Posts

Showing posts with the label வெட்டுப்புலி

கொத்து பரோட்டா – 15/08/11

Image
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். வெட்டுப்புலி நாவல் விருது பெற்றதையொட்டி, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாரதி மணி, முனைவர் குருநாதன் அவர்களுடன் என்னையும் மேடையேற்றி பேச சொல்லியிருந்தார்கள். நன்றி வேடியப்பன். சென்ற வருடம் வரை  இவர்களை பேசுவதை பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தவன். இன்று அவர்களுடன் மேடையில் என்பது உங்களால் தான் வந்தது. என் உயர்வுக்கு துணையாய் உள்ள அத்துனை நல் இதயங்களுக்கும் என் இதய்ம் கனிந்த நன்றிகள். மனுஷ்யபுத்திரனின் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. முக்கியமாய் பெரிய வெகு ஜன இதழ்களில் எழுதாமல், புத்தகத்தைப் பற்றி எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல், சுய பப்ளிசிட்டியில்லாமல் ஒரு நாவல் இரண்டாவது பதிப்பு வந்திருப்பது தமிழ்மகனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.(உள்குத்து ஏதாவது இருக்குதோ?). நிச்சயமாய் படித்தவர்களுக்கு தெரியும். இம்மாதிரியான நாவல் ஆங்கிலத்தில் வந்திருந்தால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி பெஸ்ட் செல்லர் ஆகியிருக்கும். தமிழ்மகனுக்கும், மனுஷ்யபுத்திரனுக்கும் நல்ல வருமானம் கிடைத்திருக்கும். தமிழில் எழுதியதால் இப்போதுதான்...

வெட்டுப்புலி –புத்தக விமர்சனம்

Image
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேர் சிலாகித்து சொன்னார்கள். எழுதியிருந்தார்கள். ஒரு சினிமாவை பற்றி பதிவெழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை இப்படி விமர்சித்து நிறைய பேர் சொன்னது என்னுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சொல்லி வைத்து டிஸ்கவரியிலிருந்து வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன். வெட்டுபுலி படம் போட்ட தீப்பெட்டியில் இருக்கும் தன் மூதாதையரான தாத்தாவின் வரலாறு தேடி போவதாய் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமான ஆரம்பமாக இருந்தாலும், ஒரு அருமையான் கதை சொல்லிக்கான யுக்தியாய் தான் தெரிந்தது. படிப்பவர்களை மெல்ல கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான யுக்தி. முப்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. லஷ்மணரெட்டி வெள்ளைக்காரனின் குதிரையை உடல் சிராய்த்து, ரத்தம் வழிய ஓட்டப்பழகுவதோடு கதை ஆரம்பிக்கிறது.  முப்பதுகளிலிருந்து இன்றைய காலம் வரை நம் தமிழ் நாட்டு மக்களிடையே, அதுவும் கிராமத்து மக்களிடையே இருந்த கலாச்சாரம், ஜாதி, பள்ளி, பறையன், பாப்பார ஜாதிகளுக்கிடையேயான மதிப்பீடுகள், அரசியல், சினிமா, சுதந்திர தாகம், எதிர்ப்பு, ஆங்கிலேயனுக்கான மறைமுக ஆதரவு, ஆங்கிலேயனை வைத்து பிழைப்பு நடத்தி வசதி வா...