Thottal Thodarum

Apr 26, 2017

கொத்து பரோட்டா 2.0-21

 கொத்து பரோட்டா  2.0-21
The Walking Dead
அமெரிக்க கேபிள் டிவி சேனல்களில் அதிகபட்சமான பார்வையாளர்களை கடந்த ஆறு வருடமாய் கொண்டிருக்கும் சீரிஸ். 2003ல் காமிக்ஸ் சீரியஸாய் வந்த கதை. 2010ல் அதை அடிப்படையாய் வைத்து டிவி சீரீஸ் ஆனது. கதையென்று பார்த்தால் சிம்பிள் தான். ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு டெபுடி ஷெரீப் நம் கதை நாயகன் ரிக். ஒரு கடத்தலை பிடிக்க போகும்போது குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில் கோமாவில் இருக்கிறான். கண் முழித்து பார்க்கும் போது ஜார்ஜியா மட்டுமல்ல நாட்டில் உள்ள பெரும்பாலனவர்கள் ஜோம்பிக்களாய் மாறியிருக்க, காணாமல் போன தன் மனைவி, மகளை தேட ஆரம்பிக்கிறான். தினம் தினம் ஜோம்பிக்களிடமிருந்து தப்பிப்பது ஒருவிதமான டென்ஷன் என்றால் இன்னொருபக்கம் சர்வைவலுக்காக மனிதர்களை எதிர் கொள்வதும், அவர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் ஒரு பக்கமென பரபர நிமிடங்கள் ஒவ்வொரு எபிசோடிலும். மனிதர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என கண்டறிவதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் இருப்பதே சவாலான உலகம். அதில் தன் மனைவி, மகளை கண்டு பிடிக்கிறான். அங்கே இருக்கும் குழுவுக்கு பொறுப்பேற்று தலைவனாகிறான். அவர்களை வழி நடத்துக்கிறான். பிரச்சனைகளை களைந்து காப்பாற்றுகிறான். புதியவர்களை சேர்க்கிறான். நண்பனை கொல்கிறான். மனைவியை இழக்கிறான். பல பாச, எமோஷனல் போராட்டங்கள். பட் எல்லோருடய குறிக்கோளும் சர்வைவல் மட்டுமே. அதை நோக்கித்தான் பயணமே. இவர்களுடன் இணையும் ஆட்கள். அவர்களின் கேரக்டர்கள். பெண்டாட்டியை காட்டடி அடிக்கும் புருஷன். அடங்கிப் போகும் பெரிதாய் உலகம் தெரியாத பெண், அவளது மகள். அவளின் கணவனின் இறப்புக்கு பின் ஏற்படும் மாற்றம். பையனை காப்பாற்ற போய் கிடைக்கும் புதிய நட்பு. அங்கே ஏற்படும் கொரிய பையன் அமெரிக்க பெண் காதல். அவர்களுடய நெருக்கம். வாள் வீச்சில் புலியான மினோ என அம்பு வீச்சிலும், அதிரடியாய் செயல்படும் டெரில், எதையும் சரியாய் சிந்தித்து செயல்படுத்தும் டாக்டர் ஹெர்ஷல். அவரது மகள்கள். என அதீத வயலண்டிக்கான ஒரு சீரிஸ். எல்லா ஜோம்பிக்களையும் வாழைத்தாரில் கத்தி குத்தி பழகுவது போல மண்டையோட்டின் மேல் வச்சி சர்ரக்.. சர்ரக் என குத்தி பழகுகிறார்கள். ரத்தம் பீச்சியடிக்கிறது. ஆங்காங்கே லைட்டாய் செக்ஸும். பட். ஒவ்வொரு சீசனின் ஆரம்பமும், முடிவும் அட்டகாசம். ஆறாவது சீசன் முடிவு கொஞ்சம் அதிர்ச்சியே.
@@@@@@@@@@@@@@@@@@@@
புத்தக கண்காட்சியில் உலவும் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவம். ஒரு நாள் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனுடனான எழுத்து இல்லாத அவரது துறை சார்ந்த பேச்சு. கண்காட்சி முடிந்தும் பேச்சு போய்க் கொண்டேயிருந்தது. அவ்வளவு பரபரப்பு. இதை வைத்து நீங்கள் நாலு நாவலாவது எழுதலாம் போல என்றேன். எங்க எழுதுன ஒரு சிறுகதையையே எவனும் பப்ளிஷ் பண்ண மாட்டேனுட்டானுங்க. என்றார். அவரின் சிறுகதை அட்டகாசமானது. இன்னொரு நாள் விநாயகமுருகன். அவரின் புத்தகம் குறித்த என் விமர்சனத்தை எழுதியதைப் குறித்து பாராட்டிவிட்டு, திட்டினாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் எழுதணுமில்லை என்றார். சாரு தன் மொழிப்பாளருடன் வந்திருந்தார். இந்த வருடம் ஏன் புத்தகம் ஏதும் வரவில்லை என்றதற்கு தமிழில் எழுதுகிறவனை எவன் மதிக்கிறான்? மதிக்காதவனை மதித்து எழுதுவதை விட, மதிக்கிறவனுக்கு எழுதுறதுதான் சரி என்றார். லஷ்மி சரவணக்குமார்  பேஸ்புக்கில் தன் புதிய பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகத்தின் விற்பனை, அவர் கொடுத்த எழுத்தாளர் ராயல்டி. அடித்த புத்தகங்கள் என டீடெயிலான விவரங்களை அளித்திருந்தார். ராயல்டி கொடுக்கும் பதிப்பாளர் என்பதே பெரிய விஷயம்.  அதிலும் அட்வான்ஸாக. வாழ்த்துக்கள் லஷ்மி. பிரிண்ட் ஆன் டிமாண்ட் குவாலிட்டி பற்றியும், எழுத்தாளர்களுடனான நெருக்கத்தைப் பற்றியும் நற்றிணை யுவனுடனான பேச்சு படு சுவாரஸ்யம். மனுஷ்ய புத்திரன் சாரு, விமலாதித்த மாமல்லன், மோகன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்களை வைத்துக் கொண்டு, “குமுதத்தில எழுதினா புக் பேர் வரது இல்லையா? “ என்று கேட்டார். இல்லை தலைவரே நான் வரும் போது நீங்க இல்லை என்றேன் அடக்கமாய். அப்ப குமுதத்துல எழுதினா நான் இருக்கும் போது வரதில்லையா? அவ்வளவு பெரிய எழுத்தாளர் ஆயிட்டீங்களா? என்று அத்துனை பேரையும் வைத்து என்னை ரேகிங் செய்தார். மனதளவில் சந்தோஷம் அம்மாம் பெரிய எழுத்தாளர்கள் மத்தியில் என்னையும் எழுத்தாளர் லிஸ்டில் சேர்த்துக் கொண்டதற்கு. இந்த வருடம் பெரியாரின் புத்தகம் தான் அதிகம் விற்பனையான புத்தகம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திருக்குறள் ஒவ்வொரு பள்ளி மாணவர் வீட்டிலும் ஒரு காப்பி இருக்கும் எத்தனை பேர் அதை படித்து பின்பற்றுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில மாதங்களுக்கு முன்  சன் நியூஸ் தொலைக்காட்சியில் உத்த பஞ்சாப் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து பேச அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் கொடுக்கும் அதிகாரிகள் பெரிய படமென்றால் ஒரு விதமான மனநிலையும், சிறிய படமென்றால் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மனநிலையுடன் தான் கையெழுத்திடுகிறார்கள். நான் இயக்கிய  தொட்டால் தொடரும் படத்திற்கு யூ சர்டிபிகேட் வாங்க அவர்கள் கொடுத்த சவுண்ட் மியூட்டெல்லாம் அபத்ததின் உச்சம். மியூட் போட்டா டபுள் மீனிங் ஆயிருங்க.. என்றேன்.. இல்லைங்க ஆபாசமா இருக்கு என்றார்கள். இன்றைக்குபோடட்டுமா?’ என்று பெண்களைப் பார்த்து கேட்பது யூ சர்டிபிக்கேட் வசனமாகி விட்டது. சமீபத்தில் மெட்ரோ எனும் தமிழ் படம் இதே போன்ற பல இன்னல்களுக்கு உள்ளாகி வெளியாக இருக்கிறது. செயின் பறிப்பை அடிப்படையாய் கொண்ட படம். இதை பார்த்தால் செயின் பறிக்க ஆரமித்துவிடுவார்கள் என்றெல்லாம் சொல்லி, சர்ட்டிபிக்கேட்டே மறுத்திருக்கிறார்கள். இன்று ட்ரிப்யூனல் சென்று சர்டிபிகேட் வாங்கி வெளியிட தயாராக இருக்கிறது. உத்த பஞ்சாப் படம் கோர்ட்டுக்கு சென்ற பிறகு தான் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு தெரியும் இவர்கள் சர்டிபிகேட் மட்டுமே கொடுக்க பணித்தவர்கள் கட் கொடுக்க அல்ல என்பதை. அதையெல்லாம் மீறி நமக்கு கட் கொடுக்கும் காட்சியை சொல்லி இதை விட மோசமான ஒரு காட்சியை கட் செய்யாமல் விட்டுவிட்டு யூ சர்டிபிகேட் வேறு கொடுத்தீர்களே என்று கேட்டால் அதெல்லாம் இங்க பேசக்கூடாது என்று ரூல் வேறு பேசுவார்கள். இது சமீபத்தில் ட்ரிப்யூனலுக்கு போய் யூ சர்டிபிகேட் வாங்கிய ‘விழித்திரு” படம் வரை தொடர்கிறது. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்களின் படங்களுக்கான விஷயமே வேறு. இதை கொஞ்சம் சரி பண்ணனும். போராடித்தான் ஆகணும். வேற வழியில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“LADIES ROOM”
வெப் சீரீஸ் எல்லாம் இன்னும் சைவமாகவே தமிழில் இருக்க, ஹிந்தியில் படு அடல்ட் கண்டெண்ட் எல்லாம் சும்மா சர்வ சாதரணமாய் எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். யாஷ் ராஜின் டிஜிட்டல் குழுமத்தில் வெளியாகியிருக்கும் “லேடீஸ் ரூம்” என்கிற ஆறு பார்ட் வெப் சீரீஸ் படு நான் வெஜ். அமெரிக்க செக்ஸ் அண்ட் த சிட்டி போல லேலீஸ் ரூமில் நடக்கும் பெரும்பாலான பேச்சுக்கள், செக்ஸ், ரிலேஷன் ஷிப், பச்சை பேச்சுக்கள், ப்ரெக்னென்சி, அபார்ஷன். வேலை. அது கொடுக்கும் டென்ஷன் என ராதிகா கன்னா, டிங்கோ இருவரும் பேசாத பேச்சுக்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் எதிலும் டபுள் மீனிங் எல்லாம் கிடையவே கிடையாது ரத்னா பாலி, நேகாவின் எழுத்தில் எல்லாமே நேரடி தான். அஷிமா சப்பரின் இயக்கம் படு தடாலடி. . நாங்களெல்லாம் கலாச்சாரம், பண்பாடு போன்ற டேஷ் டேஷை பாலோ செய்கிறவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டதேயில்லை என்று ஹிப்போக்கிரேட்டுகளாய் நடிப்பவர்கள் உட்பட பார்த்தால் உள்ளூர சிரித்து ரசிக்க கூடும். தீவிர கற்பு, கந்தாயம் பேசுகிறவர்கள் ரெண்டு பேஜ் தள்ளிப் போய் வேறொரு நல்ல சீரீஸ் பார்க்க கடவது. https://www.youtube.com/watch?v=HT5S-axdp9k

Apr 19, 2017

கொத்து பரோட்டா -2.0-20

கொத்து பரோட்டா 2.0-20
இணையத்தில் மக்கள் தங்கள் உரிமைக்காக பல பெட்டிஷன்களை இணைய மக்களிடம் மின்னஞ்சல் மூலம் கையெழுத்து வேட்டை நடத்தி, போராடி வெற்றிப் பெற்றதுண்டு. நிர்பயா, ஆன்லைன் டிக்கெட்டுக்கு கொள்ளை, ஆம்னி பஸ்கள் கட்டணம், என பல விஷயங்களுக்காக கையெழுத்து போராட்டம்  நடத்திக் கொண்டிருந்தாலும், சமீபத்தில் வந்த பெட்டிஷன் மனசை பாதிக்கவே செய்தது. கிட்டத்தட்ட 90 % உடல் ஊனமுற்ற இரண்டு பெண்களின் பாஸ்போர்ட்டுக்காக 75 வயதான பெற்றோர்களின் பெட்டிஷன். அவர்களின் பெண்களை வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் பொறுப்பேற்க தயாராய் இருக்கிறார்கள். இப்பெண்களுக்கான பாஸ்போர்ட் பெறுவதில்தான் சிக்கல். பாஸ்போர்ட் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் நேரிடையாய் போக வேண்டும் என்பது விதி. இவர்களோ முற்றிலும் ஊனமுற்றவர்கள்.பாஸ்போர்ட் அலுவலகமோ 100 கி.மீட்டருக்கு மேல். இம்மாதிரியான ஸ்பெஷல் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற வழிவகை செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை சுஷ்மா சுவராஜிடமும், சம்மந்தப்பட்ட அமைச்சகத்திலும் கோரிக்கை வைத்துள்ளனர். நிஜமாகவே இவர்களைப் போல் பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஊனமுற்றவர்களுக்காக அரசு பல வகைகளில் உதவ திட்டங்கள் தீட்டப்பட்டாலும், செயல்வடிவத்தில் பல வேலைக்காவதில்லை. அப்படியே அது செயல்படுத்தப்பட்டால், அதில் உள்ள சட்ட ஓட்டைகளை வைத்து அரசியல்வாதிகளும், மீடியேட்டர்களும் பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.  அரசு அலுவலகங்களில், பொது விநியோக இடங்களில் ஊனமுற்றவர்கள் வந்து போக வசதியாய் வழித்தடம் அமைத்திருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. எத்தனை இடங்களில் அதை செயல்படுத்தியிருக்கிறார்கள்?. ரேஷன், பேங்க், என சாதாரண மனிதன் செய்ய வேண்டிய அத்துனை வேலைகளும் உடல் ஊனமுற்றவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது. நம் நாட்டில் அவர்களுக்காக எத்தனை விஷயங்கள் சுலபமாக்கியிருக்கிறது அரசு?. எத்தனை உதவிகள் வீடு தேடி வரும் படியாய் செயல்படுத்த விழைந்திருக்கிறது?. பாஸ்போர்ட் போன்று பல விஷயங்களை அவர்களுக்கு எளிமையாக்க வேண்டிய கடமை அரசுக்கும், அவர்களின் பிரச்சனையை அரசுக்கு தெரிவிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை உணர்ந்து சுஷ்மா சுவராஜ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வீட்டிற்கே வந்து விண்ணப்பங்களை பெற்று பாஸ்போர்ட்டையும் கொடுத்துவிட்டார். இதை அனைவருக்குமான சட்டமாய் மாற்றினால் சிறப்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நரம்பு புடைக்க கத்தவில்லை
வன்முறை ஏதுமில்லை
குடித்து விட்டு கும்மாளமிடவில்லை
தவறு ஏதாவது நேர்ந்துவிட்டால் எங்கே தங்கள் குலத்துக்கே இழுக்கு வந்து போராட்டத்தை நீர்த்துவிடுமோ என்ற பயத்துடன் தன்னொழுக்கம் பயின்று, தன் உரிமை நிலைநாட்டிட போராடிய என் இளைஞர் கூட்டத்திற்கு வந்தனங்கள். இனி வரும் காலங்களில் எத்தனை லட்சம் பேரை தன் கட்சி மாநாட்டுக்கு கூட்டி கணக்கு சொன்னாலும் அது நீ கூட்டி வந்த கூட்டம். தானா சேர்ந்த கூட்டம் அது மாதிரி உனக்கு வருமா? என்ற கேள்வி அவர்களுக்குள்ளேயே எழாமல் இருக்காது. இன்றைய தலைவர்கள் எவரும் தங்களுக்கு தேவையில்லை என்று தவிர்த்த இளைஞர்களையும், மக்களையும் பார்த்து அரசியல் வாதிகள் பயந்து தான் போயிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தப் போராட்டத்தை அரசு தடுக்க வேண்டுமென நினைத்திருந்தால் முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். ஆனால் அவர்கள் அனுமதித்தார்கள். கொண்டாட்டமாய், ஒர் போராட்டத்தை ஆண், பெண் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாய் சென்று போராடுகிறவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு வர ஆவன செய்தார்கள். எத்தனை கூட்டமிருந்தாலும் பாதுகாப்பு இருக்கிறது என்பதை மீடியாவும் இணையமும் உறுதி செய்தது. எப்படி ஒர்  சீரிய முறையில் ஒர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதே வகையில் முடிவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்திற்கு மதிப்பிருக்காது. இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் தன் சமூகத்திற்காக, கலாச்சாரத்துக்காக மக்களே ஒன்றிணைந்த போராட்டம்.  ஆவணப்படுத்த வேண்டிய போராட்டம். அதை அரசு சட்டம் இயற்ற முடிவு செய்த அன்றே ஒத்துக் கொண்டு, கலைந்திருந்துவிட்டு, ஒரு வேளை சரியாக செயல்படுத்தப் படவில்லையானால் மீண்டும் போராட  வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த முடிவை யார் எடுப்பது என்ற குழப்பம் தான், அரசியல் கட்சிகளும், வன்முறையாளர்களும், ஆளும் அரசும், போலீஸும் பயன்படுத்த அனுமதித்தது. கூட்டத்தில் மீடியாவை கவர்வதற்காக பேசியவர்கள் எல்லாம் தலைவர்களாய் போன அவலம் ஏற்பட்டது. இதையெல்லாம் மீறி மக்களிடமும், போராட்டக்காரர்களிடமும் இருந்த பிடிவாததிற்கான காரணம்? அரசியல்வாதிகள் மீதிருந்த அவநம்பிக்கை. இதை அரசியல் கட்சிகளும், அரசும் உணர வேண்டிய நேரம். இன்று கலாச்சாரத்துக்காக, தன் இனத்துக்காக போராடியவர்கள் நிச்சயம் உங்களுக்கு எதிராகவும் போராட தயாராகி விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உருவாகித்தான் இருக்கிறது. அது அவர்களுக்கும் நல்லதல்ல. இந்த வன்முறை முடிவு அதைத்தான் தெரியப்படுத்துகிறது.
@@@@@@@@@@@@@@@@@@
Escorts
பிம்புகளும், மேடம்களும் சூழ் விலைமாதர் உலகை இண்டர்நெட் சுதந்திரமாக்கியிருக்கிறது. குடும்ப கஷ்டம், வயசுக்கு வந்த தங்கச்சி, கண் தெரியாத அப்பா, உடம்பு சரியில்லாத அம்மா போன்ற செண்டிமெண்ட் கதைகளைக் காரணம் சொல்லி, இதனால் தான் விபச்சாரத்தில் வீழ்ந்தேன் என்கிற உட்டாலக்கடி கதையெல்லாம் இல்லாமல் இரண்டு ப்ரிட்டிஷ் எக்ஸ்கார்டுகள் தங்கள் வாழ்க்கையை பப்பாரப்பா என்று கடை விரித்திருக்கிற டாக்குமெண்டரி. இரண்டு பேரும் இளம் பெண்கள். இண்டர்நெட் மூலம் தங்கள் நெட்வொர்க்கை பரப்பி, விபச்சாரம் செய்து சம்பாதிக்கிறவர்கள். இத்துனை சுலபமாய் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது என்று அடிக்கடி சொல்கிறார்கள். அவர்களுடய கஸ்டமர்களைப் பற்றியும், இத்தொழிலில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியும், தங்கள் பெற்றோர்கள், குடும்பத்தை பற்றியும் அளவளாவுகிறார்கள். நன்றாக சம்பாதித்த பின் குடும்பம் குட்டி என செட்டிலாக முடிவெடுத்திருப்பதைப் பற்றியும். அவர்களுடய பாய்ப்ரெண்டுகள், அவர்களுக்கு தெரிந்தே இத்தொழிலில் ஈடுபடுவதைப் பற்றியும் பேசுகிறார்கள். ஈஸியாய் பணம் சம்பாதிக்க இதை விட சிறந்த வழியில்லை என்கிறார்கள். அதில் ஒருத்தி எதிர்காலத்தில் நேரடியாய் எஸ்கார்ட் ஏஜென்ஸி ஒன்றை நான் வெப்சைட் மூலமாக உருவாக்கி தொழில் முனைவராவேன் என்கிறார். டாக்குமெண்டரி நெடுக டாப்லெஸ்சும், ஃபுல் நியூடிட்டியும் சகஜமாய் வந்து போகிறது. தங்களின் தொழில் நேர்மையைப் பற்றியும், தங்களுடய போதை பழக்கத்தைப் பற்றியும், வருகிற வாடிக்கையாளரின் பழக்க வழக்கம். அவர்களின் எதிர்பார்ப்பு. என விவரணையாய் போகிறது. என்ன தான் தங்களது தொழில், பணம் என விபச்சாரத்தை நியாயப்படும் விதமாய் இந்த பெண்களின், டாக்குமெண்டரியின் தொனியாய் தெரிந்தாலும், எதிர்காலத்தில் உங்களது குழந்தை இந்த தொழில் செய்ய அனுமதிப்பீர்களா? என்ற கேள்வி வரும் போது இரண்டு பேரிடமிருந்தும் வரும் பதில் “நோ”.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஷதமானம் பவதி
கிராமத்தில் குடும்பத் தலைவர், தலைவி மட்டும். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலிருக்க, கூடவே இருந்து பெரியவர்களுக்கு உதவியாய், ஊருக்கு நல்லவனாய், மண்ணை மதிப்பவனாய் ஹீரோ. பொங்கலுக்கோ, அல்லது ஊர் திருவிழாவிற்கோ மொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு கொண்டாட மாட்டோமா என்ற ஏக்கம். பிள்ளைகள் எல்லோரும் பிஸி. வெளிநாட்டிலிருந்து வரும் அத்தைப் பெண், முறைப் பையன் ஹீரோ. இது நம்ம வருஷம் 16 காலத்துக் கதை தான் என்றாலும் தெலுங்கில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நடிகர்கள் தங்களை பேமிலி ஆடியன்ஸ் ஆர்டிஸ்டாய் நிலை நிறுத்திக் கொள்ள இக்கதை பயன் பட்டிருக்கிறது. இந்த முறை நம்ம எங்கேயும் எப்போதும் சர்வானந்திற்கு. இதில் ஊர் பெருசான பிரகாஷ்ராஜும், ஜெயசுதாவும் பிள்ளைகளின் வரவிற்காக தவிக்கிறார்கள். முக்கியமாய் ஜெயசுதா.   தான் தன் மனைவியை டைவர்ஸ் செய்யப் போவதாய் எல்லா பிள்ளைகளுக்கும் மெயில் அனுப்புகிறார் பிரகாஷ்ராஜ். மனைவிக்கே தெரியாமல். எல்லோரும் பொங்கலுக்காக வருவது போல குடும்பமாய் பத்து நாட்களுக்கு முன்னமே வந்து பிரச்சனையை சரி செய்ய நினைக்கிறார்கள். தன் புருஷன் தன்னை டைவர்ஸ் செய்ய போகிற மேட்டர் தெரிந்ததும் ஜெயசுதா அழுத்தமாய் அவர் என்ன என்னை டைவர்ஸ் செய்யுறது நான் டைவர்ஸ் பண்றேன் என்று முறுக்கிக் கொள்ள, எப்படி சமாளிக்கிறார்கள் என்பது கதை. அனுபமா க்யூட்டாக இருக்கிறார். மிக்கி ஜே மேயரின் இசை, சர்வானந்தின் அழகான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ். சமீர் ரெட்டியின் பளீச் ஒளிப்பதிவு என ஒரு பேமிலி படத்துக்கான அத்துனை டெம்ப்ளேட்டுகளுடன் இருந்தாலும் ஏனோ நெருடவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

Apr 14, 2017

சாப்பாட்டுக்கடை - கும்குமப்பூ பிரியாணி. Saffron biriyani

நண்பர் ராஜவேல் உணவுகளின் காதலன். என்னுடய சாப்பாட்டுக்கடை பதிவுகளில் உள்ள அத்துனை கடைகளையும் தேடிச் சென்று சாப்பிட்டு விடுபவன். அவனிடமிருந்து ஒரு போன். “அண்ணே.. புதுசா ஒரு சின்ன புட் ஜாயிண்ட் ஆரம்பிச்சிருக்கேன். வந்து வாழ்த்தணும்” என்றான். என்னைப் போலவே சாப்பாட்டு பிரியனாயிருந்து பேலியோவுக்கு மாறியவன்.  அவன் ஒரு உணவு விடுதியை திறந்திருக்கிறான் எனும் போது ஆர்வம் அதிகமானது. பிரியாணி அதுவும் குங்குமப்பூவில் செய்தது என்றதும் மனசும் நாக்கும் கேட்கவில்லை.  நண்பருடன் உடன் ஆஜரானேன். ஒரு மட்டன் பிரியாணி, ஒரு சிக்கன், சிக்கன் 906, கரண்டி ஆம்லெட்,  கொஞ்சம் சாதம், ரசம்  என பேக்கேஜாய் அனுப்பியிருந்தான்.

பிரியாணி வாசனையும், குங்குமப்பூ வாசமும் சேர்ந்து மணத்தது. நல்ல நீட்டு நீட்டு பாஸ்மதி அரிசி. அதிக ஆயில் இல்லாமல். அதே நேரத்தில் தொண்டை அடைக்கும் ட்ரையாய் இல்லாமல், நல்ல தரமான மட்டன் பீஸ்களுடன், வழக்கத்தை விட கொஞ்சம் மசாலா அயிட்டங்கள் தூக்கலாக இருந்ததைத் தவிர குறையொன்றுமில்லை. உடன் கொடுக்கப்படும் கடலூர் சிக்கன் மல்லிக்  குழம்பு ஆஸம். சிக்கன் பிரியாணியில் மசாலாவின் அளவு சரியாகவேஇருந்தது. கொஞ்சம் காரம் குறைவாக சேம் குவாலிட்டியில். சிக்கன் பிரியாணி லெக்பீஸோடும்,  இரண்டு மக்காயா முட்டை மசாலா எனும் கரண்டி ஆம்லெட்  டேஸ்டோடும், கொஞ்சம் தக்காளி வெங்காய மிக்ஸுடன் ட்ரையாய், சாப்டாய். சூடாய் சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாய் இருந்தது. இதற்கும் கடலூர் சிக்கன் மல்லிக் குழம்பு செம்ம ஜோடி. பெரும்பாலான பிரியாணி கடைகளில் சிக்கன், மற்றும் மட்டன் என தனியாய் சமைப்பதில்லை. இல்லையேல் பெரிதாய் வித்யாசம் இருப்பதில்லை. கும்குமப்பூவில் ரெண்டுக்கும் ஆறு வித்யாசங்கள். உடன் சாப்பிட்ட நண்பர் சொல்லிச் சொல்லி மாய்ந்தார். கிரேவியும் ப்ரியாணியும் செம்ம.. என்று.

சென்னையில் மூலைக்கு பிரியாணி கடை திறப்பதற்கு முன் பிரியாணி சாப்பிட்டால் உடன் ஒரு கரண்டி சாதம் ரசம் தருவது நம்மூர் மரபு. பெருகி விட்ட செட்டிநாட்டுக்கார ஓட்டல்களினால் அது வழக்கொழிந்து போய்விட்ட நிலையில் தம்பி சிக்கனாகட்டும் மட்டனாகட்டும் ஒரு கப்பு சாதமும், ரசமும் அனுப்புகிறார். பேக்கேஜில். ரசம் அஹா ஓஹோ என்றில்லாவிட்டால் நன்றாகவே இருந்தது. 

சிக்கன் 906 என்று ஒரு அயிட்டம் புதியதாய் இருந்தது. சிக்கன் 65 போல ப்ரை செய்யப்பட்டு, மீண்டும் அதன் மேல் தக்காளி/மிளகாயில் அரைத்த பேஸ்டினால் மேரினேட் செய்யப்பட்டு, நம்மூர் டேஸ்டுமில்லாமல் சைனீஸாகவும் இல்லாமல் இருந்தது. புதிய ஒர் உணர்வை அளித்தது என்பதை மறுக்க முடியாது.  இரவில் நெய் இட்லியும், கடலூர் ஸ்டைல் கொத்ஸு என்று போட்டிருந்தார்கள்.  பின்பொரு நாள் ருசிக்க வேண்டும்.  வித்யாசமான நல்ல தரமான பிரியாணியை ருசிக்க 

Saffron Biriyani (குங்குமப்பூ பிரியாணி)
Near vadapalani temple axis bank ATM
Pillaiyar koil st, vadapalani
7550066366

Apr 8, 2017

கொத்து பரோட்டா-2.0- 19

கொத்து பரோட்டா -2.0 -19
Hot Girls Wanted
நெட்ப்ளிக்ஸ் லிஸ்டில் கண்ணில் பட்ட டாக்குமெண்டரி படத்தின் பெயர். போர்ன் இண்டஸ்ட்ரி என அழைக்கப்படும் நீலப்படத்தைப் பற்றிய படம் தான் இதும். முன்னரெல்லாம் அம்மாதிரியான படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 18 வயதான அமெச்சூர்கள் நிறைய பேர்கேர்ள் நெக்ஸ்ட் டோர்போலத் தெரியும் பெண்கள் நிறைய பேர், கொஞ்சம் கூட யோசிக்காமல் பணத்திற்காகவும், புகழுக்காகவும் நடிப்பதைப் பற்றியும், இம்மாதிரியான அமெச்சூர் போர்னோகிராபி வீடியோக்கள், அதன் பின் இயங்கும் குழுக்கள், என இந்த டாக்குமெண்டரியில் விஸ்தாரமாய் கவர் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கண்கள் முழுக்க, கனவுடன், நிறைய பணம், விமானப்பயணம், பெரிய ஹோட்டல்கள், அதீத செக்ஸ் பற்றிய எக்ஸைட்மெண்ட் என கண்கள் விரிய ஆயிரம் கதை பேசும் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் இருக்கும் பிரச்சனைகள், வலி, வேதனை, எல்லாவற்றையும் மீறி இதிலிருந்து வெளியே வர முடியாமல் தடுக்கும் பணம், அது கொடுக்கும் சுதந்திரம், என பேச ஆரம்பிக்கிறார்கள்.

தான் செய்யும் தொழில் வீட்டுக்கு தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் முட்டாள் தனம், பின்னாளில் அம்மாவுக்கு தெரிந்து அம்மாவுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் சான்ஸ்லெஸ் காட்சிகள். அப்பெண்ணுடய காதலன், அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள விழைவதும், அவளை இத்தொழிலிருந்து வெளிவர சொல்லி முடிவெடுக்கச் சொல்ல, அவள் மிகவும் தயங்கி மெசேஜ் அனுப்பும் காட்சி நிதர்சனம். இத்தொழிலில் இருக்கும் பெண்களுக்கு எத்தனை நாள் சர்வைவல் என்று இதன் ஏஜெண்ட்டிடம் பேசும் போது, மேக்ஸிமம் மூன்று மாதங்கள், இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகிறவளாயிருந்தாள் ஆறு மாதம். அதற்கு மேல் மிகவும் கஷ்டம் என்பான். ஆனால் இது அறியாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் அதை சொல்லுமிடம், அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் பேசும் காட்சிகள் எல்லாம் நெத்தியடி.  எங்கேயும் நெஞ்சை நக்கும் விஷயமாய் இல்லாமல் இன்றைய அமெரிக்க இளம் தலைமுறையினரிடம் செக்ஸை பணமாக்கும் ஆசையும், ஈஸி புகழும், டிவிட்டர் போன்ற ஷோஷியல் நெட்வொர்க்கின் பலம் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். க்ரீமி பீ, ப்ளோஜாப், த்ரீசம், பேசியல், அனல், டீப் த்ரோட் என ஆயிரம் வக்கிர முறைகள். அதனால் ஏற்படும் வலி எல்லாவற்றையும் மீறி, வீடியோ கொடுக்கும் ரீச்சும், புகழும் சிறிது காலமே என்றாலும் இளவயதில் அவர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாய் கருதுவதும். பெருமை பேசுவதும் கூட தங்களது வீக்னெஸென்று புரிந்தே உழல்வது.  மார்க்கெட்டில் ஒருவனைப் பார்த்தேன். மிகவும் குள்ளமாய் இருந்தான் அவன் என்னிடம் வந்துநான் உங்களுடய போர்ன் படத்தின் ரசிகன்” என்று சொல்லும் போது சந்தோஷமாய் இருந்தது.  என்னை படுக்கைக்கு அழைத்தான். அவன் உயரத்திற்கும், அவனுடயலுல்லாவுக்கும் சம்பந்தமில்லை. முழங்கை வரை இருந்தது என்று எக்ஸைட் ஆகி பேசும் வசனங்கள், ஷூட் முடிந்த பின் ஒரே நாளில் அதிகப்படியான செக்ஸ் வைத்துக் கொண்டதன் காரணமாய் வஜைனாவில் ஒரு விதமான மாய்ஸ்சர் ஏற்பட்டு அதற்கான மெடிக்கல் ட்ரீட்மெண்ட், கடைசியில் வேறொரு பெண் 300 டாலருக்கு ஒரு ப்ளோஜாய் ஷூட்டில் போய் கலந்து கொண்டு விட்டு, அது வயலண்ட் ப்ளோஜாய் ஷூட்டாய் போய்விட, 15 நிமிடங்கள் ஷூட் செய்தாகிவிட்டது பின்பு நிறுத்துவது தொழில் தர்மம் கிடையாது. என்று சொல்லி அழவும் முடியாமல், பேசும் விதம் என  கிட்டத்தட்ட பயோகிராபிக்கல் டாகுமெண்டரிதான். டோரண்டிலோ, அல்லது நெட்பிளிக்ஸிலோ பார்த்துவிடுங்கள். சண்டேன் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு பாராட்டுப் பெற்ற படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பர்ஷப்ஷன் கதைகள்
பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த ஜோடி மிக இளமையாய் இருந்தார்கள். இருவர் முகத்திலும் கொஞ்சம் கலவரம் தெரிந்தது. பையன் சுமாராகவும், பெண் அழகியாகவும் என் கண்களுக்கு தெரிந்தது நான் ஆணாக இருந்ததால் இருக்கலாம். டேபிளின் மேல் இருந்த மெனு கார்ட்டை எடுத்து திரும்பத் திரும்ப படித்துக் கொண்டேயிருந்தார்கள்.

“நிச்சயம் வீட்டை விட்டு ஓடி வந்தவங்களா இருப்பாங்க”
என்றேன் நண்பரிடம்.

“இருக்கலாம். அந்தப் பொண்ணு அவனை பாக்குற பார்வையிலேயே ஒரு விதமான எரிச்சல் தெரியுது”
“சாய்ரட் படத்துல இப்படித்தான் அந்த ஹீரோயின் ஏன் இவனோட ஓடி வந்தோம்னு சண்டை போடுவா?”

கடைக்காரன் எங்களிடம் ஆர்டர் கேட்டுவிட்டு போக, அவனை அழைத்து அரைகுறை ஆங்கிலத்தில் மெனுவில் உள்ள இன்னொரு அயிட்டத்தைக் காட்டி ஏதோ கேட்டான். அவன் பெரிதாய் மதிக்காம்ல பதில் சொல்லிவிட்டு போனான். பெண் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையை தாங்க முடியாமல் சட்டென அவளைப் பார்த்துவிட்டு, மீண்டும் சீரியஸாய் மெனு கார்டையே பார்க்க ஆரம்பித்தான்.
“பையன் கூட்டிட்டு வந்துட்டான் இப்ப கையில காசில்ல. எத வாங்குறதுன்னு யோசனையாவும் இருக்கு. பொண்ணு ப்ரெஷர்லதான் கூட்டிட்டு வந்துட்டான் தெரியுது.”
“எப்படி சொல்றீங்க ?

“அவ கைய பாருங்க. நிறைய வெட்டுத் தழும்பு”

அவள் போட்டிருந்த புல் ஹேண்ட் டாப்ஸ் கொஞ்சம் உள்ளே இழுத்திருக்க, கையில் இருந்த வெட்டுத் தழும்புகள் தெரிந்தது.
”எதை நம்பி இவளுங்க ஓடி வர்றாங்கன்னும் தெரியலை. வந்துட்டு  இவ கஷ்டப்படுறது மட்டுமில்லாம அவனையும் கஷ்டப்படுத்தி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பையன் பார்த்துக் கொண்டிருந்த மெனு கார்டை கோபமாய் பிடுங்கி தன் பால் வைத்துக் கொண்டு, கொங்கனி போன்ற பாஷையில் பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சில் கோபம் இருந்தது.
“அவன் கிட்ட காசு இல்லை. இருந்தாலும் அதை காட்டாமல் அவளுக்கு பிடிச்சதா வாங்கி கொடுக்க ட்ரை பண்ணுறான். ரெண்டு நாள் தாங்காது. காதலோ, காமமோ, காசு இல்லாட்டி ஸஸ்டெயின் ஆகாது” என்றேன்.
அவர்களை பார்க்க எங்களுக்கு பாவமாய்த்தான் இருந்தது. அதற்குள் எங்களுக்கான பில் வந்துவிட, காசு கொடுத்துவிட்டு, அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற ஆர்வத்தில் கேஷுவலாய் உட்கார்ந்திருப்பதை போல காத்திருந்தோம். சற்று நேரம் போனது. அவர்கள் ஏதும் முடிவெடுத்ததாய் தெரியவில்லை. பெண் இன்னமும் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அவன் மெனுகார்டையே பார்த்துக் கொண்டிருந்தான். கிளம்பி, கடை வாசலில் கார் ஏறாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். கடைக்காரன் கையில் ஒரு பார்சலோடு வந்து அவர்களிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு  போக, இருவரும் கை கோர்த்துக் கொண்டு சிரித்தபடி கடையிலிருந்து வெளியேறினார்கள். ஙே…
@@@@@@@@@@@@@@@@@@@@