கண் பேசும் வார்த்தைகள்
ஊரில் வெட்டிக்கு சுற்றிக் கொண்டிருக்கும் செந்தில் உருப்படுவதற்காக வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார். சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் அவர் எப்படியாவது அந்த ஊர் சிட்டிசன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். ஈஸியாய் சிட்டிசன் ஆக வேண்டும் என்றால் சிட்டிசனான பெண்ணை திருமணம் செய்தால் முடியும் என்பதால் சிட்டிசன் என்று பொய் சொல்லிய இனியாவை தொடர்கிறார். காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிகிறது. இன்னொரு பக்கம் இனியாவின் மாமா அவளை இரண்டாவது திருமணம் செய்யச் சொல்லி செய்யும் பயமுறுத்தல்கள். அதுவும் ஊரிலிருந்து. பின்பு என்ன ஆனது எனபது கதை.