Mirchi
பிரபாஸ் இத்தாலி படித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ரிச்சாவை ஒர் தெலுங்கு தெரிந்த பணக்கார ஒரு சீன் வில்லன் துரத்த, பிரபாஸ் காப்பாற்றுகிறார். இருவரும் நெருங்க பழகுகிறார்கள். நெருக்கம் காதலாகி விடுமோ என்கிற நேரத்தில் ரிச்சா தன் குடும்பத்தை பற்றி சொல்கிறார். அதனால் காதல் கத்திரிக்காயெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில் பிரபாஸ் ஹைதைக்கு வந்துவிடுகிறார். ஹைதையில் ஒர் காலேஜில் சேருகிறார். அங்கே ரவுடித்தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சுப்புராஜை கொஞ்சம் கொஞ்சமாய் நல்லவனாய் மாற்றுகிறார். சுப்புராஜுடன் அவரது கிராமத்துக்கு செல்ல அங்கே வழக்கமான தெலுங்கு பட பீயூடல் குடும்பம் இருக்க, அவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் பிரபாஸ். சுப்புராஜுன் தங்கைதான் ரிச்சா. பிரபாஸ் தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு தன் காதலை வெளிப்படுத்த நினைக்க, வீட்டில் உள்ளவர்களும் தங்கள் பெண்ணை திருமணம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். அப்போது பிரபாஸ் தான் ஏன் இங்கே வந்தேன், சொல்லி ப்ளாஷ்பேக்குகிறார். பின்பு என்ன ஆனது என்பதை வழக்கமாய் தெலுங்கு படம் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடக்கூட...