Thottal Thodarum

Jul 27, 2017

கொத்து பரோட்டா -2.0-36

கொத்து பரோட்டா 2.0-36
The Affair -குறும்படம்.
தமிழில் தற்காலத்தில் வரும் பெரும்பாலான குறும்படங்களில் ஒரு கேரக்டரைக்  காட்டி, இவர் பெயர் ராமசாமி. செம்ம காமெடியா பேசுவார்னு அறிமுகபடுத்தி ஆரம்பிப்பதுதான் லேட்டஸ்ட். வழக்கம். காமெடியா பேசுவார்னு முன்னமே சொல்லிட்டோமேன்கிற உரிமையில்,  பெரும்பாலான குறும்படங்கள், ப்ளாக், ப்ளூ, வொயிட் என பல கலர்களில் காமெடியாய் நினைத்து கொடுக்கும் பல விஷயங்கள் சோகமாய் முடிவதுண்டு. உறவுகள் பற்றியோ, அதன் முரண்கள் பற்றியோ பேசும் படங்கள் மிகக்குறைவு. பாஸ்ட் கட்டில்யே படம் எடுத்து பழகி, உணர்வுகளை வெளிப்படுத்த சில மாண்டேஜ் ஷாட்களோ, நிறுத்தி நிதானமாய் நடிக்க வாய்பிருக்கும் காட்சிகளோ வைத்தால் அது லேக் என்று முடிவாகி, சட்சட்டென எகிறும் எடிட் தான் சாஸ்வதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படம் விதிவிலக்கு.. உடல்நலமில்லாத படுத்த படுக்கையான மனைவி, காதல் கல்யாணம் செய்ததால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட மகன், திருமணமான மகள். மகனின் மனைவி மூலமாய் தங்கள் அப்பாவிற்கு வேறு ஒரு சிறு வயது பெண்ணுடன் தொடர்பு என்று அறிகிறான் மகன். மகள் குமுறுகிறாள். இனி அம்மா அப்பாவோடு இருக்கக்கூடாது என்று தங்களுடன் அழைக்கிறார்கள் . அப்பாவோ, இவர்கள் சொல்வது உண்மைதான். எனக்கு ஒரு உதவி செய், நீ இன்னும் ஒரு மாதம் தான் உயிரோடு இருப்பாய் நீ இறந்த பிறகு என்னுடன் இருக்கும் பெண்ணிற்கு உன் கண்களை தானம் செய்ய கையெழுத்து இடு” என்கிறார். குடும்பம் கொதிக்கிறது. பின்பு என்ன ஆனது என்பது தான் கதை. விவிங்ஸ்டன், அனுபமா குமார், போன்ற அனுபவஸ்தர்களுடன் புதியவர்களும் அருமையாய் நடித்திருக்கும் படம். நடிகர்களை கையாண்டிருக்கிற விதமாகட்டும், அப்பாவிற்கும் மகளுக்குமான வார்த்தை தடித்த உரையாடல்கள் ஆகட்டும், செம்ம மெச்சூரிட்டியாய் கையாட்டிருக்கிறார் இயக்குனர் சூர்யா நாராயணன். வாழ்த்துக்கள் . https://www.youtube.com/watch?v=C_mVB6ng5lU
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிவி சேனல்களுக்கு இலவசமாய் பாடல்களோ, காட்சிகளோ கொடுக்காதீர்கள் என்று புதிய தயாரிப்பாளர் சங்கம் கேட்டு கொண்டதும் பல குட்டிக் குட்டி டிவி சேனல்கள் எல்லாம் ஆடித்தான் போய்விட்டது.  அதற்கு இணையத்தில் ஆதரவு தெரிவித்திருந்தேன். சில பேருக்கு கோபம் வந்து பர்சனலாய் பேச ஆரம்பித்தார்கள். அதற்கு காரணமிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் சேனல்கள் அதுவும் சாட்டிலைட் சேனல்கள் என்று எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட நூறு சேனல்கள் இருக்கும். இதில் லோக்கல் கேபிள் சேனல்களை கணக்கெடுத்தால் இருநூறுக்கும் மேலிருக்கும். முன்பெல்லாம் டிவி சேனல் ஆரம்பிப்பது மிகவும் கடினம். ஆனால் இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியில் ஒரு கோடி இருந்தால் டிவி சேனல் ஆரம்பித்துவிடலாம். அப்படி ஆரம்பிக்கப்பட்ட சேனல் ஊரில் உள்ள எல்லா கேபிள் மற்றும் டி.டி.எச் நெட்வொர்க்குகளில் தெரிவதற்குத்தான் பல கோடிகள் வேண்டும். டிவி சேனல் ஆரம்பித்தாயிற்று, மாதா மாதம் சேனலுக்கான நிகழ்ச்சிகளுக்கு எத்தனை செலவு செய்ய வேண்டும்? அதற்குரிய பட்ஜெட்.? போட்டிச் சேனலுக்கு ஈடான நிகழ்வுகள்? என்றெல்லாம் யோசித்தீர்களானால் நியாயம் தான். ஆனால் நிஜத்தில் பல சேனல்களின் மாதாந்திர ப்ரோக்கிராமிங் செலவு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? 50 ஆயிரத்திலிருந்து 3 லட்சம் வரை தான். பின் எப்படித்தான் இவர்கள் பிழைப்பு ஓட்டுகிறார்கள்?. என்ற யோசனை வரத்தான் செய்யும். சேனல் தொடங்க ஆகும் செலவைப் விடுங்கள். அதான் ஆரம்பித்தாயிற்றே?. ஆரம்பித்த உடன் மக்களுக்கு சேனல் சென்றடைய வேண்டும். அதற்குரிய ஒரே வழி அரசு கேபிள் நெட்வொர்க்தான். சென்னையைத் தவிர தமிழகமெங்கும் நெட்வொர்க் நடந்தும் அரசு கேபிளில் கேரேஜ் பீஸ் இல்லை என்று சட்டமிருந்தாலும், ஆரம்பிக்கப்பட்ட சேனலின் ”கொடுக்கும்” வசதியை வைத்து முப்பது மாவட்டமா? அல்லது பத்து மாவட்டமா? என்று முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் முன்பிருந்த ப்ரதர்ஸ் காலத்தில் வாய்ப்பே இல்லை..

நிகழ்ச்சிக்காக பெரியதாய் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியது இல்லை. இருக்கவே இருக்கிறார்கள் நம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.  படத்தின் ஒவ்வொரு நிலையிலும், டிவி சேனல் கவரேஜ் மூலம் கிடைக்கும் புட்டேஜுகள். தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் பேட்டிகள். அதைவிட முக்கியமான விஷயம் சுமார் 20 நிமிடங்களுக்கு, படத்திலிருந்து காமெடி, சீரியஸ், ஆக்‌ஷன் காட்சிகள், முழு பாடல்கள் என எல்லாவற்றையும் விளம்பரத்துக்காக இலவசமாய் அளிக்கிறேன் என்று லெட்டர் பேடில் கையெழுத்திட்டு, பென் ட்ரைவ், டிவிடி, டிவி டேப் என டிவி சேனலின் ஒளிபரப்பு தரத்திற்கு ஏற்ப செலவு செய்து, இலவசமாய் அளிக்கிறார்கள். ஆறிலிருந்து எட்டு மணி நேர நிகழ்ச்சிக்கு புட்டேஜ் தயார்.  பத்துக்கு பத்து இடத்தில் சின்ன ப்ளூ மேட் ஸ்டூடியோ போட்டுவிட்டு, சல்லீசாய் கிடைக்கும் ஆர்வகுட்டி ஆணையோ, முகம் முழுவதும் லிப்ஸ்டிக் தடவிய ஒல்லிப்பிச்சான் பெண்ணையோ தெரிவு செய்து, ஒரு மணி நேர பாடல் காட்சிகள் லைவ், பின்பு காமெடி காட்சிகள் என வரிசைக்கட்டி போட்டுவிட்டால் ப்ரோக்ராமிங் ஓவர். இதற்காக இவர்கள் பெரும் செலவு செய்வது ப்ளூ மேட் ஸ்டூடியோவுக்கான செட்டப்பும், ஆங்கருக்கு கொடுக்கும் சுண்டல் பணமும் தான். எப்படியும் சேனலுக்கு என்று ஒர் ஆஸ்தான கேமராமேன், எடிட்டர், வரைகலை ஆள், லைட் எல்லாம் முதல் இன்வெஸ்ட்மெண்ட்டில் வந்துவிடும்.

கொஞ்சம் கொஞ்சமாய் சினிமா புட்டேஜுகளை காட்டி, நானும் ரவுடி தான் எனும் ரேஞ்சுக்கு நாங்களும் சேனல் தான் என்று காட்டியாகிவிட்டது. அடுத்ததாய் ஆரம்பிப்பது தான் இவர்களுக்கான வருமானம். வாதம்,பித்தம், நரம்பு  தளர்ச்சி, ஸ்வப்ன ஸ்கலிதம், குழந்தையின்மை போன்றவைகளுக்கான சித்த வைத்தியம், ஜோசியம், ராசிக்கல், கஜகாமினி உற்சாக எழுச்சி கேப்ஸூயூல்ஸ், தற்போதைய மார்கெட் நிலவரம் கலவரமாய் இருக்கும் ரியல் எஸ்டேட், டேபிள் மேட் போன்ற வசீகர சாதனங்கள்,  என அரை மணி நேர ஸ்லாட்டை ஆயிரத்தில் ஆரம்பித்து விற்க ஆரம்பிப்பார்கள். ப்ரைம் டைமுக்கு இருக்கவே இருக்கு சினிமா ஓசி புட்டேஜ். மீதி நேரத்திற்கு மேற்ச் சொன்ன விளம்பரதாரர் நிகழ்ச்சிகள். இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எம்மாதிரியான வரவேற்பு இருக்கும் என்று கேட்பீர்கள். பல கோடி ரூபாய் வியாபாரம் கொண்ட சந்தையிது. எப்படி இன்றைக்கும் இருட்டு திருவல்லிக்கேணி லாட்ஜுகளை ஆக்கிரமிக்கும் சித்த வைத்திய சிகாமணிகள் இன்றைக்கும் குறைவில்லாமல் இருக்க எப்படி மார்கெட் இல்லாது போகும். இப்படி ஆயிரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரை மணி நேர ஸ்லாட்  தற்போது ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரை, ப்ரைம் டைம் 6-10 தவிர மீதி நேரங்களை அரை மணி நேரங்களாய் கணக்கிட்டு மேற்ச் சொன்ன தொகையை போட்டு கணக்கிட்டு பாருங்கள் அவர்களுடய வருமானம் எவ்வளவு என்று. எனக்கு தெரிந்து மொத்தம் நான்கைந்து பேரை மட்டுமே வைத்துக் கொண்டு பல வருடங்களாய் சேனல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். கிட்டத்தட்ட குடிசைத் தொழில் போல. கொஞ்சம் வியாபாரம் ஆக, ஆக, பிறிதொரு நன்னாளில் வளரும் அரசியல் கட்சித் தலைவரின் அன் அபீஷியல் சேனலாய் கன்வர்ட் ஆனவர்களும் உண்டு.  அந்த அந்தஸ்தை வைத்து ஊர் பக்கம் தெரிந்து கொண்டிருந்த சேனலை மெல்ல சென்னையில் உள்ள நெட்வொர்க்குகளில் தெரிய வைக்க ஆரம்பிக்க முடியும். 

இப்படி புட்டேஜுக்கோ, அல்லது நிகழ்ச்சி தயாரிப்புக்கோ கொஞ்சம் கூட மெனக்கெடாத சேனல்களுக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சமாய் நிகழ்ச்சிக்களின் தரத்தை உயர்த்தி, பகாசூரர்களிடையே நேர்மையாய் தொழில் செய்யும் சேனல்களும் உண்டு என்றாலும், மற்றவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை மக்களுக்கு காட்ட பணம் வாங்கும் நிறுவனங்கள் தங்களை சேனலாய் நிறுவ உதவும் தயாரிப்பாளர்களின் புட்டேஜுக்கு காசு கொடுத்தால் என்ன குறைந்துவிடுவார்கள்.?. எப்படியும் இவர்களின் ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதில்லை. பார்க்காத சேனலுக்கு எதற்கு வீண் விளம்பரத்திற்காக இலவச புட்டேஜ்? அப்படி விளம்பரம் கொடுப்பதால் தயாரிப்பாளருக்கு என்ன பிரயோஜனம்?. அடிமாட்டு ரேட்டுக்காகவாவது சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குவார்கள் என்று பார்த்தால் அதுவுமில்லை. அப்படியிருக்க எதற்கு இலவச புட்டேஜ். நூற்றுக்கு மேற்பட்ட சேனல்கள் இருக்க, சிறு முதலீட்டு படத்திற்கு குறைந்த பட்சம்   25 ஆயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நூறு சாட்டிலைட் சேனல்கள் இருக்கும் மார்கெட்டில் எவ்வளவு ரூபாய் வருமானம் வரும். இதில் லோக்கல் கேபிள் சேனல்களின் வாழ்வாதாரமே சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறது.

அரசு கேபிள் காலத்திற்கு முன்  தனியார் நெட்வொர்க்குகள் இருந்தது. அதில் லோக்கல் சேனல் நடத்துபவர்கள் படம் வெளியான  அடுத்த நாளே புதிய திரைப்படங்களின் திருட்டு விசிடியை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். பின்பு லோக்கல் தியேட்டர்களின் ப்ரெஷர் தாங்காமல் தியேட்டர்களிலிருந்து படம் எடுக்கப்பட்டவுடன் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். மக்களும் எப்படியும் படம் எடுத்தவுடனே போட்டுருவான் கேபிள்காரன் என்று காத்திருக்க ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது நடப்பது அரசு கேபிள். இதில் லோக்கல் கேபிள் நடத்துவதற்கு தனியே அரசுக்கு லைசென்ஸ் தொகை கட்டித்தான் நடத்த வேண்டும். அப்பிடியிருக்கும் போது அதில் ஒளிபரப்பாகும் அத்துனை சினிமா புட்டேஜுகளும், படங்களும் உரிமை இல்லாமல் ஒளிபரப்பப்படுவதே.. அரசு சார்ந்த நிறுவனத்தில் இதை அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?. பைரஸியை தடுக்க தனிப்படையெல்லாம் ஏற்பாடு செய்வதற்கு முன் இவர்களது நெட்வொர்க்கில் உரிமம் இல்லாது படம் போடுவதை தடுக்கலாம் இல்லையா?.


இப்படி பல பேருக்கு வாழ்வாதாரமாய் விளங்கும் சினிமா, அந்த சினிமாவை வைத்து விளம்பரம் மூலம் சம்பாதிக்க ஏதுவாக இருக்கும் சினிமாவை தயாரிக்கும் தயாரிப்பாளர் மட்டும் இலவசமாய் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?. லோக்கல் சேனல்களிலும் சினிமாக்களுக்கான விளம்பரம் வெளிவர ஆரம்பித்திருக்கிறது இலவசமாய் புட்டேஜ், பைரஸி டிவிடி மூலம் சேனல் நடத்து லோக்கல் கேபிள் நெட்வொர்க்குகள் தொழில் தர்மத்திற்காகவாவது இலவசமாய் விளம்பரம் செய்கிறார்களா? என்றால் இல்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் விளம்பரம் போடுகிறார்கள். இப்படி எல்லாருடய உழைப்புக்கும், தொழிலுக்கும், நேரத்திற்கும், பணத்திற்கும் மதிப்பிருக்கும் போது, பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளரின் உழைப்பிற்கும், பணத்திற்கும் உரிமைக்கும் மதிப்பு கொடுத்து வாங்கச் சொல்வதில் தவறென்ன இருக்கிறது?. 

Jul 19, 2017

கொத்து பரோட்டா 2.0-35

டாஸ்மாக் சந்திப்புகள்
இரவு எட்டு மணியிருக்கும். எதிரே வரும் ஆள் தெரியக்கூடிய வெளிச்சம் ரோட்டில் இருந்தது. கால் டாக்ஸிக்காக காத்திருந்தேன். தாகமாய் இருக்க, எதிர்பக்கம் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று மோர் ஒன்றை குடித்துவிட்டு, மீண்டும் என் இடத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எனக்கு நேர் எதிரே கரு கும்மென்ற ஒருவர். என் மேல் மோதி விடுவது போல வந்து நான் போகவா.. நீ போறியா என்பது போல கீழ் பார்வை பார்த்தார். மூச்சில் டாஸ்மாக் மணத்தது. நான் கொஞ்சம் வழி விட்டு, ”போங்கண்ணே..” என்றேன். ”என்ன போங்கண்ணே… ஒழுங்கா ரோட்டுல நடக்கக்கூட தெரியாதா?’ என்றவர் கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து, ”ஒழுங்கு மரியாதையா போ.” என்றார். காண்டாகிப் போன நான் “எல்லாம் எனக்கு தெரியும் போய்யா” என்றேன். வேகமாய் வருவதாய் நினைத்து, இரண்டடியை இடதும் வலதுமாய் நடந்து தேவர் மகன் நாசர் போல என் முகத்துக்கு அருகில் அவர் முகத்தை வைத்து “யாரைப் பார்த்து போய்யாண்ணே?’.த்தா.. கொன்ருவேன்”.  எனக்கு அவரின் மூச்சும் பேச்சும் அசூசையை வரவழைக்க, முகத்தை அந்த பக்கமாய் திருப்பிவிட்டு, “ரொம்ப நாறுதுன்ணே கிளம்புங்க” என்றேன். விருட்டென திரும்பவும் என் முகத்துக்கருகே வர நினைத்து ஓவராய் திரும்பி விட, போர்ஸ் அதிகமாகி, இடப்புறமாய் ஒரு திருகு திருகி, மீண்டும் ஒர் நிலைக்கு வருவதற்குள்  நான் பத்தடி நடந்துவிட்டேன். “என்னைப் பார்த்தா போய்யாண்ணே.. நான் யாருன்னு தெரியாது.” “சரிண்ணே போண்ணே..” என்றதும் ஏதுவும் பதில் சொல்ல முடியாமல வார்த்தைகளுக்கு போராடி, “போடா கண்ணாடி” என்றார் தன் கண்ணாடியை சரிப் படுத்திக் கொண்டே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Black Mirror – NoseDive
லைக்ஸும், ரீட்வீட்டும் தான் அங்கீகாரமாக கருதும் இளைஞர்களின் காலமிது. இந்த அங்கீகாரத்துக்காக, அபாயகரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதிலிருந்து பல வேலைகள் செய்து, லைக் வாங்கி வாழ்ந்தவரும் உண்டு, லைக்குக்காக செத்தவரும் உண்டு. இந்த மேனியா தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் இந்த ”நோஸ் டைவ்” படத்தில் வருவது போல் தான் ஆகும். மற்றவர்கள் உங்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை தங்களது மொபைல் போனிலிருந்து உங்களுக்கு ஸ்டார் கொடுப்பார்கள். நான்குக்கு மேல் ஸ்டார் வாங்கியவர்கள் தங்களது ஸ்டார் ஸ்டேடஸை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டும். மற்றவர் உங்களுக்கு கொடுக்கும்  ஸ்டார் ரேட்டிங் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் எனும் போது அதை பெறுவதற்கான பிரயத்தனங்களுக்காக நாம் நாமாக இல்லாமல் நடிக்க ஆரம்பிக்கிறோம். இந்த கதையின் நாயகி லையிஸ் தான் எப்படியாவது ஐந்து ஸ்டார் வாங்கி எலைட் ஆனவாளாய் ஆகிவிட வேண்டுமென்று அலைபவள். அவளுடய சிறு வயது தோழியின் திருமணத்திற்கு அவளை தோழியாய் அழைக்கிறாள். அந்த திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் நான்கு அல்லது அதற்கு மேல் ஸ்டார் ரேட்டிங் எடுத்தவர்கள் தான் என்கிறாள். தன் தோழியின் திருமணத்திற்கு தோழியாய் சென்று மேலும் ஸ்டார்களை பெற்று புகழ் பெற நினைக்கிறால் லையிஸ். ஆனால் அவள் திருமணத்திற்கு கிளம்ப ஆரம்பித்த்திலிருந்து பல பிரச்சனைகள். ஒன்றன்பின் ஒன்றாய். அந்த ப்ரஷரை தாங்க முடியாமல் அவளின் ஒரிஜினல் குணம் வெளிவர, அவளது ஸ்டார் ரேட்டிங் குறைகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு தோழியின் திருமணத்தை அடைகிறாள். ஆனால் அவளின் ரேட்டிங் ஒன்று வந்துவிட, தோழி தயவு செய்து வராதே.. என் மானம் மரியாதை போய்விடுமென சொல்ல, சுவர் ஏறி குதிட்து  செல்கிறாள் பின் என்ன ஆனது என்பதுதான் கதை. படம் நெடுக ப்ளாக் ஹூயுமரும், சர்காஸமுமாய் கலந்து  கட்டி அடித்து ஆடியிருக்கிறார்கள். செம்ம வீஷுவல்ஸ். ஸ்டார் என்பது வாழ்க்கையல்ல என்று சொல்லும் பெண் ட்ரக் ட்ரைவர் பாத்திரம் ஆசம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மே30 ஆம் தேதி முதல்  தமிழ் சினிமா வழக்கம் போல் இயங்குமா? என்கிற கேள்வி  சினிமா சம்பந்தப்பட்டவர்கள் முதல் சாதாரண ரசிகன்  வரை  எழுந்து கொண்டேயிருக்கிறது. மே  கடைசி வாரத்தில் படம் ரிலீஸ் செய்தால் அடுத்த வாரம் தியேட்டர்கள் இல்லாத பட்சத்தில் நஷ்டமடைவோமே? நல்ல காலத்திலேயே தியேட்டர் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரிலீஸே செய்யாவிட்டால் வட்டி யார் கட்டுவது என்பது போன்ற கேள்விகள் தயாரிப்பாளர்கள் மத்தியில் என்றால், ஓடுகிற படங்களை என்ன செய்ய? தியேட்டருக்கான இன்வெஸ்ட்மெண்ட், சம்பளம், வேலை வாய்ப்புகள், மற்ற மொழி படங்களின் நிலை என இன்னொரு பக்கமிருக்க, ரிலீஸுக்கு தயாராய் இருக்கும் படங்கள் என்றில்லாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பெரிய படத்திலிருந்து சின்ன படம் நிறுத்தப்பட வேண்டியிருந்தால் அதனால் ஆகப் போகும் களேபரங்கள் என இன்னொரு பக்கம், இந்த பாகுபலியின் பேய் ஓட்டத்தினால்  மற்ற பெரிய படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.. எல்லாவற்றிக்கும் காரணம் பைரஸி, டிக்கெட் விலை, ஜி.எஸ்.டி டாக்ஸ் விலக்கு என பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் முன் வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. கோடை விடுமுறையை முன் வைத்து தங்கள் பெரிய படங்களை வெளியிட தயாராக இருந்த பல படங்கள் காலவரையற்று தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில்  இந்த வேலை நிறுத்தம் சரிதானா? என்ற கேள்வியும் பல தயாரிப்பாளர்களிடம் எழுந்திருக்கிறது. டிக்கெட் விலையேற்றம் குறித்த ஹைகோர்ட் தீர்ப்பை விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதால் நிச்சயம் திரையரங்கு உரிமையாளர்களில் பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்று சந்தேகமே. வரிவிலக்கு என்ற ஒன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது இல்லாது போகும். அப்படியிருக்க, பைரஸிக்காக தனி உயர் அதிகாரி தலைமையில் தமிழகம் முழுவதும் ஒர் குழு அமைக்க வேண்டுமெனில் அதற்குரிய  செலவு என்று ஒன்றிருக்கிறது. இத்தனை நாட்களாய் கொடுக்கப்படாத திரைப்பட மானியங்கள் கொடுக்கப்பட அரசின் நிதி நிலை எப்படி இருக்கிறதோ?  தமிழில் பெயர் வைத்தால், யு சர்டிபிகேட் வாங்கி அரசின் வரி விலக்கு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டால் வரியே இல்லாமல் வருமானம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு போகும் என்கிற நிலையில்  ஜி.எஸ்.டி அமலாகும் போது, அது வருமானமாக மாறும்.  பெரும்பாலான படங்களின் தோல்வி, தியேட்டர் வருமானம் போதவில்லை எனும் போதே எங்கே பார்த்தாலும் நூறு கோடி, இருநூறு கோடி என அறிவித்துக் கொண்டிருப்பதை பார்த்து  “காசே வரல எல்லாமே தோல்வி எனும் போது இந்த குறைந்த அனுமதித் தொகையில் இத்தனை கோடி எப்படி வசூல் ஆனது என்று சொல்கிறார்கள்? என்று கேட்கின்றனர்.  வரி விலக்குக்காக தயாரிப்பாளர்களிடமிருந்து தனியே வருமானம் பார்த்ததும் இந்த ஜி/எஸ்.டியால் காலியாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவினால் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வருமானம் இல்லை எனும் போது அரசு எப்படி இவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
C.I.A (Commraade In America)
இந்தியாவெங்கும் பாகுபலியின் வெறி கொண்ட ஓட்டம் அத்தனை மொழிகளீலும் தம் தம் படங்களை வெளியிட யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மானின் இந்த சி.ஐ.ஏவின் வெளியீடு ஒர் புரட்சிதான். பலேவில் ஒர் தீவிர கம்யூனிஸ்ட் தொண்டர் துல்கர். அவருடய அப்பா மலையாள பட வழக்கம் போல கேரள காங்கிரஸ் ஆள். துல்கருக்கும் கார்த்திகாவுக்கும் காதல் அரும்ப, ஒர் கட்டத்தில் கார்த்திகாவின் விட்டிற்கு தெரிந்து அவரை அமெரிக்காவுக்கு திரும்ப அனுப்பிவிடுகிறார். அவளது மாமா.  எப்படியாவது வந்து என்னை அழைத்துக் கொண்டு போ என்று கார்திகா அங்கிருந்து அழ, பாஸ்போர்ட் கூட இல்லாத துல்கர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. பாஸ்போர்ட் வாங்குவதில் ஆரம்பித்து, காதலுக்காக, மெக்ஸிக்கோ வழியாய் இல்லீகலாய் அமெரிக்காவில் நுழைய முற்படுகிறார். அவர் அமெரிக்கா நுழைந்தாரா? காதலை வென்றாரா? என்பது மீதிக் கதை. முதல் பாதி முழுவதும், உள்ளூரிலேயே காங்கிரஸையும், கம்யூனிஸ்டையும் கிண்டலடித்து விளையாடுகிறார்கள். இம்மாதிரியான விஷயங்கள் ஆரம்ப காலத்தில் மலையாள படங்கள் பார்க்கும் போது அட என ஆச்சர்யபடுத்தியவைகள். தற்போது க்ளீஷேவாகிக் கொண்டிருக்கிறது.கொஞ்சம் ஆயாசமாகக்கூட இருக்கிறது. இரண்டாம் பாதியில் தமிழ் பேசும் டாக்சி ட்ரைவர். அதுவும் இலங்கை தமிழர். வீட்டில் பிரபாகரனின் போட்டோவுக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபட்டுக் கொண்டிருப்பவர். போன்ற சில விஷயங்கள் அட போட வைத்தாலும், “நீங்க புலியா?” என்று துல்கர் அவரைப் பார்த்து கேட்பதும், இலங்கை தமிழும் இல்லாமல், சாதா தமிழும் இல்லாமல் அவர் பேசும் தமிழும் அவர் வாழ்க்கையை பற்றி பேசும் பல இடங்களில் அமெச்சூர் தனம்.  சீனன், மெக்ஸிக்கன் குடும்பம், சம்பந்தமேயில்லாம ஒர் மலையாளிப் பெண், பாகிஸ்தான் முஸ்ஸிமுடன் மெக்ஸிகோவுக்கு பயணப்படும் இடத்திலிருந்து படம் நொண்ட ஆரம்பிக்கிறது. கொஞ்சமும் நம்பகத்தன்மையில்லாத காட்சிகள். அமெச்சூர் தனமான அமெரிக்க போலீஸ் காட்சிகள் என க்ளைமேக்ஸ் நெருங்கும் போது  அட போங்கடா.. துல்கரின் நடிப்பும், கோபி சுந்தரின் பின்னணியிசையும் மட்டுமே அறுதல்.. கம்யூனிசம் தோற்றது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 12, 2017

கொத்து பரோட்டா 2.0-34

கொத்து பரோட்டா 2.0-34
மே மாதம் முதல் தமிழ் சினிமாவிற்கு இனி வரும் மாதங்கள் கொஞ்சம் ப்ரச்சனையானதாய் தான் தெரிகிறது.  ஜி.எஸ்.டி., பைரசி, தியேட்டர் விலையேற்றம் என பல கோரிக்கைகளை அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்திருக்கிறது. தவறினால் மே 30 முதல் திரையீடு முதல் தயாரிப்பு வரை ஸ்ட்ரைக் என்று அறிவித்திருக்கிறது. இன்னொரு புறம் தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் வருகிற மே மாதம் முதல் எந்த படத்திற்கும் எம்.ஜி. கிடையாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அவுட் ரைட் மற்றும் அட்வான்ஸ் முறையில் மட்டுமே வியாபாரம் செய்யபடுமென்றும், ஐந்து கோடிக்கும் கிழ் உள்ள பட்ஜெட் படங்களை இனி கமிஷனுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுமென்றும் சொல்லியிருக்கிறார்கள். மற்றுமொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இனி யாரும் எந்த படத்தையும் மொத்தமாக வாங்கிக் கொள்ள முடியாது. தயாரிப்பாளர் அந்தந்த ஏரியாக்களுக்கு என்று தனியே தான் வியாபாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மே மாதம் அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ரைக்கிற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் இந்த தேர்தல் நடந்து முடிந்த உடனேயே விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு பேசி முடிவெடுத்த முதல் விஷயம் இதுதான். நிச்சயம் பெரிய முதலீட்டு படங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பெரிய நடிகர்களின் கால்ஷீட் வாங்கி படமெடுக்க விழைவதற்கான காரணமே பின்னால் யாராவது ஒருவர் பெரிய விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை தான். இனி அது நடக்காது.தயாரிப்பாளரே வியாபாரம் செய்ய வேண்டும். முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. தயாரிப்பாளர் ஒவ்வொரு ஏரியாவையும் பிரித்து வியாபாரம் செய்வார்கள். அப்படி வியாபாரம் செய்யும் படங்களின் வெற்றி தோல்வி தயாரிப்பாளருக்கும்  தெரிய வரும் பட்சத்தில் அடுத்த படத்தின் வியாபாரத்தில், சில பல அட்ஜெஸ்ட்மெண்டுகள் செய்து கொடுக்கப்படும். இப்படி தாயாய் பிள்ளையாய் இருந்ததால் தான் ஒரு தயாரிப்பாளர் தொடர்ந்து படமெடுக்க, அடுத்தடுத்த படங்களுக்கு தயாரிக்கும் போதே ஏரியாவுக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் செய்யும் முறை இருந்தது. தயாரிப்பாளர்களும் ஒரு நல்ல படைப்பை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றால் அவர்களுடய விநியோகஸ்தர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக வாங்கி படமெடுத்து விடுவார். ஆனால் இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாய் அதிக தியேட்டர்களில் வெளியீடு எனும் முறையும், தொலைக்காட்சி நிறுவனங்கள் மறை முகமாய் விநியோகத்தில் வர ஆரம்பித்ததும் மாற ஆரம்பித்தது. பின்னாளில் எம்.ஜி என்ற ஒன்றே நீ ஒழுங்கா கணக்கு கொடுக்க மாட்டேன்குறே? என்று விநியோகஸ்தருக்கும் தயாரிப்பாளருக்குமான பிரச்சனையில் எழ ஆரம்பித்தது. விநியோகஸ்தர் தியேட்டர் காரர் மேல். காரணம் வாங்கிய படம் பெரியதாய் இல்லை. தயாரிப்பாளர் எம்.ஜிக்கு விற்றதால், விநியோகஸ்தர் எக்கேடு கெட்டுப் போனால் என்ன நம்ம காசு ஒரளவுக்கு சேஃப் என்றானது. விநியோகஸ்தர்கள் அதிக தியேட்டர்களில் போடும் பழக்கம் ஆனதால் எந்த திரையரங்கு உரிமையாளர் அதிக எம்.ஜி தருவாரோ அவருக்கு ப்டம் கொடுப்பது என்று ஆக, போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் செண்டரை வளர்க்க, வட்டிக்கு கடன் வாங்கியெல்லாம் படத்துக்கு எம்.ஜி. கொடுத்த தியேட்டர்காரர்கள் அதிகம். படம் ஓடாத போது லாஸ் ஆச்சின்னா திரும்பக் கொடுத்தாங்களா? என்ன? என்ற சொத்தை காரணத்தை சொல்லி ஏமாற்ற ஆரம்பித்தார்கள். எம்.ஜி எனும் மினிமம் கேரண்டி முறையில் படம் வாங்கினால் நஷ்டம் வந்தால் பணம் திரும்பக் கிடையாது என்று தெரிந்தே வாங்கியவர்கள் தான்.

பெரிய படங்கள் என்றாலும் படம் பார்த்துவிட்டு விலைக்கு வாங்கும் பழக்கம் போனதுக்கு விநியோகஸ்தர்கள்தான் காரணம். பல பெரிய பட்ஜெட் படங்கள் ஆரம்பிக்கும் போது அட்வான்ஸை கொடுத்துவிட்டு, படம் ரிலீஸுக்கு முன்னால் படம் பார்த்துவிட்டு படம் பிடிக்கலை என்று ஒப்புக் கொண்ட விலையை கொடுக்காமல் படம் ரிலிஸுக்கு முன் பஞ்சாயத்து செய்து படம் ரிலீஸ் பண்ணும் முறையை பலர் பயன்படுத்த ஆரம்பிக்க, படம் காட்டினால் தானே.. இந்த பஞ்சாயத்து என படம் காட்டாமலேயே படம் விற்க ஆரம்பித்தனர் தயாரிப்பாளர்கள். பல நூறு தியேட்டர்களில் வெளியீடு, ஒரே நேரத்தில் ஓஹோவென கொட்டும் பணம் என்ற ரீதியில் இன்றைய இணையத்தில் அவரவர் வாய்க்கு வந்த தொகையை இவ்வளவு அவ்வளவு என்று ஏற்றி விட, புதிய புதிய பணமிருக்கும் நபர்கள் சினிமா அற்புதமான துறையில் கிடைக்கும் புகழ், பகட்டு எல்லாவற்றிக்கும் ஆசைப்பட்டுவியாபாரம் தெரியாமல் வழக்கமாய் படம் வாங்கும் விநியோகஸ்தர்கள் கொடுக்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க ஆரம்பித்தன் விலைவு தான் பெரிய ஹீரோக்களின் படங்களின் பட்ஜெட் உயர்வு.

சில வருடங்களுக்கு முன்னால் தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிட பெரும் போட்டியே நடைப்பெற்ற காலமெல்லாம் உண்டு. நான்கைந்து சாப்ட்வேர் இன் ஜினியர்கள் எல்லாம் சேர்த்து படம் வாங்கி வெளியிட்டு. அவர்கள் வெளியிட்டார்களே என்று இன்னொரு போட்டி க்ரூப் விலையேற்றி படம் வாங்கி தொடர் நஷ்டப்பட்டு, போன கதையெல்லாம் உண்டு. அப்படித்தன் இப்போது தமிழ் சினிமாவிலும். ரெகுலர் விநியோகஸ்தரக்ள் கமிஷனுக்கு படம் போட்டு தர, யார் யாரோ பணமிருகிறவர்கள் மார்கெட் விலையை விட அதிகமாய் வாங்கி, விற்பனை செய்து கடைசியில் படம் ஓடாமல் லாஸ் ஆயிருச்சு என்று நடிகரிடம் போய் சண்டை போடுவது நடக்கிறது. இதையெல்லாம் தடுக்கத்தான் சங்கத்தின் இந்த முடிவு என்றாலும் எத்தனை நாட்களுக்கு இதை பின்பற்றுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்தந்த ஏரியாக்களின் விநியோகச்தர்கள்தான் படம் வாங்க வேண்டும். வெறும் அட்வான்ஸ் தான் என்று வரும் போது வியாபாரம் மட்டுப்படுவது மட்டுமல்ல, படங்களின் தயாரிப்பும் குறையும்,.எந்த தயாரிப்பாளருக்கு படம் விநியோகம் செய்யும் அளவிற்கு பணம் இருக்கிற்தோ அவர்களே படமெடுக்க முடியும் என்றாகும். சிறிய படங்களின் வியாபாரம் என்று சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை என்பதால் அதில் இருக்கும் ரிஸ்க் அப்படியேத்தான். என்ன தான் இவர்கள் சட்டமாய் பல விஷயங்கள் இயற்றினாலும் இதை மீறத் துடிக்கும் பணமிருப்பவர்கள் அதிகம்  உழலுமிடம் இது. இவ்வளவு விஷயங்களில் தீர்மானமான முடிவு எடுப்பவர்கள் அப்படியே விற்கும் டிக்கெட்டுக்கான கணக்கு, ரிப்பொர்ட், கம்ப்யூடர் முறையில் டிக்கெட் போன்றவற்றையும்  உடன் செயல்படுத்த ஆவன செய்தால், நிச்சயம் ஒர் மாற்றம் வர ஏதுவாக இருக்கும்.

BLACK MIRROR- FIFTEEN MILLION MERITS

டிஸ்டோபியன் எனும் எதிர்கால உலகத்தில் எழுந்ததிலிருந்து தினமும் சைக்கிள் ஓட்டி அதன் மூலம் உருவாகும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அந்த சைக்கிளை மிதிப்பவர்களுக்கு அதன் மூலம் மெரிட்ஸ் எனும் ஊதியம் கிடைக்கும். அந்த ஊதியத்தை அவர்கள் வாழ்க்கைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு கழித்துக் கொள்ளும், டிவியில் விளம்பரங்கள் பார்ககமல் போனால் மெரிட்ஸில் அதிகம் பணம் கழித்துக் கொள்ளும். இப்படியான உலகத்தில் பிங்  என்பவன் தன் அண்ணனின் மெரிட்ஸும் சேர்திருக்க, கொஞ்சம் பணக்காரத் திமிரில் சுற்றி வருகிறவன். பதினைந்து மில்லியன் மெரிட்ஸ் உள்ளவர்கள் விர்சுவல் டிவி உலகில் அதாவது தினம் இவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர்களாய் , சில பல சிறப்பம்சஙக்ளுடன் வளைய வர முடியும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நம்மூர் ரியாலிட்டி ஷோ போல தெரிவு நிகழ்வு ந்டக்கும். அதில் அவரவர் தகுதிக்கு ஏற்ப நிகழ்ச்சிகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். எல்லாம் விர்சுவல் மக்கள். ஓட்டு. கலந்து கொள்ள பதினைந்து மில்லியன் க்ரெடிட் வேண்டும். பிங் ஒர் பெண்ணை சந்திக்கிறான். அவள் அழகில் மயங்குகிறன். அபாரமான பாடும் திறன் கொண்டவள் அவள். எப்படியாவது போட்டியில் கலந்து கொண்டு பிரபலமாக வேண்டுமென்று ஆசையுடன் இருக்கிறவள். பிங் அவள் மீதுள்ள காதலால் தன்னுடய க்ரெடிட்டை விட்டுத் தந்து அவளை போட்டிக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே அவளின் பாடும் திறனுக்கு  மதிப்பளிக்காமல் அவளின் அழகிற்கு முக்யத்துவம் கொடுத்து, அவளை ஒர் போர்ன் ஸ்டாராக ஆக்குகிறாரகள். அங்கே போனவர்கள் மீண்டும் திரும்ப இங்கே வர முடியாது. எனவே இழந்த தன் க்ரெடிட்டை மீண்டும் சைக்கிள் ஓட்டி பெற்று போட்டிக்கு போய் அவர்களின் முகத்திரையை கிழிக்க நினைக்கிறான். பின்பு என்ன ஆனது என்பதை மிக மெல்லிய காதல், சர்காசம், கிண்டலுடன் முடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்கக் வேண்டிய கதை.

Jul 8, 2017

கொத்து பரோட்டா -2.0-32

கொத்து பரோட்டா -2.0-33
Black Mirror –The National Anthem
ப்ளாக் மிரர் எனும் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சீரிஸ். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. முதல் விஷயம் இது தொடர் கிடையாது. ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு கதை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் படம். இரண்டாவது எல்லா படங்களுமே டிவி, கம்ப்யூட்டர், மொபைல் எனும் கருப்பு திரையினால் ஏற்படும் சந்தோஷம் துக்கம், மற்றும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கதைகள். பெரும்பாலான கதைகள் எதிர்காலத்தில் நடப்பது என பல சுவாரஸ்ய பொக்கேக்களை கொண்ட தொடர் இது. முதல் சீசனுகு பிறகு நெட்பிளிக்ஸ் அவர்களுக்காக தனியே தயாரித்து தரச் சொல்ல, இப்போது மூன்றாவது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.  முதல் சீசனில் வந்த முதல் கதை தான் மேற்ச்சொன்ன தலைப்பில் வரும் படம்.

பிரிட்டிஷ் பிரதமர் அதிகாலையில் எழுப்பபடுகிறார். இளவரசியை யாரோ ஒருவர் கடத்திவிட்டதாகவும், யூட்யூபில் வீடியோவில் கடத்தியவன் கோரிய கோரிக்கையை காட்டுகிறார்கள்.  கடத்தல் காரன் கோரிக்கையை இளவரசியே அழுதபடி படிக்க, பிரிட்டிஷ் பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.  இளவரசி விடுவிக்கப்பட வேண்டுமானால் பிரதமர்  ஒரு பன்றியுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், அதை தொலைக்காட்சியில் நேரலை செய்ய வேண்டுமெனவும் கடத்தல் காரன் கோரிக்கை. உடனடியாய் யூடியூப் வீடியோவை தடை செய்ய சொல்ல, அதை செய்தாகிவிட்டதாகவும், ஆனாலும் பல கோடி பேர் அதை டவுட்லோட் செய்து பரப்பி வருவதாகவும் சொல்கிறார்கள்.  பன்றியுடன் உறவு வைத்துக் கொள்வதா? ஏதாவது செய்து இளவரசியை காப்பாற்ற முடியாதா? என்று கேட்கிறார் பிரதமர். இருக்கும் நான்கைந்து மணி நேர கெடுவுக்குள் முயற்சிக்கலாமே தவிர உறுதியாய் ஏதும் சொல்ல முடியாது என்று கை விரிக்கிறது அரசு இயந்திரம்.  ஆனாலும் ஒரு பக்கம் போலீஸும், ராணுவமும் கிடைத்த தகவல்களை வைத்து தேடுதல் வேட்டை நடத்துகிறது.  பிரதமரின் முகத்தை மட்டுமே வைத்து வேறு ஒருவர் உடலோடு  ஒளிபரப்பு செய்யலாம் என்று முடிவு கடத்தல் காரனுக்கு தெரிந்து இளவரசியில் கை விரலை கட் செய்து டிவி சேனலுக்கு அனுப்புகிறான் கடத்தல் காரன்.

பிரிட்டிஷ் ராஜ குடும்பம் இளவரசிக்காக தியாகம் செய்யாவிட்டால் அவரை தங்கள் குடும்பம் ஆதரிக்காது என்று ப்ரெஷர் கொடுக்க, தன் ராஜ விஸ்வாசத்தை காட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஒரு பக்கம் தேடுதல் வேட்டை, இன்னொரு பக்கம் மக்களின் ஆட்டு மந்தைத்தனமான எமோஷனல் அதரவு, டிவி சேனல்களின் நியூஸ் வெறி, என போய் கொண்டிருக்க, பிரிட்டிஷ் பிரதமர் ஒரு பன்றியுடன் உடலுறவு செய்யும் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகிறது.  பார்க்க அருவருப்பாக இருந்தாலும், மக்கள் பார்க்கிறார்கள். பார்த்துக்  கொண்டேயிருக்கிறார்கள்.  இதனிடையில் இளவரசியை நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கடத்தல் காரன் வெளியே விட்டு விடுகிறான்.  அவன் அனுப்பிய விரல் இளவரசியுடயது அல்ல. அவனுடயது. யார் அவன்? எதற்காக அப்படி செய்தான்?. இளவரசியின் கடத்தலுக்கு பின்னான நிலை என்ன? ப்ரிடிட்டிஷ் பிரதமரின் நிலை? அவரது மனைவியின் மனநிலை? என்பதை எல்லாம் சர்காஸமாய் சொல்லியிருக்கும் படமிது. ஓடும் 45 சொச்ச நிமிடங்களும் நம்மை கட்டிப் போடும் படம். டோண்ட் மிஸ்.

கேட்டால் கிடைக்கும்
சர்வீஸ் சார்ஜுக்கும், சர்வீஸ் டாக்ஸுக்கும் பல பேருக்கு வித்யாசம் தெரியாத காலமொன்று இருந்தது. ஆனால் இன்றைக்கு அது பற்றி பல பேருக்கு தெரிந்தாலும், இல்லாத சட்டமொன்றை வைத்து இந்த ரெஸ்ட்டாரண்டுகள் அடிக்கும் கொள்ளையை பற்றிக் கேட்பதும் இல்லை. ரெண்டொரு மாதங்களுக்கு முன்னால் சர்வீஸ் சார்ஜ் என்பது மக்கள் தங்கள் விருப்பப்பட்டு கொடுப்பதாகும். அதை பில்லோடு சேர்த்து வாங்க கூடாது என்று அறிவித்தார்கள்.  சரி இந்த சர்வீஸ் சார்ஜ் என்பது என்ன?  உணவகத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவை உங்களுக்கு அளிக்கிறார்கள்.  அதற்கான விலையையும் நீங்கள் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு அதை எடுத்துக் கொண்டு வந்தவருக்கு முன்னெல்லாம் அவருடய சர்வீஸ் நன்றாக இருந்தால் டிப்ஸ் அளிப்போம். அது நாம் விருப்பப்பட்டு அளிப்பது.  அதை கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ரெஸ்டாரண்ட்கள் அவர்களுடய பில்லில் சேர்க்க ஆரம்பித்தார்கள். நீங்கள் சாப்பிடும் பில்லின் தொகைக்கு 5 முதல் 20 சதவிகிதம் வரை.  அதாவது ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் உணவருந்தினால் அதற்கு  50 -200 ரூபாய் வரை சர்வீஸ் சார்ஜ்.  இத்தனை வருடங்களாய் நீங்கள் விரும்பிக் கொடுத்த தொகையானது கட்டாயமாய் கொடுக்கப் பட வேண்டிய ஒன்றானது. இத்தோடு விட்டார்களா என்றால் அது தான் இல்லை. நம் உணவுக்கான தொகை, அத்தோடு இந்த சர்வீஸ் சார்ஜுக்கும் சேர்த்து, வாட், சர்வீஸ் டேக்ஸ், கிர்ஷ் கல்யாண் எல்லாம் வரும். ஸோ.. நாம் சாப்பிட்ட உணவுக்கு மட்டுமில்லாமல் கொடுக்கும் டிப்ஸுக்கு சேர்த்து வரி கட்டுகிறோம்.  இந்த சர்வீஸ் சார்ஜானது எதற்கு? யாருக்கு போகிறது? என்று பார்த்தீர்களானால் நமக்கு சர்வீஸ் செய்யும் சர்வர்களுக்கும், செஃப்புகளுக்குமே செல்லும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் பல பெரும் உணவகங்களில் இவர்களுக்கான சம்பளமே இதிலிருந்தான் கொடுக்கப் படுகிறது. நேரடியாய் நிஜமாய் உழைக்கும் ஒருவர் விருந்தினர் விருப்பப்படி சர்வீஸ் செய்து அதிகம் சம்பாதிப்பதை தடுத்து, மொத்த காசையும் பில் தொகையில் வாங்கிக் கொண்டு, அதில் மூன்று முதல் நான்கு சதவிகிதம் பகிர்ந்தளிப்பார்கள் என்கிறார்கள்.  அரசும் தங்கள் பங்கிற்கு முன்பு இதில் குழப்பமான விதிமுறைகளையே வைத்திருக்க, அதை பயன்படுத்தி, இந்த ரெஸ்டாரண்டுகளும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டது.

koஉணவகத்தின் விலைப் பட்டியல் அவர்கள் இருக்குமிடத்திற்கான வாடகை, வசதிகள், உணவின் தரம், அதற்கு ஏற்படும் செலவுகள் எல்லவற்றையும் சேர்த்துத்தான் விலை கணக்கிடப்படுகிறது.  அப்படியிருக்க, நம்மிடம் டிப்ஸை எப்படி கட்டாயப்படுத்தி வசூலிக்க முடியும்?. டிப்ஸாய் வரும் பணத்தை அவர்கள்  வேலையாட்களுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த தொகையையும் சேர்த்து வசூலிக்கப்படும் தொகை எப்படி கணக்கு காட்டப்படுகிறது?. சர்வீஸ் சார்ஜையும் சேர்த்து வரி வசூலிக்கும் போது ஒரு பில்லுக்கு கிட்டத்தட்ட நான்கு ரூபாய் வரை வரியாய் அதிகம் வரும். ஏற்கனவே ஏகப்பட்ட வரிகளைக்கட்டி,  கூன் விழுந்திருக்கும் நம் முதுகின் மேல் பச்சகுதிரை தாண்டி விளையாடும் இம்மாதிரியான தில்லு முல்லு ரெஸ்டாரண்டுகளை என்ன சொல்வது. ஜனவரி மாதம் இதைப் பற்றி புகார்கள் அதிகமாக கண்டிப்பாக பில்லோடு தொகை நிர்ணையிக்க கூடாது என அரசு அறிவித்தது. அதை பற்றி சொல்லி நீங்கள் எப்படி சார்ஜ் செய்வீர்கள் என்று கேட்பவர்களுக்கு சட்டென பில்லில் சர்வீஸ் சார்ஜை கழித்துக் கொண்டு கொடுங்கள் என்று வாங்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாதவர்களும், கேட்க கூச்சப்படுகிறவர்களும் கொடுப்பதை  ரெஸ்டாரண்ட்க்காரர்கள் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
பல ரெஸ்டாரண்டுகளில் சர்வீஸ் சார்ஜை பில்லுடன் வசூலித்தாலும், கஸ்டமர்கள் பழக்க தோஷத்தில் வைக்கும் டிப்ஸுகளுக்கு தடையில்லை. அதை அந்த பணி செய்தவர் எடுத்துக் கொள்வார்கள். அப்போது பாருங்கள் நம்மிடம் வசூலிக்கப்படும் பணம் யாருக்கு செல்கிறது?.  அப்படி சர்வீச் சார்ஜ் வாங்கும் உணவகத்தில் நான் டிப்ஸ் என்று தனியாய் கொடுக்காமல் இருந்தேன். இந்த அறிவிப்பு வரும் வரை. அரசின் அறிவிப்புக்கு பிறகு நான் எந்த ஒர் உணவகத்திலும் சர்வீச் சார்ஜ் கொடுப்பதில்லை. அதற்குரிய வரியையும் கழித்துவிட்டுத்தான் கொடுப்பேன். ரெண்டொரு நாளைக்கு முன்  மத்திய அமைச்சர் தன் ஆணித்தரமான அறிவிப்பின் மூலம் சர்வீஸ் சார்ஜ் என்பது கட்டாயம் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதன் வரையரைகளையும் விளக்கியிருக்கிறார்.   http://economictimes.indiatimes.com/wealth/personal-finance-news/service-charge-not-mandatory-government-issues-guidelines/articleshow/58299472.cms
கஷ்டப்படுவனுக்கு கொடுக்குற காசுல ஏன் கணக்கு பார்க்கணும்? என்று செண்டிமெண்ட் பேசாமல் அது அவர்களுக்கு போகாத பணம். அவர்கள் பெயரில் கொள்ளையடிப்பதற்கு நான் உடந்தையாய் இருக்கக் கூடாது.  ஒரு ரூபான்னாலும் ஊழல் ஊழல் தான்.  கேட்டால் கிடைக்கும். கேளுங்க சர்வீஸ் சார்ஜை ஒழிப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் –Khujili

பேரைக் கேட்டாலே கில்மாவாக இருக்கிறதா?. யெஸ் இந்த கதை பேசும் விஷயம் செக்ஸ்தான் என்றாலும், அதை சொன்ன விதத்தில் அஸம் என சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் சோனம் நாயர்.  கதை நாயகர்களான ஜாக்கி ஷராப்புக்கும், நீனா குப்தாவுக்கும் வயது வந்த பையனிருக்க, ராத்திரி வீட்டுக்கு வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். முதுகு அரிப்புக்கு போடும் லோஷனைத் தேடி அவன் அறைக்கு போகும் ஜாக்கியின் கையில்  விலங்கு ஒன்றை எடுத்துக் கொண்டு வருகிறார். என்ன புள்ளை வளர்கிறாய்? என தைய்யா தக்கா என குதிக்கிறார். இது எதற்கு உபயோகப்படுத்துவார்கள் என்று தெரியுமா? என்று கேட்க, நீனா குப்தா வெட்கத்துடன் “BDSM”  என்கிறார். அதை கேட்டு அதிர்ந்த ஜாக்கி, இது பற்று உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க, பெண்கள் வாட்ஸப் க்ரூப் பற்றியும், அவர்களின் பேச்சு பற்றியும் சொல்ல, நாம் ஏன் இதை ட்ரை செய்யக் கூடாது என்று இருவருக்கும் ஆசை வருகிறது. அதன் செயல்பாடும், அதனால் வரும் சுவரஸ்ய திண்டாட்டங்களுமே கதை. நடித்த இருவரும் அட்டகாசமாய் நடித்திருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=KmRzflPuCjE