Thottal Thodarum

Jan 31, 2013

என்னத்தை சொல்ல...?

போன் ஒலித்தது. வெளிநாட்டு நம்பர். வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். “ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பண்றீங்களா?” என்று யார் என்று கூட கேட்காமல் சொன்னேன். லைன் உடன் கட்டானது. பல சமயங்களில் இம்மாதிரி சொல்லும் போது அதை கவனிக்காமலோ, அல்லது நாம் போன் பண்ணியாச்சு பேசித்தான் ஆகணும் என்ற எண்ணத்தில் அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. சரியாய் பத்து நிமிடம் கழித்து கூப்பிட்டார்.

Jan 29, 2013

விஸ்வரூப தரிசனம்

விஸ்வரூபம் திரைபடத்திற்கு தடை என்று அறிந்ததுமே அஹா.. ஏற்கனவே புக் பண்ண டிக்கெட் போச்சே.. என்ற வருத்தத்தை விட, படம் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் அதிகமாய் இருந்தது. சரி என்னடா செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போது,  வழக்கப்படி மாநிலம் விட்டு மாநிலம் படம் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவோடு, மணிஜியை தொடர்பு கொள்ள நினைத்து போனை எடுக்க, அவர் அழைத்தார். “என்ன தலைவரே.. இப்படி பண்ணிட்டானுங்க?.” என்றதும் நான் ஆந்திரா போகும் ஐடியாவை சொன்னதும் சற்றும் யோசிக்காமல் “எனக்கு தெலுங்கு தெரியாது இருந்தாலும் போய் பார்த்துடுவோம்” என்றவர், “இரு பெங்களூர்ல பிரபு கிருஷ்ணா டிக்கெட் புக் பண்ணித்தரேன்னு சொல்லியிருந்தாரு. அங்க கிடைச்சுதுன்னா தமிழ்லேயே பாக்கலாமே” என்றதும் எனக்கும் ஒர் நப்பாசை சரி என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் பிரபு கிருஷ்ணாவிடம் தொடர்பு கொண்டு , போன் நம்பர் வாங்கி, 25ஆம் தேதி ஆறு மணிஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியதை கன்பார்ம் செய்ய, நான், மணிஜி, கே.ஆர்.பி, பபாஷா சங்கர் ஆகியோர் காலை எட்டு மணிக்கு மணிஜி வீட்டில் ஆசெம்பிள் ஆவதாய் முடிவெடுத்தோம். ராத்திரி பதினோரு மணிக்கு  மணிஜி ”தெளிவாய்” ப்ரோக்ராமை ஞாபகப்படுத்தினார்.

Jan 28, 2013

கொத்து பரோட்டா -28/01/13

சென்னையின் மிக மோசமான கலாச்சாரம் சுவர் கண்ட இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவது. அது எந்த இடமாக இருந்தாலும் சரி. போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக சுவர் முழுவதும் இயற்கை காட்சிகள், நிறைந்த படங்களை வரைந்தால் அதன் மேலும் ஒட்டுகிறார்கள். அனுமதியில்லாத இடங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று சட்டமிருந்தாலும், அது எப்போது மீறப்படுகிறது என்றால் ஆளூம் கட்சிக்காரர்களே அங்கே போஸ்டர் ஒட்டும் போதுதான். மாநகராட்சியும் அவ்வப்போது அறிக்கை விடுவதோடு சரி. சமீபத்தில் என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் சென்னை வந்த போது மெட்ரோ ரயில் வேலைக்காக மறைப்பாக வைத்திருக்கும் இரும்பு ஷீட்களில், மெட்ரோ தூண்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியிருப்பதைப் பார்த்து உங்க அரசாங்கம் இதை கண்டிக்காதா? என்று கேட்டார். கண்டிக்கும் ஆனா கேட்க மாட்டாங்க.. என்றதும் எங்க ஊரில் எல்லாம் அப்படி மீறி போஸ்டர் ஒட்டினால் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உடனடியாய் மிகப் பெரிய ஃபைன் வசூலிக்கப்படும். இங்கேயும் அதை இம்ப்ளிமெண்ட் செய்தால் அரசுக்கு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, ஊரும் சுத்தமாயிருக்கும் இல்லையா? என்றால் இருக்கும் தான் செய்யணுமே..? அதுக்கு எவ்வளவு கட்டிங் போவுதோ? 
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 26, 2013

விஸ்வரூபம்

சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam  என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.

Jan 25, 2013

பத்தாயிரம் கோடி


கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு கெமிக்கலை கண்டு பிடிக்கிறார்கள். அந்த கெமிக்கலை உடலில் பூசிக் கொண்டால் அந்த இடம் கண்களுக்கு புலப்படாமல் போய்விட, அதை வைத்து கல்லூரி மாணவர் கோகுலும், அவரது நண்பர்களும் பத்தாயிரம் கோடி ரூபாயை சுட்டுவிடுகிறார்கள். அதை கண்டு பிடிக்க, தமிழக போலீஸ் துறை சங்கர்லால் எனும் விவேக் அண்ட் டீமை அனுப்புகிறது. பத்தாயிரம் கோடியை ஒரு காரில் வைத்துக் கொண்டு ஊர் ஊராய் மாணவர்கள் சுற்ற, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காமெடி, ஜேம்ஸ்பாண்ட் விவேக் வெல்கிறாரா? இல்லையா? என்பதுதான் கதை.

Jan 22, 2013

சாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry

சமீபத்தில் முகப்புத்தக குழுவான “சாப்பாட்டுக்கடை’ யில் ஒர் விளம்பரம். மீன் வருவலும், மீன் குழம்பு மட்டும் செய்து வீட்டிற்கு டோர் டெலிவரி செய்வதாய். மீன் குழம்பின் ரசிகரான என் நண்பரிடம் இதைப் பற்றி சொன்னேன். அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. இப்படித்தான் சொல்லுவாங்க.. பின்னாடி வந்து சாப்ட்டா கவிச்சி வாடையடிக்கும், பழைய மீனை வச்சி வறுத்து கொடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரை சென்னையிலேயே மிக சிறிய ஓட்டல்களில் மட்டுமே நல்ல மீன் குழம்பும், வறுவலும் கிடைச்சிருக்கு என்றார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மையும் உண்டு. நாங்கள் இருவரும் நிறைய உணவகங்களில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். மீன் குழம்பு என்றால் குழம்பு மீன், மீன் வறுவல் என்று மீன் அயிட்டங்கள் அதையும் விட மாட்டார். நல்ல மீன் குழம்பு வைக்கத் தெரிந்த ஓட்டலில் மற்ற அயிட்டங்கள் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை ரசத்தில்.

இவ்வளவு தூரம் சொல்லியவர் விளம்பரத்தில் பார்த்த மீன் குழம்பு படத்தை பார்த்ததும்,  “சரி..நாளைக்கு மதியம் லஞ்சுக்கு வீட்டுல சாப்பாடு மட்டும் செஞ்சிட்டு இங்க ஆர்டர் செய்திருவோம்’ என்றபடி போனை எடுத்து கூப்பிட்டார். முகத்தில் ஒர் ஏமாற்றம் இருந்தது. ‘என்ன தலைவரே என்றதும் அவங்க சனி, ஞாயிறுக்கு மட்டும்தான் டெலிவரி பண்ணுவாங்களாம். மிச்ச நாள்ல ஆர்டர் எடுத்துப்பாங்களாம் என்றார்.. அதற்குள் எதிர்முனைகாரர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பரவாயில்ல வீக் டேவானாலும் இவ்வளவு ஆர்வமாய் இருக்கிறீர்கள் சப்ளை செய்கிறோம் என்றதும் ஆர்டர் கொடுத்தோம்.  ஒரு போர்ஷன் மீன் குழம்பு, ரெண்டு  பிஷ் ப்ரை, ஒரு ஃபிஷ் பொடிமாஸ்.

அடுத்த நாள் மதியம் நண்பரின் வீட்டிற்கு போய் ரெடியாய் உட்கார்ந்துவிட்டேன். ஏனென்றால் எனக்கும் மீன் குழம்பு மிகவும் பிடிக்கும்.  ஆனால் குழம்பில் இருக்கும் மீன் அவ்வளவாக பிடிக்காது. ப்ரை மிகவும் பிடிக்கும்.  கிட்டத்தட்ட ஜெஜ்ஜில் நல்ல காரக்குழம்புக்கும், மீன் குழம்புக்கும் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் இருப்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன். நண்பர் எலக்ட்ரிக் குக்கரில் சாதம் வடித்து ரெடியாய் இருக்க, சரியாய் மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் கேட்டது போல வந்தது. ஒரு ஹாட் கேஸில் பேக் செய்யப்பட்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். நல்ல அளவில் நான்கு பீஸ் வஞ்சிரம் மீன் துண்டுகளோடு, குழம்பு மணத்தது. வாடையில்லாமல்.  ப்ரை நன்றாக மசாலாவோடு ஊற வைக்கப்பட்டு அருமையாய் இருந்த்து. நல்ல சைஸ் வஞ்சிர மீன்.  மீன் குழம்பு பிரியரான நண்பர் முத வாயை எடுத்து சாப்பிட்டு கண்ணை மூடி ருசித்து “ம்’ என்றார். நன்றாக இருக்கிறதாம். அடுத்து நான் சாப்பிட்டேன். காரம் அவ்வளவாக இல்லை. ஆயில் குறைவாக, நல்ல சுவையோடு இருந்தது. வழக்கமாய் முட்டை அயிட்டங்களை சூட்டோடு சாப்பிட்டு பழகியவன் ஆதலால் பொடிமாஸ் கொஞ்சம் ஆறியிருந்து சுவை குறைவாகவே பட்டது. நண்பர் ஓகே என்றார். 

குறை என்று சொன்னால் குழம்பில் கொஞ்சம் உப்பு குறைவு என்பது, மீன் குழம்பில் இருக்கும் லேசான புளிப்பு இதில் குறைவு என்பது மட்டுமே. நன்றாக சாப்பிட்டு வயிற்றை ஏதும் பதம் பார்க்கவில்லை என்பதே நல்ல உணவிற்கு சான்று என்பதை அடுத்த நாள் காலை உணர்தோம். என் நண்பருக்கு பிடித்துவிட்டது. உடனடியாய் அந்நிறுவனத்தை கூப்பிட்டு இன்னும் என்ன என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார். வீட்டு சுவையில், சன்ஃப்ளவர் ஹார்ட் ஆயிலில்தான் மீன் பொறிப்பதாகவும், வஞ்சிரம் மீன் ப்ரெஷ்ஷாக அன்றன்றைக்கே வாங்கி சமைப்பதாகவும். புதிதாய் ஆரம்பித்திருப்பதால் வார இறுதி நாட்களில் மட்டும் தற்போது சர்வ் செய்வதாக சொன்னார். நிச்சயம் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.. ஊர் விட்டு வந்து நல்ல சாப்பாடு கிடைககாதா என்று சப்புக் கொட்டிக் கொண்டு கிடக்கும் பேச்சுலர்கள் ஒர் ட்ரை செய்து பார்க்கலாம். பிஷ் 65யும் தருகிறார்களாம்.

மீன் குழம்பு ஒரு போர்ஷன் நான்கு வஞ்சிர மீன் துண்டுகளுடன் -150
மீன் வறுவல் பெரிய பீஸ் வஞ்சிர துண்டு - 150
மீன் 65 -6 துண்டுகள் -180
மீன் பொடிமாஸ் -100 கிராம் -125

டோர் டெலிவரிக்கு சல்லிசான விலை என்றுதான் தோன்றுகிறது. பொடிமாஸின் விலையைத் தவிர.. ஹேவ் எ ட்ரை..  படத்தில் இருக்கும் போட்டோவில் இருக்கும் படம் எங்கோ கூகுளீல் சுட்டு போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இவர்களது குழம்பில் ஆயிலே தெரியவில்லை. இவர்களின் வெற்றி தொடர்ந்து இவர்கள் செய்யும் சர்வீஸிலும், சுவையிலும், விலையிலும்தான் இருக்கிறது. 
கேபிள் சங்கர்

Jan 20, 2013

கொத்து பரோட்டா -21/01/13

ஆயிரம் பஞ்சாயத்துக்களைத் தாண்டி ஒரு வழியாய் விஸ்வரூபம் வெளிவருகிறது. என்னதான் ஒரு மாதிரி கன்வின்ஸ் ஆக்கி டி.டி.எச். ஒளிபரப்பை ஒரு வாரத்திற்கு பிறகு என்று கமலை முடிவு செய்ய வைத்தாலும், ஒரு தயாரிப்பாளராய் தனக்கிருக்கும் வியாபார உரிமையை தடுக்க முடியாது என்ற நிலையை உறுதி செய்ய அவர் காம்படீஷன் கமிஷனில் கொடுத்த புகார் இன்னும் லைவ்வாகத்தான் இருக்கிறது. அந்தப் புகாரை வருகிற வாரம் காம்படீஷன் கமிஷன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றிருக்கிறது. இதே போல மூன்று மாதங்களுக்கு முன் அஜய் தேவ்கன், யாஷ்ராஜ் கம்பெனியினால் தன் படமான சன் ஆப் சர்தாரை வெளியிட தடை செய்கிறார்கள் என்று புகார் கொடுத்திருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 19, 2013

சாப்பாட்டுக்கடை -கணேஷ் செட்டிநாடு

சென்னையில் எங்கு பார்த்தாலும் அசைவ உணவகம் என்றால் அது டிபால்டாய் செட்டி நாட்டு உணவகமாய்த்தான் இருக்கும். நிஜமாகவே அங்கே கொடுக்கப்படும் உணவு செட்டிநாட்டு வகை தானா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்பேர்பட்ட ஓட்டல்கள் இருக்குமிடத்தில் ஓரளவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் நல்ல உணவகம் ஒன்று இருக்கிறது அது தான் கணேஷ் செட்டிநாடு.

Jan 18, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu

பிரகாஷ்ராஜ் மிகவும் நல்ல மனிதர். எதையும் பாசிட்டிவாக பார்ப்பவர். அவருக்கு ரெண்டு மகன்கள், ஒரு பெண். தன் மனைவி ஜெயசுதாவோடு ரேலங்கியில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவர். இரண்டு மகன்களில் மூத்தவரான வெங்கடேஷ் ஒர் வேலையில்லா பட்டதாரி, சுள்ளென கோபப்டுகிறவர். இளையவர் மகேஷ்பாபு. நன்கு படித்தவர். ஹைதையில் இருப்பவர். இளமைத் துள்ளலோடு வளைய வருபவர்.இவர்களின் உறவினரான பணக்கார ரமேஷ் ராவுக்கு ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜ் குடும்பத்தின் மீது காழ்ப்புணர்ச்சி.  இவரது மகள் சமந்தாவுக்கும் மகேஷ்பாபுவுக்கும் காதல். இன்னொரு பக்கம் வீட்டோடு இருக்கும் முறைப் பெண் அஞ்சலி . வெங்கடேஷ் தான் தன் கணவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இருப்பவர். ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜின்  குடும்பத்தில் உறவினர் ரமேஷ் ராவினால் ஒர் பிரச்சனை உருவாகிறது. அது அண்ணன் தம்பிக்கிடையேயும் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை.

Jan 17, 2013

புத்தக கண்காட்சி -4

கடந்த ரெண்டொரு நாளாய் புத்தக கண்காட்சியில் நல்ல கூட்டம் விடுமுறை நாளாகிவிட்டதால் பார்க்கிங் எல்லாம் இடமாற்றம் செய்திருந்தார்கள். மாலையில் பைக் வைத்துவிட்டு  போனால் இருட்டில் எங்கே வைத்தோம் என்று நிலவொளியில் தேடித்தான் எடுக்க வேண்டும். அங்கே லைட் வசதிகள் ஏதும் செய்யாமல் வைத்திருப்பது படு கொடுமை.  வேடியப்பனின் ஸ்டாலில் அமர்ந்திருந்த போது ஒர் இளம் பெண் உடன் வந்தவரின் கையில் தன்னுடய துப்பட்டாவை கட்டி, இன்னொரு முனையை தன் கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டு, மேலும் அவரின் கையை வேறு பிடித்தபடி கண்காட்சி முழுவதும் சுற்றினார். அப்பெண்ணின் தந்தையாய் இருக்கவேண்டும். 

புத்தகம்

திரைத்துறையில் பி.வாசுவின் படம் மூலமாய் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பு தொலைக்காட்சி சீரியல்களில் புகழ் பெற்ற கதாநாயகனாகவும், சிறந்த் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த விஜய்ஆதிராஜ் இயக்குனராய் அவதாரம் எடுத்திருக்கும் படம் புத்தகம்.

Jan 16, 2013

புத்தக கண்காட்சி நாள்-3

ஞாயிற்றுக்கிழமை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வேறு ரிலீஸாகியிருந்ததால் ஒரு பக்கம் திரைப்பட ஆசையும், இன்னொரு பக்கம் இலக்கியவாதி (???) ஆசையுமாய் அலைபாய்ந்தாலும், திரைப்பட ஆசையே வெற்றி பெற்றது. காலைக் காட்சி படம் பார்த்துவிட்டு, கே.ஆர்.பிக்கு போன் செய்தால் மனிதர் மதியத்திலிருந்தே கண்காட்சியில் இருப்பதாய் சொன்னார். இன்று பைக் பாஸ் வாங்கி வைத்திருந்ததால் நேரடியாய் கண்காட்சிக்கு அருகிலேயே வண்டியை பார்க் செய்துவிட்டு சென்றேன். போகிற வழியில் நாஞ்சில் நாடனுடன், பரமேஸ்வரி, அகநாழிகை வாசு, போகன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்க, ஒரு வணக்கத்தைப் போட்டேன். வாசு என்னை பரமேஸ்வரியிடம் அறிமுகப்படுத்த, என்னைத் தெரியும் என்றார். புத்தகங்களின் விலையைப் பற்றி நாஞ்சில் நாடனும், வாசுவும் பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாய் கூடும் டிஸ்கவரியில் போய் நின்றேன். நம் மக்கள் நிறைய பேர் இருந்தார்கள். மணிஜி மிகவும் டயர்டாக இருந்தார். போய் கொஞ்ச நேரத்தில் எல்லாம் டீ சாப்பிட கிளம்பினோம். கேண்டீன் வரை சென்ற போது சினிமா எக்ஸ்பிரஸில் இருந்த கிராபியன் ப்ளாக் வணக்கம் சொன்னார். அவருடன் சன் டீவி வெற்றிவேந்தன் இருந்தார். எல்லோரும் அளவளாவியபடி சாப்பிட வாங்க உணவகத்தில் டீ சாப்பிட்டோம். 

Jan 15, 2013

சமர்

ஊட்டியில் ட்ரெக்கராய் இருக்கிறார் விஷால்.  அப்பா பாரஸ்ட் ரேஞ்சர். விஷாலின் காதலி சுனைனா. தனக்கு முக்யத்துவம் கொடுப்பதில்லை என்ற காரணத்தால் விஷாலை பிரிகிறார் சுனைனா. காதலியின் பிரிவால் வாடிக் கொண்டிருக்கும் விஷாலுக்கு மூன்று மாதங்கள் கழித்து ஒரு லெட்டர் வருகிறது. விஷாலை மறக்க முடியவில்லை என்றும், உடனே தனனை வந்து பார்க்கும்படி பாங்காங்கிற்கு டிக்கெட் அனுப்புகிறார். ஆர்வமாய் காதலியை பார்க்க பாங்காக் போனவருக்கு திருப்பத்துக்கு மேல் திருப்பமாய் நடக்க ஆரம்பித்து ப்ரச்சனைகளில் மாட்டுகிறார். யார் சுனைனாவின் பெயரில் லெட்டர் அனுப்பியது?. எதற்காக விஷாலை சத்தாய்க்கிறார்கள்? தன்னை பிரச்சனையில் மாட்ட வைத்தவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறார்? முடிவு என்ன என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்.

புத்தக கண்காட்சி நாள்-2

புத்தக கண்காட்சி நாள் -2
வழக்கமாய் முதல் நாளே போய்விடுவேன். இம்முறை ரெண்டாம் நாள் சனிக்கிழமைத்தான் போக முடிந்தது. புதிய இடம். ஆனால் என் வீட்டிற்கு மிக அருகில் என்பதால் சாவகாசமாய் போனேன். மதியமே கே.ஆர்.பி அவரின் நண்பர்களோடு அங்கே போய்விட்டார். நான் ஐந்து மணிக்கு. Y.M.C.A நுழைவாயிலேயே வண்டியை பார்க்கிங் வைத்து விட ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல பார்க்கிங் கொள்ளை பத்து ரூபாய்.  ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம் நின்றிருந்தது. ரெண்டொரு பேர் கை தட்டக்கூட செய்தார்கள். கிட்டத்தட்ட நெடும்தூரம் நடந்து சென்று கண்காட்சி இடத்தை அடைய வேண்டியிருந்தது. வழக்கமாய் கண்காட்சியின் வாசலில் பெரிய அளவில் மைதானம் இருக்கும். ஆனால் இம்முறை திடல் கண்காட்சியின் இடது புறத்தில் இருப்பதால் வாசல் கொஞ்சம் அடைச்சலாகவே இருக்கிறது. மிக அருகில் சாப்பிட வாங்க கேண்டீன் வேறு. ஐந்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு  உள் நுழைந்தேன். முதல் நம்பர் கடையிலிருந்து ஆரம்பித்து வேடியப்பனின் 43-44 வரும் போது கே.ஆர்.பியும், சிவக்குமாரும் இருந்தார்கள். கே.ஆர்.பியுடன் ஒரு முழு நடை கண்காட்சி முழுவதும் சுற்றினேன். நிறைய பழைய நண்பர்களை சந்தித்தேன். நர்சிமின் சிறுகதை தொகுப்பும், கவிதை புத்தகமும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தார்கள். அட்டை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. படிக்க வேண்டும்.  நண்பர் ரோஸ்விக், போஹன், பத்மஜா ஆகியோர் வர, வழக்கம் போல டிஸ்கவரியில் ஜமா களை கட்ட தொடங்கியது. சென்ற முறையை விட இம்முறை என் புத்தகங்கள் டிஸ்கவரியில் மட்டுமில்லாது நிறைய கடைகளில் கிடைக்கிறது.

Jan 14, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க வைக்கும்  பாக்யராஜின் “ இன்று போய் நாளை வா” படத்தின் மறு பதிப்பு. டைட்டில், சந்தானம், மற்றும் பவர் ஸ்டார் வேறு. கேட்க வேண்டுமா? எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்தது.

Jan 12, 2013

அலெக்ஸ் பாண்டியன்

சினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமையும் கூட. ஆனால் அதைக்கூட முயற்சிக்காமல் சில படங்கள் வெளிவரும்.. வந்து கொண்டுமிருக்கிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து படமெடுப்பது என்பது சாதாரண காரியம் அன்று. ஆனால் இப்படக் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் ரசனையை, விருப்பத்தை அறிந்து படமெடுத்திருக்கிறார்கள்.

Jan 11, 2013

சாப்பாட்டுக்கடை - Mast Kalander

வெகு நாட்கள் கழித்து நண்பர் அண்ணன் பிரபாகரரிடமிருந்து போன். இன்னைக்கு மாலை என்ன வேலைன்ணே.. என்றார். அன்றைக்கு ஏதும் பெரிதாய் வேலையில்லை என்பதால் “ப்ரீதான்’ என்றேன். அப்ப நைட் டின்னருக்கு வந்திருங்க என்று மஸ்த் கலந்தர் அட்ரசை சொன்னார். அசோக்நகரிலிருந்து கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையை நோக்கிப் போகும் ரோட்டில் அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் மாடியில் அமைந்துள்ளது இந்த உணவகம்.

Jan 9, 2013

மக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/ மால்கள்-5

சத்யம் ப்ளஸ்கள்
சென்னையில் வசிக்கும் முக்கால்வாசி ரசிகர்கள் மிகவும் விரும்பி படம் பார்க்கும் திரையரங்கு ஒன்று உண்டென்றால் அது சத்யம் தான்.காரணம் ரசிகர்களுக்கு அவர்கள் செய்து கொடுக்கும் வசதிகள். சரியான சீட்டுக்கள் கூட இல்லாத திரையரங்குகள் எல்லாம் நூறும் இரு நூறுமாய் வாங்கி கொண்டிருக்க, அருமையான சீட்டிங், லேட்டஸ்டான ஓளி,ஒலி, நல்ல ஏர்கண்டீஷன், ரசிகர்களுக்கு சரியான சர்வீஸ், புகார் செய்தால் அதன் மீது உடனடியான நடவடிக்கை என்று எல்லா விதத்திலும் பணம் கொடுப்பவர்களை மதித்து, அவர்களுக்கான சர்வீஸ் செய்வதாலும் இந்த தியேட்டர் மீது மதிப்பு எல்லோருக்கும். இந்த திரையரங்கு வளாகம் வந்த பிறகு தான் தமிழகத்தில் மல்ட்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் வேறூன்ற ஆரம்பித்தது. இந்த வளாகத்தைப் பற்றிச் சொல்லப் போனால் நிறைய ப்ளஸுகளைத்தான் சொல்ல வேண்டும். மழைக்காலங்களில் கார் பார்க்கிங்கிலிருந்து ரசிகர்களை அழைத்து வர பெரிய குடைகளுடன் ஆட்களை வைத்து தியேட்டர் வாசல் வரை அழைந்து வந்ததை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். பின்பு ஆன் லைன் புக்கிங். முதல் முதலில் மிக சுலபமான ஆன்லைன் புக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான்.  அதே போல டிக்கெட் வாங்க வருபவர்களிடம் பார்க்கிங் செய்துதான் ஆகவேண்டும் என்று கொள்ளையடிக்காமல் டெம்ப்ரவரி பார்க்கிங்கில் அரை மணி நேரத்திற்கு இலவசமாய் அனுமதியளித்த முதல் திரையரங்க வளாகமும் இதுதான்.

Jan 7, 2013

கொத்து பரோட்டா -7/01/13

சனி இரவு சுமார் 11.30 இருக்கும் லஷ்மண் சுருதியை தாண்டும் போது அத்துனை ட்ராபிக் சத்தத்திலும் ஒரு பெண்ணின் “வீல்” அலறல். என்னவென்று பார்த்த போது ஒரு ஆட்டோ சுத்தமாய் நசுங்கியிருக்க, அதன் பக்கத்தில் ஒர் நசுங்கிய புல்லட்டோடு கால் உடைந்த வலி பொறுத்தபடி அமர்ந்திருந்த ஒருவர், தலையில் நல்ல அடியுடன், காதோரத்தில் ரத்தம் வழிந்த ஒரு ஐம்பது வயதுக்காரரின் உடல், அவரை மடியில் போட்டுக் கொண்டு, தலையில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி இருந்த ஆட்டோட்ரைவர் வாய் கிழிந்து ரத்தமும் எச்சிலுமாய் வழிந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்றவர்கள் பல பேர் “போயிருச்சா.. போயிருச்சா” என்று கேட்க, அய்யோ யாராச்சும் காப்பாத்துங்களேன் என்று நம்பிக்கையோடு மேலும் வீல் என்று அலறினால் பெண்மணி. அவளை மினி ஜெராக்ஸாய் உரித்தார்ப் போல், ஒன்றும் புரியாமல் மலங்க, மலங்க விழித்தபடி நிற்கும் பதிமூன்று வயதிருக்கும் பெண் குழந்தை. விபத்து நடந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். போலீஸும் வரவில்லை, ஆம்புலன்ஸும் வரவில்லை. நானும் என் நண்பரும் உடனே 108க்கு போன் செய்துவிட்டு, போலீசுக்கும் சொன்னார்கள்.  போலீஸ் வந்தார்கள். கூட்டம் விரைவாக செயல்படுவதாய் நினைத்து ஒரு மட்டடேர் வேனை வழிமறித்து அதில் பெரியவரை தூக்கிப் போட்டு அருகில் உள்ள பல்லவாவுக்கு போனார்கள். ஆம்புலன்ஸ் வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆக, கால் உடைந்தவரை ஏற்றிவிட்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரிடம் இன்னொரு விக்டிம் பல்லவா ஆஸ்பிட்டலில் இருக்காங்க.. என்று சொல்லிவிட்டு பின்னால் சென்றேன். பல்லவா ஆஸ்பிட்டலின் வாசல் கண்ணாடி கதவை பூட்டி விட்டு உள்ளிருந்து நர்சுகள், டாக்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதலுதவி கூட செய்ய் முடியாதாம். ஏனென்றால் ஐ.சியூ இல்லையாம். ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றும் போது அவருக்கு உயிர் இருந்ததாய் தெரியவில்லை. உடன் இருந்த பெண்ணும், ஆட்டோ ட்ரைவரும் சிறு பெண்ணுமாய் ஆம்புலன்ஸில் கிளம்ப,  உடன் இருந்து உதவியவ ஆஸ்பிட்டல் உதவியாளர் ஒருவர்  சொன்னார்..” ஆக்சிடெண்ட் கேஸு எவன் பில்லு கொடுப்பான். அட்மிட் பண்ணிட்டு அலைய இவனுங்க என்ன சும்பனுங்களா?” என்றபடி உள்ளே போனார். ஆஸ்பிட்டலின் மீதுள்ள கோபம் அதில் தெரிந்தது. சென்னையில் மிக முக்கியமான சந்திப்பு அது பெரும்பாலான நேரங்களில் அருகிலேயே வடபழனி போலீஸ் நிலையம் இருந்தும் ட்ராபிக் போலீஸ் இருப்பதில்லை. இந்த ஆட்டோவை ஒரு லாரி  ஆட்டோவின் மீது மோத, எதிர்பக்கம் வந்த பைக்கின் மீது ஆட்டோ மோதிட,  இந்த விபத்து. லாரிக்காரன் ஓடி விட்டான் என்கிறார்கள். சென்னையில் மிக அபாயகரமான சிக்னலும் அதுதான். தயவு செய்து நள்ளிரவு வரை போலீஸ் இருப்பது அவசியமான ஒன்று.
@@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு அடுத்து ஸ்டாலின் என்றதும் ஸ்டாலின் கோஷ்டியினரும், பொதுவான திமுகவினரும் அப்பாடி ஒரு வழியாய் இப்போதாவது தாத்தா சொன்னாரே என்று சந்தோஷப்பட, திமுக மடமல்ல என்று மதுரை பெருசு அறிக்கை விட்டதும், ஆரம்பிச்சிருச்சுடா ஏழரை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் தொண்டர்கள். இன்றைய தினசரி பேட்டிகளில் நான் எங்கே திமுகவிற்கு அடுத்த தலைவர் என்று சொன்னேன். பொது தொண்டாட்றுவதற்கு தான் எனக்கு அடுத்து என்றேன் என்றும் பத்திரிக்கைகள் திரித்து எழுதியிருக்கிறது என்றும், ஆனால் எனக்கு முன்மொழிய வாய்ப்பு கிடைத்தால் நான் ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன் என்று சொல்லியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி சட்டப்படி பொதுக்குழுவின் முடிவில்லாமல் ஒரு தலைவர் தேர்தெடுக்கப்பட மாட்டாது என்று தெரிந்தாலும், இந்த பதில் கடவுள் இல்லைன்னு எங்க சொன்னேன் இருந்தா நல்லாருக்கும்னுதானே சொன்னேன் என்பது போல இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 5, 2013

எண்டர் கவிதைகள்-24


படகுப் பயணமாய்

முன்பனிக் காற்றாய்

ஏகாந்தத்திலும் உன்னுடனாய்

முத்தத் தீற்றலில் தகிப்பவனாய்

ஒவ்வொரு நொடியும் உன் மடியில்

இருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட

காதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்?

நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?

கேபிள் சங்கர்

Jan 4, 2013

Yamudiki Mogudu


எமன் - மனிதன், இந்த காம்பினேஷனில் தெலுங்கில் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லிவிடலாம். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களும் எமனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை காமெடியாக செய்து ஹிட்டடித்திருக்கிறார்கள். இவர்கள் காமெடியாகவே முயற்சித்திருக்கிறார்கள்.

Jan 2, 2013

கேபிளின் கதை பற்றி ஒர் சிறு உரையாடல்

பல வருடங்களுக்கு முன்பு..
அது ஒரு முன்பனிக் காலம். சேலத்தின் என் பெற்றோர் வீட்டில் இருந்தேன், சேலம் ஏற்காடு அடிவாரம் அருகில் அமைந்த ஊர் அது. உடல்நிலை சரியில்லாத என் அப்பாவிற்கு பால் வாங்க பூத்திற்கு போன என் அண்ணன் அவசரமாக வீட்டுக்கு ஓடி வந்து காபி போட பால் தந்துவிட்டு, பதறியபடி சொன்ன நியூஸ் “பிரபல ரவுடி” ஆட்டோ சங்கர் தூக்கிலடப்பட்டு விட்டான்  அவன் உடல் சென்றா வேனை நான் மிக அருகில் செர்ரி ரோடு அருகில் பார்த்தேன் என்றான். அவன் சுஜாதா வாசகர் அன்று “ஆட்டோ சங்கர்” என்ற அந்த “சரித்திர புகழ்’ பெற்ற பெயர் தந்த திடீர் அதிர்ச்சி, பயம், சஸ்பென்ஸ், திரில் இதையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகு ‘கேபிள் சங்கர்” என்கிற மாஜிக் பெயர் எனக்கு தந்து கொண்டே இருந்தது, இருக்கிறது.