Posts

Showing posts with the label food court

மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள்

  மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள் கொஞ்சம் ஹைஃபை உணவங்கள் எங்கே புதியதாய் திறக்கப்படும் என்று பார்த்தால் அது நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடாகத்தான் இருக்கும். அதே போல மிடில் ரேஞ்ச் கடைகள் என்றால் அது அண்ணாநகர் சாந்தி காலனியாய் இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாய் சென்னையின் முக்கிய இடங்கள் ரோட் சைட் புட் ஷாப்புகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. அதுவும் நடு ராத்திரி பிரியாணி கடைகள். ஒருசின்ன டிரக்கில் ஆரம்பித்தார்கள். தையல் இலை பிரியாணி, வாழை இலை பிரியானி, அந்த பாய் பிரியாணி, இந்த பாய் ப்ரியாணி. என ஆரம்பித்து அண்ணாநகர் 5வது அவின்யூவில் இடது வலது எங்கும் டேபிள் எல்லாம் போட்டு கடை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். விதவிதமான உணவுகள். தள்ளுவண்டிகளில், வீட்டிலிருந்து காரை எடுத்துவந்து டிக்கியில் வைத்து குடும்பமாய் கடை பரப்பி பானிபூரி முதல் நெய் சோறு வரை விற்றார்கள். மெல்ல 5வது அவின்யூ புல் ஆகி, நான்காவது, அண்ணாநகர் மெயிண்ட் ரோட் என எல்லா இடங்களிலும் கடைகள் முளைத்து செம்ம வியாபாரம் ஆகிக் கொண்டிருந்த வேளையில் கடந்த ஒரு வாரமாய் எல்லாக் கடைகளும் தூக்கப்பட்டு அண்ணாநகரே அலம்பி விட்டார்ப் போ...

கேட்டால் கிடைக்கும்.

ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம்?. இவ்வளவு பெரிய  புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம்?. என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.