இதுதாண்டா போலீஸ்..The other side of the police man..
ஓரு மத்யான நேரம்.. பர்கிட் ரோடு காலியாய் இருந்தது.. மேட்லி ரோடிலிருந்து நேர் சிக்னல் கிடைத்தவுடன் நேராக சென்றேன், திடீரென்று டிராவல்ஸ் எல்லாம் தாண்டிய பிறகு ஓரு மரமிருக்கும் அதனிடயிலிருந்து ஓரு டிராபிக் கான்ஸ்டபில் வெளியே வந்து என்னை மறித்தார். எனக்கும் முன்னால் ஓருவர் போய் கொண்டிருந்தார் அவரையும் சேர்த்துதான் மறித்தார். ஆனால் அவர் போடாங்க்க்க்...ன்னு சொல்லியபடி அவரை கட் செய்துவிட்டு எம்மாச்சுன்னு போயிட்டார்.. நான் மட்டும் ஓரு நல்ல பிரஜையாய் நின்றேன். “என்ன சார்..?” “ஹெல்மெட் போடல..?” “அந்த ரூல்ஸ் இன்னும் இருக்கா என்ன.?” “என்ன கிண்டலா?” “ எனக்கு முன்னால போனவர் கூட போடல அவரை ஏன் பிடிக்கல.. தானா வந்து நின்னவங்களைதான் பிடிப்பீங்களா..?” “ தேவையில்லாம பேசற.. இல்லாட்டி ஐயாகிட்ட போய் பேசிக்க..” ஐயா அதே மர இடுக்கில் பக்கத்தில் தன்னுடய பைக்கின் மீது ரசீதை வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாய் எனக்கென்ன என்று எங்கோ பார்த்து கொண்டிருந்தார். “ என் கிட்ட காசில்ல..” “ எங்க பர்சை காட்டு..” “ அது உங்களூக்கு தேவையில்லாதது சார். என்கிட்ட காசில்ல.. காசு விஷயமாத்தான் போறேன்.. இல்லாட்டி வண்டிய வச்சிக்கங்க.. ஓரு...