Thottal Thodarum

Jan 27, 2014

கொத்து பரோட்டா -27/01/14 - கோலி சோடா, தொட்டால் தொடரும், நடு நிசிக்கதைகள், மணிரத்னம் படைப்புகள், A Separation, Serbian Film, மல்ட்டிப்ளெஸ்கள்.

தொட்டால் தொடரும் தினசரி விளம்பரம் நேற்று வெளியானதிலிருந்து வந்த போன்கால்களை வைத்து பார்க்கும் போது, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதையும் உணர முடிந்தது.  ஒவ்வொரு போன் காலிலும், அவர்கள் குரலில் தெரிந்த சந்தோஷம், என்னுள் மேலும் உற்சாகத்தையும் பயத்தையும் கொடுத்தது. நிச்சயம் எல்லாம் வல்ல இறைவனின் துணையோடும், உங்கள் அன்பின் துணையோடு சிறப்பாய் வர உழைக்கிறேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 20, 2014

கொத்து பரோட்டா - 20/01/14 -நடு நிசிக் கதைகள், Lucia, Dedh Ishqiya, புத்தக கண்காட்சி.

நடு நிசிக் கதைகள் -5
கட்டங்கடைசியாய் நானும் என் ஹீரோ தமனும் படம் பற்றி பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். வழக்கம் போல உதயம் தியேட்டர் அருகில் போலீஸ் செக்கிங். இளைஞரான போலீஸ் ஒருவர் அமைதியாய் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பேப்பர்களையும், லைசென்சையும் கேட்டார். கொடுத்தேன். தண்ணியடித்திருக்கிறோமா இல்லையா? என்பதை கண்டுபிடிக்க மரியாதையாய் குனிந்து பேசுவதைப் போல  வாடை பிடித்தபடி பேசினார். லைசென்சையும் வண்டி ஆர்.சியையும்  விளக்குக்கு அருகில் கொண்டு போய் ஒர் நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். திரும்ப பேப்பரை கொடுக்க வந்த போது “என்ன நோட் பண்றீங்க?” என்று கேட்டேன். உங்க வண்டி நம்பர், அட்ரஸ், எல்லாம் என்றபடி உங்க செல் நம்பர் சொல்லுங்க என்றார். நான் எதுக்கு? என்றேன். :”இல்ல வாங்க சொல்லியிருக்காங்க” “அதாங்க எதுக்கு கொடுக்கணும்?. நீங்க பேப்பர் கேட்டீங்க கொடுத்திட்டேன். அட்ரஸ் நோட் பண்ணிட்டீங்க அது கூட ஓகே..  லைசென்ஸ் ஓகே.. ஆனா போன் நம்பர்ங்கிறது அதுவும் செல் நம்பர்ங்கிறது ப்ரைவசியான ஒரு விஷயம். அதை எப்படி நீங்க எல்லா பேப்பரும் சரியா இருக்கிற ஆளுகிட்ட கேட்பீங்க. நான் என் செல் நம்பரை தரமாட்டேன். அதோட நானும் பொதுவெளியில் இயங்கும் ஒர் எழுத்தாளன். சினிமாக்காரன். காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. எஸ்.ஐ. வந்தார். “என்ன ப்ரச்சனை என்பதைப் போல பார்த்தார்” இளம் அதிகாரி விஷயத்தை சொல்ல, “சார்.. எங்க உயரதிகாரி வாங்க சொல்லியிருக்காங்க. வாங்குறோம்.” என்றார். அதெப்படி சார்.. என்று ஆரம்பித்து இளம் அதிகாரியிடம் கேட்டதையே கேட்க, நம்பர் கொடுக்கிறதினால என்னா நடந்திரப் போவுது?” என்றார். இந்த ரிஜிஸ்தர்ல இருக்கிற போன் நம்பரை யாரும் மிஸ் யூஸ் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? “அதெப்படி சார்.. நடக்கும்? “நம்மூர்ல ப்ரைவஸிக்கு என்ன அர்த்தம்னே தெரியாது சார்..நாளைக்கு உங்க ஸ்டேஷன்லேர்ந்தே யாராவது எடுத்து டேட்டாவா வித்துருவாங்க” என்றதும். சார்.. உங்களுக்கு கொடுக்க இஷ்டமில்லைன்னா விடுங்க...என்ன நாளைக்கு அதிகாரிங்க வந்து கேட்கும் போது ரெண்டு ஸ்டார் போட்டிருக்கிறியே உன்னால ஒரு போன் நம்பர் வாங்க முடியலையான்னு கேட்பாங்க. ஆனால் நீங்க நினைக்கிறா மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. என்றவர். நீங்க கேட்குற கேள்வி கரெக்ட் தான். பத்திரிக்கையில எழுதுறேன்னு சொல்லுறீங்க.. இதைப் பத்தி எழுதி ப்ரஸ் மீட்டும் போது கேளுங்க. என்றார்.  கடைசியாய் கிளம்பும் போது இளம் அதிகாரி “எங்கேயிருந்து வர்றீங்க? என்ன விஷயமாய் போனீங்க? ” என்றார் விடாப்பிடியாய். “காலையில வடபழனி போனேன் என்று கடுப்பாய் ஆரம்பித்தேன். “இல்லை சார்.. இப்ப எங்கிருந்து வர்றீங்க அத சொன்னாப் போதும்” என்றார் பொறுமையாய். சொன்னேன். நிச்சயம் நம்பர் கேட்கும் விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று தளத்தின் முகவரியை சொல்லிவிட்டு கிளம்பினேன். இத்தனை கேள்விகளுக்கும் மிக மரியாதையாய், பொறுமையாய் பதில் அளித்த போலீஸ் அதிகாரிகளுக்கு என் வந்தனங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 18, 2014

எண்டர் கவிதைகள் - 25

கை தொடும் தூரத்தில்
நீ இருந்தாலும் 
எனக்கு கொடுத்து வைத்தது
என் கைதான்.
  • கேபிள் சங்கர்

Jan 16, 2014

எண்டர் கவிதைகள் -22

ம்.. என்றாய்

 ம் என்றேன்

ம் மிகவும் பிடிக்குமா? 

ம்ம்ம்ம் என்றேன்

ஏன்?

உன் ஒவ்வொரு ம்க்கும் 

ஒவ்வொரு அர்த்தமென்றேன்

ம்ஹும்..

ம் என்றேன்

கோபமாய்,

சிணுங்கலாய்,

செல்லமாய்,

சலிப்பாய்

முத்தமிடும் போதும்

இறுக்கமாய் அணைக்கும் போதும்

அணைத்த பின் நடக்கும் கூடலின் போதும்

கூடல் முடிந்து பேச்சாய் பதில் சொல்லும் போதும்

உன் ஒவ்வொரு ‘ம்”மும் ஒவ்வொரு அர்த்தமென்றேன்

“ம்... அப்படியா” என்றாய்

இந்த ம் எதை ஆரம்பிக்கும் என்று 

எனக்கு தெரியும்

  • கேபிள் சங்கர்

Jan 13, 2014

கொத்து பரோட்டா - 13/01/14 -Dhrishyam, Nenokkadaine, வீரம், ஜில்லா, புத்தக கண்காட்சி


புத்தக கண்காட்சி -3
இன்று என் மகன்களுடன் செல்வதாய் ப்ளான்.  தயாரிப்பாளர் சி.வி. குமாரும் அழைத்திருந்தார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும். பன்னிரெண்டு மணிக்கு காரில் சென்றால் பார்க்கிங் செய்ய இடமில்லை என்று திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியேயில்லாமல் வண்டியை யூ டர்ன் செய்து கொண்டு, எதிர் சைடில் இருந்த ஒர் கடையின் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றேன். ஞாயிறு என்பதால் சாத்தியமானது. செம கூட்டம். இன்று வெய்யில் கொஞ்சம் இருந்ததால் வியர்த்துக் கொட்டியது. மினிமல்ஸ் அமெரிக்க ஐஸ்கிரீமோடு எங்கள் ஷாப்பிங் ஆரம்பமானது. ஒரு பக்கம் மகன்கள் ஒவ்வொரு கடையாய் சுற்றிப் பார்த்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நானும் சிவியும், தற்கால சினிமா, அவரின் தயாரிப்புக்கள், என் படத்தின் தற்போதையை நிலை என்று தமிழ் சினிமாவை ஒர் அலசு அலசினோம். கவிஞர் கீதாஞ்சலி எங்கள் இருவரையும் அடையாளம் கண்டு வாழ்த்தினார். மூத்த மகன் ஒர் ஆங்கில நாவலை செலக்ட் செய்ய, சின்னவனிடன் கேட்டதில் பார்த்த வரையில் ஏதும் இம்ப்ரஸ் செய்யலை என்றான். முடியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 12, 2014

புத்தக கண்காட்சி -2

வழக்கமாய் முதல் நாளே ஆஜராகி விடுவேன். தொட்டால் தொடரும் படத்தின் டப்பிங் வேலைகள் காரணமாய் முடியவில்லை. பொங்கல் விடுமுறைக்காக எல்லாம் பேக்கப் செய்யப்பட்டதால் மாலையில் முதல் விஜயம். வழக்கம் போல வாசலிலேயே பார்க்கிங் ஏற்பாடு டூவீலர்களுக்கு. கார்களுக்கு ஊரைச் சுற்றி பின் பக்கம். ஆனால் போன முறை போல உள்ளே போகும் வழிகள் எல்லாம் தெளிவாய் வரவேற்பு வளைவுகள் எல்லாம் வைத்து அசத்தியிருந்தார்கள்.  முன் பக்க விழா மேடை இம்முறை கொஞ்சம் விசாலமாய் இருந்தது.  வழக்கம் போல் வண்டியை பார்க் செய்துவிட்டு திரும்பிய போது எழுத்தாளர் இளங்கோ அவரது மனைவியுடன் எதிர்பட்டார். சிறிது நேரம் பொதுவாய் பேசிவிட்டு கிளம்பும்போது அவரது உங்களது விமர்சனமில்லாமல் மொக்கை படத்துக்கெல்லாம் போய்  மாட்டிக் கொள்கிறோம் என்றார். அவர்கள் சென்ற பிறகு இன்னொரு நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது சாப்பாட்டுக்கடை படித்துவிட்டு எல்லா கடைகளிலும் என் குடும்பத்துடன் சாப்பிடுவேன் என்றார்.  மகிழ்ச்சியாய் இருந்தது.

Jan 6, 2014

கொத்து பரோட்டா - 06/01/14-Uyyala Jampala, நம்ம கிராமம், தந்தி டிவி, புத்தக வெளியீடு, தொட்டால் தொடரும்

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். எங்கு பார்த்தாலும் புத்தக வெளியீட்டு விழாவாய் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மூன்றாவது புத்தகம் வெளியிடுகிறவர்களுக்கும், முதல் புத்தகம் வெளியிடுகிறவர்களுக்கும் என் வாழ்த்துகள்.  தொட்டால் தொடரும் பட டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறைய நண்பர்கள் அவர்களது புத்தக வெளியீட்டிற்கு அழைத்திருந்தும் போக முடியவில்லை. . அதையும் மீறி ஒளிப்பதிவாளர், நண்பர் சி.ஜே. ராஜ்குமாரின் “பிக்ஸல்” புத்தக வெளியீட்டிற்கு அவர்கள் ப்ரசாத் லேப்பை காலி செய்வதற்கு முன் சென்று வாழ்த்தினேன். சற்று முன்னர் வந்திருக்கலாமென்று சி.ஜே. ராஜ்குமார் வருத்தப்பட்டார். புத்தகம் நன்றாக வந்திருப்பதாகவும் நல்ல விற்பனையென்றும், நான்கைந்து கூட்டங்களிடையே நல்ல கூட்டமும் கூட என்று வேடியப்பன் சொன்னார். மகிழ்ச்சி. அதையேத்தான் மனுஷ்யபுத்திரனும் ஃபேஸ்புக்கில் கூறியிருந்தார்.ரெட்டிப்பு மகிழ்ச்சி. அனைவரையும் புத்தக கண்காட்சியில் பார்க்கலாமென்று நினைக்கிறேன். என் புதிய புத்தகமான சாப்பாட்டுக்கடை சென்ற மாதமே வெளியாகிவிட்டது. மதி நிலையத்தில் மட்டுமில்லாது பரவலாய் பல ஸ்டால்களில் கிடைக்கும் விவரங்கள் வந்தவுடன் பகிர்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 3, 2014

சாப்பாட்டுக்கடை - ONLY VADA

ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடை பகுதி எழுதி. தொட்டால் தொடரும் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் என பிஸி. நேற்றிரவு டப்பிங் முடித்துவிட்டு நண்பர் ஒருவரை கே.கே.நகரில் பார்த்துவிட்டு கிளம்புகையில் என் இசையமைப்பாளர் பி.சி.சிவன் எம்.ஜி.ஆர் நகர் உடுப்பி டாடா ஓட்டலுக்கு அருகில் வடைக்கு மட்டுமே ஸ்பெஷலாய் ஒர் உணவகம் திறந்திருப்பதைப் பற்றி சொன்னது ஞாபகம் வர, உடன் வண்டியை விட்டேன்.