Thottal Thodarum

Mar 30, 2015

கொத்து பரோட்டா -30/03/15

மினி ரிவ்யூ -100 days of Love
துல்கர், நித்யாமேனன், இருவரையும் போஸ்டரில் பார்த்த மாத்திரத்தில் அட பார்க்கலாமே என்று முடிவெடுத்தேன். 500 days of summer  போல 100 நாள் கதை. ஆனால் அதை ஜிக்சாக்காக சொல்லாமல் ரிவர்ஸில் சொல்லியிருக்கிறார்கள். துல்கர் நித்யாவை ஒரு மழை தருணத்தில் பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்ள, அவர் மிஸ் செய்த பழைய பிலிம் கேமராவில் உள்ள பிலிமை டெவலப் செய்து அவரை தேடுகிறார். நித்யாவை கண்ட மாத்திரத்தில் தெரிகிறது பழைய பள்ளி தோழியென. பின்பு காதல் சொல்லலாம் என்றால் வில்லனாய் வேறொஉ உயர் ரக காதலன். அவனுடனான நிச்சயதார்த்தம். என டெம்ப்ளேட் மின்னலே கதையாய் போகிறது. நித்யா மேனனை தேடுகிறேன் பேர்விழி என அமைத்திருக்கும் திரைகக்தை ஆமை வேகம். அதிலும் பின்னணியிசை எரிச்சல். பின் பாதியில் வரும் ஒரிரு காட்சிகளும், க்ளைமேக்ஸ் நெருக்கத்தில் வரும் எமோஷன் காட்சிகள் சேவிங் கிரேஸ். ஐரோப்பிய படங்களைப் பார்த்து அங்கிருந்து சுட்ட காட்சிகளாய் இருந்தாலும் காதல் படம் என்று வரும் போ குட்டியாய் ஒரிரு இடங்களில் வந்தாலும் புதிய இளைஞர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள்.  படத்தில் ஒரு வசனம் வருகிறது ‘ எனக்கு காதல் பிடிக்காது. அது கொடுக்கும் மொக்கை ரொமான்ஸை மீறி அதன் பின்னணியிலிருக்கும் அழுக்கு பக்கங்கள் எனக்கு தெரியும். இருந்தாலும் ஐ லவ் யூ” என்று நித்யா மேனன் சொல்வார். அப்படித்தான்  100 டேஸ் ஆப் லவ்வும்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Mar 28, 2015

இதுதான் காதலென்பதா? – சிறுகதை

உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வீட்டுக்கு வர முடியுமா?” என்று போனில் கூப்பிட்டது அனிதா அப்பா. அந்த முடியுமாவில் ஆப்ளிகேஷனில்லை வா என்ற கட்டளை தொனி லேசாய் கிலியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னால் அனிதாவின் நண்பனாய் நிறைய முறை  அவரிடம் பேசியிருக்கிறேன். அனிதாவுடனான காதலுக்கு, பின்பான அழைப்பிது.

Mar 27, 2015

Evuda Subramaniyam - Telugu Film

சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை தரக்கூடிய படங்களே அதிகம் கோலோச்சும் தெலுங்கு சினிமாவிலிருந்து ஒரு அதிசய படம். எல்லா நேரங்களிலும் ஒரு சினிமா நமக்குள் தாக்கத்தை கொடுப்பதில்லை. கொண்ட்டாட்டமோ, அல்லது துக்கமோ படம் பார்த்துவிட்டு வந்த விநாடிகளில் ட்ராபிக் கூட்டத்தில் கரைந்து போயிவிடக்கூடிய அளவே இருக்கும். ஆனால் மிகச் சில படங்களே வீட்டிற்கு வந்தும் நம்மை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அது போன்ற படம் தான் இந்த எவுடா சுப்ரமணியம். 

Mar 26, 2015

Karthikeya -Telugu Film


நிகில் சித்தார்த் ஹேப்பி டேஸ் படத்தின் மூலமாய் அறியப்பட்டவர். மெல்ல முன்னேறி ஒரிரண்டு படங்களில் ஹீரோவாக தலை காட்டினாலும், பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியான படம் அமையாமல் இருந்தவருக்கு சுவாமி ரா.. ரா படம் ஒரு ப்ரேக்கை கொடுத்தது. பின்பு இதோ இந்த கார்த்திகேயா.. தற்போதைய ஹாட்ரிக் ஹிட் சூர்யாv/s சூர்யா. இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் ரிலீஸான போதே தமிழில் ரிலீஸ் செய்ய தயாராய் இருந்தார்கள்.  படத்தை பார்த்துவிட்டு ஆர்.பி.சவுத்ரி ரீமேக் செய்ய விருப்பப்பட்டு வாங்கி வைத்துவிட்டதாய் சொன்னார்கள். 

சுப்ரமணியபுரம் எனும் ஊரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அதனால் அக்கோயிலை மூடி வைத்திருக்கிறார்கள். அக்கோயிலைப் பற்றி விசாரிப்பவர்கள் பாம்பு கடித்து இறக்கிறார்கள். மெடிக்கல் படிக்கும் ஹீரோ தன் சகாக்களுடன் ஊருக்கு மெடிக்கல் கேம்புக்கு வர, விஷயம் தெரிந்து தன் ஆர்வக்குட்டி வேலையை காட்ட, பாம்பு அவரை அழிக்க வருகிறது. பாம்பை பிடித்து ரெப்டைல் டிபார்ட்மெண்டில் விசாரிக்க, கிடைக்கும் விஷயம் அமானுஷ்யத்திலிருந்து திரில்லராய் மாறி முடிகிறது. படத்தின் கதை என்னவோ பழசுதான் அதை சொன்ன விதத்தில்தான் சுவாரஸ்யம்.

இளைமையான ஹீரோ, அழகு சுவாதி, உறுத்தாத நகைச்சுவை. விறு விறு திரைக்கதை, நல்ல விஷூவல் எபெக்டுகள் என கலந்து கட்டி அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். நல்ல சுவாரஸ்ய த்ரில்லருக்கு கார்த்திகேயா
Cable Sankar 

Mar 24, 2015

CINEMA BUSINESS -7

Distributor / Theater collection calculation and accounting

            No matter how the agreement and deals are put in order, accounting of collection lies on statistics of no of tickets in the theater, show-wise price of tickets, etc. To track, collect, record and verify this data, the distributor would send an agent from his side to every theater along with the print. This agent is called ‘Representative’ of the distributor. Representatives are paid salary of Rs.100.00 per day. He also stays in the theater till the movie run ends there. Some big names in distribution arrange the stay for them at nearby lodges too.

Mar 23, 2015

கோணங்கள் -21

கோணங்கள் 21 - கோடம்பாக்கத்துக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதா?

சார்.. நான் ஈரோட்லேர்ந்து பேசுறேன். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கடுமையா உழைச்சு ஒரு நல்ல கதை தயார் செஞ்சோம். படத்தைத் தயாரிக்கிறேன்னு விருப்பமா ஒருத்தர் வந்தாரு. ஷூட்டிங் போலாங்கிறப்போ எஸ்ஸாயிட்டாரு. எங்க கதைய அநாதையா விட மனசில்ல. அதைப் படமாக்க ஒரு தயாரிப்பாளர் தேவை உதவ முடியுமா?” என்று கேட்டுத் தொலைபேசினார்கள்.

Mar 20, 2015

CINEMA BUSINESS -6

Rental Process 
            As we have discussed already, In Chennai and other big cities, the theaters operate on rental basis. It does not matter whether it is a single screen or multiplex, the theaters operate on rental basis. The rent differs from one theater to another based on factors like locality, capacity and facilities. In Chennai, a moderate theater with AC and DTS can fetch around a lakh rupees as weekly rent. Rent can be split and charged (rent for screening the noon show only). Theaters like Devi have charged INR 2.5 Lakhs as weekly rent. We have paid this amount for ‘Uyirile Kalandhadhu’, which we released in Devibala. The quirky thing to notice in this trade is, the theater owners would deduct the rent for second week when they hand over the first week collection to the distributors. The term this as  ‘Protection Money’, explaining that the producer or distributor need not struggle to pay off the second week rent, perhaps the collection in that week is not good enough. It is indeed a protection for the theater owners; not for the distributors! However, now in many theatres in Chennai and other big cities, movies have started to release in percentage basis.

Mar 18, 2015

CINEMA BUSINESS -5

  1. Screening of a Movie (Exhibition)                                                  
            Consider this scenario. The producer has completed the film production, declared the release date and also have sold the movie area-wise. There is still work to do for the producer. They include preparing and delivering photo cards for the screening theaters, posters printing, arranging press shows for the reporters and print advertisement among many others. To take a film to the masses and let the public be aware of the movie, Television advertisement and interviews have to be arranged which attract a lot of expense. Films, which are not marketed this way, find it hard to be recognized by the public. Thus in present times, it is imperative to spend a fortune for advertisement.

Mar 17, 2015

கோணங்கள் -20

கோணங்கள் 20 - வீட்டுக் கதவைத் தட்டும் சினிமா!

சேரனின் சிடுஎச் டி.வி.டி. ஒரு வழியாக வெளியாகிவிட்டது. திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் டி.வி.டியிலும் வெளியாகும் என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் அனைவரும் சேரனுக்கு, யார் யாரெல்லாம் படம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்று தடை போடுமளவுக்கு வாய்மொழி உத்தரவு போட்டதையும் மீறிக் களமிறங்கிவிட்டார்.
சேரனின் படம் வெளிவந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தின் வீடியோ டோரண்டில் வலம் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமாக வரும் 4.7 ஜிபி இல்லாமல் 8 ஜிபி அளவுக்கான கன்டென்ட்டை கம்ப்ரஸ் செய்து 1.7 ஜிபிக்கு டவுன்லோடு செய்து கொள்ளும் அளவுக்கு இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் திருட்டு வீடியோ நண்பர்கள். இனி அவ்வளவுதான் இது வேலைக்காகாது; போட்ட காசை எடுக்க முடியாது என்று ஆளாளுக்கு ஒருபுறம் கருத்தாகவும், சந்தோஷமாகவும், பொறாமையுடனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனைதான் விற்றது இத்தனைதான் விற்றது எனக் கணக்கிட்டுக் காசு தேறலை என்று பேசுவார்கள். இப்படிப் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் செயல்படுவதேயில்லை.

நிச்சயம் ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னும் பெரிய உழைப்பும், தியாகமும் இருக்கின்றன. டி.வி.டி.யில் வெளியிடுகிறேன் என்று சொன்னதும் உன் படத்தைக் கொடுப்பியா என்ற கேள்வி நிச்சயம் சேரனுக்கு வந்திருக்கும் “இதோ நான் என் தயாரிப்பு இயக்கத்தில் வந்த படத்துடன் ஆரம்பிக்கிறேன்” என்றதும். அந்தக் கேள்விக்கான அழுத்தம் குறைந்து இதன் சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கினார்கள். சேரன் செய்த புத்திசாலித்தனமான விஷயம் இத்திட்டத்துக்கான மார்க்கெட்டிங் செட் அப்பை நிறுவியதுதான். அதனால் லட்சக்கணக்கில் டி.வி.டி. விற்றிருப்பதும், கேரள மாநிலத்தில் டிஜிட்டல் கேபிளின் மூலம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 7,500 பேர் நூறு ரூபாய் கொடுத்துப் படத்தைப் பார்த்திருப்பதும் நடந்துள்ளது. யோசித்துப் பாருங்கள் கிட்டத்தட்ட 7.5 லட்ச ரூபாய் வசூல். இது உண்மையா இல்லையா என்று ஆராய்வதைவிட, இம்முறையிலும் ஒரு சினிமா சம்பாதிக்க முடியும் என்ற விஷயத்தை முன்வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.
ஒரு சூப்பர் ஹிட் படத்தின் வாழ்வே மூன்று வாரங்கள் என்றாகிவிட்டது. தியேட்டர் கிடைக்காத, பெரிய படங்களோடு வரிசை கட்டி நிற்க வேண்டிய சூழல் நிலவும் இன்றைய நிலையில் ஒரு படத்தைப் பற்றிய விஷயம் வெளியே சென்று சேருவதற்குள் அடுத்த வாரம் தியேட்டரில் இல்லாத நிலையே அதிகம். இதற்காக தியேட்டர்களைக் குறைகூறிப் பிரயோஜனமில்லை. தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

டிமாண்டுக்கு மீறிய சப்ளை உள்ளது. அப்படியே போனாலும் தியேட்டரின் தரம், விலை, எனப் பொருளாதார விஷயங்கள் முன்னின்று மிரட்டுகின்றன. வாரத்துக்கு நாலு படமென்று வெளிவரும்போது அதில் எது சிறந்தது என்று பார்ப்பவர்களைவிட, பிரபல நடிகர்கள் நடித்த படங்களைக் காணப் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தக் காரணங்களால் திரையரங்கு உரிமையாளர்களும் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இத்திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொடர்ந்து செயல்படுவதுடன் நல்ல திரைப்படங்களை இவர்களது நிறுவனம் தொடர்ந்து அளிக்கிறது என்கிற பிராண்ட் வேல்யூவையும் பெற வேண்டும். அதேநேரம் கமர்ஷியலாகவும், பாமர மக்களின் ரசனையோடு ஒத்த படங்கள் தேவை. அப்படிச் சிறப்பாக நடக்கும் பட்சத்தில் வெறும் டி.வி.டி. மூலமாக மட்டுமில்லாமல், ஆன்லைனில் பணம் கட்டி டவுன்லோட் செய்து கொள்ளும் முறை, ஆன்லைனிலேயே பார்க்கும் முறை, பே பர் வியூ, வீடியோ ஆன் டிமான்ட் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சாத்தியப்பட வைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சிறிய,பெரிய படங்களின் டி.வி.டி.க்களைப் படம் வெளிவந்து சில வாரங்கள் கழித்து இவர்கள் தங்கள் நெட்வொர்க் மூலம் விற்பனைக்குக் கொண்டு வந்தால் தமிழ் சினிமாவில் மீண்டும் வீடியோவுக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகும்.

உலக அளவில் ஹாலிவுட் படங்களில் பல படம் வெளிவருவதற்கு முன்பே டி.வி.டி.யில் வெளியாகி, பின்பு லிமிடெட் ரிலீஸ் என்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. அப்படியில்லாமல் தியேட்டரில் ரிலீஸான படம் அடுத்த வாரங்களில் வீடியோ ஆன் டிமாண்டில், வெளியாகி, பின்பு ஓரிரு வாரங்களில் புளூரே டி.வி.டியாகவும், ஹெச்டி வீடியோவாகவும், பே சேனல் எனப்படும் கட்டண சேனலிலும், பின்பு சில காலம் கழித்து இலவச சேனல்களிலும் வெளியாகி ஒவ்வொரு வெளியீட்டிலும், படத்தை விலைக்கு விற்றுப் போட்ட முதலை எடுக்கிறார்கள்.

தியேட்டரில் மட்டுமே வெளியாகிப் போட்ட முதலை எடுக்க வேண்டுமென்று காத்திருப்பதில்லை. யார் யாருக்கு எப்படி எல்லாம் படம் பார்க்க விருப்பமோ அப்படி அவர்களின் விருப்பத்துக்கேற்ப அதைக் கொண்டு செல்கிறார்கள். டிமாண்டுக்கு ஏற்ப சப்ளை இருப்பதால் அவரவர் தேவைக்கு ஏற்ப உபயோகித்துக்கொள்கிறார்கள். அதே போன்ற மனநிலையில் இங்கேயும் செயல்பட ஆரம்பித்தால், நிச்சயம் இம்மாதிரியான வீடு தேடி வரும் சினிமாவுக்குப் பெரும் வரவேற்பும், பொருளாதார வெற்றியும் கிடைக்க ஆரம்பிக்கும். அம்மாதிரியான வெற்றிகள், மேலும் பல புதிய விஷயங்கள், திறமைகள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை.

மினி ரிவ்யூ - சூர்யா Vs சூர்யா
சூர்யா எனும் ஹீரோவுக்கு போர்ப்ரியா (Phorphria) என்றொரு வித்தியாசமான வியாதி. வெய்யிலில் வெளியே போனால் அவர் இறந்துவிடுவார். அதனால் இரவில் மட்டுமே அவரது வாழ்க்கை. பணக்கார பையன் என்பதால் சகல வசதிகளையும் கொண்டவர். இதனால் இரவுக் கல்லூரியில் படிக்க, அப்போது டிவி ஆங்கராக இருக்கும் ஹீரோயினை பெண்ணைச் சந்திக்கிறார். காதல் கொள்கிறார்கள். பின்னாளில் அவரது பிரச்சினை தெரிந்து இருவரும் பிரிந்துவிட, எப்படிச் சேருகிறார்கள் என்பதுதான் கதை.
ஆரம்பக் காட்சியிலிருந்து முதல் பாதி வரை, வயதான தனிகலபரணி, ஆட்டோக்கார சக படிப்பாளிகளுடன் காமெடியாகவே நிகில் சித்தார்த் கொட்டம் அடிக்கிறார். இரண்டாம் பாதியில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ். பின்பு ஹேப்பி எண்டிங். தணிகலபரணி, நிகில், அவருடைய அம்மா மது ஆகியோரைச் சுற்றியே வருகிறது கதை. குறிப்பாய் முதல் காட்சியில் அவரைக் கடத்திப் போகும் உள்ளூர் ரவுடியுடனான காட்சிகளும் வசனமும் சுவாரஸ்யம். க்ளைமேக்ஸ் வழக்கமான பீல்குட், தெலுங்குப் படங்களுக்கான டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும், இம்மாதிரியான கதையை அழ, அழ வைத்து உணர்ச்சிப் பெருக்காமல், கலகல ஜாலி ஜிம்கானாவாய் அமைந்திருப்பது சந்தோஷம். இயக்கம் கார்த்திக். ஒருமுறை பார்க்க ஏற்ற தெலுங்குப் படம்.
கேபிள் சங்கர்

Mar 16, 2015

கொத்து பரோட்டா -16/03/15 -ராஜதந்திரம், தண்ணில கண்டம், கதம் கதம், மகாபலிபுரம்,ஓலா, தமிழ் சினிமா, ட்ராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமியை அதிகாலையில் போய் கைது பண்ணியிருக்கிறார்கள். போலீஸ் பாதுகாப்போடு இருக்கிறவர் தப்பியோடவா போகிறார். அதுவும் அவர் மிரட்டல் விட்டாராம். புகார் கொடுத்தவரின் பாதுகாப்பு கருதி கைதாம். ம்ஹும். மிடியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Mar 13, 2015

சாப்பாட்டுக்கடை - Absolute Barbeque

பேலியோ டயட் பாலோ செய்ய ஆரம்பித்ததிலிருந்து சாப்பாட்டுக்கடை பக்கம் அதிகம் செல்வதில்லை. அதையும் மீறி சில அன்பு உள்ளங்கள் என்னை தீண்டி, உசுப்பேத்தி வாரத்தில் ஒரு நாள் எடுக்கும் சீட்டிங் டயட்டை ரெண்டு நாளாக்கி விட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தூண்டிய நண்பர் தான் எழில். இந்த சாப்பாட்டுக்கடையைப் பற்றி ஒரு பத்து நிமிஷம் அஹா ஓஹோவென சொல்லி, நான் இன்னும் சாப்பிடலை. ஒரு நாள் போகணும் என்றார். சாப்பாட்டுக்கடை ஓனரான என்னிடம் இப்படி சொன்னவுடன் “அட நாம அவுட்டேட் ஆயிட்டா அப்புறம் தமிழ் சாப்பாட்டுச் சமூகத்தை யார் காப்பாத்துறது?’ என்ற பெரும் பொறுப்பு என்னை விடாமல் துரத்த, ரெசிடென்ஸிக்கு பக்கத்தில் உள்ள பழைய நட்ஸ் அண்ட் ஸ்பைஸ் கடையின் மூன்றாவது தளத்தில் அமைந்திருக்கும் அப்சல்யூட் பார்பிக்யூ வில் ஆஜரானேன். 

Mar 11, 2015

CINEMA BUSINESS -4

  1. Film distribution
Immediately after the film production is complete, the producer or the production house would be arranging for sales shows for the film. These sales shows are called previews. All-important key distributors would be invited for this preview. The people who watch the movie include distributors and people who are middlemen called mediators. This group determines and fixes the price of the movie based on the cast of the film, technicians’ quality and the previous movies’ success rate of the hero or the director. And to tell you the fact, most of the times, these decisions have gone only wrong!

Mar 9, 2015

கொத்து பரோட்டா - 09/03/15 -எனக்குள் ஒருவன்/பெஞ்ச் டாக்கீஸ்/ஜே.கே எனும் நண்பனின் கதை

பயணம்
நேற்று மாலை நண்பர் முரளி சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஓலாவில் ஆட்டோ புக் செய்தேன். முதலில் வந்த ட்ரைவர் போன் செய்து தான் ஆலந்தூரில்  இருப்பதாகவும், உடனே வர முடியாது என்றார். பின்பு மீண்டும் ஆட்டோவே ட்ரை செய்த அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆட்டோ ஆஜர். மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து அம்பாமால் வரைக்குமான கட்டணம் 104 ரூபாய் சில்லறை. +10 ரூபாய். மீண்டும் இரவு பத்து மணிக்கு ஓலா ஆட்டோவே புக் செய்தேன். அம்பா மால் வாசலில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை. இம்முறை 110 ரூபாய் ஆனது +10 ரூபாய். ஆனால் மிக அருமையான கஸ்டமர் சர்வீஸ். இன்று பேப்பரில் ஆட்டோ சங்க ஆட்கள் நேற்று போராட்டம் செய்தார்களாம். ஓலாவில் 10 ரூபாய் அதிகமாய் பணம் வாங்குகிறார்களாம். அது சட்டத்திற்கு விரோதமாம். பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமாம். நேற்று இரவு அம்பா மாலில் ஆட்டோ ஏறுவதற்கு முன்னால் ஆட்டோவை லொக்கேட் செய்ய அவருக்கு கால் செய்து கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரர் “எங்க சார் போகணும்?’ என்று கேட்டார். இப்பவாச்சும் திருந்தியிருக்காங்களா?ன்னு பார்க்கிறதுக்காக பக்கத்தில இருக்கிற நுங்கம்பாக்கம் ஹைரோட்டுக்கு போலாமா என்றேன். 150 ரூபா என்றார். நான் வரும் போது சைதாப்பேட்டைலேர்ந்தே 104 ரூபாய்க்குத்தான் இங்க வந்தேன். என்றேன். இவனுங்களும் திருந்த மாட்டாங்க.. திருந்தி தொழில் பண்றவனையும் வாழ விட மாட்டாங்க.. 
@@@@@@@@@@@@@@@@@@@@

Mar 6, 2015

CINEMA BUSINESS -3

2.Business of Tamil films

            The task is not complete for the producers with last day of shooting or the day when the movie’s editing is completed. It has to be traded. That is where a producer could recover the money he had invested in the making of the movie. As a matter of fact, the difficulties of making a movie are equal to that of trading it. The expenses incurred in the production would equate the expenses incurred by the distributors.

Mar 5, 2015

CINEMA BUSINESS -2

1.    Cinema Industry

            Arguments are very common amidst Kollywood fans about the budget of their favorite stars’ movies. They claim sky high the budget and sales figures of the movies to the fans of their conceived opponent heroes. But they do all the boasting without knowing the basic facts like how the movie is sold, how a movie is distributed or even if the movie could collect back the huge amount of funds gone in the making. They don’t cost them anything. Just plain talks! Same time, it is also fact that some shoestring budget movies, which had costed the producer a few crores have surprised the whole K-town with tremendous success and amazing collection.

Mar 4, 2015

CINEMA BUSINESS

Preface
 
Every day, every week, we the public witness a slew of movie releases happening relentlessly in the realms we dwell upon.  In the case of TamilNadu, every week sees the release of at lease three local language (read Tamil) movies, a couple of other language or dubbed movies are releasing. At times, in a single month more than twenty local language movies flurry the cinemas and as fate works out, mostly they fail to leave an impression in the minds of public, bomb at box offices and finds asylum in Television channels to be telecast ‘first time in the TV universe’. Most of the times, these ill-fated movies turn out to be small budget movies. Ironically, only these small budget movies are surviving Tamil film industry albeit in a small way. Few years ago, the whole industry was at the verge of collapse due to the new corporate production homes’ blunders and further fuelled by their bungled modus operandi.

Small budget producers give opportunity and life to aspirational new faces in acting, directorial and technical streams of the film industry by debuting them. Nevertheless, even most of the commendable small budget movies disappear without a trace. Ever wondered why?

Just ask anyone the success recipe for a movie; pat comes the reply that it is a good storyline. There are a lot of folks who firmly trust that a good storyline alone could make a movie blockbuster. All I want to tell them is, there are so many movies out there with great story and bombed at cinemas. People wonder why they did not click when they get to see them during TV telecasts. The reality is, good story and screenplay alone cannot make the film a success. Beyond good content, marketing is imperative for a film’s success. Even amidst who realized this fact the Tamil film industry fraternity, only a fraction has implemented the tactics and succeeded.

            Present dynamics demand anywhere between a few to a hundred and fifty crore rupees to produce a Tamil film. How the investors sell this huge investment? Scenarios like any novice could make tall claims on the collection of the movie with so called authentic database, which could make veterans of film industry, go weak at the knees. Are such claims real in the first place? How many of us know the amount of funds, labour and skill sets it takes to release a movie is almost equal to that of produce a movie? From my film distribution encounters and movie theater know-how, I would like to you on these discreet, rarely known and heretical trade facts of cinema trade through this book.

கேபிள் சங்கர் - Cable Sankar - Translation Of My Book In Tamil "CINEMA VYABARAM" Done By Rangs. Published in Behindwoods.com. 


Mar 3, 2015

கோணங்கள் -18

செங்கல்பட்டில் ஒரு ராஜ்கிரண்

எட்டு வருடங்களுக்கு முன்னர், தெரிந்த இசையமைப்பாளர் ஒருவர் கூப்பிட்டார். நண்பர் ஒருவர் படம் செய்யவிருப்பதாகவும், அப்படத்துக்கு நான் வசனம் எழுத வேண்டுமென, இயக்குநர் அழைப்பதாகச் சொல்ல, பரபரப்பாகக் கிளம்பினேன்.எழுத்தாளர்களை மதிக்கும் இயக்குநர்களை எனக்குப் பிடிக்கும். கதை, திரைக்கதை, வசனம், எல்லாவற்றையும் ஒருவரே பார்ப்பது இம்சையான வேலை.

Mar 2, 2015

கொத்து பரோட்டா- 2/03/15

Bench Talkies No.1
ஆங்கிலத்தில், இந்தியில், ஏன் மலையாளத்தில் கூட குறும்படங்களின் தொகுப்பாய் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் குறும்படம் இயக்கியவர்களை இயக்குனர்களாய் கொண்டாடும் தமிழகத்தில் இன்று வரை குறும்படங்களை தொகுப்பாய் அமைத்து படம் வெளியானதில்லை. ஏற்கனவே பாலசந்தர் அவர்கள் ஒரே படத்தில் இரண்டு கதையை கொடுத்திருந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சி ஒரே படத்தில் ரெண்டு கதைகளை வைத்து படம் எடுத்திருந்தார். குறும்படங்கள் இயக்கி, தயாரித்து, அதன் மூலமாய் உடனடியாய் திரைப்படம் இயக்க வாய்ப்புக்காகத்தான் பல பேர் குறும்படம் எடுக்கிறார்கள். ஆனால் குறும்படத்திற்கென்று தனி மார்கெட், அதன் மூலம் வருமானம் என்று ஒர் வழியுள்ளதை இன்னும் நிறைய பேர் கண்டறிய முயலவே இல்லை. இன்றளவில் ஏவிஎம்மிலோ, ஆர்.கே.வியிலோ குறும்படம் எடுத்துவிட்டு, யூ டியூப்பில் போடுவதை தவிர்த்து பத்து பைசா காசு பார்க்க முடியாமல் தொடர்ந்து கோடம்பாக்க கனவுடன் வளைய வருகிறவர்களுக்கு அதை பணமாக்க, குறும்படங்களை காசு கொடுத்து பார்க்கை வைக்க முயலுங்கள் என்று அடிக்கடி நான் பங்கேற்கும் மேடைகளில் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.  அதை கார்த்தி தன் வெற்றியின் பங்காய் அதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த, ஆறு இயக்குனர்கள் இயக்கிய குறும்படங்களை ஒன்றாய் தொகுத்து பெஞ்ச் டாக்கீஸ் என்கிற பெயரில் ஒர் திரைப்படமாய் வெளிவர இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தன்னுடய ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலமாய் அதை முதலடி எடுத்து வைத்திருக்கிறார். சத்யம், பிவிஆர் போன்ற தியேட்டர்களில் வருகிற மார்ச் 6 தேதி முதல் சென்சார் சர்ட்டிபிகேட்டுடன் ஒரு முழு நீள திரைப்படமாய் வெளியாகிறது. குறும்படங்களை யூட்யூபிலும், இலவச ப்ரிவியூக்களிலும் அவரவர் குழுவிற்கான ஆதரவு தரும் இளம் குறும்பட ஆர்வலர்களும், வித்யாச சினிமா விரும்பிகளும், இம்மாதிரியான முயற்சிக்கு கொடுக்கும் ஆதரவாய் திரையரங்குகளில் சென்று பார்த்தால் நிச்சயம் அடுத்தடுத்து இன்னும் நல்ல முயற்சிகளுக்கு ஏதுவாய் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@

சென்ற வாரம் ஓலா கேப் பற்றி எழுதியதை பல பேர் பாராட்டியும், சில பேர் அதன் சர்வீஸை குறை கூறியும் எழுதினார்கள். என்னைப் பொறுத்தவரை பொதுச் சேவை புரியும் நிறுவனங்களில் முழுக்க, முழுக்க, கஸ்டமர் சர்வீஸில் திருப்தியாய் கொடுக்க எவராலும் முடிவதில்லை. அதுவும் கஸ்டமருக்கு மரியாதையே இல்லாத இந்தியாவில் இதெல்லாம் சாத்தியமேயில்லை எனும் நிலையில் கிடைத்த நல்ல விஷயங்களைக் கொண்டு அவர்களைப் பாராட்டினால்தானே அடுத்து மேலும் பல நல்ல விஷயங்களை அவர்களால் செயல்படுத்த முடியும் என்கிற சுயலாபத்தில் தான் எழுதப்பட்டதே தவிர, ஓலாவின் கொள்கை பரப்பு செயலாளராக அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு விஷயம் சமீபத்தில் ஓலாவில் நடந்த ஒரு சிறு குழப்ப விஷயத்தை அவர்களின் கஸ்டமர் கேருக்கு சொல்லி அதை ஒரிரு மணி நேரங்களில் சரி செய்து கொடுத்தார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
அனேகன்
கே.வி.ஆனந்த், தனுஷ் காம்பினேஷன். ஹாரிஸின் டங்கா மாரி வேறு அதகள ஹிட், முன் ஜெமத்துக் கதையா, அல்லது சயின்ஸ் பிக்‌ஷனா? இல்லை ஹலூசினேஷனா என்று பட்டி மன்றம் வைக்கும் அளவிற்கு திருநெல்வேலி அல்லா கொழ கொழ. வழக்கமான மசாலாவைத் தவிர பெரிதாய் ஏதும் எதிர்பார்க்காமல் போயிருந்ததால் ஏமாற்றம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் ஏமாற்றமும், கொஞ்சம் தனுஷுக்காகவும், அல்லது நெஞ்சம் மறப்பதில்லை, மகதீரா குழப்படியினாலும், பிடிச்சிருந்திச்சா இல்லையான்னு முடிவெடுக்கிறதுக்குள்ளே.. படம் முடிஞ்சிருச்சு.  பிடிச்சது கார்த்திக், தனுஷ். பிடிக்காதது எத்தனையோ கோடி செலவு செய்து படமெத்திருக்கிறார்கள். நாலு நல்ல விக் வாங்கியிருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
காக்கிசட்டை
டாணா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படம். சிவகார்த்திகேயனை ஆக்‌ஷன் அந்தஸ்துக்கு உயர்த்த முயற்சி செய்த படம். என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமாய் வரும் ஒரு சில பஞ்ச், அண்ணாச்சியின் சுவாரஸ்யங்களைத் தவிர வேறேதுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Bandipottu
அல்லரி நரேஷ் ஒர் தில்லாலங்கடி பார்ட்டி. எத்தையாவது செய்து ஆட்டைய போடுவதில் வல்லவர். அவரிடம் கதாநாயகி வந்து தன் அப்பாவை ஏமாற்றிய மூவரைப் பற்றிச் சொல்லி, அவரக்ளை பழிவாங்க வேண்டும் என்று கேட்கிறார். அவரும் ஏதும் கேட்காமல் மூவரையும் பழிவாங்கி, ஹீரோயினுடன் காதலும் கொண்டு, தான் ஏன் இவர்களை பழிவாங்கினேன் என்று காரணமும் சொல்கிறார். கதையாய் கேட்டபோது அட சுவாரஸ்யமாய் இருக்கிறதே என்று யோசித்த லைன். படமாய் பார்க்கும் போது டிபிக்கல் ஓல்ட் டைப் தெலுங்கு மசாலாதான். அங்காங்கே வரும் ஒரிரண்டு காட்சிகளைத் தவிர.
@@@@@@@@@@@@@@@@@@@
Qissa
2013  ஆண்டு, ஜெர்மன் மற்றும் என்.எப்.டி.சியின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம். நிறைய வெளிநாட்டு பட விழாக்களில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற படம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஒர் பஞ்சாபியின் கதை. அவனுக்கு பிறக்கும் நான்காவது பெண் குழந்தையை அவன் பெண்ணாய் ஏற்றுக் கொள்ளாமல் ஆண்மகனாகவே வளர்க்கிறான். அவனுக்கு பயந்து அவனது குடும்பமும் அப்படியே நடத்துகிறது. ஏன் ஊரே கூட அதை நம்புகிறது. இது அவளை ஆண் என்று நினைத்து காதலிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் போது ப்ரச்சனையாகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் தான் ஒரே குழப்படியாய் இருக்கிறது. பாராட்ட வேண்டிய அம்சம் என்றால் இர்பான் கான் மற்றும் திலோத்தமாவின் நடிப்புத்தான். அபாரமான நடிப்பு. பல இடங்களில் வெறும் கண்களால் மட்டுமே பல விஷயங்களை கடத்துகிறார்கள். பின் வரும் காட்சிகளில் மகளால் திருமணம் செய்யப்பட்ட, பெண்ணின் செக்ஸுவல் ப்ரச்சனைக்காக, அவளை மாமனாரே கற்பழிக்க முற்பட, அவரது பெண்ணே அவரை சுட்டுக் கொல்கிறாள். பின்பு வரும் காட்சிகள் எல்லாம் ஒரே வழவழ, குழகுழவென சுழன்றியடிக்கிறது. செத்து போன இர்பான் ஆவியாய் வருகிறார். ஒரு காட்சியில் தன் பெண்ணை அப்படியே தன் ஆவிரூப உடம்பினுள் இறக்கி, அப்பா உடம்பில் பெண் மீண்டும் ஆணாகிறார். புரியலைன்னா.. புரிஞ்சா மாதிரி வாவ்.. குட்.. சம்திங் லைக் இல்யூஷன். மேஜிக்கல் ரியலிசம் என்று எத்தையாவது சொல்லி, பாராட்டித் தொலைந்தால் தப்பித்தீர்கள். இல்லாட்டி என்ன பெரிய பெரிய படமெல்லாம் பார்த்து பாராட்டியிருக்கு உனக்கு புரியலைன்னா எப்படி என்ற கேள்வி வந்திரும் ஸோ.. குஸ்ஸா.. அட்டகாசம், அற்புதம். எக்ஸ்ட்ராடினரி.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A trucker who has been out on the road for two months stops at a brothel outside Atlanta. He walks straight up to the Madam, drops down $500 and says, "I want your ugliest woman and a grilled cheese sandwich!" The Madam is astonished. "But sir, for that kind of money you could have one of my prettiest ladies and a three-course meal." The trucker replies, "Listen darlin’, I’m not horny – I’m just homesick."
கேபிள் சங்கர்