Posts

Showing posts with the label கதை திருட்டு

கதை திருட்டு

கதை திருட்டு இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக்கதை திருட்டு விஷயம் தான். பாருங்கள் நான்கூட  இக்கட்டுரையை ஆரம்பிக்க கதை திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்  என்னடா இது ஆரம்பித்த பத்தியிலேயே முருகதாஸுக்கு சப்போர்ட் செய்கிறார் போல இருக்கிறதே என்று யோசித்தீர்களானால் நிச்சயம் இல்லை. இக்கட்டுரை யாருக்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையல்ல. உலகம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து கதை இருக்கிறது. மனிதன் வாய் வழியாய் சொல்லப்பட்டது. மொழி, கலை வடிவத்திற்கு ஏற்ப அதனதன் வடிவில் மறு வடிவம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறுதலே சாஸ்வதம். என்பதை புரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியென்றால் தெரிந்தே கதையை திருடியவர்களை கேட்பது நியாயமில்லையா என்றால் நிச்சயம் கேட்கப்பட வேண்டிய, உரிமையை கோர வேண்டிய நியாயம் தான். சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தன்னுடய நிறுவன சுயசரிதையை ஒர் தினசரியில் எழுதினார். எப்போது படங்கள் தயாரித்தார்கள். எங்கிருந்து படங்களின் கதை எடுக்கபட்டது போன்ற பல தகவல்கள் அதில் இருந்தது....

சினிமா வியாபாரம் – கதை திருட்டு.

இன்றைய இணைய உலகம் முழுவதும் எல்லோராலும் விவாதிக்கப்பட்டு, வசைபாடப்பட்டு, கற்பனை வறட்சி, கருத்து திருட்டு, என்றெல்லாம் காரி உமிழ்ந்தும்.. அதனால் என்ன? நீங்கள் எல்லாம் ஒலக அறிவாளிகள். நாங்க லோக்கல் எங்களுக்குத்தான் இம்மாதிரியான விஷயங்கள். நல்லாருந்தா ஓகேன்னு ஒரு கோஷ்டியும், அவன் இதை திருடினான். இவன் இதை திருடினான்னு ஆளாளுக்கு புலம்பிட்டிருக்கிற நேரத்தில ஒலகத்தில எத்தன இடங்களில் இது பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை? ஆனால் ஒரு வெற்றி அதன் ரிஷிமூலத்தை, நதிமூலத்தை ஆராய சொல்கிறது. இதே ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தை ஒரு தோல்வி கொடுத்திருக்குமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இன்றைய தெய்வதிருமகள் பட விஷயமும்.