P.k.Pயின் ஊஞ்சலில் ”பதிந்ததில் பதிந்தவை”
பதிந்ததில் பதிந்தவை நாம் எழுதியதை அச்சில் பார்க்க எவ்வளவு நாளாகும்?. ஒரு கதையையோ, கவிதையையோ, கட்டுரையோ எதையோ ஒன்றை எழுதி அதை நான்கு முறை சரி பார்த்து, பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவர்கள் பார்த்து பரிசீலித்து அது ரிஜக்ட்டோ செலக்ட்டோ ஆகி வருவதற்குள் மூன்று மாதமாவது ஆகிவிடும். நமக்கே நாம் எழுதினது மறந்து போயிருந்திருக்கும்.