பத்தாயிரம் கோடி
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு கெமிக்கலை கண்டு பிடிக்கிறார்கள். அந்த கெமிக்கலை உடலில் பூசிக் கொண்டால் அந்த இடம் கண்களுக்கு புலப்படாமல் போய்விட, அதை வைத்து கல்லூரி மாணவர் கோகுலும், அவரது நண்பர்களும் பத்தாயிரம் கோடி ரூபாயை சுட்டுவிடுகிறார்கள். அதை கண்டு பிடிக்க, தமிழக போலீஸ் துறை சங்கர்லால் எனும் விவேக் அண்ட் டீமை அனுப்புகிறது. பத்தாயிரம் கோடியை ஒரு காரில் வைத்துக் கொண்டு ஊர் ஊராய் மாணவர்கள் சுற்ற, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காமெடி, ஜேம்ஸ்பாண்ட் விவேக் வெல்கிறாரா? இல்லையா? என்பதுதான் கதை.