இத்தாலியின் மிலன் நகரிலும், டென்மார்க் கோபஹேகன் நகரிலும் வாசகர்கள், நண்பர்கள் யாரேனுமிருந்தால் என் மின்ஞசலில் தொடர்பு கொள்ளவும். நண்பருக்காக..
Mar 21, 2012
Mar 20, 2012
Fefsi
தொழிலாளர்கள் ப்ரச்சனை. சம்பள ஏற்றம். தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமான முட்டல் மோதல் என்று நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிஜத்திலேயே இவர்களின் அமைப்பு செய்யும் அராஜகங்கள் மிக அநியாயம். ஒரு படத்தின் பட்ஜெட்டில் தயாரிப்பாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆட்களை உபயோகித்தால் சுமார் 20-30 சதவிகிதம் செலவு குறையும். ஆனால் அதை செய்யவும் விட மாட்டார்கள். அதையெல்லாம் மீறி இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் இப்படி எல்லோரும் முண்டா தட்டி நிற்கக் காரணம். உதாரணமாய் இரண்டு நிகழ்வுகளை இங்கே பகிர்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் என்னுடய குறும்பட படப்பிடிப்பு நடத்து கொண்டிருந்தது. உணவு இடைவேளைக்கு முன் திடீரென ரெண்டு பேர் வ்ந்து நீங்கள் ஏன் ஆர்ட் டிபார்ட்மெண்ட் ஆட்களை வைத்துக் கொள்ளவில்லை? அதனால் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என்று ப்ரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கோ அன்றைய தினமே கடைசி நாள். அவர்களுடன் வாதிட விருப்பமோ, நேரமோ இல்லை. இருந்தாலும் பொறுமையாய் சொன்னேன். இது கமர்ஷியல் படமல்ல. குறும்படம். அதனால் உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படியும் எங்களுக்கு தேவையான ப்ரொடக்ஷன் ஆட்கள், லைட்மேன்களை வேலைக்கு வைத்துள்ளோம். எனவே இம்மாதிரியான மிரட்டல்களை எல்லாம் எங்கள் மீது கட்டவிழ்த்து விடாதீர்கள். மீறினால் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க போய்விட்டேன். வந்த நிர்வாகி அதுவரை ரஃப்பாக மட்டும் பேசியவர். நீ எங்க சப்போர்ட் இல்லாம படமெடுத்திருவியா? அது இதுவென கிட்டத்தட்ட ஒரு ரவுடி போல பேசினார். நான் அதன் பிறகு அவரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகும் த்யாரிப்பாளரிடம் எட்டாயிரம் ரூபாய் அபராதம் கேட்டு ப்ரச்சனை செய்ய, வேறு வழியில்லாமல் நான் எனக்கு தெரிந்த கலை இயக்குனரிடம் பேசி அவரின் ஆட்கள் வேலை செய்வதாய் சொல்லி ப்ரச்சனையை முடித்தும், ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு போனார்கள்.
இதே போல இன்னொரு நிகழ்வு. படத்தின் டப்பிங்கில் ஒரு சின்ன கரெக்ஷன். மொத்தம் பத்தே பத்து நிமிஷ வேலை. டப்பிங் தியேட்டர்காரர்கள் கட்டணம் ஏதுமில்லாமல் வேலை செய்ய ஓகே சொல்ல, நடிகரும் பேச வந்துவிட்டார். பேசி விட்டு வெளியே வந்தால் வாசலில் நிற்கிறார் சங்க நிர்வாகிகளில் ஒருவர். என்னவென்று கேட்டால் எப்படி ப்ரொடக்ஷன் இல்லாமல் நீங்கள் டப்பிங் செய்யலாம்? என்று கேட்டு ப்ரச்சனையை ஆரம்பித்திருக்கிறார். தயாரிப்பாளரோ புதியவர் அவருக்கு போன் போட்டுக் கேட்ட போது “ சார் நடிகர், டப்பிங் தியேட்டர், அதன் இன் ஜினியர் என்று எல்லோரும் பணம் வாங்காமல் வந்திருக்கும் போது எதற்காக ப்ரொடக்ஷன் ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒரு நாள் முழுவதுமோ, அல்லது அரை நாள் இருந்தாலாவது பரவாயில்லை. இது அநியாயம் என்று புலம்பியிருக்கிறார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கேட்கவேயில்லை. பத்து நிமிஷத்துக்காக ப்ரொடக்ஷன் ஆட்களையெல்லாம் ஏற்பாடு செய்ய முடியாது என்று சொன்னவுடன் ஒரு போன் செய்ய அடுத்த ரெண்டாவது நிமிடத்தில் அப்படத்தின் ப்ரொடக்ஷன் ஆள் அங்கு வந்து நின்றிருக்கிறான். எல்லாம் கூட்டுக் களவாணித்தனமாய் தெரிந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த ப்ரொடக்ஷன் ஆள் மூலம் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி வரச் சொல்லி இருபது ரூபாய்க்கு பில்லைப் போட்டு, ப்ரொடக்ஷன் இரண்டு ஆட்களுக்கான சம்பளமாய் 900 ரூபாயை கிட்டத்தட்ட ரவுடியிசமாய் மிரட்டி வாங்கிப் போய்விட்டார். இந்த ரெண்டு விஷயங்கள் போதும் இவர்களின் அராஜகமான மோனோபாலியைப் பற்றி. இயக்குனர்களின் சம்பளத்தைப் பற்றியெல்லாம் அறிக்கை விடுகிறவர்கள் அவர்களுடய உதவியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை கொடுத்தால் சந்தோஷமடைவார்கள்.
Mar 19, 2012
கொத்து பரோட்டா 19/03/12
பெரிய படங்கள் ஏதுமில்லாமல் தியேட்டர்களில் ஈயடிக்கிறது. வெளியாகியிருக்கும் புதிய படங்களும் பெரியதாய் சோபிக்கவில்லை. பரிட்சை நேரம் வேறு அதனால் பெரிய படங்களின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னப் படங்களை பார்ப்பதற்கோ அல்லது அதைப் பற்றி யோசிப்பதற்கோ மக்களுக்கு நேரமில்லை. இல்லை அவர்களது கவனைத்தை இவர்கள் கலைக்கவில்லை. கர்ணன், குடியிருந்த கோயில், வெங்காயம், ஆரண்யகாண்டம் போன்ற படங்களை ரீரிலீஸ் செய்ய முடிவெடுத்து சில படங்கள் வெளியாகியும், இன்னும் சிலது வெளியாகவும் இருக்கிறது. தேவிபாரடைஸில் இந்த வாரம் படமே வெளியிடவில்லை. கேட்டால் டெக்னிக்கல் ப்ரச்சனை என்றார்கள். ஆனால் படம் போடவில்லை என்பதுதான் உண்மை என்று சொல்கிறார்கள். மீண்டும் அமீர் -அதாவது பெப்ஸி- தயாரிப்பாளர்கள் ப்ரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள். நொந்து போயிருக்கும் தமிழ் சினிமா எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது. கிடைக்கிற கேப்பில் அமீர் கொஞ்சம் கதையை ரெடி செய்து ஜெயம் ரவியை ரிலீஸ் செய்யலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mar 18, 2012
Mar 17, 2012
வெள்ளிக்கிழமை ஓப்பனிங்
ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் மக்கள் கூட்டம் மிகச் சிலப்படங்களுக்கே கிடைக்கும் அதுவும் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படத்திற்கு மட்டுமே. அப்படி ஓப்பனிங் கிடைக்கக்கூடிய நடிகர்களின் படங்கள்தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பந்தயம் கட்டி விளையாடக்கூடியவை.
Mar 16, 2012
கழுகு
Mar 14, 2012
இன்ஷூரன்ஸ்
Mar 13, 2012
Mar 12, 2012
கொத்து பரோட்டா - 12/03/12
சென்ற வாரம் பாண்டியில் கருணாஸ் நடிக்கும் சந்தமாமா படத்தில் பல வருஷங்களுக்கு பிறகு நடிக்கப் போனதால் கொத்து பரோட்டா எழுத முடியவில்லை. அதற்காக தொலைபேசியிலும், மெயிலிலும், டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் துக்கம் விசாரித்தும்,அப்பாடி வரவில்லை என்று சந்தோஷப்பட்டவர்களுக்கும் நன்றி. இதை சொன்னதுக்கு அரைப் பெடல் அடித்துக் கொண்டு யாராவது ஒருவர் ஒயர் பிஞ்சு போச்சு என பின்னூட்டமிடுவார் அவருக்கும் என் நன்றிகள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Mar 10, 2012
Subscribe to:
Posts (Atom)