Pages

Jan 28, 2019

சாப்பாட்டுக்கடை - பாய்கடை - விருகம்பாக்கம்.

சரவணபவன் வெற்றிக்கு பின் எங்கே யார் சைவ உணவகம் ஆரம்பித்தாலும், கூடவே பவன் எனும் பெயர் சேர்ந்து கொள்ளும்.அதே போலத்தான் மெஸ். ஆனால் இந்த பாய்கடை அப்படியல்ல. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் இந்தக்கடை ஒரு போர்ட்டு கூட இல்லாமல் வாய் வழி பிரச்சாரம் போலவே வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. 


சிக்கன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு ஆகிய இரண்டு வகை சாப்பாடுகள் சிக்கன் குழம்பு, மூன்று மண்டை, மண்டையான சிக்கன் 65, ரசம், சாம்பார், மோர் கூடவே அன்லிமிடெட் சாப்பாடு. சிக்கன் குழம்பு நல்ல மசாலா மணத்துடன், கொண்டைக்கடலை, தேங்காய் எல்லாம் அரைத்துப் போட்டு, அளவான காரத்துடன் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தால் சாம்பார், ரசம் , மோர் எல்லாமே இரண்டாம் பட்சமாய் போய்விடும். உடன் கொடுக்கப்படும் சுடச்சுட கொடுக்கப்படும் வழக்கமான சிக்கன் 65 போலில்லாமல் வீட்டில் சில சமயம் கிடைக்கப்பெறும் ஹோட்டல் போல் அல்லாத சிக்கன். ரெண்டுமே ஆகச் சிறந்த காம்பினேஷன்.

மட்டன் சாப்பாடுக்கு சிக்கன் 65 எல்லாம் கிடையாது. நன்கு மசாலாவோடு ஊறிய பெரிய சைஸ் மட்டன் பீஸோடு கொடுக்கப்படும் குழம்பு. நல்ல காரம் மணத்துடன் இருக்கும். கடைக்குள் நுழையும் போதே, உலை கொதித்துக் கொண்டிருக்கும் வாசமும், 65 பொரிக்கும் வாசமும், ஒன்று சேர நம்மை அசர அடிக்கும். 

இரவில் தோசை, சப்பாத்தி கொண்டக்கடலை, காலிப்ளவர் குருமா, அட்டகாசமான கறிவேப்பிலை, பருப்பு,புளி போட்டு நரநரவென அரைத்த காரச் சட்னி ஆசமோ ஆசம். 

முன்பு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு சாப்பாடு என போட்டிருந்திருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டதினால் வெறும் சிக்கன், மட்டன் சாப்பாடு மட்டுமே. மதியம் 12 ஆரம்பித்தால் 3-3.30 கடை மூடிவிடுகிறார்கள். அங்கேயே இருந்து சாப்பிட அவ்வளவு வசதிப்படாத சின்னக்கடைதான். பழைய வீடு. தேவைப்பட்டவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டு சென்று விடுவது நல்லது. சிக்கன் சாப்பாடு 100 . மட்டன் சாப்பாடு 120 

பாய் கடை
திருவள்ளுவர் தெரு 
வளசரவாக்கம்

No comments:

Post a Comment