Thottal Thodarum

Aug 26, 2014

MARDAANI

ட்ரைலர் பார்த்ததிலிருந்து ஒரு நடை போய்ட்டு வந்திருவோம்னுதான் தோணிட்டே இருந்தது. சைல்ட் ட்ராபிக்கிங் தான் கதை.  ஏற்கனவே இக்கதை களனில் ஏகப்பட்ட படங்கள் உலகம் பூராவும் வந்திருக்கிறபடியால் இதில் என்ன புதுசாய் இருந்துவிட போகிறது என்ற எண்ணம் தலைப்பட்டாலும், எனக்கு பிடித்த ராணி முகர்ஜியும், அவரது கரகரகுரலும் என்னை தியேட்டருக்குள் அழைத்தது.

Aug 25, 2014

கொத்து பரோட்டா - 25/08/14

சேனல் எங்கும் யாராவது கோட்டு மாட்டிக் கொண்டோ, கொள்ளாமலோ பேசிக் கொண்டேத்தான் இருக்கிறார்கள். Donahue show தான் மெல்ல ஹிந்திக்கு போய் அரட்டை அரங்கம் ஆனது. பின்பு அதுவே நீயா நானா அது இது என ஏகப்பட்ட டாக்‌ஷோக்கள். இந்திய ஆங்கில சேனல்களில் அமீர்கான், சிமி, கரன் ஜோஹர் என பிரபலங்கள் எல்லாம் டாக் ஷோ நடத்தி வரும் வேளையில் சமீபத்தில் zcafe சேனலில் நிரஞ்சன் அய்யங்கார் என்பவரின் டாக் ஷோ பார்த்தேன். அந்த வாரம் அவர் காஜோலுடன் அளவளாவினார். அவர்கள் பேசியது மட்டுமில்லாமல். அதை படமாக்கிய விதமும் அட்டகாசமாய் இருந்தது. இரண்டு மூன்று கேமராக்கள், அதீத க்ளோசப்கள், வெவேறு லொக்கேஷன்கள் என விஷுவலாகவும் நன்றாக இருந்தது. மிக சுவாரஸ்யமான இரண்டு நண்பர்களிடையே நடைபெறும் பேச்சாய் அமைந்திருந்தது. நிரஞ்சன் அய்யங்கார் ஒர் “கே” வாம்.  கரன் ஜோகரின் நெருங்கிய நண்பர் என்ற சுவாரஸ்யமான பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். எனக்கு பிடித்த அந்நிகழ்ச்சியின் ஒர் எபிசோட் இங்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 21, 2014

சாப்பாட்டுக்கடை - செட்டிநாடு சைவ பவன்

பெயரைப் பார்த்த மாத்திரத்தில் அட என்னடா இது செட்டிநாடு அசைவ உணவகம் பார்த்திருக்கிறோம். சைவ உணவகமா? என்ற ஆச்சர்யத்தோடு கடையின் உள் நுழைந்தேன். ஓரளவுக்கு நல்ல கூட்டமிருந்தது. உள்ளே போய் உட்கார்ந்த மாத்திரத்தில் நல்ல வரவேற்பும், ஒரே நேரத்தில் பல பேர் ஆர்டர் சொல்லிட்டீங்களா? என்று அதீத உபசரிப்பை பார்த்த மாத்திரத்தில் கடையை திறந்தே ரெண்டொரு நாட்கள் தான் இருக்குமென தோன்றியது. மெனு கார்ட் கேட்டேன். “ சார் இன்னைக்குத்தான் திறந்திருக்கோம். இப்போதைக்கு மீல்ஸ் மட்டுமே இருக்கு” என்றார். எனக்குள் சிரித்துக் கொண்டேன். ஓகே மீல்ஸ் என்று ஆர்டர் செய்த மாத்திரத்தில் தட்டில் சாப்பாடு வந்தது.  

Aug 19, 2014

இடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்

”டாக்டர்.. இதோ வலது பக்க இடுப்பு கிட்ட கட்டியா இருக்கு. அழுத்தினா வலிக்குது” என்றேன்.

Aug 18, 2014

கொத்து பரோட்டா-17/08/14

பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர் என்ற டேக்குடன் அஞ்சான் வருவதால் உடன் எந்த படமும் வராது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் "கதை திரைக்கதை வசனம், இயக்கம்" படமும், பத்திரிக்கையாளர் முத்துராமலிங்கத்தின் சிநேகாவின் காதலர்கள்" படமும் உடன் வெளியாகி உள்ளது ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திபன் சார்.. மற்றும் முத்து ராமலிங்கம் இருவரையும் சந்தித்த போது  இருவருமே உறுதியாய் இருந்தார்கள். 25 வருடங்களுக்கு முன் இதே போல புதிய பாதை படத்தை ரெண்டு மூன்று படங்களுக்கு இடையே வெளியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்தை சொன்னார். மீண்டும் அதே கான்செப்டோடு "அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வாங்க என்று விளம்பரம் செய்து இன்று வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு படத்தை பற்றி சொல்லுகிறேன் வாழ்த்துகள் பார்த்திபன் சார்.  முத்துராமலிங்கம் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 14, 2014

Aashiqui-2

எந்த பார்ட்டிக்கு சென்றாலும், எந்த ஒரு குழு நிகழ்வுக்கு சென்றாலும் இந்த “தும்பிஹோ” பாடலை கேட்காமல் இருந்ததில்லை. இப்பாடலில் பல டி.ஜே வர்ஷன்களை கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்டதும் இப்படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தாலும், ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. பாடல் நன்றாக இருக்கிறது என்பதை விட, ஒவ்வொரு இடத்திலும் இப்பாடலை கேட்ட மாத்திரத்தில் படம் பார்த்தவர்களின் கண்களின் ஓரம் லேசாய் ஒர் ஈரம் படர்வதை தவறாமல கவனித்தேன். பாடலை பாடியவரின் குரலும், பாடல் வரிகளும், காதலை, அதன் வலியை சொல்வது புரிந்தும் ஏனோ எனக்கு கண்ணீர் வரவில்லை. காரணம் படத்தின் கதையைப் பற்றி கேட்டறிந்ததுதான். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும், பார்த்த கதைதானே A Star Is Born படத்தின் உல்டா, எத்துனை படங்களில் இம்மாதிரியான டெம்ப்ளேட் காதல், காட்சிகளை பார்ப்பது, அவனவன் இந்திய படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்க் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இருபது வருஷத்துக்கு பின்னாடி ரீவைண்ட் பண்ற மாதிரியான கதை  என்பது போன்ற பல அலட்சியக் காரணங்கள்  என்று கூட சொல்லலாம். பட்.. படம் பார்த்து முடித்த மாத்திரத்தில் போங்கடா.. நான் கொஞ்சம் அழுதுக்குறேனு எனக்குள்ள இருக்குற பாமர சினிமாக்காரன் தான் முன்னாடி நின்னான்.  அடுத்த கட்டத்திற்கு போறோமோ இல்லையோ இன்னைக்கு பார்த்த மாத்திரத்தில் உருக வைக்குது பாருங்க.. அதான் சினிமா. அந்த மேஜிக் தான் சினிமான்னு மனசு சொல்லிட்டேயிருக்கு.

Aug 11, 2014

கொத்து பரோட்டா - 11/08/14

சென்ற வாரம் பதிவர்கள் இணைந்து உருவாக்கிய பரோட்டா கார்த்தி எனும் குறும்பட விழாவிற்கு சென்றிருந்தேன். நான் போய் சேர்வதற்குள் குறும்படம் ஒளிபரப்பப்பட்டு, வெளியிட்டு விட்டார்கள். பதிவர்கள் மின்னல் வரிகள் கணேஷ் பெற்றுக் கொண்டாராம். தொட்டால் தொடரும் ஆரம்பித்ததிலிருந்து பதிவர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுரேகா, அவரது உதவியாளர், கே.ஆர்.பி, சிவகுமார், கோவை ஆவி, சீனு, சேட்டைக்காரன், மூத்த பதிவர் சுப்பு தாத்தா வந்திருந்து வாழ்த்தினார் என நண்பர்கள் பல பேர் வந்திருந்தது சிறப்பாக இருந்த்து விழா. குறும்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்வதாய் சொல்லியிருந்தேன். விழாவில் கலந்து கொண்ட பதிவர்களுக்காக தொட்டால் தொடரும் படத்தின் வெளிவராத ட்ரைலரையும், பெண்ணே.. பெண்ணே பாடல் காட்சியையும் போட்டுக் காட்டினேன். நன்றாக இருந்ததாய் சொன்னார்கள். வழக்கம் போல நிகழ்ச்சி முடிந்தும் வேடியப்பனின் கடையின் கீழ் கூட்டம் நடந்தது. நெடுநாள் கழித்து ஒர் சிறப்பான மாலையாய் அமைந்தது பரோட்டா கார்த்தி குறும்பட விழா.
@@@@@@@@@@@@@@@@@@@

Aug 9, 2014

சாப்பாட்டுக்கடை - முத்து மெஸ்


ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடை எழுதி. வழக்கமாய் காலை உணவு மட்டுமே என் வீட்டில் என்பது வழக்கம். மதியம் அலுவலகத்திலும், இரவும் வீட்டிற்கு சீக்கிரம் வருவதைப் பொறுத்தே என்பதால் காலை உணவை வீட்டில் ஸ்கிப் செய்ய மாட்டேன். அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை குடும்பத்துடன் இருப்பது என் வழக்கம். சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், லோக்கல் ஓட்டல்களில் சாப்பிட்டுவிடுவது உண்டு. அப்படி ஒரு நாள் தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ். சைதாப்பேட்டை கவரைத் தெருவில் ஒர் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. அது கால மாற்றத்தில் இண்டோர் கிரிக்கெட் செண்டராகக்கூட மாறி தற்போது முத்து மெஸ் என்றாகியிருப்பது தெரிந்தது.

Aug 4, 2014

கொத்து பரோட்டா -4/8/14

சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா? என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. எனிவே இச்சொல் இவர்களையும் குறிக்குமென்பது அன்றைய நிகழ்வின் மூலம் அறிந்து கொண்ட உண்மை. இனி தவிர்ப்போம். ஆனால் ஒர் கோரிக்கை இம்மாதிரியான நிகழ்வுகளில் அதை பொறுமையாய் கோபத்தை தூண்டும் விதமாய் சொல்லாமல், உங்கள் மன உணர்வுகளை அழகாய் சொல்லாம் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@