Posts

Showing posts with the label ட்வீட்டர்

கொத்து பரோட்டா -17/06/13

Image
நேற்று கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எக்மோர் சென்றிருந்தேன். அமிர்தம் சூர்யா, வளர்மதி, லதா சரவணன், எஸ்.சங்கர நாராயணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தி புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை சொன்னார்கள். எனக்கு அமிர்தம் சூர்யாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவரை அவர் கலந்து கொண்டு பேச வேண்டிய புத்தகத்தைப் பற்றி படிக்காமல் வந்து பேசியதேயில்லை. முழுக்க படித்து, அப்புத்தகத்தைப் பற்றிய மிக இயல்பான விமர்சனத்தோடு சுவாரஸ்யமான பேச்சை பேசுவார். நேற்றும் அப்படித்தான் ஒரிரு கவிதைகளை படித்துக் காட்டியவர் அக்கவிதைகளை வரி பிரித்து சொல்லும் போது நிறைய அர்த்தங்கள் புரிபட ஆரம்பித்தது. கவிதைகளை எப்படி படிக்க வேண்டும் என்று புரிய ஆரம்பித்தது. கவிதைக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்று நினைப்பில் கவனமில்லாம இருந்த என்னைப் போன்றவர்களுக்கு அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு இன்ஞ் முன்னேறியிருக்கிறது  என தோன்றியது. நன்றி அமிர்தம் சூர்யா. @@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -23/04/13

Image
இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய் ஆரம்பித்தார். செம அப்சர்வேஷன். அவரின் கிறுக்கல்கள் கவிதைகளை ஆடியோ சிடியாய் வெளியிட்டிருக்கிறார். விரைவில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். சந்தடி சாக்கில் அவரிடம் ஒர் கதை சொன்னேன். நன்றாக இருப்பதாய் சொன்னார். மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றிருக்கிறார். காத்திருக்கிறேன். மனுஷனுக்கு எங்கேயிருந்துதான் விதவிதமான பொருட்கள் கிடைக்கிறதோ.. அவர் வீட்டில் இருந்த கடிகாரம் அட்டகாசம். சில பேரின் குரலில் இருக்கும் வசீகரம் அவர்கள் எது பேசினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அதுவே சுவாரஸ்யமான விஷயங்களுடனான பார்திபனின் குரலில் என்றால் கேட்கவா வேண்டும். தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ...

கொத்து பரோட்டா- 01/04/13

Image
மஹாராஷ்ட்ரிய எம்.எல்.ஏக்கள் இருவர் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் சரணடைந்து பின்பு ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். ஓவர் ஸ்பீடில் போனதற்காக அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து கேஸ்போட்டு பைன் போட்டிருக்கிறார் அதனால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள் பட்டப் பகலில். இந்த ப்ரச்சனையை மீடியா கையிலெடுத்தப் பின் அவர்களிடம் பேட்டி எடுத்த டிவி நிருபர் கடுப்பாகிவிட்டார். “என்ன நீ அடிச்சியா? என்ற ரீதியில் நிருபர் கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் பேசி குழப்பினார். அரசியல்வாதிகள் நினைத்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இம்மாதிரியான சமயங்களில் மீடியாக்கள் கையில் எடுத்துக் கொண்டு வெளிக் கொண்டு வருவதை நான் ஆதரிக்கிறேன். @@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -16/12/12

Image
கேட்டால் கிடைக்கும் இன்றைய தினத்தந்தி வெறும் பதினெட்டு பக்கத்தோடு வர, பக்கத்தை சரி பார்க்க மேலே பார்த்தால் இன்றைய விலை 900 காசுகள் என்று போட்டிருந்தது. வெறும் சினிமா விளம்பரம் பாக்க, தெனம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஒன்பது ரூபாயா ஏன் என்று பார்த்த போது கேலண்டருடன் என்று போட்டிருக்க, செம கடுப்பாகி விட்டது. யார் கேட்டார்கள் இந்த கேலண்டரை. வாடிக்கையாளர் கேட்காமலேயே அவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் திருட்டுத்தனமாய் விலையேற்றி விற்பது குற்றமல்லவா?. இதே முறையைத்தான் தினமலரும் செய்கிறது. ஊருக்குத்தான் உபதேசமெல்லாம் போல. தினசரிகளை தினமும் கடைகளில் போய் வாங்குகிறவர்களுக்கு விலை பார்த்து வாங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மாத கணக்கில் பேப்பர் போடுகிறவர்களை வைத்து பேப்பர் வாங்குபவர்களுக்கு அடுத்த மாத பில் வரும் போதுதான் தெரியும். இவர்களின் இந்த தில்லு முல்லு வேலை. அதற்குள் அந்த கேலண்டர் குப்பைக்கோ, அல்லது எங்கோ மாட்டப்பட்டுவிட, வேறு வழியில்லாமல் ஐந்து ரூபாய்தானே என்று கொடுத்துவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள். ஒரு லட்சம் பேப்பருக்கு காலண்டருடன் விற்றிருந்தால் ஐந்து லட...

என் ட்வீட்டிலிருந்து

என் ட்வீட்டிலிருந்து உன் மேல் பொறாமை கொண்டவளாய் இருந்தால் உன்னை அரவணைப்பவளும் அவள் தான்.