Thottal Thodarum

May 31, 2010

கொத்து பரோட்டா-31/05/10

manarkeni manarkeni1
சென்ற வாரம் மணற்கேணி வெற்றியாளர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றிருந்தேன், பிரபாகர், தருமி, மருத்துவர் தேவன்மாயம் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இதனுடன் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் மணற்கேணி புத்தகம் சென்னையில் என் வீட்டருகில தான் பதிப்பித்திருந்தார்கள். அதை சிங்கைக்கு கொண்டு சேர்க்கும் பிரதான வேலையை என்னிடம் கொடுத்திருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.. சிங்கை பதிவர்கள் எல்லாரும் ஒருமித்து இனி ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான விருதுகளை வழக்க இருக்கிறார்கள். கடந்த 28ஆம் தேதி மணற்கேணி விருதுகள் வழங்கும் விழாவும், மணற்கேணி புத்தக வெளியிட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:) மேலும் விபரங்களுக்கு http://aammaappa.blogspot.com/2010/05/blog-post_29.html
manarkeni2

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பதிவுலகின் சென்ற வார பிரச்சனை மிகவும் வேதனைபட வைக்கிறது. அதை பற்றி  மீண்டும்  எழுத விரும்பமில்லை.. ஆனால் பகடியாய் உள்ளுக்குள் இருக்கும் வன்மமும், குரோதமும் நன்றாக வெளிபட்டிருக்கிறது இதன் மூலம். போகிற போக்கில் பல பதிவர்களையும், என்னையும், என்னுடன் சேர்ந்து புத்தகம் வெளியிட்ட இன்னொரு நண்பரையும்,  புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களையும் கூட சேர்த்து கலாய்த்திருக்கிறார்கள். எனக்கென்ன வருத்தமென்றால் அதை  தனி பதிவாக போட்டிருந்தால் இன்னும் வரவேற்றிருப்பேன். ”தூ ”வென துப்புவதெல்லாம் நடந்த  பிரச்சனையை தெரியாமல் ஓவராக ரியாக்‌ஷன் செய்யும்  விஷயம். துப்புறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது. 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
sidin3
ம்ம ஆட்கள் தான் ப்ளாக் உலகத்திலிருந்து ஒருவர் வளர்ந்து பத்திரிக்கையாளர் ஆனாலோ, புத்தகம் வெளியிட்டாலோ அதை பகடி செய்கிறார்கள் ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி ப்ளாகராய் இருந்து எழுத்தாளர் ஆகியவர்தான் சிடின் வடுகுட், www.whatay.com என்ற பெயரில் ப்ளாக் எழுதி வரும் இவர் Dork: the Incredible Adventures of Robin ‘Einstein’ varghese என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இன் ஜினியரான இவர் ப்ளாக் உலகிலிருந்து பத்திரிக்கையாளராகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ப்ளாகிங் என்கிறார் இவர். புத்தகத்திற்கு வாசகர்களிடமிருந்து மிக பெரிய வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அங்கும் இவரிடமிருந்தெல்லாம் மற்ற ப்ளாகர்கள் பேட்டி எடுத்து போடுகிறார்கள். இது ஒரு  பென்குவின் வெளியீடு. வெளியே வாங்கப்பா..


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$ 
இந்த வார தத்துவம்

உங்கள் இதயம் ஒரு குப்பைத்தொட்டி அல்ல உங்கள் எல்லா கவலைகளையும் போட்டு வைப்பதற்கு. அது  உங்களது சந்தோஷ தருணங்களை சேமித்து வைப்பதற்கான அட்சய பாத்திரம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
சமீபத்தில் இவ்வளவு இளமையான,குறும்பான, நகைச்சுவையான குறும்படத்தை பார்க்கவில்லை. நடித்தவர்களின் இயல்பான நடிப்பு, கேமரா கோணங்கள், பின்னணி இசை, டயலாக்குகள் என்று அட்டகாச படுத்தியிருக்கிறார்கள். நிச்சயம் இண்ட்ரஸ்டிங்கான படம். இயக்குனர் பாலாஜிக்கு பாராட்டுக்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வி
ஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிற்து என்று நான் முன்பு சொன்னதற்கு அங்கே கலைக்‌ஷனை பார், இங்கே ஹவுஸ்புல் என்று நிறைய நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படி ஹவுஸ்புல்லாக ஓடிய தியேட்ட்ர் அதிபர்கள்தான் இப்போது மொத்தமாய் கடந்த ஆறு படங்களின் மூலமாய் சுமார் முப்பது கோடிக்கும் மேலாக நஷ்டமடைந்திருப்பதாய் சொல்லி பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்கள். ஒரு படம் வெற்றிபடமா இல்லையா என்பதை பத்திரிகையில் வரும் விளம்பரமோ, முதல் ரெண்டு வாரம் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஹவுஸ்புல்லாக ஓடுவதிலோ, மற்ற பத்திரிக்கை நண்பர்கள் இவ்வளவு கலெக்‌ஷன், அவ்வளவு கலெக்‌ஷன் என்று தங்கள் பத்திரிக்கைக்கு ரிப்போர்ட் வ்ந்திருக்கிறது என்று சொல்வதை வைத்து நிர்ணையிக்க முடியாது. எங்களை போன்ற நிஜ விநியோகஸ்தர்களுக்குத்தான் தெரியும் கை சுட்டுக் கொண்ட வலி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார ஜோக்
டாக்டர் எனக்கு ஒரு வாரமாய் டயரியா.. என்ன செய்யறதுன்னுனே தெரியலை..
நீ லெமன் யூஸ் செஞ்சியா?
செஞ்சேன் டாக்டர் ஆனா எடுத்தவுடனே மீண்டும் ஸ்டாப் ஆக மாட்டேங்குது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏ ஜோக்

செக்ஸின் போது பெரும்பாலான பெண்கள் கூறுவது என்ன என்று ஆராய்ந்த போது, பத்து சதவிகித பெண்கள் “வலிக்கிறது சீக்கிரம்” என்றும், இன்னும் பத்து சதவிகித பெண்கள் “ம்.. இன்னும் வேகம்” என்றும் மீதியிருக்கும் என்பது சதவிகிதத்தினர் சொன்னது “சீக்கிரம் என் வீட்டுக்காரர் வந்திருவார்..” $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 
இந்த வார சந்தேகம்.
அமெரிக்கர்கள் பமீலா அண்டர்சன் படம் போட்ட ஸ்டாம்பை ஏன் வித்ட்ரா செய்திட்டாங்க தெரியுமா?

பின்ன ஸ்டாப் ஒட்டுறதுக்கு பின்பக்கம் நக்காம வேற பக்க நக்க ஆரம்பிச்சா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கேபிள் சங்கர்

May 29, 2010

சிங்கம்- திரை விமர்சனம்

singam வழக்கமாய் எம்.ஜி.ஆருக்கு பிறகு வெகு சில நடிகர்களுக்கே 25,50,100வது படமெல்லாம் ஹிட்டாகியிருக்கிறது. சூர்யாவிக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது போல. வழக்கமாய் யாராவது வேண்டாம் என்று ரிஜெக்ட் ஆன ப்ராஜெக்டை இவர் எடுத்து நடித்தால் அது ஹிட்டாகிவிடும்.  இது விஜயால் நிராகரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்.
singam_movie_posters உள்ளூரிலேயே போஸ்டிங் வாங்கிக் கொண்டு சப் இன்ஸ்பெக்டராய் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் சூர்யா, இவருக்கு சமமந்தமேயில்லாத சென்னையில் தாதாகிரி செய்து கொண்டிருக்கு பிரகாஷ்ராஜ், இவர்கள் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதில் கடைசியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதை தான் என்றாலும் சும்மா சரவெடி போல படபடவென வெடிக்கிறது சிங்கம்.
singam-movie-stills-12 உலக லெவலில் ஒரு மசாலா படம் வெல்வதற்கு மிக முக்கியமான விஷயம் வில்லன் கதாபாத்திரம் தாம். அது காத்திரமாக இருந்தால் நிச்சயம் ஒரு ஹீரோயிச படம் வெற்றி பெற்றுவிடும் அது எவ்வளவு மசாலாவாக இருந்தாலும். உதாரணத்துக்கு, ஆர்னால்டின் பிரேட்ர், டெர்மினேடர் போன்ற படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.ஏன் நம்ம விஜயின் திருப்பாச்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் வில்லன்கள் காத்திரமாக இருந்ததால் தான் படமும் விறுவிறுவென போனது. அதே போல் இப்படத்தின் முதுகெலும்பு பிரகாஷ் ராஜ். மனுஷனோட பிரசன்ஸ் அட்டகாசம்.
Singam-movie-wallpapers சூர்யா படம் முழுவதும் ஹரியின் எல்லா படங்களில் வரும் வழக்கம் போல நிறைய பேசுகிறார். கோபப்படுகிறார், ஆக்ரோஷமாய் சண்டையிடுகிறார், காதலிக்கிறார், துடிக்க, துடிக்க, மிடுக்காய் நடக்கிறார். ஒரு பக்கா மசாலா படத்துக்கு தன்னை தயார் செய்து கொண்டு கண்முன்னே நிற்கிறார்.
படத்துக்கு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் ம்ஹும்.. அனுஷ்கா.. அம்மணியின் அந்த உயரமும், வாளிப்பான உடலும், இடுப்பும், ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஒரு டூயட்டில் பார்க்கிறவர்கள் ராத்திரி தூங்கினார் போலத்தான்.
Singam-movie-wallpapers-1 வர வர விவேக் இன்னொரு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிவருகிறார். ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். தேவிஸ்ரீபிரசாத்தின் பாடல்கள் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. இயக்குனருக்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர் பிரியனும் எடிட்டர் விடிவிஜயனும் தான். அவ்வளவு வேகமான பரபரக்கும் கேமராவும், எடிட்டிங்கும். முக்கியமாய் சண்டைகாட்சிகளும், பாடல் காட்சிகளிலும் சொல்லலாம்.

கதை திரைக்கதைவசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஹரி.. நிச்சயமாய் இவரது எல்லா படங்களிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. படம் பார்த்து விட்டு வெளியே வந்தால் தான்  ஆங்காங்கே இருக்கிற இண்டு இடுக்கு எல்லாம் புரியும். தியேட்டரில் அப்படியே உட்கார வைத்துவிடும் திறமை அவருக்கிறது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். சூர்யா, பிரகாஷ் ராஜ் இருவருக்கும் இடையே நடக்கும் டக் ஆப் வாரில் பல இடங்களில் லாஜிக்  மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. முக்கியமாய் முன் பாதியில் வரும் காதல் காட்சிகள், அனுஷ்கா இவரை பார்ப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதையாவ்து சாக்கு சொல்லி வருவதும், அதற்கு இவர் அவரிடம் கேள்வி கேட்டே பிரச்சனையை சால்வ் செய்வதும், க்யூட் அண்ட் இன்ட்ரஸ்டிங்.. முக்கியமாய் அவரை அடித்தற்காக அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்கும் இடம். அதே போல சென்னைக்கு மாற்றலாகி வந்து பிரகாஷ் ராஜின் இம்சைக்கு நொந்து போய் வேலையை விட்டு போகிறேன் என்று சொல்லுமிடம், என்று ஆங்காங்கே சரியான விகிதத்தில் சரியான மசாலா கலவையை கலந்திருக்கிறார் ஹரி. முக்கியமாய் படம் நெடுக வில்லன் அவன் ஒரு சாணக்யண்டா.. வெண்ணைய்டா.. தீரண்டா சூரண்டா என்று தனியாக ஹீரோவை பத்தி புலம்பவில்லை.
singam-wallpaper படத்தில் மைன்ஸே இல்லையா என்றால் அது நிறைய இருக்கிறது. முக்கியமாய் லொட, லொட வசனங்கள், ஒரு சில டெம்ப்ளேட் காட்சிகள்,கும்பல் கும்பலாய் குடுபங்கள், ஏசியிடம் பேசி நடுத்தெருவுக்கு தள்ளும் இன்ஸ்பெக்டர், அப்புறம் ஹரி ஸ்பெஷாலிட்டியான வேட்டி சட்டை அடியாட்கள், சுமோ பறப்பது, அடிச்சா நூறு அடி தூரம் போய் விழுவது போன்று பல விஷயங்கள் இருந்தாலும் விறுவிறு திரைக்கதைக்காக மன்னிக்கலாம்.
நிச்சயம் இப்படம் சூர்யாவை ஒரு மாஸ் ஹிரோ லெவலுக்கு உயர்த்த போவது நிச்சயம். அதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. இன்னொரு விஜய்,விஷால் போல உருவாகிவிடுவார் போலிருக்கிறது எனப் பயமாய் இருக்கிறது.

டிஸ்கி: சூர்யா இம்மாதிரி படங்களில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரியான படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் இடையே குறைந்த பட்சம் நான்கு படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் இன்னொரு அஜித், விஜயாக பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். ஜாக்கிரதை... நல்ல வேளை விஜய் இப்படத்தை ஒத்து கொள்ளவில்லை.. அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்.
சிங்கம்- கரம் மசாலா..
கேபிள் சங்கர்

May 28, 2010

ரீவைண்ட்

இந்தியாவில் குறிப்பிட தகுந்த சிறந்த இயக்குனர்களில் பாசிலும் ஒருவர். பாசிலின் வருஷம்16, பொம்முகுட்டி அம்மாவுக்கு,பூவிழி வாசலிலே, போன்ற  படங்களினால் அவர் மேல் அபரிமிதமான காதல் இருந்த கால கட்டம். ஏனென்றால் அவரது படங்களில் இருக்கும் ஒவ்வொரு சின்ன கேரக்டரும் மக்களின் மனதில் நிற்கும் கேரக்டர்களாக வலம் வரும் கேரக்டர்களாக இருக்கும் என்பதால் நான் நடித்து கொண்டிருந்த காலத்தில் பாசில் “ஒரு நாள் ஒரு கனவு” படத்தை ஆரம்பித்தார். அப்போது அவரது அலுவலகம் அசோக்நகரில் போஸ்டல் காலனியில் இருந்தததாய் ஞாபகம். தொடர் முயற்சிக்கு பின்பு அவரை பார்க்க முடியாவிட்டாலும் ஒரு வழியாய் என் போட்டோவை அவர்கள் அலுவலகத்தில் சேர்த்துவிட்டேன்.

எனக்கு தெரிந்து பாசில் என்றில்லை எந்த மலையாள திரைப்பட இயக்குனர் தமிழில் படம் செய்தால் அதில் பிரதான கேரக்டர்களை தவிர மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஏன் சில சமயம் வசனம் எழுதக் கூட மலையாள ஆட்கள் எழுதி பார்த்திருக்கிறேன்.

பாசிலின் படங்களில் பார்த்தால் அவரது கேமராமேன் அனந்த குட்டன்,  வசனகர்த்தா கோகுல கிருஷ்ணா மற்றும் படத்தில் வரும் பல கேரக்டர்கள் ஆர்டிஸ்ட் கேரளத்துகாரர்களாகவே இருந்ததை மறுக்க முடியாது. இது அவரை மட்டுமே குறை சொல்வதற்காக சொல்லவில்லை. இது தான் அவர்களது வழக்கம். தமிழ் நடிகர்களில் சார்லி மட்டும் இவர்களது லிஸ்டில் இருப்பது ஒரு அதிசயம்.

அப்படியிருக்க ஒரு நாள் எனக்கு அந்த கம்பெனியிலிருந்து கால் வந்தது. ”நான் பாசில் சார் கம்பெனியிலிருந்து மேமேஜர் பேசறேன். உடனே டைரக்டர் உங்களை பார்க்கணும்னு சொல்றாரு.. வர முடியுமா..? ஒரு நல்ல கேரக்டர் ஓகேண்ணா ஐந்து நாள் கேரளாவில ஷூட்டிங். உடனே வாங்க” என்று அவசரபடுத்தினார்.

எனக்கு அன்றைக்கு வேறு ஒரு படத்துக்கு தேதி கொடுத்திருந்தேன் அதனால் நாளை வரலாமா என்று கேட்டபோது.. “அதெல்லாம் முடியாது சார். சார் நாளைக்கு கிளம்பிவிடுவார். உடனே வாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் இதுவரை கேள்விபட்ட வரையில் மலையாள நடிகர்கள் தவிர சற்றே பெரிய கேரக்டர்களுக்கு வேறு ஆட்களை தேர்வு செய்ததில்லை. இருந்தாலும் மனதில் ஒரு சின்ன நப்பாசையினால் அன்றைக்கு நான் நடிக்கவிருந்த “தமிழகம்” படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் வாங்கிக் கொண்டு பிரசாத் லேபுக்கு போனேன்.

மேனேஜர் என்னை பார்த்ததும், “போட்டோவுல கொஞ்சம் செகப்பா இருந்தீங்க.?” என்றபடி சார் உள்ளே இருக்காரு இருங்க சொல்றேன். என்று உள்ளே சென்றவர் மீண்டும் திரும்ப வந்து உள்ளே ராஜா சார் கம்போஸிங் நடக்குது, ஓரமா வெயிட் பண்ணுங்க.. சார் கூப்பிடுவாரு. என்று சொல்லிவிட்டு  எனக்கோ ஒரே சந்தோசம் ராஜா சார் கம்போஸிங்கை நேரில் பார்க்க போகிறேன் என்று உள்ளே நுழைந்தேன். உள்ளே ராஜா சார், வாலி, பாசில் ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள். மயிர்கால்கள் எலலாம் புல்லரிப்பில் குத்திட்டு நின்றது. தொடர்ந்து டூயூன்களை வாசித்து கொண்டிருந்த இசைஞானி சிறிது ப்ரேக் எடுத்துக் கொள்ள, அங்கே நின்றிருந்த என்னை பாசில் பார்த்து பேர் என்ன என்று கேட்டார் சொன்னேன். சரி சொல்லி அனுப்புகிறேன் என்றார்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம். அப்புறம் வா.. சொல்லி அனுப்புகிறேன். மைண்ட்ல வச்சிருக்கேன் என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் சகஜமே..

அதற்கப்புறம் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனக்கு சொல்லப்பட்ட கேரக்டரில் ஒரு மலையாள நடிகர் நடித்ததாக கேள்விபட்டு,  என் மனதின் ஆதங்கம் தாங்காமல் அந்த மேனேஜருக்கு போன் செய்தேன் “சார்.. என்ன சார். ஏன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்?” என்று கேட்டேன்.

“நீங்க தமிழா..? படத்தில கொழுக்கு மொழுக்குன்னு இருக்கிறத பார்த்துட்டு மலையாளின்னு நினைச்சி கூப்பிட்டாரு..” .

நான் மிகவும் வருத்தப்பட்டேன். இவர் மட்டுமல்ல மலையாளத்திலிருந்து வரும் எல்லா இயக்குனரும் இதே விஷயத்தைதான் தொடர்கிறார்கள். நிச்சயம் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதற்காகவோ, நான் ஒரு சிறந்த நடிகன் என்று பீற்றிக் கொள்ளவோ இதை நான் சொலல்வில்லை. அன்றைய நிலையில் நான் ஒரு சாதாரண ஆரம்ப நிலை, வாய்ப்பு தேடியலையும் கேரக்டர் நடிகன் தான்.  மலையாள நடிகர்களும் சிறந்த நடிகர்களே. அவர்கள் வாய்ப்பு ஏன் கொடுக்கவில்லை என்ற காரணம் சொன்னார்களே அதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன்.

பின்னொரு நாளில் நான் உதவி இயக்குனராய் வேலை செய்து கொண்டிருந்த போது, ஒரு கேமரா மேன் என்னை தொடர்பு கொண்டார். தான் ஒரு சேனலில் கேமராமேனாக வேலை செய்வதாகவும், உங்களுக்கு ஏதாவது தொடர்பிருந்தால் எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு ஒரு சிடியை கொடுத்தார். அதில் அவர் ஒளிப்பதிவு செய்திருந்த ஒரு குறும்படமும், விளம்பர படமும் இருந்தது. அவரது ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. பின்னொரு நாளில் என்னுடய முதல் குறும்பட வாய்ப்பு கிடைத்த போது ஞாபகமாய் நான் அவரை பயன் படுத்திக் கொண்டேன். அவர் ஒரு மலையாளி. இதை குறிப்பிடுவது கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவரிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் இதை எழுதுகிறேன். அவருக்கும் மனதளவில் மலையாள இயக்குனர்களின் போக்கு வருத்தத்துக்குரியதே என்று சொல்வார். வருத்தப்படுவார். 

நிச்சயம் இது மலையாளிகளுக்கு எதிரான துவேசம் எழுப்பக்கூடிய பதிவு அல்ல. என் மன வருத்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு. சினிமா ஒன்றில் தான் பல வருடங்களாய் ஜாதி, இன, துவேஷமில்லா ஒரு அணியாக இருந்து வந்தது. ஆனால் இவர்களின் வருகைக்கு பிறகு. கொஞ்சம் கொஞ்சமாய் ஜாதி, இன, அணிகள் உருவாக ஆரம்பித்து, வருத்தத்துக்குரிய விஷயமாக வளர்ந்து வருகிறது.சில வருடங்களுக்கு முன்  சுமார் இருபது நாடார்கள் எலலாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்கள், அதில் இயக்குனர் முதற் கொண்டு முடிந்த வரை எல்லா முக்கிய டெக்னீஷியன்கள் நாடார்களாய் பார்த்து தேர்ந்தெடுத்தார்கள். நல்ல வேலை படம் ஓடாததால் அடுத்த படம் தயாரிக்கவில்லை. இப்படி பட்ட நிலை உருவாகாமல் தடுக்க ஜாதி, இன, மத துவேஷத்தை அட்லீஸ்ட் திரை துறையிலாவது தவிர்ப்போமே..

திறமை எங்கிருந்தாலும அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நம் ஆட்களை போல மற்ற மாநிலத்தவரும் நம் ஆட்களின் திறமைகளை மதித்து வாய்பளித்தால் இன்னும் நன்றாக இருக்குமே..? இது என் தாழ்மையான வேண்டுகோள்.

May 27, 2010

சாப்பாட்டுக்கடை

பல நேரங்களில் பசிக்கு நாம் சாப்பிடும் போது ருசி பார்ப்பதில்லை. அப்படி ஒரு அவசரத்தில் பசிக்காக சாப்பிடும் போது அவ்வுணவு ருசியாய் அமைந்துவிட்டால் அத்தருணம் அருமையானதாகிவிடும். மீண்டும் மீண்டும் அவ்வுணவகத்தை தேடிப் போக வைத்துவிடும்.
Photo0056 அப்படி ஒரு பசி வேளையில் போய் இம்பரஸ் ஆன உணவகம் தான் சென்னை செனடாப் ரோடில் உள்ள தாபா எக்ஸ்பிரஸ் என்கிற பஞ்சாபி உணவகம். இவர்கள் மதிய வேளையில் 80 ரூபாய்க்கு அன்லிமிட்டட் வெஜ் பப்பே.. அளிக்கிறார்கள். போனவுடன் நாக்கூறும் சூடான ஜிலேபி. ஜிலேபியை சூடாக சாப்பிட்டிருக்கிறீர்களா?  தேவாம்ரிதமாய் இருக்கும். அதன் பிறகு நான், பட்டர் நான், புல்கா, ரோட்டி என்று கலந்து கட்டி ரோட்டி அயிட்டங்கள், அதற்கு இரண்டு சைட்டிஷ்கள், ஒரு ட்ரை, ஒரு க்ரேவி, ஒரு டால், அது மட்டுமில்லாமல் ஒரு சைனீஷ் சைட்டிஷ், ஒரு பிரியாணி ரைஸ்,அல்லது புலாவ், நூடூல்ஸ், வெறும் சாதம், தயிர்சாதம், ஊறுகாய், Salad என்று வரிசை கட்டி நிற்கும் உணவுகள். ஒவ்வொன்றும் ஒரு சுவை. சாப்பிட்டு விட்டு ஒரு லஸ்ஸியும் ஸ்வீட் பீடாவும் போட்டால்.. ம்ம்ம்ம்ம். டிவைன். இவை ரெண்டும் பப்பேயில் வராது. என்பது ரூபாய்க்கு அருமையான லஞ்ச்.. என்ன குடிப்பதற்கு வெறும் பில்டர் வாட்டர் வைக்கிறார்கள். அதற்கு பதிலாய் நல்ல கேன் வாட்டரை கொடுக்கலாம்.
 Photo0055

இரவு வேளைகளில் பஞ்சாபில் உள்ள தாபாக்கள் போல கயிற்றுக் கட்டில் ஒரு சிறிய டேபிளில் வெட்ட வெளியில், பக்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றுக்கு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் ஒரு சந்தோஷத்தை அனுபவித்து பார்த்தால் தெரியும். இதை தவிர ஏஸி ஹாலும் இருக்கிறது. இவர்கள் மதியத்தில் மட்டுமே வெஜ் பப்பே அளிக்கிறார்கள். இவர்கள் நான்வெஜ் பஞ்சாபி அயிட்டங்களும் பிரபலமானவை.. முக்கியமாய் முர்க் மசாலாவும் அட்டகாசமாய் இருக்கும். Have A Try.

கேபிள் சங்கர்

May 26, 2010

கொலை கொலையாம் முந்திரிக்கா- திரை விமர்சனம்

Kola Kolaya Mundhirika 12 காமெடி படமெடுக்க வெறும் கிரேசி மோகன் மட்டுமிருந்தால் பத்தாது. நல்ல திரைக்கதையாசிரியரும், அதை வெளிப்படுத்தும் நடிகர்களும் முக்கியம் என்பதை இப்படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

கிரேஸி மோகனின் வசனங்கள் எல்லாமே கமல் நடித்த படங்களில் மட்டும் மிளிர்வதன் காரணம் என்ன என்பதை இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அரத பழசான ஆள் மாறாட்ட கதை. ஒரு சேரின் உள்ளே வைக்கப்பட்ட வைரத்துக்காக இருபது வருடங்களுக்கு பின் நாசூக்கு திருடனான கிருஷ்ஷும், இன்னொரு நாசூக்கு திருடியான வேணியும் அலைய, அந்த வைரத்துக்காகவே இருபது வருஷமாய் அலையும் ஆனந்தராஜ் குழு அலைய, சம்பந்தமேயில்லாமல் எல்லாரையும் விட்டு பிடிக்கும் குடாக்கு போலீஸு ஜெயராம் இவர்களை துரத்த, என்று ஒரு காமெடி படத்துக்குண்டான அத்துனை லாஜிக் மீறல்களுடன் இருக்கிறது கதை.
Kola Kolaya Mundhirika movie காமெடி செய்வதற்கான அத்துனை சந்தர்ப்பங்கள் இருந்து ஆங்காங்கே கிச்சு, கிச்சு மூட்டுமளவுக்கு இருக்கிறதே தவிர வாய்விட்டு சிரிக்க வைக்க வில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கிரேசி வந்தவுடன் தான் விழுந்து விழுந்து சிரிக்க முடிகிறது. அதிலும் ஆர்டர்…ஆர்டர் என்று டேபிளில் இருந்த காது மிஷினை அவர் உடைத்து விட, மையமாகவே வக்கீல்களின் வாதத்தை கேட்டு, பக்கத்திலிருந்த ஆர்டலியை வைத்தே சமாளிப்பதாகட்டும் அட்டகாசம்.

வழக்கமாய் அமெரிக்க மாப்பிள்ளையாய் வரும் கார்த்திக் குமாருக்கு இதில் முழு முதல் கதாநாயக வேஷம். மனுஷனுக்கு நடிக்க பெரிய வாய்பில்லாவிட்டாலும், வந்த வரை முயற்சித்திருக்கிறார். நிச்சயம் இவர் சரியான படங்களை தேர்வு செய்தால் நன்றாக பிரகாசிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

கதாநாயகி சிக்‌ஷா தமிழ் தெரிந்த பெண் போலிருக்கிறது. இவரும் எம்.எஸ்.பாஸ்கரும் பேசும் டயலாக்குகள் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்ட வைக்கிறது.
Kola-Kolaya-Mundhirika-02 இவர்களை தவிர எம்.ஆர்.ஆர்.வாசு, ஆனந்தராஜ், டெல்லி கணேஷ், ஜெயராம், வையாபுரி என்று நிறைய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் பெரியதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை என்றுதான் சொலல் வேண்டும். ஜெயராமுக்கு பக்கதில் கமல் இருந்தால்தான் சரியாய் காமெடி வரும் போலருக்கிறது.

செல்வகணேஷின் இசையில் பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. வேணுவின் ஒளிப்பதிவு ஓகே.

படத்தில் பெரிய லெட்டவுனே திரைக்கதைதான். பரபரப்பாக போக வேண்டிய காட்சிகளெல்லாம் இழுவையாய் இருக்கிறது. படம் முழுவதும் ஒரு நாடகம் பார்த்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை

கொலை கொலையாம் முந்திரிக்கா – ம்ம்ம்ம்ம்ம்…ஓகே.

கேபிள் சங்கர்

May 25, 2010

Kites –2010

kites-jun1st-wallpaper03 சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் தயாரிப்பிலிருந்த படம். இப்படத்தின் ப்ரோமோஷனை உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கேங்ஸ்டர், லைப் இன் மெட்ரோ படங்களின் இயக்குனர் அனுராக் பாசுவின் அடுத்த படம்.
kites-movie-wallpaper (4) லாஸ் வேகாஸில் வறுமையின் ஊடே நடனம கற்றுத்தரும் ஜெய் என்கிற ஹிரித்திக், சமயங்களில் இமிக்ரேஷனுக்காக போலி திருமணம் செய்து கொள்பவன். ஹிரித்திக்கை கங்கனா ராவத் காதலிக்க, அவளின் பணத்தை பார்த்த ஹிரித்திக் அவளை காதலிப்பதாக நடிக்கிறான். அவளின் தந்தை கபீர் பேடி ஒரு பெரிய காஸினொவின் ஓனராகவும் மிகப் பெரிய லோக்கல் தாதாவாகவும் இருக்க, அவளின் அண்ணன் திருமணம் செய்யப் போகும் ஸ்பானிஷ் பெண் பார்பரா மோனியை பார்க்கிறான். அவளின் மேல் ஹிரித்துக்குக்கு காதல் பிறக்கிறது. அவளும் கங்கனா ராவத்தின் அண்ணனை பணத்துக்காகத்தான் காதலிக்கிறாள். ஹிரித்திக்கும், பார்பராவும் ஏற்கனவே அவளின் இமிக்ரேஷனுக்காக போலித் திருமணம் செய்தவர்கள் கூட, ஒரு கட்டத்தில் பணமா, அலலது இவர்களுக்குள் இருக்கும் காதலா என்று முடிவெடுக்க வேண்டியை சூழ்நிலையில் காதல் தான் என்று முடிவெடுத்து ஓடிப் போகிறார்கள். க்ளைமாக்ஸ் என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.
kites-movie-wallpaper (1) ஹிரித்திக் போன்ற ஒரு ஹீரோவுக்கு இப்படி ஒரு கேரக்டரைஷேஷன் இண்ட்ரஸ்டிங். மிக அழகாக நடனமாடுகிறார். அற்புதமான உடல், மற்றும் உடல் மொழி, அனைத்தும் அருமை.
kites-movie-wallpaper (2) ஸ்பானிஷ் காதலியாக வரும் பார்பரா மோரியை பார்த்ததும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறார். அதிலும் அவர் கடகடவென பேசும் ஸ்பானிஷ் மொழியாகட்டும், இவர் என்ன பேசுகிறார் என்பதை புரியாமல் முகத்தில் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் ஆகட்டும் ச்சோ..க்யூட்.
kites-movie-wallpaper (3) அனுராக் பாசுவின் ஆஸ்தான கதாநாயகி கங்கனா ராவத் இதில் இருக்கிறார். பெரிய கேரக்டர் இல்லையென்றாலும் ஹிரித்திக்கை செட்யூஸ் செய்ய முயற்சிக்கும் காட்சியில் மனதில் நிற்கிறார்.
kites-wallpaper-03 நான் லீனியர் பாணி திரைக்கதை ஆரம்பத்தில் ஆர்வத்தை அதிகப்படுத்தினாலும், கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்லோவாகி, அதன் போக்கில் மேலும் மெதுவாகி போய்விடுகிறது. திரும்ப, திருமப், காதல், மோதல், சேஸிங் என்பதெல்லாம் மிகவும் சொங்கிப் போய்விடுகிறது. ஹிரித்திக், பார்பரா காதல் காட்சிகளில் டெப்த் குறைவாக இருப்பதாலும், மிக இயல்பாய் யோசிக்கக்கூடிய காட்சிகளாலும், ஒரு கட்டத்திற்கு பிறகு சுருதி குறைந்து விடுகிறது.
kites-wallpaper பாராட்டபடவேண்டிய ஒருவர் யாரென்றால் அது ஒளிப்பதிவாளர் தான். அழகான டோன், சேஸிங் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாமே அருமை. மிகவும் குறிப்பாய் சொல்லும் படியான காட்சி க்ளைமாக்ஸ் காட்சி. அதே போல் எடிட்டரும் பாராட்டபட வேண்டியவர் தான்.
kites-movie-wallpaper ராக்கேஷ் ரோஷனின் இசை ஓகே.. பெரிதாய் இம்பாக்ட் கொடுக்காவிட்டாலும். தொந்தரவாக இல்லை. அத்தோடு காதல் கதையில் க்ளைமாக்ஸ் இப்படத்திற்கு ஒத்து வரவில்லை. ரொம்பவும் ஆண்டிக்காக இருக்கிறது.

Kites- டீல் அந்துகிச்சு..

கேபிள் சங்கர்

May 24, 2010

கொத்து பரோட்டா-24/05/10

மங்களூர் விமான விபத்து செய்தி மனதை உலுக்கியது. இறந்தவர்களின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களது பாட்டி ஒருவர் இறந்ததுக்காக கிளம்பி வந்த நேரத்தில் இக்கோர விபத்து நடந்திருக்கிறது. அதே போல தன் தந்தையின் சாவுக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைத்து வந்த ஒருவரும் இறந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். முடிந்த வரை அதிகப்படுத்தியே செய்திகளில் சொல்கிறார்கள். ஒரு வேலை அதிகமாச் சொல்வதுதான் பத்திரிக்கை, மற்றும் செய்திகளை பார்க்க வைக்கும் உத்தியோ.. பர்வர்ஷன் என்பது இதுதானோ..?
******************************************************************
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நான், அப்துல்லா, மணிஜி, நர்சிம், வண்ணத்துபூச்சி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டோம். வழக்கம் போல ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லிவிட்டு 12.30 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். விடியற்காலை மூணு மணிக்கு முடிந்தது. அந்த அகால நேரத்திலும், கோவையிலிருந்து வந்திருந்த இண்ட்ர்ன்ஷிப்புக்காக வந்திருந்த மாணவிகள் ப்ரெஷ்ஷாக இருந்தது கொடுவாயில் கொட்டாவிடும் நேரத்திலும் சந்தோஷமாய் இருந்தது.
******************************************************************
இந்த வார ஹிட் மேக்கர்

    


******************************************************************
இந்த வார குறும்படம்
கார்த்திக் சுப்புராஜின் ஆங்கில குறும்படம்.. கொஞ்சம் நீளமாக இருந்தாலும், கருத்து சொல்லியிருக்கிறார்.

*******************************************************************
இந்த வார காமெடி
நே
ற்று சன் டிவியில் சிங்கம் ஆடியோ ரீலீஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.  நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொருவரும், கலாநிதி மாறனை பற்றியும், சன் டிவியை பற்றியும் சொம்படித்தார்கள். அவர்கள் அடித்த ஒவ்வொரு சொம்புக்கும் பால்கனியில் ஒரு கூட்டத்தை உற்சாகமாய் எழுந்து நின்று கத்த சொல்லி படமெடுத்து காட்டினார்கள். இதில் காமெடி என்னவென்றால் எல்லா சொம்புக்கும் கத்தி உற்சாகபடுத்தியவர்கள் ஒரே குழுவினர்தான். அதை வேறு வேறு ஆங்கிளில் ஒளிபரப்பி ஏதோ சன் டிவியென்றால் மக்களிடையே ஒரு ஆர்பரிப்பு இருக்கிற மாதிரி தோற்றத்தை உண்டு பண்ண இந்த ட்ரிக்.. கஷ்டம்டா.. சாமி.. மக்கள் தெளிவாகி ரொம்ப நாளாச்சு டோய்..
*******************************************************************
இந்த வார கேள்வி
ஒரு பொண்ணு கால்ல விழும் போது என்ன தெரியும்?

அந்த பொண்ணோட கலாச்சாரம் தெரியும். நீங்க வேற எதையாவது நினைச்சிருந்தீங்கன்னா.. அதிலேர்ந்து உங்க கலாச்சாரம் தெரியுது..:)
*******************************************************************
இந்த வார தத்துவம்
மனித வாழ்க்கையில் இரண்டு முக்கியமான தருணங்கள். ஒன்று மனிதனாய் பிறப்பது. இரண்டாவது தான் ஏன் பிறந்தோம் என்பதை நிருபிக்கும் போதும்.
******************************************************************
இந்த வார விளம்பரம்
இண்ட்ரஸ்டிங்கான விளம்பரங்கள்

*******************************************************************
ஜோக்
அம்மா: திப்புசுல்தான் யாரு..?

பையன் : எனக்கு தெரியாது.

அம்மா: ஒழுங்கா பாடத்தில கவனம் வை அப்போதான் தெரியும்

பையன்: பூஜா ஆண்டி யாருன்னு தெரியுமா?

அம்மா : தெரியாது.

பையன் : அப்பா கிட்ட கவனம் வை அப்போ தெரியும்.
*******************************************************************
ஏ ஜோக்
கடைக்காரரிடம் ப்ரா வாங்க சென்ற பெண்ணிடம் சைஸ் என்ன என்று கேட்க, இருக்கும் எல்லா சைசையும் பார்த்துவிட்டு  “இன்னும் சின்னதா” என்று கேட்டாள் பெண்.

கடைக்காரன் : எதுக்கும் டாக்டர் கிட்ட பாரும்மா.. பிம்பிள்ஸா இருக்கப் போவுது..
*******************************************************************

கேபிள் சங்கர்

May 22, 2010

கனகவேல் காக்க- திரை விமர்சனம்

kanakavel நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட, வெறும் சட்டம், சாட்சி மட்டுமில்லாமல் மனசாட்சிக்கும் இடம் கொடுத்து தீர்ப்பு வர வேண்டும் என்று சொல்லும் படம். 
வேலு ஒரு கோர்ட் டவாலி. முதல் காட்சியிலேயே அவன் மினிஸ்டர் கோட்டா சீனிவாராவை கொலை செய்ய முயற்சிக்க, ஆது மிஸ்ஸாகிவிடுகிறது. பின்பு கோர்ட்டில் நிரபராதி என்று தீர்ப்பாகிய குற்றவாளிகளை தேடித், தேடிக் கொள்கிறான். ஏன் கொல்கிறான்? என்பதை முந்தாள் பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் திரைக்கதை. kanakavel _kakka_movie_stills_photo_gallery_002
கரணின் நடிப்பில் நிறைய இடங்களில் கமலின் பாடி லேங்குவேஜ். அடிப்பார்வை பார்க்கிறார், சம்மந்தமில்லாமல் குத்து பாடலுக்கு ஆடுகிறார். கொலை செய்கிறார். கண்ணில் தண்ணீர் தளும்ப வசனம் பேசுகிறார். சின்ன சின்ன ரியாக்‌ஷனில் இம்ப்ரஸ் செய்ய பார்க்கிறார். ஆனால் என்ன எழவு அவர் கேரக்டர் மேல் ஒரு ஈடுபாடுதான் வந்து தொலைய மாட்டேனென்கிறது.
Kanagavel-Kakka-30-04-Stills-007 கதாநாயகி புதுசு.. நடிப்பு என்பது சாஸ்திரத்துக்கு கூட வரவில்லை. நான் சாகறேன் என்பதை கூட மொன்னையாய் ஒரு முகத்தை வைத்து சொல்கிறார். வில்லன்கள் கோட்டா சீனிவாசராவ், சம்பத, எல்லாருமே படு மொக்கை. சீனுக்கு சீன் வசனம் பேசுவதோடு சரி.

விஜய் ஆண்டனிக்கு ஹிட்மேக்கர் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஒரு பாட்டு கூட கேட்கும்படியாய் இல்லை. முக்கியமாய் பின்னணி இசையில் பல இடங்களில் இந்தியன், ஜெண்டில் மேன் பிட்டுகள். வசனம் பேசும் காட்சிகளில் எல்லாம் இரைச்சலாய் பின்னனி இசை டிஸ்டர்ப் செய்கிறது.
Kanagavel-Kakka-30-04-Stills-020 படத்திற்கு வசனம் பா.ராகவன். வசனம் என்று பெரிதாய் எழுதுமளவுக்கு காட்சிகளின் பலம் இல்லாததால், பெரிதாய் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் ரைமிங்கான வசனங்கள் எடுபடுகிறது. கோட்டா ஒரு இடத்தில் தன் மகனிடம்..”நீ லாயர்.. லீகலை பாத்துக்கோ.. நான் லீடர் இல்லீகலை பார்த்துக்கறேன்”, மயிரை வைத்து பேசுவது போன்ற வசனங்களை சொல்லலாம்.  கோர்ட்டு காட்சிகளில் மனசாட்சியை முன்வைத்து தீர்ப்பு வரவேண்டும் என்று பேசும் காட்சிகளில் ஆங்காங்கே ட்ச்சிங்

புதிதாய் கதை சொல்ல முடியாது. ஆனால் அதை புதுவிதமான திரைக்கதையில் ப்ரசண்ட் செய்ய முடியும். இம்மாதிரியான கதையில் அட்லீஸ்ட் கொலை முயற்சியிலாவது கொஞ்சம் புத்திசாலித்தனத்தை உபயோகபடுத்தியிருக்கலாம். வழக்கமான எலலா மாஸ் ஹீரோ படஙக்ளில் வருவது போன்ற டெம்ப்ளேட் திரைக்கதையினால் ஆரம்ப காட்சியிலிருந்தே கொட்டாவி வர ஆரம்பித்து விடுகிறது. காதல் காட்சிகளாகட்டும், கொலை முயற்சி காட்சிகளாகட்டும், கோர்ட் காட்சிகளாகட்டும் பார்த்து பார்த்து சலித்த காட்சிகள். அதிலும் ஹீரோயினுக்கு காதல் வரும் காட்சி சூப்பர் புதுசு இதுவரை தமிழ் சினிமாவிலேயே வராதது..

க்ளைமாக்ஸ் காட்சியில் நாம் ஏற்கனவே பார்த்த காட்சிகளை மீண்டும் வசனங்களால் பேசி கதையில் வரும் ஜட்ஜுக்கு புரிய வேண்டும் என்பதற்காக பேசுவது வசனம் நன்றாக இருந்தாலும் தெரிந்த விஷயத்தையே மீண்டும் கேட்பது சீரியல் தனமாய் தெரிகிறது. இவ்வளவு வசனம் பேசாமலேயே அந்த காட்சியை புரிய வைத்திருக்க முடியும் இயக்குனர். அதே போல போலீஸ் ஆபீஸர் அதித்யா ஜெண்டில் மேன் சரன்ராஜ் கேரக்டரை ஞாபகபடுத்துகிறார். ரெண்டு சீனுக்கு ஒரு முறை கேஸ் முன்னேற்றம் பற்றியும் அவனை எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று கருவிக் கொண்டிருக்கிறார். கதை முடிய வேண்டும் என்பதற்காக புதிதாய் ஒரு ஆபீசரை கொண்டு வந்து அவர் கரணுக்கு நண்பர் என்று கண்டுபிடிப்பதும், ஏ.கே 74 என்று ஒரு இராணுவத்தில் கூட பயன்படுத்தாத துப்பாக்கி என்று பில்டப் செய்துவிட்டு அது லோக்கல் துப்பாக்கி என்று சொல்வது உட்டாலகடி.
Kanagavel-Kakka-30-04-Stills-019 ஐந்து கொலைகளை செய்த கரண் தான் செய்த கொலைகளை ஒப்புக் கொள்கிற பட்சத்தில், நீதிபதி மனசாட்சி படி அவருக்கு ஐந்துவருட கடுங்காவல் தண்டனை கொடுத்துவிட்டு ராஜினாமா செய்வதும், மனசாட்சி என்கிற பெயரில் டிவியில் கரன் பேசியதை கேட்டுவிட்டு ஊரில் உள்ள எல்லா குற்றவாளிகளும் குற்றத்தை ஒப்புக் கொள்வதும் படத்தில் காமெடி இல்லாத குறை தீர்க்கும் காட்சிகள்.

ப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் நிகழ்வுகள் எல்லாம் பல தெலுங்கு, விஜய்யின் படங்களை தூக்கி சாப்பிட்டுவிடக்கூடிய காட்சிகள்.

பாராட்டபட வேண்டிய விஷயம் என்னவென்றால், நடுவில் காமெடி, கீமெடி போடுகிறேன் என்று மொக்கை போடாதது. முதல் கொலை முயற்சியில் கரண் தோற்றுவிட்டாலும் வேறொருவன் கோட்டாவை கொலை செய்யும் முயற்சியில் ஏ.சியை கொலை செய்ய சொன்னதே  கோட்டா ப்ளான் தான் என்று சொல்லும் இடத்திலும், கோர்ட் ஆர்டலி கேரக்டரை யோசித்த மாதிரி இன்னும் கொஞ்சம் முழுக்க மெனக்கெட்டிருக்கலாம்.
கனகவேல் காக்க – அந்த முருகன் தான் காப்பாத்தணும்.
கேபிள் சங்கர்

May 20, 2010

சொல்லித் தெரியும் மன்மதக்கலை- No Mires Para abajo (2008)

dld செக்ஸை இவ்வளவு இயல்பாக  வக்கிரமில்லாமல் காட்ட முடியுமா? நிர்வாணம் இவ்வளவு அழகா? இவ்வளவு தெய்வாம்சம் இருக்குமா? இவ்வளவு கவிதையாய் உடலுறவை காட்ட முடியுமா? என்று ஆச்சர்ய பட வைத்த மேஜிக்கல் ரியலிச படம்.
dld1 எலாய் 19 வயது இளைஞன். சிமிட்டரியில் செய்யும் சிலை செய்யும் தொழிலை செய்யும், பொய்கால் வைத்து உயர நடந்தபடி விளம்பரங்கள் விநியோகிக்கும் தொழில் செய்கிறான்.  அவனுடய அப்பா இறந்து போகிறார். அப்போதிலிருந்து அவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி வருகிறது. தன் தந்தை தன்னுடன் பேசுவதாகவும், தன்னால் தினமும் இற்நதவர்கள் சிமெட்ட்ரிக்கு வெளியே உட்கார்ந்திருப்பதை பார்க்க முடிகிறது என்பதை பற்றியெல்லாம் அவன் அண்ணனிடம் சொல்கிறான். 
dld2ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் தூக்கத்தில் நடக்கும் போது பக்கத்துவீட்டு மொட்டைமாடிக்கு நடந்து போய்விட, அங்கே ஓப்பன் சீலீங் உள்ள ஒரு வீட்டில் ஒரு அழகிய பெண்ணின் படுக்கையறையில் அவள் மேல் விழுகிறான். அவள் பெயர் எல்விரா. அந்த பெண்ணின் பாட்டி பாரம்பர்ய தாந்தரீகங்களில் கை தேர்ந்தவள். எல்விராவுக்கும், எலாயுக்குமான நட்பு இப்படி ஆரம்பிக்க, மெல்ல அது அவர்கள் இருவருக்குமிடையே உடலுறவில் முடிகிறது.
dld4 சொல்லித் தெரிவதில்லை மன்மதகலை என்பது பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். நிஜத்தில் எல்விரா சொல்லிக் கொடுப்பதை தெரிந்து கொண்டால் நிச்சயம் மன்மதக்கலை சொல்லிக் கொடுக்கப்படவேண்டியது என்று புரியும்.
dld5 எல்விராவும், எலாய்யும் அவர்களது குறிகளுக்கு செல்ல பெயர் வைப்பதாகட்டும், அந்த பெயரையே குறிப்பிட்டு பேசிக் கொள்வதாகட்டும், உறவின் இடையே அவர்களுடய பேச்சுகளாகட்டும், 80 முறை செயல்படுத்தும் வரை விந்தை வெளியிடாமல் உறவு கொண்டால் நிச்சயம் ஒரு சிறந்த காதலனாக இருப்பாய் என்று அதற்கான பயிற்சியை கொடுப்பதாகட்டும், 10,20,40,60 என்றும், கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி மேம்பட, மேம்பட, அவனுடய உச்சத்தின் போது அவன் வாழ்நாளில் பார்க்காத பல நாடுகள் மனக்கண்ணில் ஓடவதும், எக்ஸ்டஸிக்கான் இன்னொரு விஷுவல் விளக்கம்.
dld6 இவர்களின் கூடலின் போது பேசிக் கொள்ளும் வசனங்கள் பொயட்டிக்.
“நான் செத்த பிறகு கடவுளை பார்க்க விரும்பவில்லை. இப்போதே நம் உறவின் மூலம் பார்க்க விரும்புகிறேன்.’

“நான் இருவரும் சேர்ந்து மின்சாரத்தை உருவாக்குகிறோம். பயோ எலக்ட்ரிக்ஸிட்டி” என்பது போன்ற குறியீடுகளான வசனங்களும், மிக அற்புதமான ஒளிப்பதிவும், பார்க்கும் திரையை விட்டு கண்ணை அகல விடமாட்டேன் என்கிறது. அவ்வளவு கவிதை. அதிலும் அவர்கள் முழு நிர்வாணமாய் படம் முழுக்க நின்றாலும், கொஞ்சம் கூட அசூசையாகவோ, எரிச்சலோ அடையாமல் விஷுவல் செய்திருப்பது அருமையோ.அருமை..

மாண்ட்ரியல் பட விழாவிலும், மெக்ஸிகன் பட விழாவிலும், சிறந்த இயக்குனர், மற்றும் படத்துக்கான விருதை பெற்றார் இயக்குனர் Eliseo Subiela. படம் முழுவதும் குறியீடுகளாய் பல காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு இளைஞனுக்கு அவனின் எதிர்கால வாழ்வில் சில விஷயங்களை கற்றுக் கொண்ட சந்தோஷமும், பெண்ணின் மீதான மரியாதை மேலோங்கும் என்பது நிச்சயம்.

படத்தின் டோரண்ட் லிங்க: http://thepiratebay.org/torrent/4712129/Dont_Look_Down_(2008)_[DvdRip]_[Xvid]__1337x_-Noir

டிஸ்கி: படம் முழுக்க முழு நிர்வாண காட்சிகள் இருக்கும் அதனால் வீட்டில் டவுன்லோடினால் ஜாக்கிரதை..
கேபிள் சங்கர்

May 19, 2010

Only Because of You

thank-you-come_~15504-13cf ஆம்.. நிச்சயமாய் இது உங்களால் தான் நடந்தது. நீங்கள் இல்லையேல் இது சாத்தியமில்லை. எந்த ஒரு மனிதனின் வெற்றியும் அவன் தன் முயற்சியினால் மட்டும் வெற்றி பெறப்படுவதில்லை. அதன் பின்னால் பல பேருடய, ஆதரவும், அன்பும் இருக்கும். ஆனால் அது வெளியே தெரிவதில்லை. வெற்றி பெற்றவர் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் நான் இன்றைக்கு என்னை உற்சாகப்படுத்தியவர்களை, கூடவே இருந்து பயணித்தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளேன்.

பத்து லட்சம் ஹிட்ஸ்களை வாரி வழங்கி மேலும் ஆதரவளித்துவரும் உங்களுக்கு என் நன்றிகள். தமிழ் பதிவுலகில் யுவகிருஷ்ணாவுக்கு பிறகு பத்து லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்திருப்பது எனக்குத்தான் என்று நினைக்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில்.

சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் இரண்டு புத்தகங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.


Friends18.com Picture Comments


இந்த சந்தோஷ தருணத்தில் எனக்கு முதல் முதலாய்  தொடர் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த யூர்கேன் க்ரூக்கர், ராஜ், ஆகியோரை நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன். மேலும் தொடர்ந்து பின்னூட்டமிட்டும், போனிலும், நேரிலும், மின்னஞ்சலிலும் ஊக்கப்படுத்திய சக பதிவர்கள், வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் என்  நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றிகள் பல... It Happend Only Because Of You….







கேபிள் சங்கர்

May 18, 2010

தற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை

ஆம் நண்பர்களே.. தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வழக்கமாய் இவர்கள் இம்சை தாங்காமல் மக்கள் தானே செய்து கொள்வார்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இந்த விஷயம் ஏதோ  காவல்துறையை கிண்டல் செய்ய சொல்லவில்லை. நிஜமாகவே தமிழக் காவல் துறையில் தற்கொலைகள் பெருக ஆரம்பித்துவிட்டன.

நேற்றைய பேப்பரில் மட்டும் சுமார் மூன்று தற்கொலைகள். ஒருவர் இளைஞர். இவர் இத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டதே இவரது குத்துசண்டை சான்றிதழ்களை வைத்துதான். இவர் இத்துறைக்கு தேர்வானதும், பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவதை கனவாக கொண்டிருந்த வேளையில் உயரதிகாரிகள் இவரை குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்ததால்,மனம் நொந்து, மன உளைச்சலால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இன்னொருவர் சுமார் 58 வயதான உதவி சூப்பிரண்ட். இவர் ஒரு ஹோட்டல் ரூமில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னை ஒரு பெண் தொந்தரவு செய்வதால் அந்த மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து, அவளிடமிருந்து விலகியிருந்திருக்கிறார். தன்னோடு கணவன் மனைவி போல் வாழ்ந்துவிட்டு தன்னை நிர்கதியில் விட்டுவிட்டதாக புகார் கூட செய்திருக்கிறார் அப்பெண்மணி. விஷயம் இப்படியிருக்க எங்கே தான் மாட்டிக் கொண்டு பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து தற்கொலை செய்துள்ளார் இவர்.

இன்னொருவருக்கு வேறு பிரச்சனை. இவரது மகள் சென்ற மாதம் தீடீரென இறந்துவிட, அந்த துக்கம் தாங்காமல் மனைவி மக்கள் வெளியே சென்றிருக்கும் வேளையில் தூக்கு மாட்டி இறந்திருக்கிறார்.

என்ன தான் ஒரு பக்கம் காவல்துறையினரின் நடவடிக்கைகளால், மன கசந்திருந்தாலும், அவர்களின் பணிச்சுமையினால் வரும் மனச்சுமை அதிகமே.. என்பதை ஒத்துக் கொள்வேன். ஏனென்றால் என் குடும்பத்தில் என்னுடய தாத்தா ஒரு ரிட்டயர்ட் போலீஸ் ஆபீஸர். அவர் ரிட்டயர்ட் ஆகியும் போலீஸ்காரனாய் வலம் வந்தவர். அவர் சொல்லும் பல விஷயங்கள் அப்பணியில் உள்ள பல இடர்பாடுகளை தெரியபடுத்தியது. இப்போது அதை விட மோசமாய்தான் இருக்கிறது என்பது என் போலீஸ் நண்பர்கள் சொல்ல கேட்கும் போது தெரிகிறது.

ஒரு பக்கம் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு பணியில் சேரும் இளைஞர்கள் வாடிக்கையான ப்ரஷெரால் வாங்கி பழக்கப்படும் அந்த முதல் நாட்களில் அவர்களது மன உளைச்சலை சொல்லி மாளாது.  எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் கை சுத்த பார்ட்டி, ஆனால் இவர் கேஸுக்காக கைதிகளை கோர்டுக்கு ஆஜர் செய்யும் போது அங்கிருக்கும் குமாஸ்தாவுக்கு குறைந்த பட்சம் 25-50 ரூபாய் லஞ்சமாய் கொடுத்தால் தான் அவர்களது கேஸ் கட்டு அன்றைய லிஸ்டில் வரும் இல்லையென்றால் அது வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். இவரும் வேறு வழியில்லாமல் தன் சொந்த காசிலிருந்து கொடுத்து வந்தவர். இப்போது கட்டுபடியாகவில்லை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். அநேகமாய் அடுத்த சில மாதங்களில் மனசாட்சி காணாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது.

இப்படி அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கும்  இவர்களது ப்ரச்சனைகள், இவர்களாகவே பழகிக் கொள்ளும், உணவு பழக்கங்கள், குடி பழக்கங்கள், மற்ற தொடர்புகள் என்று வளர்ந்து உடலும், மனமும் கெட்டு போய், பின்னாளில் ஒரு சிறிய ப்ரெஷர் என்றாலும் தாங்க முடியாமல் இம்மாதிரியான முடிவுகளுக்கு கொண்டு போய் விடுகிறது.

தமிழக அரசு முக்கியமாய் இவர்களுக்கான பணிச்சுமையை குறைத்து, மேலும் கூடுதல் நபர்களை காவல் துறைக்கு தேர்வு செய்து, அரசியல்வாதிகளின் ப்ரெஷர் இல்லாமல், நல்லதொரு  சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்குமானால் நிச்சயம் எதிர்காலத்தில் சிறப்பான காவல்துறையாய் நம் தமிழக காவல் துறை இருக்கும் என்று நம்புகிறேன்.

டிஸ்கி:
முத நாள் நடிகர் வடிவேலு மரியாதை நிமித்தமாய் தலைவரை பார்த்துவிட்டு வந்தார். அடுத்த நாள் சிங்க முத்து கைது செய்யப்பட்டு அர்ஜெண்ட் அர்ஜெண்டாக சிறையில் அடைக்கபட்டதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
கேபிள் சங்கர்

May 17, 2010

கொத்து பரோட்டா-17/05/10


பொறுக்கி பதிவர்கள்!!!!!:)
சென்னை ட்ரக்கிங் கிளப் நேற்று மெரினா முதல் ஈஞ்சம்பாக்கம் வரை கடற்கரைகளை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் அருமையான பணியினை 6-9 மணி வரை செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து பதிவர்கள், மயில் ராவணன், தோழி ஆகியோரும் கலந்து கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்கள். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளூர் ஆள் ஒருவர் இவர்கள் செய்வதை பார்த்து அவரும் தன் பங்குக்கு லோக்கல் ஆட்களை வைத்து ஒரு ரோட்டை க்ளீன் செய்தாராம். மாற்றம் இப்படித்தான் ஆரம்பிக்குமோ..? அரசு ஏன் கடற்கரை பகுதிகளில் நிறைய குப்பை தொட்டிகளை நிறுவக்கூடாது?. குப்பை போடாதே என்று சொல்வதை விட, அதை இம்மாதிரி இடங்களில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு சொன்னால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா?. சிங்கப்பூர் சென்று விட்டு வந்த போது பழக்க தோஷத்தில் கையிலிருந்த பிளாஸ்டிக் பேப்பர் குப்பையை போட குப்பை தொட்டியை தேடினேன் விமான நிலையத்திற்கு வெளியே ஒன்று கூட கண்ணில் படவில்லை. பின்பு இந்திய வழக்கபடி செய்துவிட்டு கிளம்பினேன். சுத்தம், சுகாதாரத்தை பேணும் சிங்கையில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடை செய்ய படவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குஷ்பு தி.மு.கவில் இணைந்திருக்கிறார். இனி தமிழ் கூறும் நல்லுலகத்தில் கற்பு பற்றிய கேள்விகள் ஏதுமிருக்காது. இருந்தாலும் கேட்கமாட்டார்கள். தலைவரே சொல்லிவிட்டார் குஷ்பு முற்போக்கான பெண் என்று. கோர்ட்டும் சொல்லிவிட்டது. இனிமேல் இவரை வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருந்த திருமாவளவன், என்ன செய்வார்? கூட்டணி தர்மம்னு ஒன்ணு இருக்கில்ல..?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
லைவனுக்கு விழா எடுத்து நாளாகிவிட்டதாலேயும், அதை பலர் பல விதததில் விமர்சிப்பதனாலேயும், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பாராட்டுவிழா கும்பல் நேற்று வேறு ஒரு விஷாவை நடத்தி முடித்துவிட்டது. செம்மொழி விழாவுக்கு பாட்டு போட்ட, ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டுவிழா என்று ஒன்றை நடத்தி முடித்துவிட்டது. பாசதலைவனுக்கு சந்தோஷம். கலைஞர் டிவிக்கு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒரு இரண்டு மணி நேர நிகழ்ச்சி தயார். குஷ்புவை தி.மு.கவில் சேர்த்ததற்கு ஏன் கலைதுறையினர் சார்பில் ஒரு விழா நடத்தக்கூடாது..?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிவுலகமும் மற்ற மீடியாக்களும்.
sukumar jpg 
பதிவர்கள் எழுதும் பல விஷயங்கள் பல மீடியா ஆட்களால் படிக்கப்பட்டு வந்து கையாளப்படுகிறதும் உண்டு. என்னுடய விமர்சன வரிகள் பெரும்பாலான பத்திரிக்கைகளில் வருவதை போல. அது போல ஒரு பெட்டிக்கடையில் நின்றபோது அங்கே ஒலித்துக் கொண்டிருந்த எப்.எம்.ரேடியோவில் கிரிக்கெட் பற்றிய ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருந்தது திடீரென டெண்டுல்கரும் டோனியும் பேசிக் கொள்வதை போல ஒரு டயலாக் மேட்டர் ஓட அது அப்படியே நம் பதிவர் சுகுமார் அவர்களின் பதிவில் போட்ட ஒரு விஷுவல் கமெண்ட் பதிவிலிருந்ததுதான். உடனே நான் அவருக்கு போன் செய்து சொன்னேன் மிகவும் சந்தோசப்பட்டார். மீடியாக்கள் மட்டுமல்ல தற்போது அரசு அதிகாரிகள் கூட தமிழ் பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை நான் சில சமயம் நண்பர்கள் சொல்லியும், நேரில் சொல்லிக் கேட்டும் அறிய நேர்ந்திருக்கிறேன். எனவே நாம் எழுதி என்ன கிழியப்போவுது என்று நினைக்காமல் அடிச்சு தூள் பண்ணுங்க.. நண்பர்களே..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செவிக்கினிமை
புழல் திரைப்பட பாடல்கள் கேட்டேன். “திறந்திடு வானே..” கார்த்திக்கின் குரலில் இனிமையான ஷ்யூர் ஹிட். ஆர்கெஸ்ட்ரேஷன் அரேஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கிறது. மூன்றாவது பாடலான “எம்மனச” கார்த்திக் சுர்மதியின் குரலில் அழகான மெலடி. பத்தவச்சிட்ட, என்கிற தமிழ் சினிமா குல வழக்க குத்துப்பாடலும் உண்டு. இசையமைப்பாளர் நல்லதம்பி. ஏற்கனவே டான்சேரா என்கிற படத்தின் இசையமைப்பாளர். இதைவிட முக்கியமான விஷயம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்2வில் கலக்கிய, மீண்டும் கலக்க போகும் ப்ரியங்காவின்  அப்பா. All the Best Both of Them. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார ஆச்சர்யம்
குரோசியா நாட்டை சேர்ந்த பிரானோ செலக் என்பவருக்கு 81 வயதாகிறது. இவரை போல ஒரு அதிர்ஷ்டசாலி உலகில் யாரும் இருப்பார்களா? என்றே தெரியவில்லை. ஏனென்றால் இவர் இதுவரை 7 முறை மரணத்தை வென்றிருக்கிறார். விமானம், ரெயில், என்று எல்லாவிதமான விபத்திலேயும் தப்பியுள்ளார்.  1962ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் ரயில் தடம்புரண்டு 17 பேர் பலியான விபத்தில் இவர் தப்பியுள்ளார். அந்த விபத்து நடந்து ஒரு வருடத்துக்கு பின் விமானத்தில் பயணம் செய்த போது விமானத்டின் கதவு திறந்து கொண்டதால் 19 பேர் பலியானார்களாம். இவர் வெளியே வீசப்பட்ட போது வைக்கோல்போர் மீது வீசப்பட்டதால் பிழைத்துக் கொண்டாராம்.  அதன் பிறகு இவர் பயணம் செய்த பஸ் ஆற்றில் விழுந்த போதும், இவரது கார் தீப்பிடித்து எரிந்த போதும், நடந்து செல்லும் போது பஸ் இவரை இடித்தபோதும், கடைசியாய் 1996ல் இவர் ஓட்டிச் சென்ற கார் ஒரு மலை மீதிலிருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது. அதிலும் இவர் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் தப்பியிருக்கிறார். ஒரு வேளை இவர் தான் குரோசியா எமனோ..!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார தத்துவம்
வெற்றிக்காக காத்திருப்பது எல்லோருக்கும் சகஜமானது. ஆனால் அதற்காக உழைப்பது ஒரு சேம்பியனுக்கான செயல் அதான் சேம்பியனாக இருங்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார “ஸ்பெஷல்” தத்துவம்
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள். அனால் ஒவ்வொரு திருப்தியடைந்த பெண்ணிற்கு பின் ஒரு சோர்வடைந்த ஆண் இருப்பான் – நித்யானந்தா..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார விளம்பரம்




இதை நம்பி ஆக்ஸ் வாங்கி ஏழையானதுதான் மிச்சம்.. ம்ஹும்..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார குறும்படம்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜோக்
எல்லா மருந்துகளுக்கும் சைட் எபக்ட் இருக்கிறது. ஆனால் வயாக்ராவுக்கு மட்டுமே ‘ப்ரெண்ட் எபக்ட்” இருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏஜோக்
பெண் : பைக்கே இல்லை எதுக்குடா ஹெல்மெட் வாங்குற?
ஆண் : நேத்து நீ ப்ரா வாங்கினயே அதை பத்தி  நான் ஏதாவது கேட்டேனா.?
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கேபிள் சங்கர்

May 14, 2010

சாப்பாட்டுக்கடை

Photo0037 சென்னையில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் சாலை சந்திப்பில் உள்ள பார்சன மனரே என்கிற இடத்தில் முன்பு பாலிமர் என்கிற பிரபலமான ஒரு சைவ உணவகம் இருந்தது. சவுத் இந்தியன், நார்த் இந்தியன் என்று இரண்டு வகை உணவுகளை ரொம்ப காலமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் அங்கு “வெஜ் நேஷன்” என்கிற பெயரில் ஒரு ரெஸ்ட்ராரண்ட் ஆரம்பித்திருப்பதாய் போர்டை பார்த்ததும் உள்ளே சென்றால், பழைய பாலிமர் இப்போது “வெஜ் நேஷ்ன்” ஆகியிருந்த்து.Photo0039 உள்ளே நுழைந்த்தும் மாக்டெயில் பார் வைத்திருந்தார்கள். எலலவிதமான் ஜூஸ், மாக்டெயில்களுக்கான பார் போன்ற சீட் அமைப்புடன் விதவிதமான மெனுவுடன். உள்ளே சென்று உட்கார்ந்தவுடன் நல்ல அறுபது பக்க நோட்டு போல மெத்து மெத்தென ஒரு மெனு கார்டை கொடுத்தார்கள். பக்கா வெஜிடேரியன் அயிட்டங்கள் வரிசைகட்டி நின்றது.
Photo0038 குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு குறையாமல் இருந்தது சைட் டிஷ் அயிட்டம் விலையெல்லாம். நான் மீல் பேக்கேஜ் எடுத்துக் கொண்டேன். சவுத் இண்டியன் பேக்கேஜ் 120 ரூபாயும், நார்த் இண்டியன் பேக்கேஜ்130 ரூபாயும். நான் நார்த் இண்டியன்.
Photo0040 சூப், அன்லிமிட்டட் மூன்று விதமான சப்ஜிகள், ஒரு ட்ரை சைட் டிஷ், பச்சடி, மற்றும் ரோட்டி, புல்கா, நான் வகைகள், ஒரு ஸ்வீட், ஒரு சின்ன கிண்ணம் ஏதாவது ஒரு வெஜிடபிள் ரைஸ் என்று நல்ல டேஸ்டியான புட். புல்காக்களும், நான்களும் ரோட்டிகளும் அவ்வளவு சாப்ட் என்றால் அது மிகையில்லை. கூடவே கொடுத்திருந்த மூங்க்தாலும், பன்னிர் மசாலாவும், வெஜிடபிள்குருமாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டது.
Photo0041 நல்ல பசிக்கு அருமையான வெஜிடேரியன் புட். சரவணபவனை விட விலை குறைவுதான். இவர்களுக்கு இன்னொரு ப்ராஞ்ச் திருவான்மியூரில் லாடிஸ் ப்ரிட்ஸ் ரோடில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
கேபிள் சங்கர்

May 12, 2010

Badmaash Company-2010

badmaash-company-32-10x7 மீண்டும் ஒரு அக்மார்க் யாஷ் சோப்ரா படம். உறுத்தாமல் நீதி போதிக்கிற ஃபீல் குட படமெடுப்பதையே கடமையாய் கொண்டவர்கள் யாஷ் சோப்ரா குழுவினர்.
இம்முறை நடிகர் பர்மீத் சிங் டைரக்டராக அவதாரமெடுத்திருக்கிறார். இவர் தில்வாலே தில்ஹனியா லேஜாயேங்கேவில் காஜோலுக்கு மாப்பிள்ளையாய் நடித்தவர்.
badmaash-company-33-10x7ஷாஹித் கபூர் மற்றும் இரண்டு நண்பர்கள் காலேஜ் முடித்து வெளிவந்தவர்கள். இவர்களுக்கு ஒரு டூட்டி ஃபிரி ஷாப் வைத்திருக்கும் கடத்தல் காரன் ஒருவன் நண்பனாகிறான். அவனுடய பொருட்களை கடத்துவதற்காக, பேங்காக் சென்று திரும்ப, போகிற போது விமானத்தில் அனுஷ்கா சர்மாவை சந்திக்க, அப்புறம் என்ன காதல் தான். இப்படி சந்தோஷமாய் போய் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் ஷாஹித்தின் அப்பா அனுபம் கெருக்கு மாரடைப்பு வர, பணமில்லாமல் திண்டாடும் போது முடிவெடுக்கிறார் ஷாஹித். அப்பாவை போல 25 வருஷமாய் பெஞ்சு தேய்க்காமல் சீக்கிரமே பணக்காரனாவது என்று முடிவெடுத்து, புத்திசாலித்தனமாய் ஒரு பெரிய டீலை முடிக்கிறான். நேர்மையாய் சம்பாதிக்காத பணத்தை இங்கே வைக்காதே என்று சொல்லும் கெர், ஷாஹித்தை வெளியேற்றுகிறார்.
நேராக அமெரிக்கா செல்லும் ஷாஹித் குழுவினர் அங்கேயும் சென்று லீகலாய் டகல்பாஜி வேலைகள் செய்ய.. மிகக் குறைந்த நாட்களில் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். சுகமாய் போய் கொண்டிருந்த நேரத்தில் வழக்கம் போல ஷாஹித்க்கு தான் தான் என்ற எண்ணம் வர.. நண்பர்கள் பிரிகிறாரக்ள். காதலி அனுஷ்கா உட்பட.
badmaash-company-37-10x7 அமெரிக்க போலீசால் கைது செய்யப்பகிறார்  ஷாஹித் . கடைசியாய் அவனுக்கு உதவியாய் இருந்த மாமாவுக்கு தொழிலில் பிரச்சனை வர, அதிலிருந்து எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. மீதி வெள்ளிதிரையில்.
கதை களனை ஏன் 1980களுக்கு செல்போன் இல்லாத காலகட்டத்தை வைத்தார்கள் என்பது யாமரியோம் பராபரமே.. அனுஷ்கா சர்மா குட்டி குட்டி ஜட்டி போட்டுக் கொண்டு கவர்சியாய் அலைகிறார். க்ளைமாக்ஸுக்கு முன் பிரிந்து போய் திரும்புகிறார். ஷாஹித்துக்கு நல்ல கேரக்டர். முடிந்த வரை தூக்கி நிறுத்த முயன்றிருப்பதாகதான் தெரிகிறது.
அனுஷ்காவுக்கு பெரியதாய் நடிக்க வேலையில்லாவிட்டாலும், ஐட்டி சைசுக்கு ட்ராயர் போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய நடக்கிறார், திகட்ட, திகட்ட முத்தமிடுகிறார். மற்ற நண்பர்கள் ஓகே.
badmaash-company-41-10x7 இயக்குனருக்கு முதல் படமாய் இருந்தாலும் முடிந்த வரை போர் அடிக்காமல் படத்தை ஓட்டுகிறார்.  முதல் குறுக்கு வழி பிஸினெஸ்ஸாய் ரிபோக் ஷூவை லீகலாய் பேங்காக்கிலிருந்து இறக்குமதி செய்து, வலது பக்க ஷூவை ஒரு  இடத்திலும், இடது பக்க ஷூவை வேறு இடத்திலும் இறக்குமதி செய்து, அதை ஸ்க்ராப்பாக போட்டு கஸ்டம்ஸ் டூட்டி இல்லாமல் அடி மாட்டு விலைக்கு வாங்கி டாக்ஸ் எவேஷன் செய்து சம்பாதிக்கும் ஐடியா அட்டகாசம். ஆனால் மாமாவின் எக்ஸ்போர்ட் ஷர்ட் பிஸினெஸ்ஸை பிக்கப் செய்வதற்காக லிண்டா மூலம் அந்த சர்ட்டை மைக்கேல் ஜாக்சனுக்கு போட்டு அதை வைத்து “Bleeding Madras” என்று அந்த சட்டைக்கு பெயர் வைத்து விற்பதும், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்ததும், புதிய டக்ல்பாஜி வேலையாய் ரியல் எஸ்ட்டேட்டில்  இறங்குவதும், ஒருலட்சம் டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கிய அடுத்த மாசத்திலேயே இரண்டு லட்சம் டாலருக்கு விற்பதும், அதற்கு பேங்க் லோன் கொடுப்பதும் சரியான டகல்பாஜிதான். நம்ப முடியாததது. இருப்பதிலேயே உட்சபட்ச காமெடி. ஷாஹித் திருந்தியவுடன் மணிக்கு பத்து டாலர் சம்பாதிக்கும் துணி ஐயன் செய்யும் வேலை, டெலிவரி பாய் வேலை எல்லாம் செய்வது தமிழ் படத்தை ஞாபகப்படுத்தியது. அதற்கு பின்னணியில் ஹைபிட்சில் பாட்டு வேறு.. செம காமெடி..
Badmaash company – Letter Pad Company.
கேபிள் சங்கர்

May 11, 2010

எண்டர் கவிதைகள்-8

Making_love_is_good_4_by_o0Magicpie0o
உடை களைந்ந உருவம் பார்த்ததும்

ஹைப்போதலமஸிலிருந்து கட்டளை பறக்க


சீறும் பாம்பாய் கிளம்பியெழுந்து


கழுத்து வேர்வை கிறக்கம் ஏற்ற


புற்று தேடி முட்டி மோதி


விரிந்த உலகத்துள்


வெடித்தெழுந்து கிளம்பும் போதும்


போன் பேசிக் கொண்டிருந்தாள்


”சண்டாளி” போச்சு.. இரண்டாயிரம்


கேபிள் சங்கர்

டிஸ்கி: ”பெருவாரியான” ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க.. (ஹி..ஹி...டேய் அடங்குடா..) மீண்டும்.. சாரி.. பாஸ்டன் ஸ்ரீராம்..:(

May 10, 2010

கொத்து பரோட்டா –10/05/10

போன வாரம் சுஜாதா அவார்ட்ஸ் விழாவுக்கு போயிருந்தோம். நல்ல கூட்டம். பிரபல எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். விருது கொடுக்க வந்த விழாவில் விருது பெற்றவர்களை பற்றி பெரிதாய் பேசாமல், எல்லோரும் சுஜாதாவை பற்றி மட்டுமே பேசியது கொஞ்சம் ஓவர் என்று சுஜாதா வெறியனாகிய எனக்கு கூட தோன்றியது. அதே போல மனுஷ்யபுத்திரனுக்கும், உயிர்மைக்கும் பி.ஆர் வேலை செய்வதையே சிலர் கடமையாய் செய்தார்கள். சாரு பேசினார். அவரை பற்றி சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல். இவர்களில் உச்சம் தமிழச்சி தங்க பாண்டியனின் பேச்சு. உயிர்மை சுஜாதா புத்தகங்களை வெளியிட்ட பிறகுதான் சுஜாதா பரவலாய் போய் சேர்ந்தார் என்பதுதான் உச்சபட்ச் காமெடி. அங்கு வந்திருந்த கூட்டத்தில் எல்லா வயதினரும் வந்திருந்தார்கள் நிச்சயம் அவர்கள் எல்லாம் உயிர்மை வெளியீட்டிற்கு பிறகு சுஜாதாவை அறிந்தவர்களாய் இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். முன்னாடியெல்லாம் முப்பது, நாப்பது ரூபாய்க்கு சுஜாதா புக்கு கிடைக்கும், இவங்க புக் போட ஆரம்பிச்சதும் குறைந்தது முன்னூறு ரூபா இல்லாம வாங்க முடியறதில்லை என்றார்  வாசகர் ஒருவர். எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
avar-cinema நேற்று பதிவர் செல்வகுமார் இயக்கும் ”அவர்” என்கிற படத்தின் துவக்க விழா நடைபெற்றது. விழாவை வழக்கம் போலில்லாமல் வித்யாசமாய் டிஜிட்டல் சினிமா எடுப்பதை பற்றிய ஒரு கருத்தரங்கமாய் ஆரம்பித்திருந்தார்கள். பேப்பர் விளம்பரம் ஏதுமில்லாமல், வெறும் பேஸ்புக், ப்ளாக், ட்வீட்டர் தளங்களில் விளம்பரபடுத்தியே
சென்னையின் ஒரு கோடியான வளசரவாக்கதில் நடந்த கருத்தரங்குக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வரவழைத்திருந்தது சந்தோஷமாயிருந்தது. டிஜிட்டல் சினிமா கேமரா பற்றி அவர்கள் தேடி கற்றதை அங்கே பகிர்ந்து கொண்டார்கள். நானும் எனக்கு தெரிந்ததை பற்றி அங்கே கலந்துரையாடினேன். மிகவும் அருமையான இண்டராக்டிவாக இருந்தது கலந்துரையாடல். தயாரிப்பாளர் சங்கர்நாராயணனுக்கும் இயக்குனர் செல்வகுமாருக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். இதைத்தான் முப்பதாயிரத்தில் படமெடுக்கும் முயற்சியில் நான் முயன்று வருகிறேன். இதுவரை வந்திருக்கும் ஆதரவு நம்பிக்கையூட்டுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சென்ற வாரம் நேசமித்ரன் அவரின் பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஆரோமலே” பாடல் பிங்க் ப்ளாயிடின் பாடலிருந்து காப்பி என்று குற்றம் சாட்டியிருந்தார். கூடவே டேவ் மாத்யூ பாண்ட் வழங்கிய பாடல் ஒன்றையும் கொடுத்திருந்தார். எனக்கென்னவோ.. டேவ் மாத்யூவின் ஆரம்ப கிடார் மட்டுமே கொஞ்சம் சிங்க் ஆன மாதிரி தெரிகிறது. அதே போல அவரது கரகரப்பான குரல். மற்றபடி ட்யூன் வேறாக தான் தெரிகிறது. எதுக்கும் நீங்களும் கேட்டுச் சொல்லுங்களேன்.
இத்தனையும் கேட்ட பிறகும் என்னுடய பேவரைட்டிலிருந்து “ஆரோமலே” போகவில்லை. அப்படி பார்த்தால் பிங்க் ப்ளாயிடின் பேக்ரவுண்ட் கிடார் ஸ்கோர், கொஞ்சம் லீட் கிடார் ஸ்கோரக டேவ் மாத்யூவின் பாடலில் கூடத்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் தேடினால் உலகில் எல்லா இசையமைப்பாளர்களிடம் இம்மாதிரியான மிக லேசான ஒப்புவமைகள் இருக்கத்தான் செய்யும் என்பது என் கருத்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தியேட்டர்
சமீபத்தில் சாந்தம் தியேட்டரின் சீட்டுகள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள். சீட்டுக்கள் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. வாங்குகிற காசுக்கு சரியான வசதிகள் செய்வதில் இவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் முன்பிருந்த லெதர் ஃபோம் சீட் வசதி இதில் இல்லை அதுவும் தலை வரை உள்ள சீட்டுகள் புஷ்பேக் மிகவும் பின்னால் போகாமல் முன் புறம் அழுத்துவதால், கொஞ்சம் முன் பக்கம் வரிசை கிடைத்துவிட்டால் படம் பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. கழுத்து வலிக்கிறது. அவர்களுக்கும் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
ஓவர் பிரிட்ஜுல முன்னாடி போற பஸ்ஸோட பிரேக் பிடிக்கும்ங்கிற நம்பிக்கையிலதான் பின்னாடியே நாமளும் போறோம். அது போலத்தான் வாழ்கை. ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் வாழ்கையே ஓடுது.. சொன்னவர்.. ஹி..ஹி.ஹி.. போங்க சார் எனக்கு வெட்கமாயிருக்கு 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார கண்டுபிடிப்பு

காதலில் தோற்பது ஒரு பெரிய விஷயமே இல்லை.. ஆனால் ஒரு முறை ஜெயித்துப்பார் அப்போது தெரியும் தோல்வியே பரவாயில்லைன்னு.. ங்கொய்யால..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
மெலிதான நகைச்சுவையுடன் உறுத்தாமல் நீதி சொல்லும்படியாக எடுக்கப்பட்டிருக்கும் ப்ரெஞ்ச் குறும்படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார டச்சிங் விடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரத்தை தடை செய்யுமளவுக்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை? ஆனால் ஸோ.. க்யூட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோக்
உன்னை ஏண்டா எல்லா பஸ்சுல அந்த அடி அடிச்சாங்க..?
பாக்கெட்டுல இருந்த என்னோட போட்டோ ஒரு பொண்ணு கால் கீழே விழுந்திருச்சு, அதான் அவங்க கிட்ட போட்டோ எடுக்கணும் காலை தூக்குங்கன்னு சொன்னேன் அதுல என்ன தப்புன்னு தெரியலையே..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எக்கனாமிக் ப்ரொபசர் : ஒரு ப்ரொபஷனலின்  தொழில் முறை தோல்வியை பற்றி ஒரு உதாரணம் சொல்லுங்கள்
மாணவன் :  கர்பமான ப்ராஸ்ட்ட்டிடுயூட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
முதலிரவில் மனைவியிடம் கணவன் “கண்ணே உனக்கு எங்கே போக வேண்டும் நிலவுக்கா? அல்லது நட்சத்திர மண்டலத்துக்கா?” என்றதும
ம்னைவி : முதல்ல உன் ராக்கெட்ட காட்டு அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம் எங்க போறதுன்னு.. என்றாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்