Posts

Showing posts with the label kalaingar

கலைஞர் வாழ்க..

எல்லோரும் கலைஞர் ஒழிக என்று கோஷம் போடும் போது. என்னடா இவன் மட்டும் வாழ்க என்று கோஷம் போடுகிறானே என்று கேட்பவர்களுக்கான பதில். இந்த ஆட்சி ஆரம்பித்த வரை கலைஞரின் தீவிர ஆதரவாளர் என்கிற உரிமை. முத்துக்குமார் தீக்குளித்த போது சன் டிவி அவருடய பாஸ்போர்ட் போட்டோவையெல்லாம் தேடி காட்டி செய்தி வெளியிட்டது. அதன் பிறகுதான் அவருடய அறிக்கையில் கலைஞரை பற்றியும், காங்கிரஸ்காரர்களை பற்றியும் அவருடய இறுதி அறிக்கையில் எழுதியிருப்பது தெரிந்ததும் மொத்தமாகவே முத்துக்குமாரின் செய்திகளை சன், கலைஞர், ஜெயா ஆகியவை இருட்டடிப்பு செய்தது. கலைஞருக்கு என்ன ஒரு சந்தோஷமென்றால் கூடவே ஜெயலலிதாவை பற்றியும் திட்டியிருப்பதால் அவர்களும் பெரிதாய் கவர் செய்யவில்லை. திமுகவை சார்ந்த பாபுவை செருப்பால் அடித்ததை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி ஜெயா டிவிக்காரர்கள் சந்தோஷப்பட்டார்கள். இவர்கள் தேவைக்கென்றால் தங்களுடய சில்லறை விஷயங்களை ஊதி பெரிதாக்குவதும், தேவையில்லையென்று நினைத்தால் அதை அப்படியே அமுக்குவதும் மீடியாவை மொத்தமாய் வைத்திருக்கும் நம் தலைவருக்கு அல்வா மாதிரி. உடனிருக்கும் காங்கிரஸை எதிர்க்க ம்னமில்லை. அதே நேரத்தில் இங்கே இல...

கலைஞர் v/s மாற்ன் ப்ரதர்ஸ்

Image
காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் வெளியிட முடியவில்லை. அதற்கு காரணம் முதல்வரின் மகன் திரு.மு.க. அழகிரிதான் என்றும் அவரின் பேரில் தியேட்டர்காரர்கள் மிரட்ட படுகிறார்கள் என்று கூறுகிறது சன் பிக்சர்ஸ். இதற்கு முதல்வர் தலையிட்டு ப்ரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. அதற்கு முதல்வர் அவர்கள், சென்சார் சர்டிபிகேட் பெற்ற எந்த படங்களும் மக்கள் பார்வைக்கு தடை செய்ய முடியாது என்றும், இது குறித்து மதுரை போலீசாரிடம் புகார் கொடுக்காமல், தலைமை செயலருக்கு ஃபாக்ஸ் ஏன் செய்தார்கள்? என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையேயில்லாமல் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல் சன் குழுமம் அரசாஙக் கேபிளுக்கு சிக்னலை தர மறுத்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஓரு வேளை நீ உன் சிக்னலை எங்களுக்கு கொடுத்தால் உங்கள் பிரச்சனையை சரி செய்யப்படும் என்று அர்தமா? ஏனென்றால் மதுரையில் அழகிரி நடத்தும் ஆர்.சி.வி கேபிளுக்கும் அவர்கள் சிக்னலை தரவில்லை. அதனால் மதுரை முழுவதும் சன் டிவியின் சீரியல்கள் எல்லாம் ரெக்கார்ட் செய்யப்பட்டு அரைமணி நேர இடைவெளியில் ஓளிபரப்பபடுவதாக தெர...