Posts

Showing posts with the label Drama preview

சில்லு - ஒர் முன்னோட்டம்.

Image
என்ன தான் நாம் சினிமாவை சிலாகித்தாலும், அது கொடுக்கும் பிரம்மாண்டத்தை வாய் பிளந்து பார்த்தாலும், எனக்கு நாடகம் என்பது அதை விட பாகாசூரத்தனமான பிரம்மாண்டம். ஏனென்றால் நாடகத்தில் ஒன்ஸ்மோரே கிடையாது. எதுவாக இருந்தாலும் ஸ்பாண்டினிட்டியோடு, வெளியாக வேண்டும். குட்டோ, பாராட்டோ அவ்வப்போதே கிடைக்குமிடம். என் தந்தையின் நாடக குழுவில் தொடர்ந்து நாடகங்கள் போடப்படும் போது அந்நாடகங்களில் ரிகர்சலை மிக ஆவலுடன் பார்ப்பேன். அதிலும் அரங்கேற்றத்திற்கு முதல் நாள் நாடகம் நடக்கும் மேடையிலேயே ஒரு காட்சி முழுக்க, முழுக்க ஒத்திகை பார்ப்பார்கள். அப்படி நாடகம் அரங்கம் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் முழு நாடகத்தையும், நடத்துவார்கள்.