Thottal Thodarum

Apr 29, 2013

கொத்து பரோட்டா -29/04/13

ஃபோரம் மால்
வருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் ட்ராபிக் ப்ரச்சனை பற்றி அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே எதிர்புறத்தில் உள்ள கமலா தியேட்டர் படம் விடும் போதும் ஆரம்பிக்கும் போது ட்ராபிக் பின்னியெடுக்கும், இப்பொது அதற்கு நேர் எதிரே இந்த மால். அதிலும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அமையப் பெற்றிருக்கிறது. அனுமதிப்பதை வடபழனி வழியாகவும், வெளியேறுவதை நூறு அடி ரோடு பக்கமாய் விட்டால் நிச்சயம் பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. மக்களின் போக்குவரத்துப் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், இவர்கள் பாட்டிற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னால் என்ன செய்வது என்று முழி பிதுங்குவதற்கு பதிலாய் முன்னமே கொஞ்சம் யோசித்து அனுமதி அளிக்கலாம். இவ்வளவு யோசனையிலும் ஒர் கிளுகிளூப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒன்று மொக்கை கமலா தியேட்டருக்கு ஒர் போட்டி. இரண்டாவது நம்ம ஏரியா பக்கத்திலேயே ஒர் ஐமேஸ் தியேட்டர். டிக்கெட் விலையையும், பார்க்கிங் சார்ஜையும் நினைச்சாத்தான் வயத்த கலக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@

Apr 28, 2013

யாருடா மகேஷ்?

ட்ரைலர் வெளியீடான அன்றைக்கு பார்த்த மாத்திரத்தில் பற்றிக் கொண்ட படம். தமிழில் ஒரு அடல்ட் காமெடி வரப் போகிறது என்ற நினைப்பே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. படம் ஏ சர்டிபிகேட் வாங்கியதும் சரி. விட்டு விளையாடியிருக்காங்க போல என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். அவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்ததா?

Apr 27, 2013

நான் ராஜாவாகப் போகிறேன்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர்  ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்ன காரணம்? யார் அந்த ராஜா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள்.

Apr 26, 2013

சாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை

 தமிழகத்தில் இட்லி, தோசைக்கு பிறகு பிரபலமான அயிட்டம் ஆப்பம். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பாலை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் அற்புதமாய் இருக்கும். லீ மெரிடியனில் தேங்காய்ப்பால் கள்ளிப் பாலைப் போல திக்காய் இருக்கும். அதற்காகவே சில பல வருடங்களுக்கு சில நூறு ரூபாய்க்களை செலவு செய்து ஆப்பம் சாப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் உண்டு. ஆப்பத்துடன் தேங்காய்ப்பால், அல்லது வெஜ் குருமா, அல்லது கடலைக் கறி என்று பல காம்பினேஷன்களில் கிடைக்கிற இடங்களில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். ஆப்பம் என்பது நல்ல பொன் முறுவலோடு, அப்படியே கவிழ்த்துப் போட்ட சட்டி போல இருந்தால் தான் ஓரத்தில் இருக்கும் முறுகலை அப்படியேவும், மீதியை கிரேவியோடும், பாலோடும் சாப்பிட ஏதுவாக இருக்கும். இப்படி ஆப்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.  சாதாரணமாய் ஆயாகடைகளில் மட்டுமே கிடைக்கப் பெற்ற அப்படியாப்பட்ட ஆப்பத்தை, இட்லிக்கடை என்று சொல்லி முருகன் இட்லிக்கடை பெயர் பெற்றதை போல நளாஸ் ஆப்பக்கடை என்று வைத்து பிரபலமானதும் வடபழனியில் சிம்ரன்ஸ் ஆப்பக்கடை உதயமானது. ஏற்கனவே துபாயில் எல்லாம் இருக்கிறது என்றாலும் தமிழ்நாட்டில் ஆப்பத்திற்காக கடைகள் உதயமானதற்கு முக்கிய காரணம் நளாஸ் என்று சொல்ல வேண்டும்.

Apr 24, 2013

Gunde Jaari Gallanthaindhe

 பார்த்த மாத்திரத்திலேயே நிதினுக்கு இஷா தல்வாரின் மேல் காதல் வருகிறது. நண்பன் ஆலியின் கல்யாணத்திற்கு வந்தவள் என்பதால் அவளின் நம்பரை மட்டும் வாங்கித் தரச் சொல்கிறார்.  அவர் சொல்லும் நம்பரை சொல்லும் போது நிதின் தவறாக ஸ்டோர் செய்துவிடுகிறார். அந்த நம்பர் நித்யா மேனனின் நம்பராய் இருக்க, எண்டமூரி வீரேந்திரநாத் நாவலில் வருவது போல போனில் மட்டுமே பேசிப்பழகி, பார்க்காமலே காதலிப்பதை விரும்புவர் நித்யா மேனன். இந்த கொள்கையினால் குழப்பத்தினோடு இருவரும் பார்க்காமலேயே காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தான் காதலித்த பெண்ணையே தன் நண்பனுக்கு காதலிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து செட்டாக்கிவிட்டு விட, இருந்த காதலும் போய் நிஜ காதலி என்று நினைத்து காதலித்த நித்யாமேனின் காதலும் இழந்து நிற்கிறார். பின்பு என்ன ஆனது என்பதை சும்மா ஜாலியாய் சொல்லியிருக்கிறார்கள்.

Apr 22, 2013

கொத்து பரோட்டா -23/04/13

இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய் ஆரம்பித்தார். செம அப்சர்வேஷன். அவரின் கிறுக்கல்கள் கவிதைகளை ஆடியோ சிடியாய் வெளியிட்டிருக்கிறார். விரைவில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். சந்தடி சாக்கில் அவரிடம் ஒர் கதை சொன்னேன். நன்றாக இருப்பதாய் சொன்னார். மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றிருக்கிறார். காத்திருக்கிறேன். மனுஷனுக்கு எங்கேயிருந்துதான் விதவிதமான பொருட்கள் கிடைக்கிறதோ.. அவர் வீட்டில் இருந்த கடிகாரம் அட்டகாசம். சில பேரின் குரலில் இருக்கும் வசீகரம் அவர்கள் எது பேசினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அதுவே சுவாரஸ்யமான விஷயங்களுடனான பார்திபனின் குரலில் என்றால் கேட்கவா வேண்டும். தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ஒர் ப்ளஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@

Apr 20, 2013

உதயம் NH4

 இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை NH4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலை தான் கதைக்கு களன். இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பு, கதை திரைக்கதையில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கி வந்திருக்கும் இந்த படம் ஒர் ரோடு மூவி டைப். பெரும்பாலான ரோட் மூவிக்கள் சுவாரஸ்யமான திரைக்கதையில்லாமல் சொதப்பிவிடுவது உண்டு. அதில் இது எந்த வகை? 

Apr 19, 2013

கெளரவம்

 கெளரவக் கொலைகள் அதிலும் காதலுக்காக செய்யப்படும் கொலைகள் புதிதல்ல. ஜாதி எனும் அழுக்கு மனித மனங்களில் படர ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கத்தான் செய்கிறது. தீண்டாமை ஒழிப்பு, அது இது என்று ஆயிரம் போராட்டங்கள் வந்தாலும் தீண்டாமையும், ஜாதியும்  இந்தக் காலத்திலும் ஒழியாமல் இருக்கிறது என்பதை எந்த ஊர், எந்த மாநிலம் என்று சொல்லாமல் கதை சொல்லியிருக்கிறார்கள்.ஊரின் பணக்கார வீட்டுப் பெண் அவ்வூரில் காலனியில் இருக்கும் இன்ஜினியர் பையனுடன் ஓடிப் போய்விட, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பையனின் கல்லூரித் தோழனான சிரிஷ் கண்டறிய முற்படுவதுதான் கதை.

Apr 18, 2013

தமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013

ஜனவரி 
ஸ்டியோ க்ரீனின் வெளியீட்டில், லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் வருடக் கடைசியில் வெளிவந்து, ஹிட்டடித்த கும்கியோடு சென்ற வருடம் நிறைவுற்றது. ஆனால் அதே நிறுவனத்திடமிருந்து வெளியான படம் அலெக்ஸ் பாண்டியன். இவர்களின் விநியோக ஸ்டாடர்ஜி நன்றாக இருக்கும் படம் வெளிவருவதற்கு பத்து நாட்கள் முன்னமே ப்ரோமோவில் ஆரம்பித்து தியேட்டருக்கு செல்லும் வரை ஒரு முறையையும், படம் வீழ்ந்தாலும் ஜெயித்தாலும் ஒரே விதமான விளம்பரம் ஹைஃபை கொடுக்கும் முறையையும் பாலோ செய்வார்கள். இது சன் டிவியின் டெக்னிக். எல்லா படத்தையும் ரிலீசாகும் முதல் நாள் இரவே சூப்பர் ஹிட் விளம்பரப்படுத்தும் முறை. ஆனால் அதே போன்ற விளம்பரங்கள் எல்லாம் இருந்தும் அலெக்ஸ் பாண்டியன் பெரும் வீழ்ச்சியடைந்தது. அதே பொங்கலுக்கு வெளியான சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, புத்தகம், சமர் ஆகிய படங்களில் சந்தானம், ராமநாராயணன் மட்டும் நிஜமாகவே ரெண்டாவது, மூணாவது லட்டு எல்லாம் தின்றார்கள். கிட்டத்தட்ட முப்பது கோடிக்கு மேல் வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நான்கிலிருந்து ஐந்து கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் க.ல.தி.ஆசையா?. சமர் விஷால், திரிஷா கெமிஸ்ட்ரி அது இது என்று சொல்லி விளம்பரப்படுத்தியும், ஒர்க்கவுட் ஆகவில்லை. டிவி நடிகர், தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் வெளிவந்த புத்தகம் வந்த சுவடு தெரியாமல் போனது.  விஸ்வரூபம் வெளிவருவதாய் இருந்த அதற்கு தடை அது இது என்று உச்சப் பட்ச கலாட்டக்களின் நடுவே சத்தமேயில்லாமல் விவேக் நடித்து வெளியான பத்தாயிரம் கோடி படமும் வீழ்ந்தது.
சூப்பர் ஹிட் : கண்ணா லட்டு தின்ன ஆசையா?

பிப்ரவரி
மணிரத்னத்தின் கடல், விக்ரம், ஜீவாவின் நடிப்பில் வந்த டேவிட், சர்சைக்களிடையே வெளியான விஸ்வரூபம், வேந்தர் மூவிஸ் வனயுத்தம், விமலின் சில்லுனு ஒர் சந்திப்பு, ஹரிதாஸ், அமீரின் ஆதி பகவன் மற்றும் பல படங்கள் வெளிவந்த மாதம். மணிரத்னத்தின் கடல் பெரிய அளவில் உள்வாங்கி, ஜெமினி, மணிசார், கும்கியின் மூலமாய் லாபம் சம்பாதித்த திருப்பதி ப்ரதர்ஸ் உட்பட பல விநியோகஸ்தர்களின் டவுசரை அவிழ்த்த படமாய் ஆனது. தொடர் தோல்வியில் இருக்கும் விக்ரம், ஜீவா ஆகியோர் டேவிட் படத்தை தமிழில் வெளியிடவே அனுமதித்திருக்க கூடாது. அவர்களது கேரியரின் மேலும் ஒர் டெண்டை ஏற்படுத்தியது டேவிட். வேந்தர் மூவீஸின் வனயுத்தம் பல சர்சைகளை எல்லாம் தாண்டி வெளிவந்தாலும் குறிப்பிட்ட அளவு சலசலப்பைக் கூட ஏற்படுத்தாத அளவில் சென்சார் விளையடியிருந்ததால் கவன ஈர்ப்பு கூட இல்லாமல் போய் விட்டது. விமல் தனியாள் படத்தை தோளில் தூக்கிச் சுமந்த படங்கள் எடுபடாமல் போகும் ட்ரெண்ட் சில்லுனு ஒர் சந்திப்பிலும் தொடர்ந்தது. டாக்டர் ராம்தாஸின் தயாரிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டுப் பெற்ற படம். ஆனாலும் வசூல் ரீதியாய் வெற்றிப் படமாய் அமையவில்லை. காரணம் படத்தின் பட்ஜெட். இம்மாதிரியான படங்களை இரண்டு கோடி ரூபாய் தயாரிப்பில் எடுக்கப்பட்டிருதாலும் இவ்வளவு பாராட்டுக்களுக்கும் அங்கீகாரத்திற்கும் இப்போது வசூல் செய்ததே லாபகரமானதாய் அமைந்திருக்கும் ஏழு கோடி போட்டு, லாபம் சம்பாதிக்கும் அளவிற்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா போல கருத்தாழமிக்க படமாய் இல்லாததால் வெகுஜன ரசிகர்களின் ஆதரவு கிடைகக்வில்லை. ஏகப்பட்ட பிரச்சனைகளோடு வெளியான் விஸ்வரூபம் உலகமெங்கும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என ரவுண்டு கட்டி சுமார் 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருப்பதாய் சொல்கிறது விநியோகஸ்தர்கள் உலகம். அமீரின் ஆதிபகவன் 14 கோடியில் தயாரிக்க ஆரம்பிகக்ப்பட்டு சுமார் 30 கோடிக்குள் இரண்டு வருடங்களாய் தயாரிப்பில் இருந்த படம். அமீரின் கேரியரில் மிகப் பெரிய தோல்விப் படமாய் அமைந்தது.
சூப்பர் ஹிட் : விஸ்வரூபம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்ச்
ஒன்பதுல குரு, பரதேசி, வத்திக்குச்சி, மறந்தேன் மன்னித்தேன், கண் பேசும் வார்த்தைகள், அழகன் அழகி, சென்னையில் ஒர் நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா மேலும் பல சிறு முதலீட்டுப் படங்களும் வெளிவந்த மாதம். ஒன்பதுல குரு படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் லாபக்ரமான படமாய் அமைந்தது. வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் ரசிகர்களுக்கும் அப்படி சொல்ல முடியவில்லை. பவர் ஸ்டார் இருந்தால் படம் ஓடிவிடும் என்கிற மித்தை இப்படம் உடைத்துவிட்டது. ப்டத்தைப் பற்றிய விமர்சனங்கள் மோசமானதாய் இருந்தாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்த படம். பாலாவின் பரதேசி வழக்கம் போல விமர்சகர்களிடையே மாபெரும் பாராட்டையும், வாதங்களையும் எழுப்பி விட்டது. அதே வழக்கம் போல வசூல் ரீதியாய் லாபமில்லாத படமாய் அமைந்தது. வழக்கமாய் பாலாவின் தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்ததாய் இதுவரை சரித்திரத்தில் இல்லை. முதல் முறையாய் பாலா என்கிற தயாரிப்பாளர் இப்படத்தின் மூலம் லாபம் சம்பாதித்தார். அதை வாங்கி வெளியிட்ட வகையில் ஜே.எஸ்.கேவுக்கும் லாபம் தான். அவரிடமிருந்து வாங்கியவர்களின் விநியோகதர்கள் தியேட்டர்காரர்கள் பாடுதான் வழக்கம் திண்டாட்டம். சிட்டி, செங்கல்பட்டு ஏரியாவைத் தவிர போட்ட காசு வரவில்லை என்று தான் ரிப்போர்ட். சென்னையில் ஒர் நாள் நல்ல படம் என்ற பாராட்டையும் ஓரளவுக்கு வசூலையும் இணைந்து பெற்ற படமாய் அமைந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் வந்த வத்திகுச்சி மக்களிடம் வரவேற்பில்லாமல் போனது.  மீண்டும் வெகுஜன மக்களின் ஆதரவோடு, ஒர் மொக்கை காமெடி படம் ஹிட்டடித்தது என்றால் அது கே.பி.கி.ரங்கா தான். முதல் வார வசூலே எட்டு கோடியை தாண்டி இன்று மூன்றாவது வாரத்தில் பயணித்து சிவகார்த்தியேனின் மார்கெட்டை ஏற்றிவிட்டிருக்கிறது. முதல் வாரம் இருந்த வசூல் அப்படியே தடாலென்று வீழ்ந்து சுமார் 14சியை தொட்டிருக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். 
ஹிட் :கேடி பில்லா கில்லாடி ரங்கா
ஆவரேஜ் : சென்னையில் ஒர் நாள். 

 கேபிள் சங்கர்

Apr 16, 2013

Swami RaRa

 நிகிலுக்கும் அவனது இரண்டு நண்பர்களுக்கும் தொழில் பிக்பாக்கெட் அடிப்பது. டியூசன் டீச்சரும், ஜர்னலிஸ்டுமான சுவாதிக்கும் நிகிலுக்கும் சுவாதியின் வெஸ்பா ஸ்கூட்டரின்  மூலமாய் கனெக்‌ஷன் வருகிறது. அவளிடம் நிகில் தான் ஒரு சாப்ட்வேர் எஞினியர் என்று பொய் சொல்லி காதலிக்க ஆரம்பிக்கிறான். இதனிடையில் பத்மநாபசாமி கோயிலிருந்து திருடப்பட்ட ஒரு குட்டி விநாயகர் சிலை ஒன்று விற்கப்படுகிறது. சில ஆயிரங்களுக்கு விற்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு பத்து கோடி. அந்த சிலை ஒரு கட்டத்தில் சுவாதியிடம் வந்து அதை லவுட்டி நிகில் விற்று விடுகிறார் ஐந்து லட்சத்திற்கு. சிலையை தேடி வந்த கும்பல் சுவாதியை தூக்குகிறது. எப்படி இந்த பிரச்சனையிலிருந்து நிகில் சுவாதியை தப்பிக்க வைத்து தன் காதலில் வெற்றி பெற்றான் என்பதுதான் கதை.  

Apr 15, 2013

கொத்து பரோட்டா -15/04/13


சென்னையில் புறநகர் எனறு இன்று அறியப்படும் இடங்கள் எல்லாம் சில வருடங்களுக்கு முன் வயல்வெளிகளாய் இருந்தது. பின்பு அவற்றை ப்ளாட் போட்டார்கள். இதோ நேற்று அப்பக்கமாய் போகும் போது கான்க்ரீட் ராட்சஷன்கள் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயம் அருகிக்  கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எல்லா இடத்தில் கட்டங்கள் கட்டி சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்ற பயம் வரும் நேரத்தில் சிங்கப்பூர் நண்பர் ராமை சென்னையில் சந்தித்தேன். அவர் சிங்கப்பூரை விட்டு மொத்தமாய் வந்துவிட்டதாகவும், இங்கே சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு நண்பருடன் சேர்த்து சில ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் என்று சொன்னார். சமீபகாலமாய் கொஞ்சம் நன்றாக சம்பாதித்து செட்டிலானவர்களின் எதிர்கால குறிக்கோள் கிராமத்தில் விவசாயம் செய்வது என்றுதான் சொல்கிறார்கள். கார்பரேட் கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களுக்கு விவசாயம் ஃபேஷனாய் இல்லாவிட்டாலும் நல்ல வியாபாரமாகவாவது படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Apr 13, 2013

தடுமாறி நிற்கும் சீரியல் உலகம்

சினிமா தியேட்டர்களுக்கு பெண்களின் வரத்து குறைந்த காரணம் டிவி சீரியல் என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட. பெண்களுக்கு விருப்பமான  கதைகள் தொலைக்காட்சியிலேயே வருவதால் சினிமாவிற்கு போவது குறையத்தான் செய்தது. திரைப்படம் தயாரித்த நிறுவனமெல்லாம் சீரியல் தயாரிக்க வந்து பெரும் லாபம் சம்பாதித்து வந்த காலமெல்லாம் கூட உண்டு. அப்ப இப்போதெல்லாம் சீரியல்கள் லாபமில்லையா? என்று கேட்டீர்களானால் இல்லை என்று குரலும் எங்க எங்களை சீரியல் எடுக்க விடுறாங்க என்கிற புலம்பலைத்தான் கேட்க முடிகிறது. புலம்பல் போராட்டமாய் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டுதானேயிருக்கிறார்கள். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதானேயிருக்கிறது பிறகென்ன? என்று கேட்கிறீர்களா? அங்கே தான் ப்ரச்சனையே ஆரம்பம்.

Apr 12, 2013

ராஜா என்கிற ரசிகன்

இளையராஜா வழக்கமாய் இப்படி பேசிப் பார்த்திருக்க மாட்டீர்கள். அதுவும் சமீப காலமாய் அவர் குமுதத்தில் எழுதும் கேள்வி பதில்களில் இருக்கும் கோபமும், எரிச்சலுமான பதில்களை படிப்பவர்கள் என்ன தான் ரசிகராய் இருந்தாலும் கொஞ்சம் நெளியத்தான் செய்வார்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட ராஜாவின் அகம் இல்லாத ஒர் பேச்சு. அழகு
  கேபிள் சங்கர்

Apr 11, 2013

சாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்

 
செய்தித்தாள்களில், சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும் ஒர் விஷயம் அம்மா உணவகம். ஊருல இருக்கிற கையேந்திபவனையெல்லாம் எழுதுற நீ ஏன் இதை பத்தி எழுதலை? நீ திமுகவின் அல்லக்கை என்றெல்லாம் கூப்பிட்டு சில பேர் கேட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சாப்பாட்டிற்கு இடம் பிடிப்பதற்காக க்யூவில் நிற்பது அவ்வளவாக பிடிக்காது. அதனால் கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன். 

Apr 9, 2013

Baadshah

 
 மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் கதை என்று பெரிதாக இருக்காது. அவர்களின் மாஸ் ரீச்சை வைத்து எப்படி பில்டப் செய்து திரைக்கதையமைக்கிறோமோ அது தான் படத்திற்கு பலம். கதையென்று பார்த்தால் நாம் பார்த்துப் பழகிய ஹம், பாட்ஷா, கதைதான் என்றாலும் அதில் வேறு வேறு நடிகர்கள், அவர்களின் பில்டப்புகள் என்று வரும் போது வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கிறது. அதுவும் மாஸ் மசாலா இயக்குனர் சீனு வைட்லாவும், ஜூனியர் என்.டி.ஆரும் ஒன்று சேர்ந்தால்.. கேட்க வேண்டுமா? எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிருந்தது.

Apr 8, 2013

கொத்து பரோட்டா-08/04/13

கேட்டால் கிடைக்கும் குழுமத்திலிருந்த ஒர் நண்பர் எனக்கு போன் செய்து அவருடய ஏரியாவில் ஒர்  பிரச்சனை என்றும், அதற்காக போராட வர வேண்டும் என்று சொன்னார். அவரின் பிரச்சனை கார்பரேஷன் மேட்டர். நான் அவரிடம் என் வேலையைப் பற்றி சொல்லிவிட்டு, இதை நீங்களே பார்த்துக் கொள்ள முடியுமென்று எப்படி செய்ய வேண்டுமெனவும் சொன்னேன். அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். சும்மா குழு என்று ஆரம்பித்து ஒரு பிரச்சனைன்னா வர மாட்டேன் என்கிறீர்கள் என்றார். அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அவர் கோபமெல்லாம் அடங்கியவுடன் இதற்கு முன் இம்மாதிரியான ப்ரச்சனைகள் வரும் போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். சற்றே யோசித்து என்ன பண்றதுன்னு புரியாம கேட்காம விட்டிருவேன். என்றார். ஆனா இப்ப மட்டும் ஏன் கேட்கணும்னு நினைக்கிறீங்க? என்று கேட்டேன். இப்போது யோசிக்காமல் அதான் குழுவில் போடும் செய்திகளை எல்லாம் படிக்கிறேன் இல்ல.. கேட்டாத்தான் கிடைக்கும்னு சொல்றீங்க.. அப்படி கேட்டு கிடைச்சவங்க அனுபவங்கள் இருக்கு. அதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா உடனே அதுக்கு என்ன செய்யணுங்கிற் ஆலோசனை கொடுக்கிறாங்க.. அந்த தைரியத்துலதான் கேட்டேன் என்றார். இத... இதத்தான் எதிர்பார்த்தேன். இது வரை எதுக்கு வம்புன்னு யோசிச்சிட்டு இருந்த நீங்க இப்போ கேட்டா கிடைக்கும்ங்கிற நம்பிக்கை வந்திருக்கு இல்லை. இந்த நம்பிக்கைய ஏற்படுத்துவதுதான் எங்கள் குழுவின் நோக்கம். நீங்க போங்க.. கார்பரேஷன் ஆபீசுக்கு போய் கேளுங்க. நிச்சயம் செய்வாங்க.. நாம கேட்கிறதில்லை.. அவங்க செய்யுறதில்லை. கேட்டால் கிடைக்கும் என்றேன். அவருக்கு கிடைத்துவிட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

Apr 6, 2013

சேட்டை

 ரெண்டு வருடங்களுக்கு முன் ஹிந்தி திரையுலகின் கல்ட் ஹிட் படமான “டெல்லி பெல்லி”யின் தமிழாக்க முயற்சிதான் இந்த சேட்டை. மிக சிம்பிளான கதைதான். ஹன்சிகா ஒரு  ஏர்ஹோஸ்டஸ். தன் தோழிக்கு உதவுவதற்காக வைரம் கடத்தும் ரஷ்யனுக்கு அவனைப் பற்றி தெரியாமல் அவனிடமிருந்து ஒர் பார்சலைலை வாங்கிக் கொண்டு டெலிவரி செய்ய ஒப்புக் கொள்கிறாள். அந்த பார்சலை தன் பாய் ப்ரெண்ட் ஆர்யாவிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொல்லிவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்க்க அழைக்கிறாள் அவர்களது திருமண நிச்சயதார்த்த விஷயமாய் பேச. அந்த பார்சலை தன் ரூம் மேட்டான நக்கி சந்தானத்திடம் கொடுத்து  விடச் சொல்ல, அவன் ரோட்டோரம் விற்கும், கண்ட இடத்தில் சொறிந்து விட்டு கொடுக்கும் இலியானா சிக்கனை சாப்பிட்டு விட்டு வயிறு ப்ரச்சனையாகி வீட்டில் கழிந்து கொண்டிருக்கிறான். தன் காதலி வேறு வெளிநாட்டில் செட்டிலான ஒருவரோடு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் மனம் நொந்து போய் வீட்டிற்கு வரும் பிரேம்ஜியிடம் தனக்கு உடம்பு சரியில்லை, டாக்டரிடம் போனேன் புட் பாய்சன் ஆகிவிட்டது என்று சொல்லி, போகிற வழியில் labபில் தன் ஸ்டூல் டெஸ்ட செய்வதற்கான சேம்பிளையும், அந்த கவரையும் அட்ரஸையும் கொடுக்க, முறையே சரக்கை பிரேம்ஜி மாற்றிக் கொடுத்துவிடுவதால்  வருகிறது ப்ரச்சனை. அந்த பார்சலில் இருப்பது வைரங்கள். வைரத்துக்கு பதிலாய் வில்லனிடம் நக்கி சந்தானத்தின் “ஆய்” சாம்பிள் போக, ரஷ்யனை அடித்து பின்ன ஆரம்பிக்கிறார்கள். அதற்கு அப்புறம்  என்ன நடந்தது என்பதுதான் கதை.

Apr 5, 2013

கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்.

 பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.

Apr 4, 2013

Amen

 மலையாள திரையுலகின் தற்போதைய ஹாட் ஸ்டார் பாஹத் பாசில் தான் போல. தொடர்ந்து ஹிட் படங்களாகவே அளித்து வருகிறார். இவரது அடுத்த ரிலீஸ் மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கும் ஒர் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சரி ஆமெனுக்கு வருவோம். குமரன்காரி எனும் ஒரு கேரள கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தையும், அங்கே பேண்ட் வாசிக்கும் குழுவை பின்னணியாய் வைத்து அமைக்கப்பட்ட கதை. 

Apr 2, 2013

சாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந்தி பவன்.

என்னடா இது கடைக்கு பேரே இதுதானா? என்று யோசிக்கிறீர்களா? என்ன செய்வது கடைக்காரர் இன்னும் பெயர் வைக்கவேயில்லை என்கிறார். கடந்த சில வருடங்களாய் எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவில் ஒரு ப்ளாட்டின் மதில் சுவரை ஒட்டி சின்ன டிபன் கடை முளைத்தது. ஆரம்பத்தில் வியாபாரம் கொஞ்சம் சுணக்கமாகவே நடந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் சுறுசுறுப்பானது.  நானும் ஒரு நாள் அங்கே சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருப்பேன் ஏனோ அது நடக்காமலேயே இருந்தது. அதற்கு முதல் காரணம் அவர்கள் காலை டிபன் மட்டுமே அங்கே செய்கிறார்கள். காலை சிற்றுண்டி எனக்கு எப்போதுமே என் வீட்டில் தான். எனவே தான் அவர் கடையில் சாப்பிட வாய்க்காமல் இருந்தது.  

Apr 1, 2013

கொத்து பரோட்டா- 01/04/13

மஹாராஷ்ட்ரிய எம்.எல்.ஏக்கள் இருவர் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் சரணடைந்து பின்பு ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். ஓவர் ஸ்பீடில் போனதற்காக அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து கேஸ்போட்டு பைன் போட்டிருக்கிறார் அதனால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள் பட்டப் பகலில். இந்த ப்ரச்சனையை மீடியா கையிலெடுத்தப் பின் அவர்களிடம் பேட்டி எடுத்த டிவி நிருபர் கடுப்பாகிவிட்டார். “என்ன நீ அடிச்சியா? என்ற ரீதியில் நிருபர் கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் பேசி குழப்பினார். அரசியல்வாதிகள் நினைத்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இம்மாதிரியான சமயங்களில் மீடியாக்கள் கையில் எடுத்துக் கொண்டு வெளிக் கொண்டு வருவதை நான் ஆதரிக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@