Posts

Showing posts with the label விபத்து.. கேபிள் சங்கர்.

உறவெனும்..

எனக்கு முன்னால் ஷைன் பைக்கில் , சட்டி ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு போனவர் , திடீரென வண்டியை ப்ரேக் அடித்து , விரைத்து , விதிர்த்துப் போய் வண்டியோடு சாய்ந்ததை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது . கீழே விழும் போது ஹெல்மெட் தலையிலிருந்து விலகி ரோட்டில் ஓடியதால் அவரது தலை தரையில் மோதிய சத்தம் , அத்தனை ட்ராபிக்கிலும் துல்லியமாய் எனக்கு கேட்டது . பதறியடித்து என் பைக்கை நிறுத்திவிட்டு, அவரை தூக்க ஓடினேன். பைக்கின் ப்ரேக்கை அழுந்த பிடித்திருந்ததில் அவரது வலி தெரிந்தது. நடு வயது ஆளாயிருந்தார். மீசையில் டை ஆங்காங்கே வெளிறியிருந்தது. “காதுல ரத்தம் வருதுங்க” என்று ஒருவர் சொன்னதும், பதறிப் போய் ரத்தம் வந்த இடத்தை சோதித்தேன். இடது காதில் மேல் உள்ள தலை பாகத்தில் அடிப்பட்டிருந்தது. அதிலிருந்து காதோரத்தில் ரத்தம் வடிந்திருந்தது.   சட்டையின் தோள் பட்டை சைடில் ரத்தக்கரை ஆகியிருந்தது. சடுதியில் மக்கள் கூடிவிட, வண்டியோடு அவர் வீழ்ந்திருந்ததால், வண்டியையும் அவரையும் கிட்டத்தட்ட பிரித்து எடுக்க வேண்டியதாகிவிட்டது. எழுப்ப, எழுப்ப துவண்டு கொண்டேயிருந்தார். “தண்ணி....