Thottal Thodarum

Feb 28, 2013

கேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.

தனியார் பஸ்களின் அட்டூழியங்களைப் பற்றிய அனுபவங்கள் பல பேருக்கு பல விதங்களில் இருந்திருக்கிறது. ஆனால் ஒழுங்காக வண்டி ஓட்டவே தெரியாத ட்ரைவருடன் பயணிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும். ரெண்டு பஸ்ஸுக்கான பயணிகளுடன்.


Feb 27, 2013

தலைவனுக்கு என் அஞ்சலிகள்

தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர்

என் வாத்யாருக்கு.. வந்தனங்கள். மறந்தாத்தானே நினைவு நாள் ஞாபகம் வர்றதுக்கு.கேபிள் சங்கர்

Feb 26, 2013

Kai Po Che

தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர்
சில கதைகளை படிக்கும் போது இது சினிமாவாக வந்தால் நன்றாக இருக்குமென்று ஒர் எண்ணம் தோன்றும் அப்படி பல சுஜாதாவின் நாவல்களை படிக்க அவ்விதமான ஆசை வந்ததுண்டு. சில கதைகளை என் ஆசைக்கு திரைகதையமைத்து வைத்திருக்கிறேன். அதே போலத்தான் சேத்தன் பகத்தின் நாவல்களைப் படிக்கும் போது தோன்றும். அவருடய எல்லா நாவல்களை படிக்கும் போது அஹா.. திரைப்படத்துக்கான எல்லா அம்சங்களும் இருக்கிறதே என்ற யோசனை வரும். ஏற்கனவே அவர் எழுதிய One Night @ Call centre, 5 Points to Someone 3இடியட்ஸாகவும். இதோ 3 Mistakes of My Life, காய் போ சே ஆகியிருக்கிறது. முதல் படம் சுமார். இரண்டாவது படம் சூப்பர் ஹிட். மூன்றாவது சூப்பர் ஹிட். நான்காவதாய் அவர் எழுதிய 2State எனும் நாவல் தான் ஷாருக் நடிக்க மெட்ராஸ் மெயில் ஆக தயாராகி வருகிறது. இப்படி ஹிந்தி பட உலகின் மிகவும் முக்கிய கதாசிரியராக வலம் வரும் சேத்தன் பகதின் கதையை அமீர் 3 இடியட்சாய் செய்யும் போது அவரது பெயரை ஒர் ஓரத்தில் தான் போட்டார்கள். இன்று இப்படத்தின் திரைக்கதையில் அவரும் ஒருவர். கதையாய் படித்த போது என்ன எண்ணம் வந்ததோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

Feb 25, 2013

கொத்து பரோட்டா - 25/02/13

தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர்
இதோ இன்னொரு மரணம். ஆசிட் வீச்சினால் மரணமடைந்த பெண்களின் லிஸ்டில் விநோதினிக்கு பிறகு வித்யா. இருவரின் பிரச்சனையும் ஒரு தலை காதல் தான். விநோதினியின் பிரச்சனையில் ஒரு தலை காதல் என்றால் வித்யாவின் பிரச்சனை திருமணம் செய்ய மறுப்பு. இதுவும் ஒரு வகை காதல்தான். தான் விரும்பிய பெண்ணை அடைய முடியவில்லை என்றால் அவள் வாழக்கூடாது என்ற வெறி. பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. பெண் ஒழுங்காக இருந்தாலும், அவளின் மீது ஒரு தலை காதல் வயப்பட்டவன் அவள் கிடைக்கவில்லையே என்ற வெறியில் ஆசிட் ஊற்றாமல் இருக்க வேண்டுமே என்று பயந்து நடுக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் போல. ஆசிட் வீசியதால் சம்பந்தப்பட்ட ஆணின் வாழ்க்கையும் பாழாகிப் போகப் போகிறது. அதைப் பற்றி எதையும் யோசிக்காத அளவிற்கு காதல், வெறி வரக் காரணம் என்ன? நம் சமூதாயம் என்று தான் சொல்ல வேண்டும். சமூதாயத்தை நம்ம ஒருத்தரால மாத்திர முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நாம் தான் சமுதாயம். நாம் மாறினால் நிச்சயம் சமுதாயம் மாறும். எனவே உடன் பழகும் பெண்களுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பழக நம் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். பெரும்பாலான ஆணாதிக்க சிந்தனை விட்டுப் பெண்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது. இதைச் சொல்லும் போது என்னை திட்டத் தோன்றினாலும், நிஜம் அதுதான். ஆணாதிக்க சிந்தனையுள்ள ஒருவனின் வீட்டில் இருக்கும் பெண்ணினால் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?. முடியும் தன் மீது செலுத்தும் ஆதிக்க எண்ணத்தை தன் பிள்ளைகளுக்கு கடத்தாமல் இருந்தால் நிச்சயம் முடியும். ஒரு பெண் நினைத்தால் நிச்சயம் முடியும். என்ன தான் ஆணாதிக்கம் அது இது என்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை ஆண்கள் ஒர் அட்டகத்தி. 
@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 23, 2013

அமீரின் ஆதி - பகவன்

தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர்


மெளனம் பேசியதேவில் அட என்று ஆச்சர்யப்படுத்தியவர், அமீரின் ராம் என்று தைரியமாய் பெயர் போட்டுக் கொண்டு வித்யாசமான படத்தை அளித்தவர், தமிழ் திரையுலகமே தலைமேல் வைத்து கொண்டாடிய பருத்தி வீரனுக்கு பிறகு சுமார் ஆறு வருட இடைவெளியில்  வெளிவந்திருக்கும் படம் அமீரின் ஆதி - பகவன். நல்ல வேளை பருத்திவீரனை மறந்த நாட்களுக்கு பிறகு வெளி வந்திருக்கிறது. 

Feb 21, 2013

போலீஸ் ஸ்டோரி

65 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு  என் கோடிக்கணக்கான நன்றிகள் - கேபிள் சங்கர்
பெரும்பாலும் நடு இரவில் வீடு திரும்புவது என் வழக்கம். பல சமயங்களில் நண்பர்களின் சந்திப்பே ஒன்பது மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கும். அதோடு ராத்திரியில் ஊர் சுற்றும் போது பல சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கும். அம்மாதிரியான சுவாரஸ்யங்களில் போலீஸ் செக்கிங்கும் ஒன்று. சமயங்களில் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு வரும் போது பெரும்பாலான நேரங்களில் பல நண்பர்களுக்கு எந்தெந்த இடங்களில் எல்லாம் போலீஸ் செக்கிங் இருக்குமென்று சரியாக லொக்கேட் செய்து கொடுப்பேன். போலீஸ் செக்கிங்கில் மாட்டுவது என்பது சாதாரண ஒன்று தான் என்றாலும் சரக்கடித்துவிட்டோ, அல்லது வண்டி பேப்பர் இல்லாமலோ நடு இரவில் நம்மை நிற்க வைத்து சத்தாய்ப்பது கடுப்படிக்கும். பன்னிரண்டு மணி வரை பாரை திறந்து வைக்க அனுமதித்து விட்டு, அந்த பாரின் மூக்குக்கடியில் செக்கிங் செய்வது என்பது அராஜகம். இவங்க கட்டிங் வாங்கிட்டு கடையும் நடத்த வுட்டுட்டு நம்ம கிட்டேயும் புடுங்குறாங்க என்று புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இரவு பணியில் இருக்கும் அவர்களின் நிலையும் பெரும் பரிதாபம். டார்கெட் என்று இருக்கிறது. 

Feb 19, 2013

ஹரிதாஸ்

65 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு  என் கோடிக்கணக்கான நன்றிகள் - கேபிள் சங்கர்
ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. இக்குறைபாடுள்ள குழந்தைகளின் பிரச்சனையை முளையிலேயே உணர்ந்து அதற்காக ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுத்தால் அக்குழந்தையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடியவனாய் வலம வர முடியும். உலகில் தலை சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பல பேர் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளி வந்தவர்கள் தான். எதற்காக ஆட்டிசத்தைப் பற்றி எழுதுகிறேன் என்றால் இப்படம் ஆட்சத்தினால் பாதிக்கப்பட்ட மகனுக்கும், அவனின் வாழ்க்கையை தன் வாழ்க்கையாய் கொண்ட தகப்பனுக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் படத்தின் கதை.என்னடா இது ஆட்டிசம், அப்பா, மகன் உறவு என்று செண்டிமெண்டை கொட்டி,  பிரச்சாரமாய் இருக்குமோ என்று பயப்படாதீர்கள். ஒர் சுவாரஸ்ய திரைக்தையமைத்து மிக அழகாய் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாகி விட்டது தமிழில் இப்படி ஒரு சென்சிபிள் படம் பார்த்து.

Feb 18, 2013

கொத்து பரோட்டா -18/02/13

குமுதம் ரிப்போர்டர் வந்திருக்கும் கலைஞர் - குஷ்பு விவகாரம் ஆபாசத்தின் உச்சம். குமுதம் குடும்பப் பிரச்சனையின் போது எதிர்தரப்பில் கலைஞர் நின்றார் என்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் பழி வாங்கும் நடவடிக்கையாய்த்தான் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது. எவ்வளவு கீழ்தரமாக எழுத முடியுமோ அவ்வளவு கீழ்தரமாய் இறங்கி அடித்திருக்கிறார்கள். அதுவும் பெண் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் மிக மோசமான விஷயம். இவர்களை கொச்சைப் படுத்த பெரியாரையும், மணியம்மையையும் இழுத்திறுப்பது படு கொடுமை. இதே முறையில் எந்த ஒர் கட்சி தலைவரை பற்றி எழுதியிருந்தாலும் கண்டிக்கத்தக்க, எதிர்க்கப்பட வேண்டிய விஷயம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 16, 2013

அழுக்கு

செகண்ட் லைனில் பத்து மிஸ்ட் கால்கள். அப்படியாகப்பட்ட அவசரம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் அந்த நம்பருக்கு திரும்பக் கூப்பிட்டேன். போன் ஆன் ஆனதே தவிர என்னிடம் பேசாமல் போனின் சொந்தக்காரர் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

Feb 15, 2013

சில்லுனு ஒர் சந்திப்பு

 விமலுக்கும் ஓவியாவுக்கும் பள்ளியிலேயே காதல். வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள விழைகிறார்கள். பின்பு சில வருடங்களுக்கு பிறகு விமல் அமெரிக்காவிலிருந்து வருவதாய் காட்டுகிறார்கள். அங்கே ஓவியா என்றொரு ஜீவனைப் பற்றி ஏதும் சொல்லப்படவேயில்லை. என்னடா இது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தீபாஷாவின் மேல் காதல் கொள்கிறார். இருவர் வீடும் இவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறது. அடக்கமான, கலாச்சார காவலராய் வளர்ந்திருக்கும் தீபாஷாவுக்கு விமலின் ஸ்கூல் காதல் பற்றி தெரிய வர, இருவரும் பிரிகிறார்கள். பிரிவுக்கு பிறகு ஒரு நாள் ஓவியாவை சந்திக்க, என்னவானது என்பதுதான் கதை.

Feb 14, 2013

வனயுத்தம்

வீரப்பனின் கூட்டாளிகளுக்கு கருணை மனு நிராகரித்த நேரத்தில் படம் வெளிவந்திருப்பது ஒரு விதத்தில் படத்திற்கு பப்ளிசிட்டியாக அமைய வாய்ப்பிருக்கிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படம் தான் இந்த வனயுத்தம்.

Feb 13, 2013

Mirchi

 
 பிரபாஸ் இத்தாலி படித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ரிச்சாவை ஒர் தெலுங்கு தெரிந்த பணக்கார ஒரு சீன் வில்லன் துரத்த, பிரபாஸ் காப்பாற்றுகிறார். இருவரும் நெருங்க பழகுகிறார்கள். நெருக்கம் காதலாகி விடுமோ என்கிற நேரத்தில் ரிச்சா தன் குடும்பத்தை பற்றி சொல்கிறார். அதனால் காதல் கத்திரிக்காயெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில் பிரபாஸ் ஹைதைக்கு வந்துவிடுகிறார். ஹைதையில் ஒர் காலேஜில் சேருகிறார். அங்கே ரவுடித்தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சுப்புராஜை கொஞ்சம் கொஞ்சமாய் நல்லவனாய் மாற்றுகிறார். சுப்புராஜுடன் அவரது கிராமத்துக்கு செல்ல அங்கே வழக்கமான தெலுங்கு பட பீயூடல் குடும்பம் இருக்க, அவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் பிரபாஸ். சுப்புராஜுன் தங்கைதான் ரிச்சா. பிரபாஸ் தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு தன் காதலை வெளிப்படுத்த நினைக்க, வீட்டில் உள்ளவர்களும் தங்கள் பெண்ணை திருமணம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். அப்போது பிரபாஸ் தான் ஏன் இங்கே வந்தேன், சொல்லி ப்ளாஷ்பேக்குகிறார். பின்பு என்ன ஆனது என்பதை வழக்கமாய் தெலுங்கு படம் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடக்கூடிய கதைதான்.

Feb 12, 2013

Special 26


நம்ப முடியாத  கதைதான். ஆனால் நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களிலிருந்து எடுக்கப்பட்டது எனும் போது  சுவாரஸ்யம் ஏற்படத்தான் செய்தது.  என்பதுகளில் போலி சி.பி.ஐ ரைடுகளினால் நாடே பரபரப்பாகியிருந்த நேரத்தில் அம்மாதிரியான ரைடு நடத்தும் ஒர் குழுவின் கதைதான் இந்த ஸ்பெஷல் 26.

Feb 11, 2013

கொத்து பரோட்டா - 11/02/13

இணையத்தில் கொஞ்சம் கில்மாவான படங்களை பார்க்க வேண்டுமென்றால் பலான வெப்சைட்டுகளுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் சமீப காலமாய் கூகுளின் மூலமாய் வெகுஜன இணையதளங்களில் வரும் விளம்பரங்களில் டூபீஸில் பெண்களின் மார்பு மற்றும் இடையை மட்டுமே படங்களாய் போட்டு, வீட்டில் போரடித்துக் கொண்டிருக்கும் பெண்களை சந்திக்க விருப்பமா? என்று அழைக்கும் விளம்பரமும், இன்னொரு  பக்கம் பெட்டில் மார்பகத்தை அழுத்தியபடியான ஒரு படத்துடன் ஏன் என்னை முயற்சி செய்யக்கூடாது? என்ற அழைப்போடு படங்களைப் போட்டு அந்தந்த இணையதளங்களுக்கான லிங்கை க்ளீக் செய்ய வைக்கிறார்கள். சாதாரண சினிமா வெப்சைட்டுகளில் கூட இத்தகைய விளம்பரங்கள் வர சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவ்விளம்பரங்களைத் தாண்டித்தான் வந்தாக வேண்டியிருக்கிறது. கூகுள் நிறுவனத்தில் விளம்பர கணக்கு வைக்கும் முன்பு நமது தளத்தை வயது வந்தோர்க்கான தளமா? என்றெல்லாம் விசாரித்துத்தான் விளம்பரம் வெளியிடவே அனுமதி கொடுக்கும். அப்படிப்பட்ட பட்சத்தில் வெகுஜன தளங்களில் இம்மாதிரி விளம்பரங்களை கூகுள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது என்ற உண்மை ஒரு புறம் கில்மாவாக இருந்தாலும்.. கொஞ்சம் சமுதாயப் பொறுப்பு இருக்கிற காரணத்தினால் படத்தோடு சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லிவிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 9, 2013

Mama - பேய் வளர்த்த பிள்ளைகள்


வர வர இங்கிலிஷ் படங்கள் எல்லாம் தமிழ் பட செண்டிமெண்டை மிஞ்சிக் கொண்டிருக்கிறது. பாட்மேன், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட் என படு பயங்கர ஆக்‌ஷன் ஹீரோக்கள் கூட உருகி, உருகி செண்டிமெண்ட் குழைத்து பேசிக் கொண்டிருக்க, இதில் உட்சபட்சமாய் தாயைக்காத்த தனயன் படத்தைப் போல ஜேம்ஸ்பாண்ட் மடியில் ரெண்டு வரி வசனம் பேசிவிட்டெல்லாம் உயிர் விடும் அளவிற்கு ஹாலிவுட் சினிமாக்களில் வர ஆரம்பித்துவிட்டது. அவர்களுக்கு நல்ல மாற்றம். ஆனால் நமக்கு.. டேய்.. இதைத்தானடா.. இங்க பாத்திட்டிருக்கோம் நீயுமா? என்ற அலுப்பு வரத்த்தான் செய்கிறது. அது சரி அவங்களும் என்னத்தான் பண்ணுவாங்க என்கிறீர்களா?

Feb 8, 2013

3 Kanya

சில படங்களைப் பார்த்த மாத்திரத்தில் எரிச்சலைக் கிளப்பி விடும். சிலது ஓகே. இன்னும் சில படங்கள் நல்ல எண்டர்டெயினராக அமைந்துவிடும். ஆனால் வெகு சில படங்களே படம் பார்த்து நாட்களாகியும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கும். அபர்ணா, தாமினி, நான்சி என்கிற மூன்று பெண்களை சுற்றி நடக்கும் கதை. பெண்களைப் பற்றிய கதை என்றதும் அழுவாச்சியாய் இருக்குமோ என்று யோசித்தீர்கள் என்றால் உங்கள் கணிப்பை மாற்றி அமைத்துவிடும் இப்படம். இது ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை படம்.

Feb 7, 2013

டோண்டு ராகவன்.

முதன் முதலாய் இவரை நான் பீச் பதிவர் சந்திப்பில்தான் பார்த்தேன். கையில் ஒர் நோட்டுப் புத்தகம். சற்றே பெரிய உடல், கனீரெண்ற குரலில்  ”நான் டோண்டு ராகவன்.. நீங்க தான் கேபிள் சங்கரா?.. ஆமா அதென்ன கேபிள் சங்கர்னு பேர் வச்சிருக்கேள்?” என்ற டிபிக்கலான பிராமண ஆக்செண்டோடு.  நான் பெயர் காரணத்தை சொன்னதும் ‘ ஓ அதுவும் நல்லாத்தான் இருக்கு. உங்கள் மேல் ஒர் கவனிப்பை ஏற்படுத்துகிறது. என் பதிவெல்லாம் படிச்சிருக்கேளா?” என்றவரிடம் என்னால் சட்டென பொய் சொல்ல முடியவில்லை. “இல்லை சார்.. இனிமேதான்.. ” என்று இழுத்தேன்.  

Feb 4, 2013

கொத்து பரோட்டா 04/02/13

எந்த நேரத்தில் சென்னை சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதைப் பற்றி எழுதினேனோ. ரெண்டு நாள் முன் சட்டத்துக்கு புறம்பாய் போஸ்டர் ஒட்டுகிறவர்களின் நதிமூலம் ரிஷிமூலத்தை தேடியலைந்து ஃபைன் போடப்போவதாய் அறிவித்திருக்கிறது மாநகராட்சி. ஏதோ நம்மால  ஊருக்கு நல்லது நடந்தா சரி.. நன்றி மேயர் அவர்களே.
@@@@@@@@@@@@@@@@@@@
விஸ்வருபம் இங்கே வெளி ஆகாததினால் அண்டை மாநிலங்களுக்கு கொலைக் குத்துதான். கர்நாடகா, கேரளாவில் தமிழிலேயே வெளியிடப்பட்டிருக்க,  ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு ஷோ வரை திரையிடுகிறார்கள். அத்தனையும் ஹவுஸ்புல் காட்சிகள்.ஆந்திராவில் மட்டும் தெலுங்கில் ஓடிக் கொண்டிருந்த வேளையில்,  ஆந்திர பார்டர் ஊரான சத்யவேடுவில் தமிழ் விஸ்வரூபத்தை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். தக்குணூண்டு தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம். 50 ரூபாய் டிக்கெட்டெல்லாம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் நண்பர்கள் சிலர் அங்கே இன்ப்ளூயன்ஸ் யூஸ் செய்து பார்த்தும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்திருக்கிறார்கள். கட் இல்லாத முழு வர்ஷன் வேறா.. ரசிகர்களின் படையெடுப்பை யார் தடுக்க முடியும் .இதுவரையில்லாத அளவில் யு.எஸ். யு.கேவில் இரண்டாவது வாரமும் ஹவுஸ்புல் காட்சிகளாய் நடைபெற்றுக் கொண்டிருக்க, முதல் வாரத்திலேயே சுமார் நான்கைந்து கோடிகளை அள்ளியிருக்கிறது விஸ்வரூபம்.ஆந்திர, கர்நாடக, கேரள கலெக்‌ஷன் அதிரிபுதிரியாய் வந்திருக்கிறது என்கிறார்கள். இவ்வளவு கெட்டதிலேயும் ஒர் நல்லது நடந்துதானிருக்கு. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைக்கான சட்டத்திருத்தம் வர்மா கமிஷனின் பரிந்துரையில் பேரில் உடனடியாய் அமலுக்கு வந்திருக்கிறது.இச்சட்டத்தின் மூலம் பாலியல் பலாத்காரத்தினால் பெண் மரணமடைந்தாலோ, அல்லது கோமா நிலைக்கு சென்று விட்டாலோ அக்குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கலாமென்று சொல்லியிருக்கிறார்கள். இது வர்மா கமிஷனில் பரிந்துரைக்கப்படாத விஷயம். ஆனால் அதே நேரத்தில் ஒரு பெண்ணை பின் தொடர்தல், தொட முயற்சி செய்தல், போன்றவற்றையும் பாலியல் பலாத்காரம் என்கிற வரைமுறைக்குள் வருகிறது என்கிறார்கள். இச்சட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ளவரதட்சணை சட்டம் போல, பெண்கள் தாங்கள் பழி வாங்க நினைக்கும் ஆண்களை, குடும்பத்தை இம்மாதிரியான சட்டத்தை வைத்து ப்ரச்சனைக்குள்ளாக்க முடியும். அதே போல பிரிந்திருக்கும் மனைவியின் அனுமதியில்லாமல் கணவன் உடலுறவு கொண்டால் அதுவும் பாலியல் பலாத்காரத்தினுள் வரும் என்கிறார்கள். இதுவும்  கொஞ்சம் டகால்டியான விஷயம்தான். இதை நான் இங்கே சொல்வதால் ஆணாதிக்க வாதி என்று எண்ணினால் சாரி.. இன்றைய காலகட்டத்தில் இம்மாதிரியான பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை பழிவாங்கும் நடவடிக்கையாய் பயன்படுத்தப்பட்டு  மன உளைச்சலுக்கு ஆளாகி, பொருளாதார நிலையில் நிலை குலைந்து போயிருக்கும் எத்தனையோ ஆண்களை எனக்கு தெரியும். எனவே ஆண்களின் பாதுகாப்பிற்காகவும் சேர்த்தே சட்டம் இயற்ற இனி போராட வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அச்சப்படத்தான் வேண்டியிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மிஸ்டர் சரத்குமார் இதுதான் வாய்ஸ் கொடுக்கிற அழகா.. விளங்கிரும்.

எதிர்கட்சி தலைவர்னா ஆட்சிய பிடிக்க சதி பண்றவர்னு காட்டினா ஏன் தடை செய்யக்கூடாது?

ஏன் அரசியல்வாதிங்க எல்லாம் தங்களை தப்பானவனா காட்டுற படங்களுக்கு தடை கோரக்கூடாது.

விஸ்வரூபம் தமிழ் சத்யவேடு ஆந்திர பார்டர் தியேட்டரில். 300 ரூபாய் ப்ளாக். கொடுத்தாலும் அடுத்த ஷோவுக்குத்தான் டிக்கெட்

டேவிட் படத்தை தமிழில் பார்க்காதீர்கள்.தமிழில் சுத்தமாய் செட்டாகாத களம்.

சமயங்களில் பேருண்மை கூட காதலை மாற்றுவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நேற்று வி-சித்திரம் என்கிற சற்றே பெரிய குறும்படத்தை காண அழைப்பு வந்திருந்தது. நண்பர் சிம்ஹா கதாநாயகனாய் நடித்திருந்தார். ஒரு மாடர்ன் ஆர்ட் பெயிண்டிங்கை அவர் வரைகிறார். அந்த பெயிண்டிங்கில் இருக்கும் விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. நாற்பது நிமிஷம் ஓடக்கூடிய படத்தை டெக்னிக்கலாய் சொல்லப் போனால் கிடைத்த வசதிகளை வைத்து அருமையாய் எடுத்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒரு சுவாரஸ்யமான குறும்படத்திற்கு மேக்கிங் மட்டுமே போதாது கொஞ்சம் திரைக்கதையும் தேவை. கதையாய் சுவாரஸ்யமாய் இருக்கும் இப்படம் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதாநாயககனாய் நடித்த சிம்ஹா.. படத்திற்கு தேவையான அள்வு நடித்திருந்தார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையைப் பற்றி குறிப்பிட்டு சொல்லலாம். சமீப காலங்களில் நிறைய குறும்படங்களின் இசையமைப்பாளர் இவர் தான். இவரது திரையுலக அறிமுகமும் விரைவில் “பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலமாய் நடக்கவிருக்கிறது. எழுதி இயக்கிய இயக்கிய இளனுக்கு வாழ்த்துக்கள். அதை விட முக்கியமாய் இக்குறும்படத்தை விரைவில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விநியோகஸ்தராய் அடியெடுத்திருக்கும்  ஸ்ரீ ஸ்டூடியோஸுக்கு வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சேனல் நியூஸ்
விரைவில் ஹெ.பி.ஓவும், ஈராசும், சேர்ந்து ஒர் விளம்பர இடைவெளியில்லாத சினிமா சேனல்களை ஆரம்பிக்க இருக்கிறது. HBO அவர்களுடய மற்ற சேனல்களில் வெளியாவத்ற்கு முன்பாகவும், அதே போல மற்ற சேட்டிலைட் சேனல்களில் வெளியாகும் முன் வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.  ப்ரீமியம் சேனல்களாய் வலம் வரப் போகும் இச்சேனல்கள் முறையே மாதம் நூறு ரூபாய்க்கு, டிஜிட்டல் ப்ளாட்பாரத்தில் மட்டுமே வெளிவர இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Feb 3, 2013

டேவிட்

 நாளைய இயக்குனரின் ஒரிஜினலான விஜய் அமிர்தராஜ் சோனி பிக்ஸில் நடத்திய குறும்பட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார். அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு ஹாலிவுட் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விஷயம் அறிவிப்போடு நின்றுவிட, வெற்றி பெற்ற இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராய் சேர்ந்து பணி புரிந்து விட்டு, சைத்தான் என்கிற ஒரு படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படம் எனும் போது எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. ஆனால் ஒரு விஷயம். முன்னமே சொல்லி விடுகிறேன். இது செமி தமிழ் படம். பாதி படத்துக்கு மேல் டப்பிங் தான். நிச்சயம் இப்படம் தமிழ் சமூகத்திற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கதைக்களன் எனவே தயவு செய்து தமிழில் பார்க்காமல் இந்தியில் பார்த்தீர்களானால் நல்ல அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .

Feb 2, 2013

கடல் - How Could You Do This Mani Sir?


என் ஆதர்ச இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு,
உங்களது முதல் படத்திலிருந்து உங்களை ரசித்து வரும் ரசிகன் என்கிற முறையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்களது முதல் படமான பகல்நிலவுக்கு முன் நீங்கள் எடுத்த பல்லவி அனுபல்லவியை பெங்களூருக்கு சென்று பார்த்தவன் நான். அடுத்து வெளியான பகல் நிலவைப் பார்த்துவிட்டு அட தமிழ் சினிமாவில் இவ்வளவு சாத்வீகமாய் வயலன்ஸை சொல்ல முடியுமா? என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அடுத்தடுத்து மெளனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, என்று வளர்ந்து, ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால்,தில்சே, இருவர், குரு, போன்ற படங்களில் சில படங்கள் ஓடாவிட்டாலும் இன்றைக்கும் திரும்பத் திரும்ப டிவிடியில் பார்த்து ரசிக்கும் ரசிகனின் புலம்பல்தான் இது.உங்களை துரோணராக ஏற்றுக் கொண்டு வளைய வரும் பல ஏகலைவன்களில் நானும் ஒருவன்.