Thottal Thodarum

Sep 1, 2014

கொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், Peruchazhi, Munariyappu,கேட்டால் கிடைக்கும்

கேட்டால் கிடைக்கும்
ஃபேம் தியேட்டர் புட் கோர்ட்டில் குடிக்க ஓரமாய் வைத்திருந்த தண்ணீர் கேனை இப்போது கண்ணுக்கு தெரிவது போல வைத்திருந்தார்கள். புட் கோர்ட்டில் கார்டு வாங்கினால் தான் சாப்பிட முடியும் என்று சட்டம் வைத்திருந்தாலும், ஈ அடிக்கும் கூட்டமிருப்பதால் ஒவ்வொரு கடைக் காரரும், ஆளுக்கு ஒர் ஸ்வைப்பிங் கார்டு வைத்து அதைக் கொடுத்து உணவுகளுக்கு காசை கொடுக்க சொல்லி விடுகிறார்கள். கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இப்போது இவர்களுக்கு ஒர் ஆப்பு வருகிறது அந்த மாலில் ஜூனியர் குப்பண்ணா ஒரு புதிய கிளையை திறக்கிறது. அங்கே இருந்த சிக் கிங் கவுண்டரில் டயட் கோக் வாங்க விலை என்ன என்று கேட்ட போது 35 ரூபாய் என்றார். “அது முப்பது ரூபாதானே?” என்று கேட்ட போது ஆமா.. மால்ங்கிறதுனால 5 ரூபா எக்ஸ்ட்ரா என்றார். அதெப்படி வாங்குவீங்க..? என்று கேட்டதற்கு மாலுக்கு வர்றீங்க இல்லை காஸ்ட்லியாத்தான் இருக்கும் என்றார். அது எப்படிங்க வாங்குவீங்க? என்று கேட்டதற்கு புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து, “சினிமா டிக்கெட் 120 கொடுத்து வாங்குறீங்க.. அங்கேயே 10 ரூபா டிக்கெட்டும் இருக்கு அதை வாங்க வேண்டியதுதானே?” என்றார். “சார்.. தேவைனா 10 ரூபா டிக்கெட் கூட வாங்கிப் பார்ப்பேன். ஆனா அவங்க கவுண்டர்ல 10 ரூபா டிக்கெட்டை 11ரூபாய்க்கு விக்குறது இல்லை  என்றேன். பதில் பேசவில்லை. நாட்டுல அவனவன் கொள்ளையடிக்கிறான் அதை விட்டுட்டு இதை கேக்குறீங்க? என்றார். நான் இங்க 5 ரூபாய்க்கு இவ்வளவு கேள்வி கேக்குறேன் இல்லை அதே போல கேளூங்க நிச்சயம் கிடைக்கும் என்றேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


எல்லா தியேட்டர்களிலும் பை அல்லது லேப்டாப் பேக் எடுத்துப் போனால் ஏதோ பாம் ஸ்குவாட் செக்கப் செய்வது போல பையைப் பிடுங்கி செக் செய்யாமல் விட மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் செக் செய்வது பாமுக்காக இல்லை உள்ளே ஏதாவது சாப்பாடு அயிட்டம் எடுத்துக் கொண்டு போய் விட்டால், அவர்கள் கடையில் வியாபாரம் ஆகாது என்கிற பயத்தில் தான் இத்தனை செக்கப். இத்தனைக்கும் மெட்டல் டிடெக்டர் செக்கப் வழியில் எல்லாம் தான் அனுப்புகிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Munnariyappu
மலையாள படங்களில் சமீபகாலமாய் மம்மூட்டியின் படங்களை பார்ப்பதில்லை என்ற கொள்கையை ரெண்டு மூன்று இணைய தளங்களில் பாராட்டியிருந்தார்களே என்ற கருத்தில் இப்படத்தை பார்க்கப் போனேன். மனைவி, தான் வேலை பார்த்த இடத்தில் சேட்டுப் பெண் இரண்டு பேரைக் கொன்று விட்டு இருபது வருடங்களாய் தண்டனைக் காலம் முடிந்தும் கூட ஜெயிலருக்கு எடுபடியாய் இருந்து வருகிறவர் மம்மூட்டி. ஜெயிலரின் வாழ்க்கை வரலாறை எழுத வரும் பத்திரிக்கைகாரி மம்மூட்டியின் வாழ்க்கையின் மேல் ஈடுபாடு ஏற்பட்டு, அவரை பற்றி கட்டுரை எழுதுகிறார். அவரின் வாழ்க்கை அனுபவத்தை புத்தகமாக்கித்தர  ஜெயிலிருந்து கூட்டி வந்து தனியே வைத்து எழுதச் சொல்கிறார் பத்திரிக்கைகாரி. அவன் அப்பெண்களை கொன்றானா? இல்லையா? இந்த பத்திரிக்கைக்காரிக்கு என்ன பதில் கிடைத்தது என்பதுதான் படம். ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட் ஒலக கலை படங்களின் தாக்கத்தோடு இருந்தது பெரும்பாலான பேர்களுக்கு ஏமாற்றமாகவும்,மிகவும் சில பேர்கள் ரசித்தாகவும் தெரிகிறது. மம்மூட்டி ரொம்ப நாளுக்கு பிறகு அழுத்தமான அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேணுதான் இயக்குனர். இதற்கு முன் மலையாளத்தில் ஒர் படம் எடுத்திருக்கிறார். டைட்டில் காட்சியில் நிறைய கட்டெரும்புகள் கூட்டமாய் இறந்த பல்லி ஒன்றை தூக்கி செல்லும் காட்சி  அது. செம்ம.. க்ளைமேக்ஸ் தான் எனக்கு புரியலை பார்த்தவங்க புரிஞ்சா சொல்லுங்க. இது வரைக்கும் ஐந்து பேர் அவங்கவங்களுகு புரிந்த க்ளைமேக்ஸ சொன்னார்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • பணம் கையாளுபவர்கள் நல்ல கிரியேட்டர்களாக இருக்க முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். 
  • ஜாதகம் சரியா இல்லையான்னு தெரிஞ்சிக்கனூம்னா நல்ல விஷயம் சரியான கிரக நிலையில நடக்காம கெட்ட விஷயம் மட்டும் சரியா நடக்கும் அப்ப தெரிஞ்சிக்கலாம்

    • ஐஸ் பக்கெட் சேலஞ்சில் பெண்கள் பங்கு பெறும் வீடியோக்கள் மட்டும் செம ஹிட்டடிக்கிறது.#அவதானிப்பூஊஊ
        • ஒரு படம் பார்த்த பின் அதைப் பற்றிய சிந்தனை ஓடுவது படம் கொடுத்த பாதிப்பினால் மட்டுமல்ல புரியாதததினால் கூட இருக்கலாம்.#Munniariyippu
          • படிக்கும் பாதிபேர் முதல் வரியையும், கடைசி வரியையும் மட்டுமே படித்துவிட்டு கருத்து சொல்வது எப்போது சரியாகுமோ அப்பத்தான் இந்தியா வல்லரசாகும்:)

            • ஒரு க்ளிம்ஸை பார்த்தால் கூட முழு படத்தை பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன் #கன்னத்தில் முத்தமிட்டால் @prakashraaj ராக்ஸ்

              • தெரிஞ்சோ தெரியமயோ வாழ்த்து சொல்லியாச்சு. தலைவன் சொல்லிட்டானேன்னு உபிக்களும் சப்பைக்கட்டு கட்டியாச்சு. இப்ப என்ன திடீர்னு நாங்க இல்லைங்கிறது

        • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
        ஒரு பிரிட்டிஷ் காரராய் இருந்து கொண்டு, ரிச்சர்ட் அட்டன்ப்ரோ எப்படி காந்தியை தத்ரூபமாய் எடுத்திருக்கார்? என்று நண்பர் SKP Karuna டிவிட்டரில் கேட்டிருந்தார். எனக்கென்னவோ பிரிடிஷ் காரனால்தான் இந்தியாவை சரியாய் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. இல்லாட்டி அடிமை படுத்த முடியுமா?:என்றேன்.
        @@@@@@@@@@@@@@@@@@@
        PERUCHAZHI
      • மோகன்லால், நம்மூர் அருண் வைத்தியநாதன் காம்போ என்கிற எதிர்பார்ப்புடன் தியேட்டருக்குள் நுழைந்தேன். அருண் என் நண்பர். டைட்டில் கார்டில் போனை ஆஃப் செய்யும் போதே லாஜிக்கை பார்க்கும் மூளையையும் ஆப் செய்யுங்கள் என்று போடுகிறார்கள். அப்ப செம்ம காமெடி இருக்கு என்று ஆர்வத்துடன் உட்கார்ந்தேன். முல்லை பெரியாறு ப்ரச்சனையை திசை திருப்ப, வெளிமாநில ஐயப்ப பக்தர்களுக்கு டாக்ஸ் என்று பெரியாறு ப்ரச்சனையை திசை மாற்றி விடும் அளவுக்கு ஐடியா மணியாய் இருக்கும் மோகன்லாலின் வளர்ச்சி தனக்கு இடைஞ்சலாய் இருக்க, முகேஷ் அவரை அமெரிக்க கவர்னர் தேர்தலுக்கு ஐடியா மணி வேலை பார்க்க அனுப்புகிறார்.  இது வரை ஒரளவுக்கு சர்காஸ்டிக்காக போன படம் அமெரிக்கா போன மாத்திரத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடுவது போல, கதை, லாஜிக், காமெடி என்று எல்லா விஷயத்தையும் தேடித்தேடி களைப்படைந்ததுதான் மிச்சம். லாஜிக் இல்லை என்று தான் முன்னமே சொல்லிவிட்டார்களே என்று கேட்பீர்கள். லாஜிக் இல்லாத படங்களை பார்க்க வேண்டுமென்றால் திரைக்கதையில் அதை மறக்கடிக்கும் மேஜிக் வேண்டும். அது டோட்டலி மிஸ்ஸிங். இதில் மோகன்லால் எனும் மேஜிக்கை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். அவரும் எவ்வளவு நேரம்தான்.... 
      • @@@@@@@@@@@@@@@@@@@@@
        சலீம்
      • நடிகர்கள் பின்னால் போனால் தான் வெற்றி என்ற ஒர் எண்ணம் பல தயாரிப்பாளர்களூக்கு இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையோடு க்ரிப்பிங்காக படம் சென்றால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த சலீம் மூலம் விஜய் ஆண்டனி நிருபித்திருக்கிறார். முதல் பாதியில் அங்கிங்கு கொஞ்சம் இலக்கில்லாமல் அலைந்தாலும், இரண்டாவது பாதியில் உட்கார வைத்துவிடுகிறார் இயக்குனர். சின்னச் சின்ன வசனங்களுக்கு எல்லாம் மக்கள் சந்தோஷமாய் கை தட்டுகிறார்கள். க்ளைமேக்ஸில் என்ன நடக்குமென்று ஓரளவுக்கு படம் ஓடும் போதே கணிக்கிறார்கள். உன்னை கண்ட நாள் முதல், மஸ்காரா போன்ற பாடல்கள், மற்றும் ஆங்காங்கே பின்னணியிசையில் தன்னை மீண்டும் நிருபித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. நடிப்பில் மட்டும் முதல் பட லெவலிலேயே இருக்கிறார். ஒரு வேளை முதல் பட கேரக்டரின் தொடர்ச்சி என்பதால் கேரக்டரை தொடர்கிறாரோ? என்பது போன்ற குறையாய் ஒரு சில லாஜிக் விஷயங்கள் இருந்தாலும், நிறையாய் நிறையவே இருப்பதால்.. சலீம் இந்த வார கருப்பு குதிரை.
      • @@@@@@@@@@@@@@@@@@@@@
      • அடல்ட் கார்னர்
      • Little Sally came home from school with a smile on her face, and told her mother, "Frankie Brown showed me his weenie today at the playground!" Before the mother could raise a concern, Sally went on to say, "It reminded me of a peanut." Relaxing with a hidden smile, Sally's mom asked, "Really small, was it?" Sally replied, "No, salty." Mom fainted.
        • கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Krishna said...

Sir Read your comments on Internet and FB comments for Tamil Cinema Development in Kungambam magazine.
Wonderful

thiru said...

//நான் இங்க 5 ரூபாய்க்கு இவ்வளவு கேள்வி கேக்குறேன் இல்லை அதே போல கேளூங்க நிச்சயம் கிடைக்கும் என்றேன்.//

Sema Punch ..

thenali said...

Your adult joke is no way different from child porn which is crime against humanity. I would rather do mind paying Rs 50 extra to someone.