May 25, 2013
நடிகையின் டைரி
சில்க் ஸ்மிதாவின் நிஜமான வாழ்கையின் பின்னணியை, டர்ட்டி பிக்சரில் சொன்னது எல்லாம் ஜுஜுபி.. நாங்க தான் ஒரிஜினலாக சொல்கிறோம் என்றார்கள். சனாகான் வேறு ரெண்டு நாளைக்கு ஒரு முறை நான் அப்படி பீல் பண்ணேன் இப்படி பீல் பண்ணேன். என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். இவ்வளவு பில்டப்புக்கும் இது தகுமா? எனற கேள்வியோடுதான் படம் பார்த்தோம்.
சனாகானை வைத்து ஒரு பிட்டு படமாகவும் இல்லாமல், சில்க் ஸ்மிதாவின் கதையாகவும் இல்லாமல், நடிகையின் கதையாகவும் இல்லாமல், மொக்கையானது தான் மிச்சம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஒரு தாடிக்காரர் இருந்தார் என்றதை வைத்துக் கொண்டு குறுந்தாடி வைத்த ஒருவரிடம் தன்னை கொடுத்து அவருடனே லிவிங் டூகெதராய் இருந்தார் என்றும், ஸ்மிதாவின் பணத்தை எல்லாம் அவர் தான் சுவாஹா செய்தார் என்றும், தாடிக்காரரின் வயது வந்த மகன் ஸ்மிதாவின் மேல் காதல் கொண்டதால் தான் சில்க் ஸ்மிதா தாடிக்காரரால் கொலை செய்யப்பட்டார் என்று கதை சொல்கிறார்கள்.
எஸ்.கே
எஸ்.கே
May 24, 2013
செவிக்கினிமைகள்
மூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்..
அச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி.
கேபிள் சங்கர்May 21, 2013
நேரம்
70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்

வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர், தங்கையின் கல்யாணத்துக்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் வேறு வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி ப்ரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி அஜாக்கிரதையா இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்திருக்க, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
நன்றி கார்டு போட ஆரம்பிக்கும் போதே அட என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அமெரிக்காவில் எவனோ ஒருவன் குசு விட்ட குண்டு, இந்தியாவில் உள்ள வெற்றியின் கம்பெனிக்கு கேயாஸ் தியரி வெடியாக வெடிக்கும் அனிமேஷன் காட்சிகளில் அடேடே என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். வட்டி ராஜா கேரக்டரையும், சின்ன வயது காதலியைப் பற்றி சொல்லுமிடத்தில் அட அட அட என இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்பட்ட அத்துனை அனுபவமும், மெல்ல, மெல்ல, சுருதி குறைந்து நீண்ட சேஸிங், ஹைஸ்பீட் சேஸிங் என்று சேஸிங்கில் பலவிதம் என்று எஸ்டாபிளிஷ் செய்து இடைவேளை விடும் போது கொஞ்சம் சொங்கித்தான் போகிறோம்.
கதாநாயகி நஸ்ரியா அழகாய் இருக்கிறார். நடிக்கத்தான் வாய்ப்பில்லை. நவீன் வெற்றியாக வருகிறார். நடிப்பில் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. நடிப்பில் பெயர் தட்டிப் போகிறவர்களில் முதன்மையானவர் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, சூது கவ்வும் படத்தில் பார்த்தவர்களுக்கு இதில் அப்படியே உட்டாலக்கடியாய் சீரியஸ் வில்லன் பாத்திரம். பாடிலேங்குவேஜ், மேக்கப் என்று எல்லாவற்றிலும் நல்ல வித்யாசம். இன்னொருவர் தம்பி ராமையா. ஆங்காங்கே பேசி கிச்சு கிச்சு மூட்டுகிறார். நாஸ்ர் கேரக்டர் சுவாரஸ்யம் என்றாலும் எதற்கு என்று தெரியவில்லை. இருந்தாலும் அந்த ஆசம்.. அட்டகாசம். போலீஸ்காரர் ஜான் விஜய்க்கும், தம்பி ராமையாவிற்கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் வசனமெழுதிய பிரவீனுக்கு பெயர் வாங்கித் தரும்.
ஆனந்த் சந்திரனின் ஒளிப்பதிவு தெளிவு. முக்கியமாய் சேஸிங் காட்சிகளில் நல்ல ஓட்டம். 5டி,7டி கேமராக்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம் டெக்னிக்கலாய் நல்ல அவுட்புட்டில் வந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. இசை ராஜேஷ். டைட்டில் காட்சி பின்னணி இசையும், முதல் பாடலும், க்ளைமாக்சில் வரும் சேசிங் இசை பழைய க்ளாஸிக்கல் பீத்தோவன் இசை க்ளாஸ்.
எழுதி, எடிட்டி, இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். டைட்டில் கார்டில் குவாண்டின் டோரண்டினோவின் பிரபலமான வாசகத்தையும், கமல், ரஜினி, மோகன்லால், மம்முட்டி என்று நன்றி லிஸ்டு போடும் போதும், ஆரம்ப கேயாஸ் தியரி காட்சிகளிலும், வட்டி ராஜா, அவனின் அல்லக்கைகள், க்ளாஸிக்கல் இசை பிரியரான சப் இன்ஸ்பெக்டர், ரவுடிகளுக்கு லைட் அவுஸ், என்பது போன்ற பெயர்களை கொடுத்து கவனிக்க வைத்தது. நாசர் மற்றும் அவரது தம்பியின் கேரக்டர் என மிகத் தீவிரமாய் ஒரு வித்யாசமான அனுபவத்தை தர வேண்டும் என்ற இண்டென்ஷன் சரியாக இருந்தாலும்,முதல் பாதி ஸ்லோ மோஷன் திரைக்கதையாலும், குறும்படத்தை திரைப்படமாக்க செய்த முயற்சியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நேரம் உச்சமடைந்திருக்கும்..
கேபிள் சங்கர்
May 20, 2013
கொத்து பரோட்டா -20/05/13
70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்
இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்பதை வெளிக்காட்டும் நேரம் வந்திருக்கிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள்.
இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்பதை வெளிக்காட்டும் நேரம் வந்திருக்கிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
May 16, 2013
அடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி
2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் நெகிழ்ந்து போயிருந்த எனக்கு மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்த நாள் காலையில் பிரபாகரின் யூஷுன் வீட்டின் கீழ் அவருடய காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் தான் ராஜ். ஒல்லியாய், நல்ல உசரமாய் அருமையான கொங்கு தமிழில் அன்பொழுக என்னை கட்டி அணைத்து வரவேற்றார்.
Labels:
pattapatti,
raj,
பட்டாபட்டி,
ராஜ்
May 15, 2013
May 14, 2013
Ustaad Hotel
சில திரைப்படங்களை பார்க்கும் போது அடடா எப்படி இந்தப் படத்தை மிஸ் செய்தோம் என்று வருத்தப்பட வைக்கும். அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் இந்த உஸ்தாத் ஓட்டல். ஒரு முறை பதிவர் சிவகுமார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சாப்பாட்டுக்கடை ஓனராகிய நான் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி நான் தேடி போவதற்குள் தியேட்டரை விட்டு போய்விட்டது.
May 12, 2013
நாகராஜசோழன் MA MLA
சத்யராஜ் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதுவும் அவரது நடிப்பில் 200 வது படம். இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவரும் 50வது படம். இவர்கள் இருவரது மாஸ்டர் பீஸான அமைதிப்படையின் இரண்டாவது பாகம் என்றால் கேட்க வேண்டுமா? மக்களின் எதிர்பார்ப்பைப் போல விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பும் எகிறித்தான் இருந்தது. இல்லாவிட்டால் தயாரிப்பாளராய் இருக்கும், டாக்டர் ராமதாஸ் விநியோகஸ்தராய் அவதாரம் எடுத்திருப்பாரா? சரி.. இப்படி பல பாயிண்டுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் திருப்தியை கொடுத்ததா? என்றால் பெரிய இல்லை என்றே சொல்ல வேண்டும்.
May 10, 2013
Subscribe to:
Posts (Atom)






