கொத்து பரோட்டா -4/8/14
சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா? என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. என...