Thottal Thodarum

Dec 31, 2012

கொத்து பரோட்டா - 31/12/12

இந்த வருடத்தின் கடைசி கொ.பரோட்டா. டெல்லி பெண்ணின் மரணம் காரணமாய் மனம் முழுவதும் சோகம் அப்பியபடியே எழுத வேண்டியிருக்கிறது. அப்பெண்ணின் மரணத்தினால் எழுந்த சோகத்தை விட, தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியாவெங்கும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி தெரியவரும் போது மேலும் மனம் துன்பப்படுகிறது. இவ்வளவு எதிர்ப்பும், ஆதரவும் டெல்லி பெண்ணுக்காக மட்டுமில்லாமல் இம்மாதிரியான பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென மனம் விரும்புகிறது. எல்லா சமூக வலைத்தளங்களிலும், என்ன ரெண்டு நாள் அழுதுவிட்டு, ஸ்டேடஸ் போட்டு விட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போய்விடுவீர்கள் என்று புலம்புகிறார்கள். சுனாமியில் குடும்பத்தையே பறிகொடுத்து அநாதையாய் இருப்பவர்கள் கூட சோகங்களைக் கடந்து அவர்தம் வாழ்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். குடும்பத்தை இழந்ததால், சாப்பிடாமலோ, சிரிக்காமலோ, காதலிக்காமலோ, கல்யாணம் செய்யாமலோ இல்லை. வாழ்க்கை அதன் பாட்டிற்கு ஓடும். ஓடித்தான் ஆகவேண்டும். எனவே இது பற்றி தினம் புலம்ப வேண்டும், ஸ்டேடஸ் போட வேண்டும் என்று நினைக்காமல் இனி வரும் காலங்களில் பெண்களையும் வெறும் சதை கோளங்களாய் பார்க்காமல், அவர்களுக்கும் மனதுண்டு, ஆசாபாசங்கள் உண்டு, வலி உண்டு என்பதை புரிந்து அவர்களை  சக மனுஷியாய் மதிக்கும் பண்பை வளர்க்க பாடுபடுவோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 28, 2012

CZ12


ஜாக்கி சான் உலகளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ஒரு நடிகர். இவரது படத்தை விரும்பாதவர்கள் கூட இவரது நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் நடிப்புக்காக விரும்புவார்கள். படிக்கும் காலத்தில் அலங்காரில் ஜாக்கிசான் படம் வெளியான நாளே பார்த்த இம்பாக்ட்டில் அவரைப் போலவே ஓடுவதாய் நினைத்து பஸ்ஸில் புட்போர்ட் அடித்த காலெமெல்லாம் உண்டு. அப்படி ஒவ்வொருவருக்கும் என்னதான் புதிய ஹீரோக்கள் வந்தாலும் இன்றைக்கும் இவருக்கு ரசிகர்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்களே தவிர குறையவில்லை. அப்படிப்பட்ட ஜாக்கிசான் இனியும் அடிப்பட உடலில் இடமில்லை என்றும் வயது வேறு ஆகிவிட்டதால் இத்துடன் இனி ஆக்‌ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்த பிறகு வெளிவரும்  படம் சைனீஸ் சோடியாக் 12.

Dec 27, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் -2012

தமிழ் சினிமா இந்த வருடம் கொஞ்சம் ஆச்சர்யகரமான வருடமாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால் நிச்சயம் பெரிய வசூல் வரும் என்று நம்பி எடுத்த பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொள்ள, கதையும், அதை சொன்ன விதமும் பிடித்துப் போனதால் சிறு முதலீட்டு படங்கள் ஹிட்டாக, மேலும் பல புதிய, சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் உருவாக்கிய வருடமிது. அது மட்டுமில்லாமல் சிறிய படங்களை வாங்க ஆளில்லை என்ற நிலை மாறி நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு புதிய விநியோகஸ்தர்கள் வேறு உருவாகியிருப்பது ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்லும் பாதையை காட்டியிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயமே. சுமார் 168க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது இந்த வருடம். சென்ற வருடத்தை விட இது அதிகம்.

Dec 26, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள் /மால்கள் -4

சரி மால்களில் மட்டும்தான் இம்மாதிரி கொள்ளைகள் என்று நினைத்தால் அது  தவறு. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் உள்ள் ப்ரச்சனைகள் அதை விட அதிகம். அதில் முக்கியமானது டிக்கெட்டின் விலை. மல்ட்டிப்ளெக்ஸிலாவது பரவாயில்லை. அதிகபட்ச கட்டணமாய் 120 என்று அரசு நிர்ணையித்த விலையில் டிக்கெட் தருகிறார்கள். ஆனால் இந்த சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. சென்னையில் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களின் அதிகபட்ச அரசு நிர்ணைய விலை 50. குறைந்த பட்ச டிக்கெட் 10. ஆனால் சென்னையை சுற்றியுள்ள, ஜோதி, எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம், காசி, தாம்பரம் வித்யா என்று லிஸ்ட் எடுத்தால் எல்லா தியேட்டர்களிலும் குறைந்த பட்ச டிக்கெட் விலையே 90-120 என்று விற்கிறார்கள். இன்னும் சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படமாய் அமைந்துவிட்டால் 200,300 என்று தான் முதல் மூன்று நாட்களுக்கு. இவர்களிடம் ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலை எம்.ஜி கொடுத்திருக்கிறோம் அதை வசூல் செய்ய வேறு வழி கிடையாது என்பார்கள்.

Dec 25, 2012

Sarocharu

 சில படங்களை மாஸ் ஹீரோக்கள் நடித்தால் நன்றாக ரீச் ஆயிருக்குமே என்ற எண்ணம் தோன்றும் சில படங்களை மாஸ் ஹீரோக்கள் நடித்ததால் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கும் சரோசாரு படம் ரெண்டாவது வகை

Dec 24, 2012

கொத்து பரோட்டா -24/12/12

தலைநகர் டெல்லி கற்பழிப்பு  நகரமாகிக் கொண்டிருக்கிறது. மருத்துவ கல்லூரி மாணவி துர்நிகழ்வுக்கு பிறகும் இரண்டு கற்பழிப்புகள் நடந்தேறியிருக்கிறது. ஏற்கனவே இம்மாதிரியான கற்பழிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராய் போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். டெல்லி என்றில்லாமல் இந்தியாவெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் ஏழாம் வகுப்பு மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்திருக்கிறான் ஒரு 35 வயது வெறிபிடித்தவன். கடும் தண்டனை மட்டுமே இம்மாதிரியான கொடுமைகளை தடுக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 22, 2012

சட்டம் ஒரு இருட்டறை

முப்பது வருஷத்துக்கு முன்னாடி எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்து வெளியான ஹிட் படம். விஜய்காந்துக்கு ஒரு மார்கெட்டை உருவாக்கிய படம்  இப்படி பல பெருமைகளை கொண்ட சட்டம் ஒரு இருட்டறை மீண்டும் அதே ஹிட்டை தந்திருக்கிறதா?

Dec 21, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/மால்கள்-3

ஐநாக்ஸ் +கள்
சென்னையின் முக்கியமான மால்களில் ஒன்று ஐநாக்ஸ். மொத்தம் நான்கு ஸ்கிரீன்கள். டிஜிட்டல் ஒலி மற்றும் ஒளிபரப்பு என டெக்னிக்கலாய் எல்லா தரமும் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்தான். சமீபத்திய 48HFR டெக்னாலஜி உட்பட எல்லா தரத்தையும் அப்கிரேட் செய்திருக்கிறார்கள். 3டி கண்ணாடிகளுக்கு அட்வான்ஸாய் 50 ரூபாய் வாங்கிக் கொண்டு, படம் பார்த்துவிட்டு கண்ணாடியை திரும்பக் கொடுத்தால் பணத்தை திரும்பக் கொடுக்கிறார்கள். 

Dec 20, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/ மால்கள்-2

முந்தைய பதிவில் தேவி திரையரங்க வளாகம் செய்த தில்லாலங்கடியைப் பற்றி சொன்னேன் அல்லவா? இதோ இன்னொரு திரையரங்கம். சென்னையின் முதல் மால் என்ற பெருமையை சொல்லும் அரங்கம் இது. அபிராமி மால். இதன் கட்டமைப்பை பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியாது ஏனென்றால் ஏற்கனவே இருந்த தியேட்டருக்கு முன் இன்னொரு பில்டிங் கட்டி, பழைய தியேட்டர் கட்டிடத்தோடு இணைத்து ஒரு மாதிரி குழப்படியாய் ஒரு கட்டிடம் கட்டியிருப்பார்கள். 

Dec 19, 2012

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/மால்கள்-1

தேவி திரையரங்கு வளாகம் புதுப்பிக்கப்பட்ட பிறகு டிக்கெட் விலையை 10,85,95 என்று மூன்று நிலைகளில் விற்று வந்தார்கள். மூன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் வளாகத்தில் இம்மாதிரியான டிக்கெட் முறைதான் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில் இவர்கள் 85 ரூபாய் டிக்கெட்டை எடுத்துவிட்டு, நேரடியாய் 10, மற்றும் 95 என்று ஆக்கினார்கள்.  மக்களும் முணுமுணுத்துக் கொண்டே டிக்கெட் வாங்கினார்கள். ஒரு காலத்தில் சென்னையில் அருமையான கலெக்‌ஷன் செண்டர் என்று சொன்னால் அது தேவி வளாகம் தான். ஏனென்றால் அங்கே தான் டிக்கெட் விலை 45 ரூபாய்க்கு மிகாமல் நல்ல ஏர்கண்டீஷனோடு, சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அரங்கமாய் இருந்தது. 

Dec 18, 2012

சாப்பாட்டுக்கடை - மங்களாம்பிகா காபி பார்

கும்பகோணம் என்றதும் எல்லோருக்கும் டிகிரி காப்பி ஞாபகம் வரும். அதே போல அங்குள்ள குட்டி குட்டி மெஸ்கள் ஞாபகம் வராமல் போனால் ஆச்சர்யம்தான். என் ஞாபகத்தில் அங்கே மாமி மெஸ் என்றொரு மெஸ் இருந்தது. சென்ற முறை சாப்பிடப் போன போது சீக்கிரம் மூடிவிட்டார்கள். இம்முறை போனதும் அம்மெஸ்ஸை காணோம். என்ன ஆயிற்று என்று விசாரித்தால் மூடிவிட்டார்களாம்.  அதை கேள்விப் பட்டு அடடா என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் அது போனா என்ன? இங்க  இன்னொரு மெஸ் மாதிரியான பழைய உணவகம் இருக்கு வாங்க.. என்று அழைத்துப் போனார். அது தான் இந்த மங்களாம்பிகா காபி பார். மசாலா க்ஃபே போல ஒரு உணவகம்.

Dec 17, 2012

கொத்து பரோட்டா -16/12/12

கேட்டால் கிடைக்கும்
இன்றைய தினத்தந்தி வெறும் பதினெட்டு பக்கத்தோடு வர, பக்கத்தை சரி பார்க்க மேலே பார்த்தால் இன்றைய விலை 900 காசுகள் என்று போட்டிருந்தது. வெறும் சினிமா விளம்பரம் பாக்க, தெனம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஒன்பது ரூபாயா ஏன் என்று பார்த்த போது கேலண்டருடன் என்று போட்டிருக்க, செம கடுப்பாகி விட்டது. யார் கேட்டார்கள் இந்த கேலண்டரை. வாடிக்கையாளர் கேட்காமலேயே அவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் திருட்டுத்தனமாய் விலையேற்றி விற்பது குற்றமல்லவா?. இதே முறையைத்தான் தினமலரும் செய்கிறது. ஊருக்குத்தான் உபதேசமெல்லாம் போல. தினசரிகளை தினமும் கடைகளில் போய் வாங்குகிறவர்களுக்கு விலை பார்த்து வாங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மாத கணக்கில் பேப்பர் போடுகிறவர்களை வைத்து பேப்பர் வாங்குபவர்களுக்கு அடுத்த மாத பில் வரும் போதுதான் தெரியும். இவர்களின் இந்த தில்லு முல்லு வேலை. அதற்குள் அந்த கேலண்டர் குப்பைக்கோ, அல்லது எங்கோ மாட்டப்பட்டுவிட, வேறு வழியில்லாமல் ஐந்து ரூபாய்தானே என்று கொடுத்துவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள். ஒரு லட்சம் பேப்பருக்கு காலண்டருடன் விற்றிருந்தால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாங்குபவர்களின் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ விற்றாகிவிட்டது. நாளை இதே டெக்னிக்கை வைத்து ஒரு ஷாம்பூ பாக்கெட் கொடுத்துவிட்டு, கூட ரெண்டு ரூபாய் போட்டு விட்டால் யாருக்கு தெரியப் போகிறது. இதை கேட்டே ஆக வேண்டும்  என்று முடிவெடுத்து எனக்கு பேப்பர் போடுகிறவரிடம் “இன்னைக்கு போட்டிருக்கிற கேலண்டரை நான் கட்டாயம் வாங்கித்தான் ஆகணுமா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் தயக்கத்துடன் “ ஆமா சார்.. விலையில போட்டிருக்கு இல்லை.. “ என்று இழுக்க, “அப்ப இன்னைக்கு எனக்கு தந்தி வேணாம்” என்றேன். சற்று யோசித்தவர்..”சரி சார்.. வேணாம்னா.. நான் கேலண்டரை திரும்ப வாங்கிட்டு பேப்பர் விலை மட்டும் போட்டுக்கிறேன்” என்றார். தயவு செய்து இம்மாதிரியான விஷயங்களை ஐந்து ரூபாய் தானே என்று யோசித்து விட்டு விடாமல் உடனே உங்கள் பேப்பர் போடுகிறவரை கூப்பிட்டு கேளுங்க. அல்லது தினத்தந்திக்கு போன் செய்யுங்கள். இது அநியாயக் கொள்ளை. உங்கள் பேப்பர் போடுகிறவருடன் விலை குறைக்க முடியாது என்றால் இன்றைய பேப்பர் தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள். ஒரே நாளில் இம்மாதிரி பல ஆயிரம் பேப்பர்கள் திரும்ப வரும் போது பேப்பர்காரனுக்கு புரியும். இல்லாவிட்டால் தினத்தந்தி அலுவலகத்திற்கே போன் செய்து உங்கள் கண்டனத்தை தெரிவிக்கவும் http://www.asklaila.com/listing/Chennai/Vepery/Daily+Thanthi/1uQwHcze/. சென்ற வாரம் நண்பர் ஒருவர் இதே போல தினமலர் பேப்பரிடம் பேசியிருக்கிறார். மூன்று பேப்பர்கள் வாங்கினால் மூன்று கேலண்டரையா வைத்துக் கொள்ள முடியும்? கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 15, 2012

நீ தானே என் பொன்வசந்தம்.

 விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. பாடல்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இன்றும் இசை ரசிகர்களிடையே இப்பட பாடல்களைப் பற்றி சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Dec 14, 2012

கும்கி

புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் புதியதாய் ஒர் களம் பிடிக்கலாம். அதற்கு இன்ஸ்பிரஷனாய் பல விஷயங்கள் இருந்தாலும் அதை நமக்கு ஏற்றார்ப் போல சரியான திரைக்கதையாக்கும் வித்தை தெரிந்தால் போதும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த வகையில் கும்கி தமிழ் சினிமாவிற்கு புதிய களன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இன்ஸ்பிரேசன் எதுவாக இருக்கும் என்று கேட்டீர்கள் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்.

முடியலை... அவ்வ்வ்வ்

”ஹலோ சாமி”

“சொல்லுங்கம்மா உங்க பேர் என்ன?”

“சுப்புலச்சுமிங்க. எங்க வீட்டுக்காரர் வெளி ஊர்ல வேலை செய்யுறாரு.. புது வேலைக்கு ட்ரை பண்ண கிடைக்க மாட்டேங்குது.”

“அவர் பேரு என்னம்மா?”

“ரவிங்க”

Dec 13, 2012

விஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் 1. இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க 2.மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. 

Dec 12, 2012

அடுக்குகளிலிருந்து - செத்துப் பிழைச்சவண்டா

சீரியல்களில் சாவுக் காட்சிகளில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகனுக்கும் மிக மோசமான ஒரு அனுபவம் ஆகும். செத்துப் போவது போல நடிப்பதால் அல்ல. அதன் பிறகு அந்த சீரியலில் போட்டோவாக மட்டுமே நாம் பயன்படப் போகிறோம் என்பதை நினைக்கும் போதும், தினமும் விழும் சம்பள மீட்டர் வராது என்பதாலும் தான். ஆனால் சில சமயங்களில் டி.ஆர்.பி விழும் நேரத்தில் செத்துப் போனவர்களையெல்லாம் உயிர்ப்பித்து ப்ளாஷ்பேக்கில் எல்லாம் கதை போகக்கூடும், சீரியல் தயாரிப்பாளரும், திரைக்கதையாசிரியர் தயவினால். நான் இங்கே சொல்லப் போவது அவர்களைப் பற்றியல்ல. ஒரு சாவுக் காட்சியில் நடித்ததைப் பற்றி.

Dec 11, 2012

பார்க்கிங் லாட்டுகள் ஆகும் சென்னை தெருக்கள்

சென்னையில் இரு சக்கர வண்டிகளின் பெருக்கம் ஆரம்பித்த காலத்தில் திருவல்லிக்கேணி போன்ற மேன்ஷன் ஏரியாக்களில் இரவு நேரங்களில் பெரிய வண்டிகளோ, கார்களோ செல்ல முடியாது. ஏனென்றால் அங்கே தங்கியிருக்கும் பேச்சுலர்களின் இரு சக்கர வண்டிகள் தெருவெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியான ப்ரச்சனைகள் ஏதோ அங்கொன்று  இங்கொன்றுமாய்த்தான் இருந்தது. பின்பு சென்னையில் குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இருக்கும் இடமெல்லாம் ரூமாய் கட்டி வாடகைக்கு விட்டதால் அம்மாதிரி வீடுகளில் குடியிருப்பவர்கள் எல்லோரும் இரவு நேரங்களில் தங்கள் வாகனங்களை தெருவில்தான் வைக்க வேண்டியிருக்க, இன்னும் இரவு நேர தெரு ஆக்கிரமிப்பு அதிகரித்தது.

Dec 10, 2012

கொத்து பரோட்டா - 10/12/12

நேற்று முன் தினம் காந்தி மக்கள் இயக்கம் நடத்திய பாரதி விழாவுக்கு அதன் அமைப்பாளர்கள் அழைத்திருந்தார்கள். கவியரங்கமும், பட்டிமன்றமும் நடந்தேறியது. சனி மாலையில் பாரதி விழாவிற்காக அரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கடைசியாய் தமிழருவி மணியன் பேசினார். இவரது பேச்சை முதல் முறையாய் கேட்கிறேன். நிஜமாகவே தடதடவென அருவி போல நடு மண்டையில் தடேலென்று விழுந்து பொறிகலங்க வைக்கும் பேச்சு. பேச்சின் நடுவே கூட்டத்தில் யாரோ சலசலவென பேச, அதே வேகத்தில் ”பேசறவங்க வெளிய போயிருங்க” என்று சொல்லிவிட்டு தடையில்லாமல் மீண்டும் பேச ஆரம்பித்தார். வந்தேமாதரம் என்போம் என்கிற பாடலுக்கு அவர் கொடுத்த விளக்கமும், அவரது பாடி லேங்குவேஜும் அட்டகாசம்.  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பேச்சு.
@@@@@@@@@@@@@@@@@

Dec 9, 2012

விஸ்வரூபம் தமிழ் சினிமாவை அழித்துவிடுமா?

விஸ்வரூபம் படத்தை வெள்ளித்திரை வெளியீட்டிற்கு முன் டிடிஎச்சில் வெளியிடப்போவதாய் சொன்ன நேரத்திலிருந்து தமிழ் சினிமா உலகமே அல்லோல கல்லோலப் படுகிறது. இனி சினிமா அவ்வளவுதான். தியேட்டர்கள் முடங்கி விடும். தொழில் படுத்துவிடும் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் சின்ன படங்களுக்கு இனி வாழ்க்கையே இல்லை என்கிறார்கள். தியேட்டர் அதிபர்களோ இனி நாங்கள் தியேட்டர்களை மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான் என்று புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் வெளிப்படையான அறிக்கை விடாவிட்டாலும் இதனால் வரும் லாபக் கணக்கை பல தயாரிப்பாளர்கள் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

Dec 7, 2012

எஸ்.ராவின் பேருரையும் - புத்தக விற்பனையும்

கடந்த மூன்று நாட்களாய் எஸ்.ராவின் பேருரை நிகழ்ச்சிக்கு போய் வருகிறேன். நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் தான் போக முடிகிறது. வேலைகள். இருந்தாலும் அங்கே ஆஜராவதில் ஒரு சின்ன சந்தோஷம் பல பழைய நண்பர்கள், வாசகர்கள், என்று பல பேரை சந்திப்பதால். பேருரை முதல் ரெண்டு நாளை விட எனக்கு நேற்று சத்யஜித்ரேவை பற்றியது பேசியது சுவாரஸ்யமாய் இருந்தது. ஒரு வேளை நம்மூர்காரராக இருப்பதால் இருக்குமோ? உட்கார இடமின்றி மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் கூறும் பல படங்களை நான் ஏற்கனவே பார்த்ததிருந்ததினால் கேட்ட விஷயத்தையே கேட்பது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் புதியதாய் கேள்விப்படுகிறவர்களுக்கு அப்படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை உண்டு பண்ணுகிறார்.  மனுஷர்  நின்ன வாக்கில் ரெஸ்டே இல்லாமல் ரெண்டு மணி நேரத்துக்கு மேல் பேசுகிறார். எதிர்காலத்தில் எஸ்.ரா ரெகமெண்ட் பண்ணிய படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, தமிழ் கூறும் நல்லுலகத்தில் வெளிவரும் நற்படங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவோமாக.

Dec 6, 2012

Krishnam Vande Jagadgurum

 பாபு பிடெக் படித்துவிட்டு தாத்தாவின் நாடக ட்ருப்பில் நடித்து வருபவன். அவனது தாத்தா அந்தக்கால பிரபல நாடக கலைஞர். தன் பேரனை வைத்து தன்னுடய கடைசி நாடகமான “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்கிற நாடகத்தை நடத்த மிகவும் ஆசைப் படுகிறார். ஆனால் பாபுவுக்கோ யு.எஸ் போகத்தான் விருப்பம். நாடகத்தில் ஈடுபட்டு வறுமையில் வாட விருப்பமில்லை என்று சொல்லிவிட, அதை தாங்காத தாத்தா இறந்துவிடுகிறார். தன்னுடய அஸ்தியை துங்கபத்ரா கரையில்தான் கரைக்க வேண்டும் என்ற அவருடய கடைசி ஆசையினால் அவருடய அஸ்தியை கரைப்பது மட்டுமில்லாமல், அவருடய நாடகத்தை அங்கேயே அரங்கேற்றுவது என்று முடிவு செய்து கிளம்புகிறான் பாபு. பெல்லாரியில் சுரங்க தொழிலில் மிகப் பெரிய மாபியாவாக வலம் வரும் ரெட்டப்பாவின் கோட்டையில் உள்ளவர்களுடன் சிறு உரசல் ஏற்படுகிறது. ரெட்டப்பாவின் சுரங்க மாபியாவை துகிலுரித்துக் காட்ட தில்லாக வரும் டிவி சேனல் ரிப்போர்ட்டராக தேவிகா வர, பாபுவுக்கும் தேவிகாவுக்கும் வழக்கம் போல காதல். ரெட்டப்பாவிற்கும் கர்நாடக சக்ரவர்த்தி என்பவனுக்கும் உள்ளூரிலேயே பிரச்சனை. இதன் நடுவில் பாபுவின் ஒரிஜினல் பிறப்புப் பற்றி அவனுக்கு தெரிய வர, அதில் சக்ரவர்த்தியினால் தன் குடும்பம் பிரிந்தது என்று தெரிய வருகிறது. ஒரு பக்கம் சகரவர்த்தியை பழிவாங்க, இன்னொரு பக்கம் ரெட்டப்பாவின் கோபத்தை எதிர்கொள்வதுமாய் போராடி எப்படி வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

Dec 4, 2012

Talaash

அமீர்கானின் படம் பார்த்து நாளாகிவிட்டது. கடைசியாய் டோபிகாட் பார்த்த ஞாபகம். போலீஸ் கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு இருந்த போஸ்டரைப் பார்த்ததும் ஒரு அதிரடியான ஆக்‌ஷனை எதிர்பார்த்து படம் பார்க்க போனீர்களானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.

Dec 3, 2012

கொத்து பரோட்டா - 03/12/12

சென்னை மாநகராட்சிக்கு 1900 கோடியை தமிழக முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் ஒரே ஆண்டில் ஒதுக்கியிருப்பதாகவும், இதே சென்ற ஆட்சியில் 1500 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கியதாய் மேயர் அவர்கள் பெருமையாய் அறிக்கை விட்டிருக்கிறார். சென்னையில் உள்ள பல தெருக்களில் குப்பை மலையாய் தேங்கிக் கிடக்கிறது. மழைக்கு முன் போட்ட சாலைகள் அனைத்தும் ஒரே மழையில் மீண்டும் பள்ளதாக்குகளாய் மாறி போய் விட்டது. ஐந்து வருஷத்துக்கு 1500 கோடி செலவு செய்த சென்ற அரசில் இவ்வளவு மோசமில்லை. ஆனால் ஒரே ஆண்டில்1900 கோடி செலவுக்கு  கொடுத்தும் நாறுவது ஏன்? என்று யாராவது அறிக்கை விட்டால் நல்லாருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@

Dec 1, 2012

நீர்ப்பறவை

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் தேசியவிருதை தட்டி வந்த இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம்.  அதே தயாரிப்பாளருக்கு படம் ஆரம்பிக்க இருந்து பின்பு உதயநிதிஸ்டாலினின் தயாரிப்பில் இப்போது வெளி வந்திருக்கிறது.