந்தியாவின் பெரிய நடிகர்கள் கூட சம்பளம், டேட் எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்ய தயார் என்று சொல்லுமளவுக்கு இவரின் மேல் மரியாதை. இவருடன் இணையும் தொழில்நுட்ப கலைஞர்கள், உடனடியாய் கவனிக்க பெறுவது இவரின் சிறப்பு.

Hangover-2

hangover-2-wallpaper ஹாங் ஒவர் பார்ட் ஒன்னை பார்த்தவர்கள் நிச்சயம் இந்த பகுதியை பார்க்காமல் விடமாட்டார்கள். அவ்வளவு சுவாரஸ்யமான படம் ஹாங் ஓவர் முதல் பாகம். அதே சுவாரஸ்யத்தை இரண்டாம் பாகமும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று யோசித்தவர்களை மீண்டும் மூன்றாம் பாகம் வந்தாலும் பார்க்க தயார் என்று சொல்ல வைத்துவிட்டாரக்ள்.  என்ன வழக்கம் போல் படம் பார்த்துவிட்டு முதல் பாகம் மாதிரியில்லை என்ற டெம்ப்ளேட் வசனத்தோடு.

Jun 2, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை

என் இனிய மொட்டை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரை வாழ்த்த பிறந்தநாள் பரிசாய் அவர் பாட்டையே அளிக்கிறேன். உங்களுக்கு
நீடூழி வாழ்க.. என் இனிய மொட்டை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

சாப்பாட்டுக்கடை - ரெஸிடென்ஸி

இது நாள் வரை நல்ல ரெஸ்டாரண்டுகளைப் பற்றியும், மிடில் க்ளாஸ் மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் விரும்பும் கையேந்திபவன்களைக் கூட அறிமுகப்படுத்தியிருக்கிறேன். முதல் முறையாய் ஒரு ஸ்டார் ஓட்டல் ரெஸ்டாரண்டைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். சென்னையில் ஸ்டார் ஓட்டல் வகையராக்களில் மிக சில ஓட்டல்களின் ரெஸ்டாரண்டுகள் மட்டுமே நல்ல சுவையான, உணவு வகைகளை அளிக்கிறது என்பது என் கருத்து. அதற்காக அவர்களின் உணவு தரம் குறைந்தது என்று சொல்ல வரவில்லை. தனித்துவமான டேஸ்டென்று இல்லாமல் இருப்பதே அதன் மைனஸ். அதையும் மீறி ஒரு சில ஸ்டார் ஓட்டல்களில் சில ஸ்பெஷல் அயிட்டங்கள் அசத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது ரெஸிடென்ஸி.

Jun 1, 2011

மைதானம்

Maithanam-Movie-Stills-017
தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு  எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது லட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

கொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும் இந்தக் காதல் வேண்டாம் என்று கண்டிக்கிறான். ஓரு கட்டத்தில் அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன ஆனது என்பதை நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.