Thottal Thodarum

Jun 30, 2012

The Amazing Spiderman

Spiderman சீரிஸ் படங்களை விரும்பியோ விரும்பாமலோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வாரம் தமிழ் படங்கள் ஏதுமில்லாததாலும், சத்யமின் புதிய எஸ்2வை ஒரு லுக் விட்டு வரலாம் என்ற எண்ணத்திலும் ஸ்பைடர்மேன்.

Jun 29, 2012

நான் - ஷர்மி - வைரம் -19


19 நான்
ஸ்டேஷனை விட்டு வந்ததுமே வசந்தி மேடத்திடமிருந்து போன் வந்தது. “செல்லம் வந்திட்ட இல்லை. மேல கை வச்சானுவளா? பேர் சொல்லு அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”””. நான் இல்லையென்றேன்.  ஒரே ஒரு போனில் காரியத்தை முடித்துவிட்டோமே என்ற திமிர் கொஞ்சம் அதிகமாய் உள்ளாடியதுவசந்திக்கு பவர் ஜாஸ்தி. கமிஷனரின் பெண்டாட்டி. எனக்கு இவ்வளவு தூரம் தொடர்பிருக்கும் என்று நிவேதிதா இல்லை யாராலும் நினைத்து பார்த்திருக்க முடியாது.  ஒரு ஆறு மாதத்திற்கு முன் எனக்கே தெரியாது. வசந்தி மேடம் கமிஷனர் பெண்டாட்டி என. 

மகாபலிபுரத்தில் ஒரு கெஸ்ட் அவுஸில் சோளக்கொள்ளை பொம்மைப் போல ஒரு ஹவுஸ் கோட்டோடு என்னை வரச் சொல்லிப் பார்த்தாள். முழு போதையில் இருந்தாள். இது போல் வரச்சொல்லி யாரும் பார்த்த்தில்லை. என் ஏஜெண்ட் எனக்கு போன் பண்ணும் போதே ஹை ப்ரோபைல் பார்ட்டி பார்த்து நடந்துக்கோ. வேணாம்னா வந்திருஎன்று சொன்னான். என் பின்னணி பற்றிக் கேட்டாள். “எத்தனைப் பேரை ...ருப்பே? என்று கேட்டவளின் முகத்தை நேராகப் பார்த்து சிரித்தேன். “கணக்கு வச்சிக்கல?என்று அவளும் சிரித்தாள். “உன் சிரிப்பு எனக்கு பிடிக்குது செல்லம். சொன்னது எல்லாத்தையும் செய்வே இல்லை. அப்புறம் அது பண்ண மாட்டேன் இது பண்ணமாட்டேன்னு சொல்லக்கூடாது என்னா?. அப்படி என்ன புதுசாய் செய்யச் சொல்லப் போகிறாள் என்று யோசித்தேன்.  நான் அமைதியாய் இருந்ததை பார்த்து ஓகே சொன்னதாய் புரிந்து கொண்டு உள்ளே வரச் சொன்னாள். நான் நினைத்தைப் போல் ஏதும் புதுசாய் இல்லை. எல்லாம் வழக்கம் போல் தான். ஆனால் அவளுக்கு அது புதுசு. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் அவள் சொல்வதை கேட்டு செய்பவனைப் போல செயல்பட்ட்தால் அவள் சீக்கிரமே எக்ஸ்டசியினால் உச்சத்தை அடைய கிட்டத்தட்ட உச்சப்பட்ச காமத்தில் திளைத்தாள். அவள் உடலின் அதிசயங்களை அவளுக்கே காட்டியதில் திளைக்க ஆரம்பித்தாள். அவள் சொன்னபடி கேட்க வேண்டுமென்றவள் இப்போது நான் சொல்வதை எல்லாம் கேட்க ஆரம்பித்தாள். எனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பவள். வெள்ளிக்கிழமைகளில் மேட்த்தை பார்த்தால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்காமல் போக மாட்டீர்கள். அப்படி ஒரு ஜாஜ்வல்லியமாய் இருப்பாள். உன்னோட இருந்தா என் வயசு எனக்கு தெரிய மாட்டேன்குது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பாள். ஒரு கட்ட்த்தில் என்னை அவளுடனேயே இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்த போதுதான் இது சரி வராது என்று அவளிடமிருந்து விலக ஆரம்பித்தேன். வெளியூருக்கு போவதாய் சொல்லிவிட்டு விலக, அங்கே போனா என்ன காசு கிடைக்குமோ அதை உனக்கு தர்றேன் என்றாள். ஒத்துகிட்டா போய்த்தான் தீரணும் என்று சொல்லி விலகி சில மாதங்களாய் இருந்த நிலையில்தான் இந்தப் பிரச்சனைக்காக பேச வேண்டியதாகிவிட்ட்து. அநேகமாய் திரும்பக் கூப்பிடுவாள். வழியில்லை போய்த்தான் ஆக வேண்டும். மீண்டும் என்றாவது உதவுவாள். எதிர்பார்த்தபடியே கூப்பிட்டாள். போனேன். முன்பை விட துவண்டிருந்தாள். நன்றி சொன்னேன். ”அதெல்லாம் வேணாம். இறுக்க அணைச்சு ஒரு உம்மா தா” என்று சிரித்தாள்.

கொஞ்சம் நாள் வேலைக்கு போகாமல் இருந்தேன். ஆனால் எத்தனை நாள் இப்படி இருக்கப் போகிறேன் என்று புரியாமல் தான் இருந்தேன். சமயங்களில் ஏதாவது வேலைக்கு போகலாமா? என்று தோன்றினாலும் இத்தனை நாள் நோகாமல் நோம்பு கும்பிட்டு சம்பாதித்துக் கொண்டிருந்த என்னால் வேலைக்கு போய் சம்பாரிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டேத்தான் இருந்த்து. இப்போது செய்யும் வேலை கூட உழைப்புத்தான் என்றாலும் சொல்லிக் கொள்ள முடியாத உழைப்பு என்ற எண்ணம் வராமல் இல்லை. ஆனால் என்னால் வேலைக்கு எல்லாம் போக முடியாது என்பது திட்டவட்டமாய் புரிந்த்து. சீக்கிரம் இதில் நன்றாக சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருந்த்து.

ஏஜெண்டுகளின் தொடர் போன்கள் வேறு என்னை அரித்துக் கொண்டிருக்க, மீண்டும் என் வேலையை, உழைப்பை ஆரம்பித்தேன். என்னுடய முதல் காலே வித்யாசமான ஒரு அனுபவமாய் இருந்தது. ஒரு காலேஜ் பெண்ணுடன் பார்க்கில் நடக்கும் டிஸ்கோவுக்கு போய் வர வேண்டும். என்றார்கள். அவள் பெயர் ஜானகி. அவளின் தோழிகள் எல்லோரும் அவளை ஜானி என்று அழைத்தார்கள். காரில் என்னை பிக்கப் செய்யும் போதே “எனக்கு இதான் பர்ஸ்ட் டைம். என் தோழிகள் என்னை ஒரு சாமியாரினி என்று கிண்டல் செய்கிறார்கள். அவர்களின் வாயடைக்க, எனக்கு பாய் ப்ரெண்ட் இருப்பதாய் சொல்லிவிட்டேன். ஸோ.. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள். மற்றபடி என்னிடம் இதை வைத்து ஏதும் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்என்றாள் . நான் சிரித்தபடி தலையாட்டினேன். அன்றிரவு முழுவதும் அவளுடன் ஆடினேன், குடித்தேன். ஆனால் அவளை மிக நாசூக்காக அணுகினேன். ஒவ்வொரு முறை அவள் என் மீது படும் போதும் சாரி சொன்னேன். பரவாயில்லை.. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டேயிர்ந்தாள். அந்தக்கூட்டத்தில் ஏற்கனவே இதற்கு முன் பார்த்த ஆண்டிகள் சில பேர் என்னை அடையாளம் கண்டாலும் கண்டு கொள்ளாமல் போனார்கள். நானும் தான். அதுதான் எங்களுக்கு பால பாடம். அவர்களாய் பேசும் வரை தெரிந்த்து போல் காட்டிக் கொள்ளக்கூடாது. அன்றைக்கு இரவு ஜானகி என்னை ட்ராப் செய்யும் முன் என்னை அழுந்த முத்தமிட்டாள். முத்தமிட்டப்பின் அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்தை நான் எந்த பெண்ணிடமும் கண்ட்தேயில்லை.  ஒரு முத்த்த்திற்கே வெட்கப்பட்ட ஜானகி என்கிற ஜானி தான் என்னை க்ரூப் செக்ஸ் கும்பலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அந்த அளவிற்கு என்னுடனான முதல் அனுபவம் அவளை தயார் படுத்தியிருந்த்து.

அந்தக் கும்பல் முழுக்க முழுக்க, கல்லூரிப் பெண்களும், ப்டித்து ஐடியில் வேலை பார்க்கும் பெண்களாய் இருந்தார்கள். பணம் எண்பது அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. நேரடியான தொடர்புகள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளதால் என்னையே  மற்றவர்களையும் அரேஞ்ச்  செய்யச் சொல்லிவிடுவார்கள். குறைந்த்து மூன்றிலிருந்து நான்கு பேர். ஆறிலிருந்து ஏழு பெண்களுக்கு. சில சமயம் ஆறுக்கு ஆறு கூட போயிருக்கிறோம். இந்தக் குருப்பில் புதியவர்களுக்கு அனுமதியில்லை. ஏற்கனவே கடைந்தெடுத்து தேர்ந்தவர்களே வருவார்கள். கொஞ்சமே கொஞ்சம் அனுபவம் உள்ளவர்களை சில சமயம் பார்க்க முடியும். ஆனால் அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே கண்டு பிடித்துவிட முடியும். கொஞ்சம் தைரியமாய் லைட்டாக குடித்துவிட்டு, மெல்ல மெல்ல உடைகளுக்கு நட்ட நடு ஹாலில் விடை கொடுக்க அரம்பிக்கும் போதே இழுத்துவிடும் புடவையை, துப்பட்டாவை மீண்டும், மீண்டும் எடுத்துப் போர்த்திக் கொள்வார்கள். கொஞ்சம் நேரத்தில் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் முழுதாய் விடுவித்திருக்க, இவள் மட்டும் உடையோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அத்துனை நிர்வாணங்களும்  அவள் மேல் பாய்ந்து உரித்தெடுப்பதுதான் ரேகிங். என்பார்கள். ஒரு கட்ட்த்தில் அவள் ஓட, இவர்கள் நிர்வாணமாய் துரத்த, வந்திருக்கும் நம்ம பசங்க எல்லோரும் அதை பார்த்தபடி சும்மா நின்றிருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கு நிர்வாணம் பழக, ஒரே நேரத்தில் ஆறு ஆணின் கைகளும் அவளின் உடலில் விளையாட, அதை பார்த்து மற்றவர்கள் உணர்வெழுச்சி கொள்ள, பின்பு யார் தடுத்தாலும் கேட்காத ஒரு வெறி அங்கே சூழ்ந்து கொள்ளும். வெட்கத்தை விட்டவள் நின்று விளையாடுவாள்.  குடியும், காம்மும் சேர்ந்து ஒரு விதமான வெறி கொள்ள வைக்கும். மற்ற வேலையை விட இது மிகவும் மோசமானது. ஒருத்தி மாற்றி ஒருத்தி வந்து கொண்டேயிருப்பாள். இவர்களுக்குள் ஒரு மனத்தடை இருக்கும் வரை தான் கட்டுப்பாடு, வெட்கமெல்லம். அதை விட்டொழித்தால் நாமெல்லாம் வெறும் ஜூஜூபி.

முதல் சுற்று முடித்து சிறிது நேரம் பேசும் போது சில பேருடய கணவர்கள், பாய் ப்ரெண்டுகளின் உறுப்பைப் பற்றி,அவர்களின் செக்‌ஷுவல் அளவுகோல்களைப் பற்றியெல்லாம் சரியான கிண்டல் கேலியுடன் பேசுவார்கள். இவங்களுக்கு நாம மவுத்திங் பண்ண்ணுமாம். ஆனா நமக்கு கேட்டா பண்ண மாட்டாங்களாம். போடான்னுன்னு ஒரு வாட்டி ஒரல் பண்ணும் போது கடிச்சிட்டேன். ஆனா பாவம் துடிச்சிட்டான். என்றெல்லாம் பேசுவார்கள்.  உடன் வேலை செய்பவன் தன்னை மடக்க எப்படியெல்லாம் ஜொள்ளு விடுகிறான். இப்படியெல்லாம் பேசினா எனக்கு பிடிக்கதுன்னு சொல்லி எப்படி சீன் போடுவார்கள் என்றெல்லாம் நடித்து காட்டுவார்கள். விடியற்காலை வரை குறைந்த்து ஆளுக்கு மூன்று ரவுண்டுகளாவது போகும். எல்லாம் முடிந்து அரை போதையில், உடல் வதங்கி, துவண்டு தூங்குகையில் எவளாவது ஒருத்திக்கு மீண்டும் மூட் வந்து இரண்டு பேரின் லுல்லாவை வைத்து விளையாடும் போதுதான் எரிச்சல் எரிச்சலாய் வரும். அப்படி ஒரு க்ரூப் மேட்டரின் போதுதான் அவளை ஷர்மியை பார்த்தேன்.
கேபிள் சங்கர்

Jun 28, 2012

பணியாரம்


டேய் இனிமே நான் உனக்கு போன் பண்ணி உயிரை எடுக்க மாட்டேன். ஏன்னா நானே என் உயிரை எடுத்துக்க போறேன். ஓகே அமுத்திடறேன்என்ற குழறலான துரையின் குரலைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. இவரோட அழும்பு தாங்கமுடியலையே என்று நினைத்துக் கொண்டு வேலையை தொடர்ந்தேன்.  துரை ஒரு ஞானக்கிறுக்கன். தமிழ் இலக்கியத்தில் மூழ்கி எழுந்தவர். பத்திரிக்கையாளர். எழுத்தாளர், கவிஞர், சினிமா பாடலாசிரியர்  என்று பன்முகம் கொண்டவராய் இருந்தாலும் பெரும்பாலானவர்களால் குடிகாரன் என்று அறியப்பட்டவர். அவர் குடிகாரன் ஆனதற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், அவர் என்றைக்குமே அதற்கான காரணத்தை சொன்னதில்லை. தனுஷைப் போன்ற உடலமைப்பும் ஒரு கையால் தூக்கிவிட முடியுமென எண்ணக்கூடியவராய் இருப்பார். ஆனால் தண்ணியடித்துவிட்டால் அவ்வளவுதான். யானை வெய்டாகிவிடுவார். சாதாரண சமயத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தால் விஷயங்களாய் கொட்டும். அவ்வளவு ஞானஸ்தன். நான் எழுதிய கட்டுரையோ, கதையையோ முகஸ்துதியில்லாமல் காரி துப்பியோ, தலையில் வைத்து கொண்டாடவோ தவறாதவர். கி.வா.ஜாவிலிருந்து நேற்று எழுத வந்தவர் வரை படித்துவிட்டு பேசுபவர். சட்டென ஒரு ட்யூனுக்கு  அற்புதமான சந்தத்தோடு கவிதையாய் பாட்டெழுதுபவர்.  

Jun 27, 2012

சினிமா டிக்கெட்டுகளில் அடிக்கப்படும் கொள்ளை

சமீபத்தில் என்னுடய நண்பர் ஒருவர் அரவான் படத்தின் கேரள உரிமையை வாங்கியிருந்தார். படம் படு தோல்வி என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் கேரளாவில் தமிழில் வெளியான அந்தப்படத்துக்கு போட்ட முதலில் முக்கால் வாசி வசூல் செய்ததாகவும், இதே தமிழ்நாட்டில் வாங்கி ரிலீஸ் செய்திருந்தால் அவ்வளவுதான் என்றார். அவர் சொன்னதும் உண்மைதான் தமிழ் நாட்டில் சென்னையில் ஒரு காம்ப்ளெக்ஸில் எட்டுலட்ச ரூபாய்க்கு ஹயர் செய்து வெளியிட்ட விநியோகஸ்தருக்கு இரண்டு லட்சம் கூட வசூலாகவில்லை செம அடி. உடனே தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்ல சினிமாவை ரசிகக் தெரியவில்லை என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.

Jun 25, 2012

கொத்து பரோட்டா -25/06/12

விஷம் 
தொடர்ந்து தொலைபேசி கால்கள், எல்லோர் குரலிலும் பதட்டம், “நீங்க பேசிப் பாருங்களேன்” என்றதில் தெரிந்த அன்பு, எல்லாவற்றையும் மீறி எனக்கும் அவனைத் தெரியும் என்கிற போது உள்ளுக்குள் ஒரு பதட்டம். போன் செய்து பேசியபோது சாப்பிட்டுவிட்டேன் விஷத்தை என்றான். இருக்காது பொய்யாக இருக்கும் என்று உள் மனது சொன்னாலும், தொடர்ந்து மற்றவர்களின் தொலைபேசிகளும், நிஜமாகவே ஒரு வேளை நடந்துவிட்டால் காலம் பூராவும் உறுத்திக் கொண்டிருக்குமே என்று எண்ணம் வேறு. என்றோ ஒரு முறை அவன் இருக்குமிடத்தைப் பற்றி சொன்னதை வைத்து, அப்துலாவிடமும், இன்னொரு பத்திரிக்கையாளரிடமும் இடம் விசாரித்து, நான் அங்கே போய் சேர்ந்தேன். இன்னொரு நண்பர் செல்வின் பத்தே நிமிடத்தில் திருவற்றியூரிலிருந்து, திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தார். அவர் வரும் சிறிது நேரத்துக்கு முன் தான் முருகேச கவுண்டர் மேன்ஷனின் வாசல் வழியாய் ஒரு 108 ஆம்புலன்ஸ் போக, உள்ளூக்குள் திக்கென்றது. மேன்ஷனில் விசாரித்து ரூமில் எட்டிப் பார்த்தால் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் தற்கொலை செய்ய மருந்து சாப்பிட்டு விட்டதாய் சொன்னவன். தூ.. இவனெல்லாம் மனுஷனா? மனிதர்கள் மீது காட்டும் அன்பை டெஸ்ட் செய்யும் இவனைப் போன்றவர்களினால் தான் மனிதநேயம் என்ற ஒரு விஷயம் செத்துக் கொண்டிருக்கிறது. இவனையெல்லாம் மனுஷன் லிஸ்டுல சேர்த்து பார்த்த்துதான் நம்ம தப்பு செல்வின்.
@@@@@@@@@@@@@@@@@@

Jun 24, 2012

சினிமா என் சினிமா - புத்தக வெளியீடு.




அனைவரும் மறக்காமல் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

Jun 23, 2012

சகுனி

ஹீரோக்களுக்காக கதை செய்யும் போது ரொம்பவே ஜாக்கிரதையாய் செய்ய வேண்டும். அதுவும் கார்த்தி மாதிரியான தொடர் வெற்றி கொடுத்திருக்கும் ஹீரோவுக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எழுபது சதவிகித தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் இந்த படம் தான் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி எதிர்பார்பை ஏகத்துக்கும் ஏத்திய படம் அதை தக்க வைத்ததா? என்று கேட்டால் கடுகளவு கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.

Jun 22, 2012

சாப்பாட்டுக்கடை - இட்லி விலாஸ்

தமிழனின் பாரம்பரிய உணவு. அதுவும் தென்னிந்திய உணவுகளில் மிகவும் பாதுகாப்பான, சுவையான, உடனடியாய் தயாரிக்கக்கூடிய, வேக வைத்த, உடல் நலத்திற்கு உகந்த என்று எல்லாவிதமான பாஸிட்டிவ் ரெகமெண்டேஷன்களை கொண்ட ஒரு அயிட்டம். தென்னிந்தியர்களுக்கு  அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.  இதைப் பிடிக்காதவர்கள் கூட வாழ்வில் ஏதேனும் ஒர் நிலையில்  சாப்பிட்டுத்தான் இருப்பார்கள். சைடிஷ் ஏதுமில்லாமல் ஆரம்பித்து, சாம்பார், சட்னிகள், மிளகாய்ப் பொடி, நெய், எண்ணெய், நல்லெண்ணெய், மிளகாய் பொடியில் முழுக்க, அழுத்தி ஒர் அமுக்கில், சிக்கன், மட்டன், மீன், எரா, என்று நான் வெஜ் குழம்புகளுடன் வரிசைக்கட்டி குழைத்தடிக்கும் பாரம்பரியம் உள்ள தமிழனான நமக்கு இட்லி விலாஸ் என்ற பெயரைப் பார்த்ததும் ஏழாம் அறிவு போதிதர்மனின் தமிழுணர்வு பொங்க,ஆர்வம் தாங்காமல் கடைக்குள் நுழைந்தோம்.

Jun 20, 2012

Madagascar -3

கார்ட்டூன் படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். மிகச் சுமாரான கதைக் களன் உள்ள படங்கள் கூட பின்னணியில் உள்ள அனிமேட்டர்களின் உழைப்பினாலும், ஏதோ ஒரு புதிய விஷயத்தை அவர்கள் தொடர்ந்து அனிமேஷன் மூலம் முயன்று கொண்டேயிருப்பதை பார்க்கும் போதும், குழந்தைகளை டார்கெட் செய்து அவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாவற்றிலும் ஒரு விதமான டெம்ப்ளேட் இருந்தாலும், சுவாரஸ்ய பின்னலாய் நிறைய விஷயங்களை மெனக்கெட்டுக் கொண்டேயிருப்பதால் கார்டூன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிக்சாரின் படங்களைத் தவிர, மற்ற படங்களை 2டியில் பார்ப்பதை தான் மிகவும் விரும்பியிருக்கிறேன். எனக்கென்னவே 3டியில் கார்டூன் ஒட்டவில்லை.
சரி மடகாஸ்கருக்கு வருவோம். அலெக்ஸ், மார்ட்டி, க்ளோரியா, மெல்மென் ஆகியோர் இன்னமும் அவர்களுடய நியூயார்க் ஜூவுக்குள் போகும் கனவை நோக்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறை எப்படியாவது போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் போவது ஈரோப் முழுவதும் சர்க்கஸ் மிருகங்கள் என்ற பொய்யின் பேரில். காரணம். அலெக்ஸை துரத்தும் நியூயார்க் சிங்கப் போலீஸ் பெண்மணி.  ஒரு பக்கம் துரத்தும் விபரீதணியான அந்த போலீஸ். இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து தப்பித்து நொந்து போய் பயணித்துக் கொண்டிருக்கும் சர்க்கஸ் கூட்டம். அவர்களுடன் இவர்களும்  தாங்கள் சர்க்கஸ் காரர்கள் என்று சொல்லி ஆடும் ஆட்டமும், ஈரோப் முழுவதும் சுற்றி வருவதற்குள் அவர்கள் சர்க்கஸை நிலை நிறுத்த போராடும் போராட்டமென போகிறது கதை. இவர்களால் சர்க்கஸ் வளர்ந்ததா? மீண்டும் இவர்கள் நியூயார்க் ஜூவுக்குள் போனார்களா? அலெக்ஸா துரத்தும் வில்லி என்ன ஆனாள்? என்பதுதான் கதை.

மற்ற கேரக்டர்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அவர்களின் சுவாரஸ்யங்கள் புரியும். புதியதாய் வரும் சர்க்கஸ் புலி கேரக்டர் அஹா..சூப்பர். வளையத்தில் நுழைந்து வெளிவரும் வீரன். சர்க்கஸ் என்பது ஒரு தவம். அதில் தன் வளையம் புகும் திறனால் உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் கேரக்டர் ஒரு நாள் மிகச் சிறிய வளையத்தில் போக முடியாமல் தோற்க, அதனால் ரிஜக்‌ஷனின் உச்சியில் உள்ள புலி. மோடிவேஷன் இல்லாமல் ஏதோ செய்து தங்கள் சர்க்கஸை நிலை நிறுத்த முயலும், பெண் புலியும், சீலும், என்பது போன்ற கேரக்டர்களை வைத்து இவர்கள் இழைத்திருக்கும் குட்டிக்கதை தான் இம்ப்ரசிவ்.
அனிமேஷனில் ஒவ்வொரு கேரக்டரின் முகபாவமும், வசனம் பேசியிருக்கும்   முறையும் செம க்யூட். அதுவும் அந்த புலி கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் டேவிட் என்று நினைக்கிறேன். க்ளாஸ்.  மைனஸ் என்று பார்த்தால் டெம்ப்ளேட் திரைக்கதை தான் என்று சொல்ல வேண்டும். ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட கேரக்டர்களின் அணிவகுப்பும், அவர்களின் காமெடி ஜெர்க்குகளும் பழகப்பட்டு விட்டதால் கூட அந்த அலுப்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனிவே ஐ லவ் திஸ் மூவி.
கேபிள் சங்கர்

Jun 19, 2012

கேபிள் ஆப்பரேட்டர் என்கிற வர்கத்தையே ஒழிக்கப் போகும் மத்திய அரசும் மாநில அரசும்.



அட என்ன தலைப்பே காண்டர்வர்சியா இருக்கே? என்று யோசிப்பவர்களுக்கு ஆம் காண்டர்வர்சி மட்டுமல்ல ஒட்டு மொத்த சென்னையே வருகிற ஜுன் 30 நள்ளிரவுக்கு பிறகு சென்னையில் உள்ள அத்துனை கேபிள் இணைப்பு பெற்ற தொலைக்காட்சி பெட்டிகளும் அணையப் போகிறது. அடுத்த நாள் முதல் அத்துனை டிவிக்களும் தெரிய வேண்டப்பட வேண்டுமென்றால் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முறையில் சுமார் நாற்பது லட்சம் வீடுகளில் செட்டாப் பாக்ஸ் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சென்னையில் டி.டி.எச் எனப்படும் நேரடி ஒளிபரப்பு வைத்திருப்பவர்களும், ஏற்கனவே கண்டீஷனல் ஆக்சஸ் திட்ட்த்திற்காக செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இது என்ன கலாட்டா என்று இது பற்றி எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பது போல தோன்றினாலும், சென்னையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக மோசமான நிலையில் தினமும் ஒரு மீட்டிங், தினமும் ஒரு ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன முடிவு என்று தெரியாமல். இருப்பது இன்னும் 15தே நாள்தான். அதற்கு ஊரில் உள்ள் டிடிஎச் கம்பெனிகள் எல்லோரும் இருக்கும் வாடிக்கையாளரை சுவாஹா செய்ய தயாராக இருப்பார்கள் என்று தெரியும்.

இந்தத் திட்டம் இதற்கு முன்னமே தெரியாதா? ஏன் இப்படி திடீரென வந்த்து போல சொல்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு. இந்த்த்திட்டம் சென்ற வருடமே ஆரம்பிக்க வேண்டியது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் முழுக்க முழுக்க டிஜிட்டல் நெட்வொர்க்காக மாற்றப்பட வேண்டிய அவசியத்தை சொல்லி, மாற்றி ஆக வேண்டிய காட்டாயத்திற்கான காரணத்தைச் சொல்லி, அதற்கான தேதியையும் சொல்லி, பின்பு அதற்குள் ஆகாது என்ற கோரிக்கையையும் ஏற்று, ஜூன் 30 என்று ட்ராய் பிக்ஸ் செய்த்துதான். அதான் ஏற்கனவே முன்பே அறிவிக்கப்பட்ட்துதானே பின்ன என்ன? என்று கேட்கிறீர்களா? ப்ரச்சனையே அங்கு தான். மற்ற ஊர்களில் எல்லாம் செட்டாப்பாக்ஸை வீட்டிற்குள் இயங்க வைப்பதற்கான ப்ரச்சனையே தவிர கொல்கத்தா தவிர, டெல்லி தவிர, கொஞ்சம் மூச்சு பிடித்து இழுத்தால் ஒரு மூன்று மாத்த்திற்குள் வைத்துவிடலாம் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் அப்படியல்ல. இங்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அரசு கேபிள் நிறுவனம் என்று ஆப்பரேட்டர்கள் மத்தியில் சொன்னால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள்.  இரண்டாவது காரணம். ஆப்பரேட்டருக்கும், எம்.எஸ்.ஓவுக்குமான புதிய கட்டணவிகிதாசார ப்ரச்சனை. சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்களை கலந்துரையாடாமல் சென்ற மாத்த்தின் கடைசியில் திடீரென அறிவிக்கப்பட்ட ரெவென்யூ ஷேரிங் விஷயம் பற்றி இன்னும் பேசப்படவேயில்லை.

அரசு கேபிள்
அரசு கேபிள் தன் தன்னிகரில்லாத சாதனை மூலம் தமிழகத்தின் எல்லா ஏரியாக்களிலும் எழுபது ரூபாய்க்கு கேபிள் டிவி சர்வீசைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சென்னையில் மட்டுமே எப்படி கடைசி நிலை ஆப்பரேட்டர்களை அழிக்கப் போகிறது?

சென்னையில் மட்டும் ஆரம்பிக்காமல் வெளீயூர்களில் மட்டுமே அரம்பித்ததன் காரணம் அங்கே சென்னையில் உள்ளது போல கண்டீஷனல் ஆக்ஸ்ஸ் சிஸ்டமில்லை என்பதாலும், சென்னை போன்ற ஊர்களில் அரசே கண்ட்ரோல் ரூம் அமைத்தாலும், ட்ராயின் சட்ட்திட்டங்களுக்குள் தான் ஆரம்பிக்கப் படவேண்டியதன் அவசியம் என்பதாலும், செட்டாப் பாக்ஸ் வசதியுள்ள கண்ட்ரோல் ரூம் அமைப்பதில் உள்ள செலவும், அப்படியே அமைத்தாலும் உடனடியாய் ஜூன் மாதம் முதல் சென்னையில் முழுக்க, முழுக்க டிஜிட்டல் செட்டாப் பாக்ஸு முறையில் ஒரு கண்ட்ரோல் ரூம் அமைத்து நெட்வொர்க்கை ஆன் செய்ய பல கோடிகள் ஆகும் என்பதாலும் கொஞ்சம் யோசனையாகவே இருந்த்து.  இந்நிலையில் சென்னையில் உள்ள இரண்டு எம்.எஸ்.ஓக்களான எஸ்.சி.வியும், ஜாக்கும் மட்டும்தான். இருவருமே கண்டீஷனல் ஆக்ஸ்ஸ் சிஸ்டம் உள்ள நெட்வொர்க்குகளை வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு அதன் மூலம் சேவையையும் அளித்து வருகிறார்கள். நாள் நெருங்க நெருங்க.. மக்களிடம் புதிய சேவையை அறிமுகப்படுத்த அந்த நெட்வொர்க்குகள் விளம்பரப்படுத்த ஒவ்வொரு கேபிள் செட்டாப்பாக்சுக்கும் ஆயிரம் ரூபாய் என்று விலை நிர்ணையித்து அதை வசூல் செய்து பாக்ஸ் ஆர்டர் செய்தால்தான் ஜூன் 30ஆம் தேதிக்கு முன் மக்களுக்கு அவர்களின் தேவையான சேனல்களை தர ஏற்பாடு செய்ய முடியும் என்பதால் அதற்கான வேலைகளை ஆரம்பித்த்து. ஆனாலும் தங்களுக்கு தேவையான பாக்ஸுகளை ஆர்டரின் பேரில்தான் இறக்க முடியும் என்கிற செய்தியோடுதான். இது நடந்த்து சென்ற மாதம். அதாவது மே மாதம்.

ஆனால் அதுவரை ட்ராயிடமிருந்து எப்படி சேனல்களைத் தரப்போகிறார்கள். வருமான பகிர்வு போன்ற பல விஷயங்களுக்கு விளக்கமேயில்லை. இந்நிலையில் அரசு கேபிள் ஒரு அறிவிப்பை அறிவித்த்து. சென்னையில் உள்ள ஆப்பரேட்டர்கள் அனைவரும் தங்களை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ள ஆன்லைன் மூலம் ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும் என்று. இதைப்பார்த்த்தும் சென்னையின் முன்னணி எம்.எஸ்.ஓக்கள் இருவரும் அமைதியானது. உடனடியாய் ஆப்பரேட்டர்கள் ரிஜிஸ்டர் பண்ண, அதன் பிறகு அரசு கேபிள் நிறுவனத்திடமிருந்து கிணற்றில் கல்.  ஆப்பரேட்டர்களுக்கு ஒரே குழப்பம். அரசு கேபிள் நிறுவனம் ஆரம்பிக்கும் நிறுவனத்தில் இணைந்து டிஜிட்டல் கண்ட்ரோல் ரூம் அமைப்ப்பதா? இல்லை ஏற்கனவே அவரவர்க்ள் இருக்கும் நெட்வொர்க்கில பேசி அடுத்த கட்ட இம்ப்ளிமெண்டேஷனை செய்வதா? என்ற குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் பதிலேயில்லை அரசு கேபிள் நிறுவனத்திடமிருந்து. விரைவில் உலக லெலவில் தரம் கொண்ட டிஜிட்டல் கண்ட்ரோல் ரூமை அமைக்கவிருக்கிறோம் என்றும் அதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். ஆப்பரேட்டர்கள் கொஞ்சம் அசுவாசடைந்தார்கள். ஆனால் அதுவும் வெறும் ரெண்டு நாள் கூத்துதான். கேபிள் ஆப்பரேட்டர்களின் தொடர் ப்ரெஷரால் எப்போது ஆரம்பிப்பீர்கள் என்ற தொடர் கேள்வியின் ப்ரெஷர் தாங்காமல் நாங்கள் ஆரம்பிப்பத்ற்கு ஜூலை ஆகஸ்ட் ஆகும். என்றும் நாங்கள் சென்னையில் டிஜிட்டல் கண்ட்ரோல் ரூம் முழுவதுமாய் அமைப்பதற்கு மூன்று மாதம் டைம் கேட்டிருக்கிறோம் என்ற ஒரு அறிக்கையிஅ விட்டார்கள்.  இதை பத்திரிக்கைகளிலும் செய்தியாய் வர, சென்னையின் செட்டாப்பாக்ஸ் ப்ரச்சனையை அரசு கேபிள் தள்ளிப் போட்டிருக்கிறது என்பது போல செய்தியாய் அது மக்களிடையே கசிந்து இன்று கட்டாகட்டும் பார்க்கலாம் என்ற நிலையில் மக்கள் இருக்க, மீண்டும் அரைகுறை நிலையில் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.


இதற்குள் சென்னையில் இருக்கும் ஆப்பரேட்டர்கள் எல்லோரும் ஆளாளுக்கு குழம்பிப் போய் அரசு கேபிளை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் எஸ்.சி.வியையும் இன்னொரு பக்கம் ஜாக்கையும் தொங்கிக் கொண்டிருந்தாலும், ட்ராயின் கட்டாயம் காரணமாய் மற்ற எம்.எஸ்.ஓக்கள் டிஜிட்டல் கண்ட்ரோல் ரூமை அப் செய்தால் என்ன செய்வது என்ற கேள்வியே வாழ்க்கையில் மாபெரும் கேள்வியாய் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள். 

சரி.. அப்படி ஆப் ஆனால் என்ன? உடனடியாய் யார் யாருக்கு டிஜிட்டல் பாக்ஸ் தேவைப்படுகிறதோ அதை வாங்கிக் கொடுப்பதில் என்ன சிக்கல் என்றால் அதில்தான் பெரிய சிக்கல் இருக்கிறது. சென்னையில் மொத்தம் சுமார் முப்பது லட்சத்திலிருந்து நாற்பது லட்சம் செட்டாப்பாக்ஸுகள் தேவை. இருப்பதோ இரண்டே இரண்டு எம்.எஸ்.ஓக்கள். அவர்களும் முன்னால் கட்டினால்தான் இம்போர்ட் செய்ய முடியும் என்கிற கட்ட்த்தில் தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஒருவேளை அரசு கேபிள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் அவர்களுடய இன்வெஸ்ட்மெண்டுகள் முடங்கிப்போக வாய்ப்புகள் உள்ள நிலையிலும், ஆப்பரேட்டர்கள் நிச்சயம் அரசு கேபிளுக்கு ஆதரவு கொடுக்க விழைந்தால் அவர்க்ள் நிலை  மிக மோசம் என்பதால் தான். அப்படியே அவர்களிடம் இருக்கும் சில ஆயிரம் பாக்ஸுகளை வாங்கி அதில் சேன்லக்ளை ஆக்டிவேட் செய்து கஸ்டமரிடம் இம்ப்ளிமெண்ட் செய்ய நாட்கள் அல்ல வாரங்கள் ஆகும். மீண்டும் ஏற்படும் டிமாண்டுகளுக்கு கிட்ட்த்தட்ட மாதக்கணக்கில் ஆகும். அந்நிலையில் டிடிஎச் அப்பரேட்டர்கள் தங்கள் பங்குக்கு அவரக்ளது டிஷ்களை விற்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அவர்களுடயது அவ்வளவு சுலபம் அல்ல. ஆப்பரேட்டரின் வேலையை விட கடினம்.

சரி நல்லதோ கெட்ட்தோ, இருக்கும் எம்.எஸ்.ஓவிடம் போய் பணம் கட்டி வேலையை ஆரம்பிப்போம் என்றால் மீண்டும் அரசு கேபிள் நிறுவனம் டைம் கேட்டாகிவிட்ட்து செப்டம்பரில் ஆரம்பிப்போம் என்று அறிக்கை விடுகிறது. ஆனால் இதுவரை டெண்டரைக்கூட ஓப்பன் செய்யவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.

ஆப்பரேட்டர்களின் குழப்பம் இப்போது உச்சம். அவர்களின் முக்கிய ப்ரச்ச்னை இந்த திட்டம் சென்னையில் அமுலுக்கு வருகிறதா இல்லையா? எம்.எஸ்.ஓவைக் கேட்டால் அமுலுக்கு வருகிறது என்றுதான் சொல்கிறது. அப்போது பாக்சுகு பணம் கட்டுங்கள் தருகிறோம். சரி. பண பங்கீடு பற்றி பேசணுமே அதைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்? என்கிறார்கள். சரி அது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், அரசின் தொடர் அறிவிப்பின் மூலமாய் மக்கள் வராது என்ற எண்ணத்தில் இருக்க, சிக்னல் கட்டாகட்டுமென்று காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காத்திருப்பெல்லாம் அன்று காலை வரையில்தான் இருக்கும் மதியமே பணத்தக் கொடுத்துவிட்டு பாக்ஸை கொடு என்றால் சுமார் தொண்ணூறு நாட்கள் வரை ஆகும் இம்போர்ட் செய்ய.  சரி.. இருக்கிறவர்க்ளுக்கு வாங்கிக் கொடுப்போம் என்றால் அப்படி வாங்கிக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசு கேபிள் ஆரம்பித்து அவர்களின்ன் சிக்னலைக் கொடுக்க வேண்டியிருந்தால் இந்த பாக்சுகள் வேலை செய்யாது. அவை இரண்டுமே வேறு வேறு சாப்ட்வேர்களில் வேலை செய்யப்படும் பாக்ஸுகள். அவைகள் இசைந்து இயக்க வைக்க முடியுமென்றாலும் அதற்கு இருவரும் சம்மதிப்பார்களா? என்ற மில்லியன் டாலர் கேள்வி வேறு இருப்பதால் மீண்டும் வாங்கியவர்களுக்கே பாக்சுகளை யார் வாங்கிக் கொடுப்பார்கள்.?


இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர் சங்கங்களோ அரசு கேபிளுக்கு சப்போர்ட்டாகவோ, அல்லது எதிராகவோ அறிக்கை விடாமல் ஆளாளுக்கு தினமும் கட்டாகுமா கட்டாகாதா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மத்திய அரசிடமோ, மாநில அரசிடமிருந்தோ சரியான பதிலைப் பெறாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது பற்றி பேச சென்ற வாரம் அம்பிகா சோனி எம்.எஸ்.ஓக்களை அழைத்திருக்க, அரசு கேபிள் சார்பில் ஒருவரும் விரைவில் ஆரம்பிக்க இருக்கும் ஒரு எம்.எஸ்.ஒவிலிருந்து ஒருவரும் மட்டுமே போயிருக்கிறார்கள். மக்களின் நிலையை, மாநிலத்தின் நிலையை அவர்கள் சொல்லியும் ஒரு தீர்மானமான முடிவில்லாமல் அரைகுறையாய் கிளம்பிவிட்டாராம் அம்பிகாசோனி. எஸ்.சி.வியோ, ஆப்பரேடர்களின் தலைவர்களோ அங்கே செல்லவில்லை. என்ன கொடுமைடா.. இது சிக்னல் கொடுத்துக் கொண்டிருக்க கூடிய எம்.எஸ்.ஓக்கள் போகவில்லை. கேள்வி கேட்க்க்கூடிய சங்க நிர்வாகிகள் போக வில்லை. இன்னமும் ஆரம்பிக்கவே ஆரம்பிக்காத ரெண்டு நிறுவன்ங்கள் போய் டைம் கேட்டால் என்ன நினைத்து பதில் சொல்வார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இன்னமும் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.

சரி கட்டாகிவிட்டாலும் தாமே ஒரு முப்பது சேனல் கண்ட்ரோல் ரூமை அமைத்துக் கொண்டு உடனடியாய் அனலாக் நெட்வொர்க்கை ஆரம்பிக்க நினைத்தால் அது சட்டப்படி குற்றம். சரி சட்ட்ட்தை விடுங்கள். அப்படி உடனடியாய் ஆரம்பித்து நட்த்த முடியுமென்றாலும் அடுத்த நிலை என்ன? என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. வரப் போகிறதா இல்லியா என்ற நிலையை தெளிவாக இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரியாவிடில் சென்னையின் அப்பரேட்டர் இனமே குழப்பத்தின் உச்சியில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு நடுத்தெருவில் நிற்பது நிஜம்.  இதில் காமெடி என்னவென்றால் கொல்கத்தா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அவரவர்கள் உடனடியாய் இம்பளிமெண்ட் செய்ய முடியாது என்று டயம் கேட்டிருக்க. அவர்களுக்கும் அதே பதில்தான். ஆனால் அவர்கள் அங்கே உடனடியாய் அமல் செய்ய மாட்டார்கள். அதற்கு காரணம் அரசு அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு ஆனால் இங்கே ப்ரச்சனை ஆப் செய்தால் உடனடியாய் இருக்கும் பாக்ஸுகளை வைத்து இம்ப்ளிமெண்ட் செய்யலாம். ஆனால் தொடர்ந்து செயல்பட அரசு ஆதரவு இருக்குமா என்ற பயம் ஆப்பரேட்டர்களூக்கு. கடைசி செய்தியாய் சென்ற வாரம் மினிஸ்ட்ரியிடம் நான்கு அரசு நிர்வாகிகளும் ஒரே நாளில் சுமார் ஒன்னரை கோடி டிவிக்களுக்கு சிக்னல் இல்லாமல் போய் அதனால் ஏற்படப்போகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏன் தேவையில்லாமல் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் நிச்சயம் எக்ஸ்டென்ஷன் வேண்டுமென்றும் சொல்லிவிட்டார்கள். அரசும் இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்வதாய் சொல்லிவிட்டு போயிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் மத்திய அரசை நேரம் நீட்டிப்புக்காகவும், அடிப்படை பணத்தை அப்படியே ஆப்பரேட்டர்களுக்கு வரும் படியான மாற்றம் செய்ய வேண்டுமென்று இன்று ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. மத்திய அரசின் ட்ராய் உட்டாலக்கடியைப் பற்றி அடுத்து பார்ப்போம்.
கேபிள் சங்கர்

Jun 18, 2012

கொத்து பரோட்டா - 18/06/12

தமிழ் சினிமாவின் மல்ட்டிப்ளெக்ஸுகளின் நிலை படு மோசமாய் இருக்கிறது கடந்த இரண்டு வாரமாய் மக்கள் கூட்டத்தை வரவழைக்கும் படங்களாய் ஏதுமில்லாததால் ஆளில்லாமல் காய்ந்து வழிகிறது. பெரும்பாலான காட்சிகள் கேன்சல் செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடிக் கிடக்கிறது. சென்ற வாரம் ரிலீசான பிரமோதியஸ் கூட புட்டுக் கொண்டதால் வீக் டேஸ்களில் சென்னை புறநகர் மல்டிப்ளெக்ஸுகள் எல்லாம் ஷோக்களை கேன்சல் செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளூங்கள். சென்ற வாரத்தில் ஒரு நாள் ஆயிரம் சீட்டுக்கள் இருக்கும் ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு மல்ட்டிப்ளெக்ஸில் இருபத்திரெண்டு பேருக்கு மட்டுமே மடகாஸ்கர் காட்டினார்கள் மற்ற படங்கள் எல்லாம் கேன்சல். அந்த தியேட்டரே பூத் பங்களாபோல லைட்டெல்லாம் ஆஃப் செய்யப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் லைட் போடப்பட்டு மொத்தமே ஆறு முதல் ஏழு ஸ்டாப்புகள் தான் இருந்தார்கள். இந்த லட்சணத்தில் இடைவேளைக்கு பிறகு ஏசியை ஆப் செய்து என்னிடம் திட்டு வாங்கி மீண்டும் போட்டார்கள். வருவதற்கே யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இம்மாதிரியான சர்வீஸுகளை வழங்கினார் விளங்கிவிடும் மல்ட்டிப்ளெக்ஸ் வியாபாரம். அது மட்டுமில்லாமல் சோபா டைப் சீட் போடுகிறேன் என்று போட்டுவிட்டு, சோபாவில் சாய்ந்திருப்பதற்காக முட்டியில் முட்டுக் கொடுத்துக் கொண்டே உட்கார்ந்திருப்பதில் சவுகரியம் இல்லை என்பதை இவர்களுக்கு யார் சொல்வார்கள்?. சென்னையில் நிஜ சோபா அனுபவத்திற்கு சத்யம் மட்டுமே ஒர்த். நிஜமாகவே உள்ளுக்குள் அமிழும் சேர்கள். ஒன்றிரண்டு ஆங்காங்ஙே கிழிந்திருந்தாலும் கூட.. சொன்னால் சரி செய்து விடுவார்கள். சமீபத்தில் ஒரு சிங்கிள் ஸ்கீரின் தியேட்டருக்கு சென்னையில் மூடு விழா நடத்தியிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 17, 2012

Ferraari Ki Sawaari

விதுவிநோத் சோப்ரா, போமன் ஹிரானி, ராஜு ஹிரானி போன்ற பெயர்களைப் பார்த்ததும் சரி ஃபீல் குட் படம் ரெடி என்கிற நம்பிக்கை வந்துவிடும் அளவிற்கு இவர்களின் ப்ராண்ட் ஹிட் கொடுத்திருக்க, அதை நிருபிக்கும் வகையில் மெனக்கெட்டு ஒரு சுவாரஸ்ய ஐடியாவை நம்முன் வைக்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

Jun 15, 2012

Men In Black -3

முதல் பாகம் பார்த்த போது இருந்த ஆர்வம் இரண்டாவது பாகம் பார்க்க வரவில்லை. அதனால் பார்த்தேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வேறு வழியேயில்லாமல் எல்லாம் சில படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இதுவும் ஒன்றாய் இருந்துவிட்டு போகட்டும் என்று போய் உட்கார்ந்தேன்.

Jun 14, 2012

நான் - ஷர்மி - வைரம் -18


18 ஷர்மி
பையன் ரொம்ப நல்ல பையனா இருக்கான். நீன்னா அவனுக்கு உசிருன்னான். பத்து நாளா அவன் தான் நம்ம வீட்டு செலவயெல்லாம் பாத்துக்கறான். பேசாம அவனை நீ கல்யாணம் பண்ணிக்கயேன்என்றதைக் கேட்டுத்தான் எனக்கு கோபம் வந்தது.

Jun 13, 2012

சாப்பாட்டுக்கடை - ஆப்பம், வடை, இடியாப்பம், தயிர்சாதம்

என்னடா இது பாலகுமாரனின் நாவல் பேர் போல இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஆம் சென்னையில் இந்த அயிட்டங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் கடை நடத்துகிறார். அதுவும் ரெஸ்ட்ராண்ட் அல்ல, கையேந்திபவன்.

Jun 12, 2012

Shanghai

சில இந்திப் படங்களின் விளம்பரங்கள் செய்யப்படும் போதே பார்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தை கொடுக்கும். அப்படி ஒரு குட் புக் லிஸ்டில் இந்த படம் எப்படி வந்தது என்பதற்கான காரணம் இயக்குனர் டிபங்கர் பனர்ஜி. கோஷ்லா கா கோஷ்லாவிற்கு பிறகு இவரின் புதிய படம். அடுத்து ட்ரைலரில் பார்த்து இம்பரசிவான ஷாட்டுகள் என்று பல விஷயங்கள் கன்பர்ம் செய்ய படம் பார்த்தாகிவிட்டது.

Jun 11, 2012

கொத்து பரோட்டா -11/06/12

பிக்சார் ஸ்டோரி என்றொரு மின் புத்தகம் பற்றி பதிவுலகில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். எழுதியவர் என் இனிய நண்பர் ஹாலிவுட் பாலா. அதை புத்தகமாய் போட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அமெரிக்காவிலேயே வாழ்ந்து காப்பிரைட் சட்ட நிபுணர்களின் நட்பு வட்டத்தில் இருப்பதால் வேண்டாம் என்று இலவச மின்னூலாக அதை தயாரித்து வெளியிட்டு விட்டார். எனக்கு தெரிந்து தமிழில் பிக்சார் பற்றிய ஒரு சிறந்த புத்தகம் அது என்றே சொல்ல வேண்டும். வடிவமைப்பிலிருந்து கண்டெண்ட் வரைக்கும். பிக்சார் ஸ்டோரியை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும். எனது சினிமா வியாபாரம் புத்தகத்திற்காக அமெரிக்க தியேட்டர்கள், விநியோகஸ்தர்களிடம் விபரங்கள் சேகரித்து உதவியதில் முக்கியமானவர். என்னால் எழுத ஆரம்பித்து தமிழ்மணம் போன்ற பல ப்ரச்ச்னைகளால் தன் ப்ளாக்கை மூடிவிட்டு இலக்கிய பணி ஆற்றப் போய்விட்டவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். சரி.. பில்டப் பெல்லாம் போது எதுக்கு இது என்று கேட்பவர்களுக்கு நம் பதிவர் காப்பிரைட் கருந்தேள் கண்ணாயிரமும், இவரும், மேலும் இரு நண்பர்கள் சேர்ந்து 'Lord of the Rings"  பற்றிய ஒரு மின் புத்தகத்தை ”War Of The Rings" என்றொரு மின் புத்தகத்தை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். படு சுவாரஸ்யமாய் இருக்கிறது. டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அளிக்கவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 9, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை

எழுபதுகளில் ஆரம்பிக்கிறது கதை. மில் ஓனர் தன் பார்ட்னரிடம் தானும் பணம் போட்டுத்தான் இந்த மில்லை ஆரம்பித்திருப்பதாகவும், தன்னிடம் கேட்காமல் மற்ற டைரக்டர்களே முடிவெடுப்பது சரியல்லை என்று வாதாடுகிறார். அதற்கு பார்ட்னரோ, வெறும் பணம் மட்டுமிருந்தால் போதாது, ஒரு மில்லை நடத்த பல தரப்பட்ட திறமைகள் வேண்டும். அது உங்களிடம் இல்லை. வேண்டுமானால் சொல்லுங்க உங்கள் பணத்தை திரும்பத் தந்துவிடுகிறோம் என்று சொல்ல, கோபத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன் மில்லை வெளிநாட்டில் வாழும் மகன் வந்து நடத்த வேண்டும் என்கிற ஆசையை உயிலாய் வெளிப்படுத்தி தன்னையும், தன் காரையும் சேர்த்து வைத்து எரித்துக் கொண்டு மாய்கிறார். இப்படி மில் முதலாளியில் ஆரம்பித்து, ஒவ்வொரு தொழிலாளிகளின் வாழ்வாதாரம், அந்த ஆதாரம் கொடுக்கும் நல்லது, கெட்டதுகள், ஜாதி வெறி,  கம்யூனிச பாலிடிக்ஸ், என ஒரு மில் சார்ந்த வாழ்க்கையை கதையாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்

Jun 7, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை - ஓர் அறிமுகம்

 சமீபகாலமாய் சின்னப் படங்களை சட்டென புறம் தள்ளி விட முடியாதபடி கவனிக்ககூடிய சில திரைப்படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. அப்படி தரமான முறையில் தயாரிக்கப்பட்டு, தகுதியான விளம்பரம் ஆகியவற்றை செய்து வெளியிடப்படும் படங்கள் மிகக் குறைவு. அந்த வகையில் இந்தப்படம் தமிழ் சினிமாவில் புதிய பல முயற்சிகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் மூலம் என்றே சொல்ல வேண்டும்.

Jun 6, 2012

சாப்பாட்டுக்கடை - புத்தூர் ஜெயராமன் கடை

ஒவ்வொரு முறை தஞ்சை மாவட்டத்தை நோக்கிப் போய் வரும் போதும் மணிஜி இந்தக்கடையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பார். ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இம்முறை அப்துல்லாவின் அக்காள் மகள் திருமணத்திற்கு போகும் போதே நான் ஓ.ஆர்.பி.ராஜாவிடம் சொல்லிவிட்டேன் மதிய சாப்பாடு அங்கேதான் என்று.

Jun 5, 2012

FeTNA: அமெரிக்கதமிழ்த்திருவிழா 2012



தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும்,  ஒழுகிப்போற்றவும் அமெரிக்காவில்செயல்பட்டுவரும்ஓர்அமைப்புதான் வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை (FeTNA) என்பதாகும்

Jun 4, 2012

கொத்து பரோட்டா - 04/06/12

பெட்ரோல் நல்ல பெட்ரோல்
ஏழு ரூபாய் ஐம்பது பைசா ஏற்றியதை யோசித்த மறுகணமே ஏற்றுவதற்கு யோசிக்காத மத்திய அரசு, இரண்டு ரூபாய் குறைப்பதற்கு மட்டும் உட்கார்ந்து பேசி யோசிச்சித்தான் சொல்வாங்களாம். என்னா கொடுமைடா இது. இது கூட எதிர்கட்சிகளின் தொடர் இம்சைகள் காரணமாய்த்தான். வேறு வழியில்லாமல் செய்திருக்கிறது. இந்த விலை குறைப்பினால் எதிர்கட்சிகள் சட்டென அடங்கிவிடாமல் தொடர்ந்து மக்களுக்காக குரலெழுப்பினால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் நம்பிக்கையை பெற முடியும். பார்ப்போம் எப்படி தீயா வேலை செய்யுறாய்ங்கன்னு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 3, 2012

தடையறத் தாக்க..

கந்த சஷ்டி கவசத்திலிருந்து குரு காக்க காக்க எடுத்தார் என்றால் சிஷ்யன் அடுத்த வரியை எடுத்திருக்கிறார். கதையும் அதைப் போலவே ரவுடிகளைச் சுற்றி வரும் ஒரு த்ரில்லர். முதல் படமான முன் தினம் பார்த்தேனேவில் கவனிக்கப்படாமல் போனவர் இயக்குனர் மகிழ் திருமேனி.

Jun 2, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட்- மார்ச் 2012 - ஏப்ரல் 2012

மார்ச் மாதம் பெரும்பாலும் பரிட்சை மாதமாதலால் பெரும்பாலான படங்கள் வெளியாகாமல் இருந்த நேரத்தில் மிகச் சிலப் படங்களே வெளியாயின.  நிறைய சின்ன பட்ஜெட் படங்களும் அதில் அடங்கும். பெரும்பாலானவை வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது.

Jun 1, 2012

மனம் கொத்திப் பறவை

தீபாவளியின் தோல்விக்கு பிறகு எழில் தன்னை மீண்டும் நிருபிக்க களம் இறங்கியிருக்கும் படம் மனம் கொத்திப் பறவை. எழுத்தாளர் சாருநிவேதிதாவின் கட்டுரைத் தொடரின் பெயர் இது. சிவகார்த்திகேயனின் இமீடியட் இம்பாக்டுடன் களமிறங்கியிருக்கிறார்.