பக்கத்தூர்காரைங்க மேட்டு தெரு பொம்பளைகிட்ட வம்பு பண்ணான்னு சசிகுமார் அப்பாரு ஊடு பூகுந்து அவனை வெட்டுறாரு. வெட்டிட்டு தப்பிக்கையில மாட்டிகிறாரு. மாட்டினா முவம் தெரிஞ்சிரும்னு கூட வந்தவுக கிட்ட சொல்லி தலைய வெட்டி கொல்ல சொல்லி சாமியா ஊருக்குள்ள இருக்காரு. அப்பாரு மாரியே புள்ளையும் வளரக்கூடாதுன்னு வழக்கமா இந்த மேரி வேஷத்துக்குன்னே பொறப்பெடுத்திருக்கிற என்னைப் பெத்த தாயி சரண்யா நினைக்குது. பொறவு என்ன ஆவும்? அதும் மதுரை பக்கப் படம். வெட்டிக்கு சரக்கடிச்சிட்டு, லந்து பண்ணிட்டு திரிஞ்சிட்டு, ரவுடித்தனம் பண்ணாம அப்புறம் என்ன மதுரைப்படம். அதையேத்தேன் செய்யுறாரு நம்ம சசிகுமாரு. என்னதேன் ரெளடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சாலும் அவர் எம்.சி.ஆர் மாதிரி, நல்லதுக்குத்தேன் திருடுவாரு, பொம்பளைப்புள்ளைங்கள ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு. நியாயத்துக்குத்தான் அடிப்பாரு. அவருக்கு ஒரு கண்ணாலத்தை செஞ்சி பாத்திரமுன்னு ஆத்தாகாரி தலையால தண்ணி குடிக்கிறா மவன் வேணாங்குறான். என்னடான்னா.. நான் தெனம் ரவுடித்தனம் செஞ்சிட்டு திரியறவன் நாளை பின்ன எனக்கெதாவது ஒண்ணுன்னா என் ஆத்தாகாரி மாதிரி என் பொண்டாட்டி அழுவக் கூடாதுங்கிற நல்லெண்ணம்தேனு சொல்லுறான். பொறவு என்ன நடந்திச்சுங்கிறதுதான் கதைன்னு நினைக்கேன்.
May 31, 2013
May 30, 2013
இதுதான்டா க்ளைமாக்ஸ் -1
Dear Gentle ladies and Gentlemen,
The below post is highly recommended for the adults whose mental capacuty is absolutely equivalent to 14 years or less aged children. It is going to be a mind and stomach teasing journey. Hence you are depanetly requested to keep one andaa full of chilled drinks. Gulp it at regular intervals in order to avoid smoke bursting out of your ears/stomach etc. Here we go.....
அதிர்ஷ்ட ரேகையின் அனைத்து கோடுகளும் நடுமுதுகில் ஆழமாய்ப்பதிந்த சுபயோக தினமது. அம்மகோன்னத நாளின் நள்ளிரவில் சன் டி.வி.யில் துர்கா க்ளைமாக்ஸ். பராசக்தி, முள்ளும் மலரும், மௌனராகம் போன்ற ரசனையற்ற படங்களால் அக்மார்க் தமிழ் சினிமா ரசிகர்களை சீரழித்த ராகுகால யுகமொன்றில் இவ்வனைத்தையும் புறந்தள்ளி வந்தாரொரு மகராசன். அதன்பின் துர்கா மூலம் பட்டி தொட்டியெங்கும் நமது செல்லக்குட்டி ராமநாராயணனி ன் கும்தலக்கா சீசன். முழுப்படத்தை பற்றி சிலாகித்து எழுதினால் கலைஞர் வயதாகும் வரை தொடரலாம். Lets dip ourselves into the divine க்ளைமாக்ஸ் முமென்ட்ஸ் அலோன்!!
May 29, 2013
Aurangazeb
அர்ஜுன் கபூர் இஷ்குஜாதேவின் வெற்றிக்கு பிறகு வரும் படம். அதிலும் ரெட்டை வேடப் படம். அண்ணனுக்கு பதிலாய் தம்பியை அனுப்பி அப்பாவை வீழ்த்த ப்ளான் போடும் போலீஸ். அப்பாவுடனேயே இருந்து கொண்டு ஆட்டையை கலைக்கப் பார்க்கும் அம்ரிதாசிங். தன் சாம்ராஜ்யத்தை காக்க பிரயத்தனப்படும் அப்பா ஜாக்கி ஷெராப். ஜாக்கி ஷெராப்பின் சாம்ராஜ்யத்தை ஆள் மாறாட்டம் செய்து அவரை கைது செய்யாமல் அவரின் தொழிலை ஆக்கிரமிக்க நினைக்கும் போலீஸ் கமிஷனர் ரிஷிகபூர். அவரின் உறவினரான நடுநிலை போலீஸ் பிரிதிவிராஜ். அர்ஜுன் கபூரின் அம்மாவிற்கு ஒர் குழப்பமான கதை. அவருக்கும் பிரிதிவிராஜின் அப்பா அனுபம் கெருக்குமான உறவு என ஏகப்பட்ட சப் ப்ளாட்டுகளை ஒருங்கிணைத்த திரைக்கதை தான் ஓளரங்கசிப்.
May 28, 2013
The Great Gatsby
டிகாப்ரியோ, டோபி மெக்குயர், கேரி முல்லிகன், அமிதாப்பச்சன், பஸ் லுஹுர்மேனின் இயக்கம், 3டியில் படமாக்கப்பட்டது என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். F. Scott Fitzgerald 1925ஆம் ஆண்டில் இதே பெயரில் எழுதிய நாவல்தான் இப்படம். ஏற்கனவே பல முறை ப்ராட்வே நாடகங்களாகவும், 1926ல் மெளன படமாகவும், 1949, 74, 2000 என மூன்று முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வந்த கதைதான். நம்மூர் அம்பிகாபதி, அமராவதி, வசந்த மாளிகை, தேவதாஸ் போல திரும்பத் திரும்ப சொன்னாலும் உருக வைக்கும் காதல் கதை.
May 27, 2013
கொத்து பரோட்டா -27/05/13
சமீபகாலமாய் திரையுலக செய்திகளும், சில பல சிறு விமர்சனங்களும் எஸ்.கே என்கிற பெயரில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். என்ன கேபிள் சங்கர் சினிமா ரிப்போர்ட்டர் ஆகிவிட்டாரா? என்று கூட சில பேர் கேள்வி கேட்டார்கள். இனி வரும் காலங்களில் நான் எழுதும் விஷயங்கள் மட்டுமில்லாமல் நம் தளத்தின் கண்டெண்டுக்காக ஒரு குழுவும் பயணிக்க இருக்கிறது. எனவே அவர்களுடய செய்திகள், கட்டுரைகளும் பெயர்களுடன் இடம் பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
May 25, 2013
நடிகையின் டைரி
சில்க் ஸ்மிதாவின் நிஜமான வாழ்கையின் பின்னணியை, டர்ட்டி பிக்சரில் சொன்னது எல்லாம் ஜுஜுபி.. நாங்க தான் ஒரிஜினலாக சொல்கிறோம் என்றார்கள். சனாகான் வேறு ரெண்டு நாளைக்கு ஒரு முறை நான் அப்படி பீல் பண்ணேன் இப்படி பீல் பண்ணேன். என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். இவ்வளவு பில்டப்புக்கும் இது தகுமா? எனற கேள்வியோடுதான் படம் பார்த்தோம்.
சனாகானை வைத்து ஒரு பிட்டு படமாகவும் இல்லாமல், சில்க் ஸ்மிதாவின் கதையாகவும் இல்லாமல், நடிகையின் கதையாகவும் இல்லாமல், மொக்கையானது தான் மிச்சம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஒரு தாடிக்காரர் இருந்தார் என்றதை வைத்துக் கொண்டு குறுந்தாடி வைத்த ஒருவரிடம் தன்னை கொடுத்து அவருடனே லிவிங் டூகெதராய் இருந்தார் என்றும், ஸ்மிதாவின் பணத்தை எல்லாம் அவர் தான் சுவாஹா செய்தார் என்றும், தாடிக்காரரின் வயது வந்த மகன் ஸ்மிதாவின் மேல் காதல் கொண்டதால் தான் சில்க் ஸ்மிதா தாடிக்காரரால் கொலை செய்யப்பட்டார் என்று கதை சொல்கிறார்கள்.
எஸ்.கே
எஸ்.கே
May 24, 2013
செவிக்கினிமைகள்
மூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்..
அச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி.
கேபிள் சங்கர்May 21, 2013
நேரம்
70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtIlA5QSM-NYg4JrJlmzDFH3r19mJJIziTRzgyypK36yFtzwfqqPrm9NIdHOmhJRkfnsVwTvJf8FtgWqu84BB-mCNIZVtsWrfZKB6b5s7OEUUNI6uLu-o3cx8EwibcC6JnIJCf/s640/neram-stills-photos-pictures-stills-01.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtIlA5QSM-NYg4JrJlmzDFH3r19mJJIziTRzgyypK36yFtzwfqqPrm9NIdHOmhJRkfnsVwTvJf8FtgWqu84BB-mCNIZVtsWrfZKB6b5s7OEUUNI6uLu-o3cx8EwibcC6JnIJCf/s640/neram-stills-photos-pictures-stills-01.jpg)
வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர், தங்கையின் கல்யாணத்துக்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் வேறு வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி ப்ரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி அஜாக்கிரதையா இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்திருக்க, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
May 20, 2013
கொத்து பரோட்டா -20/05/13
70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்
இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்பதை வெளிக்காட்டும் நேரம் வந்திருக்கிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள்.
இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்பதை வெளிக்காட்டும் நேரம் வந்திருக்கிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
May 16, 2013
அடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி
2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் நெகிழ்ந்து போயிருந்த எனக்கு மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்த நாள் காலையில் பிரபாகரின் யூஷுன் வீட்டின் கீழ் அவருடய காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் தான் ராஜ். ஒல்லியாய், நல்ல உசரமாய் அருமையான கொங்கு தமிழில் அன்பொழுக என்னை கட்டி அணைத்து வரவேற்றார்.
May 15, 2013
May 14, 2013
Ustaad Hotel
சில திரைப்படங்களை பார்க்கும் போது அடடா எப்படி இந்தப் படத்தை மிஸ் செய்தோம் என்று வருத்தப்பட வைக்கும். அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் இந்த உஸ்தாத் ஓட்டல். ஒரு முறை பதிவர் சிவகுமார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சாப்பாட்டுக்கடை ஓனராகிய நான் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி நான் தேடி போவதற்குள் தியேட்டரை விட்டு போய்விட்டது.
May 12, 2013
நாகராஜசோழன் MA MLA
சத்யராஜ் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதுவும் அவரது நடிப்பில் 200 வது படம். இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவரும் 50வது படம். இவர்கள் இருவரது மாஸ்டர் பீஸான அமைதிப்படையின் இரண்டாவது பாகம் என்றால் கேட்க வேண்டுமா? மக்களின் எதிர்பார்ப்பைப் போல விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பும் எகிறித்தான் இருந்தது. இல்லாவிட்டால் தயாரிப்பாளராய் இருக்கும், டாக்டர் ராமதாஸ் விநியோகஸ்தராய் அவதாரம் எடுத்திருப்பாரா? சரி.. இப்படி பல பாயிண்டுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் திருப்தியை கொடுத்ததா? என்றால் பெரிய இல்லை என்றே சொல்ல வேண்டும்.
May 10, 2013
விக்ரமனின் - நினைத்தது யாரோ
பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’.இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார்.மற்றும் கார்த்திக் யோகி, அஸார், அஷ்வத், ரித்விகா, சுபிக்ஷா, அதுல்யா, சாய் பிரசாத், கிரி, லியோ, பினிஷ், ஷ்யாம் சுந்தர், ஸ்வேதா குப்தா, ஷாமிலி, சமீரா, ஷபானா, பிரதீப், எல்விஎல் , மணிபாரதி, விஷ்ணு, ரஞ்சித், பானு, பாலசுந்தரி, இந்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – R.K. பிரதாப், இசை – X. பால்ராஜ், எடிட்டிங் – S. ரிச்சர்ட் , கலை – ஜனா,பாடல்கள் – கலைக்குமார், பா. விஜய், வைரபாரதி,நடனம் – சுசித்ரா, ராபர்ட், பாஸ்கர்
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்,தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம்,தயாரிப்பு – P. ரமேஷ், இமானுவேல், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் – விக்ரமன்
“முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து இளைய தலைமுறை ரசிகர்களை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.இப்படத்திற்காக ரஜித் – நிமிஷா பங்கேற்ற இரண்டு பாடல்க காட்சிகள் , “கொஞ்சம் புன்னகை, கொஞ்சம் காதல், அழகிய காதல் ” என்ற பாடலும், ‘மனசே லேசா, ரிங்கா ரிங்கா ரோசா” என்ற பாடல் காட்சியிலும் ரஜித் – நிமிஷா பங்கேற்க காஷ்மீரில் உள்ள பெகல்காம் என்ற இடத்தில் ராபர்ட் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் போலீஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தனர். எனக்கு தெரிந்து ரஜினி நடித்த ‘வேலைக்காரன் ’ படத்திற்குப் பிறகு ‘நினைத்தது யாரோ’ படப்பிடிப்பை நாங்கள்தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம்.காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் வேண்டாமே பாதுகாப்பு, பிரச்சனை ஏற்படுமே என்று நிறைய நண்பர்கள் பயமுறுத்தினர். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.‘நினைத்தது யாரோ’ பாடல்கள் மட்டுமல்ல, படமும் பிரமாதமாக வந்திருக்கிறது என்கிறார் பெருமையுடன் விக்ரமன்.பத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் காஷ்மீர் முழுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து நம்மை பாதுகாக்கிறார்கள் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார் விக்ரமன்.
எஸ்.கே
எஸ்.கே
May 9, 2013
மின் மிகை
இன்னைய பேப்பர்ல +2 தேர்வு ரிசல்ட் வருவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க காலை எட்டு மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழகம் எங்கும் மின் தடை செய்யக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டாங்களாம். மக்கள் நலனின் அக்கரை கொண்ட தமிழக அரசின் முதல்வர் உடனடியாய் அவங்க 12 மணிவரைக்கும் கேட்டதை 1 மணி வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணி மக்கள் நல அரசுன்னு ப்ரூவ் பண்ணியிருக்காங்கன்னு மின் துறை அமைச்சர். நத்தம்..(அவருதானே இப்பவும்) புளங்காகிதம் அடைஞ்சிருக்காரு.
சென்னைக்கு வெளியே இருக்கிறவங்க எல்லாம் சென்னையில் மட்டும் என்ன ஸ்பெஷல் அவங்களுக்கு மட்டும் ரெண்டு மணி நேரம்னு காண்டாகிட்டு இருந்ததுக்கு இந்த கோடை ஆரம்பத்திலிருந்து பெரும்பாலான நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடையும், குறிப்பாய் இரவு நேரங்களில் வோல்டேஜ் பிரச்சனைகள், அல்லது ஒரு பேஸ் இருந்தால் இன்னொரு பேஸ் போவது என்று பேஸ் மாற்றுவதற்கு ஷிப்ட் போட்டு ஆப்பரேட்டர் வைத்து தூங்க வேண்டிய நிர்பந்தத்தில் சென்னை இருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் ஆப்பரேட்டருக்கு வேலையில்லாத அளவில் ஒரு மணி வரை சுத்தமாய் கட் செய்துவிடுகிறார்கள். கேட்டா கேபிள் எரிஞ்சிருது. லைன் ப்ராப்ளம், ஹெவி லோட், என்று ஆயிரம் காரணங்கள். எங்கள் ஏரியாவில் வருடங்களாகவே கொஞ்சம் ஹெவி யூசேஜ் இருக்கிற காரணத்தால் அண்டர்க்ரவுண்ட் கேபிள் தொடர்ந்து எரிந்து போய்க் கொண்டேயிருக்கும். தனியாய் ஒரு ட்ரான்ஸ்பார்மர் போட்டால்தான் இந்த ஏரியா லோட் தாங்கும் என்று சொன்னார்கள். நாங்கள் எங்கள் தெருவின் அசோசியேஷன் சார்பாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறோம் வருஷம் ஆனதே தவிர ட்ரான்ஸ்பார்மர் வந்ததாய் தெரியவில்லை. தேவையில்லாத வேலை பளு, ப்ரச்சனைகளை தவிர்க்க அதற்கு மாற்று நடவடிக்கைகளை விட்டு, மராமத்து வேலைகளை மட்டுமே செய்வது வீண் செலவு. ஏதோ என்னால முடிஞ்சது புலம்பத்தான் முடியும். இதை ஏன் சொல்றேன்னா.. பேஸ்புக், ட்வீட்டர், வலைப்பூ எல்லாத்தையும் அரசு கண்காணிக்குதாம். ஒரு வேளை இதை கண்காணிச்சு தகவல் சொல்லி சரி பண்ணாங்கன்னா.. ராத்திரி கொஞ்சம் நேரமாவது நிம்மதியாய் தூங்குவோம்.
இந்த ஊர்ல புது அனல் மின் நிலையம். 600 மெகாவாட் மின்சாரம், இந்த ஊர்ல 1500 மெகாவாட் மின்சாரம் அப்படி இப்படின்னு ஆட்சிக்கு வந்ததிலேர்ந்து சொல்லிட்டேயிருக்காங்க. தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமா ஆக்கிக் காட்டுறேன்னு சொன்னாங்க முதல்வர். இப்படி இவங்க சொன்ன அறிக்கை மெகாவெட்டை கூட்டிப் பார்த்தா நிச்சயம் இப்பவே மிகையாத்தான் வருது.
May 7, 2013
மூன்று பேர் மூன்று காதல்
டைட்டிலிலேயே தெளிவாய் சொல்லியிருக்கிறார்கள். மூன்று பேர்களின் காதல் கதைகள் என்று. தனித் தனியே இம்மூன்று கதைகளும் வெவ்வேறு இடம், கண்டெண்ட்டில் இருக்கிறது. விமலுடய காதல் மலையும் மலை சார்ந்த இடமும், சேரனின் காதல் கடலும் கடல் சார்ந்த இடமும், அர்ஜுனின் காதல் நிலமும் நிலம் சார்ந்த இடமும் என்று மூன்று ஜியோகிரபிகல் வேறு பாடு வேறு.
விமலின் காதல் வழக்கமான வசந்த பட காதல் போல பேசியே மாய்ந்து அது காதலா இல்லை கத்திரிக்காயா என்று புரிபடுவதற்குள் முற்றிப் போய் புட்டுக் கொள்கிறது. விமல் வழக்கம் போல வாய்க்குள்ளேயே பேசுகிறார். டைட் க்ளோசப் காட்சிகள் வேறு. ஹீரோயினை அறிமுகப்படுத்தும் முன் பாலசந்தர் பாணியில் ஒளித்து வைத்து அவள் ஒர் பேரழகி என்று பில்டப் செய்து படத்தில் காட்டியவுடன் தியேட்டர் மொத்தமும் “ப்பா.. “ என்று கத்தி அடுத்த வார்த்தை சொல்லியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. உணர்வில்லாத வள வள காதல் என்று சொல்லப்பட்ட கதை.
இரண்டாவது காதல் முட்டம் பகுதியில் சேரனுக்கும், பானுவுக்குமிடையே நடக்கும் உணர்வு போராட்டம் என்றே சொல்ல வேண்டும். சேரனின் கேரக்டரைஷேஷனும், பானுவின் கேரக்டரைஷேஷனும் அருமை. அவர்களுக்குள் உண்டாகும் மெல்லிய காதலும், அதை வெளிப்படுத்த முடியாமல் பானு படும் பாடும். அவரது நடிப்பும் வாவ்.. செம. சேரனின் நடிப்பும் ந்ன்றாகவே இருந்தது. சரியான காஸ்டிங். இந்த எபிசோடில் எங்கே நெகிழ்ந்து விடுவோமோ என்ற உருக வைத்திருக்கிறார்கள். என்னம்மா நடிக்குதுப்பா இந்த பொண்ணு.
மூன்றாவது காதல் நீச்சல் கோச் அர்ஜுனுக்கும் அவரது மாணவிக்குமிடையே நடக்கும் ஆசிரிய மாணவி உறவுக்கு மீறிய காதல். அதை மிக நாசுக்காகவே கையாண்டிருக்கிறார்கள். அர்ஜுனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அதை உணர்ந்து சிறப்பாகவே செய்துள்ளார். மாணவியாய் நடித்தவரின் நடிப்பும் ஓகே தான் என்றாலும் , இவர்களிடையே இருக்கும், கோச் மாணவி உறவுக்கான முக்யத்துவமா? அல்லது இவர்களின் காதலுக்கான முக்யத்துவமா என்று ஆழமாய் சொல்ல் முடியாமல் ஒலிம்பிக், போட்டி, 51 செகெண்ட், காதலியின் வெற்றி அர்ஜுனை எழுந்து நடமாட வைத்துவிடும் என்ற காதல் என நிறைய இடங்களில் மிக்ஸ்ட் உணர்வுகளினால் இன்வால்வ் ஆக முடியாமல் போகிறது. அர்ஜுன் படுத்தபடியே நடிக்கும் காட்சியில் க்ளாஸ்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட். அதை மிக அழகாய் மாண்டேஜ்களாய் இயக்குனர் உபயோகித்திருக்கிறார். ஸ்டாப் த பாட்டு மூலம் தன் பையனை அறிமுகம் செய்திருக்கிறார். லாங் வே டு கோ. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தினேஷின் ஒளிப்பதிவைத்தான். மூன்று விதமான காதலுக்கு மூன்று விதமான டோனை பயன்படுத்தியதுமில்லாமல். முட்டம் பகுதி கதையில் கிட்டத்தட்ட நிறைய ஷாட்களில் பானுவின் நடிப்பை அருமையாய் உள்வாங்கி நமக்களித்திருக்கிறார்.
எழுதி இயக்கியவர் வஸந்த். மூன்றும் தனித்தனி காதல் கதைகளாய் போய்விட்டதால் உணர்வு ரீதியாய் படத்தோடு ஒன்ற முடியாதது ஒரு குறையென்றால், சேரன் - பானுவின் கதையில் இருக்கும் அழுத்தம், மற்ற கதைகளில் இல்லாமல் போனதால் சுவாரஸ்யமில்லாமல் போகிறது. வஸ்ந்தின் படங்கள் படம் தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வை விட டிவியில் போடும் போது அட ஓகேயாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு ஒரு கேள்வி வரும் அது இந்த படத்துக்கும் வரும்.
கேபிள் சங்கர்
இரண்டாவது காதல் முட்டம் பகுதியில் சேரனுக்கும், பானுவுக்குமிடையே நடக்கும் உணர்வு போராட்டம் என்றே சொல்ல வேண்டும். சேரனின் கேரக்டரைஷேஷனும், பானுவின் கேரக்டரைஷேஷனும் அருமை. அவர்களுக்குள் உண்டாகும் மெல்லிய காதலும், அதை வெளிப்படுத்த முடியாமல் பானு படும் பாடும். அவரது நடிப்பும் வாவ்.. செம. சேரனின் நடிப்பும் ந்ன்றாகவே இருந்தது. சரியான காஸ்டிங். இந்த எபிசோடில் எங்கே நெகிழ்ந்து விடுவோமோ என்ற உருக வைத்திருக்கிறார்கள். என்னம்மா நடிக்குதுப்பா இந்த பொண்ணு.
மூன்றாவது காதல் நீச்சல் கோச் அர்ஜுனுக்கும் அவரது மாணவிக்குமிடையே நடக்கும் ஆசிரிய மாணவி உறவுக்கு மீறிய காதல். அதை மிக நாசுக்காகவே கையாண்டிருக்கிறார்கள். அர்ஜுனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அதை உணர்ந்து சிறப்பாகவே செய்துள்ளார். மாணவியாய் நடித்தவரின் நடிப்பும் ஓகே தான் என்றாலும் , இவர்களிடையே இருக்கும், கோச் மாணவி உறவுக்கான முக்யத்துவமா? அல்லது இவர்களின் காதலுக்கான முக்யத்துவமா என்று ஆழமாய் சொல்ல் முடியாமல் ஒலிம்பிக், போட்டி, 51 செகெண்ட், காதலியின் வெற்றி அர்ஜுனை எழுந்து நடமாட வைத்துவிடும் என்ற காதல் என நிறைய இடங்களில் மிக்ஸ்ட் உணர்வுகளினால் இன்வால்வ் ஆக முடியாமல் போகிறது. அர்ஜுன் படுத்தபடியே நடிக்கும் காட்சியில் க்ளாஸ்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட். அதை மிக அழகாய் மாண்டேஜ்களாய் இயக்குனர் உபயோகித்திருக்கிறார். ஸ்டாப் த பாட்டு மூலம் தன் பையனை அறிமுகம் செய்திருக்கிறார். லாங் வே டு கோ. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தினேஷின் ஒளிப்பதிவைத்தான். மூன்று விதமான காதலுக்கு மூன்று விதமான டோனை பயன்படுத்தியதுமில்லாமல். முட்டம் பகுதி கதையில் கிட்டத்தட்ட நிறைய ஷாட்களில் பானுவின் நடிப்பை அருமையாய் உள்வாங்கி நமக்களித்திருக்கிறார்.
எழுதி இயக்கியவர் வஸந்த். மூன்றும் தனித்தனி காதல் கதைகளாய் போய்விட்டதால் உணர்வு ரீதியாய் படத்தோடு ஒன்ற முடியாதது ஒரு குறையென்றால், சேரன் - பானுவின் கதையில் இருக்கும் அழுத்தம், மற்ற கதைகளில் இல்லாமல் போனதால் சுவாரஸ்யமில்லாமல் போகிறது. வஸ்ந்தின் படங்கள் படம் தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வை விட டிவியில் போடும் போது அட ஓகேயாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு ஒரு கேள்வி வரும் அது இந்த படத்துக்கும் வரும்.
கேபிள் சங்கர்
May 6, 2013
கொத்து பரோட்டா -06/05/13
சென்ற வாரம் லயோலா கல்லூரியின் எம்.ஏ மாணவர்களின் ப்ராஜெக்டுக்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினராய் சென்றிருந்தேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவ்து ஒரு மீடியா சம்பந்தப்பட்ட ப்ராஜெக்டுகளை செய்திருக்க வேண்டும். ஆறேழு மாணவர்கள் மெர்குரி நெட்வொர்க் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்திருந்தார்கள். பெரும்பாலும் உதவி இயக்குனர்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். முக்கியமாய் நீயா நானாவில் தலைப்புகளை தேடுவது, பின்னணி உழைப்புகளூக்காக இண்டர்ன்ஷிப் எடுத்திருந்தார்கள். இலங்கையிலிருந்து வந்திருந்த இரண்டு பாதிரிமார்கள் அவர்களுடய சபை சார்ந்த ரேடியோ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை செய்திருந்தார்கள். இன்னும் சில பேர் புதிய தலைமுறையில் புதிய தொலைக்காட்சியாய் வர இருக்கும் “புதுயுகம்” சேனலில் வேலை பார்த்திருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு இண்டர்ன்ஷிப் செய்திருந்தாலும் அவர்களுக்கு பெரிய எக்ஸ்போஷர் ஏதும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாய் அறிந்து கொண்டவர்கள் தான் அதிகம். இரண்டு மாணவர்கள் ஒர் சினிமா தயாரிப்பு கம்பெனியில் உதவி இயக்குனர்களாய் பணிபுரிந்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு சூட்டிங் நடக்கும் போது போட்டோ மட்டுமே எடுத்துவிட்டு வந்துவிட்டார் போல.. இன்னொருவர் காஸ்ட்யூம் கண்டின்யுட்டி பார்த்திருக்கிறார். ஆனால் அதை பற்றி மிகத் தெளிவாக பேசினார். பெரும்பாலான் காலேஜ் ப்ராஜெக்டுகளில் வெளியே கிடைக்கும் சர்டிபிகேட்டும், ப்ராஜெக்டும் டெம்ப்ளேட்டாய்தான் இருக்கும். இங்கு வந்ததில் சிலது விதிவிலக்கு. என்னுடன் இன்னொரு எக்ஸாமினராய் வந்திருந்த சத்தியம் டிவி ஜி.எம். சுவாமிநாதன் மூன்று பேருக்கு அவரது சேனலில் வேலை வாய்ப்பு அளித்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
May 2, 2013
May 1, 2013
சூது கவ்வும்
மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் வலம் வந்து கொண்டிருக்கும் சி.வி.குமாரின் மூன்றாவது படைப்பு. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் படம். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நலன் குமரசாமியின் இயக்கத்தில் வெளிவரும் படம். ஸ்டூடியோ க்ரீனின் அபாரமான, பப்ளிசிட்டி வேறு எதிர்பார்புக்கு கேட்க வேண்டுமா?
Subscribe to:
Posts (Atom)