PIKU
சமயங்களில் இம்மாதிரியான படங்களைப் பார்க்கும் போது ஏன் தமிழ்ல மட்டும் இப்படி படங்கள் வர மாட்டேன்குது? என்ற ஏக்க கேள்வி வராமல் போகாது. விந்தணு தானத்தை வைத்து கம்பியில் நடக்கும் கதைக் களனை வைத்துக் கொண்டு ஹிட்டடித்தவர்களின் அடுத்த படைப்பு ஷிட்டடிக்கும் விஷயத்தை வைத்து. படிக்கும் போதே முகம் சுளிக்க வைக்கும் விஷயமாய் இருக்கிறதல்லவா? ஆனால் படம் பார்க்கும் போது அப்படி தோன்றாது. அதான் இப்படத்தின் வெற்றி.