பரதேசி
பி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம். சமீபகாலமாய் பாலா இலக்கியவாதிகளோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இம்முறை நாஞ்சில் நாடன்.
1939 சாலூர் என்கிற கிராமத்திலிருந்து ஆரம்பிக்கிறது கதை. அங்கே ஓட்டுப் பொறுக்கி என்கிற ராசா தண்டோரா போட்டு நாலு வீட்டில் வாங்கி சாப்பிட்டு வாழ்பவன். அங்கம்மா தமிழ் சினிமா வழக்கப்படியான சூட்டிகையான பெண். அவளுக்கும் ஓட்டுப் பொறுக்கிக்கும் லேசாக பத்திக் கொள்கிறது. அவளது அம்மா அவனுக்கு தன் பெண்ணை தர மாட்டேன் என்கிறாள். அதனால் கூலி வேலைக்கு சென்றாவது பிழைக்கலாம் என்று பக்கத்து ஊருக்கு போகும் போது அங்கே வேலைக்கு ஆட்களை எடுக்கும் கங்காணி இவனை பார்க்கிறார். ஊருக்குள் உள்ள அத்தனை பேரையும் நல்ல சாப்பாடு, சாராயம், உடை, இருக்க இடம் என்று எல்லா வசதிகளோடு வேலைக்கு சம்பளமும் போட்டுக் கொடுப்பதாய் ஆசை வார்த்தை சொல்லி அவர்களை தேயிலைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாய் ஆக்கிவிடுகிறார். அங்கிருந்து தப்பிக்கவே முடியாத படியான நிலையில் வருடங்கள் கடக்கிறது. அவர்களுக்கு விடிவு காலம் பிறந்ததா? அங்கம்மா, ஒட்டுப் பொறுக்கியின் மற்றும் அங்கிருப்போரின் வாழ்க்கை என்னானது என்பதுதான் கதை.
அதர்வா இத்தனை நாள் காத்திருந்தது ஒர் நல்லதுக்குத்தான். உடல், மனம் எல்லாவற்றையும் ஒர் நிலைப்படுத்தி நடித்த்திருக்கிறார். அவருடய கேரியரில் இது ஒர் முக்கியமான படமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல அங்கம்மாவாக வரும் வேதிகாவின் மேக்கப் நன்றாக இருக்கும் அளவிற்கு அவரது கேரக்டரில் வலிமை இல்லை. தேயிலைத் தோட்டத்தில் ரூம் மேட்டாக வரும் மரகதம் என்கிற தன்ஷிகாவின் நடிப்பு ஓகே. ஊரெல்லாம் பொண்டாட்டியாய் வைத்திருக்கும் குஷால் பேர்விழி விக்ரமாதித்யன், அந்த வெட்கப் கல்யாணப் பெண், கங்காணி, தேயிலைத் தோட்ட வைத்தியராய் வரும் நம்ம சுப்ரமணியபுர சித்தன், எல்லாருக்கு தாயத்தை கட்டிவிட்டு கூலியை எல்லாம் தனதாக்கிக் கொள்ளும் சாமியார் என குட்டிக் குட்டிப் பாத்திரங்களில் நடிப்பவர்களின் நடிப்பு அட்டகாசம்.
படத்திற்கு மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் செழியன். முதல் காட்சியில் சாலூரின் குடிசைகளுக்கூடே பயணிக்கும் ஷாட்டில் ஆரம்பித்து, கங்காணியின் பின்னால் 48 நாட்கள் சாலூர் மக்கள் பயணிக்கும் பயணம், என்று தொடர்ந்து தேயிலைத் தோட்டத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஓடி, நம்மை அங்கேயே கொண்டு போய் இறக்கிவிட்டு விடுகிறார். முதல் பாதி முழுக்க வரும் செபியா டோனும், இரண்டாம் பாதியில் பச்சை பசேல் தேயிலைத் தோட்டமாய் காட்டாமல் அங்கே இருக்கும் இலைகளை கரும்பச்சையாய் ஒர் இருண்ட இடத்தில் வந்திருக்கிறார்கள் மிகைப்படுத்தாத பச்சையில் காட்டியிருப்பது க்ளாஸ். இசை ஜி.வி.ப்ரகாஷ்குமார். ஓ செங்காடே பாடலைத் தவிர மற்ற பாடல்கள் பெரிதாய் கவரவில்லை. இளையராஜா என்கிற மகா கலைஞனை இம்மாதிரியான கதைகளுக்கு பயன் படுத்தாமல் விட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வைக்கிறார் பின்னணியிசையில். கிஷோரின் எடிட்டிங்கில் நிறைய எடுத்து செதுக்கியிருக்கிறார்கள் என்பது படத்தில் வரும் காட்சிகளின் ஜம்புகளில் தெரிகிறது. பட் குட் ஒர்க். முக்கியமாய் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு நபர் கலை இயக்குனர் சி.எஸ்.பாலசந்தர் தான். உடை இருக்கும் இடம், குடிசைகள், அவர்கள் பயன் படுத்து பண்டங்கள் என்று நிறைய உழைத்திருக்கிறார். வசனம் நாஞ்சில் நாடன். கல்யாணம் செய்யாமலேயே அங்கம்மா கர்பமாகியிருக்கிறாள் என்பதை லெட்டரில் படித்தை வைத்து ஊர் சாமியார் “இவனுக்கு இடுப்புல க்யிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?’ என்று கேட்குமிடத்தில் மட்டும் தெரிகிறார். இதற்கு இவர் எதற்கு?.
சில கதைகளை சில பேரால் மட்டுமே கையாள முடியும் அந்த வகையில் இம்மாதிரியான கதையை பாலாவால் மட்டுமே இவ்வளவு ராவாக தர முடியும். என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். ஆரம்ப சாலூரை காட்டும் காட்சியில் ஒரே ஒரு ட்ராவலில் மொத்த ஊரையும் காட்டிவிட்டு, ஒட்டுப் பொறுக்கியை அறிமுகப்படுத்திய விதத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஆக்கிரமிக்கிறார்.பழைய கால திருமணம். அவர்களின் உணவு. பழக்க வழக்கங்கள், என நிறைய டீடெயிலிங்கில் மனுஷன் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்று புரிகிறது. இடைவேளை வரை ஊரைக்காட்டுவது, வேதிகா, அதர்வாவினிடையே ஏற்படும் நெருக்கம் என்று ஒரு மாதிரி நேரம் ஓட்டும் வகையாய்த்தான் தெரிகிறது. அதிலும் வேதிகா கேரக்டரின் மேல் ஒர் அழுத்தமில்லை. வழக்கமான தமிழ் சினிமா லூசுப் பெண் கேரக்டரைத்தான் வலிந்து திணித்திருக்கிறார். பெரியப்பா விக்ரமாதித்யன் கல்யாணத்தின் போது இறந்துவிட, அந்த செய்தி அதர்வாவுக்கு தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்திவிடுவான் என்பதால் ஊரே சேர்ந்து கல்யாணத்துக்கு ஆதரவாய் ஆவருக்கு தெரியாமல் அவரது உடலை ஒளித்து வைக்க, அவ்ரில்லாம கல்யாணம் செய்யக் கூடாது என்று நடுநடுவே புகுந்து அதர்வா கலாய்த்துக் கொண்டிருக்க, அவரை கலாய்க்க, வேதிகா உங்க பெரியப்பாவை தேடிக் கூட்டி வந்தால்தான் சாப்பாடு என்று ஓட்டும் காட்சிகள் சுவாரஸ்யம். ஆனால் அதே நேரத்தில் இவர்களுக்குள்ளான நெருக்கத்திற்கு சரியான காட்சிகள் இல்லை. இவர்களுளான காட்சிகள் நேரக்கடத்தியாகவே பயன்பட்டிருக்கிறது. அதே போல பெரியப்பா விக்ரமாதித்யனுக்கும் அதர்வாவிற்குமிடையே உள்ள நெருக்கதையும் இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். ஏனென்றால் அவ்வளவு தேடியவன் அநத சாப்பாட்டுக் காட்சிக்கு பிறகு அவரின் பிணம் என்னவானது என்று வசனத்தில் கூட சொல்லவில்லை.
தேயிலைத் தோட்டதிற்கு பயணப்படும் காட்சியிலிருந்து நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிறார் பாலா. அருமையான பாடலுடன் மாண்டேஜுகளாய் சாலூர் மக்களின் 48 நாள் பயணம் நமக்கு வலிக்கிறது. பாதி வழியில் குற்றுயிரும் கொலை உயிருமாய் தன் கணவனை விட்டு விட்டு கூட்டம் கிளம்பும் போது மனைவியை தரதரவென தரையில் இழுத்துக் கொண்டு தங்களுடன் செல்லும் காட்சி அப்படியே உரைகிறது. அதன் பிறகு தேயிலைத் தோட்டக் காட்சிகளில் அவர்கள் படும் சோகம், வேதனை ஆகியவைகளின் வலி நம்முள் அப்படியே இறங்குகிறது. ரூம் மேட்டாய் போய் சேரும் தன்ஷிகாவின் குடிசையில் அவள் அனுமதிக்காமல் இருக்க, வெகு நாட்கள் பனியில் படுத்துக் கொண்டு அதர்வா கஷ்டப்படுவது, தன்ஷிகாவுக்கும், அதர்வாவுக்குமிடையே ஏற்படும் நட்பு போன்ற நெருக்கத்திற்கான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் டீடெயிலிங் இருந்திருக்கலாம். அதுவும் இல்லாமல் கணவன் மனைவி இல்லாதவர்களை ஒன்றாய் தங்க வைப்பார்களா? என்பது கொஞ்சம் கேள்விக் குறியாய்த்தான் இருக்கிறது. அப்படி தங்க வைப்பார்கள் என்றால் உடன் வரும் புதுக் கல்யாண ஜோடியையும் பிரித்து வைக்கலாமே?. இன்னொரு சந்தேகம் 48 நாள் நடந்து வரும் போதும் சரி.. தேயிலை தோட்டத்தில் பணி புரியும் போதும் சரி. எல்லோருக்கும் தாடி அடர்ந்து வளருகிறது. ஆனால் தலை மட்டும் அதே சூப்பர் சம்மர் கட்டுடன் இருப்பது கொஞ்சம் இடறுகிறது. எல்லோரும் வெற்று மார்போடு இருக்க, அதர்வா மட்டும் கோணி போன்ற துணியில் ஒர் சட்டையை போட்டுக் கொண்டிருப்பது எப்படி?. அதே போல திருமணத்திற்கு எல்லோருக்கும் நெல்லுச் சோறு போடும் காட்சியில் இப்போது நமக்கு கிடைக்கும் பாலிஷ் செய்யப்பட்ட பளிச் வெண்மை சாதம் எப்படி?.
இரண்டாம் பாதி முழுவதும் பாலாவிற்கே உரிய நக்கல் நையாண்டி அதிகம். வெள்ளைககாரனுக்கு வைப்பாக இருக்கும் ஒருத்தியிடம் சேதி ஏதாச்சும் இருக்கானு சித்தா டாக்டர் கேட்பதும். அவள் இருக்கு இருக்கு நேத்து முச்சூடும் என் மடியில்தானே படுத்திட்டிருந்தது. என்று சொல்லி வெள்ளைக்காரன் போல டார்லிங் என்று பேசிக் காட்டுமிடம். சித்தா டாக்டர் வெள்ளைக்காரன் பேசும் இங்கிலீஷுக்கும், பெண்கள் பேசும் தமிழிற்கு ஆங்கிலத்தில் சொல்லும் ட்ரான்ஸ்லேஷன். விஷகாய்ச்சல் காரணமாய் தோட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து இறந்து கொண்டிருக்க, அங்கே வரும் நிஜ கிறிஸ்துவ டாக்டர் தம்பதிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மக்களை காபாற்றுவதாய் சொல்லிக் கொண்டே அவர்களை மதம் மாற்றம் செய்யும் காட்சியில் அவர்கள் பேசும் வசனங்களும், சித்தா பேசும் வசனங்களும் செம ரிலீப். வெள்ளைக்காரன் வேலை செய்யும் பெண்களை ஆள்கிறான் என்பது புதிய விஷயமில்லை என்றாலும், வெள்ளைக்காரன் புதியதாய் கல்யாணமான பெண்ணை அடையமுடியவில்லை என்பதால் கங்காணியை அடித்துப் பின்ன, பெண்ணை வழிக்கு கொண்டு வர, அவள் வேலையில் ப்ரச்சனை செய்து வேறு வழியில்லாமல் கணவனே அவளை வெள்ளைக்காரணுக்கு தாரை வார்த்துவிட்டு, அவள் வருவதற்காக காத்திருக்கும் காட்சி அழுத்தம். ஆனால் அந்தப் பெண்ணை அவளின் நடத்தைக்காக அதர்வா பேசாம்ல் தவிர்ப்பது கொஞ்சம் இடறல்தான். கல்யாணம் ஆகாமல் கர்பமாக்கிவிட்டு வந்தவன், இங்கிருக்கும் நிலைய அறிந்தும் அவர்களை துச்சப்படுத்துவது ஏன்? வழக்கமாய் பாலா படத்தில் வரும் சம்பந்தமில்லா குத்து பாட்டு போல க்ளிஷேவாக வரும் அந்த ஏசு பாட்டுதேவைதானா?
தேயிலைத் தோட்டத்தில் அவர்கள் படும் வேதனையை தனியே சொல்வதைவிட, பாடல்களின் நடுவே மாண்டேஜுகளாய் காட்டிய விதம் அருமை. எங்கே வழக்கம் போல பாலா யாரையாவது மண்ணில் போட்டு புரட்டியெடுத்து விடுவாரோ? யாரையாவது அம்மணக்குண்டியாய் நிற்க வைத்துவிடுவாரோ? எவன் கழுத்தையாவது பல்லாலேயே கடித்து குதறி வைத்துவிடுவாரோ என்ற பயத்தை கொடுத்திருந்த பாலா நீண்ட காலத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத ஒர் க்ளைமாக்ஸை கொடுத்து வாவ்!!! என்று சொல்ல வைத்துவிட்டார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால் நம்மால் டீ சாப்பிடவே தோன்றாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோன்றவில்லை. இன்று மட்டும் மூன்று டீ குடித்துவிட்டேன். தமிழ் சினிமாவில் ஒர் நாவலை, வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்த எடுக்க செய்த முயற்சியில் ஒரு சில இன்சுகள் பாலா தாண்டி வந்திருக்கிறார் என நாவலை படித்தவர்கள் கூறுகிறார்கள். வாழ்த்துகள்.
கேபிள் சங்கர்
Comments
Sadhik -Abu Dhabi
நீங்களும்தான் வேட்டை படம் பாத்துப்புட்டு தியேட்டர் காண்டீன்ல சண்டை போட்டேன்னு சொன்னீக. எல்லாருமா உங்கள மாரி சண்டை போட்டானுக?
படம் தரமா வந்திருக்கனால படத்தை ரொம்ப குறை சொல்ல முடியல போல இருக்கு, அதான் இந்த மாரி சேர்த்துவிட்டு உங்க வயிரை குளிர வச்சுக்கிறீக. :)))
அடுத்த முறை ஐஸ் டீ ட்ரை பண்ணுங்க! :)
கஷ்டப்பட்டு குற்றம் கண்டு பிடித்து இருக்கிறீகள்
உங்களது வழக்கமான விமர்சனம் போல இல்லை///
பிளஸ் 1.
விசுவரூப விமர்சனத்தை பாத்தா சும்மா வம்புக்கு உசத்தி எழுதி இருப்பாக.
ஆனால் உண்மை என்றுமே வெல்லும்! பாலாவின் பரதேசி, இவர் சோப்புப்போட்டு விமர்சன்ம் செய்த விஸ்வரூபத்தை, கீழே தள்ளி ஏறி மிதித்துவிட்டது- சத்தியம் திரையரங்கில் மட்டுமல்ல!
உங்களின் ஜென்ம எதிரியான கமலை பாராட்டி எழுதி விட்டார் என்பதாலா ???
இங்கு பின்னூட்டம் இட்டிருக்கும் அன்பர்கள் சங்கரிடம் விமர்சனத்தை எதிர்பார்கின்றார்களா அல்லது ஜால்ராவை எதிர்பார்க்கின்றார்களா ??
பரதேசி திரைப்படம் மோசமான திரைப்படம் என்று சொல்லவேயில்லை. அந்த படத்தில் உள்ள பல நிறைகளையும் சில குறைகளையும் குறிப்பிட்டு விமர்சனம் எழுதியிருக்கின்றார் .
நிறைகள் மட்டும் போட்டு எழுதினால் அதற்க்கு பெயர் ஜால்ரா. விமர்சனம் அல்ல
வருணுக்கு கேபிள் மீது என்ன காண்டு ????****
OPEN your EYES and read the COMMENTS other than mine!
அவங்களுக்கும் கேபிள் மேலே காண்டா??
He gets what he deserves!
Cable knows how to moderate and defend himself if he needs to.
WHY DO YOU speak for HIM???!!!
பாலா மீது துவேஷம் கொண்டவர் என்ற பிம்பத்தை
உடைக்க முயற்சி செய்துள்ளிர்கள் . . .
"படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால் நம்மால் டீ சாப்பிடவே தோன்றாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோன்றவில்லை. இன்று மட்டும் மூன்று டீ குடித்துவிட்டேன். "
படம் ரொம்ப சோர்வு ஆக்குவதை
போட்டு உடைத்துவிட்டீர்கள்
நான் ரெண்டு காபி . . .
படத்தை பத்தி எதுவும் அப்ப தோணலை . . .
காபிக்கு காசை யார் குடுக்குரதுன்ற யோசனைதான்
ஓடுச்சி . . .
இந்த படத்தை இப்படிதான் விமர்சனம் பண்ண முடியும்
இதை விமர்சனமாக படித்தால் அதிருப்தியே
உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ற முறையில் பார்த்தல், உங்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபடுவது சகஜம் தானே
அதே போல் பாலா, உங்களை மாதிரி ஜாம்பவான்கள் குறை சொல்ல முடியாத படம் எடுத்தால் அது எங்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு அதிகம் விஸ்வரூபம் மாதிரி
பரதேசி எங்களுக்கான படம்
விஸ்வரூபம் உங்களுக்கான படம்
"OPEN your EYES and read the COMMENTS other than mine!
அவங்களுக்கும் கேபிள் மேலே காண்டா??"
உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டவர்கள் கேபிளின் விமர்சனத்தில் நிறைவு இல்லை என்றுதான் குறைபட்டார்கள்.
ஆனால் நீங்கள் மட்டும் தான் விஸ்வரூப விமர்சனத்தை இங்கு இழுத்துள்ளீர்கள். விமர்சனத்தில் குறை இருந்திருந்தால் அதை சுட்டி காட்டலாம். எதற்க்கு இங்கு விஸ்வரூபம் பிரச்சினை. விஸ்வரூபம் கேபிளுக்கு நன்கு பிடித்திருக்கின்றது. அது அவர் சார்ந்த ரசனை சம்பந்தப்பட்டது.
உங்களுக்கு கமல் பிடிக்காது என்பதற்க்காக விஸ்வரூபத்தை மொக்கை என்று விமர்சனம் போட முடியாது.
நீங்கள் பிரபல கமல் துவேசி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
("விசுவரூப விமர்சனத்தை பாத்தா சும்மா வம்புக்கு உசத்தி எழுதி இருப்பாக.")
"Paradesi will be one of the best film in world cinema, "
தாங்கமுடியல. Paradesi will be one of the best film in tamil cinema என்று சொல்லியிருந்தால் ஏற்கலாம். அதைவிட்டு இப்படி சொன்னால் ................................. இப்பவே கண்ணை கட்டுதே
இந்த மாதிரி status போடும் இவர்களை என்ன செய்வது ???
- பின்னூட்டப் புலி
Intha unmai Niraya iyakkunarkalukku puriyaamal povathu eno?
Mani, Bharathiraja, shankar, Vijay, kamalhasan endru pattiyal Neelukirathe?
Ok looks like biased.From your recent reviews Viswaroopam has more sympathy because of the things happened before its release and more hatred towards Paradesi its because of the Reality teaser episode.From your recent Tweets in Twitter we can judge your review before particular film's release.These are all changed recently in your reviews.Ok this is my humble opinion.Any how I will always like your write ups.If anything in this comment hurts you please do not approve this one this is for your view only.Thanks Ji
You can do one thing. Review the movie only if you like the director no matter how talented he is. This way, you can avoid writing some fiction.
Shan
how cheap this one....looks like you are going to spend your life by writing biased review only...
please stop writing review and do that in some local tv channel... like charu (your kind)
may god save you....
இவர் விஸ்வரூபம் ஆதரிபார் ....கமல் காரணம் இல்லை ...
விமர்சனம் எழுதாம விட்டா எல்லாரும் கேள்வி கேப்பாங்க
அதனால, ஏனோ தானோன்னு ஒரு விமர்சனம். ஏன் ஏன் கேபிள் இப்படி ????????????
இதுல என்ன கொடுமைன்னா இவ்ளோ வருஷம் சினிமா துறையில இருக்கீங்க, நீங்களே அது வெறும் போலி கம்புன்னு கண்டுபிடிக்கல.
என்னை மாதிரி புதுசா பார்க்கறவங்க என்ன நெனப்பாங்க ?
அப்படி என்னதான் இவ்ளோ வருஷம் அங்க பண்ணிட்டு இருந்திங்கலோ?
இதற்காகவே தாங்கள் விரைவில் 'சினிமா தொழிநுட்பம்' எனும் இன்னொரு கல்வெட்டை எழுதி என் போன்ற, உங்கள் நேர் மிக்க பார்வையும், வழுவற்ற விமர்சனமும், விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட சிந்தனையையும் ஆராதிக்கும் ரசிகர்களின் மனங்களை குளிர்விக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் தங்களை தகைமையை பரிகசிபோருக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.
I have gone through all the comments for this movie 'Paradesi' and read cablesankars review. The review has been written from his point of view using his knowledge got over the years in the cinema industry. It is his freedom, no one can question him. I dont think every one who visits his site for movie review not deciding their priorities. This review is just a view of another person, no need to take literally all the points he mentioned.
Everyone forcing him to write good things about a movie especially 'Paradesi'. He may be biased as some of the comments mentioned. No one is perfect in this world.. Let him write want he wants to convey...
பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.