Thottal Thodarum

Apr 30, 2021

24 சலனங்களின் எண். விமர்சனம் -9

 24 சலனங்களின் எண் நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலனின் பேச்சு.

Apr 24, 2021

பெர்முடா - விமர்சனம் -5



 #பெர்முடா விமர்சனம்#5

ரமணா படத்துக்கு ஏன் விஜய்காந்தை தேர்ந்தெடுத்திங்கங்கன்னு முருகதாசை கேட்டப்ப "கிளைமாக்ஸ்ல எல்லா ஸ்டூடன்ட்ஸயும் பாத்து மெசேஜ் சொல்ற மாதிரி ஒரு சீன், அதை சொல்ல சில நடிகர்களுக்கு மட்டும்தான் மாஸ் இருக்கு, கேப்டன் அதுல முக்கியமானவர். அந்த சீனுக்காகத்தான் அவரை முடிவு பன்னேன்" னு சொல்லிருப்பார்.
ஒரு வசனத்தை யார் சொன்னா நல்லாருக்கும்ங்கற மாதிரிதான், சில கதைகளையும் சிலர் சொன்னாதான் நல்லாருக்கும். சிலரால மட்டும்தான் அந்த கதைகளை சொல்லவே முடியும்.
பெர்முடா முக்கோணத்தை பத்தி கேள்விப்பட்டுருப்போம். பக்கத்துல போன எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்துரும். காரணமே புரியாம காணாம போனவங்க அதிகம். அதே மாதிரி ஆம்பளைங்க தொலைஞ்சு போற இன்னொரு முக்கோணம் இருக்கு. அதுக்கும் பெர்முடாவுக்கும் கூட சம்பந்தமிருக்கு.
சரி கதைக்கு வருவோம். களம்னு பார்த்தா பொருந்தா காமம்.
அறுபது வயசு வரைக்கும் பொண்டாட்டி தமயந்தி பேச்சை தட்டாம காதலையோ காமத்தையோ வகையா அனுபவிக்காத சாம்பசிவராவ் வாழ்க்கைல எதிர்பாராத விதமாக அவர் இத்தனை நாள் தவறவிட்டதெல்லாம் கிடைக்க ஆரம்பிக்குது
பொண்டாட்டிக்கு உடம்பு சரியல்லாம இருக்கற சூழ்நிலைல தன்னோட நீட் கோச்சிங் செண்டர்ல படிக்க வர திவ்யா கூட அம்பது வயசு ராமசுப்புக்கு தொடர்பு ஏற்படுது
தமிழ் சினிமால உச்சத்துல இருக்க இயக்குனர் சுரேஷ்வர்க்கு அறிவும் திறமையும் இருக்க நித்யாங்கற இளமையான பொண்ணோட நட்பு கிடைக்குது.
இந்த மூணு கதைகள்லயும் பொதுவான விசயம்னா ஆணுக்கு வயசு அதிகம். பெண்ணுக்கு பாதிக்கும் கீழ. அவங்க மூணு பேர் வாழ்க்கைலயும் பெண்கள் வராங்கங்கற மாதிரி தோணும். ஆனா பெண்களாத்தான் விரும்பி அதை செயல்படுத்துவாங்க.
ஆம்பளைங்கறவன் வெறும் அட்டைக்கத்தித்தான். அவன் என்ன செய்யனும்னு முடிவு பன்றது ஏதோ ஒரே விதத்தில் ஒரு பெண்ணாதான் இருக்க முடியும். அதிகமாக அதுல காமம் பெரும்பங்கு வகிக்கும்.
நிஜமா Cable Sankarக்கு எங்கே இருந்து இந்த மாதிரி கதைகள் கிடைக்குது? உண்மையிலேயே பார்ல உக்காந்து இத்தனையும் சொல்லுவாங்களா? இந்த மாதிரி மெடிக்கல் சீட்டுக்காக இல்லை இன்ஜினியரிங் சீட்டுக்காக தன்னை கொடுத்த பெண்ணை பாத்துருக்கேங்கறதால எனக்கு இது யதார்த்தமாதான் பட்டுச்சு.
வழக்கம்போல சுரேஷ்வர்-நித்யா போர்ஷன் செம. அது மாதிரி ராயலா கொஞ்ச நாளாவது அனுபவிச்சுடனும்.
என்ன சொல்ல? சங்கரோட கதைகளை படிக்க கொஞ்சமாவது நடப்புலகத்துல இருக்கனும், இல்லைன்னா இப்படில்லாம் எங்காவது நடக்குமான்னுதான் கேள்வியெழும்.
பொண்டாட்டி நாவலை எப்படி எல்லா பெண்களும் படிக்கனும்னு சொல்றனோ அது மாதிரி பெர்முடா நாவலை எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்கனும்
நன்றி Kathir Rath

Bermuda  Kindle link https://amzn.to/3mQCgxA

Bermuda Book Link: https://amzn.to/3lRilx0

Apr 23, 2021

24 சலனங்களின் எண்.விமர்சனம்-10



 பு(து)த்தகம் -

24 - சலனங்களின் எண்
ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும்
இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர்.

ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது. நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில். ஒரு திரைப்படம் உருவாக எத்தனையோ பேர் உழைப்பு காரணமாகிறது.கஷ்டபட்டு உருவாக்கிய திரைப்படம் திரைக்கு வராமலே முடங்குவதால் எத்தனையோ பேரின் உழைப்பும் திறமையும் வீணாகி போய்விடுகிறது.அதை விரிவாய் நாவலில் விறுவிறுப்புடன் படிக்க சுவாரஸ்யத்துடன் எழுதி இருக்கிறார். இந்த நாவலில் வரும் இயக்குநர் ராம்ராஜ் அத்தியாயங்கள் ஒரு விக்ரமன் படம் பார்த்தது போல் இருக்கிறது. அவ்வளவு அருமை.சோக காட்சிகள் வந்தால் எப்படி தொண்டையை துக்கம் கவ்வுமே, அது மாதிரி அவரது அத்தியாயங்கள்.கடைசி கிளைமாக்ஸில் ஒரு திரைப்படம் பார்த்த விளைவு.

படிக்க படிக்க செம இண்ட்ரஸ்டிங்கான நாவல்.திரையுலகில் திரைக்கு பின்னால்
நடக்கும் சம்பவங்களை ஒளிவுமறைவின்றி சொல்லி இருக்கிறார் நாவலின் இயக்குநர்.இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான்.நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் வாக்கிய எழுத்துப் பிழைதான்.தமிழை தப்பாகவே எழுதி இருந்தாலும் படித்துவிடக்கூடிய நிலையில் இருந்தாலும், எழுத்துப்பிழை இருப்பதால் கவனம் சிதறுகிறது. அதையும் தாண்டி இந்த நாவல் படிக்க படிக்க நன்றாகவே இருக்கிறது.
இந்நாவலை படித்து முடிக்கையில் வெள்ளித்திரை படம் கண்ணுக்கு முன்னால் வந்து செல்கிறது. வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்.
நன்றி கோவை நேரம்.

Apr 12, 2021

பெர்முடா - விமர்சனம்-4

 


Reviewed in India on 10 November 2019
Cable Shankar is a gripping writer with so much passion that reflects in his writing. A very easy language employed to make The readers experience the writing with more images of their own. He is a "go-to" and a very important writer of the present generation.

Bermuda  Kindle link https://amzn.to/3mQCgxA

Bermuda Book Link: https://amzn.to/3lRilx0


Apr 8, 2021

பெர்முடா - விமர்சனம்-3


 

பெர்முடா. விமர்சனம்#3

Cable Sankar: Finished reading of Bermuda.
லைட் ரீடிங் கொடுக்க முடியாத கதை.
ஒவ்வொரு சாப்டரும் வேறு வேறு விதமாக வடிக்கப் பட்டு இருக்கு.
புரியாதது... 3 கதைகள்.. நித்யா - சுரேஷ்வர், சாம்பசிவராவ்-தமயந்தி, ராமசுப்பு -திவ்யா... இந்த மூணு ஜோடிகள் எங்கயாவது ரிலேட் ஆகிறார்களா எனப் புரியவில்லை... எதற்காக 3 கதையை ஒரே கதையா கொடுக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க.
செக்ஸ் கொஞ்சம் குறைச்சு இருக்கலாம்... சில இடங்களில் காமக்கதைகள் படிக்கிற மாதிரி இருக்கு..:-))
நித்யா காரெக்டர் சொன்னவிதம் பிடித்திருந்தது. சில இடங்களில் சுரேஷ்வர் வாயால் சொல்ல வைத்தது அருமை.
முடிவில் முத்தாய்பாக தமயந்தி பயப்படுதாக சொல்லப்ப்டுவதும், தப்பு செஞ்சால் தண்டனை கிடைக்கும் என்று கூறவருவது போல் இருக்கு
விமலாதித்தன் என்பது மாமல்லன் என்று இருக்கணுமோ..
🤣🤣
நன்றி Raghavan Srinivasa

Apr 7, 2021

Apr 5, 2021

24 சலனங்களின் எண். விமர்சனம்-8


 சினிமா உலகின் பிண்ணனியில் நடக்கும் நாவல். சமகால சினிமாவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என சொல்லலாம். சினிமா உலகில் இருக்கும் போட்டிகள், துரோகங்கள், வன்மம், வெற்றிக்காக படும் அவமானங்கள், இழப்புக்கள் எல்லாவற்றையும் ரத்தமும் சதையுமாக, ஆழமாக எழுதியிருக்கிறார் கேபிள் அண்ணன். அவருடைய பரந்த அனுபவமும் இதற்கு முக்கிய காரணம்.

அதே நேரம் - இவை அனைத்தையும் மீறி இங்கிருக்கும் நட்பு, உழைப்பு, நல்ல மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமாவில் புதிதாக நுழையும் உதவி இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். நிறைய புரிதல்களை கொடுக்கும்.
நன்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

Apr 3, 2021

நான் ஷர்மி வைரம்-விமர்சனம் -4



 நான் ஷர்மி வைரம். விமர்சனம் #4

எனது பார்வை
புதினம்: நான் ஷார்மி வைரம் (A)
எழுத்தாளர்: கேபிள் சங்கர் ( எ) Cable Sankar
விலை: ரூபாய். 200/-
Kindle:
டிஸ்கி:. எழுத்தாளரே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு என்பதை உணர்த்த தலைப்பை விட பெரிய (A) சான்றிதழ் தந்துள்ளார். அதனால் கலாச்சார போராளிகள் வேறு இடம் பார்க்கவும்.
நண்பர் கேபிள் சங்கர் - வியாபாரம், எழுத்தாளர், விநியோகிஸ்தர், விமர்சகர், இயக்குனர் என்ற பன்முகம் உள்ளவர். வலைதளத்தின் (blog) தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான நபர்.
இவரின் எழுத்துப்பாணியை அவர் மானசீக குருவாக மதிக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் போல ஒரு பாணியில் வகைப்படுத்த முடியாது.
இவரின் இந்த கதை - இலக்கிய வகையை சார்ந்ததா என்ற கேள்விக்கு நமது பதில் - ஆம், இது வெகுஜன இலக்கியம்.
இந்த கதை, பாலியல் களத்தை பின்புலமாகக் கொண்டது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமகனாகும் ஒருவன் - ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தினால் விலைமகளாகும் ஒருத்தியின் மேல் காதல் கொள்ள , அதை வைரம் என்ற சூது கவ்வ - துரோகம், குரோதம், கொள்ளை , விளைவு - என ஒரு அசத்தல் புதினம்.
முதலில் எழுத்தாளருக்கு ஒரு ஷொட்டு -இந்த பின்புலமே புதிது, அதை விலாவாரியாக விவரிக்க எத்தனை மெனக்கிடல். மனிதர் அதகளப்படுத்தியிருக்கிறார். வாசிப்பவரின் கண்முன்னே விரிகிறது கதைத்களம் - வாசகனை ஒர் பார்வையாளனாக முதல் பக்கதிலிருந்தே மாற்றிவிடுகிறார்.
இந்த கதையை தொடராக 2011ல் வலைதளத்தில் எழுத ஆரம்பித்தவர் - ஏனோ முழுத்தொடராக முடிக்கவில்லை. யானை நீண்ட பிரசவ காலம் கொண்டு குட்டியை ஈன்றெடுப்பது போல இந்த கருவோடு எட்டாண்டு காலம் வாழ்ந்து, இன்று புதினமாக தருவித்துள்ளார்.
திரையுலகில் ப்ளாக் ஹீயூமர் என்ற வகையறா உண்டு. இந்த கதையும் அதில் ஓர் அங்கம் தான்.
எழுத்தாளர் இந்த புதினத்தை வலைத்தொடராக எடுக்கும் முயற்சிகளில் உள்ளதாக தெரிகிறது.
அப்படி எடுக்கும் பட்சத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தி மொழியில் எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
விரைவில் - Guy Ritchie, Anurag Kashyap, நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்களின் வரிசையில் இந்த எழுத்தாளர் இடம் பெற இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
பின்குறிப்பு :
ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு சுயக்கருத்து உண்டு !
அதனை நான் உணர்ந்து , போற்றி, வழி மொழிகிறேன்!
இப்பதிவு இந்த நூலைப்பற்றிய எனது பார்வை மட்டுமே !
மற்றவரின் பார்வையில் இது வேறு படலாம் !

Apr 2, 2021

பெர்முடா - விமர்சனம் 2

 பெர்முடா. விமர்சனம் #2



Cable Sankar லேட் நைட் சந்திப்புகளில் ஏராளமான கதைகள் பேசுவோம். பெரும்பாலும் சந்தித்த நபர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை பேசும்போது அதனை நிறைய சுவரஸ்யம் கூட்டி கதைகளாக்கி விடுவார்.
அப்படி சொல்லப்பட்ட மூவிருவரின் வாழ்வை கதையாக்கி இருக்கிறார்.
Very very interesting..
நன்றி
Krp Senthil

Apr 1, 2021

24 சலனங்களின் எண். விமர்சனம் -6


 

24 சலனங்களின் எண் விமர்சனம் #6

நண்பர் கேபிள் ஷங்கர் எழுதிய 24 சலனத்தின் எண் என்ற திரைத்துறை சார்ந்த நாவல். திரைக்கடலில் நீச்சல் அடிக்க துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டும். இரு தயாரிப்பாளர் இரு நாயகர் இரு நாயகியர் ஒரே ஒரு ஆபீஸ் பாய் என அனைவரும் இந்த தேரை இழுத்துச் செல்கின்றனர். திரை துறை சார்ந்த நண்பர்கள் படித்தால் அவர்கள் சந்தித்த நபர்கள் போலவே இருக்கும். எனக்கும் அப்படியே... சில இடங்களில் அசைவ வரிகள் தவிர்த்து இருக்கலாம் கேபிள் சங்கர். .கணவன் கனவை பூர்த்தி செய்ய நின்ற படத்தை முடிக்கும் திருமதி மணி அவரை மதிக்கிறேன்.அவ்வப்போது அபயக்குரல் தரும் ஆபிஸ் பாயை நேசிக்கிறேன்.சினிமாவைத்தேடுவோர்க்கு இது சிறந்த கூகுள் மேப்..இந்த நாவலை கம்பி மத்தாப்பு போல் ஜாக்கிரதையாக கொளுத்தி உள்ளார். அடுத்த நாவல் லஷ்மி வெடியாய் வெடிக்க வாழ்த்துக்கள். நன்றி இயக்குனர், எழுத்தாளர் நடிகர்
E Ramdoss