Thottal Thodarum

Jul 31, 2012

சாப்பாட்டுக்கடை - பாண்டியன் ஓட்டல்

பாண்டியன் லாட்ஜ் ஓட்டல் என்றதும் சென்னையில் உள்ள உணவகம் என்று பல பேர் நினைக்கக்கூடும். ஆனால் இது அதுவல்ல. குற்றாலத்தில் மிகப் பிரபலமான உணவகம் இது. அதுவும் காலங்கார்த்தாலேயே  ரத்தப் பொரியலும், கொத்துக்கறியும், மட்டன் சாப்ஸும், சிக்கன் சாப்ஸும், நெய்தோசையும், பரோட்டாவும் புழங்குகிற இடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Jul 30, 2012

கொத்து பரோட்டா -27/07/12

இன்குபேட்டருக்கு 200 ரூபாய் கொடுக்க முடியாததால் பிறந்து ஐந்தே நாள் ஆன குழந்தை இறந்திருக்கிறது. என்ன கொடுமை இது. அடிப்படை மனிதத்தன்மைக்கூட இல்லாமல் இப்படியெல்லாம் நம்மூரைத் தவிர வேறெங்கும் நடக்கவே நடக்காது. செய்தியைக் கேட்க,  கேட்க மனசு பதைக்கிறது. இந்த லட்சணத்தில் நாம் வல்லரசாக வேண்டும் என்று கனவு வேறு காணச் சொல்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@

Jul 28, 2012

பொல்லாங்கு

விளம்பரங்களில் த்ரில்லர் என்று ஸ்டாம்ப் போல டிசைன் செய்து விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இதை இரண்டு விதமாய் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று இது த்ரில்லர் படம்பா.. வேற எதையும் எதிர்பார்த்து வந்திராதீங்க. இரண்டு நம்மை தயார் படுத்தி படத்திற்கு அழைத்துச் செல்வது. சமீபத்தில் தமிழில் த்ரில்லர் படம் பார்த்து நாளாகிவிட்டிருந்ததால் ஒரு ஆர்வத்தில் சென்றது  எவ்வளவு பெரிய ரிஸ்க் என்று படம் பார்த்தவுடன் தான் தெரிந்தது.

Jul 27, 2012

மாலைப் பொழுதின் மயக்கத்திலே..

கவிதையான டைட்டில், அதை விட இன்ஸ்பயரிங்கான போஸ்டர் டிசைன், சட்டென ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் ட்ரைலர் எல்லாம் பார்த்தவுடன் ஏதோ இவங்களுக்குள்ள இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்கப் போன படம்.

Jul 26, 2012

22 Female Kottayam

சில படங்களைப் பார்த்த மாத்திரத்தில் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடும். அப்படியான படங்களை சமீப காலத்தில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, பார்க்கவில்லை. இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, டெக்னீஷியன்களோ இல்லாத ஒரு படம் தான். ஆனால் படம் பார்த்து முடித்தும் தாக்கம் இருந்து கொண்டேயிருந்தது. தமிழில் இம்மாதிரியான கதைக்களன்களோடு எப்போது படம் வருமோ என்று ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.

Jul 25, 2012

Thattathin Marayathu

 மலையாளப் படங்களை தியேட்டர்களில் பார்த்து நிரம்ப நாளாகிவிட்டது. அதற்கு காரணம் லாலேட்டனும், மம்முவும்தான். ஒரு காலத்தில் மலையாள படங்களை பார்க்க காரணமாயிருந்தவர்களும் அவர்கள் தான். கடந்த சில வருடங்களாய் அவர்களின் படங்களின் ட்ரைலரைப் பார்த்தாலே தெரித்து ஓடக்கூடிய வகையில் இருந்ததால் மலையாளக் கரையோரத்தில்  டிராபிக், பாஸஞ்சர் போன்ற படங்களைப் பார்த்து அவ்வப்போது மலையாளக் கரையோரம்கால் நினைத்துக் கொண்டிருந்தேன். சால்ட் அண்ட் பெப்பர் வேறு நன்றாய் இருப்பதாய் சொன்னார்கள். மலையாள திரையுலகில் புது வெள்ளமாய் வாரிசுகள் பல பேர் நுழைந்து கொஞ்சம் புதுக் காத்து வீசத் தொடங்கியிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. அந்த வகையில் எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் சமீபத்திய ஹிட் என்று சொன்னதால் ஆஜரானேன்.

Jul 24, 2012

நான் - ஷர்மி - வைரம் -20


20 ஷர்மி
“நாம எங்கயாவது ஓடிப்போயிருவோமா?என்றாள் அம்மா. நான் சிரித்தேன். “யார்கிட்டேயிருந்து?” என்று கேட்டேன். அவளிடமிருந்து பதிலேயில்லை. துரத்துகிற நாய்க்காக ஓடாமல் ஒரு முறை திரும்பிப் நின்றால் நாய் துரத்தாது. பயந்து பின்வாங்கி, கொஞ்சம் தயங்கிய குரலில் குறைக்கும். அந்தக் குரலில் இருக்கும் தயக்கத்தை உணர்ந்து மீண்டும் ஸ்திரமாய் நின்றால் அது பின்வாங்கும். நாய்க்கு உபயோகிக்கும் யுக்திதான் மனுஷனுக்கும் என்று முடிவு செய்தேன். ஆனால் யோசிக்கும் போது இருக்கும் தைரியம் செயல்படுத்தும் போது இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை கொடுத்த்து. பொழுது விடியும் வரை தூங்கவேயில்லை. என்னதான் செக்‌ஷுவலாய் கொஞ்சம் அனுபவப்பட்டிருந்தாலும், என்னை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது வருத்தமாய்த்தான் இருந்தது.

Jul 23, 2012

கொத்து பரோட்டா -23/07/12

சனியன்று பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்கிற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். 2003ல் இலங்கையில் வெளியான இப்புத்தகத்தை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் ஆரபி பதிப்பகத்தார். தயானந்தா இலங்கை வானொலியில் பணியாற்றிய போது தமிழக பிரபலங்களான ஜெயகாந்தன், கனிமொழி, கே.ஜே.ஜேசுதாஸ், பாலகுமாரன், சோ, டி.எம்.எஸ், சிவாஜி, பழனிபாரதி, மதன், சாரு நிவேதிதா  போன்றோரின் நேரலை பேட்டியினை புத்தக வரிகளாக்கி தந்திருக்கிறார்கள். படு சுவாரஸ்யமான புத்தகம். ஒரு வானொலி பேட்டி இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா? என்ற எண்ணத்தை இப்புத்தகம் ஏற்படுத்தியது. ஏனென்றால் எந்த துறையினர் ஆனாலும், அவர்களிடமிருந்து  வரும் பதில்கள் சுவாரஸ்யமாய் இருக்க, நல்ல கேள்விகள் வேண்டும்.  அதை தயானந்தா சிறப்பாக செய்திருக்கிறார். புத்தகமும், வானொலியும் மட்டுமே நம் கற்பனைக் குதிரையை தட்டி நமக்கான காட்சிகளை தரும் சக்தியுண்டு. இப்புத்தகத்தைப் படித்ததும், இதுவரை கேட்டிராத தயானந்தாவின் குரல் எப்படியிருக்கும். இந்திந்த கேள்விகளுக்கு இவரின் குரல் எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களூடன் இருந்திருக்கும் என்ற கற்பனை எழாமல் இல்லை. விழாவிற்கு மிக குறைந்த அளவு கூட்டமே வந்திருந்தாலும் சிறப்பாக நடந்தது. விழாவின் முடிவில் லண்டனிலிருந்து தயானந்தா தொலைபேசியில் வாழ்த்தி வெளியிட்ட அனைவரிடமும் பேசினார். என் கற்பனையில் ஒலித்த அவரது குரல் நிஜமாய், நான் அவதானித்தபடியே இருந்ததும், கம்பீரமாகவும் இருந்தது.. அதை விட சந்தோஷம் அவர் என்னுடய வாசகர் என்று சொன்னதுதான். தன்யனானேன் தயானந்தரே. இப்புத்தகத்தை படிக்கும் போது இதில் பேட்டி கொடுத்தவர்களின் அன்றைய மனநிலையில் சொன்ன கருத்துக்கும்  இன்றைய மனநிலையில் சொல்லியிருக்கும் கருத்துக்குமான வேறுபாட்டையும், ஒற்றுமையையும் பார்க்கும் போது சுவாரஸ்யம அதிகமாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 20, 2012

The Dark Knight Rises

வழக்கமாய் நான் ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்பவன் இல்லை. முக்கியமாய் பைலட் போன்ற தியேட்டர்களில் படம் பார்ப்பதையே தவிர்பவன். வேறு வழியில்லாமல் கிறிஸ்டபர் நோலன் படம் என்பதால் தமிழில் பார்க்க முடிவு செய்தேன். அதற்கு காரணம் நோலனின் படங்களில் வரும் திரைகக்தையை சப்டைட்டிலுடனோ, அல்லது தமிழ் டப்பிங்கிலோ  பார்த்தால் தான் பார்த்த மாத்திரத்தில் புரியும் அறிவு மட்டுமே இருப்பதால் இம்முறை தமிழ் வர்ஷனைப் பார்க்க முடிவுசெய்து பைலட்டுக்கு விட்டேன் என் வண்டியை.

Jul 19, 2012

Cocktail


இந்தியில் இம்மாதிரியான ரோம் - காம் வகை படங்கள் நிறைய வந்திருந்தாலும் இப்படத்தின் ட்ரைலர் எனக்கு கொஞ்சம் இம்பரசிவாக இருந்ததால் பார்க்க தூண்டியது. முக்கியமாய் தீபிகாவின் கேரக்டர். ஸோ.. லெட்ஸ் கோ டூ காக்டெயில்

Jul 18, 2012

பகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.

இந்தியாவிலேயே விலைவாசியை காட்டி, பெட்ரோல் விலை ஏற்றத்தை காட்டி கொள்ளையடிக்கும் கும்பல் எதுவென்றால் அது சென்னையின் ஆட்டோக்கள் தான். ஆம் பகல் கொள்ளைதான். இந்தக் கொள்ளையை தடுக்க, முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

Jul 17, 2012

சாப்பாட்டுக்கடை - ரஹமத்துல்லா பார்டர் கடை பரோட்டா

குற்றாலம் என்று சொன்னதும் பல பேருக்கு அருவியைத் தாண்டி ஞாபகத்துக்கு வருவது பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக் கோழியும்தான். ரஹமத்துல்லா பாயின் கடை என்றால் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. எல்லோருக்கும் பாடர்கடைதான். அப்படி அழைப்பதற்கான காரணமிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டை கேரள மாநிலத்துடன் இருந்த போது, இந்த இடம் தான் கேரளா தமிழ்நாடு பார்டராய் இருந்ததாம். தற்சமயம்  அந்தக் கடை திருநெல்வேலிக்கும் செங்கோட்டைக்கும் இடையே இருப்பதாலும் அப்படி அழைக்கப்படுவதாய் சொன்னார்கள் .(நன்றி டாக்டர் புருனோ) தற்சயமய் கேரள தமிழ்நாடு பார்டர் செங்கோட்டை கொல்லம் நெடுஞ்சாலையில் உள்ளது.

Jul 16, 2012

கொத்து பரோட்டா 16/07/12

சென்ற வார சந்தோஷம்
தமிழ் வலைப்பூக்களைக் குறித்து டெக்கான் க்ரானிகல் பத்திரிக்கையில் ஒர் கட்டுரையை எழுதியிருந்தார்கள். தமிழ் ப்ளாக்குகள் பற்றியும் அதன் ரீச்சைப் பற்றியும். வலைப்பூக்கள் எழுதியதால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? போன்ற விஷயங்களை பற்றி கேட்டு எழுதியிருந்தார்கள் நல்ல ரீச். நன்றி உமா
#########################################

Jul 13, 2012

பில்லா -2

ஹிட்டான படத்தின் அடுத்த பாகமாய் ஆங்கிலத்தில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வெளி வந்திருக்கிறது. முதல் முறையாய் தமிழில் ஏன் இந்திய படங்களில் ப்ரீக்யூவல் எனப்படும் முதல் பாகத்திற்கு முந்தைய கதை என்று எடுக்கப்பட்ட படம் பில்லா 2.

Jul 9, 2012

கொத்து பரோட்டா - 9/07/12

சென்னையில் இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய ப்ரச்சனை பார்க்கிங் ப்ரச்சனைதான். ரோட்டில் பார்க் செய்வதை சொல்லவில்லை, வீட்டில் பார்க்கிங் செய்வதைப் பற்றிச் சொல்கிறேன். பெரும்பாலான ப்ளாட்டுகளில் பார்க்கிங்கே இல்லாமல் தான் வீடு வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கார்கள் ஒரு தெரு முழுக்க, அடைத்துக் கொண்டு நிற்கிறது. அதுவும் இரவு நேரங்களில்  பத்தடி அகல ரோடில் இரண்டு பக்கமும் வண்டியை பார்க் செய்திருந்தால் எப்படி மற்ற வண்டிகள் போகும்?. பெரும்பாலான  வண்டிகளின் பார்க்கிங் ரோடில்தான் என்றாகிவிட்டது. இனிமேல் சென்னையில் வீடு கட்ட, ப்ளாட் கட்ட ப்ளான் அப்ரூவல் செய்யும் போதே எத்தனை வீடிருக்கிறதோ அத்துனை வீடுகளுக்கு பார்க்கிங் வசதியையும் சேர்ந்து தர வேண்டுமென ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களிலாவது ரோட்டில் பார்க்கிங் செய்வது குறையும்.
#####################################

Jul 7, 2012

Eega - நான் ஈ

ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி.

Jul 6, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் - மே 2012

ஏப்ரல் மாத சூப்பர் ஹிட் மட்டுமல்லாமல், இது வரை வந்த படங்களில் ளில் சூப்பர் ஹிட்டான ஒரே படம் ஒரு கல் ஒரு கண்ணாடி அமைந்தது. சுமார் நாற்பது கோடிகளுக்கு மேல் வசூலித்தது. பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பெரும் லாபம் சம்பாதித்திருக்க தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் கொடுத்தது போல் ஆனது. கொலைவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 3 படம்  தோல்வியை தழுவியது திரையுலகத்தினருக்கு அதிர்ச்சியே.

Jul 5, 2012

All The Best

ஜேடி சக்ரவர்த்தி இயக்கும் படங்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ வருடத்திற்கு ஒரு படமாவது வந்துவிடுகிறது. ராம் கோபால் வர்மாவின் பள்ளியிலிருந்து நடிகராய் வளர்ந்து இயக்குனராகியிருக்கும் இவரது படங்கள் பெரும்பாலும் ஏதாவது வேற்று நாட்டு படத்தின் தாக்கம் இருக்கும். அதன்படியே இப்படமும்.

Jul 4, 2012

சாப்பாட்டுக்கடை - சஞ்சீவனம்

ஏற்கனவே ஒரு முறை சென்றிருக்கிறேன்.அப்போதே எழுத வேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது. ஆனால் இம்முறை நான் சென்ற போது சாப்பிட்டுவிட்டு எழுதியே தீர வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். சஞ்சீவனம் மெடிமிக்ஸ் நிறுவனத்தார் நடத்தும் அற்புதமான உணவகம்.  மிக அருமையான வித்யாசமான உணவுகளை அவர்கள் இயற்கையான சமையல் முறைகளை பயன்படுத்தி, எண்ணெய் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை படைக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்டது ராஜகீயம் எனும் மதிய உணவு.

Jul 2, 2012

கொத்து பரோட்டா 02/07/12

சென்ற வாரம் பஸ் விபத்து வாரம் போலிருக்கிறது. தொடர்ந்து ரெண்டு விபத்துகள். இரண்டுமே ஓட்டுனர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டிருக்கிறது. ஒன்று செல்போன் பேசிப் போனதில் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வண்டியின் வேகம் என்கிறார்கள். ஆனால் டிரைவரைக் காப்பாற்ற தொழிற்சங்க ஆட்கள் மட்டும் சீட் கழண்டு விழுந்தது என்று உட்டாலக்கடி அடிக்கிறார்கள். விசாரணையில் சீட் எல்லாம் கழலவில்லை என்று சொல்லிவிட்டார்கள். வேகமா இல்லை, செல்போனா என்பது தான் முடிவாக வேண்டும். இன்னொரு விபத்து ஒரு கண்டெய்னர் லாரியை ஓவர் டேக் செய்ய, முயன்று இடது வலதில் வண்டி வந்ததால் ஓவர்டேக் செய்ய முடியாமல் வண்டியை கண்டெய்னரில் போய் இடித்திருக்கிறார் டிரைவர். இவற்றுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு என்று தெரியவில்லை. எந்த டிரைவரும், சிக்னலை மதிப்பதில்லை, பஸ் நிறுத்தத்தின் அருகில் நிறுத்துவதில்லை. நடு ரோட்டில் தான் நிற்கிறார்கள். முதலில் இவர்களை ஒழுங்குப்படுத்தினாலே சென்னையின் பாதி போக்குவரத்து சரியாகும் என்று தோன்றுகிறது. செய்யுமா அரசு?
@@@@@@@@@@@@@@@@@@