Thottal Thodarum

Feb 28, 2015

கோணங்கள் -17

கோணங்கள் 17 - தினசரி கல்யாண விருந்து!






சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து போடுவார் என்பது சினிமா பக்கத்துக்கு எப்போதும் சூடான செய்தி.

Feb 27, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -10

”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? நான்கைந்து  வருடங்கள் இருக்குமா?

“யெஸ்”

“ஹாய்.. ஐம் ஷ்ரத்தா ஹியர்..” என்ற சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தாள். ஷரத்தா.. ஆம ஷரத்தாவேதான். அவளுக்குத்தான் இந்த பெயரை இவ்வளவு ஸ்டைலாய் உச்சரிக்க முடியும். கர்வமாய், மந்தஹாசமாய்.. அவளால் மட்டுமே முடியும்.
womanpen 
அன்று போனவள்தான், அதற்கப்புறம் இப்போதுதான் பேசுகிறாள். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவளின் குரலை கேட்கும் போதும் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடத்தான் செய்கிறது.

“யெஸ்.. ஷ்ரத்தா.. ஷங்கர் ஹியர்.. குட் டு ஹியர் யுர் வாய்ஸ்..”

“இன்னும் என்னை மறக்கவில்லை இல்லையா..?. நான் உன்னை சந்திக்க வேண்டுமே..? உன்னால் ட்ரைடண்டுக்கு வரமுடியுமா?”

நான் என் செல்லில் மணி பார்த்தேன். மதியத்துக்கு மேல் பெரிதாய் வேலையேதும் இல்லை. நாளை தான் ஒரு க்ளையண்டிடம் ஒரு விளம்பர பட விஷயமாய் பேச வேண்டும். “ஷ்யூர்.. ஷ்ரத்தா.. நிச்சயமா.. என்ன ரூம் நம்பர்?”

“208.. உனக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்று போனை வைத்துவிட்டாள்.

இவ்வளவு வருஷம் கழித்து பேசும் போதும் கூட, கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் பேசுகிறவளை நேரில் பார்க்க ஆசையாய்தானிருந்தது. ஷ்ரத்தா.. எப்படியிருப்பாள்.. முன்பை விட கொஞ்சம் முதிர்ந்து, இன்னும் அகலமாய்…? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது அவளை பார்த்து. அவள் போன பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் புரியாமல் தான் திரிந்து கொண்டிருந்தேன். வெளியே வருவதற்கு கொஞ்ச வருஷம் ஆனதென்னவோ நிஜம். அடித்து பிடித்து சினிமா தான் என் கனவு என்றலைந்த போது கிடைத்த வாய்ப்பு ஒரு விளம்பர படம் நிறுவனத்தில் அஸிஸ்டெண்ட். பின்பு குட்டியாய்  தனி விளம்பரக் கம்பெனி, சில பல கார்பரேட் விளம்பரங்கள் என்று செட்டிலாகியிருக்கிறேன். இன்னும் என் கனவான சினிமாவிற்கு அருகிலேயே..

காரை பார்க் செய்துவிட்டு லிப்டை அடையும் போது கொஞ்சம் படபடப்பாய்தானிருந்தது. பிரிந்த காதலியை எத்தேசையாய் பார்ப்பது வேறு, இங்கு தான் பார்க்க போகிறோம் என்பது வேறு. 208ஐ அடைந்ததும் பெல் அடிக்கலாமா? என்று யோசித்து கொண்டிருந்தபோதே, கதவு திறந்து நின்றாள் ஷ்ரத்தா.

அதே வசீகரமான சிரிப்புடன், “வெல்கம்’ என்று ஆதீதமாய் கைவிரித்து வரவேற்றாள். எனக்கு ஒரு மாதிரியிருந்தது. உள்நுழைந்ததும் கதவு சாத்தியவள் என்னை ஏற இறங்க பார்த்தாள்.

“நீ பெருசா மாறல.. கொஞ்சம் வெயிட் போட்டிருக்கே.. அவ்வளவுதான். உட்கார்..” என்று சோபாவை காட்டினாள். அவள் பேச்சில் அதே ஸ்டைலும், அலட்சிய்மும் இருந்தது. வழக்கமாய் போடும் பெரிய காது ரிங்குக்கு பதிலாய் ஒரு சின்ன ஜிமிக்கி போல ஒன்றை மாட்டியிருந்தாள். அவள் தலையாட்டி பேச, பேச அது ஆடிக் கொண்டேயிருந்தது அழகாய் ரசனையாய் இருந்தது. முதல் முறை அவளை பார்த்த போது இருந்த தயக்கம் இப்போது இருந்தது. மிக அருகில் வந்தமர்ந்தாள்

“என்ன சாப்பிடுகிறாய்?”

“இல்லை ஒன்றும் வேண்டாம் ஷ்ரத்தா. எப்படியிருக்கிறாய்?”

“எனக்கென்ன குறைச்சல். நன்றாக இருக்கிறேன். கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறேன். அப்புறம் சொல்.. உன் கனவெல்லாம் நிறைவேறியதா..?”
அவள் குரலில் இருந்தது கேள்வியா? அல்லது கேலியா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நான் தொண்டையை கனைத்து ‘ம். .ஒரளவுக்கு” என்றேன்

”பேசாமல் அன்றே என்னுடன் வந்திருக்கலாம்.”

“அப்படி வந்திருந்தால் இன்று என் கனவில் பாதியை கூட அடைந்திருக்க மாட்டேன் ஷ்ரத்தா..”

“சினிமா இயக்குனர் ஆவதிலிருந்து, விளம்பர பட இயக்குனராகிவிட்டாய் என்று கேள்விப்பட்டேன். உனக்கு வேண்டுமானால் இலக்கில் பாதி அடைந்ததாய் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்த வரையில்.. கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. யு மிஸ்ட் த டார்கெட்”

“இல்லை ஷ்ரத்தா.. விரைவில் அதையும் அடைவேன். இது ஒரு குறுக்கு வழி மாதிரி… ஐ வில் டூ இட் இன்னும் சில மாதங்களில். சரி சொல் இதை பற்றி பேசுவதற்கா என்னை வரச் சொன்னாய்?” என்றதும் இன்னும் நெருக்கமாய் வந்து உட்கார்ந்தாள். அவளின் மிண்ட் மணம் மாறவில்லை நெருக்கத்தில் மூச்சு முட்டியது.

“உனக்கு என்னை பிடிக்கவில்லையா ஷங்கர்? சொல்.. என்னை மறந்துவிட்டாயா..? ஏன் ஒட்டாமல் பேசுகிறாய்? நான் உன் காதலி இல்லையா.? என்னதான் பிரிந்து விட்டாலும் காதல் போய்விடுமா..? எனக்கு முடியவில்லை. இவ்வள்வு வருடங்களில் என் பிரிவை நீ உணரவேயில்லையா?.

நான் பதிலேதும் சொல்லாமல் அவளை பார்த்தேன். கொஞ்சம் விரக்தியாய் சிரித்தேன். “பிரிவை பற்றி நீ பேசக்கூடாது ஷ்ரத்தா.. அந்த ஒரு நொடியில் பிரிந்தவள் அதற்கு பிறகு இப்போதுதான் ஐந்துவருடம் கழித்து. இதற்கு நடுவில் என்ன ஏது என்ற கேள்வி கூட இல்லை? ஞாயமாய் நான் தான் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.”

”ஓகே…ஓகே.. நான் ஒத்துக் கொள்கிறேன். எனக்கு அவ்வளவு கோபம்.. எவ்வளவு கஷ்டப்பட்டு அவரை ஒத்துக் கொள்ள வைத்திருந்தேன் தெரியுமா..? வாழ்க்கையில் சில சமயங்களில் தான் இம்மாதிரி வாய்ப்பு வரும் அதை முட்டாள்தனமாய் கொள்கை, தன்மானம் என்று யோசித்து வேண்டாம் என்று மறுத்ததும், என்னை விட உனக்கு உன் கனவும், தொழிலும் தான் முக்கியம் என்று சொன்னது என்னை அவமான படுத்தியது போலிருந்த்து. உன்னை அப்படியே இறுக்கி ந்சுக்கி விடலாமா என்ற கோபம். அடுத்த முறை உன்னை பார்த்தால் காட்டிவிடுவேனோ என்று தான் போய்விட்டேன். உன்னை விட்டு தொலைவில் போய்விட்டேன். என் அருமையை நி உணரும் போது உனக்கு புரிய என் பிரிவு அவசியம் என்று நினைத்தேன்.”

”எல்லாமே நீ செய்த முடிவு”

“நமக்கான முடிவு.. அதை பிரித்து பார்த்ததினால் வந்த வினை தான் இந்த பிரிவு. இப்போது சொல்.. நான் உனக்காக தயாராக இருக்கிறேன். என்னுள் உனக்கான காதல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது ஷங்கர். நாளையே நாம் அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிடலாம். கொஞ்ச வருஷம் அங்கே இரு பின்பு உனக்கு என்ன ஆசையோ அதை செய்துகொள். நான் உன்னை தடுக்க மாட்டேன். என் பணமெல்லாம் உன்னுடயதுதானே? என்ன சொல்கிறாய்.? இங்கே சின்ன ப்ராடெக்டுக்கு அலைந்து அலைந்து விளம்பரம் படம் செய்ய தேவையில்லை. போராட வேண்டியதில்லை. சுகமான வாழ்க்கை. வா.. என்னுடன் வந்துவிடு.. சொர்கமாய் ஒரு வாழ்க்கை என்னுடன்..வா..”

அவளது பேச்சை கேட்டு ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷ்ரத்தா மாறவில்லை. அப்படியே தானிருக்கிறாள். இன்னும் எனக்கான முடிவுகளை அவளே எடுத்து  என் முடிவாக அதை அறிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

“இல்லை ஷ்ரத்தா.. என்னால் முடியாது”

“என்ன முடியாது. என்னுடன் வர முடியாதா? அல்லது என்னுடன் வாழ ஆசையில்லையா..?”

“இப்படி திடுதிப்பென கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது ஷ்ரத்த.. உனக்கும் எவ்வளவு கோபம் என் மீதிருக்கிறதோ.. அதே அளவு கோபம் எனக்கும் உன் மீது இருக்கிறது. வாழ்க்கையில் காதல் ஒன்று ம்ட்டும் தான் முக்கியம் என்று  என்னால் நினைக்க முடியாது. திருப்தியில்லாத திருமணமும்,  திருப்தியில்லாத வேலையும்  ஒரு ஆணின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும். என்னை பொருத்தவரை ஒரு ஆணுக்கும் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து இருவரது கனவை நினைவாக்க உதவியாய் இருக்க வேண்டும். அப்போது தான் காதலும், கல்யாணமும்  நிலைக்கும். இல்லாவிட்டால் அடுத்த ஒரு வருடத்தில் கோர்ட்டில் தான் நிற்போம்.”

“அப்போ நீ என்னை வேண்டாம் என்கிறாய். அப்படித்தானே.. உனக்கு ஏற்ற மனைவியாய் என்னால் இருக்க முடியாது என்று சொல்கிறாய். அப்படித்தானே.. புல்ஷிட். மேல்ஷாவனிஸ்ட் இடியட்..என்னை… என்னை.. ஷ்ரத்தாவை.. ரிஜெக்ட் செய்கிறாய்.. ஹாங்.. ஓகே…ஓகே..” என்று ஆரற்றிய அவள் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்க, அவள் அழுது நான் முதல் முறையாய் பார்க்கிறேன். உதடு துடிக்க, அவ்வளவு நெருக்கத்தில் அவ அழுவதை பார்த்ததும், என்னையறியாமல் அவள் முகத்தை என் பால் இழுத்து அவள் கண்ணீரை துடைத்தேன். கிட்டத்தட்ட அவளை அணைத்த நிலையில் இருக்க, ஷ்ரத்தா என்னை அப்படியே இருக்க அணைத்தாள்.

அணைத்த வேகத்தில் என் மீது அப்படியே சரிந்து மேலே பரவினாள். முகம், கழுத்து, காது, நெற்றி என வெறி கொண்டு முத்தமிட்டுக் கொண்டே வந்தவள்,
என் உதடுகளை தன் உதடுகளால் ஆக்கிரமித்து உறிய, அவளின் திடமான மார்புகள், என் மீது அழுத்த, என்னுள் கிளம்பிய கிளர்சியை என்னால் கண்ட்ரோல் செய்ய முயற்சிக்க, அவளின் சூடான மூச்சு, அவளின் ஆக்கிரமிப்பும் என்னை மேலும் உந்த, அவளின் தோளை பிடித்து அவளை தள்ளிவிட்டேன்.. அப்படியே தரையில் மல்லாக்க விழுந்தவள், அதிர்ச்சியுடன் என்னை பார்த்தபடியிருந்தாள். அடிபட்ட பார்வை, நான் எழுந்து உடைகளை சரி செய்து நின்றபடி, கை கொடுத்து அவளை தூக்க கை நீட்டினேன். அவள் என் கை பிடிக்காமல் தானே எழுந்து நின்றவள், “ஷங்கர்.. என்ன பழி வாங்குகிறாயா..? பழி வாங்குகிறாயா..?’ என்று கத்தினாள்.

“இல்லை ஷ்ரத்தா.. என்னால் முடியாது.. வெறும் செக்ஸ் மட்டுமென்றால் இப்போதே உடனே நான் தயார். எனக்கு உடல் மட்டும் தேவையில்லை மனமும் சேர்ந்த கூடல் வேண்டும். அதற்கு இருவரிடத்திலும் காதல் வேண்டும். எனக்கு உன்னிடம் இப்போது காதல் இல்லை ஷரத்தா.. என் காதல் இப்போது வேறு ஒருத்தியிடம் இருக்கிறது. என்னுடய நிறை குறை ஆசை, கோபம், கெட்ட விஷயஙக்ள் அனைத்தும் தெரிந்தவள் அவளின் குறை நிறைகளோடும், என் நிறை குறைகளோடும் ஏற்றுக் கொள்ள பழகியவர்கள். நீ விட்டு போன பிறகு இன்றளவுக்கு எனக்கு உறுதுணையாய் இருக்கிறவளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது.  வாழ்க்கையில் எல்லோரும் ஒரு நேரத்தில் காதல் வயப்ப்டத்தான் செய்கிறார்கள். எல்லொருகுக்கு அவர்களே துணையாய் அமைவதில்லை. அப்படி நினைத்துக் கொள்.. ஸாரி.. எனக்கும் உன் பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.. உனககான முடிவை எடுக்க நான் யார். சரி..  நான் கிளம்புகிறேன் ஷரத்தா..இன்னும் இங்கேயிருந்து உன்னை என்னையும் எம்பராஸ் செய்து கொள்ள விருப்பமில்லை.? ”

“அப்படி உனக்காகவே வாழ்க்கையை அர்பணித்த அந்த ஜீவன் யார் என்று தெரிந்து கொள்ளலாமா..?”

கதவை திறக்க போன நான் திரும்ப நிதானமாய் அவளை உற்று பார்த்தேன். கண்கள் சிவந்திருந்தது. முகத்தில் ஏகப்பட்ட கோபம் மண்டியிருக்க, இடுப்பில் கைவைத்து நின்றிருந்தவளை பார்த்து “மீரா” என்று சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினேன் மீண்டும் என்னை உயிர்பித்த காதலை நோக்கி…
முற்றும் @@@@@@@
டிஸ்கி : இக்கதையின் ஆங்கில மொழியாக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அத்தோடு இக்கதை ஒரு திரைக்கதையாய் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கேபிள் சங்கர்

Feb 26, 2015

மீண்டும் ஒரு காதல் கதை- 9

9bb2c8b5eaad26df0fdfc188d343d19c”ஏய்.. என்ன பார்க்கிறாய்.. நம்ப முடியவில்லை இல்லையா..? அதான் என் அப்பா.. என் செல்ல அப்பா.. ஓகே… ஓகே.. என்னால் ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப். நாளை காலை சீக்கிரமே ஆபீஸ் போய்விடுவேன். நீ நேரே ஆபீஸுக்கு வந்துவிடு, நிறைய பேச வேண்டும்.. நிறைய.. ஓகே..பாஸ்போர்ட் இல்லையென்றால் உடனே வாங்கிவிடு. அடுத்த வாரம் அப்பா வந்ததும் உன் வீட்டோடு வந்து பேசி முடித்துவிடுவோம் என்றிருக்கிறார்.” என்று துள்ளி குதித்தபடியே பேசினாள். அவளின்  உடம்பு முழுவதும் சந்தோஷம் பரவியிருந்தது நன்றாக தெரிந்தது. ஆனால் என்னால் அவளைப் போல சந்தோசப்பட முடியவில்லை. நான் அமைதியாய் இருந்ததை பார்த்து ஏதும் புரியாமல்

” ஏய்.. ஷங்கர்.. என்ன டல்லாக இருக்கிறாய். காதலித்த பெண்ணையே திருமணம் செய்யப் போகிறோமே என்று வருத்தமா..? உன் விதி அதுதான் என எழுதியிருக்கிறது” என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஓகே.. பை.. நான் என் அப்பாவிடம் இன்னும் சில விஷயஙக்ள் எல்லாம் பேச வேண்டும். உனக்கான வேலை எல்லாம் பற்றி பேச வேண்டும். என் செல்ல க்ண்ணாட்டி.. பை.. குட் நைட்.. சாரி.. குட் மார்னிங்..பை.. என்று என்னை இன்னும் இறுக்க அணைத்து, உதடு வலிக்க அழுத்தமாய் ஒரு முத்தமிட்டுவிட்டு ஓடினாள்.

நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் காதல் கைகூடிய விஷயம் சந்தோஷத்தை தரவில்லை. நான் எப்படி அமெரிக்கா போவது? அங்கே போய வீட்டு மாப்பிள்ளையாய் இருக்கவா..? அப்போது என் சினிமா கனவு? அமெரிக்க பெண்ணை காதலித்து அவள் தகப்பன் காசில் வாழ்ந்து, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கி  சாக எனக்கு விருப்பமில்லை. என்னால் அப்படி வாழ முடியும் என்றும் தோன்றவில்லை. ஆனால் அவளிடம் இதை எப்படி சொல்வது என்ற குழப்பத்தோடும், அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. 

அன்று முழுவதும் தூங்காததால், சீக்கிரமே ஷ்ரத்தாவின் ஆபீஸ் கேண்டீனில் காத்திருந்தேன். இன்றைக்கு எப்படியாவது சொல்லியாக வேண்டுமென்ற முடிவோடு, கொஞ்சம் பதட்டத்தோடு வெளியே சென்று தம்மடித்தேன். மனதின் ஒரு மூலையில் அழகான பொண்ணு, அமெரிக்கா, அங்கேயே செட்டில் ஆவது இது எல்லாத்தையும் உன் கனவுக்காக இழப்பது முட்டாள் தனமாக இல்லையா? என்று ஒரு கேள்வி மனதில் ஓடத்தான் செய்தது. அதையெல்லாம் மீறி அப்படி செய்தால் நான் என்னையே இழந்தது போல ஒரு ஃபீல் தான் மேலோங்கியது.

ஷ்ரத்தாவும், மீராவும் முகம் முழுவதும் சிரிப்போடு நுழைந்தார்கள்.  மீரா என் கை பிடித்து குலுக்கி “கங்க்ராட்ஸ்” என்றாள். அவளின் கைபிடிப்பில் இருந்த இறுக்கம் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. ஷ்ரத்தா கண்கள் பளபளக்க, என்னருகில் நெருக்கமாய் உட்கார்ந்தாள்.

“அப்பாவிடம் எலலா விஷயமும் பேசிவிட்டேன் ஷங்கர். உனக்கு ஒரு வேலையை அங்கேயே போட்டு தருகிறேன் என்று சொல்லிவிட்டார். வேலை என்ன எல்லாமே உனக்குத்தானே.. நான் உட்பட..” என்று கண் சிமிட்டினாள்.

“ஷ்ரத்தா.. ஒரு விஷயம்.. என்னால அமெரிக்காவெல்லாம் வர முடியாது” என்றேன் மெல்லிய குரலில். ஷ்ரத்தாவின் முகம் சட்டென சுருங்கியது. சுறுசுறுவென கோபம் ஏறுவது தெரிந்தது.

“ஏன்.. இங்கே என்ன கிழிக்கப் போகிறாய்?. காதலித்த பெண், ஏராளமான பணம், அமெரிக்க வாழ்வு, இதைவிட வேறு என்ன வேண்டும் உனக்கு? ஒரு வேலை மாமனார் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வெட்கப்படுகிறாயா..? புல்ஷிட்.. உன் மிடியோகர் மேல் ஷாவனிஸ்ட் புத்தியை, காட்டுகிறாயா..? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கியிருப்பேன் தெரியுமா?.”

“ஷ்ரத்தா.. கோபப்படாதே.. உனக்கு என்னை பற்றி தெரியும். எனக்கு சினிமாவில் இயக்குனராவது தான் கனவு என்று. என்னை தயார் செஞ்சிக்கிறதுக்காக நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் சம்பாதிச்சு சேர்த்து வச்சி, அடுத்த கட்டத்திற்கு நகர ஆசைப்பட்டுட்டு இருக்கிறவனு. இப்படி சடார்னு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம், அமெரிக்கான்னா எப்படி? ஒரு அஞ்சு வருஷம் நாம கல்யாணம் செஞ்சிட்டு இங்கேயே இருக்கலாம். அதுக்குள்ள எப்படியாவது செட்டிலாயிடுவேன். அப்ப போலாம் அமெரிக்காவுக்கு. அமெரிக்காவை சுததி பார்க்க ஆசைதான் ஆனா.. அங்கேயே இருக்க எனக்கு ஆசையில்லை.. புரிஞ்சிக்க..” என்று அவள் கையை பிடித்தேன்.
அவள் சட்டென கையை பின்னுக்கிழுத்து, என் முகத்தில் பளீரென அறைந்தாள்.

“நீ என்னை காதலிக்கவேயில்லை.. நான் முன்பே சொன்ன மாதிரி சும்மா சுத்திவிட்டு, சான்ஸ் கிடைத்தால் முடித்துவிட்டு ஓடிப்போகலாம் என்று நினைத்திருந்தவன் என்பதை மீண்டும் நிருபிக்கிறாய். என் மீது உனக்கு காதல் இருந்தால் நீ இப்படியெல்லாம் பேசுவாயா..?”

“ஷ்ரத்தா.. ஒரு ஆம்பளைக்கு காதல் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவுக்கு கேரியரும் முக்கியம். வெறும் காதல் வாழ்க்கையாகாது ஷ்ரத்தா..”

“சினிமாவுல உனக்கு சான்ஸ் கிடைச்சி, அதுல நீ பெரிய ஆள் ஆகி என்ன செய்யப்போறே? பணம் சம்பாதிப்பாயா..? எல்லாமே ஸ்பெகுலேஷன் தான் ஆனால் நிஜத்தில் நீ நினைக்கும் அளவுக்கு மீறிய பணம், வசதி, அமெரிக்க வாழ்க்கை இதுவெல்லாம் உனக்கு இலவசமாய் இந்த ஷ்ரத்தா உன்னை காதலித்ததால் வருகிறது. இதை வேண்டாம் என்று சொல்வதும் ஷ்ரத்தா வேண்டாம் என்று சொல்வதும் வேறல்ல..”

“முட்டாள் தனமாய் பேசாதே.. நம் காதல்  கூட உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்ததால் தான் வந்தது. அது போலத்தான் ஒரு ஆம்பளைக்கு கேரியரும்.”

“எல்லாரும் பிடிச்சுத்தான் வேலை பாக்குறாங்களா?  பிடிக்காத வேலையை எத்தனையோ பேர் பார்க்கலை? அவங்களெல்லாம் சந்தோஷமா வாழல?”

“அவங்ககிட்ட போய் கேட்டுப் பாரு.. புரியும். அவங்க உள் மனசுல இருக்கிற ஆதங்கத்தை. என்னால அது மாதிரி போலியா வாழமுடியாது ஷ்ரத்தா.. “

“ஒரு வேளை நீ அதுல தோத்திட்டன்னா..?”

“முயற்சி செய்யாமலேயே தோக்கிறதை பத்தி யோசிக்கிறதை விட, முயற்சி செய்து தோற்பதோ, ஜெயிப்பதோ சந்தோஷம் தானே.’

“நீ விதண்டாவாதமாய் பேசுகிறாய்”

“இல்லை.. லாஜிக்கா பேசுறேன். மீரா நீயே சொல்.. என்னோட கனவை பற்றி.. என்னை உனக்கு நல்லா தெரியுமில்லை நீ சொல்லு மீரா இவளிடம்” என்றேன். ஏதும் சொல்ல முடியாமல் இருவரையும் மாற்றி, மாற்றி பார்த்துக் கொண்டிருந்த மீராவிடம்.

“ஆமா ஷரத்தா.. இவனின் லட்சியமே சினிமாதான். எனக்கு ஒரு ஐடியா தோணுது.. ரெண்டு பேருக்கு ஒன்னும் பெரிய வயசாயிடலையே.. அவன் சொல்றா மாதிரி ஒரு அஞ்சு வருஷம் இரண்டு பேரும் கல்யாணத்தை தள்ளிப் போடுங்க.. அவன் ட்ரை பண்ணட்டும், ஒரு வேளை அவன் ஜெயிச்சிட்டான்னா..வெல் அண்ட் குட்.. இல்லைன்னா உன் ப்ரோபஸலை அவன் ஏத்துக்கட்டும். என்ன நான் சொல்றது?”

“புல்ஷிட்.. ஐந்து வருடம் கழித்து தோற்று போனவனை என் கணவனாகவோ, அல்லது மாப்பிள்ளையாகவோ ஏற்றுக் கொள்ள என் அப்பாவோ தயாராக இருக்க மாட்டார்.”

“நீ ஏன் அப்படி நினைக்கிறே? பாஸிடிவாக நினையேன்.”

“மீரா.. ஷட் அப்.. இது என் வாழ்க்கை. இதில் உன்னோட அட்வைஸ் எல்லாம் வேண்டாம். சொல்லு ஷங்கர்.. முடிவாக சொல். உன்னால் என்னோடு அமெரிக்கா வந்து செட்டிலாக முடியுமா? முடியதா..? ஸே எஸ் ஆர் நோ.?’

என்ன பெண் இவள்? ஏன் இவளை பற்றி மட்டுமே யோசிக்கிறாள். இரண்டு பேர் சம்மந்தப் பட்ட விஷயத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், என் முடிவையும் சேர்த்து எடுப்பது மற்ற விஷயங்களை போலில்லை. எனக்கென ஒரு ஆசை, கனவு எதையும் மதிக்காதவளை, பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைப்பவளை, அமெரிக்காவில் அல்ல இந்தியாவிலும் சகித்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி என் முன் பூதாகராமாய் தெரிய..

“நோ.. “ என்றேன்.

“நம் காதல் இத்தோடு முடிந்துவிட்டது. இனி நீ யாரோ.. நான் யாரோ.. குட்பை..” என்று விருட்டென எழுந்து கிளம்பி போனவளை நானும் மீராவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
##########
கேபிள் சங்கர்

Feb 24, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -8

Amalthea_by_DalaiHarmaஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் காதல் அவளின் அண்ணனுக்கு தெரியவர, எல்லா அண்ணன்களை போல அவனும் என் பேக்ரவுண்ட் எலலாவற்றையும் விசாரித்து, என்னை போன்ற பக்கி பயலை தன் தங்கை காதலிப்பதை விரும்பாமல் என்னை ஒரு நாள் தனியாய் அழைத்துப் பேசினான். கிட்டத்தட்ட ஒரு அமெரிக்கன் தமிழ் பேசியதை போல பேசினான். என்னை கொசு போல பார்த்தான். முதல் பார்வையிலேயே அவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த அண்ணனுக்கு தான் தன் தங்கையின் காதலனை பிடிக்கும்?.

மீண்டும் ஒரு காதல் கதை - 7

Gintama___Wash_it_Away_by_nuriko_kunகாலையிலிருந்தே நசநசப்பாய் தூறிக் கொண்டுதானிருந்தது. மீராவுக்கு பிறந்தநாள் எனபதால் சத்யமில் படம், ரெயின் ட்ரீயில் டின்னர் என்று ஏற்பாடாகியிருந்ததால், எல்லாம் முடிந்து வீட்டிற்கு கிளம்ப லேட்டாகிவிட, நான் ஷ்ரத்தாவை அண்ணாநகரில் ட்ராப் செய்யும் போது நடு ராத்திரி ஆகியிருந்தது.  வரும் போது பெருமழையில் நினைந்து தொப்பலாகி போயிருக்க, முதல் முதலாய் அவள் வீட்டிற்குள் அழைத்தாள்.

Feb 23, 2015

கொத்து பரோட்டா - 23/02/15

எப்பவுமே நம்ம ஊர் ஆளுங்க எதையாச்சும் ஆரம்பிச்சாத்தான் பேரணி, ஊரணியெல்லாம் நடத்துவாங்க. வெளியூர்காரன் முக்கியமா வடநாட்டுக்காரன் ஆரம்பிச்சா சேட்டு கம்பெனின்னு வாயை மூடிட்டு போயிருவான். ஏன்னா பணத்தால அடிச்சிருவான் என கார்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினாலும், சென்னையின் இம்சையான ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பொறுத்தவரை, அட்ராசிட்டியாய் மாற்றியமைத்த பெருமை ஓலாவையே சேரும். இன்றைய போட்டி உலகில் பாஸ்ட்ட்ராக் போன்றோருக்கு  சிம்ம சொப்பனமாய் மாறி இருக்கும் இந்நிறுவனம், தற்போது ஆட்டோ சேவைகளையும் மீட்டர் காசுக்கு மேல் பத்து ரூபாய். அதுவும், நாம் இருக்கும் இடத்தில் வந்து பிக்கப் செய்து கொள்ளும் வசதிக்காகவே கன்வீனியன்ஸ் சார்ஜாக வாங்கிக் கொள்கிறார்கள். கார் போல ஆட்டோ இன்னும் மக்களுக்கு பழகவில்லை என்றாலும், இன்றைய தேதிக்கு மொபைல் ஆஃப்பில் பார்க்கும் போது எப்போதும் பத்திருபது ஆட்டோகள் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் இருப்பதில்லை என்ற குறையைத் தவிர, பெரியதாய் குற்றம் குறையில்லை என்னளவில். நான்கைந்து முறை பயணித்திருக்கிறேன்.ஓலாவினால் வந்த ஒர் பெரிய நன்மை என்னவென்றால் நிறைய ஆட்டோ ட்ரைவர்கள் மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னாளில் இம்மாதிரியான கார்பரேட்டுகள் நம்மை அவர்கள் வசம் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தி விலையேற்றுவார்கள். போன்ற விஷயங்களை எல்லாம் மீறி.. இம்முயற்சியை பாராட்டி ஆதரிப்போம். 
@@@@@@@@@@@@@@@@@@

Feb 21, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -6

all_the_simple_things_by_akreonஅண்ணாநகர் ரவுண்டானா வந்ததும் வண்டியை சரவணாபவன் பக்கம் நிறுத்தச்சொல்லி, அருகிலிருந்த ஒரு ப்ளாட்டை காட்டி அதில்தான் தான் இருப்பதாகவும், F4 என்றும் சொன்னாள். “ஓகே நாளை பார்க்கலாம்..பை..” என்றபடி  இறங்கியவள், சட்டென்று தோள் மீது கை போட்டு மெல்ல தன் பால் இழுத்து என் கன்னத்தில் அழுத்தமாய் “பச்சக்” என்ரு முத்தமிட்டு தன் ப்ளாட்டை நோக்கி ஓடி நின்று, “பை. ‘ என்றாள் அந்த ராட்சசி ஷ்ரத்தா.
**********************

Feb 20, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -5

kissingஷ்ரத்தாவின் நம்பரைபார்த்ததும் தூக்கமெல்லாம் பறந்து போய் துள்ளி எழுந்து  போனை எடுத்தேன். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் “சொல்லு ஷ்ரத்தா” என்றேன்.

Feb 19, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -4


LIFE_by_Lora8எவ்வளவோ பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஏன் ஒன்றாய் ஒட்டியபடி வண்டியில் கூட போயிருக்கிறேன். ஆனால் இது புதுசாய் இருந்தது. உடலெங்கும் ஒரு விறு விறு உணர்ச்சி ஓடியது. அந்த சில நொடிகளில் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது, பை சொன்னபடி ஷ்ரத்தாவின் பின்னால் கிளம்பிய மீராவை, கை பிடித்திழுத்து நிறுத்தி “மீரா.. ஐ திங் ஐ லவ் ஹர்” என்றேன் ஷ்ரத்தா போவதை பார்த்தபடி. மீரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

Feb 17, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -3

International_House_of_Coffee_by_germancarsவண்டியை எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்து, பதட்டமில்லாமல் ஓட்டினேன். வண்டியை பார்க்கிங்கில் வைத்துவிட்டு நேரே ஏழாவது மாடிக்கு லிப்டில் ஏறி, நடந்து, அலுவலகத்தின் கதவை திறந்து, ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் “லைக் டு மீட் மிஸ்.ஷ்ரத்தா ரெட்டி” என்றேன்

ரிஷப்ஷனிஸ்ட் என்னை பார்த்தபடி இண்டர்காமில் நம்பர் ஒத்தினாள். காத்திருக்க பொறுமையில்லாமல் மீராவின் செல்லுக்கு போன் செய்தேன்.

“என்னடா..?” என்றாள் குரலில் கொஞ்சம் கோபத்துடன்

“கொஞ்சம் ஷ்ரத்தாவை கூட்டிட்டி வெளியே வாயேன்”

“ஏன் வாங்கி கட்டிட்டு போனது பத்தாதா.? வேண்டாம்டா. திரும்ப ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.”

“அதெல்லாம் ஆகாது. ஜஸ்ட் அவளை பார்த்து ஒரு விஷயம் சொல்லிட்டு போயிடறேன். ப்ளீஸ்.. “என்று கெஞ்சும் நேரத்தில், ரிஷப்ஷன் பெண் “சார்.. லைன் எங்கேஜ்டா இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்றவளை பார்த்து ‘சரி’ என்பது போல தலையாட்டிவிட்டு மீராவிடம் தொடர்ந்தேன். “ஜஸ்ட் எ மினிட்” என்று போனை மீரா கட் செய்ய, மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியேற்றினேன். கைவிரலில் சிகரெட் சுட்ட எரிச்சல் இப்போது தெரிந்தது. ஷ்ரத்தாவும் மீராவும் வரும் வாசலை எதிர் நோக்கியிருந்தேன். ஏனோ உள்ளுக்குள் ஒரு விதமான எக்ஸைட்மெண்ட் இருந்தது. அவளிடம் என்ன பேச வேண்டும் என்று மனதினுள் ஓட விட்டேன். ஜஸ்ட் லைக் தட். எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் கண் பார்த்து சொல்லிவிட வேண்டியதுதான். ஜஸ்ட் லைக் தட். என்ற யோசனையை மீரா வந்து கலைத்தாள்.

நிமிர்ந்து பார்த்த போது ஷ்ரத்தாவுடன் நின்றிருந்தாள். அவள் முகத்தில் எந்தவித உணர்வும் தெரியவில்லை. “கேண்டீன் போய்டலாம்” என்ற மீராவை தொடர்ந்தேன். பேஸ்மெண்ட் வரை எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி லிப்டினிலிருந்து இறங்கினோம். என்னை கேட்காமலேயே ஷ்ரத்தா ஆளுக்கொரு காபியை எடுத்து வந்து டேபிளினில் வைத்து விட்டு எதுவும் பேசாமல் இருந்தாள். அங்கிருந்த அமைதி ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது. சரி நாமே ஆரம்பிக்கலாம் என்று யத்தனித்த போது

“ஸாரி.. என் தவறுதான், அதுவும் முதல் சந்திப்பிலேயே உன்னிடம் அப்படி விளையாடியது தவறுதான். என்னிடம் யாரும் இம்மாதிரி கத்தியது இல்லை. ராணி மாதிரி இட்ட கட்டளையை செய்து கொடுத்தவர்களுடன் வளர்ந்தவள். நீ கத்தியதும் அதிர்ந்து போய்விட்டேன். கோபத்தில் சாண்ட்விச்சை தூக்கி அடித்தது நீ கத்தியதை விட மோசமான ஒரு செயலாகத்தான் பட்டது. அதனால் ஸாரி.. நீ திரும்ப வந்ததினால் இதை நான் சொல்லவில்லை என்னால் தாங்க முடியவில்லை இன்றைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் என் தலை வெடித்திருக்கும். நவ் ஐவ் ரிலீவ்ட். ” என்ற ஷ்ரத்தாவை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

சே.. எவ்வளவு நல்ல பெண்ணிவள் இவளிடம் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். “நானும் உன்னிடம் மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன். திரும்ப திரும்ப பேசியதையே பேசுவதை விட்டுவிட்டு நாம் வேறு ஏதாவது பேசுவோமா.. அதற்கு முன் ஒரு விஷயம் நீ கோபிக்காமல் இருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன்.” என்றவுடன் ஷ்ரத்தாவும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மீராவின் முகத்தில் மட்டும் “இப்போ என்ன சொல்ல போகிறாய்” என்கிற கலவரம் தெரிந்தது.


“யூ ஆர் பியூட்டிபுல். நீ பேசும் போது ஆடும் உன் காது ரிங்.. சோ..க்யூட்” என்றேன். என்னை நேராக பார்த்துவிட்டு ஷ்ரத்தா வெட்கப்பட்டு ‘தாங்க்ஸ்” என்றாள். மீராவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. “அப்பாடா. ஒரு வழியா சரியாயிருச்சு. என்னடா முதல் மீட்டிங்கிலேயே சொதப்பிவிட்டதே என்று வருத்தப்பட்டேன். சரி.. சரி.. எங்களுக்கு நேரமாகிவிட்டது பிறகு பார்க்கலாம்” என்று கிளம்பியவளை தடுத்து, கை நீட்டி ஷ்ரத்தாவிடம் “ப்ரெண்ட்ஸ்?” என்றேன். அவள் மீண்டும் என்னை நேராக பார்த்தபடி என் கை பிடித்தாள். சில்லென்றிருந்தது. உள்ளங்கைக்குள் ஒரு இறுக்கம் வர கை குலுக்கிவிட்டு “பை” என்று கிளம்பினாள். எனக்கு மனசேயில்லை அவள் கையை விடுவதற்கு. எவ்வளவோ பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஏன் ஒன்றாய் ஒட்டியபடி வண்டியில் கூட போயிருக்கிறேன். ஆனால் இது புதுசாய் இருந்தது. உடலெங்கும் ஒரு விறு விறு உணர்ச்சி ஓடியது. அந்த சில நொடிகளில் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது, பை சொன்னபடி ஷ்ரத்தாவின் பின்னால் கிளம்பிய மீராவை, கை பிடித்திழுத்து நிறுத்தி “மீரா.. ஐ திங் ஐ லவ் ஹர்” என்றேன் ஷ்ரத்தா போவதை பார்த்தபடி. மீரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கேபிள் சங்கர்

Feb 16, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -2


Lonely_Bike_by_DaveAyerstDavies “ஹவ்..டேர் யூ டச் மை ஹேர்..?” என்று கோபத்துடன் கத்தினேன். சிரித்து கொண்டிருந்த மீராவும், ஷ்ரத்தாவும் ஒரு கணம் அதிர்ந்து நின்றார்கள். ஷ்ரத்தாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை சில நொடிகள் ரசித்து, ஹா..ஹா.. ஹா.. என்று சிரித்தேன். என் சிரிப்பை பார்த்து, ஒரு மாதிரி சமாளித்து சிரித்தார்கள். “பின்னே எவ்வளவு நேரம்தான் ஒரு யூத்தை ஓட்டுவீர்கள்?” என்றதுதான் தாமதம். கையில் இருந்த பாதி ஸாண்ட்விச்சை என் மேல் வீசி, “இடியட்.. இப்படித்தான் கத்துவாயா..? உனக்கு மேனர்ஸ் கிடையாது. பெண்களிடம் எப்படி பேசுவது என்று தெரியாது? பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்ல தெரியாது?. உன்னை எவன் மார்கெட்டிங்கில் சேர்த்தது? நீயெல்லாம் என்ன கிழிக்க போகிறாய்?” என்று படபடவென பொரிந்துவிட்டு, மீராவிடம் “சாரி..” என்றபடி வேகமாய் காண்டீனை விட்டு வெளியேறினாள்.

Feb 14, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -1

மீண்டும் உங்களுக்காக.. காதலர் தின ஸ்பெஷல் - ஷ்ரத்தா
International_House_of_Coffee_by_germancars”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும.?

“யெஸ்”

Feb 12, 2015

கோணங்கள் -16

கோணங்கள் -16: வெளிநாட்டு உரிமையை விற்காதே!

இன்றைய காலத்தில் ஒரு சினிமா எடுப்பதைவிட அதை வெளியிடுவதற்குப் பிரயத்தனம் தேவைப்படுகிறது. அப்படிப் பிரயத்தனம் செய்து வெளியிட்ட படத்தை பைரஸி திருடர்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
பிலிம் சுருள்களில் படம் எடுத்துக் கொண்டிருந்த நாட்களில் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் படச் சுருள்கள் பாதுகாப்பாக இருந்த இடம் பட லேப். அது இன்றி ஓர் அணுவும் அசையாது. லேபில் தயாரிப்பாளர் அனுமதியின்றி ஒரு துண்டு பிலிம்கூட வெளியே போகாது. அம்மாதிரியான ராணுவப் பாதுகாப்பு இருந்த காலத்திலேயே திருட்டு வீடியோ எடுத்த காலமும் உண்டு. திரையரங்குகளுக்குப் படப்பெட்டியை எடுத்துப் போகும் ‘பிலிம் ரெப்’பைக் கைக்குள் போட்டுக்கொண்டு திருடி வந்தவர்கள் வரிசையாக மாட்ட ஆரம்பித்தார்கள். இதனால் திரையரங்கப் படமோட்டியின் உதவியுடன், கிட்டத்தட்ட சிறு நகர அரங்குகளில் வீடியோ கேமராவை எடுத்துக்கொண்டு போய்ப் பதிவு செய்தார்கள்.

பின்நாட்களில் டி.வி.டி. வாங்கும் வாடிக்கையாளர்கள் இப்படிப் பதிவாகும் திரையரங்கப் பிரதியின் தரத்தை மதிப்பிட்டு வாங்கிப் போகும் அளவுக்கு ‘குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர்களாகி’விட்டதால், பார்க்கத் தெளிவான தரத்தில் இருந்தால் மட்டுமே திருட்டு வீடியோ வியாபாரம் என்று ஆனது.

எஃப்.எம்.எஸ். எனும் ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமம் கொடுப்பதினால்தான் தற்போது திருட்டு வீடியோ பிரச்சினை என்கிறார்கள். வெளிநாட்டு உரிமம் பெற்றவர்கள் இங்கு ஏன் திருட்டுத்தனமாய் பிரின்ட் போட்டு விற்க வேண்டும்?. நேரடியாய் இங்கேயே உரிமம் கொடுத்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ஒரு சின்ன படத்தின் வெளிநாட்டு உரிமத்தின் விலை சுமார் 8லிருந்து 15 லட்சத்துக்குள் வரும்.

இன்றைய தமிழ் சினிமாவுக்கு வருமானமென்று வரும் ஒரே நம்பிக்கையான இடம் இதுதான். அதுவும் உள்ளடக்கம் மற்றும் படமாக்கலில் தரம் குறைவான படங்கள் என்றால் அங்கேயும் தற்போதைய நிலையில் வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலை வந்துவிட்டது. அங்கிருக்கும் தனியார் தொலைக்காட்சிக்காரர்கள் படத்தின் டிரைலரைப் பார்த்தே அதன் தகுதியை நிர்ணயிக்கும் அளவுக்குத் தெளிவாகிவிட்டார்கள்.

எல்லாத் தமிழ் சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகாது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளுக்கான உரிமை மற்றும் டி.வி.டி விற்பனையை மட்டுமே நம்பி விலை கொடுத்து வாங்குகிறார்கள். படம் வெளியான இண்டாவது நாளே புத்தம் புதிய டி.வி.டி மலேசியாவில் வெளிவந்துவிடும்.
வந்த மாத்திரத்தில் அவை சிங்கைச் சந்தையில் பத்து வெள்ளிக்கு பைரஸியாய்க் கொட்டிக் கிடக்கும். அங்கு வெளியாகும் பிரதிகள்தான் இங்கே கடத்தி வரப்பட்டு விற்கப்படுகின்றன என்பதாக ஒரு பக்கம் பேச்சு. ஆனால் பெரும்பாலான சிறு முதலீட்டுப் படங்களின் ஒரிஜினல் டி.வி.டிக்கள் மலேசிய நிறுவனங்களுக்காக இங்கேயே தயாரிக்கப்பட்டு, இங்கிருந்தே அனுப்பப்படுகின்றன என்பதுதான் உண்மை.

அதுவும் வெளிநாடுகளில் திரையிட வேண்டுமானால் பத்து நாட்களுக்கு முன்னமே படத்தின் ஹார்ட் டிஸ்க்கை அனுப்பி, ஒவ்வோர் ஊரிலும் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதினால் முன்னதாக அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் ஹார்ட் டிஸ்க்குகளிலிருந்து டி.வி.டி.க்கான படம் இங்கேயே காப்பி செய்யப்பட்டு, ஒரிஜினல் விடியோக்களாய் தயார் செய்யப்படும்போது அதிலிருந்தும் இங்கேயே விற்பனைக்குத் திருட்டு வீடியோ தயார் செய்யப்படுகிறது.

இப்படி ஒரு விதத்தில் திருட்டு டி.வி.டி. வருகிறதென்றால் இன்னொரு பக்கம் கேமரா பிரின்ட் என்றில்லாமல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் திரையரங்க ஒளிபரப்பு அறையிலேயே ஒரிஜினல் பிரின்டைப் போல பிரதியெடுக்கும் நவீன எந்திரங்களைக் கொண்டு திருட்டுத்தனமாய் படம் காப்பி செய்யப்படுகிறது.

சமீபத்தில் கூட இக்குற்றச்சாட்டில் இரண்டு மூன்று தியேட்டர்கள் மாட்டியிருக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகள் அதன் உரிமையாளர்களைவிட, மேலாளர், மற்றும் படமோட்டியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதிலும் பழைய திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் அரங்கைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, மாசம் காசு வருகிதா என்கிற நிலையில் இருக்கும்போது கண்காணிப்பில்லாத அரங்குகளில் இக்கொடுமை அரங்கேறுகிறது. எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிந்துகொள்ளத் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் அதைச் செயல் படுத்த தயாரிப்பாளர் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. படத்தை எடுத்து வெளியீடு செய்யவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்கிற நிலையில் இருக்கும்போது இதற்காகத் தனியே பணம் செலவழிக்க அவர்களால் முடிவதில்லை. எனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் திருட்டு விடியோவோ, அல்லது, இணைய டோரண்டோ இதுவரை வெளியாகவில்லை. அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங் களே வைத்திருப்பதே இதற்குக் காரணம்.

மினி ரிவ்யூ -பேபி
இந்திய உளவுத்துறையான ராவின் செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தீவிரவாதத்தை, எப்படி இந்திய அரசு டீல் செய்கிறது? ஆபரேஷன் பேபி என்ற பெயரில் ஒரு குழு எப்படி ஆதரவு நாட்டில் அமர்ந்துகொண்டு தீவிரவாதத்தைச் செயல்படுத்துகிறவனை இங்கே பிடித்து வருகிறார்கள் என்பதுதான் கதை. ஆர்கோ போன்ற ஹாலிவுட் பாணிக் கதைதான்.

பெரிய திருப்பங்கள் ஏதுமில்லாத் திரைக்கதை என்றாலும் அக்‌ஷய் குமாரின் துறுதுறுப்பான உடல்மொழியை வைத்து விறுவிறுப்பாக்கியிருக்கிறார்கள். குட்டிக் குட்டியாய் சுவாரஸ்யக் காட்சிகள், நறுக்குத் தெறிக்கும் படத்தொகுப்பு, மிக இயல்பாய் அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், எனப் பல விஷயங்கள் படு சுவாரஸ்யம். நல்லவேளை இம்மாதிரியான படம் தமிழில் எடுக்கப்படவில்லை.

படம் பார்க்காமலேயே தடை செய்ய போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள். இக்குழுவின் தலைவராய் வரும் டேனி, அக்‌ஷய், பெண் அதிகாரியாய் வரும் தப்ஸியின் நடிப்பும் நச். இந்திய அளவில் ஒரு சுவாரஸ்யமான, வித்தியாசமான கதைக் களம் கொண்ட திரைப்படத்தை அளித்திருக்கிறார் நீரஜ் பாண்டே.

Feb 9, 2015

கொத்து பரோட்டா - 09/02/15

இன்று ஒரு தகவல்
வழக்கமாய் ராத்திரியில் டி&டி செக் செய்து கொண்டிருந்த போலீஸார்கள், தற்போது மாலை ஆறு மணிக்கே தங்கள் சேவையை காட்ட ஆரம்பித்திருப்பது வசூல் வேட்டையை இரவில் குறைந்திருப்பதினால் என்பது உ.கை.நெ.கனி. பெரும்பாலும் இம்மாதிரியான இரவு நேர செக்கிங்கின் போது காரின் கதவை இறக்கி, “சார் எங்கிருந்து வர்றீங்க?”என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில் “டெய்லி இந்த ரூட்டுல வர்றேன். செக்கிங் இருப்பீங்கன்னு தெரியாதா? சரக்கடிச்சா அதுக்கு வேற ரூட்டு  சார். அங்கெயெல்லாம் நீங்க ஆளு போட முடியாது. ஏன்னா துட்டு பேறாது” என்பேன். சிலர் சிரிப்பார். சிலர் கடுப்பார். “இதுல எவ்வளவு வந்துச்சுன்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது?” என்று கேட்டதற்கு இது வரை யாரும் சரியான பதிலே சொன்னதில்லை. பெரும்பாலான பத்திரிக்கைகளும் அதை சொல்ல விழைவதில்லை. இன்று ஹிந்துவில் அதை விளக்கமாய் போட்டிருக்கிறார்கள். 30 சதவிகிதத்திற்கு மேல் ப்ரீத் அனைலைசர் காட்டியது என்றால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று.
@@@@@@@@@@@@@@@@@

Feb 4, 2015

கோணங்கள் -15

கோணங்கள்-15 : பெரும் பசி கொண்ட அரக்கன்

இருபதுக்கும் குறையாத சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு நடுநாயகமாக இருக்கும் ஒரு பெரிய கிராமத்தில் ஒரு திரையரங்கு இருக்கும். உள்ளூர் நிலக்கிழார் அந்தத் தியேட்டரை நடத்துவார். கல்நார் தகடு அல்லது தென்னை ஓலை வேயப்பட்ட கூரையைக் கொண்ட இதுபோன்ற திரையரங்குகளை ’ கிராமத்து டூரிங் டாக்கீஸ்’ என்று சொல்வது வழக்கமாக இருந்து வந்தது. மாலை மற்றும் இரவுக் காட்சி மட்டும்தான் என்றாலும் அரங்கு நிறைந்துவிடும். வயலில் உழைத்த களைப்பைப் போக்கிக்கொள்ள மக்கள் கூடிவிடுவார்கள்.