Onibus174- பஸ்ஸை கடத்திய இளைஞன்
ரியோ டி ஜெனிரோவில் ஜூன் மாதம் 12ஆம் தேதி 2000த்தில், முழுவதும் பயணிகளால் நிரம்பியிருந்த பஸ்நெ174ஐ, பட்ட பகலில் ஆயுதம் ஏந்திய சாண்ட்ரோ டோ நாஸிமெண்டோ என்கிற ஓருவனால் கடத்தப்பட்டுகிறது.. பஸ்ஸை ஓரு இடத்தில் நிறுத்தி அதிலிருந்து எவராவது வெளியேற முற்பட்டால், அவர்களையும், போலீஸ் ஏதாவது செய்ய முயன்றால் பஸ்ஸில் உள்ள எல்லா பயணிகளையும் கொன்று விடுவதாய் மிரட்டுகிறான்.. இவை அனைத்தும் இதை அங்குள்ள பிரேசிலியன் தொலைக்காட்சி நேரலை நிகழ்சியாக தன்னுடய சேனலில் ஓளிபரப்புகிறது.. அந்த கடத்தல்காரனிடம் மாட்டிய பயணிகளின் நிலைமை, பயணிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் போலீஸ் நடத்தும் போராட்டம் என்று எல்லா விஷயங்க்ளும் நேரலையாய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி கொண்டிருப்பதால் ஏற்படும் பதட்டம்.. என்று போகிற இந்த படம் அதை மட்டும் காட்டவில்லை.. பஸ்ஸை கடத்திய சில நிமிடங்களில் அவன் யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்து அதை கண்டுபிடித்து, அவன் ஏன் இப்படி ஆனான்? அவனுடய குடும்ப பிண்ணனி, என்று அவனின் வேறு முகத்தையும் தேடி, தேடி காட்டுகிறது.. ஏழ்மையும், படிப்பில்லாததால் சம்பாதிக்கும் திறன் இல்லாத அவன் மிக சாதாரணமான ஓருவனாய் தான் வ...