ஒரு கவிதை எழுதியிருக்கேன், சிறுகதை எழுதியிருக்கிறேன். கட்டுரை எழுதியிருக்கிறேன் உன் பதிவில் போட முடியுமா? என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா? என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு நான் வலைப்பூ ஆரம்பித்து கொடுத்திருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில் பதிவர்கள், எழுத்தாளர்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் எழுத விரும்புபவர்கள் அவர்களுடய கதை, கட்டுரை, கவிதைகளை எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பிரசுரிக்கப்படும். கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி.. *************************************************************************** இக்...