Posts

Showing posts with the label கும்பகோணம்

சாப்பாட்டுக்கடை- கும்பகோணம் மங்களாம்பிகா

 ஏற்கனவே இவர்களைப் பற்றி சில வருடங்களுக்கு முன் சாப்பாட்டுக்கடை பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.நான் எப்போது கும்பகோணம் போனாலும் இவர்களுடய ரவா தோசை, சாம்பார், கார சட்னிக்கு அடிமை. அட்டகாசமாய் இருக்கும். முன்பு கும்பேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் வைத்திருந்தவர்கள் இப்போது அந்த கோவிலின் பிரகாரத்தின் பின்னால் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே செட்டப்பில் தான் இக்கடையும். நாங்கள் சென்ற போது ஏகப்பட்ட கூட்டம். இத்தனைக்கும் வார நாட்கள் தான். வெளியூர்க்காரர்கள் தான் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த தெலுங்குகார கஸ்டமரிடம் கும்மோணத்துக்கார சப்ளையர் தெலுங்கு அரிசு உப்புமாவை “உப்பு பிண்டி” பிய்யம் உப்பு பிண்டி என்று ரெகமெண்ட் செய்து கொண்டிருந்தார்.  இடம் கிடைத்து உட்கார்ந்த மாத்திரத்தில் உடனடியாய் ஆர்டர் செய்தது ரவா தோசைதான். நல்ல முறுகலா கொடுங்கன்னு சொல்லி ஆர்டர் செய்தேன். மகனார்கள் நெய் பொடி தோசை ஆர்டர் செய்தார். இன்னொருவர் பரோட்டா. மனைவியும் அம்மாவும் தோசை மற்றும் ரவா.  நான் கேட்டார்ப் போலவே நல்ல முறுகலாய் ரவா தோசை வந்தது. உடன் காரச்சட்னியை கேட்டு வாங்கி போட்டுக் கொண்டேன். நல்ல எண்ணெய் ...

கும்பகோணம் டூ சென்னை

நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது. இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இரு...

கொத்து பரோட்டா -26/08/13

தானே அப்டேட் செய்ய வேண்டிய ஒரு வேலை. மக்களும், பத்திரிக்கைகளும், கோர்ட்டும் தலையிட்டு செய்கிறாயா இல்லையா? என்று செய்ய வைத்திருக்கிறது. ஆட்டோ கட்டணத்தை நிர்ணையிக்கும் விஷயத்தைத்தான் சொல்கிறேன்.முதல் 1.8கிமிட்டருக்கு 25 ரூபாயும் அதிகபட்ச கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் நிர்ணையித்திருக்கிறார்கள். பேரம் பேசியே வருடங்களாய் பழக்கப்பட்டவர்கள் இனி நிர்ணையித்த கட்டணத்தை வாங்க பழக வேண்டும். அப்படி வாங்காத பட்சத்தில் அவர்களின் மீது புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க எல்லாவிதமான உதவிகளையும் பயணிகளுக்கு அரசு அளிக்க வேண்டும். பெட்ரோல் விலையை காரணம் காட்டி விலையேற்றும் ஆட்டோக்கள் பெரும்பாலும் ஆட்டோ கேஸில் தான் போகிறது. எனவே இவர்கள் பெட்ரோல் விலையேற்றத்தை காரணம் காட்டி கொள்ளையடித்தது என்றைக்குமே செல்லாத போது, இனி மீண்டும் அதை காரணம் காட்டி விலையேற்ற சொல்வது போன்ற இம்சைகளை அரசு தடுக்க வேண்டும். பார்ப்போம். நம்ம ஊரு சட்டமும், அதை செயல்படுத்தும் காவல்துறையின் லட்சணங்களை பற்றி தெரிந்து எல்லாம் நல்லா நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய அதீதம் என்பது புரிந்தும் நம்புகிறேன். @@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா-11/03/13

Image
கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு திரும்புகையில் ஹைவேஸில் வரும் போது ஒர் கேள்வி எழுந்தது. கையில் காசு இல்லாவிட்டால் டோலில் அனுமதிப்பார்களா? இல்லை.. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் வசதி வைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் தான் அது. அதை செக் செய்து பார்த்துடலாம் என்று முதல் டோலில் ‘சார்.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?” என்று கேட்டவுடன் நின்று கொண்டிருந்த ஹிந்திக்கார பையனு புரியாமல் “சிங்கிள்?” என்று கேட்டான். “மேரே பாஸ் பைசா நஹிஹே.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் கரோகே” என்ற அரைகுறை இந்தியில் கேட்க, அவன் கண் வெளியே வந்துவிட்டது. “நஹி நஹி சாப்.. ஒன்லி பைசா..ஒன்லி பைசா..” என்ற பதற ஆரம்பித்தான் பின்னால் ஒர் பெரிய வால் நின்று கொண்டு ஹாரன் அடித்துக் கொண்டேயிருக்க, காசைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன். பின் அடுத்த டோல், அதற்கடுத்த டோல் எல்லாவற்றிலும் இதே நிலைதான். எனக்கொரு சந்தேகம். ஹைவேஸில் வந்தாகிவிட்டது. பர்சை மறந்து வைத்துவிட்டோம். அல்லது எங்கோ மிஸ்ஸாகி விடுகிறது. வருகிற வழியில் நம்பர் ஒன்னுக்கு போகும் இடத்தில் தொலைந்து விடலாம். டோலுக்கு காசு இல்லையென்றால் திரும்ப அனுப்புவேன் என்று சொல்வது ...

சாப்பாட்டுக்கடை - மங்களாம்பிகா காபி பார்

Image
கும்பகோணம் என்றதும் எல்லோருக்கும் டிகிரி காப்பி ஞாபகம் வரும். அதே போல அங்குள்ள குட்டி குட்டி மெஸ்கள் ஞாபகம் வராமல் போனால் ஆச்சர்யம்தான். என் ஞாபகத்தில் அங்கே மாமி மெஸ் என்றொரு மெஸ் இருந்தது. சென்ற முறை சாப்பிடப் போன போது சீக்கிரம் மூடிவிட்டார்கள். இம்முறை போனதும் அம்மெஸ்ஸை காணோம். என்ன ஆயிற்று என்று விசாரித்தால் மூடிவிட்டார்களாம்.  அதை கேள்விப் பட்டு அடடா என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் அது போனா என்ன? இங்க  இன்னொரு மெஸ் மாதிரியான பழைய உணவகம் இருக்கு வாங்க.. என்று அழைத்துப் போனார். அது தான் இந்த மங்களாம்பிகா காபி பார். மசாலா க்ஃபே போல ஒரு உணவகம்.