மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள்
மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள்
கொஞ்சம் ஹைஃபை உணவங்கள் எங்கே புதியதாய் திறக்கப்படும் என்று பார்த்தால் அது நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடாகத்தான் இருக்கும். அதே போல மிடில் ரேஞ்ச் கடைகள் என்றால் அது அண்ணாநகர் சாந்தி காலனியாய் இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாய் சென்னையின் முக்கிய இடங்கள் ரோட் சைட் புட் ஷாப்புகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. அதுவும் நடு ராத்திரி பிரியாணி கடைகள். ஒருசின்ன டிரக்கில் ஆரம்பித்தார்கள். தையல் இலை பிரியாணி, வாழை இலை பிரியானி, அந்த பாய் பிரியாணி, இந்த பாய் ப்ரியாணி. என ஆரம்பித்து அண்ணாநகர் 5வது அவின்யூவில் இடது வலது எங்கும் டேபிள் எல்லாம் போட்டு கடை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். விதவிதமான உணவுகள். தள்ளுவண்டிகளில், வீட்டிலிருந்து காரை எடுத்துவந்து டிக்கியில் வைத்து குடும்பமாய் கடை பரப்பி பானிபூரி முதல் நெய் சோறு வரை விற்றார்கள். மெல்ல 5வது அவின்யூ புல் ஆகி, நான்காவது, அண்ணாநகர் மெயிண்ட் ரோட் என எல்லா இடங்களிலும் கடைகள் முளைத்து செம்ம வியாபாரம் ஆகிக் கொண்டிருந்த வேளையில் கடந்த ஒரு வாரமாய் எல்லாக் கடைகளும் தூக்கப்பட்டு அண்ணாநகரே அலம்பி விட்டார்ப் போல ஆனது.
ரெகுலராய் கடை போடும் பிரியாணி ஆட்கள் இத்தனை நாள்பார்த்த வியாபார லாபத்தை இழக்க விரும்பாமல், லோக்கல் ஏரியாவில் இரவில் மூடப்படும் டீக்கடைகளை டார்கெட் செய்து கடைகளின் வாசலில் பிரியாணி விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அவர்களுக்கும் கடை வாடகை எல்லாம் உண்டு.
ஏன் இப்படி திடீர்னு துறத்திவிட்டார்கள் என்று அவர்களிடம் கேட்ட போது புது அதிகாரி வந்திருக்காங்க அதான் என்றார்கள். அங்கே இருக்கும் நண்பர்களிடம் கேட்ட போது அண்ணாநகரில் உணவகம் வைத்திருக்கும் பல நிறுவங்களில் தொடர் அழுத்தம், லோக்கல் ஏரியாக்காரர்களின் டிராபிக் பிரச்சனை என்று சொன்னார்கள். இதற்கு முன்னால் இதெல்லாம் தெரியவில்லையா? ஒரு மெயின் ஏரியா முழுக்க, குறைந்த பட்சம் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் 400+ கடைகள் அந்த சுற்று வட்டாரத்தில் முளைக்கும், ஒவ்வொரு கடைக்கும் லோக்கல் அதிகாரிகள் கட்டிங் 150-300 ரூபாயாம். வார நாட்கள் தவிர மீதி நாட்கள் சுமார் 150 கடைகளாவது இருக்கும். அவைகள் பெரும்பாலும் டிரக் வண்டிகள். அவைகளுக்கு எப்போதும் 300ஆம். இவர்களின் த்டீர் திருந்துதலுக்கு காரணம் வேறென்ன..தேர்தல் தான்.
கேபிள் சங்கர்
Comments