Posts

Showing posts with the label நான் - ஷர்மி - வைரம்

B.A. Pass

Image
  தொட்டால் தொடரும் படப்பிடிப்பு காரணமாய் படம் பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் போனில் “தலைவரே நீங்க தொடரா எழுதிட்டு இருந்த கதை ஹிந்தியில படமா வந்திருச்சு” என்றார்.  நான் எழுதி வந்த நான் ஷர்மி வைரம் கதையைத்தான் சொல்கிறார் என்று புரிந்தது. ஆண் விபசாரனைப் பற்றிய கதை.  உடனடியாய் படத்தை தேடி டவுன் லோட் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

நான் - ஷர்மி - வைரம் -20

Image
20 ஷர்மி “நாம எங்கயாவது ஓடிப்போயிருவோமா? ” என்றாள் அம்மா. நான் சிரித்தேன். “யார்கிட்டேயிருந்து ?” என்று கேட்டேன். அவளிடமிருந்து பதிலேயில்லை. துரத்துகிற நாய்க்காக ஓடாமல் ஒரு முறை திரும்பிப் நின்றால் நாய் துரத்தாது. பயந்து பின்வாங்கி, கொஞ்சம் தயங்கிய குரலில் குறைக்கும். அந்தக் குரலில் இருக்கும் தயக்கத்தை உணர்ந்து மீண்டும் ஸ்திரமாய் நின்றால் அது பின்வாங்கும். நாய்க்கு உபயோகிக்கும் யுக்திதான் மனுஷனுக்கும் என்று முடிவு செய்தேன். ஆனால் யோசிக்கும் போது இருக்கும் தைரியம் செயல்படுத்தும் போது இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை கொடுத்த்து. பொழுது விடியும் வரை தூங்கவேயில்லை. என்னதான் செக்‌ஷுவலாய் கொஞ்சம் அனுபவப்பட்டிருந்தாலும், என்னை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது வருத்தமாய்த்தான் இருந்தது.

நான் - ஷர்மி - வைரம் -19

Image
19 நான் ஸ்டேஷனை விட்டு வந்ததுமே வசந்தி மேடத்திடமிருந்து போன் வந்தது. “செல்லம் வந்திட்ட இல்லை. மேல கை வச்சானுவளா? பேர் சொல்லு அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன் ”””. நான் இல்லையென்றேன்.  ஒரே ஒரு போனில் காரியத்தை முடித்துவிட்டோமே என்ற திமிர் கொஞ்சம் அதிகமாய் உள்ளாடியது .  வசந்திக்கு பவர் ஜாஸ்தி. கமிஷனரின் பெண்டாட்டி. எனக்கு இவ்வளவு தூரம் தொடர்பிருக்கும் என்று நிவேதிதா இல்லை யாராலும் நினைத்து பார்த்திருக்க முடியாது.  ஒரு ஆறு மாதத்திற்கு முன் எனக்கே தெரியாது. வசந்தி மேடம் கமிஷனர் பெண்டாட்டி என.  மகாபலிபுரத்தில் ஒரு கெஸ்ட் அவுஸில் சோளக்கொள்ளை பொம்மைப் போல ஒரு ஹவுஸ் கோட்டோடு என்னை வரச் சொல்லிப் பார்த்தாள். முழு போதையில் இருந்தாள். இது போல் வரச்சொல்லி யாரும் பார்த்த்தில்லை. என் ஏஜெண்ட் எனக்கு போன் பண்ணும் போதே ” ஹை ப்ரோபைல் பார்ட்டி பார்த்து நடந்துக்கோ. வேணாம்னா வந்திரு ” என்று சொன்னான். என் பின்னணி பற்றிக் கேட்டாள். “எத்தனைப் பேரை ...ருப்பே? ”  என்று கேட்டவளின் முகத்தை நேராகப் பார்த்து சிரித்தேன். “கணக்கு வச்சிக்கல? ” என்று அவளும் சிரித்தாள். “உன்...

நான் - ஷர்மி - வைரம் -18

Image
18 ஷர்மி “ பையன் ரொம்ப நல்ல பையனா இருக்கான் . நீன்னா அவனுக்கு உசிருன்னான் . பத்து நாளா அவன் தான் நம்ம வீட்டு செலவயெல்லாம் பாத்துக்கறான் . பேசாம அவனை நீ கல்யாணம் பண்ணிக்கயேன் ” என்றதைக் கேட்டுத்தான் எனக்கு கோபம் வந்தது .

நான் – ஷர்மி – வைரம் -17

Image
தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி.. 17 நான்   ஆம் பெரிய ப்ரச்சனைதான். நானே இழுத்துவிட்டுக் கொண்டது. அவள் அப்படிச் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவள் பெயர் நிவேதிதா. கரோலின் என்கிற வெள்ளைக்கார பெண் மூலம் அறிமுகமானவள். கரோலின் ஸ்பெயினில் ஒரு பத்திரிக்கைக்காரி. நிவேதிதாவும் ஒரு பத்திரிக்கைக்காரி என்று எனக்கு தெரியாது. கரோலின் சுவாரஸ்யமான பெண். எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவள் வித்யாசமானவளாயிருந்தாள்.

நான் – ஷர்மி – வைரம் -16

Image
16 ஷர்மி டாடியின் இழப்பு கொடுத்த வலியை விட ப்ரச்சனைகளிலிருந்து கொடுத்த விடுதலை அதிகம். இதை சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாயிருந்தாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ப்ப்பிலிருந்து வீட்டிற்கு போன போது அப்பாவை நடுக்கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். அம்மா அழுது ஓய்ந்து போயிருந்தாள். குரல் உடைந்து மிகவும் விகாரமாய் இருந்தாள். வீட்டினுள் போகும் போது வாசலில் அதிகமாய் கூட்டமிருந்தது. ஒரு முறை வீட்டின் தன் பெண்ணின் கல்யாணத்திற்காக வந்திருந்த பெரியவர் கூட நின்றிருந்தார். “இருந்தாலே வாங்குறது கஷ்டம் தொங்கிட்டப்புறம் எங்க வாங்கறது. நாமளும் கூடவே தொங்க வேண்டியதுதான்” என்று சிலர் என் காது படவே பேசினார்கள். கழுத்தில் ஏதோ சிவப்பு நிற செயின் மாட்டியதைப் போல சிகப்பாய் இறுகிப் போய், கொஞ்சம் துறுத்திக் கொண்டிருந்த நாக்கோடு அவரை பார்க்கையில் அழுகை அழுகையாய் வந்தது. அப்பாவை எடுத்துக் கொண்டு போகும் போது என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. என் நினைவு தெரிந்து முதல் முறையாய் மயங்கினேன்.

நான் – ஷர்மி – வைரம் -15

Image
15 நான் ”நான் லவ் பண்றேன்” என்ற செந்திலைப் பார்த்து சிரித்தேன். அவன் கண்களில் வெட்கம் தெரிந்தது. “எது இங்கிலீஷ் லவ்தானே. அதைத்தான் நாம தினமும் பண்றோமே?”

நான் – ஷர்மி – வைரம் -14

Image
14 ஷர்மி அன்றைய இரவுக்கு பிறகு அம்மா என்னை நேராக பார்ப்பதையே தவிர்த்தாள். ஆனால் அந்த இரவுக்கு பிறகு வீடே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. அப்பாவை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு முறை பெயில் ரிஜெக்ட் ஆகிவிட்டதால் இம்முறை எப்பாடு பட்டாவது வெளியே கொண்டு வரத்தான் அன்று வந்த இரண்டு பேரிடம் அம்மா சோரம் போனாள் என்பதை “ப்ரசனைகள்லேர்ந்து வெளிய வரணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் ஆகணும்” என்று சாப்பாட்டின் போது சொன்னாள். அவளின் குரல் வேறு மாதிரியாய் இருந்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்த போது கண் கலங்கியிருந்த்து. சட்டென சிரித்து “டாடி சீக்கிரம் வந்திருவாரு” என்றாள் நம்பிக்கையுடன். ஜெயிலில் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பம் மிகப் பெரிய மன உளைச்சலுக்கும், பொருளாதார சிக்கலுக்குமிடையே அல்லாடுவது யாருக்கும் புரியாது. போலீஸ், வக்கீல், கோர்ட், கோர்ட் குமாஸ்தா என்று எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஒரு பணம் காய்ச்சி மரமாகதான தெரிவார்கள். காசு காசு காசு என பிடுங்கிக் கொண்டேயிருப்பார்கள். அதை என் வீட்ட...

நான் – ஷர்மி - வைரம் -13

Image
13 நான் அஞ்சனாவுடன் வந்த ஆள் நிர்வாணமாய் நிற்பதைப் பார்த்த்தும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இம்மாதிரியான நிகழ்வு எனக்கு புதுசு. அதுவும் மூன்றாம் ஆள் முன்னால் இவ்வளவும் நடந்திருக்கிறது என்று என்னும் போது ஒரு மாதிரி இருந்தது. அவன் முகமெல்லாம் சிரிப்பாய் என்னைப் பார்க்காமல், அஞ்சனாவை மோகத்துடன் பார்த்து, அப்படியே போய் அணைத்துக் கொண்டான். அவளது உறுப்பின் மேல் கைவைத்து “டூ ஹாட்” என்று அசிங்கமாய் சிரித்தான். அஞ்சனா அவன் கை வைத்த்தில் மீண்டும் கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவன் உதட்டை அப்படியே உள்ளே இழுத்து முத்தமிட ஆரம்பிக்க, அந்த ஆள் அவளை முத்தமிட்டபடியே, என்னையும் அழைத்தான். நான் புரியாமல் பார்க்க, அஞ்சனா முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, “கமான் விவில் ஹேவ் த்ரீசம். ரொம்ப நாளைக்கு பிறகு குஜ்ஜூ டார்லிங்குக்கு மூட் வந்திருக்கிறது” என்று என்னையும் இழுத்து அணைத்துக் கொள்ள, ஒளிந்திருந்து பார்த்து சூடேற்றிக் கொள்பவன் என்று புரிந்தது. அதன் பிறகு நடந்த்தை எல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை.

நான் – ஷர்மி - வைரம் -12

12 ஷர்மி என் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போனதற்கு ஒரு விதத்தில் ஜெயலலிதாவும் காரணம். அதற்கு முன் அர்ஜுனைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அர்ஜுனை எவ்வளவுதான் துரத்தி விட்டாலும் எப்படியாவது நானிருக்கும் இடங்களுக்கெல்லாம் வந்து நின்று விடுவான். எப்போதெல்லாம் என் முதுகில் உறுத்துகிறதோ அங்கேயெல்லாம் அர்ஜுன் இருப்பான்.

நான் – ஷர்மி - வைரம்-11

Image
11. நான்   கார் ஈ.சி.ஆர் ரோட்டில் மாயாஜால் எல்லாம் தாண்டி, தொடர் இருட்டுக்கு பின் தெரிந்த ஒரு வெளிச்ச தீற்றலை நோக்கி திரும்பி, பெருத்த கதவுக்கு முன் போய் நின்றது. எலக்ட்ரானிக் கதவுகளை அஞ்சனா தன் காரிலிருந்தபடியே ஒரு கீயை எடுத்து பொத்தானை அமுக்க, திறந்த கதவினூடே, மெல்ல ஊர்ந்து உள் நுழைய, கதவு தானாய் மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த்தும் தான் உள்ளே எவ்வளவு பெரிய மாளிகை என்று தெரிந்தது. அவ்வளவு அமைதியில் காரின் சத்தம் பெரிதாய் கேட்டது.

நான் – ஷர்மி - வைரம்-10

Image
  ரேஷ்மாவின் பிறந்தநாள் அதிர்ச்சிக்கு பிறகு என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அன்றைக்கு அர்ஜுனை ஆளாளுக்கு அடித்தார்கள். ரேஷ்மாவின் அம்மா “சின்னப் பையன்னு இல்ல நினைச்சேன்.” என்று சொல்லிச் சொல்லி அடித்தாள். ரேஷ்மாவின் அப்பாதான் அவனை பிரித்து அழைத்துச் சென்றார். அன்றைக்கு முழுவதும் என் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்த்து. வீட்டிற்கு வந்து படுத்தவள் தான் காலையில் கண் விழிக்கவில்லை. கடும் ஜுரம். நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று என் நண்பர்கள் நிறைய பேர் வந்து பார்த்துப் போனதாய் சொன்னாள் அம்மா. அதில் அர்ஜுனும் ஒருவன். எனக்கு அவன் அடிவாங்கியதை நினைத்து கொஞ்சம் பாவமாய் இருந்தாலும் அவன் அன்று செய்த்தை நினைத்தால் உடலெங்கும் இன்னமும் நடுக்கம் ஓடத்தான் செய்தது. கனவுகளின் துரத்தல்களில் என் உடலெங்கும் கைகளாய் பரவி, என் குறியை, முலையை அழுத்தியது. அம்மா மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தாள். “பார்டியில் என்ன ஆச்சு? என்ன ஆச்சென்று. நான் ஏதுவும் சொல்லவில்லை. ரேஷ்மாவின் அம்மா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவர்கள் வீட்டில் இம்மாதிரி ஒர் சம்பவம் நடந்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவ...

நான் – ஷர்மி – வைரம் -9

Image
9. நான் முதல் நாள் அனுபவத்திற்கு பிறகு நானும் செந்திலும் மிக நெருக்கமாகிவிட்டோம். கையில் இருந்த காசையெல்லாம் சினிமாவுக்கும், தண்ணிக்குமாகவே செலவாகிவிட, மீண்டும் காசுக்கு என்ன செய்வது? என்ற யோசனையே ஒரு விதத்தில் டார்ச்சரை கொடுத்தது. முதல் அனுபவம் இருவருக்குமே கற்பனையை மீறிய விஷயமாய் இருந்ததால் அடுத்த வாய்ப்புக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருந்து போன் வரவில்லை. கூப்பிடலாமா என்று தோன்றிய போதெல்லாம் அவனே கூப்பிடுகிறேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

நான் - ஷர்மி - வைரம் -8

Image
8  ஷர்மி ரேஷ்மாவின் ஒவ்வொரு பிறந்தநாள் பார்ட்டியும்  எனக்கு வேறுவிதமான அனுபவத்தை கொடுக்கும். ஆனால் நான் வயதுக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத ஒரு அனுபவம் இன்றைக்கு கிடைக்கும் என்று எதிர்பாக்கவில்லை. வழக்கம் போல வீடே கோலாகலமாயிருந்தது. ரேஷ்மாவின் அப்பா கோடீஸ்வரர். க்ரானைட் பிஸினெஸ். வெள்ளுடை சிப்பந்திகள் வீட்டின் மொட்டை மாடியில் இனிப்புகளையும், குளிர்பானங்களையும் கொடுத்துக் கொண்டிருக்க, பள்ளியில் நேரடியாய் நின்று பேசத் தயங்கும் பையன்களும் பெண்களும், மிக அந்யோன்யமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தனித்தனியே ஜோடியாய் இருந்ததை வைத்தே அவர்களின் நெருக்கத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர். வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் பணக்கார குடும்ப வாரிசுகள். ஃபல்குனி பதக்கின் “யாத் பியாகி ஆனே லகே ” பாடிக் கொண்டிருந்தது.

நான் - ஷர்மி - வைரம் -7

Image
7 நான்   அந்த குண்டுப் பெண்மணி உள்ளே சென்றதும் என்னை ஏற இறங்க பார்த்தாள். ஆள் தான் குண்டாக இருந்தாளே தவிர முகம் பிரபல நடிகையின் குழந்தைத்தனமான முகம் போல இருந்த்து.

நான்- ஷர்மி - வைரம்-6

Image
6 ஷர்மி   நான் வயதுக்கு வந்த விழாவிற்கு பிறகு அம்மா என்னிடம் வந்து “இதபாரு பேபி.. இனிமே பாய்ஸ் கூடல்லாம் ஜாக்கிரதையா பழகணும். என்ன? தனியா எங்கியாச்சும் கூப்பிட்டாங்கன்னா போக்க்கூடாது. என்ன புரியுதா?” என்றாள். ஆனால் எனக்கு புரியவில்லை. ஆனால் அவள் இம்மாதிரி என்னிடம் உட்கார்ந்து பேசி வெகு நாளாகிவிட்ட்து.

நான் - ஷர்மி - வைரம்-5

Image
5 நான்.   அவன் போகும் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. வாசலில் வாட்ச்மேன் தடுக்க முயன்று ஏதோ கேட்க எத்தனித்த போது, அவன் நிமிர்ந்த வேகத்தைப் பார்த்து எதும் பேசாமல் நின்றுவிட்டான் வாட்ச்மேன். சரசரவென லிப்ட் கதவை திறந்து, இரண்டாவது மாடியின் பொத்தானை அழுத்தினான். கொஞ்சம் பெரிதாய் மூச்சு விட்டபடி இருந்தான். இரண்டாவது மாடி வந்த்தும், அதே வேகத்தில் கதவை திறந்து, அந்த ப்ளாடின் வாசலில் நின்று, ‘ நீ கொஞ்சம் தள்ளி நில்லு.. நான் கூப்பிடும் போது வா” என்று என்னை கத்வுக்கு அப்பால் தள்ளி நிற்க வைத்துவிட்டு, பூட்டியிருந்த க்ரில் கதவை ஓங்கி தடதடவென தட்டினான்.

நான்.. ஷர்மி.. வைரம்-4

Image
ஷர்மி காரும், ஏஸியும் பழகிப் போய் தனிமை உறைக்க ஆரம்பித்து, கார் ஜன்னல் திறந்து வெற்றுப் பார்வையாய் நிலைத்தது ஏன் என்று புரியாமல் போனது. அப்பா என்னிடமிருந்து தூரமாய் போய்க் கொண்டேயிருந்தார். டிவிஎஸ் 50யில் ராத்திரி எனக்காக சீக்கிரம் வந்து வண்டியோட்டும் அப்பாவை காணமுடிவதில்லை. அம்மாவும் பிஸியாக இருந்தாள். நிதம் ராத்திரி வாடையோடு தூக்கக் கலக்கத்தில் கிடைக்கும் இருவரது முத்தம் மட்டுமே நிரந்தரமாயிருந்த நேரத்தில், ஆயாவும், கார் டிரைவரும் துணையாகி போனது கொஞ்சம் கொடுமையாகவே இருந்தது.

நான்.. ஷர்மி.. வைரம்.-3

Image
25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி கேஷ் + என்ஜாய்மெண்ட் என்றதும் முதலில் பத்தாயிரம் ரூபாயை அவர்கள் சொல்லும் அக்கவுண்டில் கட்டிவிட்டு மீண்டும் போன் செய்தால் சென்னையில் இருக்கும் லோக்கல் நம்பர் தருவதாய் சொன்னாள். பத்தாயிரமா? என்று வாய்பிளந்து நின்றிருக்க, எதிர் முனையில் “ஹலோ..?.. ஹலோ?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.

நான்.. ஷர்மி.. வைரம்-2

Image
  உடலில் ஒரு பொட்டுத்துணிகூட இல்லாமல், பத்து பெண்கள், மூன்று ஆண்களின் மேல் உழன்று கொண்டிருக்க, ஒரே ஆணின் குறியை மூன்று பெண்கள முற்றுகையிடும் நிகழ்வை பார்த்துவிட்டும் கலாச்சாரம் பற்றி பேசுபவர்களா நீங்கள்?. அப்படியானால் நீங்கள் ஒரு ஹிப்போக்ரேட். நிஜத்தை உள் வைத்துக் கொண்டு, வெளியில் நடிப்பவர். ஆரம்ப நாட்களில் இதில் எனக்கிருந்த பங்கேற்க்கும் ஆர்வம், இப்போது இருப்பதில்லை. பார்க்கத்தான் பிடிக்கிறது. இதற்கு ஏதோ பெயர் சொல்வார்களே.. ஆ.. வாயரிஸம்.