Thottal Thodarum

Feb 28, 2009

உலக சினிமா - STAR MAKER -


1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்பவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில், ஊர் ஊராக சுற்றி, தான் ரோமில் இருக்கும் கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமமாய் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இவன் படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்களில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று சொல்லி ஏமாற்றுகிறான்.

அப்படி டேரா போட்டிருந்த ஓரு கிராமத்தில் பியாட்டா என்பவள், தன்னை எப்படியாவது பெரிய கதாநாயகியாக்கிவிடுமாறு வ்ந்து கேட்கிறாள். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டு, ஓரு தேவாலயத்தின் ஆதரவில் இருக்கும் தன்னிடம் அவன் கேட்குமளவுக்கு பணம் இல்லை என்கிறாள். ஓரு கட்டத்தில் அவளின் அழகு அவனை இறங்கி வர செய்கிறது. அவளுக்காக அரை பணத்தில் எடுத்து கொடுப்பதாய் பணத்தை வாங்கி அவளை டெஸ்ட் ஷூட் செய்து முடித்துவிட்டு வேறு ஓரு ஊருக்கு புறபடுகிறான். சினிமாவில் சேர அவள் டெஸ்ட் ஷூட் எடுத்ததால் அவளை தேவாலயத்திலிருந்து துரத்தப்பட, எங்கே போவது என்று தெரியாமல் அவனுக்கு தெரியாமலே அவனுடய வண்டியில் ஏறி பயணிக்கிறாள். உள்ளூரில் ஒரு பெரிய மனிதனின் சவ ஊர்வலத்தை படம்பிடித்து பணத்தை வாங்கி கொண்டு எஸ்கேப்பாகும் அவனால் அவளை இறக்கிவிட முடியாமல், பியட்டாவுடனேயே பயணிக்க ஆரம்பிக்க, அவர்கள் இருவருக்கும் ஓரு புரிதல் ஆரம்பிக்க, அப்போது அவனை இத்தாலிய போலீஸார் கைது செய்கிறார்கள்.

சில மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளிவரும் ஜோமொரிலிக்கு அவனுடய பழைய வண்டியில் ஏறிய போது அதில் யாரோ வசித்தது போன்று தெரியவர, போலீஸிடம் விசாரிக்க, பியாட்டா அவன் ஜெயிலுக்கு போன பிறகு கூட அவனுடய வண்டியிலேயே தங்கியிருந்தாக தெரிய வர, கொஞம் காலம் கழித்து வேறு வ்ழியில்லாமல் அவளை துறத்தி விடபட்டதாகவும் சொல்ல, ஜோமொரிலி அவளை தேடி அலைகிறான். நெடு நாள் தேடுதலுக்கு பிறகு ஒரு நாள் அவளை ஓரு அசைலத்தில் பார்க்கிறான்.

மொட்டை அடிக்க பட்டு,ஓரு அடிபட்ட பறவையாய் சுய சிந்தனை இழந்து, தன் அருகிலிருப்பவன் தன்னுடய் காதலன் என்பதை கூட உணர முடியாமல்.. அவனிடமே ஜோமொரிலி வருவான் தன்னை இத்தாலியில் உச்ச நாயகியாய் ஆக்குவான் என்று திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாள் பியட்டா..

சினிமாவின் தாக்கம், சினிமாவில் நடிக்கும் ஆர்வம் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை, ஏன் செவிடு, ஊமைகள் கூட ஆசைபடுவதை, டெஸ்ட் ஷூட்டுக்கு வரும் பல விதமான மனிதர்களின் உணர்வுகளை வைத்தே சொல்லியிருக்கும் விதமும், அதிலும், எல்லாருக்கும், லெப்ட், ரைட், ப்ரொபைல், ஆக்‌ஷன், என்றவுடன் ஒவ்வொருவரும் டயலாக் பேசுவதும், அந்த காட்சிகள் மீண்டும், மீண்டும் வந்தாலும், புதிதாய் தெரிவது இயக்குனரின் திறமை. அதுமட்டுமில்லாமல் சினிமா என்கிற மீடியத்தின்ஆளுமை நம்மை மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாருடய மனதிலும் அந்த ஆர்வமும்,பாதிப்பும் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

அதிலும் ஓரு பெண் தன்னுடய 15 வய்து மகளை எப்படியாவது கதாநாயகி ஆக்க தன்னையே கொடுப்பதாகட்டும், அவளுடன் புணரும் போது அவள் ஓயாமல் லொட,லொடவென தன்னால் ஓரு கதாநாயகியாய் வரமுடியாமல் போனதை பற்றியே புலம்பிக் கொண்டிருப்பதும், அதை கேட்டு எரிச்சலாகி போய் ஜோமொரிலி அவளை திட்டியபடியே புணர்வதும்,போன்ற காட்சிகள் நம் மனதை பிசையத்தான் செய்யும்..

ஜொமொரிலியாக வரும் செர்ஜியோ காஸ்டிலிட்டோவின் நடிப்பு மிக இயல்பு.

பியட்டா.. அசத்துகிற் அழகி.. பல கோணங்களில் அச்சு அசலாய், நம்ம சார்மி போலிருக்கிறார். அவருடய இன்னொசென்ஸும், அழகும், நம்மை கட்டி போடாமல் இருக்காது. டெஸ்ட் ஷூட்டுக்கு பணம் சம்பாதிக்க, ஒரு கனவானுடய அலுவலகத்தில் பெருக்க, போய் அவளை கண்ணாலேயே படம் பிடிப்பதை பார்த்து, முழுசாய் பாக்க வேண்டுமானால் இவ்வளவு பணம் என்று சொல்லி, தன்னுடய் உடைகளை பரபரப்பாக கலைய, கனவான் பதட்டத்துடன் ‘மெதுவா..மெதுவா..” என்று சொல்வது, பார்க்கும் நமக்கும் பொருந்தும் பியடாவின் அழகு அப்படி அசத்தும். அதே போல் பியட்டாவும், ஜோமொரிலியும் அந்த மலைக் குகையில் இணையும் காட்சியில் இருவருக்கும் உளள ரொமான்ஸும், ஓளிப்பதிவு சூப்பர். க்ளைமாக்ஸ் காட்சியின் ஒளிப்பதிவும், காட்சியின் தாக்கமும் நம்மை விட்டு வெகுநாள் அகலாது.

இயல்பான நடிப்பு, வசனங்கள், சீரான திரைக்கதை,அற்புதமான ஓளிப்பதிவு, சிறந்த இயக்கம்,என்று எல்லா விதத்திலும் நம்மை கவரும் இந்த ”ஸ்டார் மேக்கர்”.

1995ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம். “சினிமா பாரடைசோ” புகழ் திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.


Blogger Tips -ஏ.ஆர்.ரஹ்மானின் டில்லி-6, திரைவிமர்சனம் படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 26, 2009

கலைஞர் “டிவி”

அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி

தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின், நான்காவது கட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதை பற்றிய செய்தியை தினசரியில் பார்த்து கொண்டிருந்தபோது, எனது நண்பர் ஒருவர் காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தார். என்னவென்று கேட்டதும் பெரும ஆரம்பித்தார்.

நண்பருக்கும் இலவச டிவி கிடைத்திருக்கிறது. வாங்கி மூன்றே மாதத்தில் வழக்கம் அது தன் வேலைய காட்டி பீஸாகி விட, டிவிக்கு வாரண்டி கார்டு இருக்குமே என்று அதை தேடி பார்த்து, அதிலிருந்த அட்ரஸுகளை தேடியிருக்கிறார். நண்பர் கோடம்பாக்கம் அருகில் உள்ளதால், அருகேயிருந்த கோடம்பாக்கம் அட்ரசுக்கு போய் தேடியிருக்கிறார். தெருமுழுக்க தேடியதில் அதில் குறிப்பிட்டிருந்த 34ஆம் நம்பர் மட்டும் காணவில்லை, மிகுந்த பிரயாசைக்கு பிறகு, தேடியதில் ஒரு குட்டி சந்தினுள், சிறிய பெட்டி கடை போன்ற அமைப்பில் கொஞ்சம் கூட சர்வீஸ் செண்டருக்கான முகாந்திரமும் இல்லாத, ஏதோ துணிகளையெல்லாம், வைத்து ஒரு பெரியவர் வியாபாரம் செய்து கொண்டுருந்திருக்கிறார்.
அட்ரஸ் இதுதானா என்று கேட்டால், ஆமாம் என்று சொல்லி, ஆனால் இங்கு டிவி சர்வீஸ் ஏதும் கிடையாது என்றிருக்கிறார்கள்.

நொந்து போய் சரி அடுத்த சர்வீஸ் செண்டர் எங்கிருக்கிறது என்று பார்த்த போது எக்மோரில் என்றிருக்க, அலைவதற்கு முன் போனில் பேசிவிடுவோம் என்று அதிலிருந்த நமபரில் அழைக்க, எதிர்முனையில் எக்மோர் சர்வீஸ் செண்டர் மாறிவிட்டதாய் சொல்லியிருக்கிறார். புது அட்ரஸ் கேட்டால், வால்டாக்ஸ் ரோடில் ஒரு அட்ரஸ் கொடுத்து வரச் சொல்லியிருக்கிறார். நொந்து போன நண்பர், வேறு வழியில்லாமல், வால்டாக்ஸ் ரோடுக்கு போய் பார்த்தால் வழக்கம் போல் மார்கெட் சந்தில் ஒரு சிறிய பத்துக்கு பத்து அறையில், இரண்டு மூன்று டீவீககள் சர்வீஸுக்கு இருக்க, போனில் பேசியவர் இல்லை, வேறு ஒருவர் டிவியை பார்த்துவிட்டு, ஐசி போய்விட்டதாகவும், நொய்டாவிலிருந்து வரவேண்டியிருப்பதால், வந்தவுடன் சர்வீஸ் செய்து தருவதாகவும் டிவியை கொடுத்துவிட்டு போக சொல்லியிருக்கிறார். சர்வீஸ் கொடுத்தறகான ரசிது கேட்டால் கொடுக்க முடியாதென சொல்லியிருக்கிறார். நண்பரின் பெரும் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல், ஜாப்கார்ட் நம்பரை கொடுத்திருக்கிறார். டிவி திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமலே சர்வீஸுக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் நண்பர்.

ஒரு அரசு இவ்வளவு விமரிசையாய் இலவச டிவிக்களை வழக்கும் போது, அதற்கான சர்வீஸ் செண்டர்களை மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில், நல்ல திற்மையான சர்வீஸ் இன்ஜினியர்களை வைத்து சர்வீஸ் செய்து தர வேண்டியது அரசின் கடமையல்லவா..?

டிஸ்கி:
ஒரு சந்தோஷ செய்தி, இப்படி சர்வீஸ் செண்டருக்காக அலைந்த போது, அண்ணாநகரில் ஒரு சர்வீஸ் செண்டரில், நண்பரது டிவி விடியோகான் கம்பெனியாக இருந்தால், சர்வீஸ் செய்ய முடியாவிட்டால், புதிய டிவி தருவதாய் சொல்லியிருக்கிறார்கள். நண்பரின் விதி. அவரத் டிவி தமிழக அரசின் நிறுவனமான எல்காட்டுடயது.. அரசு நிர்வாக் இயந்திரத்தின் தரம் எவ்வளவு நிதர்சனமாய் தெரிகிறது பாருங்கள்.



Blogger Tips -ஏ.ஆர்.ரஹ்மானின் டில்லி-6, திரைவிமர்சனம் படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 25, 2009

வானமெனும் வீதியிலே..

அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி

எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட உறவுக்காரங்களோட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம்.

நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்து 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி இரண்டு மணி நேரம் முன்னாடி போவது கஷ்டம்தான்.

அவசரமாய் ஹைதைக்கு போக வேண்டியிருந்ததாலும், ரயிலில் டிக்கெட் இல்லாததாலும், இதை சாக்கா வச்சி எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து, ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு நெட்டுல போய் தேடினேன். 6000 ரூபாயிலேர்ந்து டிக்கெட் இருந்துச்சு..கடைசியா ஓரு வழியா “கோ ஏர்” ன்னு ஓரு ஏர்வேஸுல 500 ரூபாய்க்கு டிக்கெட்ன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு புக் பண்ணா..மொத்தமா 2500 ரூபாய் கிட்ட ஆயிடுச்சு.. டிக்கெட் சார்ஜ் 500 ரூபாயாம்.. ஆனா ஏர்போர்ட் டாக்ஸ்,அந்த டாக்ஸ்ன்னு 2000ரூபாயை அமுத்திட்டான். ராத்திரி 10.30 மணி ப்ளைட்டு. ஒண்ணரை மணி நேரம் முன்னாடியே வரணும்னு சொல்லிட்டான். வேற வழி..

ஓரு வழியா கையில லேப்டாப், ஓரு பேக் சகிதமா கிளம்பி, சைதாப்பேட்டையிலேர்ந்து, திருசூலத்துக்கு எலக்டிரிக் ரயில் பிடிச்சி போய் வேர்த்து விறுவிறுத்து போய் சேர்ந்தேன். (செலவ மிச்சம் பிடிக்கிறேனாம்). உள்ளே போனதும் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. ஏன்னா எவ்வளவோ தடவ பல பேரை அனுப்பி வைக்கிறதுக்காக, போயிருக்கேன். அதனால எனக்கு எந்த விதமான ஓரு நர்வஸூம் இல்லை. எனக்கென்னவோ உள்ளே நுழைந்ததிலிருந்து ரொம்ப பழக்கப்பட்ட விஷயமாகதான் தெரிந்தது.

ஓரு வழியா செக்-இன் பண்ணதுக்கு அப்புறம் வேற என்ன செய்யறதுன்னே தெரியல.. சும்மாவே உக்காந்திருக்க பிடிக்கல.. மெல்லமா ஓரு ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சேன்... டெல்லி ப்ளைட்டுக்காக காத்திருந்த நமது மேயர் தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஓரு சேட்டு பையன் ஓருவன் அங்கே இருந்த பேக்கரியில் ஏதோ வேண்டுமென கேட்டு அழ, அவனின் “மா” “நை.. பேட்டா..நை..” என்று அவனை அந்த பக்கதிலிருந்து இழுத்துபோக முயற்சிக்க, அவன் அவளைவிட பலமாய்.. பிடிங்கிக் கொண்டு ஓடினான். ஓரு முஸ்லிம் குடும்பம் கிட்டத்தட்ட ஓரு 15 பேர் இருப்பார்கள் அந்த கேண்டின் அருகிலேயே இருந்து கொண்டு ஆளுக்கு ஆள் மாற்றி,மாற்றி எதையாவது தின்று கொண்டே இருந்தார்கள்.. அதில் ஓரு புர்கா அணியாத ஓரு அமலா..( ம்ஹூம்.. நமக்கில்ல..), அவசர லேப்டாப் யுவதிகளும்,யுவன்களும், ஓவ்வொரு விமான கிளம்பலுக்கும் முன்னால் ஓரு சிறிய பரபரப்பு அங்கே இருக்க, லேப்டாப் யு.யுக்க்ள் கிளம்புகையில் இறுக அணைத்து முத்தமிட்டு கிளம்பினார்கள்.. அவள் வேறு யாருடனோ.. அவன் வேறு யாருடனோ,, வேறு வேறு விமானங்களில்.

கிட்டதட்ட பத்து மணியாயிருச்சு.. ஏர்போர்ட்டுல கூட்டம் கம்மியாயிடுச்சு.. அப்போ என் பக்கதுல ஓருத்தர் வந்து “சார்.. ஹைதரபாத் ப்ளைட் எங்க வரும்னு?”ன்னு என்னை பார்த்து கேட்க, நானும் மனசுக்குள்ள நாலாம் நம்பர் ப்ளாட்பார்மல் தான்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு.. என்ன பார்த்தா புதுசு மாதிரி தெரியல போலருக்கே..னு மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம்

“இருங்க.. அவங்க அனொன்ஸ் பண்ணுவாங்க.” ன்னு சொல்லிட்டு போர்டிங் போர்டை காட்டினேன். 10.45க்கு மாடியில இருக்கிற ஓருகேட்டுக்கு வர சொல்லியது போர்ட். பளைட்டுக்குள் முத முதலா காலடியெடுத்து வைச்சேன்.. சும்மா சிலு, சிலுன்னு தான் இருந்துச்சு.. நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது. என் டிக்கெட்டை பார்த்த அவ எகானமி டிக்கட்டுன்னு சொல்லியதில் ஓரு சின்ன எள்ளல் இருந்தது போல் இருந்தது. சே அடுத்த வாட்டி பிஸினெஸ் கிளாஸ் எடுக்கணும்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டு உள்ளே போனா ஆம்னி பஸ் கூட கொஞ்சம் நல்லா இருக்கும் போலருக்கு,, அதவிட் கீக்கிடமா ஓரு சீட்டிங் அரெஞ்மெண்ட்.. இடுக்கிட்டுதான் போகணும்.. எனக்கு நல்ல வேல விண்டோ சீட் கரெக்டா ரெக்கை பக்கத்தில.. எனக்கு பக்கதில என்கிட்ட ப்ளைட் டைம் கேட்ட ஆசாமி, அவருகூட அவருடய மனைவி, ஓரு கைக்குழந்தை பெண், ஓரு பத்து வயது பையன். அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்.

ஓரு வழியாய் ப்ளைட் கிளம்ப ஆயத்தமாக, சற்றே பெறிய சத்தமாய் ” டகா டக்” என்றது. பக்கதிலிருந்த பெரியவர்..கண்ணை மூடி “பெருமாளே” என்று முணுமுணுத்தார். பக்கதிலிருந்த தன் மனைவியிடம் “நன்னா சேவிச்சிக்கோடி”ன்னு சொல்ல அவங்களூம் “பெருமாளே”ன்னாங்க.. இதற்குள் அவரின் பையன் எழுந்து சார் எனக்கு விண்டோ சீட் தரீங்களா சார்..ன்னு கேட்டு அரிக்க ஆரம்பிக்க, பெரியவர்.. “சார் கொடுப்பார்டா.. அவர் என்ன இப்பதான் ப்ளைட்டுல போறாறா என்ன.. கொடுப்பார்.” என்றார். இப்படி ஏத்தி விட்டே ரணகளமாக்கிறாங்களேன்னு மனசுக்குள்ள ஓட, நான் அவரை பார்த்து மையமாய் தலையாட்டிவிட்டு..

“இப்ப மாறகூடாது சார்.. சீட் பெல்ட் போட்டுக்கோங்க..” அட்லீஸ்ட் டேக் ஆப் பாக்கிற வரைக்குமாவது சீட்டை விடக்கூடாதுன்னு முடிவோட சொன்னேன். ப்ளைட் டேக் ஆப் ஆகும் போது அடி வயிற்றில் ஓரு சின்ன அழுத்தம், ஏற்பட்டு காதை அடைத்தது.. என்ன அழகு மேலிருந்து நம் செனனையை பார்பது அதிலும் கீழேயிருந்து தெரியும் மின்விளக்குளுடன் பார்க்கும் போது சிம்பிளி சூப்பர்ப்..

இப்போது ஹோஸ்டஸ் குட்டிகள் விமானம் ஏதாவது ப்ரச்சனைக்குட்பட்டால் எவ்வாறு முதல் உதவி கருவிகளை உபயோக படுத்துவது என்று செய்முறை விளக்கம் சொல்ல.. பக்கத்து பெரிசு.

”சனியன்கள் கிள்ம்பும் போதே அபசகுனமா ஆக்ஸிடெண்ட் ஆறத பத்தி பேசறதுகள் பார்.என்று திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு அவர் சொன்னது அவ்வளவாக காதில் ஏற்வில்லை ப்ரியாமணி செய்யும் ஆக்‌ஷனெல்லாம் ஹைஸ்பீடில் என்னை பார்த்தபடி செய்ததாக தெரிந்தது. அப்போது திடீரென ஓரு அழுகுரல் பக்கத்து சீட் ஆளின் பெண்ணின் கைக்குழந்தை.. அப்போது அழ ஆரம்பித்ததுதான் அடுத்த ஹைதராபாத்தில் இறங்கும் வரை அழுது கொண்டே இருந்த்து..அந்த குழந்தையை அந்த பெண் “ஓணாம்மா..ஓணாம்மா.. என்று கொஞ்சி சமாதான படுத்த மொத்த ப்ளைட்டிலும் நடந்த படியே இருந்தாள்.

நடுராத்திரி 12.30 மணிக்கு மேல் புது ஏர்போர்டில் வந்திறங்கியதும், தேவலோகம் போல் இருந்தது.. வெளியே வந்து டாக்ஸி கேட்டால் ப்ளைட் விலை கேட்டான்.. அதனால் ஏர்போர்ட் வோல்வோவில் 90 கொடுத்து ஹைதராபாத் சேரும்போது மணி 2. வோல்வோவில் ஏறுகையில் ப்ளைட்டில் கூட வந்த பெரியவர் என்னை பார்த்து “சாருக்கும் முதவாட்டியா? என்றார். எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

எனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு ரயிலோ, கேசினேனில ஸ்லீப்பரோ தான் பெஸ்ட்.


Blogger Tips -தந.07.அல.4777- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 24, 2009

ஏ.ஆர். ரஹ்மானின் - DELHI -6 - Hindi Film Review

அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி


ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நினைய விருப்பமா..? அப்படியென்றால் உடனடியாய் டெல்லி-6 ஐ பார்கவும். படம் நெடுகிலும் பொங்கி வழியும் காதலாகட்டும், கோபமாகட்டும், கவாலியாகட்டும், பிண்ணனி இசையாகட்டும், மனுஷன் சும்மா பொங்கி பிரவாகமாகியிருக்கிறார்.

படத்துக்கு வருவோம். ரங்கே தே பஸந்தி திரைபடத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ஒரு இந்துவுக்கு, முஸ்லிமுக்கும் பிறந்த அபிஷேக் தன் பாட்டியின் கடைசி கால ஆசையின் காரணமாய் டெல்லி-6 வருகிறான். அங்கு இருக்கும் தஙகளின் பழைய வீட்டில், செட்டிலாகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்து எதை பார்த்தாலும் ‘ஆவ்சம்’ என்றபடி, சந்தோசப்பட்டுக் கொண்டு, பார்பதையெல்லாம் ஆச்சர்யத்தோடு இருப்பவன், மெல்ல மெல்ல தனக்கே தெரியாமல் இங்கேயுள்ள சமூக அமைப்பின் பிரச்ச்னைகளில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து அவர்களை மீட்க போராடுவது என்பது தான் கதை.

இண்டியன் ஐடியலாக ஆசைப்படும் பக்கத்து வீட்டு பெண் பிட்டு, அவளின் அப்பா ஓம்பூரி, அவரது ஜென்ம பகையாளியாக ஓரே வீட்டிற்குள் ஒரு சுவரை எழுப்பி பிரிந்து வாழும் அவரது தம்பி, அவரது மனைவி, ஜிலேபி போடும் முஸ்லிம் இளைஞன், கோயில் பூசாரி அதுல் குல்கர்னி, சமீபத்தில் புதிய சின்ன வயசு பெண்ணை திருமணம் செய்திருக்கும் லால்ஜி பிரேம்சோப்ரா, கையில் ரசம் போன கண்ணாடியை வைத்து கொண்டு திரியும் பைத்தியக்காரன், பலரின் ஆசைகளை தூண்டி விட்டு அதில் குளிர்காயும் போட்டோகிராபர் சைரஸ், தெருவில் குப்பை பொறுக்கும் பெண், எதற்கெடுத்தாலும் கை நீட்டி அடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் ராஸ், இந்து முஸ்ஸிம் என்று பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் கல்கண்டு கொடுக்கும் முஸ்லிம் பெரியவர், ஆண்டனா சாமியார், பஜ்ரங்தள் எம். எல். ஏ என்று விதவிதமான கேரக்டர்களை வைத்து ஒரு ஜுகல்பந்தியே நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

இதற்கு நடுவில் படத்தின் ஆரம்பத்திலிருந்து குரங்கு மனிதன் ஒருவன் டெல்லியை சுற்றி வருவதாய் வதந்தி பரவி, அது கடைசியில் அந்த குரங்கு மனிதன் இந்துவா, முஸ்லிமா என்கிற பிரச்சனை முற்றி தாயாபிள்ளையா பழகின இரு மதத்தினரிடமும், பிரிவினை ஏற்பட்டு ஏரியாவே கந்தர்கோளமாகிவிட, இதனிடயில் அபிஷேக்குக்கு, பிட்டு மேல் காதல் வந்துவிட, பிட்டுவின் அப்பா ஓம்பூரி அவளுக்கு திருமணம் செய்ய வேறு மாப்பிள்ளை பார்த்ததால் இந்த களேபரத்தில் வீட்டைவிட்டு கேமராமேன் சைரசுடன் ஓட முயல, அதிலிருந்து தன் காதலியை காப்பாற்றுவதற்காக, குரங்கு மனிதன் வேஷத்தில் அபிஷேக் போக, மக்களிடையே மாட்டிக் கொண்ட அபிஷேக் அவர்களாலேயே அடித்து போடப்பட, என்று பதைபதைப்போடு எடுத்திருக்கிறார்கள்.

ரஹ்மானின் இசை படம் நெடுகிலும் பரவியிருக்கிறது. அதிலும், மடக்களி என்கிற அந்த பாடல், சூப்பர். அதே போல் பெண்கள் எல்லாம் ஊறுகாய் போடுவதற்காக மாடியில் உட்கார்ந்தபடி ஒரு லோக்கல் பாட்டை பாட, அதை அப்படியே வெஸ்டர்ன் பீட்டுக்கு மாற்றி நம்மை எழுந்து ஆட செய்கிறார். அதே போல் பின்னால் வரும் கவாலி பாடல் மனதை உருக்கும். அதை தியேட்டரில் படத்தோடு பார்த்தால் தான் உணரமுடியும்.

அபிஷேக் அழகு, மிக ஈஸியாய் நடித்திருக்கிறார். அதே போல் அவரின் அப்பாவின் நண்பராய் வரும் ரிஷிகபூர், அபிஷேக் அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை? ஏதாவது காதல் மேட்டரா? என்று கேட்கும் போது, ஆமாம்.. அந்த பெண்ணை உங்கப்பா தூக்கிட்டு போயிட்டார் என்னும் இடத்தில் அபிஷேக்கின் எக்ஸ்பிரஷன் அருமை.

பக்கத்து வீட்டு பிட்டுவாக சோனம் கபூர். இயல்பாய் நடிக்கிறார். அழகாய் இருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற இயல்பு. ஒம்பூரியும், அவரது தம்பியும் சரிக்கு நிகர் சரி சமமாக பின்னியிருக்கிறார்கள். படம் முழுக்க வரும் கேரக்டர்கள் யாரும் சோடை போகவில்லை.

இயக்குனர் ராகேஷ் மிக இயல்பாய் கதையை ஆரம்பித்து, படத்தில் ஆரம்பம் முதலே குரங்கு மனிதன் கேரக்டரை, நம் மனக்குரங்கின் உருவமாக சித்தரித்திருப்பது அருமை. அதே போல் ஓவ்வொருவரும் மனிதகுரங்கை தங்கள் பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கும், அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறுவதற்க்கும் எப்படியெல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதை கேமராகாரன் சைரசுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் வயதானவரின் பெண்டாட்டி தன் கணவனிடம் மாட்டாமல் இருப்பதற்காக குரங்கு மனிதன் தன்னை கெடுக்க வந்ததாய் கதை கட்டி விடுவதும், அரசியல்வாதிகளும், டிவிக்காரர்களும் ஒண்ணுமேயில்லாத பிரச்சனையை பெரிதாக்கிவிடுவதும், ராம்லீலா நாடகத்தை ஒரு கதாபாத்திரமாகவே உபயோகித்திருப்பதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஹாட்ஸ் ஆப். ராகேஷ்.

பினோத் பர்தானின் ஒளிப்பதிவு அருமை.டெக்னிக்கலாய் ஒரு குறையும் சொல்ல முடியாது. படம் முடிந்தவுடன் அங்கேயிருக்கும் ஒரு கண்ணாடியில் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களும் தங்களுடய முகத்தை பார்த்து கொள்வது போல் ஒரு காட்சி வரும். அதில் ஒவ்வொருவரின் முகபாவனைகளை பாருங்கள் அவர்களின் மனகுரங்கின் சேஷ்டைகளை. சூப்பர். மெதுவாய் சென்றாலும் படம் பார்த்துவிட்டு வரும் போது கொஞ்சம் மனதுள் அசைபோடும்படுயான படம்.
டெல்லி-6


Blogger Tips -தந.07.அல.4777- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 23, 2009

த நா. 07.அல.4777 - திரைவிமர்சனம்

மூன்று அஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எ.ஆர்.ரகுமானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி... நன்றி.. நன்றி.

ஆங்கிலத்தில் Changing Lanes என்கிற பெயரில் சாமுவேல் ஜாக்சனும், பென் அஃலெக்கும் நடித்த படம். அது அப்படியே இந்தியில் டாக்ஸி நெ.9211 என்கிற பெயரில், நானா படேகர் நடித்த வெளிவந்தது, இதனின் தமிழ் பதிப்புத்தான் பசுபதி, அஜ்மல், மீனாட்சி ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள தநா.07.அல.4777.

வீட்டில் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு, கால்டாக்ஸி டிரைவராய் வேலை பார்க்கும், முன் கோபக்கார பசுபதி. மிகப் பெரிய கம்பெனியின் வாரிசான கவுதம் ஐய்யங்காருக்கு தன் சொத்தை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கோர்டுக்கு போய் கொண்டிருக்கும், திமிர் பிடித்த பணக்கார திமிர் பிடித்த ஒரு முதலாளீத்துவ இளைஞன், அவனின் காதலியாய் மீனாட்சி.

மேற்சொன்ன இருவரும் ஒரு சந்தர்பத்தில் பசுபதியின் காரில் பயணம் செய்ய நேரிடுகிறது. அந்த நிகழ்வு அவர்கள் இருவரது வாழ்கையையும் புரட்டி போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்? என்பதை பரபரப்பான ஒரு இரண்டு மணி நேர பயணமாய் கொடுத்திருக்கிறார்கள்.

சாமுவேல் ஜாக்சன், நானாபடேகர், ஆகியோருடன் பசுபதியை கம்பேர் செய்தால் பல மாற்று குறைந்ததாகத்தான் தெரியும். ஆனால் தனியே பார்த்தால் பசுபதி மின்னுகிறார். அஜ்மலுக்கு திமிர் பிடித்த ஹெப்பான வேடம், ஹெப்பாகவே செய்திருக்கிறார். மீனாட்சி குத்தகைக்கு விட்டிருந்த அடக்க ஒடுக்கத்தை விட்டு வெளியேறி மதர்த்த மார்பை, மிதத்தபடி வருகிறார். பசுபதியின் மனைவியாய் சிம்ரன். மேடம் பேசாமல் நீங்கள் சீரியல் பக்கமே இருக்கலாமே.. உங்கள் முகத்தில் அதற்குரிய எல்லா தகுதிகளும் உள்ளது. பாக்க முடியல.. பார்க்கும் போதெல்லாம் உங்க பழைய முகம் நினைவுக்கு வருது.

இயக்குனர் லஷ்மிகாந்தன் ஒரிஜினல ஹிந்தியின் பதிப்பை மறுபதிப்பிட்டிருக்கிறார். பல இடங்களில் கட்டின்யூட்டி மிஸ்ஸிங். மற்றபடி குறை சொல்ல ஏதுமில்லை. நீட்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலில் ஏற்கனவே ஹிட்டான சுராங்கணியின் மறுபதிப்பான ஆத்திச்சூடி ஹிட்.. பிண்ணனி இசையும் ஓகேதான்.

R.B.குருதேவின் ஒளிப்பதிவு உற்சாகம் அளவுக்கு இல்லையென்றாலும் குறையில்லை, எடிட்டிங் நறுக் என்று எல்லா விஷயங்களீலும் எந்தவித குறையுமில்லாமல் நீட்டான ஒரு டிரைவ்..

தநா.07.அல.4777 - நல்ல வண்டி..


Blogger Tips -லாடம் - திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 21, 2009

லாடம் - திரை விமர்சனம்



கொக்கிக்கு பிறகு கொஞ்சம் வித்யாசமான மேக்கிங் உள்ள படங்களையே அளித்து வந்த பிரபு சாலமனின் அடுத்த படம். சென்ற படஙக்ளை போலவே வித்யாசமான ஒரு கதை களத்தை எடுத்து கொண்டிருக்கிறார்.

ஊரிலிருந்து சென்னையில் வேலைக்கு சேருவதற்காக வந்த குஞ்சிதபாதம் என்கிற இளைஞனை, அவன் தங்கியிருந்த ரூமில் உள்ள சுப்ரமணீயத்த்க்கு பதிலாய் “பாவாடை சாமி’ என்கிற ஒரு ரவுடியின் கும்பல் தூக்கி கொண்டு போக, பாவாடை சாமியின் எதிரியான வேம்புலி பாவாடையின் மகனை போட்டு தள்ளிவிட, வேம்புலியை அழிக்க பாவாடையால் அனுப்பப்படும் ஆட்கள் எல்லாம் இறந்து போய் போட்டோவாக வர, தன் ஓட்டை வாயால் ஐடியா கொடுக்கிறேன் பேர்விழி என்று நம்ம குஞ்சிதபாதம் மூளையை யூஸ் பண்ணனும் என்று எதையோ சொல்ல, 16 நாளுக்குள் தன் எதிரி வேம்புலியை அவன் தான் கொல்ல வேண்டும், அப்படி கொல்லாவிட்டால் 17 அவனுக்கு பால் என்கிறான். அடுத்த நிமிஷமே எதிர் வீட்டு வேம்புலியிடமும் மாட்டி விடுகிறான். வேம்புலி அவனை உயிரோடு புதைக்க, அவன் அதிலிருந்து தப்பித்தானே..? 16ஆம் நாள் வேம்புலியின் மகனை கொன்றானா..? இடையில் அவனுக்கு சார்மிக்கு ஏற்படும் காதல் என்னவாயிற்று என்பதை போன்ற பல கேள்விகளுக்கு, பல சமயம் இன்ட்ரஸ்டாகவும், சில சமயங்களில் சொதப்பியும் இருக்கிறார்கள்.

புதுமுகம் அரவிந்தனின் நடிப்பு பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார், அவரது ஒல்லியான உடம்பும், ரவிகிருஷ்னாவின் குரலும் அவர் மேல் அப்பாவி முத்திரை ஈஸியாய் விழுந்து விடுகிறது. படம் நெடுக ஓடுகிறார், ஓடுகிறார், ஓடிக் கொண்டேயிருக்கிறார், புலம்புகிறார், காதலிக்கிறார்.

சார்மி.. ரொம்ப நாளுக்கு அப்புறம் தமிழில், முன்பு பார்த்ததை விட நல்ல மத, மதர்ப்பாக இருக்கிறார், அதற்க்காகவே அவரை பார்த்து கொண்டிருக்கலாம், படம் முழுக்க அவருக்கான கேரக்டரில் பெரிய ஓட்டையிருப்பதால், பெரிதாய் அவரோடு ஓட்ட முடியவில்லை.
அந்த ஃப்ர்ஸ்ட் நைட்டில் அவர் முந்தனையை அவிழ்த்து போடும் போது, ம்..ஹூம்ம்ம்ம்ம்ம். முடியலை.. ஏசி தியேட்டரில் வேர்த்தது.

பாவாடையாய் கோட்டா சீனிவாசராவ்.. மனுசம் வழ்க்கம் போல் பின்னுகிறார். அவரின் வழக்கமான அடிவயிற்றிலிருந்து பேசும் முறையிலேயே பேசியிருந்தாலும், படம் முழுவதும் கலக்கியிருக்கிறார். அவரின் எதிர்வீட்டு எதிரி வேம்புலியாய் தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ்.. சொல்லிக் கொள்ள பெரிசாய் இல்லை. அவரின் அமுல்பேபி உடலுடன் ஒரு மாதிரியான எக்ஸென்டிரிக் கேரக்டராய் வரும் அவரின் மகன் கேரக்டர் சூப்பர். அவர் எதாவது பிகரை பார்த்ததும், மனதுக்குள் கவிதை சொல்வதும், வாயிலிருந்து பால் வழிவதும் நல்ல கற்பனை.
இவரின் அடியாளாய் அடிதடி படத்தின் இயக்குனர் சிவராஜ் நடித்துள்ளார். ஏன் நல்லாத்தானே போயிட்டிருந்தது.

படத்தை தாங்கி நிற்பவர் ஒளிப்பதிவாளர்.. மனுஷன் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். படம் பூராவும் அவரும் கூடவே ஓடுகிறார், நிற்கிறார், மூச்சு வாங்குகிறார், காதலிக்கிறார், என்று பரவி முழு திறைமையையும் வெளிப்படுத்தியிருக்கும் சுகுமாருக்கு ஒரு சபாஷ்.

அதே போல் எடிட்டிங்கும் அவர் பங்குக்கு அவரும் சிறப்பாகவே செயல் பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் தரனின் இசை பெரிதாய் எதையும் செய்யவில்லை, மிக, மிக இறைச்சலான பிண்ணனி இசை. அப்புறம் படம் முழுவதும் பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை, ஒரு வேளை மிக்ஸிங்கில் ப்ராப்ளம் என்றால் ஓரே இரைச்சல்.

இயக்குனர் பிரபு சாலமன் மீண்டும் ஒரு முறை தன்னுடய மேக்கிங், மற்றும் ஒரு ரேசி கருவை வைத்து கொண்டு ஆட்டத்துக்கு வந்திருக்கிறார். வேம்புலியின் மகன் அவன் அடியாட்களுடனும், ஹீரோவிடமும் நடத்துகிற கிறுக்குதனமான காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு ப்ரெஞ்ச் படமோம் ஆங்கில படமோ தெரியவில்லை.. சரியாய் உபயோகபடுத்தியிருக்கிறார். ஆங்காங்கே lucky number selvinனின் வாடையும் அடிக்கிறது.. பின் பாதியில் திரைக்கதையிலும், க்ளைமாக்ஸிலும், மொத்ததில் ஒரு சில கேரக்டர்களிலும் கவனம் செலுத்தியிருதால் ஒரு வெற்றி படம் நிச்சயமாகியிருக்கும்.

லாடம் - சரியாய் அடிக்கபடவில்லை.

டிஸ்கி : இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் 16 Days என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது.. அதனால் தானோ படத்தின் க்ளைமாக்ஸில் ஹீரோ பேசும் வசனங்களீல் லிப் சிங் மிஸ்ஸிங்..


Blogger Tips -சிவா மனசுல சக்தி- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 20, 2009

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.

2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..?

3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..?

4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.?

5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..?

6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..?

7 . அதிலும் சில பேர்(கே.சங்கர் போன்றோர்) போட்டோ போடறேன்னு படு கேவலமான கேமராவில இங்கிலிஷ் பேய் படம் பார்கிற எபக்டுல லைட்டே இல்லாம பதிவர்கள் படங்களை போட்டு பயமுறுத்துவது ஏன்..?

8 . பதிவு பூராவும் அந்த விஜ்ஜெட், இந்த விஜ்ஜெட்னு கண்டதையும் போட்டு, பேஜ் ஓப்பன் ஆவறதுக்குள்ள எங்க தாவு தீர வைக்கிறது ஏன்? மொக்கை பதிவெல்லாம் கூட தமிழ்மண சூடான பதிவில் வருவது எப்படி?

9 . சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்?

10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?



Blogger Tips -சிவா மனசுல சக்தி- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 19, 2009

வி.த.வ.போ.படம்- Happy Days


ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம்.

தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா..

மேல் தட்டு குடும்பத்திலிருந்து வரும் அழகான மது. (சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை நாயகி மதுவிக்கு சரியான் பொருத்தம்.. அவர் தான் நடிக்கிறார்.)


அதிபுத்திசாலியான ரொபாடிக்ஸில் ஆர்வம் உள்ள அப்பாவியான டைசன்..

ஏழை குடும்பத்திலிருந்து சீட் கிடைத்து எப்படியாவது முதல் மாணவனாக வேண்டும் என்ற வெறியோடு சேரும் செல்ஃபிஷான சங்கர்.

டொனேஷன் சீட்டில் காசு கொடுத்து சேரும் புரத்ட்டூர் எம்.எல்.ஏ. பையன் ராஜேஷ்.

தன் அழகை பற்றி, அவ்வளவாக கவலைபடாடத, ஆண்பிள்ளை போல் நடந்து கொள்ளூம் அப்பு என்கிற அபர்ணா.

கண்களாலேயே பேசும் சீனியர் ஷாரப்ஸ்,


ஸ்ரீகாக்குளத்திலிருந்து, தெலுங்கு மீடியத்திலிருந்து வரும் மாணவன், வெளிவட்டார பழக்கமே இல்லாமல் வீட்டிலிருந்தே படித்து காலேஜிக்கு வரும் பாண்டு, குண்டு சீனியர், ஜூனியர் மதுவை காதலிக்கும் சினியர் கேரக்டர்கள் என்று எல்லா கேரக்டர்களும் நாம் பார்த்து, மகிழ்ந்த நண்பர்கள் போலவே தெரியும்.

இவர்களுக்குள் நடக்கும் அந்த நாலு வருட வாழ்கை அவர்களுக்கு என்ன என்ன கற்று தருகிறது என்பதை அவ்வளவு இயல்பாய் சொல்லியிருக்கிறார். இவர்கள் எல்லோரும் நட்பு எவ்வாறு உருவாகி இருக்கமாகிறார்கள்? சந்துவிக்கும், மதுவிக்கும், அப்புவுக்கும் ராஜேசுக்கு, டைசனுக்கும் சீனியர் ஷாரப்ஸுக்கும், சங்கருக்கும், சங்கீதாவுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதற்கு அப்புறம் நடக்கும் ஊடல், மோதல், அவர்களின் உறவு பலப்படுதல்,அந்த உறவின் காரணமாய் அவர்கள் வாழ்கையில் பெரும் வெற்றி தோல்விகள் என்று படம் முழுவதும் வாழ்ந்த உணர்வு உங்களுக்கு வந்தே தீரும்

சங்கரின் காதலி சங்கீதாவின் வரவால் நன்றாய் படிக்கும் மாணவன் அரியர்ஸ் வைப்பதும், அவள் அவனை ஏமாற்றி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த டைசன், அவனுக்காக தன்னுடய கம்ப்யூட்டர் சயின்ஸ் குருப்பை விட்டு கொடுத்த டைசன், அவளை நம்பாதே என்று சொல்லும் போது அவன் டைசனை அடிக்க, அவன் ஓரு செல்பிஷ் என்று தெரிஞ்சிகிட்டே அவனுக்கு போய் அட்வைஸ் பண்றியே அவனுக்கு பிரண்ட்ஷிப் வேல்யூவே தெரியாது என்று சந்து சொல்ல.. அப்போது டைசன் அவனுக்கு தெரியலைன்னா என்ன நாம அவனுக்கு பிரண்ட்தானே என்று சொல்லும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ராஜேஷ், அவனுக்கு ஹெல்ப் பண்ணும் அப்பு, இடையில் வரும் இங்கிலீஷ் லெக்சரர் கமலினி முகர்ஜி.. என்று கலந்து கட்டிய ஓரு சுகானுபவம்.. படத்தில் அங்காங்கே ஃபாண்டஸியாய் காட்சிகள் வந்தாலும் அந்த வயதில் பாண்டஸியில்லாத வாழ்கை இருந்திருக்குமா?

சந்துவிக்கும், மதுவுக்கும் இடையே காதல் அரும்புவதற்கு முன்பே அவளை கிஸ் கேட்க, அவளின் அப்பா.. அதை கேட்டு விட அதனால் அவமானம் அடையும் மது என் தந்தையிடம் மன்னிப்பு கேட்ட்டல்தான் என்று சொல்ல.. என்னனு மன்னிப்பு கேட்க, உங்க பொண்ணு கிட்ட கிஸ் கேட்டேன் சாரி ன்னா. அது என்னால் முடியாது.. என்பதில் ஆரம்பித்து ஈகோவினால் இருவரும் இரண்டுவருடத்திற்கு பேசாமல் ஓன்றாகவே இருப்பதும், புதிய ஜூனியர் பெண் சந்துவுடன் பேசுவதை பார்த்து பெருமுவதும், அழகான கவிதை..

ஜூனிய்ர் டைசனுக்கும், சீனியர் ஷராப்ஸுக்கும் இடையில் ஏற்படும் காதலை ஏற்றும் ஏற்காமலும் தன்னுடய கோல் வேறு எதிலும் நான் கட்டுபட்விரும்பவிலலை என்றும், டைசன் அவளுக்குகாக் எங்கும் போனாலும் எனக்காக ஓரு சான்ஸ் வரும் வரை காத்திருப்பேன் என்பதும். இந்த காட்சியில் காதலை சொல்லி, அல்லது சொல்லாமல் நாம் காலேஜில் வாழ்ந்த காலங்களை உங்கள் கண் முன் வரவில்லை என்றால் அது மிகப் பெரிய பொய்.

இவர்களின் காலேஜ் வாழ்கையின் முடிவில் கல்லூரி முதல்வர் அவர்களை அழைத்து, இதுநாள் நீங்கள் வாழ்ந்தது உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஹேப்பி டேஸ்.. இத்தோட முடிய போகுது.. இனிமே வரப்போற் நாட்கள் உங்க்ள் வாழ்வில் ஏற்படப்போகும் பர்பஸ்புல் டேஸ். என்பது நிதர்சனமான உண்மை என்பதை நாம் கல்லூரியின் கடைசி நாள் அன்று உணர்ந்திருப்போம்.


அற்புதமான ஓளிப்பதிவு, மைக்கேல்.ஜே.மேயரின் அற்புதமான இசை, நடித்த அனைவரும் புதுமுகங்கள். என்று சத்யம் செய்தால் தான் நம்புவீர்கள்.. கமலினி முகர்ஜி தவிர.. இயல்பான வசனங்கள்.. மனதை வருடும் ரிரிக்கார்டிங்.. அற்புதமான இயக்கம் என்று எதையுமே குறை சொல்ல முடியாத படம்.


படத்தை பார்த்தவர்கள் காலேஜ் என்றால் நட்பு, காதல், இதைதவிர வேறேதும் கிடையாதா.. இதையெல்லாம் பெரிய ப்ராப்ளமா என்று கேட்பவர்களுக்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் படிக்கும் போது எதிர்கால இந்தியா பற்றியா நினைத்து வாழ்ந்திர்கள் என்று.. படத்தை பார்க்கும் போது அவர்களின் வாழ்கையாய் படத்தை பார்த்தால் இழந்த ஹேப்பிடேஸை நமக்கு கொண்டுவரும் படம்.. அட்லீஸ்ட் நிஜத்தை மற்கக...

இயக்குனர் சேகர் கம்மூலாவை பற்றி..

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த இவர் திரை துறையின் மேல் உள்ள் ஆர்வத்தால் வேலையை விட்டு முதல் முதலாய் “டாலர் டிரீம்ஸ்” என்ற படத்தை இயக்கினார். அதில் அவருக்கு ஓரு அடையாளம் தெரிய, அடுத்து, “ஆனந்த்” என்ற் ஓரு இனிமையான படம், அதற்கு அப்புறம் “கோதாவரி’என்ற ஓரு அருமையான் காதல் கதை, இப்போது “ஹேப்பி டேஸ்” அடுத்த படத்துக்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன்..

டிஸ்கி : Happy days படத்தை தமிழில் தயாரிப்பதாய் பிரகாஷ்ராஜ் உரிமை வாங்கி வைத்துள்ளார். ஓளிப்பதிவாளர் குகன் இயக்குகிறார். முழுக்க, முழுக்க,புதியவர்களை கொண்டு தயாரிக்க படும் இப்படத்தில் தெலுங்கில் நடித்த சோனியா மட்டும் தமிழிலும் தொடர்கிறார். எனக்கு கூட அந்த கேரக்டரில் வேற ஓருவரை பார்க்க மனம் இடம் கொடுக்க வில்லை. ஹூம்.. சோனியா..

வி.த.வ.போ. படம்னா.. விரைவில் தமிழில் வரப் போகும் படம்..

படித்ததில் பிடித்தது
"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???

திவ்யா அவர்களின் பதிவிலிருந்து.. மேலும் படிக்க


Blogger Tips -சிவா மனசுல சக்தி- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 18, 2009

விலைவாசி...

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

நாட்டின் பொருளாதாரம் சூப்பராய் இருந்த காலத்தில் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட், காய்கறிகள், மளிகை சாமான்கள் என்று எல்லாமுமே ஏறுமுகமாய் இருந்தது. அப்போது இதற்கெல்லாம் காரணம் இந்த சாப்ட்வேர் ஆசாமிகள் என்று மற்ற துறையினர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அவர்களால் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் போன்றவைகள் விண்ணை தொடும் அளவுக்கு ஏறியது.

பின்பு நாட்டில் பணவீக்கம் அதிகமாகி பொருளாதாரம் சிக்கலான போது, அதை காரணம் காட்டி விலைவாசி கிடுகிடுவென ஏறியது. ஸ்டார் ஹோட்டலிலிருந்து, கையேந்திபவன் வரை அசுர வேகத்தில் ஏறியது. ஒரு ரூபாய் பரோட்டா 2.50 ஆனது, வாட்டர் பாக்கெட் கெட்ட கேட்டுக்கு 1.50 ஆனது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள் எல்லாமே ராக்கெட் விலை உயர்வு உயர்ந்தது. அதற்கு காரணம் காட்டியது பெட்ரோல் விலையையும் தான்.

ஹோட்டல்களில் பொதுமக்கள் சாப்பாட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமையில், அரசே தலையிட்டு மலிவு விலையில் சாப்பாடு கொடுக்க சொல்லி உத்தரவிட்டது தெரிந்ததே.. அது வெறும் உத்தரவாய் போனதும் தெரிந்ததே.

எல்லாம் இப்படியிருக்க, இன்றோ.. பணவீக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், பொட்ரோல் விலை உலக மார்கெட்டில் 37 டாலருக்கு குறைந்துவிட, மந்திய அரசு பெட்ரோல்விலையை குறைத்தும் கூட, ஏதோ காய்கறி விலைகளில் மட்டுமே கொஞ்சம் கீழிறங்கி வந்திருக்கிறது நம் நாட்டில் உணவு தானிய விலைகளிலோ, ஹோட்டல்களீலோ, அத்யாவசிய பொருட்களின் விலையிலோ எந்தவிதமான மாற்றமும் வரவில்லை.

எனக்கு தெரிந்து விலைவாசி குறைந்து இருக்கிற ஒரே துறை ரியல் எஸ்டேட் மட்டும்தான்.
இடைதரகர்களாள் ஏற்றிவிடப்பட்ட மார்கெட் இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவர் என்னிடம் வீடு ஒன்று புதிதாய் கட்டி முழு வீட்டிற்கான பணத்தையும் லோன் போட்டு கொடுக்க ரெடியாய் உள்ளார்கள், உங்களுக்கு வேண்டுமா? என்று கேட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

விலைவாசி உயர்வுக்கு காரணமாய் சொன்ன சாப்ட்வேர் ஆசாமிகளின் நிலை பற்றி இப்போது சொல்ல தேவையில்லை. பணவீக்கம் தான் காரணம் என்றால் அதுவும் குறைந்துவிட்டது, பின் ஏன் இந்த நிலை.. இதற்கெல்லாம் யார் காரணம்?.. இதை கண்ட்ரோல் செய்ய தவறிய அரசாங்கமா..? அல்லது வியாபாரிகளா.. அல்லது நடுவில் இருக்கும் இடைதரகரகளா..?

யாராக இருந்தாலும் சரி.. பாவம் பொதுமக்கள் நாங்க.. முடியல.. வலிக்குது.. எவ்வளவுநாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. தயவு செஞ்சு கருணை வையுங்க..


Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 15, 2009

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..
ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் தமிழ் திரையுலகமே பரபரப்பாகிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள். ரஜினி கையை காட்டினால் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துவிடும் என்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே பூபூத்த நந்தவனமாகிவிடும் என்று மிகைப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது.

தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். உண்மை என்னவென்றால், அந்த சமயத்தில் காங்கிரஸிலிருந்து மூப்பனார் தா.மா.க என்று தனியே கட்சி ஆரம்பித்திருந்தது, அது மட்டுமில்லாமல், ஜெயலலிதா, சசிகலா, நகை கடை பொம்மைகளாய் உலா வந்த வளர்ப்பு மகன் திருமணமும், அவர்களின் ஆட்சியில் சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், சன் டிவியின் பிரசாரமும் செய்யாத விஷயத்தை ரஜினி சொன்னதால் நடந்தது என்று கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது..?

அடுத்து நடந்த தேர்தலில் அதே போல் “ஜெ’யின் எதிர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஜெயித்தது என்னவோ ‘ஜெ’தான். அப்போது எங்கே போனது ரஜினி என்கிறவரின் மந்திரச்சொல்..??

அதற்கு அப்புறம்,அவர் விட்ட அறிக்கைகள், அவரின் சினிமா பஞ்ச் டையலாக்குகளை விட பெரிய ஸ்டெண்ட். அப்படி ஜெயலலிதாவை பற்றி சொன்னவர், அப்படியே உட்டாலக்கடி அடித்து, ஜெயா பங்கு பெற்ற ஒர் விழாவில் அவரை பாராட்டினார். அதே போல் இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாய் ஒர் அறிக்கை, ஆனால் என்ன நடந்தது என்று நாடறியும். கேட்டால் என்ன சொல்வார் திட்டத்தை ஆரம்பித்தால் செய்கிறேன் என்பார்.

இவரது பாபா படத்தை எதிர்த்து பமகவினர் செய்த பிரச்சனைக்கு எதிராய், அவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று சொன்னார்.. ஆனால் நடந்தது என்ன என்பது..??
அதே போல் தற்போது நடந்த குசேலன் பட பிரச்சனைக்காக, கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டது..? என்று இவர் அடித்த அந்தர் பல்டிகளை, தமிழ்நாடே பார்த்தது சிரித்தது,அவரின் ஆதரவாளர்களுக்கும் தெரியும். அரசியலுக்கு வருவேன், எப்ப வருவேன், யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் வருவேன் என்று ஒவ்வொரு படம் ரிலீஸுக்கு முன்பும், தன் ரசிகர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி ஏற்கனவே பரபரப்பாய் இருக்கும் தன்னுடய படம் பற்றிய ஒரு பிரி ரிலீஸ் ஹைப்பை ஏற்படுத்திவிட்டு பின்னால் அதெல்லாம் சினிமாவுல டைரக்டர் சொல்லி பேசுறது அதுக்கு எனக்கும் சம்மந்தமில்லைனு சொல்லுவார். ரஜினியை நம்பி எவ்வளவு முறை அவரது ஆதரவாளர்கள் அவமானப்பட்டு ஏமாந்தார்கள் என்பதை எண்ணி கணக்கிலடங்காது. இருந்தாலும் கண்மூடிதனமாய் அவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியிருக்க, சமீபத்தில் ரஜினி பாலாவின் நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.

ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு ஏற்படும் ஒரு எதிர்பார்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய ஒரு மாபெரும் இயக்குனர் பாலா. ஒரு இயக்குனருக்காக, அதுவும் இந்நாள் வரை வித்யாசமான சீரியஸ் படங்களை வெற்றி படஙகளாய் தந்த ஒரு இயக்குனருக்கு உலகம் முழுவதும் கிடைத்திருக்கும் ஓபனிங் பாலாவை தவிர வேறு யாருக்கும் கிடைத்திருக்க முடியாது.

ரஜினி பாராட்டினா படம் ஓடிரும்னா அவரோட நாட்டுக்கு ஓர் நல்லவன்,பாபா, குசேலன் எல்லா ஓடியிருக்க வேண்டியது தானே..? குசேலன் படத்து க்ளைமாக்ஸுக்கே 25 வாரம் ஓடும்னு சொன்னாரு, 25 நாள் கூட ஓடல, இவரால ஒரு பெரிய கம்பெனி இழுத்து மூடுற நிலைமைக்கு வந்ததுதான் மிச்சம். அந்த கம்பெனி பாவம் சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம இருக்காங்க. குசேலன் படம் ஹிட்டுதான் சொல்ற ஆதரவாளர்களுக்கு படம் வாங்கி வெளியிட்டு,அடிபட்டு நொந்து போன ஒரு தியேட்டர் ஓனரை என்னால உதாரணம் காட்ட முடியும்.

ஏன் இவரு தன்னுடய ஆதரவாளர்களை பார்க்க சொல்லி சொன்ன சேரனின் தேசிய கீதம், சந்திரமுகி ஹிட் கொடுத்ததினாலே வாசுவோட புள்ளை நடிச்ச தொட்டால் பூ மலரும் போன்ற படங்களை பத்தி கூட சூப்பர், அது இதுன்னு போட்டோ போஸ் கொடுத்து சொன்னாரு அப்ப அது ஏன் ஓடல.? படம் ஓடுறதுக்கு ரஜினி வச்சு விளம்பரம் பண்ணா போதும்னா, எதுக்கு கதை, நடிகர்கள்,டைரக்டர் எல்லாம்? ரஜினி போட்டோ போதுமே..?

இவரது இயந்திரன் படத்தை பணப்பிரச்சனையால் எடுக்க முடியாமல் போகும் போது கூட அவர் தன்னுடய பணத்திலேயோ.. அவ்வளவு ஏன் தன்னுடய மகளின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவோ எடுத்திருக்க முடியும். இத்தனைக்கு அந்த கம்பெனியின் பார்டன்ர்கள் உலக புகழ் வார்னர் பிரதர்ஸ், அப்படியிருக்க ஏன் கலாநிதி மாறனை வீடு தேடி ஓடிப்போய் படமெடுக்க சொல்ல வேண்டும்?.

ரஜினி என்கிற ஒரு நடிகருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது அது உண்மை. அவரின் படம் பற்றி செய்திகள் வெளிவந்தால் அவரின் ரசிகர்களால் விரும்பப்படுகிறது அதுவும் உண்மை. ஏன் இந்த பதிவை கூட படிக்க வந்தவர்கள் ரஜினியின் பெயரில் இருப்பதால் இருக்கலாம். ஆனால் அவரின் படம் கூட மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாய் அமைகிறது என்பது நிதர்சன உண்மை.

ஏற்கனவே அவர் ஒரு குழப்பவாதி, அவரின் குழப்ப சுயநல பேச்சுக்களால் ஏற்கனவே அவரின் மேல் மக்களுக்கு இருக்கும் மரியாதை குறைந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்கிறேன், அவரின் பெருமையை போற்றுகிறேன், புகழ் பரப்புகிறென் என்று இம்மாதிரியான் செய்திகளை வெளியிட்டு ரஜினியை இமேஜை உயர்த்துவதாய் நினைத்து, பாலா போன்ற் ஜீனியஸ்களை அவமான படுத்தாதீர்கள். ரஜினிக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி

டிஸ்கி:
இது கண்டிப்பாய் ரஜினி எதிர்ப்பு பதிவல்ல.. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்கிற ஆதங்கத்தோடு ரஜினியின் நடிப்பை விரும்புகிறவனின் அன்பான வேண்டுகோள்.மீண்டும் நன்றி .. வணக்கம்.

உண்மைதமிழனின் பதில் பதிவை படிக்க இங்கே அமுத்தவும்<



Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Feb 13, 2009

சிவா மனசில சக்தி - திரை விமர்சனம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..


ஆணுக்கும்,பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்து அன்பேவா, தில்லானா மோகனாம்பாள், குஷி, திருடா திருடி என்று பல படஙகள் வந்திருந்தாலும், இந்த கருவை வைத்து இண்ட்ரஸ்டாக திரைக்கதை அமைத்தால் நிச்சயமாய் வெற்றியடையும். அதே நேரம் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் ஆங்காங்கே இழுவையாய் போகும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி இரண்டாம் வகை.

ரெயிலில் நடக்கும் முதல் சந்திப்பிலேயே சிவாவுக்கு காதல் வந்துவிடுகிறது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களை பற்றி பொய் சொல்ல, அது தெரியும் போது, தாஙகள் ஏமாற்றபட்டதால் காண்டாகி போய் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இருவரின் ஈகோவும் உடைந்து தங்கள் காதலை சொன்னார்களா இல்லையா? அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா..? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.



ஜீவாவுக்கு ஏற்ற வேடம்.. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவரும், சந்தானமும், சில சமயம் கிச்சு,கிச்சும், சில சமயம் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு முறை சந்தானம் புது செல் வாங்கும் போதும், அதை ஜீவா உடைப்பதும் சூப்பர்.. அதில் உச்சம் சந்தானம் புதுசு, புதுசாய் செல் வாங்கி வந்து காட்டினால் அதை வாங்கி சக்தியிடம் பேசி விட்டு கோபத்தில் உடைக்கிறான் என்று லேண்ட்லைன் போன் வைத்திருந்தால் அதையும் மப்பாகி அதன் மேல் விழுந்து உடைக்கும் இடம் சூப்பர்.

கதாநாயகி அனுயா.. வேறு நல்ல முகமே கிடைக்கவில்லையா.. எப்ப பார்த்தாலும் விளக்கெணணைய் குடித்தார் போலிருக்கிறது அவரது முகம். பல இடங்களில் ரியாக்‌ஷன்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கிறது. இவரால் பல இடங்களில் படம் இழுவையாகிறது.

இம்மாதிரியான கதைகளுக்கு ஒரு அழகான, இளமையான, பார்க்கும் நமக்கே லவ் செய்யலாமாங்கிற ஒரு தோற்றம் வேண்டும் அது மிஸ்ஸிங்.. பாவம் அவர் ஒவ்வொரு வார்த்தையையும், ப்ராம்ட் வாங்கி பேசுவது நன்றாய் தெரிகிறது.

ஜீவாவின் அம்மாவாய் ஊர்வசி.. இவரை காமெடியாய் யூஸ் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் அவரை ஒரு லூசு போல காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர். அதே போல் அனுயாவின் அப்பா ஞானசம்பந்தம் கேரக்டரும், அவர் சீரியஸ் அப்பாவா, அல்லது சும்மா வந்திட்டு போற அப்பாவான்னு தெரியல.. அதிலும் க்ளைமாக்ஸில் ஜீவா அவருடய பெண்ணை “மேட்டர்” பண்ணிவிட்டதாய் அவரிடமே சொல்ல.. அதை ஊர்வசியும், ஞானசம்பந்தமும், அதை பற்றி புரியாமல் பேச, அனுயா எந்தவிதமான உணர்வுகளும் இல்லாமல், ஜீவாவை பற்றி பேசுவது காமெடி என்கிற அபத்த கூத்து.

அதே போல் ஜீவா, அனுயா வேலை செய்யும் ஆபீசில் போய் குடித்துவிட்டு நட்ட நடு ஆபீஸில் சட்டையில்லாமல் போய் பிரச்சனை பண்ண, அங்கே வரும் போலீஸ் அவனிடம் என்ன காதல் பிரச்சனையா..? என்று கேட்டுவிட்டு செலவுக்கு காசு கொடுத்துவிட்டு போவது இன்னொரு காமெடி என்கிற அபத்த கூத்து.

சத்யன், அனுயாவின் அண்ணன், இவரும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி பண்ணுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அனுயாவும், ஜீவாவும் சந்திக்க வைப்பதற்காகவே ஏற்பட்ட கேரக்டர்.

அனுயா, ஜீவாவிடம் தன் காதலை டாஸ்மாக் பாரில் வ்ந்து சொல்வது புதிது. ஆனால் அந்த காட்சிக்கு சுற்றுபுறத்தில் உள்ள மற்ற குடிகாரர்கள் எந்த விதமான ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருப்பது ஆச்சர்யம். மற்ற குடிகாரர்களை வைத்து இன்னும் அருமையாய் செய்திருக்கலாம் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் கதை இங்கயே முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம், கோயில், கல்யாணம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ், மறுபடியும், சண்டை, க்ளைமாக்ஸ் என்று இழுத்திருக்கிறார்கள்.

சக்தி சரவணனின் ஓளிப்பதிவு ஒகே. ஒரு சில காட்சிகளில் பேக்ரவுண்ட் ப்ளீச் அடிக்கிறது. முக்கியமாய் ஜீவா, அனுயாவை தேடி தாய் ஏர்வேஸுக்கு வந்து பேசும் காட்சி, பல காட்சிகள் ஹேண்ட் ஹெல்டில் எடுக்கபட்டிருக்கிறது. அதனால் நிறைய காட்சிகள் நீளமாய், கொஞ்சம் ட்ராமா போல் இருக்கிறது. ஒரே சமயத்தில் ப்ரேமில் நான்கு பேர் தொடர்ந்து நின்றபடி, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டபடி மாற்றி, மாற்றி பேசுவது, ஓவர்லாப்பில் டயலாக் போய்விடுகிறது.

யுவனின் இசையில்.. ஒரு கல், ஒரு கண்ணாடி சூப்பர்.. மற்ற பாடல்க்ளை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லை. டைட்டிலில் வரும் ஆரம்ப பிண்ண்னி இசை துள்ளல்.. ஏனென்றால் அது அவங்க அப்பா மணிரத்னம் படத்துக்கு அடிச்ச பிரபல ரீரிக்காட்டிங்.. பின்னால் அதே டியூனில் அவர் பாட்டு வேறு போட்டிருக்கிறார். பிண்ணனி இசையும் ஒகே.


இயக்குனர் ராஜேஷ், மிகவும் நம்பியிருப்பது டயலாக்குளை என்று தெரிகிறது, பல இடங்களில், இயல்பான நகைச்சுவை நம்மை கட்டி போடுகிறது. சில இடங்களில் ரொம்ப பேசறாங்கப்பா..ன்னு தோணுது. முதல் பாதி ரொம்பவே நீளம். இதோ..இதோ என்று இடைவேளையை எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள்.

கொஞ்சம் கேரக்டரைசேஷனிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால்..??? நிறைய விஷயஙக்ள் பெரிசாய் ஒட்டவில்லை, முக்கியமாய் அந்த பர்த்டே சீன், எவ்வளவோ அருமையாய் வந்திருக்க வேண்டிய சீன் அதை மிஸ் பண்ணிவிட்டீர்கள், அதே போல் அந்த டாஸ்மாகில் காதலை சொல்லும் சீன் அதிலும் நிறைய ஸ்கோர் பண்ண வாய்பிருந்தும் ..?? ஒரு வேளை படம் கலகலவென போனால் போதும் என்று இருந்துவிட்டாரோ..?

அதே போல் பஸ்ஸில் ஜீவா பேசியதை அனுயா காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்காமல் போய்விட்டார் என்பதை அவர் ஹெட்போனை காதிலிருந்து கழட்டி காண்பிக்கும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு மொத்த சீனையும் ப்ளாக் & வொயிட்டில் ரீவைண்ட் ஷாட்ஸ்? அந்த நிமிடத்தில் ஜீவாவின் மேல் கிடைக்க வேண்டிய சிம்பதி இந்த காட்சிகளினால் விரையமாகிறது.

படம் காமெடி படமா, காதல் படமா என்ற குழப்பத்தினால், பல இடங்களில் லாஜிக் மீறின சீரியல் டிராமா காட்சிகளால், இம்மாதிரியான படங்களின் அந்த காதலர்களை பார்க்கும் போது படம் பார்பவர்களின் மனநிலை,அவர்கள் எப்படியாவது சேரவேண்டும், இரண்டு பேரில் யாராவது விட்டு கொடுங்களேன் என்று நம் மனது பதைக்கும், இந்த நடுவாந்திர திரைக்கதை அமைப்பினால் ஒரு அழகான காதல் கதையை மிஸ் செய்துவிட்டார்கள். எதிர்பார்பில்லாமல் போனால் ஜஸ்ட் ரசிக்கலாம்..

சிவா மனசுல சக்தி - ஜஸ்ட் மிஸ்..

டிஸ்கி: விகடன் டாக்கீஸின் லோகோ அனிமேஷன் யாரும் எதிர்பார்காத வகையில் சூப்பர்..



Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Koncham Istam Koncham Kastam- Telugufilm review

அடுத்த பதிவு..S.M.S.திரைவிமர்சனம்


வர வர தெலுங்கில இனிமையான, இளமையான படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அப்படியான படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். படம் முழுவதும் ஒரு இளமை ஜுரம் பரவியிருக்கிறது.

புதுசான கதை கிடையாது. ஆனாலும் சுவாரஸ்யமாய் தெரிவதற்கு நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.. சில்லுன்னுகுது.

ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் மகனான சித்தார்த் காலேஜில் லெக்சரராய் இருக்கும் தாயுடம் ஹைதராபாத்தில் தனியே இருக்க, அவனின் தந்தை வெளிநாட்டிலிருந்தவர் இந்தியா வருகிறார். கீதா சுப்ரமணீயம் என்கிற தமன்னா வேறு ஊரிலிருந்து ஹைதராபாத்துக்கு மேல் படிப்புக்காக வர, இருவருக்கும் இருக்கும் பொதுவான ஏரியா நண்பர்கள் மூலம் நண்பர்கள் ஆகி, பின்பு காதலர்கள் ஆகிறார்கள். தங்கள் காதலை தமன்னாவின் அப்பா நாசரிடம் சொல்ல, அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்கிற குடும்பத்தில், குடும்பத்தின் வேல்யூ தெரியாத வீட்டில், என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்கிறார். அவர்கள் இருவரையும், சேர்த்து வைத்துவிட்டு உங்கள் பெண்ணை திருமணம் செய்ய வருகிறேன் என்கிறான் சித்தார்த்.
அவன் அவர்களை சேர்த்தானா... அவர்களின் காதல் நிறைவேறியதா என்பது மீதி கதை..

கிட்டதட்ட நம்ம பூவெல்லாம் உன் வாசம், ஜோடி, காதலுக்கு மரியாதை என்று பல படங்களின் வாசம் அடிக்கிறது.

சித்தார்துக்கும், தமன்னாவுக்கும் இடையே ஒரு இயல்பான கெமிஸ்டிரி ஒர்க் அவுடாகியிருக்கிறது. அவர்களிடயே வருகிற சண்டை ஆகட்டும், ரொமான்ஸ் ஆகட்டும் ஸோ.. ஸூவீட்ட்ட்ட்.. அதிலும் சித்தார்த்தின் பெற்றோர்களை சேர்கிறேன் என்று பேசும் போதே அவர்கள் இருவருக்கும் சண்டை வரும் காட்சிகள், குஷியை ஞாபகபடுத்தினாலும், சுவை.

நம்பிக்கையை பற்றி பேசும்போது திடீரென்று தமன்னா ஒரு மேடை மேல் ஏறி நொடிப் பொழுதில் அப்படியே மல்லாந்தபடி விழ, அதை சற்றும் எதிர்பாராத சித்தார்த் உடனடியாய் ஓடி சென்று தமன்னாவை தாங்கி பிடிக்து, “நான் மட்டும் பிடிக்க்லைன்னா என்ன ஆயிருக்கும்” என்று கேட்க, “நி பிடிப்பே, நான் விழற்தை பார்த்துட்டு இருக்க மாட்டேன் ஒரு நம்பிக்கை” என்று சொல்லுமிடம் அருமை.

வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தூள் படுத்தியிருக்கிறார் என்பதை சொல்லி சொல்லி அலுத்து விட்டது. அதிலும் அவருக்கு தன் அம்மா கையால் செய்த கத்திரிக்காய் கொண்டு வந்து சித்தார்த அவர் முன்னால் உட்கார்ந்து சப்பு கொட்டி சாப்பிட, அவர் மனது சாப்பிட தூண்டினாலும், அதை மறைத்து மீன் நன்றாக இருப்பதாய் நடிக்கும் காட்சியிலாகட்டும், மீண்டும் மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியிலாகட்டும், மகனுடன் தண்ணியடித்துவிட்டு அவன் காதலியை பார்பதற்காக அவனை அவளிடம் கூட்டி போகும் காட்சியிலாகட்டும் மனுஷன் பின்னுகிறார்.

ரம்யாகிருஷ்ணன் அம்மா என்றால் மூளைக்கு புரியுது.. ஆனா மனசுக்கும், கண்ணுக்கும் புரியலையே.. ம்ஹூஹூம்ம்.. அளவான நடிப்பு. சித்தார்த் தன் பெற்றோருடய ப்ழைய ஆல்பத்தை வெளியே எடுத்து வைத்து அம்மாவை பார்க்க வைக்க.. அப்போது அங்கே வரும் தம்ன்னா ரம்யா கிருஷணனிடம் உங்களுக்கு யார் மேல கோபம் இருக்கோ அவங்க போட்டோ மேல பேனா வச்சு அடிச்சா கோபம் போயிரும்ன்னு சொல்ல ரம்யா சந்தோஷமாய் பிரகாஷின் முகத்தின் மீது அடிக்க, அது தெரியாமல், அந்த ஆல்பத்தை பிரகாஷிடம் சித்தார்த் காட்ட, தன் முகத்தில் அடித்திருப்பதை பார்த்து அவரும் அவர் பங்குக்கு ரம்யாவின் முகத்தில் அடிக்க.. ஓரே கூத்துதான் போங்கள்.

வழக்கம் போல பிரம்மானந்தம் கலக்குகிறார். வேணு மாதவ் அவர் பங்குக்கு வந்து கலாய்த்துவிட்டு போகிறார். சித்தார்த்துக்கு லட்டு மாதிரியான கேரக்டர். க்ளைமாக்ஸ் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே சில்லுனு இருக்கு ஏற்கனவே சொல்லிட்டேனோ..?

அழகான பளிச்சென்ற ஒளிப்பதிவு. அதிலும் அந்த விண்ட் மில் வயல்வெளியில் எடுக்கப்பட்ட ஷாட்களும், இடைவேளை பிரிட்ஜ் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி பளிச்.

படத்துக்கு மிகப்பெரிய பலமும், பலவீனமும் ஷங்கர்-இஷான் - லாயின் இசை.. மிக இனிமையான, துள்ளலான இசை.. பல சமயங்களில் தேவையில்லா இடங்களில் பாட்டை போட்டு நல்ல பாட்டுக்களையும் கேட்க முடியாமல் இம்சை படுத்துகிறார்கள்.

திரைக்கதையை விக்ரம் சிரி, தீபக்ராஜூம் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல படங்களின் காட்சிகளை ஒன்று சேர்த்திருந்தாலும், இண்ட்ரஸ்டிங்காக செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நச். கதையில் பெரிசாக இல்லாவிட்டாலும் திரைக்கதையினால் தப்பியிருக்கிறார் புது இயக்குனர் கிஷோகுமார்.

கொஞ்சம் இஷ்டம்.. கொஞ்சம் கஷ்டம் - நிறைய இஷ்டம்.. ரொம்ப கொஞ்சமே கஷ்டம்..


Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை/span> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..