Jun 2, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட்- மார்ச் 2012 - ஏப்ரல் 2012

மார்ச் மாதம் பெரும்பாலும் பரிட்சை மாதமாதலால் பெரும்பாலான படங்கள் வெளியாகாமல் இருந்த நேரத்தில் மிகச் சிலப் படங்களே வெளியாயின.  நிறைய சின்ன பட்ஜெட் படங்களும் அதில் அடங்கும். பெரும்பாலானவை வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது.

1 கொண்டான் கொடுத்தான்
வி.சேகரின் பாணிப்படம். முழுக்க,முழுக்க, குடும்ப உறவுகளை மையப்படுத்தி வந்த இன்னொரு சின்ன பட்ஜெட் டிவி சிரியல்.பெரிய அளவு ஓப்பனிங் இல்லை.  ஒரு வாரத்தில் பி,சி என்று எந்த செண்டரிலும் கவனிக்கப்படாத படமானது.

2.அரவான்
வெளியாவதற்கு முன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் தயாரிப்பில் உருவான படத்தை முதலில் யுடிவி வாங்கப் போவதாய் இருந்து கடைசியில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கி ஒரிரு நாளில் அதிக விலைக்கு தமிழ் சினிமாவின் புதிய அன்னதாதாவான வேந்தர் மூவீஸிடம் விற்று விட்டார்கள். வேந்தர் மூவீஸுன் முதல் வெளீயிடு தோல்வியாகிப் போனது. முதல் நாள் இருந்த அப்படியே குறைந்து, சடுதியில் காணாமல் போனது. 

3. கழுகு
பழைய ரஜின் பட டைட்டில். கற்றது களவு கிருஷ்ணாவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான படமாய் அமைந்தது இது தான். கொடைக்கானல் மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்து வரும் இளைஞனைச் சுற்றி நடக்கும் கதை. ஏ சர்டிபிகேட் கொடுத்ததால் வரி சலுகை கூட இல்லாமல் போனது. இருந்தாலும் சுமார் 2-3 கோடி வசூல் செய்ததாய் சொல்கிறார்கள். ஷூ ஸ்ட்ரிங் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது என்கிற அளவில் வெற்றியே..

4. விண்மீன்கள் 
பழம் பெரும் இயக்குனர் கே. சங்கரின் பேரன் இயக்கிய படம். செலிபரல் பால்சி என்கிற நோயுடன் பிறந்த குழந்தையையையும், அவனுடய பெற்றோர்களைச் சுற்றி நடக்கும் கதை. சுந்தமாய் கவனிப்பேயில்லாமல் கரைந்து விட்ட ஒரு படமாய் ஆகிவிட்டது.

ஆவரேஜ் - கழுகு

ஏப்ரல் மாதம் வழக்கம் போல் பெரிய படங்களும் சிறிய படங்களுமாய் நிறைய படங்கள் வெளிவந்தன.

மீராவுடன் கிருஷ்ணா
நடிகராய் வலம் வர ஆசைப்பட்டு பெரிய வாய்ப்பேதும் கிடைக்காததால், தானே தயாரித்து, இயக்கி நடித்த படம் மீராவுடன் கிருஷ்ணா. பத்திரிக்கைகளில் கொஞ்சம் ஸ்பெஷலாய் கவனித்தாலும் மககளால் கவனிக்கப்படாத படமானது.

அஸ்தமனம்
போர்க்களம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பண்டி சரோஜ்குமாரின் படம். அரை குறை திரில்லர். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படம். டெக்னிக்கலாகவும் பெரிதாய் ஏதும் சொல்ல முடியாத படம். ஒளிப்பதிவாளர் சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்த படம். ஆனால் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது தவிர சாதனையாய் ஏதும் செய்யாத படம். 

ஒரு கல் ஒரு கண்ணாடி
ஏழாம் அறிவு படத்துடன் வெளியிட்ட ஒரு நிமிட டீஸர் கொடுத்த இம்பாக்ட் இப்படத்தின் ஓப்பனிங்கில் தெரிந்தது. ரொம்ப மாசமாய் வசூல் என்கிற ஆக்ஸிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வந்த தமிழ் சினிமாவிற்கு உயிர் கொடுத்த படமானது. சுமார் நாற்பது கோடிகள் வரை க்ராஸ் செய்திருக்கும் படம். சந்தானம் - ராஜேஷ் காம்பினேஷன் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டை உதயநிதிக்கு வழங்கியிருக்கிறார்கள். “யு” சர்ட்டிபிக்கேட் வாங்கியும் வரி சலுக்கை மறுக்கப்பட்டிருக்கிறது இப்படத்திற்கு. அதற்காக கோர்ட்டை நாடியிருக்கிறது தயாரிப்பு. இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம் இது தான்.

பச்சை என்கிற காத்து
பத்திரிக்கைகள் மட்டுமே ஆஹா ஓஹே என்று பாராட்டிய படம். ஒரே வாரத்தில் காத்தாய் மறைந்து போனது.

மை
விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம். ராமநாராயணன் விநியோகத்தில் வெளியானது. பெரிதாய் விளம்பரம் இல்லாததால் இப்படமும் தோல்வியில் வீழ்ந்தது வருத்தத்துக்குரியதே. 

ஆதி நாராயணா
 காலத்தே வெளியாகாமல் போனதாலும், குழப்பமான திரைக்கதையாலும், தோல்வியைத் தழுவியப்படம்.

லீலை
இப்படமும், லேட் ரிலீஸ் தான் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, அவரது தம்பியின் தயாரிப்பில் வெளீயானது. நலல் குவாலிட்டி ஃபீல் குட் படம். லோ கீ விளம்பரத்தினாலும், சரியான நேரத்தில் வெளியாகததினாலும் கவனிக்கப்படாமல் போனது வருத்தமே

சூப்பர் ஹிட்: ஒரு கல் ஒரு கண்ணாடி


Jun 1, 2012

மனம் கொத்திப் பறவை

தீபாவளியின் தோல்விக்கு பிறகு எழில் தன்னை மீண்டும் நிருபிக்க களம் இறங்கியிருக்கும் படம் மனம் கொத்திப் பறவை. எழுத்தாளர் சாருநிவேதிதாவின் கட்டுரைத் தொடரின் பெயர் இது. சிவகார்த்திகேயனின் இமீடியட் இம்பாக்டுடன் களமிறங்கியிருக்கிறார்.

May 31, 2012

துரோகம்


DRRR___Blaming_you_by_lehananமிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் “எஃப்” டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சட்டென அடுத்த சேனலை மாற்ற… நைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு, ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள்.

” நடந்திட்டிருந்தவளூக்கு ஒரு இருவது வயசிருக்குமா? சும்மா சிக்குன்னு எப்படி நடந்தா இல்ல?”

சிவா அவளின் கேள்விக்கு முக்யத்துவம் கொடுக்காதவன் போல முகத்தை வைத்துக் கொண்டு “ ம்” என்றான்.

“அப்ப ஏன் சேனலை மாத்தினீங்க..?”

பெரியதாய் எதற்கோ ஆரம்பிக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. “ உனககு பிடிக்காது அதனால”

”அப்ப எனக்கு பிடிக்காததை எல்லாம் எனக்கு தெரியாம செய்வீங்க.. அப்படித்தானே?’

“எதுக்கு தேவையில்லாம டென்ஷனாகுறே..?”

“எதுதான் தேவை உங்களுக்கு?”

“சரி..ஓகே விடு நான் ஆர்க்யூ செய்யலை.. ஒரு வாரமாவே நீ டென்ஷன்ல தான் இருக்கே.. என்ன ஆச்சு..?”

“சும்மா நடிக்காதீங்க.. சான்ஸ் கிடைச்சா டிவிக்கு சீட் பண்ற மாதிரி நிஜத்திலேயேயும் எவ்வளவு செய்யறீங்களோ..?’

”ஏய்.. என்ன பேசுறே நீ? சரி.. நான் எஃப் டிவி பார்த்தேன். ஓகே ஒத்துக்கிட்டேன். ஐஸ்ட் ஒரு லூக்வார்ம் இன்ட்ரெஸ்ட். அவ்வளவுதான். இதுக்குப் போய் சீட்டிங், துரோகம்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே”

”அப்ப நீங்க இதுவரைக்கும் எனக்கு துரோகம் செய்யலைன்னு சொல்றீங்க..?”

“சே..சே .. என்னாச்சு இன்னைக்கு? உனக்கு போய் நான் துரோகம் செய்வேனா..?”

“கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. அன்னைக்கு உங்க ஆபீஸ் ரம்யாவை கார்ல கொண்டு போய் அவங்க அம்மா வீட்டிற்கு ட்ராப் பண்ணிட்டு வந்தீங்களா இல்லையா.?”

“அய்யோ ஆமாம் ட்ராப் பண்ணினேன். அதை பத்தி உன் கிட்ட போன்ல அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால்தான்னு சொல்லிட்டுதானே போனேன்.?”

“அது ஒரு ப்ளான்.. சொல்லிட்டா எது வேணா செய்யலாமா..? இல்லை எனக்குத்தான் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?”

“ஏய்.. விட்டா அறைஞ்சிருவேன்.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..”

“அஹா.. அது ஒண்ணுதானே குறைச்சல். அப்ப வேற யாரு?”

“ஹேய் யார் என்ன சொன்னாங்க..? உன் ப்ரெண்ட் அனிதாவா?”

“ஆங்… அனிதா.. அவளா..? படுபாவி… கூட இருந்தே குழிப்பறிக்கிறாளே..? சொல்லு அவளா. எனக்கு அப்பவே தெரியும்.. நீ அவ நம்ம வீட்டுக்கு வரும்போது வழிஞ்சு வழிஞ்சு பேசுறதும், அவ மாரையே பார்க்கறதும்,  அவளும் உன் கிட்ட நெருக்கமா பேசுறதும் அதும் என் முன்னாடியே..”

“தபாரூ.. பூஜா.. நிஜமாவே அறைஞ்சிருவேன்.. என்ன பேசிட்டே போறே. ஒரு ஆம்பளை நினைச்சான்னா வீட்டுல ஏதும் சொல்லாம எதை வேணும்னாலும் செய்ய முடியும். “

“அதான் செய்யுறீங்களோ..?”

“சரி என் கண்ணை பார்த்து சொல்லுங்க.. நீங்க எனக்கு துரோகம் செய்யலைன்னு?”

கண் சிவந்து அழ தயாராக இருந்த பூஜாவின் விழிகளை உற்று பார்க்க, சற்று தயங்கி, பின் நிறுத்தி நிதானமாய் உற்று பார்த்து “ இல்லை” என்றான் சிவா.

“பாருங்க..பாருங்க… டக்குனு இல்லைன்னு சொல்ல முடியுதா? முடியலைல்ல.. மனசு குறுகுறுக்குது.. அதான் பொய் சொல்றீங்க”

“ஏய் யார் என்ன சொன்னாங்க உன்கிட்ட..? “

“ஏன் யாராவது சொன்னாத்தான் எனக்கு தெரியுமா? நான் என்ன சின்ன பப்பாவா.?”

“அதை விட மோசம். எதையோ மனசில வச்சிட்டு பேசறே நீ?”

“எதையுமில்ல.. அன்னைக்கு உன் மொபைல்ல ஒரு பொண்ணு உங்களை கேட்டாளே.. அவ யாரு..?”

“பூஜா அன்னைக்கே சொன்னேன் அவ என் தூரத்து உறவு, கசின் சிஸ்டர்னு”

“அவவளவு நேரம் சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்க?’

“அவளும் நானும் சின்ன வயசில அவங்க ஃபேமிலி இங்க இருந்த போது ஒண்ணா விளையாடுவோம் அதை பத்தி பேசி.. சிரிச்சோம்.  ஏன் எல்லாத்தையும் சந்தேகமா பாக்குறே?

“அப்ப அன்னைக்கு ஒருத்தி ஏதோ பேங்குலேர்ந்து லோனுக்காக பேசினவகிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்களே.. “

”அவ என் கம்பெனியில ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒர்க் பண்ணவ.. குரல் கேட்டதும், ஞாபகம் வந்திச்சு.. அதான் சிரிச்சு பேசினேன் அது தப்பா..?

“எல்லாத்துக்கு ஒரு பதில் வச்சிருப்பீங்க..? “ என்று குப்புறபடுத்து குலுங்க, ஆரம்பித்தாள்.

சிவாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏன் இப்படி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறாள் “பூஜா.. ஏய்.. எழுந்திரு.. என்ன பண்றே?’

“ம்.. அழறேன். என்னை நினைச்சு அழறேன். என் வாழ்க்கைய நினைச்சு அழறேன். என்னடா இது அழறாளே..? தூக்கி வச்சி சமாதானம் பண்ணுவோம்னு ஒருத்தனுக்கு தோணுதா? மனசில கொஞ்சமாவது லவ், பாசம் இருந்தாத்தானே?”

“நான் தூக்கினா நடிக்கிறேன், பாசாங்கு செய்யறேன்னு சொல்லிடுவியோன்னு பயமா இருக்கு”

ஒரு கணம் ஆழமாய் சிவாவை உற்றுப் பார்த்தாள். “சிவா.. என்னை பார்த்து சொல்லு.. உன் மேல சத்தியமா சொல்லு.. நீ எனக்கு இதுவரை ஒரு வாட்டிக்கூட துரோகம் பண்ணதில்லை..?”

”நிச்சயமா இல்லைம்மா.. இதை எப்படி ப்ரூப் பண்ணனும்னு சொல்லு செய்யறேன். கல்யாணத்துக்கு முன்னாடி அங்க இங்க கேர்ள்ப்ரெண்ட்ஸோட சுத்தினது உண்டுதான். அதையும் உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ என் செல்லம்டா.. ராணி.. உனக்குப் போய் துரோகம் செய்வேனா..? உனக்கென்ன குறை..? உனக்காக நான் என்ன செய்யணும் சொல்லு செய்யறேன். பட் ப்ளீஸ் என்னை சந்தேகப்படாதே”

“அப்ப நீ எனக்கு துரோகம் செஞ்சதேயில்லையா..?”

“நிச்சயமா இதுவரைக்கும் மட்டுமில்ல இனிமேலும்” என்ற சிவாவை பார்த்து கலங்கிய கண்களுடன் ஏறிட்டு மெதுவாய் பார்த்து..

“நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்ங்க..” என்றாள் பூஜா..

கேபிள் சங்கர்


டிஸ்கி: மீண்டும் ஒரு காதல் கதை தொகுப்பிலிருந்து. புத்தகத்தை வாங்க இங்கே அழுத்தவும்

May 29, 2012

மதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.

இந்த வார்த்தையை ஆட்சியில் இருக்கும் கட்சி, எதிர்கட்சி இவர்களைத் தவிர எல்லோரும் அவ்வப்போது எடுக்கும் ஆயுதம். பெரும்பாலும் அதை ஆயுதமாய் உபயோகிக்காமல் அந்த வாரத்தை கழிப்பதற்காகவும், பத்திரிக்கைகளில் தங்கள் பெயர் அடிபடவும் தான் இதை உபயோகிப்பார்கள். முக்கியமாய் டாக்டர் அய்யா இந்தப் பதத்தை அடிக்கடி உபயோகிப்பார். ஆனால் இவரது மாநாடு நடக்கும் ஏரியாக்களில் அன்றைய தினம் அருகில் இருக்கும் டாஸ்மாக்குகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு குடித்து கும்மாளமிட்டு விட்டுச் செல்பவர்களும் இவர்கள்தான். டாக்டரும் அவ்வப்போது கடைக்கு பூட்டு போடப் போகிறேன், போராட்டம் நடத்தப் போகிறேன் என்று வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை விட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறாரே தவிர தீயாய் வேலை செய்வார் என்று பார்த்தால் அப்படி ஏதும் நடக்க மாட்டேன் என்கிறது. 

சுமார் பதினாராயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாய் கொடுக்கும் தொழிலை எந்த ஒரு அரசாங்கமும் இழக்க விரும்பாது, அரசுக்கு நிலையான வருமானம் என்பது இத்தொழிலினால் மட்டுமே வரும் பட்சத்தில், இப்பணம் அவர்களின் இலவச, விலையில்லா அயிட்டங்களுக்கு உபயோகப்படுவதுமாய் இருக்கும் காலத்தில் எந்த அரசு மதுவிலக்கை நம்பும், செயல்படுத்தும். இன்றைய காலகட்டத்தில் மதுவிலக்கு ஒத்துவருமா என்று குடும்பத்தில் உள்ள பெரியவர்களே கேட்கும் அளவிற்கு குடிக்கும் கலாச்சாரம் ஊடுருவியிருக்கும் காலத்தில் முடியும் என்று நம்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்.  

மதுவிலக்குக்காக வருகிற 2ஆம் தேதி அன்று இம்பீரியல் ஓட்டலில் மாநாடு நடத்தவிருக்கிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். வைகோ, தா.பாண்டியன் போன்ற தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  வெறும் மதுவிலக்குப் பற்றிய கருத்துக்களோடு இல்லாமல், மதுவிலக்கு அமல் படுத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டமான பதினாராயிரம் கோடி வருமானத்தை இழக்காமல் எப்படி அமல் செய்வது என்ற அறிக்கையோடு களம் இறங்குகிறார். இதுதான் இந்த மாநாட்டின் சுவாரஸ்யம்.

சினிமா கதை விவாதத்தின் போது நிறைய உதவி இயக்குனர்கள் கதையின் போக்கு சரியில்லை என்றால் உடனடியாய் அதை சரியில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்பவர்கள் தான் அதிகம். அப்படி செய்யும் போது அதற்கான மாற்றை சொல்லாத அந்த உதவி இயக்குனரை இயக்குனருக்கு பிடிக்காமல் போய்விடும். அதே நேரத்தில் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு மாற்றாகவோ, அல்லது ஈடாகவோ ஒரு விஷயத்தை சொல்பவர்களின் கருத்தை இயக்குனர் எடுத்து அதை செம்மைப்படுத்துவார். அது போல அரசுக்கு அதனுடய வருமானம் இழப்பு இல்லாமல் மதுவிலக்கை அமல் படுத்தும் திட்டத்தோடு நடக்கவிருக்கும் இந்த மதுவிலக்கு மாநாடு நிச்சயம் எல்லார் கவனத்தையும் கவரும் என்று நினைக்கிறேன். மதுவிலக்குக்கு நான் ஆதரவா? நீ ஒழுங்கானவனா? என்ற கேள்வியையெல்லாம் தாண்டி ஒரு நல்ல முயற்சிக்கு நம்மால் முடிந்த ஆதரவை கொடுப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்ற எண்ணத்தில் இம்மாநாட்டிற்கான ஆதரவை முன் வைக்கிறேன்.

மதுவிலக்கு மாநாடு
இடம் : ஹோட்டல் இம்ப்ரீயல்
நேரம் : காலை 8 மணி
தேதி : 02/06/12

கேபிள் சங்கர்


Man On A Ledge

நியூயார்க் நகரத்தின் முக்கியமான ரூஸ்வெல்ட் ஓட்டலின் உயர்ந்த மாடிகளைப் நிமிர்ந்து பார்த்தபடி ஒர் இளைஞன் அதற்குள் நுழைக்கிறான். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாகவும், ஹெப்பாகவும் இருப்பவன்.தனக்கென ஒர் அறையை எடுத்துக் கொண்டு மிக சாவதானமாய் அந்த அறையின் கதவுகளை திறந்து எட்டிப்பார்க்கிறான். அறைக்குள் அவன் தொட்ட எல்லாவற்றையும் கைரேகைகளை அழித்துவிட்டு, ஒரு சின்ன பேப்பரில் “நான் ஒரு அப்பாவி. குற்றமற்றவன்” என்று எழுதிவிட்டு, ஜன்னல் கதவை திறந்து கொண்டு முப்பதாவது மாடியின் விளிம்பிலிருந்து கீழே குதிக்க தயாராகிறான். இது தான் படத்தின் முதல் காட்சி. அரைத்தூக்கத்தில் படத்தைப் பார்க்க ஆரம்பித்த நிமிடங்களில் தூக்கம் கலைக்க வைத்த ஓப்பனிங் சீன்.

May 28, 2012

கொத்து பரோட்டா -28/05/12

பெட்ரோல்
கடந்த இரண்டு நாட்களாய் சென்னையெங்கும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. நேற்று பெட்ரோலும் தட்டுப்பாடு. இருக்கிற பல பங்குகளில் ரேஷன் முறையில் ஆளுக்கு இத்தனை லிட்டர் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை?
@@@@@@@@@@@@@@@@@@@

May 27, 2012

இஷ்டம்

ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை நாயகனாய் வலம் வந்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் ஒரு படம் அவருடயது வெளியாகும். பின்னர் அவ்விடத்தை கொஞ்சம் ரவிச்சந்திரன் நிரப்பினார் என்று நினைக்கிறேன். ஆனால் இன்றைய டெபிசிட் விழுந்திருக்கும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் அளவிற்கு படம் நடிக்கும் நடிகர்களே இல்லாத பட்சத்தில் அவ்விடத்தை நிரப்ப வந்துள்ளார் நம் விமல். கலகலப்பு வந்து ரெண்டு வாரத்திற்குள் அடுத்த படமான இஷ்டம் வெளிவந்திருக்கிறது.

May 26, 2012

Gabbar Singh

தொடர்ந்து எத்தனை தோல்விகளைக் கொடுத்தாலும் இன்றைக்கும் அட்டகாசமான ஓப்பனிங்கை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதில் இவருக்கு இணை வேறு யாருமில்லை. சமீபத்திய தெலுங்குப் பட ரெக்கார்டுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதாகவும், இந்தப்படம் வைக்கப் போகும் ரெக்கார்டை மகேஷ் பாபு முறியடிப்பாரா என்றெல்லாம் இப்போதே ஆந்திராவில் செம பெட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறதாம். எனக்கும் இவரின் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நொந்து போனாலும் இவரின் பவர்புல்லான ஸ்கீரின் ப்ரெசென்ஸில் மயங்கி அடுத்த படத்துக்கு தயாராகிவிடுவேன். அப்படி தயாராகிப் பார்க்கப் போன படம் தான் நம்ம தெலுங்கு தல பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கப்பர் சிங்.

May 25, 2012

Department

ராம் கோபால் வர்மா எதை எடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு, இதற்கு முன்னால் வந்த படங்களைப் பற்றியெல்லாம் யோசிககாமல் படம் பார்ப்பவகளில் நானும் ஒருவன். அப்படித்தான் இந்த படத்திற்கும் போனேன். இப்படத்தின் காண்டர்வஸிக்கெல்லாம் மீறி ராம் கோபால் வர்மா ஆங்காங்கே தன் இம்ப்ரஷனை கொடுக்கத்தான் செய்திருக்கிறார்.

May 24, 2012

விரைவில்....

புதிய நாமகரணத்தோடு