Posts

Showing posts with the label பேரைச் சொல்லவா?

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.

 ஒவ்வொரு முறை அவரின் ஊரூக்கு செல்லும் போது அவரை சந்திக்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருக்கும். அவரின் குரலும் என் குரலும் இருவருக்கும் பரிச்சயம். நேரில் பார்த்திருக்கிறோமா? இல்லையா? என்றே நியாபகத்தில் இல்லை. என் நியாபகத்தில் இதுவரை நான் அவரை பெயர் சொல்லி அழைத்ததாய் நினைவில்லை. அவருக்கு என் பெயர் தெரியும். கேபிள் சங்கர் என்றோ அல்லது சங்கர் என்றோ சொன்னால் போதும்.  நானும்வ் அவரும் ஒரே தொழிலில் இருப்பது எங்கள் பேச்சுக்கு காரணம். அதைத்தாண்டி நாங்கள் இதுவரை பேசியதாய் கூட நினைவில்லை.  இந்த முறை அவரது ஊருக்கு போன பின் உடனடியாய் அவரை அழைத்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். காரணம் எத்தனை நாள் தான் தயக்கம் கொண்டு அவரை சந்திக்காமல் இருப்பது?. தயக்கத்திற்கு காரணம் மெய்யழகன் பிரச்சனை தான். என் மொபைலில் அவரது பெயரில்லாமல் சேவ் செய்திருந்ததும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை அவர் வாத்சல்யமாய் போனில் பேசும் போதும் சாரி உங்க பேர் மறந்துட்டேன் அப்படி என்று கேட்க அவமானமாய் இருந்தது. உடனே மெய்யழகனுக்கு சொன்னது போல பெயர் கண்டுபிடிக்கிறது எல்லாம் பெரிய விஷயமா? எத்தனையோ டெக்னாலஜி இருக்கு? என...