Posts

Showing posts with the label பார்டர் கடை

சாப்பாட்டுக்கடை - ரஹமத்துல்லா பார்டர் கடை பரோட்டா

Image
குற்றாலம் என்று சொன்னதும் பல பேருக்கு அருவியைத் தாண்டி ஞாபகத்துக்கு வருவது பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக் கோழியும்தான். ரஹமத்துல்லா பாயின் கடை என்றால் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. எல்லோருக்கும் பாடர்கடைதான். அப்படி அழைப்பதற்கான காரணமிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டை கேரள மாநிலத்துடன் இருந்த போது, இந்த இடம் தான் கேரளா தமிழ்நாடு பார்டராய் இருந்ததாம். தற்சமயம்  அந்தக் கடை திருநெல்வேலிக்கும் செங்கோட்டைக்கும் இடையே இருப்பதாலும் அப்படி அழைக்கப்படுவதாய் சொன்னார்கள் .(நன்றி டாக்டர் புருனோ) தற்சயமய் கேரள தமிழ்நாடு பார்டர் செங்கோட்டை கொல்லம் நெடுஞ்சாலையில் உள்ளது.