சேவல் - விமர்சனம்
சேவல்ன்னு ஏன் பேர் வச்சீங்கன்னு ஹரிகிட்ட கேட்டபோது, சேவல் போல ஊரை சுத்திகிட்டு இருக்கறவந்தான் என் படத்தோட ஹீரோ.. அதனாலதான் படத்திக்கு இந்த பேரை வச்சேன்னு சொன்னாரு..அதுக்கு ஏத்தாப்ல பரத்தும் சும்மாவே ஊரையே சுத்திகிட்டு கிடக்காரூ..திடீர்ன்னு அக்ரஹாரத்து பொண்ணு பூனத்தை பாக்கிறார்.. லவ் பண்ண ஆரம்பிக்க.. அவருடய அக்கா சிம்ரன், அப்பா வழக்கம் போல கோவில் குருக்கள்.. ஏழை பிராமணன்.. பொறுப்பில்லாத வேற சாதி பையன்..அவனுக்கு சித்தப்பாவா.. வடிவேலு..எந்த ஊருக்கு பெரியவர்ன்னு சொல்ல முடியாம ஓரு பெரிய மனுஷன் சண்முகம்.. சண்முகத்திக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு, பரத்துக்கு பூனத்தின் மேல லவ், சிம்ரனின் கொழுந்தனுக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு..இப்படி ஆளாளுக்கு கண் வைக்கிற மாதிரிதான் பூனம் இருக்காரு.. ஹரிக்கு என்ன ஓரு இதுவோ தெரியல.. அவருடய எல்லா படங்கள்லேயும் ஹீரோயின் அக்ரஹாரத்து பொண்ணாதான் வர்றா..அனா ஓரு அரத பழசான ஓரு கதையை வச்சிக்கிட்டு அவர் பாவம் என்னதான் பண்ணுவாரூ.. சேவலா சுத்திகிட்டுருந்த பரத், பூனத்தை காதலிக்க ஆரம்பித்ததுமே திருந்த ஆரம்பிக்க, பூனம் பரத்தை காதலிக்கணூம்னா அவருடய தாத்தா நிலத்தை எடுத்து வித்து க...