Posts

Showing posts with the label bala

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் தமிழ் திரையுலகமே பரபரப்பாகிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள். ரஜினி கையை காட்டினால் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துவிடும் என்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே பூபூத்த நந்தவனமாகிவிடும் என்று மிகைப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது. தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்...

நான் கடவுள் - திரைவிமர்சனம்.

Image
தற்போதைய வியாபார தமிழ் சினிமாவில், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை இவ்வளவு தத்ரூபமாய் படமெடுக்கும் தைரியம் பாலாவுக்கு தவிர வேறு யாருக்காவது வருமா என்பது சந்தேகமே.. உடல் ஊனமுற்ற, மனநிலை பிழன்ற, வயதான, பிச்சைகாரர்களின் வாழ்கையில் உள்ள ஆழ் சோகத்தையும், வேறு வழியில்லாமல் தங்களுடய கதி இது தான் என்று ஏற்றுக் கொண்டு, அதற்குள் சந்தோஷமா இருக்க முயற்சிப்பதும், என்று அவர்க்ளின் வாழ்கையை நம் கண்முன்னே அவர்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே நம்மை கதிகலங்க வைத்துவிட்டார் பாலா. சிறு வயதில் ஜோசியர்களின் பேச்சை கேட்டு காசியில் விட்டுவிட்டு வரப்பட்ட ருத்ரனை தேடி அவனின் அப்பாவும், தங்கையும், காசியில் அலைவதில் ஆரம்பிக்கிறது கதை. ருத்ரன் பிணங்களுடன் வாழும் ஒரு அகோரனாய் மாறியிருக்க, தன்னையே கடவுள் என்று சொல்லி கொள்ளும், எதிரில் வருபவர்கள் நல்லவனா, கெட்டவனா என்று அறியும் ஆற்றல் பெற்றவனாய் ஆங்காரமாய், ஓங்காரத்தோடு நிற்கிறான் ருத்ரன். அவனை தன்னுடன் அழைக்க, ருத்ரனின் குரு போய் எல்லா பந்தங்களையும் அறுத்து வா.. நீ வர வேண்டிய நேரத்தில் உன்னை அழைக்கிறேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார். கண் தெரியாத நன்றாக பா...