Thottal Thodarum

Jul 27, 2018

கொத்து பரோட்டா 2.0-61

கொத்து பரோட்டா 2.0-61
மாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம்? என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக்கிறீங்க? என்றதும் துணுக்குற்று, ”ஏன் நாங்க ஏன் ஒளீயணும்?” என்றார்.

உங்களோட வேலை சிக்னல் அருகே நிற்பதுதான். சிக்னலில் நிங்க நின்று மக்களை சிக்னல் மீறாமல் தடுத்து நிறுத்துவதுதான் உங்கள் கடமை. ஆனா இங்கே ஒளிஞ்சுட்டு மக்களை தவறு செய்ய உதவிட்டு, அவங்களுக்கு தண்டனை கொடுக்குறது என்ன நியாயம்? என்றேன். ரொம்ப ரூல்ஸ் பேசாதீங்க சார்.. சிக்னல் மீறினா பைன் கட்டித்தான் ஆகணும்.என்றார் உடனிருந்த இன்ஸ். அப்ப உங்க வேலைய அந்த சிக்னல் கிட்ட வந்து செய்யுங்க.. அங்க வந்து கட்டுறேன் என்றேன். ஏனோ தெரியவில்லை அதன் பின் என்னை எதுவுமே கேட்கவில்லை. நான் பைன் கட்டிவிட்டு வந்தேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – லஷ்மி
வாழ்க்கையில் மொனாட்டனி என்பதை தவிர்க்கவே முடியாது. அதிலும் ஆண் பெண் உறவுகளிடையே மிகவும் கஷ்டமான விஷயம். இதில் லோயர்,மிடில், அப்பர் என பாகுபாடே இல்லையென்றாலும், ஆண் பெண் உறவுகளிடையே ஏற்படும் வெறுமையை புரிந்து கொண்டு, தங்களது உறவுகளுக்கு புத்துயிர் ஏற்படுத்த விழையும் முயற்சி மிடில் க்ளாஸ் மிஷின் வாழ்க்கையில் சாத்தியமேயில்லை. அப்படியான வாழ்க்கை வாழும் லஷ்மி தம்பதியினருக்கிடையே ஒர் வெறுமை. கணவனுக்கு ஒர் பெண் தோழி இருப்பதை போன் மூலம் அறிகிறாள். ரெயிலில் வழக்கமாய் சந்திக்கும் இளைஞனைப் பார்த்து புன்னகைக்கிறாள். ஒரு போராட்ட நாளில் அவளைப் பற்றி கவலையில்லாத கணவனிடமிருந்து ஒர் நாள், ஒரே நாள் மொனாட்டனியை உடைக்க, அந்த இளைஞனுடன் கழிக்கிறாள். அடுத்த நாள் அதே வீடு. இம்முறை ப்ரஷர் குக்கரின் மூச்சு டாப் ஆங்கிளில். “ட்ரயினுக்கு நேரமாச்சே கிளம்பலை’ என்று புருஷன் கேட்க, இனிமே கொஞ்ச நாளைக்கு பஸ்ல போகப் போறேன் என்று தன் மொனாட்டனியை தொடர்கிறாள்.

கொஞ்சம் யோசித்தால் தப்புன்னா எதுவுமே தப்புத்தான் இல்லைன்னா இல்லைதான் என்பது தான் கருத்தென்றாலும். உறவுகளிடையே ஏற்படும் வெறுமையை போக்க, உணர்ந்தவர்கள் முயல்வதேயில்லை. மூச்சு முட்டும் உறவின் இறுக்கத்திலிருந்து கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் வாழ்கிறார்கள். அதே நேரத்தில் இம்மாதிரியான கலாச்சார மீறலும், புருஷன் தப்பு பண்றான் அதனால நான் பண்ணா என்ன என்பது போன்ற கருத்து சொல்வதாய் எடுத்துக் கொண்டு சமூக கோபம் கொள்கிறவர்களுக்கு இது அவர்களுக்கானது இல்லை.  இப்படத்தை கொஞ்சம் பிசகினாலும் பிட்டு படமாகிப் போய்விடக்கூடிய அத்துனை ரிஸ்குகளிடையே லஷ்மிப்ரியா எனும் அற்புதமான நடிகையின் ப்ரெசென்ஸும் திறமையாய் கையாண்ட இயக்குனர் சர்ஜுனுக்கும் வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mukkabazz
அனுராக் கஷ்யப்பின் புதிய படம்.  ஷர்வன் சிங் பாக்ஸிங்கின் மேல் வெறி பிடித்தவன். எப்படியாவது நேஷனல் லெவலில் வெற்றி பெற்று, அரசு வேலை வாங்கிவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் திறமையான பாக்ஸர். குரு ஜிம்மி ஷிர்கிலின் அண்ணன் பெண்ணின் பார்வைபட, அந்த நிமிட பார்வையில் காதலில் வீழ்கிறான். வேலையில் கவனமிழக்கிறான். அடிக்க வரும் குருவை, மிக இயல்பான பாக்ஸரின் ரிப்ளெக்ஸ் காரணமாய் திரும்பியடிக்க, நாக்கவுட் ஆகிறார் குரு. இனி உன் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவு செய்து அவனின் கேரியரையே அழிக்க தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சி. அதிலிருந்து ஷர்வன் சிங் எப்படி மீண்டு, தன் காதலியை கை பிடித்து, வேலை கிடைத்து, தன் கனவு பாக்ஸர் போட்டியில் வென்றானா? இல்லையா?என்பதுதான் இந்த முக்காபாஸின் கதை. கேட்டால் சாதாரணமாக தெரியும் காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாய் தெரியும். ஆனால் படம் முழுக்க, ஆதிக்க சாதியின் ஆணவம். அவர்களின் அதிகாரம். அதன் மூலம் நசுக்கப்படும் கீழ் ஜாதிக்காரர்களின் கனவும், வாழ்வுரிமையும்.

வாய் பேச முடியாத நாயகிக்கும் நாயகனுக்குமிடையே மலரும் அழகான காதல், அவளின் ஒற்றை பார்வை அத்துனை பேரையும் அடிக்க வைக்கும் உயிர்ப்பு என கலகல, விறுவிறு காதல் எபிசோட் பூராவும். ஆங்காங்கே இருவரது மனக்குமுறலை, காதலை மியூசிக்கலாய் மாண்டேஜுகளோடு கொண்டு வந்திருக்கிறார்கள். படம் முழுக்க, சிட்சுவேசனுக்கு ஏற்ப பாடல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. நம்மை படம் நெடுக கட்டிப் போடுகிறது. மாட்டுக்கறி அரசியல்,ஆளும் பி.ஜேபியை விமர்சனம் செய்யும் காட்சிகள். உத்திரபிரதேச பாக்ஸிங் பெடரேஷன் ஊழல்கள். கீழ் ஜாதி உயரதிகாரி, அவனை விட உயர் ஜாதியினரிடம் காட்டும் அடக்குமுறை. அந்த கீழ் ஜாதி கார அதிகாரிக்கு சொம்படிக்கும் மலையாள உயர் ஜாதி அல்லக்கை அதிகாரி, ஷர்வனுக்கு உதவும் தலித் ட்ரையினர். படம் நெடுக இந்திய அரசியல் மற்றும் விளையாட்டுத்துறையினரைப் பற்றிய பிரசாரமில்லாத குற்றச்சாட்டு என அருமையான ஒர் திரைப்பட அனுபவத்தை தந்திருக்கிறார் அனுராக் கஷ்யப். என்ன எனக்கு க்ளைமேக்ஸ் மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் இது உண்மைக்கதை. நிஜவாழ்க்கையில் பல சாதனையாளர்கள் காம்பரமைஸுக்கு ஒப்புக்கொண்டு தான் சர்வைவ் ஆக வேண்டியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. இந்த ஜாதி பாலிடிக்ஸால் பல திறமையான விளையாட்டு வீரர்களை இந்தியா இழந்து கொண்டிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய உண்மை. சுடுகிறது.
படத்தில் மிக முக்கியமாய் குறிப்பிட வேண்டிய விஷயம் ரசித்தா ஆரோராவின் பின்னணியிசையும் பாடல்களும். ராஜிவ் ரவி, ஷங்கர் ராமன், ஜெயேஷ் நாயரின் ஒளிப்பதிவும்.  எழுதி இயக்கிய அனுராக் கஷ்யப்பையும் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Laakhon Me Ek – லட்சத்தில் ஒருவன்
அமேசானில் வெளியாகியிருக்கும் புதிய இந்திய வெப் சீரீஸ். ஐ.ஐ.டி கோச்சிங் பற்றி சேத்தன் பகத்தின் ரெவ்வல்யூஷன் 2020 படித்தவர்களுக்கு புரியும் அது ஒரு தனி உலகமென. கோச்சிங் செண்டர் ஊழல்கள். ஐ.ஐ.டி படிக்கவே விரும்பாதவர்களை கிட்டதட்ட ஜெயிலில் அடைத்து படிபடி என படிக்க நிர்பந்திக்கப்பட்டவர்கள். பெற்றோரின் கனவை நினைவாக்குவதற்காக கடனே என்று ஐஐடி கோச்சிங் க்ளாஸ் சேர்ந்து படிப்பில் ஸ்கோர் செய்ய முடியாமல் வாழ்க்கையில் தோல்வியுறும் இளைஞர்கள், ப்ரஷர் தாங்காமல் குடி, ட்ரக் என தடம் மாறிப் போகிறவர்கள் என பல விஷயங்களை நான் பார்த்திருப்போம். படித்திருப்போம். அந்த லட்சத்தில் ஒருவனைப் பற்றிதான் இந்த சீரீஸ். ராய்பூரிலிருந்து அப்பாவின் கனவுக்காக 55 பர்செண்ட் எடுத்த ஆகாஷ் விசாகபட்டினத்தில் ஐ.ஐ.டி ட்ரையினிங் சேருவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ஆனால் ஆகாஷுக்கு நடிகனாக வேண்டுமென்று ஆசை. அமிதாப்பச்சன், ஷாருக் போல மிமிக்கிரி வீடியோ ஷூட் செய்து யூட்ட்யூபில் ஏற்றி தனக்கு சப்ஸ்கிரைப் செய்யுமாறு நண்பர்களிடம் வேண்டிக் கொண்டிருக்கும் போது அப்பா உனக்கு ஆர்ட்ஸ் காலேஜில் சீட் கிடைக்கவில்லை என்று சொல்லி ஐஐடி கோச்சிங் சேர்த்துவிடுகிறார். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். அங்கே படிக்கும் மாணவர்கள், கழித்துவிட்ட மாணவர்களுக்கான சொல்லிக் கொடுக்கும் முறை. ஸ்ட்ரிக்ட் எனும் பெயரில் நடத்தப்படும் வன்முறை, படிக்கும் படிக்காத மாணவர்களிடையே இருக்கும் இடைவெளி, ப்ரெஷர். மார்க். சீட்டிங், குடி, போதை என ஏதுமறியா பச்சை பாலகனாய் உள்ளே வருகிறவனை இந்த உலகம் என்னவாக்கி வெளியே அனுப்புகிறது என்பதை மிக அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள். ஆகாஷாய் நடித்திருக்கும் ரித்விக்கின் நடிப்பும், ஆகாஷ் அகர்வாலின் ஒளிப்பதிவும், பிஸ்வாஸ் கல்யாண், கரண் அகர்வாலின் மிக இயல்பான வசனங்களும், நம்மை அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்க வைக்க தூண்டுகிறது.


Jul 18, 2018

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15
தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு என பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் வி.பி.எப் கட்டணம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நீ தியேட்டரில் ப்ரொஜெக்டர் வைப்பதற்கு நான் எதற்கு காசு தரணும் என்பது நியாயமான விஷயம் தான்.   ஆனால் அதே நேரத்தில்  டிக்கெட் விலையை ஏற்ற இவர்கள் யார்? என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டிருப்பது. தயாரிப்பாளர்தான் டிக்கெட் விலையை நிர்ணையிக்க வேண்டும் என்று போராட இறங்கியிருப்பதும் செம்ம காமெடி.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் எங்கள் டிக்கெட் விலை ஏற்றி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஏற்றிக் கொடுக்க வேண்டும். மும்பையைப் போல ப்ளெக்ஸி ரேட்டிங் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றெல்லாம் கோரிக்கை வைத்தவர்கள். இன்றைக்கு அரசு நிர்ணையித்த விலையான 150+ஜி.எஸ்.டி. + கே.வரி சேர்த்து வாங்கினால் இருநூறு ரூபாய் வந்துவிடுமென்று, பழைய விலையான 120க்கே வரி போட்டு வாங்கியும் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போய் விட்டது. அதனால் இன்னமும் விலை குறைத்து ஆட்களை உள்ளே இழுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் நிலையில் தியேட்டர்காரர்கள் விலையை ஏற்றி வாங்குவதாகவும், அதை குறைப்பதாக சொல்லுவதும் செம்ம காமெடியாய் இருக்கிறது.

தொடர் பெரிய படங்களின் தோல்வியின் காரணமாய் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும், எம்.ஜி கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்ட படியால் நேரிடையாய் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்க முடிவு செய்து தான் இந்த கோரிக்கை. ரஜினி படமோ, விஷால் படமோ வெளிவரும் போது யாரும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது என்று கூவப் போவதில்லை. ஏனென்றால் இத்தனை நாள் மறைமுகமாய் வாங்கிக் கொண்டிருந்த அதிக விலையை, லீகலாய் வாங்க ஏதுவாக ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்பதற்காக வழிதான் இது.

தியேட்டர்காரர்களுக்கு தெரியும் நிச்சயம் அரசு தன் கேளிக்கை வரியை விட்டுக் கொடுக்காது என்று. மற்ற கோரிக்கைகள் எல்லாம் ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்டது. அதை சட்டமாக்க வேண்டியதைத் தவிர பெரிய கோரிக்கை  கேளிக்கை வரி மட்டுமே. தியேட்டர்களுக்கும் க்யூப் போன்ற நிறுவனத்திற்கும் இடையே உள்ள அக்ரிமெண்ட் காரணமாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கும் வி.பி.எப் தொகை மற்றும் விளம்பர கட்டணம் காரணமாகவும் ஆட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் அவதிப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் வெளிவர தயாராக இருக்கும் ஆட்கள்.  ஆனால் வெளிவந்தால் சில பல லட்சங்கள் நஷ்ட ஈடு கொடுத்தால் மட்டுமே வெளிவர முடியும் என்பதால் ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்று அமைதியாய் இருக்கிறவர்கள் ஒரு பக்கம். எங்களூக்கு படம் தர மாட்டேன் என்கிறீர்கள் என்றால் நாங்கள் தியேட்டரே நடத்தவில்லை என்று அறிவிப்புக்கு பின்னால் க்யூப் போன்ற நிறுவனங்களின் கீ இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன் பத்து நாட்கள் தியேட்டரை மூடி வைத்ததினால் பார்வையாளர்களை இழந்து அவர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வர பட்ட பாடு அவர்களுக்கு தெரியும். தெரிந்தே இந்த அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த மார்ச் மாதம். இந்த மாதத்தில் சாதாரணமாகவே மக்கள் தியேட்டருக்கு வருவது மிகவும் குறைவாகவே இருக்கும் மாதம். பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிட்சை என்பதால் தியேட்டர்களுக்கு வரும் அதிகப்படியானவர்கள் ஆப்ஸென்ட். புதிய படங்கள் வேறு வராத காரணத்தால் எல்லா திரையரங்குகளீலும் முப்பது பெரும் நாற்பது பேரும் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மெல்ல குறைந்து 5 -15 பேர் என்றாக, ஏசிக்கு கூட காசு வராது என்பதால் ஸ்டரைக் அறிவித்திருக்கிறார்கள்.

இம்மாத இறுதியில் விஷால் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையிட்டிருக்க, ரஜினி படம் வேறு லிஸ்டில் இருக்க, ஐபிஎல் வேறு சென்னை சூப்பர் கிங்க்ஸோடு களமிறங்க காத்திருக்க, மக்களுக்கு எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லை. பட்.. இந்த லிஸ்டை மீறீ படங்கள் வராமல் போனால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் வரும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு, யூட்யூப், அமேசான், நெட்ப்ள்க்ஸ் என மாறி விடுவார்கள். இழப்பு இரண்டு பக்கத்துக்கும்தான். இதை புரிந்து கொண்டோ, அல்லது அமிக்கபிள் செட்டில்மெண்ட் ஆகி, இம்மாத இறுதிக்குள் மீண்டும் தங்கள் வேலைகளை ஆரம்பித்தே ஆக வேண்டிய கட்டாயம் இரு பிரிவினருக்கும் இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் தியேட்டர் சீட் குறைப்பு, லைசென்ஸிங் முறை, ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என பல விஷயங்கள் இந்த காலகட்டத்தில் மிகத் தேவையான விஷயமே.. அத்தனைக்குமான தீர்வை நோக்கித்தான் இந்த போராட்டம் என்றால் அது நல்லதே.. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு பிம்பிலாக்கிபிலாக்கி போராட்டமாய் போய்விடக்கூடிய எல்லாம் வாய்ப்பும் இருக்கிறது.


Jul 17, 2018

சாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.

இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று ஒரு தெருவுக்கு ரெண்டு பிரியாணி கடைகளாவது இருக்கிறது. எல்லாக் கடைகளிலுமே கிடைப்பது வழக்கமான பாஸ்மதி முஸ்லிம் பிரியாணி மட்டுமே. 

பிரியாணிக்கென ப்ராண்டாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிறுவனமான ஆசிப் பிரியாணி போன்றோர்கள் தக்காளி சாதத்தை பிரியாணி என்று விற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நம்மூர் ஸ்டைலில், மணக்கும் சீரக சம்பா அரிசியில், மணக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி மட்டுமே தருகிறது வெங்கீஸ் பிரியாணி.


அதிக காரமில்லாமல், நன்கு வேகவைக்கப்பட்ட துண்டுகளோடு, உதிர் உதிராய் சமைக்கப்பட்ட சீரக சம்பா அரிசி. நெய், மசாலாவோடும், நல்ல தால்சாவுடனும் பட்டையை கிளப்புகிறது. இவர்களது பிரியாணி.

கருப்பையா மூப்பனார் பாலத்துக்கு அருகே ஒர் ப்ராஞ்சும், வடபழனி அம்பிகா எம்பயர் பக்கத்தில் ஒரு ப்ராஞ்சும் செயல் படுகிறது. வடபழனியில் இரவு 11 மணி வரை பிரியாணி கிடைக்கும். பிரியாணியோடு கொடுக்கப்படும் தால்சாவும் நல்ல சுவை. 

மணக்கும் சீரக சம்பா மட்டன், சிக்கன் பிரியாணிக்காக தலைப்பாக்கட்டிக்கும் ஜூனியர் குப்பாண்ணாவுக்கும் படையெடுத்து, மொக்கை வாங்கி, பெரிய பில்லை கொடுத்து நொந்து போயிருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு இது ஒர் விருந்து.  முயன்று பாருங்கள்.

Jul 16, 2018

கொத்து பரோட்டா 2.0-60

கொத்து பரோட்டா 2.0-60
இந்த தமிழக அரசு கேளிக்கை வரியால் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸுகளில் 150 ரூபாய் வரை விலையை வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லியும் கூட, அனைத்து மல்ட்டிப்ளெக்ஸுகளும் வேணாம் எங்களுக்கு 120 ரூபாய் போது என்றிருக்கிறார்கள். பி.வி.ஆரும், ஐநாக்ஸும், இரட்டை வரி விதிப்புக்காக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கள் திரையரங்குகளை மூடி, எதிர்ப்பு தெரிவித்திருந்த நேரத்தில், மெர்சல் ரீலீசின் போது சத்யமும், ஏஜிஎஸ்ஸும், அவர்களது திரையரங்குகளின் கடைசி நேரம் வரை மெர்சல் புக்கிங் ஆரம்பிக்காமலேயே இருந்தார்கள். காரணம் அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமான 150-120 ரூபாய் பிரச்சனைதான். 150 ரூபாய் டிக்கெட் விலைக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி எல்லாவற்றையும் சேர்த்து 204 ரூபாய் வருகிறது. அத்துடன் ஆன்லைன் டிக்கெட் விலையும் சேர்த்தால் 240 வந்துவிடும். முதல் மூன்று நாட்களுக்கு பெரிய நடிகர்கள் படத்திற்கு வேண்டுமானால் ஆட்கள் வருவார்கள். ஆனால் அதன் பின்பு எங்களது அரங்குகளுக்கு புட்பால் குறைந்துவிடும். அப்படி குறைந்தால் எங்களது திரையரங்கின் புட் அண்ட் பிவரேஜ் பிஸினெஸ் முழுவதுமாய் பாதிக்கப்படும். 200 ரூபாய்க்கு மேல் செலவு செய்து திரையரங்குக்கு வருகிறவன் நிச்சயம் தன் செலவை குறைக்க அவன் உண்ணும் உணவில் தான் முதலில் கை வைப்பான். இப்படி நாங்கள் குறைந்த விலை வைப்பதினால் எங்களது திரையரங்குக்கு என வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் என்றார்கள்.

இதற்கு முன்பு வரி விலக்கு பெற்ற தமிழ் படங்கள் என்றால் 120 ருபாயில் அறுபது ரூபாய் விநியோகஸ்தருக்க் கொடுப்போம் வரி உள்ள படமென்றால் வரி போக கிட்டத்தட்ட 45 வரை ஷேர் வரும்.  இப்போது வரி என்பது அடிப்படை விலைக்கு மேல் என்றாகிவிட்டதால் அறுபது ரூபாய் ஷேருக்கு ஓகே என்றால் படம் போடுகிறோம் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் விநியோகஸ்தரும் ஒத்துக் கொண்டார்கள். பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வாரம் திறந்த பிவிஆர், ஐநாக்ஸும் இதையே கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். ப்ளெக்ஸி ரேட்டை வைக்க அனுமதி கொடுங்கள் என்று கூவியவர்களின் முதன்மையானவர்கள் மல்ட்டிப்ளெக்ஸ் காரர்கள் தான். அவர்களுக்குத்தான் இந்த இரட்டை வரி பெரிய அடி. பெரும்பாலும் மற்ற மொழி திரைப்படங்களை வைத்தே கல்லா கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு புட்பால் குறைந்தால் பெரிய அடி விழுந்தே தீரும். இவர்களைப் பார்த்து பார்க்கிங் சார்ஜை ஏற்றியவர்கள் தற்போது விலையையும் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற பிரபல மல்ட்டிப்ளெஸுகளை இதை தொடரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
சமீபத்தில் வெளியான ஹிட் திரைப்படமான் சீக்ரட் சூப்பர் ஸ்டார், மற்றும் தெலுங்கு, ஆங்கில படங்களுக்கு கூட்டமே இல்லை என்பது விலையுர்வும், வரிகளும் மக்களை தற்சமயம் தியேட்டர் பக்கமிருந்து சற்று தள்ளியே நிற்க வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சீக்ரட் ஸூப்பர் ஸ்டார்
ஃபீல் குட் வகையரா திரைப்படங்களை எடுப்பதில் ஹாலிவுட்டுக்கு இணையாய் வளர்ந்துவிட்டது ஹிந்தி திரையுலகம். இன்சியா 15 வயது மிடில்க்ளாஸ் முஸ்லிம் பெண். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரி. ஆனால் டிபிக்கல் முஸ்லிம் ஆணாதிக்க, அடிப்படைவாத அப்பாவின் வன்முறை ஆதிக்கத்தால் தன் குரலுக்கான அங்கீகாரத்தை தேட முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளது அம்மா. இன்சியாவின் கனவை, தன் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வன்புணர்வு வாழ்வுக்கிடையே மலர வைக்கிறவள். பெண்ணின் பாடல் ஆசைக்காக தன் நகையை விற்று லேப்டாப் வாங்கிக் கொடுத்து அவள் சீக்ரட் சூப்பர்ஸ்டாராய் வலம் வரும் போது பெரும் சந்தோஷமாகட்டும், நகை விற்றதால் கணவனிடம் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் அவதிப்பட்டு அடிவாங்குமிடமாகட்டும், க்ளைமேக்ஸில் தீவிரமான முடிவெடுத்து கிளம்புமிடமாகட்டும் மெஹரின் நடிப்பு ஆசம்.

இன்சியாவாக சாய்ரா. 15 வயது பெண் குழந்தையின் பரபரப்பு. அப்பாவின் மேல் உள்ள வெறுப்பை காட்டுமிடத்தில் முகத்தில் தெரியும் கோபம். தன் பாடலை உலகமே கேட்க வேண்டுமென்ற பேராவல். நிஜத்தை உணர்ந்து எல்லாவற்றையும் இழக்க முடிவு செய்யும் போதான  அழுத்தம், பாடும் போது வெளிப்படும் உடல் மொழி. க்ளாஸ் மேட் சித்தனுடனான காஃப் லவ். என களேபரமான நடிப்பு.
அமீர்கான் வழக்கம் போல இதில் ஒர் காமியோ செய்திருக்கிறார். சற்றே கார்டூனிஷாக இருந்தாலும் சின்னச் சின்ன வசன மாடுலேஷன்களிலும், உடல் மொழியிலும் மனுஷன் பின்னி பெடலுக்கிறார்.

படத்தில் வரும் அமித் திரிவேதியின் பாடல்கள் அட்டகாச ஹிட் ரகமில்லையென்றாலும், நல்ல பாடல்கள். என்ன தான் டெம்ப்ளேட்டாய் ஸ்ட்ரிக்ட் அப்பா என்றாலும் கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்கு காட்டியிருப்பதும், 15 வயது பெண் வதோராவிலிருந்து பாம்பேவுக்கு ஸ்கூல் கட் அடித்துவிட்டு விமானத்தில் தனியே பறப்பது போல ஒரு சில நெருடல்கள் ஆங்காங்கே முளைத்தாலும், தன் அம்மா ஒரு இடியட், என்று திட்டிய மகள் பெண் என்பதால் அவள் கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்த குடும்பத்திலிருந்து தப்பித்து, அவளை பெற்றெடுத்த பின் வந்த விஷயத்தை இன்சியா கேள்விப்படும் காட்சி, தனக்காக கவலைப்படும் ஸ்கூல் பட்டீ சிந்தனிடம் “ஏன் இப்படி என்னை தொந்தரவு செய்கிறாய்? உனக்கு செல்ப் ரெஸ்பெக்ட் கிடையாதா?’ என வித்யாசமான வசனங்கள் . எப்படியாவது இந்த பெண் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்ற ஆதங்கம் மனம் முழுக்க வியாபித்து, அவள் அழும் போதெல்லாம் “வேணாண்டீம்மா குழந்தை” என்று தூக்கி அணைத்து ஆறுதல் சொல்ல விழையும் மனதை நமக்குள் உருவாக்கி விடுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்டேண்டப் காமெடி என்று சொன்னவுடன் அது என்ன நின்னுட்டு காமெடி என்பவர்களும், பல பேர் பேசறதே காமெடிதான் இதுல உக்காந்துட்டு பேசினா என்னா? நின்னுட்டு பேசினா என்ன? என்பார்கள். பலருக்கு விஜய் டிவியில் வரும் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் பேசுகிறவர்கள் நியாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. ஆங்கிலத்தில் இந்திய அளவில் வீர்தாஸ், கபில் ஷர்மா, வருண் தாகூர், நீத்தா பால்டா எனும் பெண் என பலர் பிரபலம். உலக அளவில் ராபி வில்லியம், எட்டி மர்பி போன்றோர் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய பேர் இருந்தாலும் தமிழ் நாட்டில் தமிழில் ஸ்டாண்டப் காமெடி என்றால் ரெக்கார்டட் கைத்தட்டல், சிரிப்புக்கிடையே ஜோக்கு தோரணங்களை கொடுப்பவர்கள் தான். ஆனால் நிஜத்தில் முன்னாள் சாக்லெட் பாய், பாரின் மாப்பிள்ளை என அன்புடன் அழைக்கப்படும், சுச்சீ லீக்ஸ் சுச்சியின் கணவர் கார்த்திக் குமார் மிகப் பிரபலம். இவர் பிரபலம்னு சொல்வதற்கு எதுக்குடா சுச்சி எல்லாம் என மைண்ட் வாய்ஸ் ஓடுவது  எனக்கு கேட்கிறது. அவரது நிறுவனமான ஈவாம்ஸ் மூலமாய் நிறைய பேர் தங்கிலீஷ் ஸ்டாண்டப் காமெடியன்களாய் வெற்றிகரமாய் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாய் அரவிந்த் எஸ்.ஏ, அலெக்ஸாண்டர் போன்றோர்.
நடுநடுவே ரெண்டொரு வரிகள் தமிழில், மச்சா, ஓத்தா.. போன்ற சிறப்பு வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். இவர்களது ஷோக்கள் பார், பப், காபி ஷாப் அல்லது ஏதாவது கார்பரேட் லாஞ்ச் ஷோவுக்கிடையே நடப்பதால்,  அதற்கு வருகிற கூட்டம்  பெரும்பாலும் ஹையர் மிடில் க்ளாஸ் வகையராவாகவும், பல மாநிலத்தவர்களாகவும் இருப்பதால் இவர்களின் நிகழ்ச்சி தங்கிலீஷாகவே இருப்பது ஸ்டாண்டப் காமெடியர்களின் பலம்.  

மிக இயல்பாய், ஜோக்கு தோரணங்களாய் இல்லாமல், சமகால அரசியல் சமூக விஷயங்களை தங்களது இயல்பான நகைச்சுவை உணர்வைக் கொண்டு சர்காஸமாய் பேசுவது தான் ஸ்டாண்டப் காமெடி. கிட்டத்தட்ட.. அந்தக்கால எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போல என்று கூட சொல்லலாம். ஆங்கில ஸ்டாண்டப் காமெடியன்கள் சமீப சினிமா, அரசியல், சமூகத்தில் நடக்கும் அவலங்கள், என எல்லாவற்றையும் கலாய்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சென்னையை அடிப்படையாய் கொண்ட காமெடியர்கள் பெரும்பாலும் லோக்கல் பாலிடிக்ஸ் பேசுவதில்லை. குறிப்பாய் பிரபலங்களை கலாய்த்தல் என்பது மிகப் பெரிய ஸ்டேட் துரோகமாய் கருதும் ஊர் இது. நகைச்சுவைக்கு பேர் போனவர்கள் இருக்கும் மாநிலமென்றாலும் சமீபகாலமாய் நகைச்சுவை உணர்வே சுத்தமாய் இல்லை என்கிற அளவில் மழுங்கிப் போய் எதற்கெடுத்தாலும் என்னை எப்படி அப்படி பேசலாம் என்று அவர்களே சொந்தத்திற்கு கலாய்த்து கொண்டு திரிகிறவரக்ளாய் உருவெடுத்திருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே செயல் பட வேண்டியிருக்கிறது. இருந்தாலும் ஆதனால் முழுக்க முழுக்க, தமிழில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் சமீபகால வரவாக ஜகன் கிருஷ்ணனின் வருகை. பல புதிய அமெச்சூர் கலைஞர்கள் என களமிறங்க ஆரம்பித்திருப்பது தமிழ் “நின்னுட்டு பேசுற நகைச்சுவை”க்கு பலம் சேர்க்கும் என்று தோன்றுகிறது..  https://www.youtube.com/watch?v=rpuhdhhoFIg&feature=youtu.be https://www.youtube.com/watch?v=A6AJifUmSt8

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 6, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -14


சினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று.

டிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இதுல ஒரு படமெடுத்து ப்ரூவ் பண்ணக்கூடாது? என்றதுதான்.

நியாயமான கேள்வியும் கூட. மனிதர் உடனடியாய் தயாராக ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் பிலிமில் தான் ப்ரொஜெக்‌ஷன் ஓடிக் கொண்டிருந்தது. டிஜிட்டலில் எடுத்த படத்தை மீண்டும் ரிவர்ஸ் பராசசிங் செய்து பிலிமுக்கு மாற்றி அதை பிரிண்ட் எடுத்துத்தான் ஓட்ட வேண்டும். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், பதினாலு ரீல் படத்துக்கு பதினாலு ரீல் நெகட்டிவ் மட்டுமே போதும்.

மிகச் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று முற்றிலும் புதியவர்களை கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் எனக்கு வேறொரு ப்ராஜெக்ட் விஷயமாய் அவரிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவரிடம் தயாரிப்பு என்ற போதே.. சார்.. டெக்னாலஜி வேற தயாரிப்புங்றது வேற. மத்தவங்க சொல்றாங்களேனு ப்ரடக்‌ஷன்ல இறங்காதீங்க. என்றேன். “என்னங்க சங்கர்.. நீங்களே. .இப்படி டிஸ்கரேஜ் பண்றீங்க?”என்று கடிந்தார்.

சில மாதங்களுக்கு பின் அவரை மீண்டும் சந்திக்க சென்றிருந்தேன். மனிதர் கொண்டாட்டமாய் இருந்தார். புதிது புதிதாய், இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் என பல பேரை அறிமுகப்படுத்தினார்.  அனைவரும் புதியவர்கள். கதையைப் பற்றிக் கேட்டேன். மிகவும் வீக்கான ரெகுலர் காதல் கதை. எல்லாரையும் அனுப்பி விட்டு, “சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. புதியவர்களை வைத்து படம் ஆர்மபிக்கிறது நல்ல விஷயம்தான். பட் எனக்கென்னவோ உங்களுக்கு இது பாடமா ஆயிரும்னு தோணுது. என்ன தான் நீங்க டெக்னாலஜியில ஸ்ட்ராங்குனாலும், படம் எடுத்துட்டாலும், மார்கெடிங், டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாம் இம்மாதிரியான படங்களுக்கு இல்லவே இல்லை. ஸோ.. மினிமம் கேரண்டி கண்டெண்ட் இல்லாம இறங்காதீங்க” என்றேன்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்க பாஸிட்டிவான மனிதர்னு நினைச்சேன். இனிமே இந்த பட விஷயமா நாம பேச வேணாம் என்று கிளம்பிவிட்டார். எனக்கு அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றே புரியவில்லை. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் சந்திக்கவேயில்லை. நடுநடுவே வேறொரு நண்பர்கள் அவரைப் பற்றி பேச விழையும் போதுகூட நான் தடுத்துவிடுவேன்.
ஒரு நாள் ப்ரசாத் லேபில் ஒரு ப்ரிவீயூவுக்காக சென்றிருந்த போது, கார் பார்கிங்கில் அவரை சந்தித்தேன். படத்தைப் பற்றி ஏதும் பேசவேயில்லை. அவரும் நான் எதுவும் கேட்காததை நினைத்து பொதுவாய் பேச முயன்று கொண்டிருந்தார். கிளம்ப எத்தனித்த போது, கைபிடித்து இழுத்து” நீங்க சொன்னது தான் சார் சரி” என்றார். குரல் தழுதழுத்தது.

“படம் ஆரம்பிக்கும் போது என்னவோ பட்ஜெட்ல ஆர்மபிக்கிறோம்னு ஆர்மபிச்சோம். மேனேஜர்ல ஆர்மபிச்சு, வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வரைக்கும் ஏமாத்துறாங்க. பல சமயத்துல ஏண்டா இதுல கால வச்சோம்னு வருத்தப்பட்டு வெளியேறலாம்னு நினைச்ச போது கழுத்துவரைக்கும் புதைஞ்சிட்டேன். ஒரு கோடில எடுக்க நினைச்ச படம். இன்னைக்கு சின்ன பட்ஜெட்டுனு சொல்லி, ரெண்டரைக்கு வந்து நிக்குது. எல்லாம் புது ஆர்டிஸ்ட். டெக்னீஷியன்கள். வியாபாரம்னு ஒரு விஷயத்துக்கு கூட ஆளு வரலை. வீட்டை அடமானம் வச்சிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமா பாருங்க. என்றார். நான் ஏற்கனவே சொன்னேனிலலியா என்று சொல்லி அவரின் மனதை நோகடிக்க விரும்பவில்லை.  படம் பார்ப்பதாய் சொன்னேன். பார்த்தேன். மிகச் சாதாரணமான படம். டிஜிட்டல் டூ பிலிம் கன்வர்ஷனில் வேறு பல பிரச்சனைகள். டெக்னீஷியன்கள் இவரின் ஆர்வத்தை வைத்து டெஸ்ட் செய்திருக்கிறார்கள். பல சொதப்பல்கள். 


“நான் இப்ப சொல்றதையும் தப்பா எடுத்துக்க கூடாது. இதுல வியாபாரம்னு ஆக ஏதுமிருக்கிறதா எனக்கு தெரியலை. அப்படி ஆகணும்னா அதுக்காக மார்கெட்டிங் செய்து, விளம்பரம் கொடுக்கிற செலவுக்குத்தான் பணம் வர வாய்ப்பு. இப்போதைக்கு வீட்டை மீட்கணும். படத்தை அப்படியே விடுங்க. வேலைக்கு போங்க.. வீட்டை மீட்டுட்டு அப்புறம் பல விஷயங்களை யோசிப்போம் என்றேன். இறுகிய முகத்தோடு ஏதும் பேசாமல் போனார். சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து கால். அவர் தான். சந்தோஷமானேன்.  பின்பு பல் ஆண்டுகள் தொடபில்லை. என் முதல் படம் வெளியான போது மீண்டும் அவரிடமிருந்து கால். சென்னை நம்பர். “மொத்தமா இந்தியாவுக்கே வந்துட்டேன். புதுசா படம் ஆரம்பிக்கப் போறேன். வாங்க பேசுவோம்.” என்றார். அந்தப்படமும் இது வரை ரிலீஸாகவேயில்லை. 

Jul 1, 2018

சாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்


சமீப காலமாய் மெஸ் என்று பெயர் வைத்து விட்டாலே ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது என்பதற்காக எங்கு பார்த்தாலும் மெஸ், மெஸ் என்றே பெயர்கள் தட்டுபடுகின்றது. குறிப்பாய் நான்வெஜ் என்றால் கட்டாயம் மெஸ்ஸில் தான் முடியும். அப்படியான ஒர் தினத்தில் இந்த மெஸ்ஸைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாலிக்கிராமம் பாஸ்போர்ட் ஆபீஸுக்கு முன் பில்டிங்கில் ஆரம்பித்திருந்தார்கள். 

மிகவும் விசாலமான இடம். டிபிக்கல் கல்யாண வீடு போல வரிசைக்கட்டி டேபிள்கள் போடப்பட்டிருந்தது. நான் போனது இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட மூடும் தருவாயில் இருந்ததால் என்ன இருக்கிறது என்று கேட்டேன். இட்லி, சப்பாத்தி, தோசை இருப்பதாய் சொன்னார்கள். இட்லியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷாய் மட்டன் கேட்ட போது காலியாகிவிட்டது என்றார்கள். பள்ளிப்பாளையம் சிக்கன் இருப்பதாய் சொல்ல, அதை ஆர்டர் செய்தேன்.

முதற்கட்டமான் ஒரு இட்லி கொடுங்கள் என்று கேட்க, கொஞ்சம் சிக்கன் குழம்பும், சட்னியும், வைத்தார்கள். நல்ல சுர்ரென்ற உறுத்தாத காரம், இட்லியோடு குழைத்து சாப்பிட, அடுத்த இட்லிக்கு சிக்கன் குழம்பு கேட்டால் அதுவும் காலி, மீன் குழம்புதான் என்றார்கள். இட்லி மீன் குழம்பு.. ஓக்கே.. ஆசம்..ஆசம் என்று அதை ஊற்ற, நிஜமாகவே ஆசம். தோசையும் நல்ல முறுகலாய் வர, அதையும் மீன் குழம்போடு ஒரு ஊறவைத்து சாப்பிட்டாகிவிட்டாயிற்று. 

பள்ளிப்பாளையம் சிக்கன். நல்ல காரத்துடன், இடையிடையே நெருடும் தேங்காயோடு, நன்கு வெந்திருந்ததும், சுவையை மேலும் கூட்டியது. பினிஷிங் டச்சாய் கலக்கி என்றேன். வெளிர் மஞ்சளில் நல்ல வெங்காயம் போட்ட தளதள கலக்கி வர, ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு பில் கேட்டால் நூற்றிச் சொச்சம் என்றார்கள். 

ரெண்டொரு நாள் கழித்து, நண்பர் ஒருவர் சாப்பிடக்கூப்பிட, அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் லஞ்சுக்கு சாவித்ரி மெஸ். சுமாரான கூட்டமிருந்தது. வெஜ் அண்ட் நான் வெஜ் மீல்ஸ் வைத்திருக்கிறார்கள். சிக்கன்,மீன் குழம்பு அருமை. மட்டன் குழம்பு கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. டேஸ்ட் ஓகே. ரசம் வழக்கம் போல கொங்கு நாட்டு அதே சுவை. லேசான புளிப்புடன். இம்முறை வஞ்சிரம் மீனும், மட்டன் சுக்காவும். பள்ளிப்பாளையம் சிக்கனும் ஆர்டர் செய்தோம். மட்டன் சுக்காவும் நல்ல சுவையுடன் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்டாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது. 

பட் நல்ல திருப்தியான சாப்பாடு. என்பது ரூபாய்க்கு மீல்ஸ் இரண்டு நான் வெஜ் சைட்டிஷ் என எல்லாம் சேர்த்து முன்னூறுக்குள்தான். 

கோவையில் இண்டஸ்ட்ரியல் கிச்சன் வைத்திருந்தவர்கள் இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல சுவை. மலிவான விலை. மிக சுத்தமான சூழ்நிலை என தரமாய் இருக்கிறது. கோவை சைட் சாப்பாட்டை சாப்பிட அநியாயமாய் ஈரோடு குப்பண்ணாவில் சொத்தை இழப்பதை விட, இங்கே மினிமம் கியாரண்டி. 

கோவை சாவித்ரி மெஸ்
பாஸ்போர்ட் அலுவலகம் அருகில்
பரணி ஸ்டூடியோ முன் தெரு.
சாலிகிராமம்.