Posts

Showing posts with the label ஈரோடு

கொத்து பரோட்டா - 25/01/16

Image
கேட்டால் கிடைக்கும் வெள்ளத்தில் என் வீட்டு டெலிபோன் மற்றும் இண்டர்நெட் இரண்டாம் தேதி டிசம்பர் அன்று கட் ஆனது. அதன் பிறகு என் வீட்டு லைன் 18 ஆம் தேதிதான் திரும்பவும் வந்தது. ஆனால் அதற்கு பில் தொகையாய் ஒரு முழு மாத தொகையை கட்டச் சொல்லி, அனுப்பியிருந்தார்கள். போன் செய்து கேட்ட போது டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் முன்னூறு ரூபாய் என்றார்கள். அது என்ன கணக்கு? எப்படி முன்னூறு ரூபாய் வரும். என்னுடய கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் எனக்கு எந்த விதமான டெலி கம்யூனிகேஷன் தொடர்பு உங்களது நெட்வொர்க்கில் இல்லையே என்று தொடர்ந்து கேட்டதில் மாதம் 1500 ரூபாய் பேக்கேஜில் இருக்கும் எனக்கு உடனடியாய் பில் தொகை வெறும் 535 கட்டச் சொல்லி வந்தது. அதே போனில் என் மொபைல் எட்டு நாட்கள் வேலை செய்யாததற்கு 180 ரூபாய் டிஸ்கவுண்டும் பெற்றேன். ஏதோ என்னைப் போன்ற வேலையில்லாதவர்கள் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் கேட்கிறோம் கிடைக்கிறது. இவனுங்க கிட்ட என்ன கேட்டு என்னத்த? என்று என்னத்த கன்னைய்யா போல இருக்கிற எத்துனை பேர் முழு பில்லையும் கட்டியிருப்பார்கள். இந்த ஏரியாக்களில் தங்களது லைன் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தே...

வேராய் பரவும் மனிதர்கள்.

Image
ஆறேழு மாதமிருக்குமென்று நினைக்கிறேன். கோபியில் என் உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு போயிருந்த போது, ஈரோட்டுக் கதிர் ஞாபகம் வர, “தலைவரே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன் எப்போது சந்திக்கலாம்?” என்று போன் செய்தேன். இன்று மாலை எங்கள் லயன்ஸ் கிளப்பில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. சத்யமங்கலத்திலிருந்து ஒரு கார் வருகிறது. அதில் வந்துவிடுங்கள் நிச்சயம் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்ற அன்புக் கட்டளையிட்டு அழைத்தார்.

ஈரோட்டு பதிவர் சந்திப்பு அவுட் புட்

Image
ஆறு லட்சம் ஹிட்ஸுகளையும், 550 பாலோயர்களையும் தந்து என்னை மேலும் ஊக்குவிக்கும் என் அன்பு வாசகர்களுக்கும்,பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி..நன்றிங்கோ.. வண்ணத்துபூச்சி, தண்டோரா, பப்ளிஷர் வாசுதேவன், கார்த்திக்கும் ஞானும் பப்ளிஷர் வாசு( தண்டோராவை வச்சு புக்கு போட்டா விக்குமா..?) தண்டோரா (என்னய்யா..எடுத்தியா..) போட்டோகிராபர் நண்பர் . காலை வேளை வால்பையன் (என்னை பார்த்து சொல்லுங்க.. நானா..??) நாமக்கல் சிபி பிரபல எழுத்தாளர் வா.மு.கோமுவுடன் அப்துல்லா, பின்னே நானும். ஜூனியர் குப்பண்ணா மெஸ், மெஸ் வாசலில் அப்துல்லா, பப்ளிஷர் வாசுதேவன், படமெடுத்தது நான் ஐலேசா..நல்லா தூக்கு ஐலேசா.. வண்ணத்துப்பூச்சி தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் காட்சி ஜாபர், சிறுகதை எழுதுவதை பற்றி பேசிய.. நண்பர், சீனா ஐயா, ஆரூரான் தமிழ்மணம் காசி, பழமைபேசி கார்த்திக், ஜாபர், அப்துல்லா, ஸ்ரீ (என்னமா யோசிக்கிராய்ங்கப்பா..) வால்பையன் (திரும்பவும் சொல்றேன் நான் அவனில்லை.. அவ்னில்லை..அவனில்லை.) கார்த்திகை பாண்டியன், ஈரோடு கதிர்.. முவத்துல என்ன ஒரு வெக்கமய்யா.. வந்திருந்த பதிவர்களின் ஒரு பகுதி, ...