Thottal Thodarum

Aug 30, 2008

தாம்-தூம்- திரை விமர்சனம்


இயக்குனர் ஜீவா இருந்திருந்து அவரின் படத்தை பார்த்திருந்தால் அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். மிக அருமையாக வந்திருக்க வேண்டிய ஓரு திரில்லர் படத்தை, போட்டு குழப்பி,தவறான காஸ்டிங்கினாலும், திரைக்கதையினாலும் சொதப்பிவிட்டிருப்பது பரிதாபம்.

சென்னையின் ஓரு பிரபல மருத்துவ்ரின் மகனான கெளதம் சுப்ரமணியம் ஓரு கான்பரன்ஸ் விஷயமாய் ரஷ்யா போக, அங்கே நட்பாகும் ஓரு ரஷ்ய பெண் அவரது அறையில் கொல்லப்பட, அதனால் அவர் கைதாக, இங்கே அவரின் காதலி பொள்ளாச்சியில் திருமணத்திற்காக காத்திருக்க, அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

படிக்கும் போது மிக இண்ட்ரஸ்டான ஓரு திரில்லர் திரைக்கதைக்கான அத்தனை அம்சங்களும் இருந்தும், படம் ஆமை வேகத்தில் நகர்கிறது. ரஷ்யாவிற்கும், பொள்ளாச்சிக்குமாய் அலைபாயும், திரைக்கதை படத்தின் வேகத்தை கூட்டுவதற்கு பதிலாக, மேலும் சுருதியை குறைக்கிறது.

பொள்ளாச்சி காதலியாக, கங்கணா ராவத், கொஞ்சமும் பொறுந்தாத டிசைனர் அவுட்பிட்களுடன் கிராமத்து சுட்டிப் பெண்ணாக வருவதும், அவரின் அப்பா ஏதோ மிகப் பெரிய ஆள் என்பது வசனதிலேயே பில்டப் செயவதும், ரவியின் மாமாவிற்கும் அவருக்கும் ஏதோ ஓரு பிரச்சனை என்பது போல பில்டப் செய்வது எதற்கு என்றே தெரியவில்லை,
மிக நல்ல நடிகர்களான சேத்தன், போஸ் வெங்கட், ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளார்கள்.

கிராமத்தில் பஸ்ஸை பிடிக்க,ரேஸ் வைப்பது, டூரிங் கொட்டாயில் மலையாள பிட் படம் பார்பது, ரம்மியில் செல்போனை தொலைப்பது என்று ஆங்காங்கே “பளீச்” என்றாலும் இன்னம் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக் இருந்திருக்கும்.

ரஷ்யாவில் ரவிக்கு உதவும் இந்திய லாயராக லஷ்மிராய்.. அப்படி ஓன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஓரு வேளை அவர் கங்கணா பாத்திரத்தில் நடித்திருந்தால் மிக அருமையான ஓரு கிராமத்து காதலியை கண் முன்னே நிறுத்தியிருப்பாரோ.. என்று தோன்றுகிறது.

ஜீவாவின் அருமையான ஓளீப்பதிவில் ரஷ்யாவும், பொள்ளாச்சியும் மிளீர்கிறது என்று சொன்னால் அது சும்மா வார்த்தை தான். இனி எங்கே உங்கள் படங்களை பார்பது ஜீவா?

அதுவும் ரஷ்யாவில் சேசிங் காட்சிகளில் சிம்பிளீ சூப்பர்ப்..

ரவி போலீஸிலிருந்து தப்பித்து ரஷ்யாவின் அந்தனை முக்கிய இடங்களிலும் சர்வசாதாரணமாக நடமாடுவது படத்தில் காமெடி இல்லாததை போக்குகிற்து. கடைசியில் வில்லனாய் ஜெயராம். சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஜெயராம்.

படத்தில் நம்மை எல்லாம் கட்டி போட்டு உட்கார வைப்பது ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களூம், பிண்ண்னி இசையும், ஹேட்ஸ் ஆப் ஹாரிஸ்.

மொத்ததில் ஜெயம் ரவிக்கு தாம்=தூம் திருஷ்டி கழிப்பாக இருக்கும்

Aug 28, 2008

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-3

ஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா?.. வேற என்ன பேர் அவருக்கு?} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்..

அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து

" ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள்.

நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. " என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, "

" சார்.. இங்க் பணம் கட்ட கூடாது.."

"பின்ன செகண்ட் ப்ளோர்ல தான் கட்டணுமா?


அவள் சற்று தயங்கி.. "சார் நீங்க திரும்பவும் உங்க பிராஞ்சுக்கு போய் அங்க கட்டிட்ட்டு, கால் சென்டர்ல போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா .. போதும், உங்களுடய NOC நோ.. அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வந்துடும்"

என்றவுடன் எனக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை..
"சற்றே கடுப்புடன் மேடம் அவங்க தான் இங்கே அனுப்பிச்சாங்க..."

அதற்கு அவள் சற்றும் அசராமல்.. "அது சரிதான் சார்.. இங்க் அமொண்ட் மற்றும் தான் சொல்வோம்.. அதுக்குத்தான் இங்க அனுப்சாங்க.. ஓண்ணும் ப்ராப்ளம் இலல.. நீங்க உடனடியா கட்டிட்டா இன்னையோட முடிஞ்சிடும்.. அதுவும் இரண்டு மணிக்குள்ளே.. இல்லேன்னா நாளைக்கு கட்டினீங்கன்னா.. இண்ட்ரஸ்ட் எக்ஸ்ட்ரா ஆகும்"

என்றவுடன் நாளூக்கு ஏறும் வட்டியை நிணைத்து.. அவளீடம் மறுதலிக்காமல் உடனடியாய் திரும்பவும் தி.நகர் வந்து, பேங்க் முடிய் ஓர் பத்து நிமிஷம் இருக்கும் முன் வந்து பணத்தை கட்டி, அங்கிருக்கும் அதிகாரியிடம், சொல்லி, கால்சென்டரிலி ல் சொல்லி விட்டு.. ஓரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்டே.ன்.. அப்பாடி ஓரு கடனை அடைத்தாகி விட்டது.. நான் மீண்டும் அந்த அதிகாரியிடம் வந்து..
" சார் .. சரியா ஓரு பத்து நாளில் பேப்பர் வந்திருமில்ல.. என்றேன்..

சிரித்தபடி” சார் பத்து நாளெல்லாம் ஓரு பேச்சுக்குத்தான்.. மேக்ஸிமம் ஓரு வாரத்துல வந்திடும்.. உங்களூக்கு இந்த லோன் சாங்ஷன் ஆன ஸ்பீட வச்சே உங்களூக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. என்று பெருமையாய் சொல்ல, நானும் .மனதினுள் சும்மா சொல்லக்கூடாது.. ஓரு வாரத்தில சும்மா கில்லி மாதிரியில்ல சொளயா கொடுத்தானுங்க.. என்று நினைத்துக்கொண்டு. கிளம்பினேன்/.


நானும் இதோ வரும், அதோ வருமென,, தீபாவளி, பண்டிகை யெல்லாம் தாண்டியும் வராது போக,, பெஸ்டிவல்ல ஏதாவது லேட் ஆயிடுக்க்ம்ன்னு நினைச்சுக்கிட்டு கிட்டத்தட்ட மறந்தேபோனேன். தீடீர்னு ஓரு நாள் ஞாபகம் வந்து தேதிய பார்த்த போது, ஓரு மாசம் ஆயிட்டுதுன்னு தெரிஞ்சுது,, சரின்னுட்டு.. கால்செண்டர்ல போன் பண்ணீ கேட்டா.... அவன் சொன்ன பதில் எனக்கு தூக்கி வாரி போட்டது.. அவன் சொல்றான்.சார்.. உங்க அக்கவுண்ட இன்னமும் ஆக்டிவாத்தான் இருக்குன்னான். அது எப்படி அதான் நான் முழு பணத்தையும் கட்டியாச்சே.. எப்படின்னு கேட்டா அவன் சார் அதை பத்ட்தி நீங்க நெல்சன் மாணிகம் ரோடுக்கு போய் தான் கேட்கணும்,சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம.. யோசிகிட்டு இருந்தப்போ.. அவன் இதை ஓரு கம்ப்ளைண்டா எடுத்திக்கறாதா சொன்னான். சரின்னு சொல்லி நம்பர் வாங்கிட்டு எனக்கு அடுத்த ரெண்டு நாள் சூட்டிங் இருந்ததால.. போகமுடியல..

அப்போ ஓரு போன் வந்திச்சு.. அது அந்த பேங்கிலேர்ந்து தான். சார் ஓரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு.. என்ன/ அதுதொண்ணுமில்ல.. அங்க் உங்களுக்கு க்ளோசிங் கொடுக்கிறப்போ க்ளோசிங் சார்ஜ் சேக்காம கொடுத்திட்டாங்க.. அதுனால நாங்க க்ளோஸ் பண்ணல.. ன்னு சொன்னது, தான் மிச்சம் எனக்க்கு கோபம் தலைக்கேறி நீங்க நினைச்சு நினைச்சு அந்த பணம் இந்த பணம்னு சொல்வீங்க.. பணம் இருக்கிற்வன்னா ஓகே.. இல்லாதவன் என்ன பண்ணுவான்.. என்று கேட்டதும், அதில்லாம் சரிதான் சார் அதான் சாரி சொல்றேமில்ல அதுக்கு மேல என்ன செய்ய முடியும்.. என்றான். நான் அப்படின்னா.. நானும் சாரி கேட்டிக்குறேன். என்னால பணம் கட்ட முடியாதுன்னு சொன்னது.. அவன் அங்க் கோபத்துல சார்.. அதெப்படிசார் நீங்க சொல்ல முடியும்.. நீங்க கடட வேண்டிய பணத்த த்தானே கேட்கிறோம்..நீங்க கட்ட்லன்னா உங்களூக்குதான் வட்டி போடுவோம்ன்னு சொன்னதும். எனக்கு இன்னம் கோபம் தலைக்கேறி.. மிஸ்டர்... நான் பணம் கட்டமாட்டேன்.. நான் இப்பவே கன்சூமர் கோர்டுக்கு போறேன்னு சொன்னதும். சார்.. தப்பு என்னவோ எங்களுதுதான்... அதுக்கென்ன பண்றது ஏதோ.. நடந்தது நடந்து போச்சு பணத்தை கட்டிட்டு கையோட வாங்கிட்டு போயிடுங்க.. என்றான்.

எனக்கு இவன் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவிலை..யாரோ ஓருவர் செய்த தவறுக்கு சம்பந்தமேயில்லாத ஓரு வர் எதற்காக நஷ்டப்ப்டவேண்டும்.. இதை ஏற்ககூடாதென்று. முடிவெடுத்து மேற்கூறிய கருத்தை கூற. போனில் பேசிய நபர்.. மனசாட்சி உள்ளவர் போலும்.. சற்றே யோசித்து... சரி சார்.. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.. என்றார்.. நீங்க சொன்ன மாதிரி.. நான் கட்ட வேண்டிய பணம்தான்.. ஆனா அதை கட்ட வந்த அன்னைக்கு நீங்க சரியான அமொள்ண்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் கட்டிட்டு போயிருப்பேன்.. சரி.. தவறு நடக்கறது சகஜம்தான்.. அதை கண்டுபிடிச்சு ஓரு இரண்டொருநாள்ல சொல்லியிருந்தீங்கன்னா.. பரவாயில்லை.. நானா ஓரு மாசம் வெயிட் பண்ணி, கம்பிளைண்ட் பண்ணி அதுக்கப்புறம் நீங்க.. சொன்னதுனால, நான் முழு பணத்தையும் கட்ட மாட்டேன். ஓரு ஆயீரம் ரூபாய் குறைச்சுத்தான் கட்டு வேண். என்றேன்..

அதெப்படி சார்.. அந்த பணத்த அந்த டேபிள் இன்சார்ஜிடம் தான் பிடிப்பாங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. பேங்கோ., அல்லது அந்த நபரோ இதுக்கான நஷ்டத்த ஏத்துகிட்டுத்தான் ஆகணும்.. என்ர்றேன் பிடிவாதமாய்... சொல்லி போனை வைத்தேன்.

இரண்டு நாள் பொறுத்தேன்.. பிறகு அவன் நம்பரை காண்டேக்ட் செய்த போது சாரி சார் நான் கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.சொல்லி அந்த மேடத்திக்கிட்ட்ட பேசிப்பார்த்தேன். அவங்க ஓண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க.. எதுக்கும் நீங்க. நேரா வந்தா மேட்டர் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்.. என்றது, கட்டூ.. நெல்சன் மாணிக்கம் ரோடு.. சில அரை மணிநேர காத்திருப்புக்குபின் அந்த குறிப்பிட்ட பெண்மணியை பார்க்க நெருக்கிய போது.. அவர் என்னை பார்த்து.. சாரி லஞ்ச் டைம் என்றார்..

நான் கோபத்தின் உச்சிக்கே சென்று. . ஆங்காரமாய்.. அந்த நடு ஹாலில் கத்த, அவர்.. சுற்றும் முற்றும் பார்த்து,, என்ன சார் இண்டீஸண்டா கத்திறீங்க.. சரி சரி உள்ள போய் உட்காருங்கன் சொன்னார்.. நானும் அவர் சொன்னதை கேட்டு உள்ளே போய் உட்கார்ந்தேன்.. அவர் மெல்ல வந்து என்னைபார்த்து.. இப்ப என்ன சார் வேணும்..சும்மா இதுக்கெல்லாம் ப்ரச்சன பண்றீங்க.. சாரி.. நான் பிரக்னெண்ட் லேடி கால்லலெலாஅம் விழமுடியாது.. சரியா.. இப்ப எப்ப பணத்தை கட்டுறீங்க.. என்றார்...என் கோபம் எரிமலையாய் உள்ளூக்குள் கனன்ற போதும்..மெதுவாக.. சாரி,, என்னால முழு பணதஹை கட்ட முடியாது... அப்ப என்னால ஓண்ணும் பண்ண முடியாதென்று.. அவர் நடக்க முற்ப்பட,

நான் அவரிடம் மேடம்.. உங்க் ஹையர் ஆபீசரை பார்க்க வேண்டும், ஏன்.. என்றார்.. இல்ல நான் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கறத்துக்கு முன்னாடி அவரை பார்த்து பேசண்னும் என்றேன்.. அவர் சற்று பதட்டட்துடன். போலீசா... எதுக்கு சார்.. இதுக்கெல்லாம். நீங்க போலீஸ் கோர்ட்டுன்னு போனீங்கன்னா.. அவ்வளவு தான்..எல்லாத்தை யும் பேசி தீத்துக்கலாம்.. என்றார்.. அப்ப சரி என்றேன்.. சார்... ஓரு மனிதாப மான் முறையில் எனக்காக பணத்தை கட்டக்கூடாதா.. ப்ரக்ணண்ட் லேடி கேக்கிறேன்... அவரை நிதானமாய் பார்த்து,, சரி மேடம்.. நான் பணம் கட்டறேன்.. ஆனா இன்னைக்கில்ல.. நாளைக்கு.. ஏன்னா.. நீங்க தான் மனிதாபமானத்தை பத்தி பேசினதாலே.. ஓரு ஹெல்ப் பண்ணுங்க.. ஓரு நாலாயிரம் இருந்த்தா.. எனக்காக,,, கட்டுங்க.. அதுக்க்கு உங்களூக்கு இப்பவே.. செக் தந்துடறேன்.. ஓரு நாள் தானே.. இது கூட உங்க தப்புனால தான் வந்திருச்சு.. அதனால ஓரு நாளுக்கு மட்டும் எனக்காக ஓரு நாலாயிரம் ரூபாய் கொடுங்களேன்..ன்னு சொன்னவுடன்.. அவர் என்னை பார்த்து.. என்ன விளையாடறீங்களா..என்றார்.. இல்ல மேடம் சீரியஸாத்தான் சொல்றேன்..நீங்க் போராடுறது பேங்குக்கான பண்த்துக்காக.. அதுவும் நீங்க பண்ணூன தப்புனால.. பேங்க்கு எனக்கு சார்ஜ் பண்ணுது. ஆனா கட்டப்போற பணம் என் பணம் நான் உழைத்து சம்பாதிச்ச பணம்.. இல்ல நான் ஓரு ரூபாய் குறைச்சு கட்டுணா.. உங்க் பேங்கோ.. அல்லது நீங்களோ .. விடுவீங்களா? உங்களுது மட்டும்தான் பணமா?

எதிர் முனை மெளனம் சாதித்தது.

அதனால.. நான் ஓரு முடிவுக்கு வந்திட்டேன்.. நான் ஆயிரம் ரூபாய் தர்ரேன்.. மிச்சம் மூணு ஆயிரம் ரூபாய நீங்க கட்டுவீங்களோ.. பேங்க் ஏத்துக்கும்மோ எனக்கு தெரியாது.. ன்னு சொன்னதும்..

அந்த பெண் மணி அது வரை கோபத்தில் பேசினாலும் மரியாதையாய் பேசியவர்.. பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை ன்னு தெரிஞ்சதும்.. நீ,,,வா... போன்னு.. ஓருமையில் பேச நான் சற்றும். மரியாதை தவ்றாமல்.. மேடம். இது வரைக்கும் என் ப்ணததை கொடுப்பதற்க்காக.. நான் கோபமாய் பேசியபோதும், நான் கொஞ்சம்கூட மரியாடதை குறைவாக் பேசவில்லை.. ஆனால் உங்கள் பணம் போகப் போகிறதென்று தெரிந்தவுடன்.. நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள்.. பரவாயில்லை.. என்று.. கூறி.. அவர். என்னை அடுத்த நாள் வர வைத்து. அவர் மூவாயிரம் ரூபாய் கட்ட,, நான் ஆயிரம்.. கட்ட..பிரச்சனை முடிவுக்கு வந்தது.

”உங்கள மாதிரி ஓரு ஆளை நான் பார்த்ததேயில்லைன்னு சொன்னாள்.

“உங்கள பணம் கட்ட வச்சது எனக்கு பெரிசில்ல.. இந்த நிமிஷத்திலேர்ந்து இனிமேயாவது நீங்க மத்தவங்களோட பணத்துலயும், வாழ்க்கையிலயும் விளையாடமாட்டிங்கன்னு நம்பறேன்.
என்று கூறிவிட்டு வெளியே வந்தபோது எதிரே கச்சலாக ஓருவர் தெலுங்கு மீசையுடன். என்னை மறித்து “சார்.. லோனுக்கு அப்ளை பண்ணினேன் சார்.. ஆனா எடுக்கல.. அவங்க செக்கும் அனுப்பல.. ஆனா மாசா மாசம் பணத்தை மட்டும் என் அக்கவுண்டலேர்ந்து எடுத்துக்கிறாங்க.. அத திருப்பி கேட்டா அங்க போ இங்க போன்னு அலையவிடறாங்க.. என்ன செய்யறதுன்னே தெரியல..” என்றேன்.

இந்தியாவில் மிக பெரிய பாங்க். ஹெ.டிஎப்.சி பேங்க்.

Aug 26, 2008

நாயகன் - ஓரு நிஜ விமர்சனம்


நாயகன் பழைய கமல் நடித்த படத்தின் பெயரை வைத்து மக்கள் மனதில் ஈஸியாக மார்கெட்டிங் செய்தாகிவிட்டது. ஏற்கனவே பல பேர் எடுத்து கிழித்து விட்ட ஆங்கில படமான “செல்லூலர்” திரைபடத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரிந்து வந்திருந்த பலரின் புருவங்களை உயர்த்திய படம்.

ஜே.கே.ரித்தீஷின் புண்ணியத்தால் ஏற்கனவே பப்ளிசிட்டியில் குறையில்லாததால். தியேட்டரில் ஹவுஸ்புல் ஆனது ஓண்றும் ஆச்சர்யமில்லை.

ரமணா,சங்கீதா,ஆனந்தராஜ், போன்றவர்களீன் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.கே.ரித்தீஷீன் நடிப்பு, அப்படி ஓன்றும் நக்கலாய் சிரிக்கிறமாதிரியில்லை. அவரை பற்றி ஓரு கிண்டலான எண்ணம் கொண்டவர்கள் கூட படம் முடிந்து வெளிவரும் போது பெரிதாக அவரை கிண்டல் செய்ய முடியவில்லை.

சில சமயம் ரஜினி ரேஞ்சுக்கு அவர் தரும் பில்டப்பை பார்க்கும்போது சிரிப்பாக் இருந்தாலும், தேவையில்லாமல் படத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் அந்த பில்டப் இருப்பதால் ஓண்றும் பெரிதாக தெரியவில்லை.

ஷாவின் கேமரா படத்தின் வேகத்திற்கு ஈடாக உழைத்திருக்கிறது. ஆங்கில படத்தில் வரும் லொகேஷன்களை போலவே தேடி பிடித்திருக்கிறார்கள். ரித்தீஷை பல இடங்களில் காப்பாற்றியிருப்பவர் கேமராமேன் ஷாவும், எடிட்டரும் தான். அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிஜமாகவே காமெடியாகியிருக்கும்

மொத்தத்தில் சொல்லப் போனா.. சமீபத்திய மிக எதிர்பார்து போய் பார்த்த படங்களான குசேலன், சத்யம் போன்ற படங்களை விட எதிர்பார்பில்லாமல், ஜே.கே.ரித்தீஷை கிண்டல் செய்யலாம்ன்னு போன நாயகன் எவ்வளவோ பரவாயில்லை.

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-2

அந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று விஜய்காந்த் போல கண்கள் சிவந்து, உடலெல்லாம் சூடாகி,கன்னத்து சதை எல்லாம் ஹைஸ்பீடில் ஆடததுதான் பாக்கி,

" காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்.."

என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் " சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்.." எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி " சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. " சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்.." என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பேப்பரில் இருந்த தகவலையெல்லாம் சரி பார்த்து, போனபின்... வீடு, ஆபிஸ் போன் வெரிபிகேஷன்.. எல்லாம் முடிந்து, இரண்டொரு நாளில்..நம்மிடமிருந்து செக் வாங்கி கொண்டு போன ஓரிரு நாளில் கொரியரில் செக் வரும் போது.. அட என்ன சர்வீஸ்.. என்ன சர்வீஸ்.. வீட்டிலிருந்தபடியே எவ்வளவு சுலபமாக முடிஞ்சிருச்சு இதுவே நேஷ்னலைசுடு பேங்காயிருந்தா.. லோன்னுன்னு கேட்டாலே ஆயிரம் கேள்விகள்...இப்படி சந்தோஷப்பட்ட நாளெல்லாம் இருந்த்துச்சு.. ஆனா...

ஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும்,

"சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:"

கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.

சரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட்டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து...


" வாட் கேன் ஐ டூ பார் யூ?"


நான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால்


" சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் கேட்டுக்கங்க... " என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது..


" சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்?" என்றேன்..


அதற்கு அவர் சிறிதும் அசராமல் " அப்படியா? சொன்னாங்க? :" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....


தொடரும்..(கோச்சிக்கதீங்க.. ரொம்ப படிச்சா போரடிக்கும்னுதான்...)

Aug 25, 2008

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்

என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்

1முதல் சுரண்டல்

லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னாலும் லோன் ஓகே ஆகி செக் ரெடியாயிருக்கும் போது சொல்வாங்க.. உங்க மனசு கார்பரேஷன் பார்க் ஊஞ்சல் போல சத்தத்துடன் ஆடும். வேற வழியில்லாம சரின்னுடுவீங்க.. கொஞ்சம் வேணாம்ணு சொல்லி பாருங்களேன். உடனே ஓரு பர்சண்ட் ப்ராசஸிங் பீஸ் குறையலைன்னா என் பேரை மாத்திக்கிறேன்.

2 சுரண்டல் இரண்டு

இப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்க...அதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம்? சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ ... 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு? நான் அவ்னை ஏற இறங்க பார்த்து, அப்ப ஓரு நூறு ரூபா இருந்தா கொடேன்னு கேட்டது அவரு ஸ்டாப் ப்ளக்கில காணாம போனார்ரு...இ தையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா.. அந்த பணத்த வாங்கறதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு .. ஆனா யாரும் கேட்கற்தில்ல.. தயவு உங்க பணத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு வைக்காதீங்க..

அடுத்த சுரண்டல் /////விரைவில்

Aug 22, 2008

முதன் முதலாய் பார்த்த படம் ?

எல்லாரும் படம் பார்க்கிறோம், ஆனால் முதல் முதலாக பார்த்த திரைப்ப்டம் எது என்று பலருக்கும் ஞாபகம் இருக்குமா?. அந்த படங்களை திரும்பவும் பார்க்கும் போது நமக்கு மலரும் நினைவுகள் நிறைய மலரும்.

எனக்கு நினவு தெரிந்து என் தாத்தா ஜெமினி லேபில் செக்கூரிட்டி ஆபிசாராக இருந்த போது, அங்கே இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சிவாஜி கணேசன் நடித்த "அந்தமான் காதலி" என்ற பட்த்தை பார்த்ததை அங்கிங்கே ப்ளாஷ் கட் போல, கலரிலும், ப்ளாக் & வொயிட்டிலும் அந்த படத்தை எப்போதாவது டிவியில் பார்க்கும்போது, வரும்.

திரும்ப திரும்ப யோசித்து பார்த்ததில், எம்.ஜி.ஆர். ந்டித்த, "பல்லாண்டு வாழ்க" என்ற திரைப்படமும் வ்ந்து, வந்து, போகிறது, ஆக இந்த இரண்டில் ஓன்றைத்தான் நான் பார்திருக்க வேண்டும், அப்போது எனக்கு இந்த் இரண்டில் பிடித்த படம்,, வழக்கம்போல் "பல்லாண்டு வாழ்க" தான்

இப்போது வளர்ந்த பிறகு எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றாலும், அப்போது ஏன் பிடித்த்து என்று யோசித்து கொண்டிருக்கும் போது, என் அம்மா அந்த படத்தின் கிளைமாக்ஸில் யானை எல்லாம் வரும் அதனால் உனக்கு ரொம்ப பிடிச்சது என்றாள்.

இது போல் நீங்கள் பார்த்த், முதல் படத்தை பற்றியும், இப்போது உங்கள் அனுபவங்களை பற்றி ஏதாவது சொல்லலாமே..

Aug 21, 2008

குறும்படம்ன்னா????

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து. மேலும் சில குறும்படங்களூக்கு
சங்கர் நாராயண்

சூரியன் FM "லாஸ்ட்ல பர்ஸ்டு"

சூரியன் FM தமிழகத்தின் நெ.1 FM ஆன்னு சர்வே எடுத்ததுக்கு மக்கள் இல்ல "லாஸ்ட்ல பர்ஸ்டுன்னு சொல்லிட்டாங்க . இதோ உங்க் ரிப்போர்டு..

வந்து ஓட்டு போட்டவங்க :75 பேர்
நெ.1ன்னு சொன்னவங்க :12 பேர்
நெ.2ன்னு சொன்னவங்க :4 பேர்
நெ.3ன்னு சொன்னவங்க :10 பேர்
மவுசு போயிடுச்சு : 49 பேர்

ஸோ... சூரியன் FM "லாஸ்டுல பர்ஸ்டாயிடுச்சு" இன்னமும் நாங்க தான் நெ.1ன்னு சொல்லாம நிஜமாவே நெ.1 ஆக டிரை பண்ணுங்க..

விகடனை இனிமே எப்படி மாத்தலாம்?

புது விகடனை பிடிக்கல, மாத்த சொல்லுங்கன்னு சொல்லிட்டிங்க,, சரி எப்படி மாத்தனும்னு சொன்னீங்கன்னா அவங்களுக்கும் உபயோகமா இருக்குமில்ல..

Aug 20, 2008

எல்லோரும் கடைசியா "குடி"ச்சுக்கங்க....

ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது.

அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக, ரோட்டின் முனையில் நின்று கொண்டு பிடிப்பதை விட்டு விட்டு அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)

Aug 19, 2008

சதயம்: ஓரு நிஜ விமர்சனம்



"சட்டமும் சாமியும் ஓண்ணு. சாமிதான் கண்ணை குத்தணும், சட்டம் தான் கடமையை செய்யணும்"ங்கற ஓரு அருமையான குழந்தைத்தனமான ஓரு கருத்தை 25கோடி ரூபாய் செலவு செஞ்சு நம்ம வெறுப்பேத்தியிருக்காங்க.

சின்சியரான போலீஸ் ஆபீசர் சத்யமாக விஷால். உடலை நன்றாக கட்டுப்கோப்பாக வைத்திருக்கிறார். விறைப்பாக நிற்கிறார். ரோபோ போல் அங்கும், இங்கும் திருமபுகிறார்.

இயக்குனர் ராஜசேகர் இவரை ஏத்தி விட்டே படம் வாங்கியிருக்கார் போலருக்கு
படத்துல ஹீரோவுக்கு ஓரு பந்தாவான அறிமுக காட்சி இருந்து பார்த்து இருக்கோம். ஆனா படத்தில் முதல் பாகத்தில் முக்கால் வாசி நேரம் அறிமுக காட்சி போலவே பத்து சீன் வந்தா.. ஆவ்...

நயந்தாரா.. விஷால் போலவே அவரும் நல்லா உடம்பை மெயின்டென்யின் பண்ணியிருக்காரு. அவங்களோட சம்பளத்தை ஏத்தியிருக்காங்க, அத தவிர நடிப்புல எந்த ஏத்தத்தையும் காணோம். அதுசரி கதையில் அவருக்கு ஏதாவது கொடுத்தாதானே ஏத்திக்கறத்துக்கு.

படத்துல வில்லன் போல வரும் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா.. சூப்பர். அவருடைய பாடி லேங்குவேஜூம், நடையும், சிம்பிளீ சூப்பர். அதோட அவரோட கேரக்டருக்கு கொடுத்திருக்கும் அழுத்தத்தை விஷாலுக்கு கொடுத்திருந்தா படமும் நல்லா இருந்திருக்கும்.

இசை..ஹாரிஸ் ஜெயராஜாம்...

ஓளீப்பதிவு: r.d . Rajaseகர் சும்மா சொல்லக்கூடாது, படத்துல அவருக்கு கொடுத்த காசுதான் பிரயோஜனம். நம்ம காசுக்கும் அது தான் ஓரத்.

பாயிண்ட் ஆப் வியூ இல்லாத கதையினால். விஷால் என்னதான் விழுந்து புரண்டு சண்டை போட்டாலும், ஓண்ணும் வேலைக்காகல, தேவையில்லாம, அவங்க அம்மாவையெல்லாம் சாகடிச்சு.. சசு..சசு...

மொத்ததுல கொடுத்த 60ரூபா தண்டம்

டாஸ்மாக் கொள்ளை

சமீபத்திய தினசரியில் டாஸ்மாக்கின் ஓரு நாள் வருமானம் முப்பது கோடியை தொடுகிறது என்றது.அரசாங்கம் நடத்தும் கடைகளில் MRP ரேட்டில் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் ஓவ்வோரு பீர் பாட்டிலுக்கும் 2 முதல் 5 வரை அவர், அவர் இஷ்டப்படி விற்கிறார்கள்.கேட்டால், கூலாக தருவதால் அந்த ரேட் என்கின்றனர். ஓவ்வொரு முறையும், நான் போராடித்தான் அந்த 2 ரூபாயோ அல்லது 5 சண்டை போட்டு வாங்கிவிடுவேன். இப்போதெல்லாம் அவர்கள் பீருக்கு மட்டுமில்லாமல் மற்ற வகைகளூக்கும் 2 முத்ல் 5 ரூபாய் வரை ஏற்றி விற்கிறார்கள். கேட்டால் பாட்டில் ஹாண்டிலிங் சார்ஜ் என்கிறார்கள்.

ஓரு முறை என் நண்பர் ஓருவர் கடைக்கு சென்று பீரையும் , ஹாட் டிரிங்கையும் வாங்கிய போது 13 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வாங்கியிருக்க, ஏன் கொடுக்க வேண்டும் இது கவர்ண்மெண்ட் கடை தானே? என்று கேட்டதற்கு, இல்லை இது ப்ரைவேட் கடை என்று நக்கலாக பதில் சொல்ல, மேலும் வாக்குவாதமாக, கடைக்காரன் அவரை தாக்க முற்பட, அந்த சமயத்தில் எனது நண்பரின் நண்பர் என்னுடய போனுக்கு சமயோசிதமாக போன் செய்து

"சார், நான் தான் பேசறேன்.. நீங்க சொன்னா மாதிரி இங்க அப்படித்தான் நடக்குது.
உடனே நீங்க வரலாம் சார் . கையும் , களவுமா பிடிச்சிட்டோம் சார். என்று எனக்கு
போன் செய்ய, எனக்கு ஓன்றும் புரியாமல். திருதிரு வென்று விழிக்க, போன் கட் செய்யப்பட,

பிறகு விசாரித்தபோது, அவ்ர் அப்படி பேசியிருக்கவிட்டால் உங்கள் நண்பரை அடித்திருப்பார்கள். இவர்கள் யாரோ மேலதிகாரிகளை கூப்பிட்டு இருப்பதாக நினைத்து, அவர்களுக்கு மீதி காசையும் கொடுத்துவிட்டு, அங்கே எதுவும் நடக்காத மாதிரி, வந்தவர்களுக்கு எல்லாம் Mrp ரேட்டுக்கே கொடுக்க, வந்தவர்கள் எல்லாம் அதிசயமாக, சில்லரை கொடுப்பதை பார்த்து அதிசயத்தில், அங்கே நடந்த விஷயங்களை தெரிந்தவர்கள், என் நண்பர்களை பார்த்து, நீங்க, தினம் வாங்க சார்.. அப்பத்தான் இவங்க கொட்டம் அடங்கும் என்று புலம்பியபடி சென்றார்கள்.

அரசு ஓவ்வொரு கடைக்கும் மின்சாரக் கட்டணத்திலிருந்து எல்லாவிதமான செலவுகளையும், ஏற்கிறது. அது போக, பார் லீசுக்கு எடுக்கும் கடைக்காரரிடமிருந்து ப்ரீசரை வாங்கி வைத்து விடுகிறார்கள். பின் எத்ற்காக நாம் அவர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும், அது போக ஓவ்வோரு கடைக்கும், சேல்ஸ் கமிசன், சரக்கு கைமாற்றும், போது அது உடைந்துப் போனால் அதற்கான நஷ்டம் எல்லாம் போகத்தான் அரசுக்கு போகிறது. சுமாராக ஓவ்வோரு கடையிலும் அதுவும் வெயில் காலத்தில் குறைந்தது 500 பாட்டில் பீர் விற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓரு பாட்டிலுக்கு 2 ரூபாய் என்ற வீதம் 500 பாட்டிலுக்கு 1000 ரூபாய் கிடைக்கிறது. ஓரு நாளைக்கு 1000 ரூபாய் என்றால் 30 நாளைக்கு 30000 ரூபாய். அது தவிர அவர்க்களூக்கு சம்பளம் , மற்றும் அலவுன்ஸுகள், இத்யாதி, இத்யாதி.. ஓரு ஜடி கம்பெனி வேலையில் உள்ள ஓரு வர் சம்பாதிப்பதை விட இவர்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். கேட்டால் "அவர்கள் சொல்வது நாங்க என்ன இதை வச்சுகிட்டு என்ன வீடா கட்டப்போறோம்.. என்று கேட்கிறார்கள். நீங்களே சொல்லுங்க வீடு கட்டுவாங்களா.. இல்லையா?

Aug 17, 2008

யூத்புல் விகடனும் , கவுண்டமணியும்...

சமீபத்தில் நான் பதிவில் போட்ட விகடனின் டிசைன் பற்றிய போலை வந்து சொடுக்கி போன 119 பேர்களுக்கு என் நன்றி.
இதனால் விகடனாருக்கு சொல்கிறது என்னன்னா... தயவு செஞ்சு உங்க பாழா போன யூத் டிசைன்னு சொல்லிக்கிற உங்க டிசைனை மாத்துங்கோ..
இல்லேன்னா உங்க யாவாரம் பூட்ட கேஸாயிடும்.

நீங்க யூத்புல் விகடன்னு மாறினது எப்படி இருக்குதுன்னா.. கவுண்டமணி யூத் கெட்டப் போட்டாப்ல இருக்கு.

நாங்க உங்கள எல்லாம் எங்க வச்சிருக்கோம் தெரியுமா?

அதனால தயவு செஞ்சு மாத்திடுங்க..

போல் ரிசல்ட்

வந்தவர்கள் :119
சூப்பர்ன்னு சொன்னவங்க:19
ஓகேன்னு சொன்னவங்க : 26
சே.சேன்னு சொன்னவங்க: 13
மாத்த சொல்லுங்கப்பா : 66
பேர் மொத்தத்துல 55 சதவிகிதம் பேர் மாத்த சொல்லிட்டாங்க..விகடனாரே உங்களுக்கு மக்களீன் பல்ஸ் தெரியும்னு நினைக்கிறேன்.

"தரிசனம்"

"தரிசனம்"

என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம்.

அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து "என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..." என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து "சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது போல முகம் திருப்பி கண்மூடிக் கிடந்தாள். அவள் பிடிவாதம் எனக்கு தெரியும்.

அதிகாலை மூண்று மணிக்கெல்லாம் என்னை எழுப்பி குளீக்க வைத்து, அந்த ஆசிரமத்தில் நுழைந்தவுடன் அங்கே இருந்த சீடர்கள், என்னையும், என் மனைவியையும், தனி, தனியே பிரித்து, அவளை பெண்கள் பக்கத்திலும், ஆண்கள் பக்கத்தில் என்னை நிற்கவைத்து, இனிமேல், திரும்ப வெளியே வரும் போதுதான் ஒன்றாய் பிரிந்த இடத்திலேயே பார்க்க முடிய்மென்று அந்த சீடர் கூற, என் மனைவி உள்ளே நுழைந்தது முதல் அந்த சாமியாரின் பேரைச் சொல்லியபடியே மெய் மறக்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு என் ஞாபகமிருக்குமா என்று சந்தேகமே..என் மனைவி சென்றவுடன் வேறு வழியில்லாமல் நானும் அங்கிருந்த ஆண்கள் ஜோதியில் கலக்க ஆரம்பித்தேன். எல்லோரும் கும்பலாய் கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாய் வருவது எனக்கு அதிசயமாயிருந்தது. பொதுயிடத்தில் கூட உரத்து போன் பேசுபவர்களா? இவர்கள்? அவர்களின் ஓழுங்கு எனக்கு ஆச்சர்யபட வைத்தது.

எல்லோரும் அங்கிருந்த கோயில் சந்நிதிக்கு போனவுடன் அங்கே கடவுளுக்கு ஆராதனை செய்து பூஜை முடிந்தவுடன். "டோலக்" :" ஜல் ...ஜல்..."ஜால்ரா போன்ற இசை கருவிகளை எடுத்துக் பஜனை பாடலை பாடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அப்படியே பஜனைகளை பாடியபடி நடக்க ஆரம்பிக்க.. அந்த அதிகாலை நேர அமைதியும், ஓரே ரிதத்தில் வரும் பஜனை பாடலும் என் மனதை அந்த பஜனை ரிதத்திக்கு தலை ஆட்டச் சொன்னது. நாம் அந்த சுருதிக்கும், அந்த காலை நேர அமைதியும் செய்யும் அதிகாலை ரீங்காரம் தான் என்று என் அறிவுக்கு எட்டினாலும், எனக்கு அந்த மெல்லிய இசை தரும் போதையும், அந்த அதிகாலை குளீரும் தேவையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன்.மெல்ல பாடியபடி ஓரு ரவுண்ட் வந்து மீண்டும் ஓரு ஆரதனை முடிந்தபின், எல்லாரையும் ஓரு பரந்த மைதானத்தில் ஓரு ஆளுக்கும், மற்றோரு ஆளுக்கும் நம்முடய கையை நீட்டினால் கிடைக்கும் இடைவெளியமைத்து உட்கார வைத்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போதே ஓருவித அமைதி ஏற்பட்டிருந்தது.

மைதானத்தின் நடுவே ஓரு பரந்து விரிந்த ஓரு மாளிகை, ஓருவிதமான மயக்கும் ரோஜா கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பின் பக்கத்தில் பனி படர்ந்த உயர்ந்த மலைகள், சுற்றிலும் உயர்தர புற்களால் அமைக்கப்பட்டிருந்த பச்சை ஜமுக்காளம் போலிருக்கும் பனிநீர் படிந்த புல்தரையும், எங்களுக்குள் இருந்த இடைவெளியும், அதனால் ஏற்பட்ட அமைதியும், மிக அற்புதம்.சுமார் ஓரு மணி நேரத்திற்கு அப்படி உட்கார்ந்திருந்தேன்.ஓரு மனிதன் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் சும்மா உட்கார்ந்திருப்பது மிக கடினமானது. முதல் பத்து நிமிடத்தில் யாரும் பார்க்காமல் மற்றவரிடம் பேசலாம் என்று பார்கும், ஆனால் அங்கே அவர்கள் கடைபிடிக்கும் ஓழுங்கு உங்களை கட்டுப்படுத்தும், பின்னர் உங்கள் மனதிற்குள் பல என்ன ஓட்டங்கள் ஓட ஆரம்பிக்கும், அங்கிங்கே அலைந்து சிறிது நேரத்திற்கு பிறகு எந்த வித எண்ணங்களூம் இல்லாமல் ஓரு வெறுமை உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்.

நீங்கள் அந்த சாமியாரின் அதி தீவிர பக்தராக இருந்தால், அவர் நாமத்தை ஜபிப்பதையே கடமையாய் கொண்டிருந்தால் நிச்சயம் அவர்ரால் தான் நமது மனத்திற்கு அமைதியேற்பட்டதாக தெரியும்.

அந்த சமயத்தில் ஓரு விதமான மெல்லிய இசை, மனதை வருடும் மெல்லிய இசை,சாரங்கி, வீணை, வயலின், போன்ற கம்பி வாத்தியங்களினால் வருடப்பட்ட இசை, அதனூடே "குமுக்கு,,,குமுக்கு..." என்று இடிக்காத தபலாவும் சேரும் போது.. அந்த மாளிகையின் முதல் மாடி பால்கனியில் அவர் தெரிந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த கணமே தங்கள் கவலைகள் போக்கும் கடவுளின் அவதாரமாய் தெரிய..அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள்.அதற்குள் அவர் மெல்ல மாடியிலிருந்து இறங்கிவந்து, தரையிரங்கி, அங்கே அருகேயிருந்த பெண்கள் பக்கத்தில் மெல்ல நடந்து வந்து, அங்கேயிருந்த பெண்களில் சிலருக்கு மலர்களும், தங்கசெயினும், குங்குமமும், ஆண்களுக்கு வீபூதியும், மோதரமும் கொடுத்துவிட்டு அங்கிருந்த எல்லோரையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு, வலது கையை உயர்த்தி, எல்லாரையும் ஆசிர்வதித்துவிட்டு, அந்த் இசை முடிவதற்குள் உள்ளே சென்றுவிட்டார்.

எல்லாம் முடிந்து நான் என் மனைவியை அந்த ஆசிரமத்தின் வாசலில்தான் பார்த்தேன். அவள் முகத்தில் ஏதோ ஓரு பிரகாசம் இருந்தது." என்ன .. எப்படியிருந்தது தரிசனம்? என்றாள். நான் அவளிடம் "என்ன தரிசனம்?' என்றேன்.. அவளுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனசு கேட்காமல் "உங்களுக்குள்ளா ஏதுமே தோணலயா?" " அவரை பார்த்தவுடனே நம்ம மனசுல ஓரு சின்ன நம்பிக்க வரல?"அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஓரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைககபட்ட ஓரு திரைக்கதைதான் இந்த தரிசனம் என்று சொன்னால், அவள் மனது புண்படும் என்று தோன்றியதால்.. நான் ஏதும் பேசாமல்.. சிரித்தபடி, தலையாட்டினேன்.

Aug 15, 2008

கமலின் 'தசாவதார்" எப்போது?

தமிழிலும், தெலுங்கிலும் , இந்தியிலும் ஓரே நேரத்தில் வெளீயிட ஏற்பாடாகியிருந்த தசாவதாரம் திரைப்படம், தவிர்க முடியாத காரணத்தினால், இந்தியில் வியாபாரம் முடியாத காரணத்தினாலும் வெளீயிட முடியவில்லை, தற்போது, தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றுக் கூட இன்னமும் வெளீய்டப் படாமல் இருக்கிறது.
உங்களில் யாருக்காவது அது எப்போது வெளியாகும் என்று தெரியுமா?
ஹிந்தியில் வெளியிடுவதற்க்காகத் தான் ஹிமேஷ் ரேஷ்மையாவை இசையமைப்பாளராக நியமித்தார்கள். இந்தியில் பாடல்கள் கூட வெளியாகிவிட்டது. ஆஸ்கார் சார்.. ஓருவேளை போட்ட துக்கு மேலே நாலு மடங்கு வந்துவிட்டதனால் சும்மா இருக்காறோ..?

Aug 14, 2008

சூரியன் FM தமிழகத்தின் நெ.1 FM ஆ?

சூரியன் fM எப்போதும் தன் அறிவிப்பினில் தமிழகத்தின் நெ.1 பண்பலை அலைவரிசை என்று தன்னை முன்னிருத்திக் கொள்கிறது. தயவு செய்து உங்கள் voteகளை பதிவுசெய்ய்யுங்கள்

Aug 13, 2008

வைரமுத்துவின் "ஜயிட்டம்" பாட்டு


நான் சமீபத்தில் தான் இந்த பாடலை தமிழில் கேட்டேன். மணிரத்னத்தின் 'குரு" திரைப்டத்தில் வரும் "மய்யா..மய்யா" என்ற பாடலை ஹிந்தி யில் கேட்டிருக்கிறேன். அதை தமிழில் சில நாள் முன்பு கேட்டு, வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களையும், அவரின் இலக்கிய செரிவையும் கண்டு அசந்துவிட்டேன். ஓரு ஐயிட்டம் சாங்கில் இப்படி எழுதியிருக்கிறாறே ?
இந்த பாடலை அளித்தமைக்காக எல்லோரும் வைரமுத்துவிக்கு ஓரு "ஓ" போடுங்க.


இதோ அந்த பாடல்.

நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டுப் பூ இவள்
தினம் ஆடை சந்தையிலே
முதலில் தோற்பவள்

இரு குறையட்டும் திரு விளக்கு
நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு
அட!! கடவுளை அடையும் வழிகள்
என் மேல் எழுதிருக்கு

மய்யா மய்யா
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்
மய்யா மய்யா
என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும்
பொய்யா பொய்யா…

என்னா பாட்டு பா.. சோக்காகீது..


Aug 12, 2008

'ஆக்ஸிடெண்ட்"

நான் இயக்கிய குறும்படமான "ஆக்ஸிடெண்ட்" படத்தை பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். மேலும் சில குறும்படங்களூக்கு www.shortfilmindia.net

Aug 11, 2008

பி.வாசுவின் அடுத்த டார்கெட்??

ரொம்ப நாளா தமிழ் சினிமாவிலிருந்து விலக்கப்பட்டிருந்த வாசுவை ரஜினி கன்னட சந்திரமுகிய பார்த்து தமிழுக்கு கூட்டிக்கிட்டு வர,நம்மளோட கெட்ட நேரம் அங்கிருந்துதான் ஆரம்பிச்சது.
வழக்கமா உல்டா பண்ணியே படம் எடுக்க தெரிந்த வாசுவுக்கு. சந்திரமுகி தமிழ், தெலுங்குன்னு ஹிட்டானதும் என்ன செய்யறதுன்னு புரியாம அடுத்த நல்ல கதை எதை உல்டா பண்ணலாம்னு யோசிச்சார். நம்ம ரஜினிய காலி பண்ண்றதுக்கு முன்னாடியே.. தெலுங்குல ரஜினியின் குளோஸ் பிரண்டான மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவை வச்சு ஓரு படம் ரிலீஸ் பண்ணிட்டாரு. அந்த பையன் பாவம் இருந்து இருந்து நாலு ப்ளாப்பை கொடுத்திட்டு அப்படி இப்படி வாசு போலவே தெலுங்குல ஓரு டைரக்டர் சீனுவைத்லான்னு ஓருத்தர் "தீ"ன்னு ஓரு படத்தை வாசுவோட சின்னத்தம்பிய உல்டா பண்ணி ஹிட் ஆகியிருக்க, வாசுக்கு எப்படி மூக்குல வேர்த்துச்சோ..உடனே அந்த பையனையும், நாகர்ஜூனையும் வைத்து, நம்ம ஜிம் கேரி நடித்த "புரூஸ் ஆல்மைட்டி" படத்தையும், தன்னோட சின்னதம்பியையும், உல்டா பண்ணி பாணிபூரிக்கு பிசைந்த உருளைகிழங்கு கணக்கா பிசைஞ்சு, அந்த பையனோட கொஞ்சம், நஞ்சம் இருந்த மார்கெட்டையும் காலி பண்ணிட்டாரு. ஏதோ வயசானாலும் யூத்தா இருக்கிற நாகார்ஜுனையும் விடலையே? நம்ம ரஜீனியை காலி பண்ணாமாதிரி கெஸ்ட் ரோல்ன்னு அவரை கூப்பிட்டு, படம் முழுக்க அவர் இருககறாமாதிரி ஏற்கனவே குழப்பி பிசைந்திருந்ததை இன்னும் குழப்பி, அய்யோ பாவம்..

தம்பி சக்தி.. உனக்கொரு சான்ஸ்.. அடுத்து அவர் உன்ன வச்சு பண்ணப்போற "பாஸிகர்" உல்டாவிலிருந்து தப்பிச்சிக்க.. ரஜினிதான் தெரிஞ்சே அந்த சான்ஸை மிஸ் பண்ணிட்டார். நீயாவது சுகுரா இருந்து. எஸ்கேப் ஆயிக்கோ..

என்னதான் இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற தானே..

எல்லாத்துக்கும் ஓரு முதல் முறை

என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே போட்டுக்கிற
வலைதான்
காதல்...

எப்படி என் கவிதை???????
ஹீ..ஹீ..ஹீ

Aug 10, 2008

புதிய விகடன் பிடிச்சுருக்கா..?

புதிய விகடனின் டிசைன் மற்றும் கண்டெண்ட் பிடிச்சிருக்கா?
உடனே உங்கள் கருத்துகளை கிளிக் செய்யுங்க.

எஸ்கேபான கமலும்,மண் ஓட்டாத "குசேலனும்"

"பெண்கள் ஆடி மாத திருவிழாக்களுக்கு சென்றதால் குசேலன் படம் பார்க்க வரவில்லை, ஆடி மாதம் முடிவதால் மக்கள் மீண்டும் குசேலனை பார்பதற்காக தியேட்டருக்கு வருவார்கள்"
என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டாத கதையாய் இயக்குனர் வாசு இன்றைய செய்திதாள்களில் கூறியிருக்கிறார்.

எல்லா பத்திரிக்கைகளிலும்,மீடியாக்களீலும், ஆகா, ஓகோ என்று பாராட்டினாலும், தியேட்டரில் மக்கள் நொந்து போய் வெளீயே போய் யாரும் பார்க்காதீங்க என்று பாராட்ட, அதனால் தியேட்டர் எல்லாம் காலியாக இருக்கும் காட்சியை கண்ணால் கண்டு வயிற்றெறிந்து போயிருக்கும் தியேட்டர் அதிபர்கள் எல்லாம் இந்த பேட்டியை கண்டு சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று புரியாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் "பத்து நாட்களூக்குள் எந்த படத்தின் வெற்றியையும் கணிக்கமுடியாது என்று ஓரு புதிய கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.இயக்குனர்.அதெல்லாம் அந்த காலம், ஓரே சமயத்தில் 1000பிரிண்டுகள் வரை வெளீயிடப்படும் இம்மாதிரி பெரிய படங்கள் எல்லாம் பத்து நாட்களுக்கு பிறகு பிக் அப் ஆவதற்கு முன்னே பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு டங்குவார் கிழிந்து போய்விடும். அவர் சொல்வதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களான " சுப்பிரமணீயபுரம்" போன்ற் படங்கள்தான். மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, மிக குறைந்த தியேட்டர்களீல் வெளியிடப்பட்டு, பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காத அந்த படம் பற்றி மக்கள் தங்கள் வாய் மொழி விளம்பரத்தினால் படம் வெற்றிப் பெற செய்வதற்க்கு சிறிது நாட்கள் அது கூட அந்த படம் நல்ல படமானால் மூன்றாவது அல்லது நான்கவது நாளீல் தெரிந்துவிடும். அந்த படம் தேறுமா? தேறாதா? என்று.

நல்ல கதையை ஸூப்பர் ஸ்டாரின் இமேஜூக்காக கதையையும் கெடுத்து, சூப்பர் ஸ்டாரின் இமேஜையையும் கெடுத்த இயக்குனர். மேலும் சாக்கு போக்கு சொல்லாமல் அடுத்த படத்திலாவது தன் மகனை வைத்து இயக்கும் இந்தி பாஜீகர் படத்தின் ரீமேக்கையாவது கெடுக்காமல் அவர் தன் மகனின் வாழ்வில் ஓளீயேற்றுவாராக..

நல்ல வேளை கமல் தப்பித்தார். ஏன் என்றால் குசேலனுக்கு முன்பு அவர் கமலை வைத்து படம் எடுப்பதாகத்தான் பேச்சு.

கமல் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.......

Aug 9, 2008

"சத்யம்" -சக்ஸஸ் ரகசியம்

சத்யம் விஷால், நயன் தாரா நடிக்திருக்கும் படம். மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம் மிக அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த பதிவு அதை பற்றியல்ல. சத்யம் திரையரங்கத்தை பற்றியது. எல்லா தியேட்டரிலும் விட அதிக வசூலை எப்படி இந்த தியேட்டர் வளாகம் மட்டும் கொடுக்கிறது? அதிலும் விலை அதிகமுள்ள டிக்கெட்டுகள் இருந்தும் எப்படி இது சாத்தியம். இந்த பதிவு சத்யம் வளாகத்துக்கான விளம்பரம் அல்ல, உண்மை.

நான் எப்போதும் சத்யம் தியேட்டரிலேயே பட்ம் பார்பதை விரும்புவன். ஏனென்றால் அதி நவின
இண்டீரியஸ், சிறந்த சவுண்ட், டிஜிட்டல் ப்ரொசக்ஷன், எல்லாவற்றிக்கும் மேலாக, சிறந்த உபசரிப்பு.

சமீபத்தில் "கிஸ்மத் கனெக்ஷன்" என்ற இந்தி படத்தை பார்க சென்றிருந்தேன். படம் ஆரம்பித்து ஓரு பத்து நிமிடங்களீல் திடீரென்று தேய்ந்து போன ரிக்கார்ட் கணக்காய் படம் ப்ரீஸ் ஆகி "மறுக்கா.. மறுக்கா" அதே டயலாக்கில் நின்று போனது.

படம் நின்று போனதற்க்கு காரணம் டிஜிட்டல் சர்வர் டவுன் ஆனது தான். இந்த மாதிரி படம் நின்று போனால் தியேட்டரில் விசில், கத்தல் எல்லாம் நடக்கும் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை, படம் நின்றவுடன் இரண்டு ஆட்கள் கையில் ஓரு ஸ்பீக்கருடன் வந்து படம் த்டை ஏற்பட்டதற்கு வருந்தி, ஐந்து நிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, சென்றார்கள். சரியாய் 8 நிமிடத்தில் படம் ஆரம்பித்தது. ஆனால் "மறுக்கா" படம் அதே இடத்தில் நின்று போக, இந்த முறை பார்வையாளர்கள் சிறிது பொறுமையிழந்து அங்கே வந்த ஆட்களீடம் என்ன ஆகி விட்டது என்று கேட்க, அவர்கள் மீண்டும் சர்வர் ப்ராப்ளம்தான். வேறு ஓரு சர்வர் இன்னும் 15நிமிடங்களில் வந்து விடும். என்று கூறிவிட்டு, அங்கிருந்த எல்லோருக்கும் ஓரு லார்ஜ் சைஸ் கோக் மற்றும் ஸ்நாக்ஸ் தர, அதை கொடுத்துவிட்டு, படம் பார்கக விரும்புவர்கள் உள்ளே சென்று அமரலாம். வேண்டாம் என்று நினைப்பவர்கள் கவுண்டரில் சென்று பணத்தை வாபஸ் வாங்கி கொள்ளலாம் என்றவுடன் நான் படம் பார்க இஷ்டமில்லாமல் பணத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு பார்க்கிங்கில் பைக் எடுத்து கிளம்பினேன்.

அங்கிருந்த ஸ்டாப் ஓருவர் என்னை தடுத்து சார் நீங்கள் கேன்சல் ஆன படத்திலிருந்து தானே போகிறீர்கள்? இந்தாருங்கள் உங்கள் பார்கிங் பணம் என்று கேட்டு கொடுத்தார். 50ரூபாய் டிக்கெட்டை புதிய படத்துக்கு 150ரூபாய் கொடுத்து ஏசியும் இல்லாமல், பேனும் இல்லாமல் ,மிக மோசமான முகசுழிக்க வைக்கும் பல தியேட்டர்களூக்கு மத்தியில் இப்படி ஓரு தியேட்டரா என்று என்னுடன் வந்த நண்பர் அதிலும் தியேட்டரில் ஸ்டால் வைத்திருப்பவர் அதிர்ச்சியடைந்து, இனிமே படம் பார்த்தா இந்த தியேட்டரில் தான் படம் பார்க்கணும் என்றார்.

இப்போது புரிகிறதா? எப்படி சத்யம் தியேட்டரில் மற்றும் இவ்வளவு க்லைக்ஷன் என்று...

Aug 6, 2008

"சோனா"- ஓரு பத்து பத்து திரை விமர்சனம்

நான் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம் பத்து பத்து. அதில் நடித்த ஓரு நடிகர் என்னையும் என் நண்பர்களையும் அழைத்துச் சென்றார். இரண்டாவது நாளான அன்று மாலை காட்சியில் சுமார் 400க்கும் அதிகமான நபர்கள் தியேட்டரில் இருந்தது குறித்து ஆச்சர்யப்பட்டேன்.

எதை எதிர்பார்த்து இவ்வளவு கூட்டம்? ஹீரோ ஹீரோயின் இல்லாத படம் என்று விளம்பரபடுத்தியதாலா? அல்லது வித்யாசமான படமாய் இருக்கும் என்ற எண்ணத்தினாலா? என்று குழம்பியவாறே நான் படம் பார்க்க ஆரம்பித்தேன்.

சரியாக 10.10 ஓரு கொலை நடைபெறுகிற்து. அந்த கொலையை யார் செய்திருக்கக்கூடும் என்று பல கோணங்களில் இன்வெஸ்டிகேசன் செய்கிறார் "போஸ் வெங்கட்" ஓவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் போது இவர்தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பது திரைக்கதையில் ஓரு நல்ல உத்தி,

ஆரம்பத்தில் அமெச்சூர் தனமான காட்சியமைப்புகள், நடிப்பு, என்று ஆரம்பித்த படம், சோனா வந்தவுடன் சும்மா பாட்டிலிலிருந்து விடுபட்ட தீபாவளி ராக்கெட் போல் சும்மா விர்ரென்று கிளம்புகிறது படம்.

அதுவும் ஓரு பையன் மேலே பேனை மாட்ட,கீழே சோனா விலகிய மேலாக்குடன் லஞ்சையுடன் மேலே பார்க்க, அதை பார்த்து அவள் வீட்டிலிருக்கும் ஓரு பையன் வெகுண்டெழுந்து அவனை துரத்திவிட்டு, "இனிமே உங்களுக்கு எதாவது வேணும்ன்னா என்னை கேளுங்க"ன்னு சொல்வது, அதற்கு சோனாவின் ரியாக்ஷனும்,பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது எப்படி 400 பேர்கள் தியேட்டருக்குள் வந்தார்கள் என்று.

ஆனால் இதையெல்லாம் மீறீ படத்தின் திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிகிறது.

ஓரு நல்ல திரில்லர் அவர்கள் எடுத்த முறையினால் B கிரேட் திரில்லராகிறது.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சோனாவுக்கு ஓரு ஸ்பெஷல் "ஜே" போடுங்க...

Aug 5, 2008

குசேலன்????

சமீபத்தில் நான் பார்த்து நொந்து போன படம் குசேலன். ஓரு ஏழை நண்பனுக்கும், ஓரு சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள நட்பை பற்றி "பறையும்" கதை. மலையாளத்தில் மிக அருமையாக, எடுக்கப்பட்ட அருமையான படம். அதை எவ்வளவு கேவலமாக கெடுக்க முடியுமோ, அவ்வளவு அருமையாக கெடுத்திருக்கிறார்கள்.

ஓரு தனிமனிதனை துதி பாடுவதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது.தேவையில்லாமல் படம் முழுவதும் ரஜினியை விரவி,அவருக்கு இருக்க்கும் நல்ல பேரையும், கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சந்திரமுகி என்ற படத்தை எடுத்து ஓரு நல்ல மலையாள படத்தை கெடுத்த வாசுவுக்கு, மீண்டும் ஓரு நல்ல படத்தை பார்த்ததும் கை சும்மா இல்லை போலிருக்கிறது.

ரஜினி என்ற ஓரு காந்ததை வைத்து, பணம் பறிப்பதற்காகவே ஆரம்பிக்கபட்ட படம்தான் குசேலன்.

சுமார் ஆறு முதல் ஏழு கோடி ரஜினியின் சம்பளம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம், பிரமிட் சாய்மீரா என்ற கார்பரேட் நிறுவனம் சுமார் 65 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தமிழ் , மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட்டது. தமிழில் பல ஏரியாவில் 20 முதல் 30 லட்சம் வரை MG வாங்கிக்கொண்டு வெளீயிடப்பட்டது, பல தியேட்டர்களீல் முதல் காட்சி வசூல் 90 சதவீகிதம் என்றால் அடுத்த காட்சியின் வசூல் அப்படியே பாதிக்கும் குறைந்துவிட்டது. அதற்கு அடுத்த காட்சி அதை விட குறைவு. இப்படி மரண் அடி கொடுத்திருகிறார்கள் மக்கள்.

படத்தில் ரஜினி சொல்வது போல், நல்ல கதையும், திரைக்கதையும் இல்லாவிட்டால் நான் நடித்தால் கூட படம் ஓடாது என்று சொன்னது போல் இந்த படம் அதற்கு ஓரு உதாரணமாய் அமைந்துவிட்டது.

ஆனால் ஓரு விஷயம், கண்மூடித்தனமாக பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து,வாங்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், அதை அவர்களீடமிருந்து வாங்கும் விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் அதிபர்களூக்கும், இந்த மாதிரியான அதிக ஹைப் செய்யப்பட்ட படங்களை முதல் நாளே அதிக விலை கொடுத்து பார்க்கும் என் போன்ற சினிமா ஆர்வலர்களுக்கும் இந்த படம் ஓரு பாடம்.


படத்தில் பசுபதி குசேலனாக வருகிறார். நிஜத்தில் இந்த படத்தை வாங்கியவர்கள் கண்ணனை போலிருந்து குசேலனாவது நிச்சயம்.

அவர்களை வேறு கண்ணன் வந்து காப்பாற்றட்டும்.