கொத்து பரோட்டா-11/03/13
கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு திரும்புகையில் ஹைவேஸில் வரும் போது ஒர் கேள்வி எழுந்தது. கையில் காசு இல்லாவிட்டால் டோலில் அனுமதிப்பார்களா? இல்லை.. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் வசதி வைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் தான் அது. அதை செக் செய்து பார்த்துடலாம் என்று முதல் டோலில் ‘சார்.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?” என்று கேட்டவுடன் நின்று கொண்டிருந்த ஹிந்திக்கார பையனு புரியாமல் “சிங்கிள்?” என்று கேட்டான். “மேரே பாஸ் பைசா நஹிஹே.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் கரோகே” என்ற அரைகுறை இந்தியில் கேட்க, அவன் கண் வெளியே வந்துவிட்டது. “நஹி நஹி சாப்.. ஒன்லி பைசா..ஒன்லி பைசா..” என்ற பதற ஆரம்பித்தான் பின்னால் ஒர் பெரிய வால் நின்று கொண்டு ஹாரன் அடித்துக் கொண்டேயிருக்க, காசைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன். பின் அடுத்த டோல், அதற்கடுத்த டோல் எல்லாவற்றிலும் இதே நிலைதான். எனக்கொரு சந்தேகம். ஹைவேஸில் வந்தாகிவிட்டது. பர்சை மறந்து வைத்துவிட்டோம். அல்லது எங்கோ மிஸ்ஸாகி விடுகிறது. வருகிற வழியில் நம்பர் ஒன்னுக்கு போகும் இடத்தில் தொலைந்து விடலாம். டோலுக்கு காசு இல்லையென்றால் திரும்ப அனுப்புவேன் என்று சொல்வது ...